Search This Blog

23.8.08

குண்டு வெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதமா? இந்து பயங்கரவாதமா?

எல்லாக் குண்டுவெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. தான் காரணம் ---
அம்பலப்படுத்துகிறார் திக்விஜய்சிங்



தந்தை பெரியார் ஒரு கதை சொல்வார். வீட்டின் தோட்டப் பகுதியில் இருந்த பித்தளைச் செம்பைக் காணோம் என்று வீட்டுக்காரன் கத்திக் கொண்டே தெருவில் ஓடினானாம்; செம்பைத் திருடியவனும் பிடி, பிடி என்று கத்திக் கொண்டே கூட்டத்தில் ஓடினானாம். அதைப் போன்று, சதிகாரர்களே - சதிகாரர்களைக் கைது செய் எனக் கத்தும் சதி வடக்கே நடக்கிறது. குறிப்பாக குஜராத்தில் நடக்கிறது.

பி.ஜே.பி.காரர்கள் லஞ்சம் வாங்கியதைக் கையும் களவு மாகக் காமிராவில் படம் பிடித்த டெகல்கா விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது, நாடாளுமன்றக் கட்டடத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சமீபத்திய கருநாடகத் தேர்தலின் வாக்குப் பதிவு நடந்த முதல் நாளிலேயே, ஹூப்ளியில் வெடிகுண்டு வெடித்தது.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது, ஜெய்பூர் நகரில் வெடிகுண்டு வெடித்தது.

இதற்கெல்லாம் காங்கிரசுக் கட்சிதான் காரணம் என சுஷ்மா சுவராஜ் கூறியதைப் போல, திக்விஜய்சிங் கூறாமல், இதற்கெல்லாம் விசாரணை வேண்டும் என்கிறார்.

ஒருபடி மேலே போய், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., அமைப்புகள் வெடிகுண்டுகளைத் தயா ரிக்கின்றன என்றும், அதற் கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்றும் ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

1992 இல் மத்தியப் பிரதேச விசுவ ஹிந்து பரிஷத் அலு வலகத்தில் குண்டுவெடித்தது. ஒரு வி.எச்.பி.காரர் இறந்து போனார்; இரண்டு பேர் காயமடைந்தனர். இவர்கள் வெடி குண்டு தயாரிக்கும்போதுதான் இச்சம்பவம் நடந்தது.

2002 இல் மோவ் எனும் ஊரிலுள்ள கோயிலில் வெடி குண்டு வெடித்தது. இது தொடர்பாக விசுவ இந்து பரிசத் தொ(கு)ண்டர்களை தீவிர விசாரணைக்குப் பிறகு காவல் துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் தாங்கள் வெடிகுண்டு தயாரித்ததை ஒப்புக்கொண்டனர். இதற் கான பயிற்சியை அந்த அமைப் புதான் இவர்களுக்கு அளித் தது. இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு திக்விஜய்சிங்கிடம் உள்ளது.

2006 இல் நான்டட் கிராமத் தில் ஆர்.எஸ்.எஸ். தொ(கு)ண்டர் ஒருவரின் வீட்டில் குண்டு வெடித்தது. இரண்டு ஆர்.எஸ்.எஸ். ஆசாமிகள் இறந்து போயினர்.


2008 இல் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. வி.எச்.பி. ஆசா மிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெடிகுண்டு வைத்ததை ஒப்புக்கொண்டனர்.

இப்போது குஜராத் மாநி லத்தில் 18 வெடிகுண்டுகளை எப்படி சூரத் நகரில் மட்டும் கண்டெடுத்தார்கள்? மரங் களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளை இவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

இதனால் நான் சொல்ல வருவது, குண்டு வெடிக்கும் நேரங்கள் விநோதமாக பொருந்தி அமைந்திருக்கின்றனவே என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. ஆள்கள் குண்டு தயாரித்ததற்காகக் கைது செய்யப்படுகிறார்கள்; அவர்களின் அலுவலகங்களில், வீடுகளில் என்று குண்டுகள் வெடிக்கின்றன. இதுபற்றி மூன்று, நான்கு வழக்குகளும் பதிவாகி உள்ளன. ஏன் இதை யாரும் கவனிக்கமாட்டேன் என்கிறார்கள்?

இதற்காக இசுலாமியர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல.

தேசியம், தேசப்பற்று என்றெல்லாம் பேசிக்க் கொண்டிருப்பவர்கள் வெடிகுண்டு களைத் தயாரிக்கக் கூடாது.

அவர்கள் எதையும் வித்தி யாசப்படுத்திப் பிரித்தே பேசிப் பழக்கப்பட்டவர்கள். இந்துக் களையும், இசுலாமியர்களையும் பேதப்படுத்தாமல் அவர்களால் கட்சி நடத்த முடியாது.

ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும்போதும், அவர்கள் இந்துத்துவா எனக் கத்துவார்கள்.

மத்தியப் பிரதேச மேனாள் முதலமைச்சர் திக்விஜய்சிங் டெகல்கா ஏட்டுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தவை இவை!

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் களின் யோக்கியதையைக் கிழித்துக் காட்டுகிறார். யோக்கியர் கள் போல வேடம் போடும் அவர்களின் பொய் முகத்தைக் கிழித்து மெய்த் தோற்றத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கூடுதலாக - சென்னை, பா.ஜ.க. அலுவலகக் குண்டு வெடிப்புகூட, அவர்களாகவே செய்துகொண்டதாகத்தான் இருக்கும்!

நாதுராம் விநாயக் கோட்சே எனும் மராத்திப் பார்ப்பனன் காந்தியாரைக் கொல்ல முடிவு செய்து, பழியை இசுலாமியர் மீது போடுவதற்காகத் தன் கையில் இசுமாயில் எனப் பச்சை குத்திக் கொண்டு, தன் குறியை சுன்னத் செய்து கொண்டான் அல்லவா!

அதே வழிமுறையை இன்னமும் கையாள்கிறார்கள்
என்பது தெளிவாகிறது.


---------------- நன்றி: "விடுதலை" 23-8-2008

5 comments:

bala said...

திராவிட முண்டம் ஓசி பிரியாணி அரை டிக்கட் குஞ்சு தமிழ் ஓவியா அய்யா,

ஆமாங்கய்யா.கோயமுத்தூரில்,பம்பாயில்,வாரனாசியில்,ஹைதராபாத்தில்,ஜெய்பூரில் குண்டு வைத்ததெல்லாம் ஆர் ஏஸ் எஸ் பசங்கதான்.அமெரிக்காவில,லண்டனில் குண்டு வைத்தது கூட ஆர் எஸ் எஸ் தான்.இந்த விஷயத்தை நம்ம ஊர் அருந்ததி ராய்,முலயம் சிங் யாதவ்,வீரமணி போன்ற துப்பறியும் சிங்கங்கள் கண்டுபிடித்து சொல்லிவிட்டாங்களே.தாடிக்கார கும்பலாவது,தீவிரவாதமாவது?அவங்க சாந்த சொரூபிகள்.குண்டெல்லாம் வைக்கமாட்டாங்கய்யா.அப்புறம் கூட, ஸ்காட்லேண்ட் யார்ட்,எஃப்,பி ஐ பசங்க ஏன் தாடிக்கார இஸ்லாமிய தீவிர வாதிகளை கைது செய்யறாங்கன்னு தெரிய வில்லையே.என்ன கொடுமை இது?

இவ்வளவு ஏன்?எல் ஈ டி,ஜைஷ் ஏ முக்கம்மது,ஹூஜி,அல் கெய்தா,சிமி,ஜமாத்,etc etc,போன்ற ஆயிரக்கணக்கான,தீவிரவாத அமைப்புகளெல்லாம் கூட சுன்னத் செய்த தாடிக்கார ஆர் எஸ் எஸ் பசங்க அமைப்புக்கள் தான் என்பது பச்சைக்குழந்தைக்குக் கூட தெரியுமே.

இனிமேல் எல்லா குண்டு வெடிப்பு கேஸ்களையும் நம்ம ஊர் மானமிகுவும்,முலயம் சிங் யாதவும் தான் விசாரிக்க வேண்டும்,போலிஸ்காரங்க செய்யக்கூடாது என்று சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலன்றி நல்ல தீர்ப்பு கிடைக்காதய்யா.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.நம்ம ஊர் தீவிரவாதியான காலஞ்சென்ற தாடிக்கார சகுனியின் சிஷ்யர்கள், ஏன் பின்லேடன் அய்யா கும்பலில் சேர்ந்து உலகம் பூரா குண்டு வைத்து தீவிரவாதம் செய்யக்கூடாது.நம்ம ஊர் தாடிக்காரரின் புகழும்,ஒசாமா பின் லேடன் ரேஞ்சுக்கு உலகம் பூர பரவுமல்லாவா?ஒசாமாவும்,பெரிய சகுனி மாமாவும் ஒரே கொள்கை(தாடி), உடையவர்கள் தானே?தாடிக்காரின் திராவிட தீவிரவாத கொளகைகள் உலகம் பூரா பரவவேண்டிய தகுதி வாய்ந்ததல்லாவா?ஓவியா அய்யா யோசித்து முடிவெடுக்க வேண்டுகிறேன்.

பாலா

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

தமிழ் அய்யா,
ரூம் போட்டு இப்படி யோசிச்சு கதை எழுதுவீங்களோ?
நீங்க சினிமால பெரிய கதையாசிரியராக வருவீர்கள்....

தமிழ் ஓவியா said...

எங்களைபொறுத்தவரை யார் அட்டூழியம் செய்தாலும் கண்டிக்கத்தான் செய்வோம்.இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு துளி அளவுகூட குறைந்ததில்லை இந்து பயங்கரவாதம்.
ஒரிசாவும், குஜராத்தும் நம் கண் முன்னே உள்ள உதாரணங்கள்:

bala said...

//எங்களைபொறுத்தவரை யார் அட்டூழியம் செய்தாலும் கண்டிக்கத்தான்//

திராவிட முண்டம் தமிழ் ஓவியா அய்யா,
அது என்னவோ சரிதான்.தாடிக்காரனின் கருப்பு சட்டை பொறிக்கி சிஷ்யர்கள் மட்டும் தான் அட்டூழியங்கள் செய்யலாம்.இஸ்லாமிய தாடிக்காரர்கள் செய்யலாமா.கூடாது.அப்புறம் இந்த மூஞ்சிகளுக்கு வியாபாரம் எப்படி நடக்கும்.வேணும்னாக்க இஸ்லாமிய தாடிக்கார தீவிரவாதிகள் குண்டு வைக்கும் வேலையை கருப்பு சட்டை பொறிக்கிகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யலாம்.

பாலா

தமிழ் ஓவியா said...

மூளை என்ற உறுப்பு இல்லாத இந்த பார்ப்பன பயங்கரவாதி பாலா வின் உளறல்களை பற்றி வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுவோம்.