Search This Blog

11.1.10

மும்பை தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்? - 2

கர்கரேயைக் கொன்றது யார்? -2

(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

- ஆசிரியர் கி.வீரமணி)


நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக நான் 1975 இல் பணியில் சேர்ந்து, மிகக் குறுகிய காலப் பணியிலேயே 1981 இல் அய்.பி.எஸ். அதிகாரியாகி விட்டேன். 2005 இல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றபோது, காவல் துறை அய்.ஜி. ஆக இருந்த நான், அதன் பின்னர் சமூகப் பணிகளில் ஈடுபட்டேன். பெரும்பாலும் களப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றவன். பணியாற்றிய இடங்களில் பெரும்பாலானவை வகுப்புக் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாகவே இருந்தன என்பதால், வகுப்பு வாதப் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் எனக்கு அதிகமாகவே ஏற்பட்டன.

சமூக அளவில் அமைதியான பகுதியான கோல்காப்பூர் வாசியான எனக்கு, நான் பணியாற்றிய பகுதிகளின் வகுப்பு வாத நெடியும், ஒரு பிரிவு மக்கள் மறுபிரிவினர் மீது தாக்குதல் நடத்-திக் கலவரம் விளைவிக்கத் தூண்டிவிடும் போக்கும், ஆரம்பத்தில் அதிர்ச்சியடையச் செய்தன. காலம் செல்லச் செல்ல மாறி சூழலுக்கு ஏற்ப நான் மாறி, நிலைமைகளைச் சமாளிக்கத் தேவையான துறைவாரி வழிகளைக் கையாளத் தொடங்கினேன். வகுப்பு மோதல்கள் நடந்திடும் பகுதிகளில் இசுலாமியஅதிகாரி பணிபுரிவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்றாலும், நெருக்கடியான நிலைமைகளில் மிகவும் நுட்பமாகப் பணி புரிந்து எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை வெற்றிகரமாகவே நிறைவேற்றி வந்தேன். இதன் காரணமாகவே நான் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடத் தூண்டப்பட்டேன்.

காவல்துறை அதிகாரியாக, வகுப்புக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளை சட்டப்படி விசாரிக்கின்ற போதே, அவற்றைப் பற்றிய இடைக்கால வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும், சமூகவியல், அறிவு மற்றும் கும்பல்களின் மனோபாவம் போன்றவற்றுடனும் ஆய்ந்து பார்ப்பேன். அடிக்கடி நடத்தப்படும் இந்து முசுலிம் கலவரங்கள் இரு வகுப்பினருக்கிடையேஏற்பட்டு விட்ட கருத்து மோதல்களின் விளைவாகவோ, திடீர் என ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்ச்சியின் காரணமாகவோ ஏற்பட்டவை அல்ல என்பதும், மாறாக, சமூகத்தில் வகுப்புவாத நச்சுக் கிருமிகளால் படரவிடும் பார்ப்பனிய அமைப்புகள் வேண்டுமென்றே இடை விடாமல் செய்திடும் முயற்சிகளின் விளைவே எனக் காண முடிந்தது.இந்தப் பார்ப் பனிய அமைப்புகள்தான் இந்து அமைப்பு கள் என்ற பெயரில் முகமூடி அணிந்து வருகின்றன. மத்திய கால இந்திய வரலாற்றோடு பொருத்திப் பார்க்க முயன்றபோது, தர்க்க பூர்வ மான ஆதாரங்கள் எவையும் தென் படவில்லை.

எனினும், வகுப்புக் கலவரங்களின் 20 ஆம் நூற்றாண்டு சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்கும்போது இத்தகைய வகுப்புக் கலவரங்களின் தொடக்கம் 1893 இல் நடைபெற்றது என்றும் அதன் தொடர்ச்சியே பாபர் மசூதி இடிப்பும் 2002 இல் குஜராத்தின் நடந்த இனப் படுகொலைகளும் என நிர்ணயித்திட முடிந்தது. இதுதான் வகுப்புவாதத்தின் முதல் கட்டம் ஆகும்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நாடு முழுதும் நிறைய குண்டு வெடிப்புகள்வேண்டும் என்றே தவறான செய்திகள், மிகப்படுத்தப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்தன; வெளிப்படையாகவே அவை இந்தியாவின்முன்னணி உளவுத் துறை அமைப்பான அய்.பி. (I.B.) இன் தூண்டுதலின் பேரில் நிகழ்த்தப்பட்டன. கெடுதலான உள் நோக்கத்துடன் அய்.பி. இதில் ஈடுபட்டு 2006 நான்டெட் குண்டு வெடிப்புச் சம்பவம் பற்றியும் 2008 மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக வெளிப்படையான, உயர்வான முறையில் விசாரணை செய்து மகாராட்டிர காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே நாட்டளவில் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட சதிவலை; மும்பையில் நவம்பர் 26 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக குறுக்கீடு செய்யப்பட்ட மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு விசாரணை; மும்பை தாக்குதலே கூட அய்.பி.யின் திட்டமிட்டு மறைக்கப்பட்ட உளவுச் செய்தியின் விளைவாக ஏற்பட்டதுதான். கோழைத்தனமாகவும் கொடுமையாகவும் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே; அவர் மறைவுக்குப் பின் அவசர அவசரமாக மிகவும் சர்ச்சைக்குரிய காவல் துறை அதிகாரியான கே.பி.ரகுவன்ஷி என்பவர் ஹேமந்த் கர்கரேயின் இடத்தில் நியமிக்கப்பட்டவர்; சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், காமா மருத்துவமனை, ரங்கபவன் சந்து ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அய்.பி. அமெரிக்க புலனாய்வு அமைப்பகம் (F.I.B.) ஆகியவற்றின் சந்தேகத்திற்கிடமான விசாரணை; மும்பை குற்றப் புலனாய்வுத் துறை பொம்மையாகச் செயல்பட வைக்கப்பட்டது போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த நூலில் 1893 இல் திட்டமிட்டு முதன்முதலில் நடத்தப்பட்ட இந்து முசுலிம் பெருங்கலவரம் முதல் 26.11.2008 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் வரையிலான சம்பவங்கள் தொடர்பாக எழுந்துள்ள வினாக்களுக்கு விடைகாண முயன்றிருக்கிறேன்.

(1) பார்ப்பனர்களின் பிரச்சினை பற்றி கவனிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பார்ப்பன அமைப்புகள் 1893 இல் திடீர் என இந்து முசுலிம் கலவரங்களைத் தூண்டிவிட்டு இந்து முசுலிம் விரோதச் சூழலை உண்டு பண்ணி அவர்களிடையே மத்திய கால வரலாற்றுக் காலத்திலிருந்து நிலவிய சமூகச் சூழ்நிலையைக் கெடுக்க வேண்டிய தேவை என்ன?

2) கெடுதலை விளைவிக்கக்கூடிய வகுப்பு விரோத அமைப்புகளான குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். போன்ற பார்ப்பன அமைப்புகளின் முசுலிம் விரோதச் செயல்கள் பற்றி இந்தியாவின் முன்னணி உளவுத் துறையான அய்.பி. தகவல்களை அளிக்காமல் அரசை இருட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பது ஏன்?

3) கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவே வகுப்புக் கலவரங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேவைப்படும் உளவுச் செய்திகளை காலாகாலத்தில் அரசுக்கு அளித்து ஆலோசனை கூறி அவற்-றைக் கட்டுப்படுத்த அய்.பி. தவறியது ஏன்?

4) மிக முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கும் முக்கிய நிர்மாணங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியவற்றிற்கும் முசுலிம் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என்கிற வதந்திகளைப் பரப்பும் செயலை 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அய்.பி. தொடங்கிச் செய்வது ஏன்?

5) பார்ப்பன பயங்கரவாத அமைப்புகள் தம் உறுப்பினர்களுக்குப் போர்ப் பயிற்சி தருவது, ஆயுதங்களை வாங்குவது, வெடிமருந்துகள் வாங்கி வெடி குண்டுகள் தயாரித்தல், வெடிப் பொருள்களை வாங்கிப் பல இடங்களுக்குக் கொண்டு போதல் போன்ற பயங்கரவாதச் செயல்களைச் செய்வது பற்றி அய்.பி. அரசுக்குத் தகவல் தராமல் இருப்பது ஏன்?

6) இந்துராஷ்ட்ரம் என்கிற நாட்டை அமைக்கும் செயலில் ஈடுபட்டு வரும் அபிநவ் பாரத் என்ற அமைப்பின் செயல்பாடுகள்பற்றி அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல், அய்.பி. இருட்டடிப்புச் செய்வது ஏன்?


-------------------நன்றி:-”விடுதலை” 8-1-2010



3 comments:

Unknown said...

பாகிஸ்தானா நாங்கள் இந்தியாவில் தீவீரவாதத்தினை ஆதரித்தோம்,வளர்த்தோம் என்று சொன்னாலும் கூட பார்பனீயம்தான் அதைச் செய்தது என்று எழுதும் கூட்டம்தானே தி.க. பாகிஸ்தான் உதவியுடன் 26/11 தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை இந்திய அரசு வெளியிட்ட போது வீரமணி அதை விடுதலையில் ஏன் மொழிபெயர்த்து வெளியிடவில்லை. தொலைக்காட்சிகள் காட்டின தீவிரவாதிகள் என்ன செய்தனர் என்பதை.அவர்கள் எங்கிருந்த் வந்தார்கள், யார் யாரைக் கொன்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமானபின்னும் புளுகுகளை
பரப்பினால் யாரும் நம்ப மாட்டார்கள்.
உலகமே பாகிஸ்தானை காறித்துப்பினாலும் கருஞ்ச்சடைபோட்ட திக அரவணைக்குமா?.

Unknown said...

பாகிஸ்தானா நாங்கள் இந்தியாவில் தீவீரவாதத்தினை ஆதரித்தோம்,வளர்த்தோம் என்று சொன்னாலும் கூட பார்பனீயம்தான் அதைச் செய்தது என்று எழுதும் கூட்டம்தானே தி.க. பாகிஸ்தான் உதவியுடன் 26/11 தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை இந்திய அரசு வெளியிட்ட போது வீரமணி அதை விடுதலையில் ஏன் மொழிபெயர்த்து வெளியிடவில்லை. தொலைக்காட்சிகள் காட்டின தீவிரவாதிகள் என்ன செய்தனர் என்பதை.அவர்கள் எங்கிருந்த் வந்தார்கள், யார் யாரைக் கொன்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமானபின்னும் புளுகுகளை
பரப்பினால் யாரும் நம்ப மாட்டார்கள்.
உலகமே பாகிஸ்தானை காறித்துப்பினாலும் கருஞ்ச்சடைபோட்ட திக அரவணைக்குமா?.

Unknown said...

பாகிஸ்தானா நாங்கள் இந்தியாவில் தீவீரவாதத்தினை ஆதரித்தோம்,வளர்த்தோம் என்று சொன்னாலும் கூட பார்பனீயம்தான் அதைச் செய்தது என்று எழுதும் கூட்டம்தானே தி.க. பாகிஸ்தான் உதவியுடன் 26/11 தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை இந்திய அரசு வெளியிட்ட போது வீரமணி அதை விடுதலையில் ஏன் மொழிபெயர்த்து வெளியிடவில்லை. தொலைக்காட்சிகள் காட்டின தீவிரவாதிகள் என்ன செய்தனர் என்பதை.அவர்கள் எங்கிருந்த் வந்தார்கள், யார் யாரைக் கொன்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமானபின்னும் புளுகுகளை
பரப்பினால் யாரும் நம்ப மாட்டார்கள்.
உலகமே பாகிஸ்தானை காறித்துப்பினாலும் கருஞ்ச்சடைபோட்ட திக அரவணைக்குமா?.