Search This Blog

1.9.09

விநாயகன் ஊர்வலமா? குடிகாரர்களின் கும்மாளமா ?


பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!
விநாயகன் ஊர்வலமா? குடிகாரர்களின் கும்மாளமா ?
பிள்ளையாருக்குப் பீர் அபிஷேகம்- வெட்கக்கேடு


விநாயகன் சிலையை கடலில் கரைக்கச் சென்ற பக்தர்கள் குடித்துவிட்டு சாலையில் கலாட்டா செய்தனர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

விநாயகன் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை.

விநாயகன் பெயரில் பக்த கோடிகள் நடத்திய களேபரங்கள் சில........... சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில், தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள்.

சென்னையை அடுத்த கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை, கல்பாக்கம் கடலில் கரைக்க, பக்தர்களுக்கு காவல்துறையினர் ஒரு பாதையை வகுத்து கொடுத்து இருந்தனர். நேற்று மாலை, இந்து அமைப்பினர்,காவல்துறையினர் வகுத்து கொடுத்த பாதையை தவிர்த்து, இ.சி.ஆர். சாலையில் புதுப்பட்டினம் மசூதி வழியாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து, அனுமதிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், இந்து அமைப்பினர், காவல்துறையினர் வகுத்த பாதையில் செல்ல மறுத்தனர். இதனால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். விநாயகன் சிலைகளை அங்கேயே போட்டு விட்டு, ஊர்வலத்தினர் கலைந்து ஓடி விட்டனர். பின்னர் இ.சி.ஆர். ரோட்டில் கிடந்த விநாயகன் சிலைகளை, காவல்துறையினர் சேகரித்து, கல்பாக்கம் கொண்டு சென்று, அங்கு கடலில் கரைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, புதுப்பட்டினத்தில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் மூடப்பட்டன. பதட்டமான நிலை காணப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், புதுபபட்டினம் பேருந்து நிலையம் அருகே சிலர், ஒரு விநாயகன் சிலையை கொண்டு வந்து வைத்தனர். உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, அவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் அந்த சிலையை கடலுக்கு கொண்டு சென்று கரைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை காவல்துறை கண்காணிப்பளர் சம்பந்த மூர்த்தி ஆகியோர், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த பகுதியில் சம்பவம் தொடர்பாக சிலரை தேடி வருகிறார்கள். விக்னம் இல்லாமல் காப்பாற்றும் கடவுளின் சக்தி இதுதானா?

விநாயகன் சிலை ஊர்வல வாகனங்கள் கவிழ்ந்தன

பட்டாமிராமில் இருந்து சிறிய ரக வாகனம் ஒன்றில் விநாயகன் சிலை ஒன்றை ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். சென்னை மாநில காவல் துறை தலைமை அலுவலகம் அருகே வரும்போது இந்த வாகனம் திடீரென்று கவிழ்ந்து விட்டது. அதில் இருந்த சிலையும் சரிந்து விட்டது. பின்னர் சிலையை தூக்கி வேறு வாகனத்தில் வைத்து எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.இந்த சம்பவத்தில் சிலை கொண்டு வந்த வாகனத்தில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை அயனாவரத்தில் இருந்து வந்த சிலை ஏற்றி வந்த வாகனம் ஒன்று முத்துசாமி பாலம் அருகே கவிழ்ந்து விட்டது. இதில் சிலை லேசாக சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சிலையை வேறு வாகனத்தில் எடுத்து சென்று கடலில் கரைத்தனர். ராஜரத்தினம் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டையிலிருந்து ஆட்டோ ஒன்றில் விநாயகன் சிலை ஒன்றை 3 பேர் எடுத்து வந்தனர். மெரினா கண்ணகி சிலை அருகே வரும்போது இந்த ஆட்டோ மற்றொரு வாகனத்துடன் மோதி கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 3 பேரும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

------------------------"விடுதலை" 31-8-2009

2 comments:

Shabeer said...

Vinayagar Oorvalam bakthiyal vanthathillai. Muslim makkalodu problem undakka mattum create seiyyappathu.

Joe said...

My bus to Bangalore was blocked on that day for a few minutes due to a similar procession in Chennai.

I hate all sorts of religious processions which cause nuisance to general public, whichever religion it may belong to...