Search This Blog

12.9.09

காஞ்சி மடம் ஒரு போலி மடம்!


ஹோலி (புனித) மடமல்ல; போலி மடம்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா எனும் இங்கிலீஷ் நாளேடு சென்னையில் வரத் தொடங்கி இன்னும் 20 மாதங்கள் முடியாத நிலையில் வேண்டாத வேலை ஒன்றில் ஈடுபட்டு உள்ளது. அந்நிறுவனத்தின் சர்ர்பில் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 168 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ 450/. விலையைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. நூலின் மூலம் பார்ப்பனர்கள் விதைத்துள்ள விஷமம் பற்றிக் கவலைப்படுகிறோம்!

காஞ்சி மடம் எனும் தலைப்பிலான. இந்நூல், சங்கர மடத்தின் வந்த வழியைக் கூறுகிறதாம். பொது ஆண்டுக்கு முன் 482 ஆம் ஆண்டில் (கி.மு. 482) காஞ்சி மடம் உருவாக்கப்பட்டதாம். சுமார் 2500 ஆண்டுக் கால, மடத்தின் வரலாறைக் கூறுகிறதாம்.

இதைவிடப் பெரிய அயோக்கியத்தனம் வேறு ஏதாவது உண்டா? பொது ஆண்டு 788 இல் (கி.பி. 788) காலடியில் பிறந்த ஆர்யாம்பாளின் மகன் (ஆதி) சங்கரன் 34_ஆம் வயதில் செத்துப் போனான் (கி.பி. 820 இல்) என்பது இதுவரை எழுதப்பட்ட வரலாறுகளில் உள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் யாரை ஏமாற்ற நூல் போடுகிறது? எப்படிப்பட்ட பித்தலாட்டத்தை இந்நிறுவனம் செய்கிறது? இதன் வடநாட்டு முதலாளிகளுக்கு இது தெரியுமா? வடக்கே உள்ள 3 மடங்களிலும் தெற்கே உள்ள அதிகாரப் பூர்வமான சிருங்கேரி மடத்திலும் இதற்கான ஆதாரம் எதுவும் உண்டா என விசாரித்துப் பார்த்துப் பொத்தகம் போட்டார்களா?

யாரோ காமாந்தகாரப் புளுகன் கூறியதை நம்பி நூல் வெளியிடுவது என்றால்... யோக்கியப் பொறுப்பு வேண்டாமோ? காஞ்சி மடமே , நேற்று முளைத்தது. கும்பகோணம் மடம்தானே ஆதியில் இருந்த மடம்! காங்கிரஸ் கட்சி 1885 இல் தொடங்கி அதன் மாநாடுகள் சென்னையில் நடந்த போது அதில் கலந்துகொண்டது கும்பகோணம் சங்கர மடப் பிரதிநிதி என்றுதானே அக்கட்சியின் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது?

அப்படியிருக்க, இப்படி ஒரு புளுகை அச்சுப் போட்டு விற்க எப்படித் துணிவு வந்து விட்டது இந்த ஏட்டுக்கு? காஞ்சி மடமே, ஒரு போலி மடம்! அது ஒன்றும் (Holy) ஹோலி (புனித) மடம் அல்ல என்பதற்கு ஆதாரமே அதன் தலைவர் ஒரு கொலை வழக்கில் ஏ1 (அக்யூஸ்டு 1) குட்டித் தலை ஏ 14 அல்லது ஏ 15! இந்தப் போலி மடத்துக்கு இப்படி ஒரு விளம்பரமா? நாயைப் புலி எனலாமா?


************************************************

முதலைக்கதையும் முடவன் கதையும்

முடவன் தேனடையை எடுக்க, மர உச்சிக்கு ஏறிப் போனான் என்பதைப் போல, எட்டு வயதுப் பையன் வட இந்தியா முழுக்கக் கால்நடையாகச் சுற்றினான், வாதங்களில் வென்றான் அத்வைதத்தைப் பரப்பினான் என்று புளுகுகிறார்கள். அவன்தான் சங்கரன் என்கிறார்கள்.

16 வயதில் அவன் காலை முதலை கவ்விப் பிடித்துக் கொண்டதாம்! இழுத்துக் கொண்டு நீருக்குள் போய் ஆள் செத்ததும் விழுங்குவதுதான் முதலையின் பழக்கம். இங்கே அப்படியே இருந்து விட்டதாம் முதலை. பிள்ளையாண்டானின் ஆத்தாள் வரும்வரையும் காத்திருந்ததாம். வந்த பிறகு அவளிடம் பிள்ளையாண்டான் பேரம்பேசி சன்னியாசத்திற்குச் சம்மதம் வாங்கும் வரை முதலை ஒன்றும் செய்யாமல் காத்திருந்ததாம். சன்னியாசத்திற்கு அம்மா ஆர்யாம்பாள் அனுமதி தந்ததும் முதலை பிள்ளையாண்டானை விட்டு விட்டதாம். இந்தக் கதையை எந்த மடையனாவது நம்புவானா?

காஞ்சி சங்கரமடத்தில் மட்டுமல்ல எல்லா பார்ப்பனர்களும், சில மடத் தமிழர்களும் நம்புகிறார்களே! எப்படி?

-----------------------12-9-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

1 comments:

Anonymous said...

dai vaya kaluvuda muthala unga ammava koilku pogatha sami kumbidathanu sollu
unaku dairiyam iruntha poli pathiryargalai patthi eluthura