Search This Blog

13.9.08

என்னால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கிளர்ச்சியும் தோல்வியடைந்ததில்லை.



உறுதியான 100 பேர் வேண்டும்

எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் இருந்து வந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம் அதற்கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும் எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷடப்படாமல் சுகம் அனுபவித்த அரசியல் இயக்கம் இதுவரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை. கடைசி மூச்சு இதுதான். துணிவு கொள்ளுங்கள்! துணிந்து காரியத்தில் இறங்குங்கள்! எனக்கு வெகு கூப்பாடு போடும் 1000 வேஷக்காரர்கள் இருப்பதைவிட, உறுதியான மனம் படைத்த 100 பேர்கள் இருந்தாலே வெற்றி பெறுவேன். இந்தப் போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; ஆனால் பரிகசிக்கத்தக்க முறையில் இழிவான தோல்வி இருக்கக் கூடாது என்பதுதான் எனது ஆசை. ஒன்று சொல்கிறேன்; இதுவரை என்னால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கிளர்ச்சியும் தோல்வியடைந்ததில்லை.

------------------------------------- பெரியார் ஈ.வெ.ரா - (விடுதலை ஞாயிறுமலர் -13-9-2008 பக்கம் - 7 )

0 comments: