Search This Blog

2.8.08

எந்தத்தமிழனும் இதை சகிக்க முடியாது


பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப்பிரிவினையில் எனக்கு கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) சீக்கிரத்தில் பிரிந்தால் நல்லது என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. கன்னடியருக்கும், மலையாளிகளுக்கும் இனப்பற்றோ சுயமரியாதையோ இல்லை. மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பதுபற்றி அவர்களுக்கு சிறிதும் கவலையில்லை. மேலும் சென்னை மாகாணத்தில் 7-ல் ஒரு பாகத்தினராக இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3-ல் 2-பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் நம்நாட்டை தமிழ்நாடு என்று கூட சொல்வதற்கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் இவர்கள் சீக்கிரம் பிரியட்டும் என்றே கருதிவந்தேன். அந்தப்படியே பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப்பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப்பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்மந்தமாக ஏதாவது சிறு குறைபாடுயிருந்தாலும் மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப்போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப்பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனியாக ஆகிவிட்டால் நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும், அவை சம்மந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காது என்றும் இருந்தாலும் அதற்கு பலமும், ஆதரவும் இருக்காது என்றும் கருதுகின்றேன்.

ஆனால் நாட்டினுடையவும், மொழியினுடையவும், இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டு போய்விடுகிறதே என்கின்ற குறைபாடு எனக்கிருக்கிறது. ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்பு கூட மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கூட இருக்கக் கூடாது என்று அந்தப்பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாக தெரியவருகிறது.இது சகிக்கமுடியாது மாபெரும் அக்கிரமம் ஆகும். எந்தத்தமிழனும் இதை சகிக்க முடியாது. இதைத் திருத்த தமிழ்நாட்டு அமைச்சர்களையும், சென்னை டெல்லி சட்டசபை - மேல் கீழ் சபை உறுப்பினர்களையும், மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள் அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தமிழ் - தமிழ்நாடு என்கின்ற பெயர் கூட இந்நாட்டிற்கு சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாத நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னை பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்கவேண்டும்.

--------------தந்தை பெரியார் - "தனி அரசு" அறிக்கை 25.10.1955

3 comments:

bala said...

தமிழ் ஓவியா அய்யா,

இந்த தாடிக்கார முண்டம் ஏன் "தமிழ் நாடு என்ற நாடு ஒருபோதும் இருந்ததில்லை;சோழ நாடு,பாண்டிய நாடு,சேர நாடு,கொற நாடு,கொங்கு நாடு என்று இருந்தனவே ஒழிய தமிழ் நாடு என்று ஒரு நாடும் இருந்ததில்லை என்று சொல்லி தனி சோழ நாடு இத்யாதி கோரவில்லை.கருப்பு சட்டை பொறிக்கிகள் கழகம் விளக்குமா?

பாலா

tamiloviya said...

பாலா உங்களைப் பற்றி வேறு ஒரு வலைப்பதிவிலே படித்ததை இங்கு தருகிறேன். உங்களின் விவாத அணுகுமுறை பற்றி நமது வாசக அன்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக.

படியுங்கள் தோழர்களே. உண்மையை உணருங்கள்.

"பார்ப்பன பொறுக்கி பாலா அடுத்த கமெண்டுலேயே "கருப்பு சட்டை பன்னிங்கன்னு" எழுதி தன்னோட‌ அருவருப்பான பார்ப்பன பயங்கரவாத மூஞ்சிய‌ காட்டிகிட்டு அம்மணமா நிற்கிறாரு, பலான கதை எழுதி கையும் களவுமாக‌ மாட்டிக் கொண்ட‌ இந்த நாலாந்தர பார்ப்பன பொறுக்கிதான் நம்மை பார்த்து தீவிரவாத பொறுக்கின்னு முத்திரை குத்த துடிக்கிறார்., பாலா(எ)ஜெயராமா உன்னை மாதிரி ஆணாதிக்க காமவெறி பிடித்த நாய்களெல்லாம் யோக்கியனா சுத்துற நாட்டுல நாங்களெல்லாம் தீவிரவாதியாதாண்டா இருக்கமுடியும், விவாதம்னா அறிவுள்ளவங்க செய்றது, உண்மைடா, அதனாலத்தான் சொல்றேன் உன்கிட்டயெல்லாம் நிச்சயம் விவாதம் பண்ன முடியாது., சொறிநாயை எதிர்கொள்வதற்கு ஒரு சின்ன கல்லுதான் அவசியமே தவிர, வாதம், விவாதம் எதுவும் அதுக்கு புரியாதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்...

ஸ்டாலின். நன்றி: (kedayam.blogspot.com)

bala said...

தமிழ் ஓவியா அய்யா,

தாடிக்கார அய்யா "ஏன் தனி சோழ நாடு,பல்லவ நாடு,பாண்டிய நாடு,கொற நாடு,கொங்கு நாடு கோரிக்கை வைக்கவில்லை?" என்ற கேள்வியை எழுப்பினால் வழக்கம் போல் பார்ப்பன பயங்கரவாதம்அம்மணமா நிக்குது,பலான கதைன்னு, உளறி நீங்களும் ஒரு சாதாரண கருப்பு சட்டை பன்றி என்பதை நிருபித்துள்ளிர்கள்.
என்னிக்கு நீங்க நேர்மையான கேள்விக்கு நேர்மையான முறையில் பதில் சொல்லப் போறீங்க.அது ஏங்க நீங்களெல்லாம் பொறக்கும் போதே வில்லனா பொறக்கறீங்க?ஜாதி இல்லையென்றாலும்,நம்ம தாடிக்கார அய்யா சொன்னபடி ஜாதி புத்தி மட்டும் கேவலமாக இருக்கிறதே?

பாலா

அது சரி ஃபோட்டோவில இருப்பது யார்?கல்யாணம் ஆனபோது எடுக்கப்பட்ட சிறுமி மணியம்மையின் ஃபோட்டோ தானே?தமிழ்த் தாய் # 2 வாழ்க வாழ்க.