Search This Blog

31.1.10

பார்ப்பனரைத் தாங்கிப்பிடிக்கும் பார்ப்பனர்கள்!



காஞ்சிபுரத்திலே வரதராஜ பெருமாள் கோயில் அதன் மேலாளர் ஆனந்தசர்மா மகன் சங்கர்ராமன்.

இரவில் அல்ல, பட்டப் பகலிலேயே கொலை செய்யப்படுகிறார். ஊரே நடுங்குகிறது.

வரதராஜப் பெருமாள் கோயிலிலேயே இப்படி ஓர் அபவாதமா? என்று பக்தர்கள் குமைந்தனர். ஊர் மக்கள் பொரிந்து தள்ளினர். ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின.

யார் இதைச் செய்திருப்பார்? ஆசாமி சாதுவாயிற்றே அவருக்குக் கூட எதிரிகள் உண்டா என்று கூடிக் கூடிப் பேசினார்கள்.

கடைசியில் பார்த்தால்... அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியாக சங்கர மடத்துக்கு மோப்ப நாய் வரவில்லை-தான் என்றாலும் கொலையாளி அந்த மடத்துக்குள் தான் இருக்கிறார் என்ற தகவல்கள் கசிந்தன.

ஜெகத் குருவாம் சங்கராச்சாரியாராம் நானே கடவுள் என்று கூறிக் கொள்பவர்களாம். கொலையின் பீடம் அதுதான் என்று கண்டுபிடித்து ஒரு தீபாவளி நாளில் (11.11.2004) ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா சென்று அங்கிருந்து கம்பியை நீட்டி விடலாம் என்று திட்டம் போட்டிருந்தார் போலும்! காஞ்சிபுரம் கொண்டு வந்து, நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு 15 நாள் வேலூர் மத்திய சிறையில் தள்ளப்பட்டார்.

அவர் மீதுள்ள உள்ள குற்றச்சாற்றுகளோ சாதாரணமானவை அல்ல. இ.பி.கோ. 302, 120 பி, 34,201 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுசதி, பொய்யான சாட்சியங்கள் சமர்ப்பித்தல் கொலை வழக்குகளில் ஆசாமி சிக்கிக்கொண்டார், 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார் ஜெகத் குரு. எங்கு சென்றாலும் ஜாமீன் கிடைக்காது என்று உச்ச நீதி மன்றம் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்.

சின்ன பெரியவாள் விஜயேந்திர சரஸ்வதியும் கைது செய்யப்பட்டு (10.01.2005) 31 நாள் கம்பி எண்ணினார்.

நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மூன்று வாரம் நாள்தோறும் கையொப்பம் சாற்ற வேண்டும். கேடி லிஸ்டில் ஜூனியர் சங்கராச்சாரியார் இடம் பெற்றார்.

ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திர சரஸ்வதி கைது (23.11.2004). அக்கிரகாரத்தில் இடிவிழுந்தது மாதிரி ஆகிவிட்டது, வெளியில் தலைகாட்ட முடியாத பரிதாபம்!.

இந்த யோக்கியதை உள்ள ஆசாமி, கொஞ்சம் காலம் ஓடிவிட்டது என்கிற தைரியத்தில் துள்ளித் திரிகிறார்.

ஆங்காங்கே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு வரவேற்பு வைபவங்கள்! நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் அவரை வரவழைத்து அவரை பெரிய மனிதராக ஆக்கிக் காட்டுகிறார்கள்.

அவர்மீது படிந்துள்ள அசிங்கங்களை மறைக்க புதிய ஜோடனைகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்பது தனியாரின் வங்கி அல்ல நாட்டுடைமையாக்கப்பட்ட ஒன்று. சென்னை காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கருவிகள் வாங்க ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களை இலவசமாக வழங்குகிறார்களாம்.

அந்த மருத்துவமனைக்கான சோதனை மய்யத்தை கொலை குற்றவாளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜெயந்திர சரஸ்வதி திறந்து வைக்கிறாராம். யார் வீட்டுப் பணத்தை யாருக்குக் தூக்கிக் கொடுப்பது? நாட்டில் காஞ்சி மடம் நடத்தும் ஒரே ஒரு மருத்துவமனைதான் இருக்கிறதா?

மற்ற மற்ற மருத்துவமனைகளெல்லாம் கண்களுக்கே தெரியாதா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேல்மட்டமெல்லாம் ஒரே அக்கிரகார மயம். அவர்கள் நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற தோரணையில் கொலை மடம் என்று பெயர் பெற்றுவிட்ட சங்கர மடத்தின் அதிபதியை அழைத்து வாரி வழங்குகின்றனர் என்றால், இதன் பொருள் என்ன?

இந்த இடத்தைத்தான் சூத்திரத் தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொலைக் குற்றவாளியாக இருந்தாலும் தங்களவாள் என்றதும் கோபுரத்திற்கு உயர்த்தும் அந்தக் குணப்போக்கைக் கவனிக்க வேண்டாமா?

ஒரு நண்டு இன்னொரு நண்டின் காலை கவ்விப் பிடித்து இழுப்பது போல, ஒரு தமிழன் இன்னொரு தமிழன் காலை வாரிவிடுவதில்தானே கண்ணும் கருத்துமாக இருக்கிறான்?

அவர்களின் பீடத்திற்கு ஹானி ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலே எத்துணை உணர்வுகள் அக்கிரகாரத்திடம் ?

கொலைக் குற்றம் மட்டுமா?

பெண்கள் விஷயத்தில் இந்தக் காமகோடி ஆடிய ஆட்டங்கள் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

அனுராதா ரமணன் என்ற அம்மையார் அக்கிரகாரப் பெண்மணிதானே!

கண்ணீரும் கம்பலையுமாக பேட்டி கொடுத்தாரே- தொலைக்காட்சி ஒளிபரப்பியதே, -தன் கையைப் பிடித்து இழுத்தான் அந்தப் பெரிய மனுஷன் என்று குமுறினாரே!

நிர்வாணமாக நின்று என்னை பலவந்தப்படுத்தினார் என்று அந்தப் பார்ப்பனப் பெண் கதறினாரே- தொலைக்காட்சிகள் அதனை ஒளிபரப்பினவே.

இப்படி ஒரு கழிசடை பேர்வழியைத்தான் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கி பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பு கொடுக்கிறது.

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் ஜெயேந்திரர் என்று வெட்கத்தை விட்டு அந்த எழுத்தாளர் குமுறினாரே!

வாரத்துக்கு அய்ந்து நாள்கள் சிறீரங்கத்தில் உள்ள உஷா என்ற பெண்ணுடன், சங்கராச்சாரி ஜெயேந்திரரும் காலை நேரத்தில் சரசலீலைகள் பேசியதை அந்தக் கைபேசிகள் மூலம் காவல்துறை உறுதிப்படுத்தியதே!

ஜெயேந்திரருக்கு பெண்களை சப்ளை செய்தேன் என்று ரவி சுப்பிரமணியம் ஒப்புக்கொண்டிருக்கிறாரே!

இப்படிப்பட்ட ஓர் அசிங்கமான மனிதருக்குத்தான் இந்தியன் வங்கியிலுள்ள தலைமைப்பீ(ன)ட அக்கிரகாரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அம்பாரி வைத்துப் பூஜை செய்கிறார்கள்.

ஜெயேந்திரரை விட பிரேமானந்தா எங்கே கெட்டுப் போய்விட்டார்? பிரேமானந்தாவை அழைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மரியாதை செய்வார்களா?

காஞ்சிபுரத்தில் ரயில்வேதுறை சம்பந்தப்பட்ட அரசு விழாவில் (25.11.1998) சங்கராச்சாரியார் கலந்துகொண்டதைக் கண்டித்து திராவிடர் கழகம் மறியலில் ஈடுபட்டதே அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார்கள் அவ்விழாவில் பங்கேற்கவில்லை. அப்போது அவர்மீது கொலை வழக்குக் கூட இல்லை.

ஓர் அரசு விழாவில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி பங்கேற்கலாம் என்று போர்க் கொடி உயர்த்தியதே திராவிடர் கழகம்.

அப்படி இருக்கும்பொழுது அரசுக்குச் சொந்தமான வங்கி இந்து மத மடத் தலைவரை அழைத்து எப்படி சிறப்பு செய்யலாம்? அதுவும் ஒரு கொலைக் குற்றத்தில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் எப்படி அழைக்கலாம்?

இதைப் பற்றி எந்த ஏடுகள் எழுதுகின்றன? எந்தத் தொலைக்காட்சி விமர்சனம் செய்கிறது? எந்தத் தலைவர்கள் பிரச்சினை செய்கிறார்கள்?

பஞ்சமா பாதகம் செய்தாலும் தங்கள் இனத்தவரை பார்ப்பனர் எப்படியெல்லாம் கட்டிக் காக்கும் வேலையைச் செய்கிறார்கள்?

தமிழர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும் இனஉணர்வை வளர்த்துக் கொள்ளட்டும்!


-------------------மின்சாரம் அவர்கள் 30-1-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்ட்டுரை

5 comments:

மாடல மறையோன் said...

நாளை தேவநாதனும் வந்து அரசு விழாக்களில் வந்து கலந்து கெரவிப்பார்.

தேவனாதனின் காமகலியாட்ட வீடியோக்களை பார்ப்பனர்கள் இணையத்தில் hack பண்ணிவிட்டார்கள். இது ஒன்று போதுமே.

இதே போல பாரதியார் எழுதிய பார்ப்பன தாக்க வரிகள் அனைத்தும், அவர் எழுத்துக்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

பார்ப்பனர்களை யாரும் வீழ்த்த முடியாது. அவர்கள் மகா கில்லாடிகள்.

Ashok D said...

உண்மைதான்... பதிவும் ஜோவின் பின்னூட்டமும். எல்லா முக்கிய இடங்களில் அவர்கள்தான். சரி மற்ற சாதியினர் மற்றும் என்ன விதிவிலக்கா? Bank of Madura கதை மற்றும் கரூர் வைஷ்யா பேங்க கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

மாடல மறையோன் said...

பாங்க் ஆப் மதுரா, கரூர் வைசிய பாங்க் கதைகள் எனக்குத் தெரியாது.

தேவநாதனை டோண்டு இராகவனே காப்பாற்ற முனைகிறார்.

அரசு விழாக்களில் தேவனாதன் கலந்துகொண்டு சிறப்பிக்கும் நாள் வெகு தூரம் இல்லை.

தேவநாதனுக்கு பார்ப்ப்னரினிடமிருந்து எந்தவித எதிர்ப்பு இல்லை. பார்ப்பன கட்சிகளான ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னனி, பி.ஜே.பி போன்றவை தேவநாதன் விடய்த்தை மூடி மறைக்கின்றன.

மற்றவன் செய்தால் விடுவார்களா?

இதைத்தான் தேவநாதனுக்கு மறைமுக ஆதரவு என்கிறேன்.

பேசாமலிருப்பதும், மூடிமறைப்பதும் ஆதரவே.

அவனை எதிர்ப்போரை அசோக் போன்ற பார்ப்பனர்கள், பார்ப்பன் துவேசிகள் என்றால் ஆச்சரியமில்லை.

மாடல மறையோன் said...

இங்கே பார்ப்ப்னக்குற்றவாளியான் ஜெயேந்திரருடன் சூத்திரக்குற்றவாளியான் பிரமானந்தாவை ஒப்பிடுகிறாரென்பது அசோக் படிக்கவில்லயா?

மற்ற சாதியன்ர் விதிவிலக்கா எனக்கேட்கும் அசோக் இதை ஏன் கவனிக்கவில்லை இப்பதிவில்?

பிரமானந்தாவை ஏன் iob கூப்பிடவில்லை?

இரு காவியுடை கபோதிகளும் அக்யூச்டு நம்ப்ர் ஒன்னுதானே?

பார்ப்னக்குற்றவாளிக்கு அரசு மரியாதை. சூத்திரக்குற்றவாளிக்கு அத் ஏன் இல்லை அசோக்?

நம்பி said...

//தேவனாதனின் காமகலியாட்ட வீடியோக்களை பார்ப்பனர்கள் இணையத்தில் hack பண்ணிவிட்டார்கள். இது ஒன்று போதுமே.//

தேவநாதனின் காமக் களியாட்டங்கள் வெளிநாட்டு ஆபாசத்தளங்களில் நூற்றுக்கணக்கில் பதியப்படுட்டுள்ளது..அங்கே ஜகஜோதியாக அரங்கேறிவிட்டது..உலகம் நாறடிக்க கிளம்பிவிட்டது....அவதூறு, மானக்கேடு வீடியோக்கள்...sex scandal videos வகையறாவில் வலம் வருகின்றன....அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் அழித்துவிடமுடியாது...உலகெங்கும் நாறிக்கொண்டிருக்கிறது....இது தவறு செய்வதற்கும் வழிகாட்டுதல் தான்..இளைஞர்களை சீரழிப்பதற்கும் வழிகாட்டுதலாகவும் மாறிவிட்டது...கோயில்ல தப்பு பண்ணும் போதே சாமி பார்த்துகிட்டு இருக்கார்...நம்ம பண்ணா தப்பா...இதெல்லாம் தப்பே கிடையாது...என்று மாறுவதற்கும்..பெண்களின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கும் வழிவகுக்கின்றன....


....இன்னும் பல பார்ப்பன சாமியார்கள், நித்யானந்தாவின் லீலைகள் எல்லாம் இந்த வகையறாக்களில் சேர்ந்து விட்டன...பக்காவாக இணையதளங்களில் வலம் வருகின்றன...இன்னும் அதிர்ச்சிதரும் காட்சிகள் எல்லாம் உள்ளன. சென்று காறி முழியலாம். (சுயகட்டுப்பாடுடையவர்கள்...சென்று காணலாம்)

நாட்டில் என்னென்ன லடசணங்கள் இருக்கின்றன என்பதையும் அறியலாம். இவையெல்லாம் வந்தவுடனேயே பலபிரதிகளாக மாறிவிடும்...பலப்பல தளங்களாக மாறிவிடும். விஞ்ஞானத்திடம் இவர்கள் பாச்சா பலிக்காது.