Search This Blog

1.6.09

இந்தியா - இந்து மதச் சார்பான நாடா?






சென்னை வானூர்தி நிலையம் விரிவாக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இரண்டாம் ஓடுபாதை அமைக்கப்படவிருக்கிறது. இதற்காகத் தமிழக அரசு 128 ஏக்கர் நிலத்தை ஒப் படைத்திருக்கிறது. இந்தப் பாதையில் அடையாறு ஓடுகிறது. ஆற்றுப் பகுதியில் 462 மீட்டர் நீளமும்ள 200 மீட்டர் அகலமும் உள்ள பாலம் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் உருவாகும். சென்னை அய்அய்டி அளித்துள்ள தொழில்நுட்பக் கருத்தின் அடிப்படையில் அமைக்கப்படும்.

இந்தியாவிலேயே முதலாவதாக இந்த வகைப் பாலமும் ஓடுதளமும் அமைகிறது. இதற்கான தொடக்கப் பணிகள் நடந்தன.

வானூர்தி நிலைய இயக்குநர் நடராஜன் தொடங்கி வைத்தாராம். பூமி பூஜை நடந்ததாம். பார்ப்பனர் ஒருவர் இந்து மத வழக்கப்படி கர்ப்பூரம் கொளுத்தி ஆரத்தி காட்டி, ஆராதனை செய்து பணிகளைத் தொடங்கினாராம். நடராஜன் பயபக்தியுடன் கர்ப்பூரத் தட்டைப் பெற்றுக் கொள்வதை ஏடுகள் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

இந்தியா, இந்து மதச் சார்பான நாடு அல்ல. மாறாக, மதச்சார்பற்ற நாடு இந்த நிலையில், இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் விழாவில் இந்துமதச் சடங்குகள் செய்திட எப் படி அனுமதிக்கலாம்? பூமிபூஜை செய்து, பிறகு தான் கட்டுமானப் பணி தொடங்கப்பட வேண் டும் என அய்அய்டி கொடுத்த தொழில் நுட்பக் கருத்தில் உள்ளதா?

இந்திய அரசமைப்புச் சட்டப்படி தவறான, குற்றமான செய்கைகளில் உயரதிகாரிகளாக இருப் பவர்கள் இறங்கலாமா?


================"விடுதலை"30-5-2009

5 comments:

Anonymous said...

ஒவ்வொரு தமிழனும் இந்துவாக வாழும் இந்த கால கட்டத்தில் , இன்னும் பார்ப்பனிய எதிர்ப்பு சரியான முறையா என்று எனக்கு தோன்றுகிறது. வெறுமனே பார்ப்பனிய எதிர்ப்பை மட்டும் செய்தால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிடுமா?முன்னோர் செய்த தவறுக்கு, இன்றைய பார்பனர்கள் என்ன செய்வார்கள். இட ஒதுக்கீடு என்ற ஒரு தண்டனையே அவர்களுக்கு போதுமானது. காலம் மாறி விட்டது, முதலில் மக்களிடையே , மூட நம்பிக்கைகைகளை ஒழிக்க வேண்டும். அதற்க்கு பல புதிய வழி முறைகளை உண்டாக்க வேண்டும். நமக்கு சூத்திரன் என்ற பட்டம் ஒழிந்ததே தவிர, நம்முள் உள்ள மூட நம்பிக்கை ஒழிய வில்லை என்று அடித்து கூற முடியும்.

பார்ப்பான், சூத்திரன் பிரச்சினை பெரியார் காலத்தோடு முடிந்து விட்டது. (ஏதோ ஓன்று இரண்டு இருக்கலாம். அதை நம்மால் சமாளிக்க முடியும்) . இன்றைய நிலையில் சூத்திரன் , பஞ்சமன் பிரச்சினை தான் அதிகமாக உள்ளது. ஆனால் நாம் என்றுமே பார்பனர்களை மட்டும்தான் குற்றம் சாட்டுகிறோம். பஞ்சமர்களின் இந்த நிலைக்கு காரணம் என்ன? அந்த இழிவை போக்க என்ன செய்ய போகிறோம்? பார்பனர்கள் மட்டும்தான் மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் என்பது போல், பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். கோவிலில், தப்பு செய்துவிட்டு கோடி கோடியாக பணம் கொட்டுவது யார்?

இன்றைய கால கட்டத்தில், பார்பன எதிர்ப்பு மட்டும் கண்மூடித்தனமானது. (பெரியாரின் மீதுள்ள தீவிர பற்றின் காரணமாக, அவரை அப்படியே பின்பற்றுபவர்கள் செய்வது). மக்களுக்கு அறிவை அது புகட்டாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது,வெறுப்பை தான் ஏற்படுத்தும். மேலும் இந்த கால கட்டத்தில், அது புத்திசாலி தனமும் அல்ல.

ப.சீனிவாசன்.

தமிழ் ஓவியா said...

இந்த வலைப்பூவில் உள்ள இடுகைகள் முழுவதும் படியுங்கள். பார்ப்பனிய எதிர்ப்பின் அவசியம் புரியும்.

மேலெழுந்த வாரியாக பார்ப்பவர்களுக்கு பார்ப்பனியத்தின் சூழ்ச்சி புரியாது.

அருள்கூர்ந்து ஊன்றிப்படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ப.சீனிவாசன்

Anonymous said...

உங்கள் வலைபகுதியில் நான் அறிந்தது,

சாதி ஒழிய, இந்து மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய கடவுள் ஒழிய வேண்டும்,கடவுள் ஒழிய பார்பனர்கள் ஒழிய வேண்டும். என்ற கருத்தையே பெரும்பாலும் கூறியிருக்கிறீர்கள்.(பெரியாரால் சொல்லப்பட்டது).நானும் ஏற்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

இந்த கருத்தை இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தி பாருங்கள். எந்த அளவிற்கு பொருந்தும் என்று.

பார்பனர்களை ஒழித்தால் கடவுள் ஒழிந்து விடுமா? எனக்கு தெரிந்தவரை பார்பனர்களே கடவுள் இல்லை என்று கூறினாலும், நம் மக்கள் இனி ஏற்று கொள்ள மாட்டார்கள். அந்த அளவிற்கு ஊறி போய்விட்டது.

பார்பனர்கள் இல்லாத ஊரிலும் எப்படி சாதி கொடுமைகள் நடக்கின்றன. (இதற்க்கு யார் காரணம்)

சூழ்ச்சி செய்ய,கொள்ளை அடிக்க பார்ப்பானாக மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய தமிழ்நாட்டின் நிலை உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

சாதி,மதத்தை தோற்றுவிக்க அவர்கள் காரணமாக இருந்தாலும், அதை பிடித்து தொங்கி கொண்டு இருப்பவர்கள் நம் மக்கள் தான், அவர்களை எப்படி திருத்துவது?

ஒவ்வொரு வீட்டிலும், சாமி படம் இருக்கும் போது, கோவிலை ஒழிப்பது தீர்வாகாது.

இன்று நாம் செய்ய வேண்டியது, நம்மை சூத்திரன்என்று சொல்வதை நிறுத்திவிட்டு, நமக்கு கீழே உள்ள தாழ்த்தப்பட்டவர்களை மேலே கொண்டு வர பாடு படவேண்டும்.

சூத்திரன் , பிராமனணனை திட்டும் போது, பஞ்சமன் ஏன் சூத்திரனை திட்ட கூடாது?

ப.சீனிவாசன்.

தமிழ் ஓவியா said...

//பார்பனர்கள் இல்லாத ஊரிலும் எப்படி சாதி கொடுமைகள் நடக்கின்றன. (இதற்க்கு யார் காரணம்) //

பார்ப்பனர்கள் விதைத்த நச்சுக் கருத்துக்கள்தான் காரணம். இது குறித்து மேலும் அறிந்து கொள்ள இவ்வலைப்பூவில் உள்ள பெரியார்-தலித் என்ற தலைப்பைச் சுட்டி விபரம் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

தமிழ் ஓவியா said...

http://thamizhoviya.blogspot.com/2009/03/blog-post_192.html

மேலும் அறிந்து கொள்ள மேற்கண்ட சுட்டியை சுட்டி செய்திகளை அறிய வேண்டுகிறேன்