Search This Blog

31.12.08

பார்ப்பனர் சங்கப் பார்வைக்கு




தாங்கள் தமிழ்நாட்டில் 7 விழுக்காடு இருப்பதாகவும் 50க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தங்கள் ஜாதியினர் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் அடிக்கடி வாய்ச்சவடால் அடிப்பார்கள், தாம்பிராஸ் தலைவர்கள்.

பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் 3 விழுக்காட்டினர் எனும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் விகிதாச்சாரப்படி 7 இடங்களைப் பெறலாம். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மட்டுமே பார்ப்பனர்களை நிறுத்திய நிலையில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். மீதி 5 இடங்களுக்கு ஆள்களும் கிடையாது; அவாளை நிறுத்தும் யோசனை உள்ள கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது.

இது ஒருபுறம் இருக்க, நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகள் புதிய படிப்பினையைப் பார்ப்பனர்களுக்குக் கற்றுத் தருகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் என்று அங்கே பார்ப்பனர்களுக்குப் பெயர். இந்தப் பார்ப்பனர் களில் 47 பேர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். காங்கிரசு, பாஜக, சமாஜ்வாடி கட்சி, லோக்ஜன சக்திக் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மக்கள் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய ஜனநாயகக் கட்சி என்று 6 கட்சிகளிலுமாகச் சேர்த்து போட் டியிட்ட 47 பார்ப்பனர்களுமே மண்ணைக் கவ்வியுள்ளனர். மந்திரியாக இருந்த ராமன் மாட்டூ என்பவரும் தோற்றுப் போனார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேர்தல் வரலாற்றில் - சட்ட மன்ற வரலாற்றில் - பார்ப்பனர் ஒருவர்கூட உறுப்பினராக இல்லாமல் போனது இதுதான் முதல் தடவை!

சபாஷ், ஜம்மு காஷ்மீர்!

----------------------------நன்றி; "விடுதலை" 31-12-2008

3 comments:

Joe said...

சபாஷ்!

RAMASUBRAMANIA SHARMA said...

this is another ridiculous article...in politics, the Indian Election Commission should come out with some stringent rules...like...no canvassing should be done in relation to casts....are we still a secular nation or not...if so, then why should we prepare and spread such messages....all the freedom fighters and the greatest leaders of INDIAN INDEPENDENCE....has ever mentioned about their caste, for mobilising youngsters to the freedom struggle....or the related movements...another adorsity article about a particular community....you are coming the other way around....let us ignore these type of articles in future....to prove that we are all INDIANS...take it..or leave it...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோ