Search This Blog

1.9.08

யானை முகமுடைய பிள்ளயைர் பிறந்தது எப்படி?


விநாயகர் கதை...

'கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா' என்ற நூலில் விநாயகரைப்பற்றி அறிவுடையோர் அருவருக் கத்தக்கதான ஒரு கதைவடிவிற் கட்டிவிட்டார்கள்.

யாங்னம் எனில் கூறுதும் - திருக்கைலாயத்தின் கண் சிவபிரானும், அம்மையும் மகிழ்ச்சியோடு, அமர்ந் திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்து சுவரில் ஆண் - பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையைப் புணர வேண்டும் என்னும் காமவிருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக்குறிப்பினைத் தெரிந்துகொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தாராம் அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளயைர் பிறந்தாராம். இவ்வாறு அந்த புராணத்தின் கண் சொல்லப்பட்டது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் அருவருப்பினையும் மானக் குறை வினையும் விளையாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தான் என்பது எவ்வளவு அடாததாயிருக்கின்றது?

தேவ வடிவில் நின்று புணருவதைவிட இழிந்த விலங்கு வடிவில் நின்று புணருமின்பம் சிறந்ததென்றும் கூற எவரேனும் ஒருப்படுவாரா? அத்தகைய இழிந்த காம - இன்பத்தினை இறைவன் விரும்பினானென்றால் பேரின்ப உருவாயே நிற்கும் கடவுள் இலக்கணத்துக்கு எவ்வளவு மாறுபட்டதாய் எவ்வளவு தகாததாய் எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது.
திருஞான சம்பந்தரும்கூட,

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன்!

என்று திருப்பதிகத்தில் பாடியுள்ளாரே!

-------------------நன்றி: "விடுதலை" 1-9-2008

0 comments: