Search This Blog

16.9.08

நடிகை மனோரமா வாழ்க்கையில ஜோதிடம்



ஜோதிடத்தால்...!

மனைவிக்காக இல்லேன்னாலும், பிள்ளைக்காக சரியாகிடுவாருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு. எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாயும் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச்சாங்களா...னு கூடஎட்டிப் பார்க்கலை என் காதல் கணவர். பொண்ணை தூக்கி வளர்த்தோம். இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச் சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா. ஆண் பிள்ளை பிறந்திருக்குன்னு அவருக்குச் சொல்லி அனுப்பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன் பார்க்கப் போயிருக்கார்.

அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது. ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனானு எதுவும் தெரியாது. ஆனா, அவன் விளையாடின விளையாட்டு தான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.
இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துனு சொல்லிருக்கான் ஜோசியக் காரன். நல்ல புருஷனா இல்லன்னாகூட ஒரு நல்ல தகப்பனா இருக்கிற வாய்ப்புல பெரிய குழிதோண்டி தன் வார்த்தைகளால மண்ணை அள்ளி கொட்டிட்டான் அந்த புண்ணியவான். ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட்கார்ந்தேன்.

குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை. உள்ள போனா, குந்தையோட தொடை சிவந்திருக்கு. பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான். வன்மத்தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன்.

--------- நடிகை மனோரமா (குங்குமம், 14.2.2008)

0 comments: