Search This Blog

23.8.08

பெரியாருக்கு நன்றி - அன்புமணிராமதாசு

தமிழகத்தின் சமூக அமைப்பை மாற்றியமைத்தவர் தந்தைபெரியார்தான் என்று நடுவண் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் அன்புமணிராமதாசு கூறியுள்ளர். தில்லியில் தலித்துகள் நிலை குறித்த இந்தியக் கல்வி நிறுவனம் நடத்திய பத்தாயிரம் ஆண்டு இலக்குகளும், சமூக அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் நேற்று உரையாற்றிய அவர், “தந்தைபெரியார் இல்லாவிட்டால் நானும், எந்தந்தையும் வயல்களில் உழுது கொண்டுதான் இருந்திருப்போம். தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறியிருப்பதற்குப் பெரியார்தான் முதன்மைக் காரணம். வட இந்தியாவைவிட தென்மாநிலங்கள் முன்னேறியிருப்பதற்குக் கல்வி அறிவுதான் காரணம். இடஒதுக்கீட்டுக் கொள்கைகளால்தான் தென் மாநிலங்கள் கல்வியில் முன்னேறின’’.

--------------------நன்றி: “தமிழ் ஓசை” 23-8-2008 பக்கம் -1

0 comments: