Search This Blog

2.6.09

உலகிலே உள்ள எல்லா பாவங்களுக்கும் காரணகர்த்தர்களே பார்ப்பனர்கள்தான்!



சொன்னவர்கள் நாத்திகர்கள் அல்லர்!

கேள்வி: இங்கு சைலக்கை மிஞ்சக்கூடிய பார்ப்பன வட்டிக் கடைக்காரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

--------------- கிருஷ்ண அய்யங்கார், சென்னை

பதில்: இந்த உலகிலே உள்ள எல்லா பாவங்களுக்கும் காரணகர்த்தர்களே பார்ப்பனர்கள்தான்! அவர்கள்தான் பாபத்தை உற்பத்தி செய்து, உருவம் அமைத்து, பாதுகாத்து வருபவர்கள். அவர்கள் கடவுளையே பாபியாக் கினார்கள்! வட்டி வாங்குவது அவர்களுக்கு மிகவும் சாமான்யமான பாவம்.

-------------------------------- பிலிம் இந்தியா - பாபுராவ் படேல்

**************************************************************************************

சபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும் மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத்திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமுமே கடவுள் இருக்கிறான். அவர்களுடன் வெயிலிலும் மழையிலும் உழைத்து அவருடைய ஆடையில் தூசி படிந்திருப்பதைப் பார். ஆகவே நீயுங்கூட உன் காசாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதைவிடச் சுலபமான மார்க்கம் கிடையாது.

------------------------- கவி. தாகூர்

*************************************************************************************

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த
பெருங் கோயில் பல
சாதிமதச் சாக்கடை யாய்ச்
சண்டாளர் இருப்பிடமாய்
நீதி அறம் அழித்து வரல்
நின்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத் தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

-------------------------------- திரு.வி.க.

*****************************************************************************************

நம்முடைய தற்கால சமூக அமைப்பு நியாயமற்றதாயிருக்கிறது. நம்முடைய சமூகத்தில் பணக்காரர்களாயிருப்பவர்கள் அதிக பணத்தைப் பெருக்கிக் கொண்டேயிருக்கின்றனர். இதன் பயனாய் ஏழைகள் அதிக வறுமைப்பட்டு வாடுகின்றனர். இந்தச் சமூகக் கொடுமை அடியோடு மாறி விட வேண்டும்.

இந்த ஸ்தலத்தில் (திருப்பதியில்) வீற்றிருக்கும் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளும் ஒரு ஜமீன்தாரேயாவர். நூற்றுக்கணக்கான ஏழை மக்களின் இரத்தத்தை இவர் உறிஞ்சி வருகிறார். நேர்த்திக் கடன் செய்பவர்களும், இந்தியாவின் பல பாகங்களிலிருந்து யாத்ரிகர்களும், ஆயிரக்கணக்காகத் திருப்பதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் வருஷா வருஷம் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு முட்டாள்தனமாகப் பதினாறு லட்ச ரூபாய்கள் வீதம் செலவு செய்கின்றனர். எனக்கு இத்தகைய கடவுள் மீது சிறிதேனும் நம்பிக்கையே இல்லை. நீங்கள் தோழர் வெங்கடேஸ்வரர்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அப்படியானால், அவருடைய ஆட்சியின் கீழ் சரியான நியாயம் வழங்கப் படுகிறதா? அவர்மீது தான் நம்பிக்கை வைப்பதற்கு மறுதலிக்கிறேன்.

இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான மனிதர்கள் பட்டினி கிடக்கிறார்கள். முதலாவது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய கொள்கைப் படி; சுயராஜ்யம் என்றால் அபேத வாதந்தான்.

------------------------------ என்.ஜி. ரங்கா

******************************************************************************************

திரவுபதியின் மானத்தைக் காத்த கண்ணனுக்கு நாம் உற்சவங்கள் கொண்டாகிறோம். கவிகள் அவனைப் பற்றிக் காவியங்கள் பாடுகிறார்கள். தத்துவ ஞானிகள் அவனைப் பூர்ணாவ தாரம் என்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில், ஒரு திரவுபதியின் மானத்தைக் காப்பாற்ற ஓடிவந்த கண்ணன், இன்றைய தினம் உடுக்க ஒரு முழம் கந்தலுமின்றித் தவிக்கின்ற இலட்சக்கணக்கான ஏழைப் பெண்களைக் காப்பாற்ற ஏன் முன் வரவில்லை? தெய்வமே குரு டாகி விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.

---------------------------------- காண்டேகர்

****************************************************************************************

இறைவனுக்குப் பல்வேறு உருவங்களையும், அந்தந்த உருவங்களுக்கேற்ற முறையில் கதைகளையும் கற்பனை பண்ணியிருக்கிறார்கள், அன்றைய தமிழர்கள். ஒரு நாமம், ஒரு உருவம் ஒன்றறுமில்லாத இறைவன், இப்படித் தான் ஆயிரம் திருநாமங்களுடனும், இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகியிருக்கிறான் - மனிதனது கற்பனையிலே.

இப்படிக் கற்பனை செய்ததையெல்லாம் கல்லிலும், செம்பிலும், வடித்தெடுத்திருக்கிறார்கள் நம் நாட்டுச் சிற்பிகள். அப்படி அவர்கள் உருவாக்கிய சிற்ப வடிவங்களே இன்று நமது தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்லாம் நிறைந்திருக்கின்றன.

-------------------------- கல்கியில் - தொ.மு. பாஸ்கரத்தொண்டமான்


**************************************************************************************


---------------------"விடுதலை" ஞாயிறுமலர் 30-5-2009

1 comments:

கபிலன் said...
This comment has been removed by the author.