Search This Blog

30.11.09

பார்ப்பனர்களின் பிறவிக்குணம்


பிறவிக்குணம்

முல்லை பெரியாறு பிரச்சினையிலே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே அலட்சியப்படுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்த கேரள முதல்வரின் துணிச்சல் எனக்கு இல்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று முதலமைச்சர் கலைஞர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் கேட்கிறாராம்.

அதற்கு வீரமணி அவர்கள் என்ன சொல்கிறாராம்?

அட விடுங்க, இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படிப் பாராட் டறீங்களே, அய்ம்பது சதவிகிதத்துக்குமேலே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருந்தும் எத்தனையோ வரு ஷமா 69 சதவிகிதம் கொடுத்துட்டு வர்றோமே! அதுவிடவா இது பெரிய துணிச்சல்?

------------------ துக்ளக் கார்ட்டூன் 2.12.2009

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்லுவார்களே, அது நூற்றுக்கு நூறு இதற்குத்தான் பொருந்தும். பொதுவாக சோவின் விவாத முறை என்பதே இந்தத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.

முல்லை பெரியாறு விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு சட்டம் கொண்டு வந்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேநேரத்தில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் சொன்ன சட்ட ரீதியான யோசனையை, கருத்துரையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை, உச்சநீதிமன்றம் குற்றமுடையது என்று இதுவரை சொல்லவில்லையே! 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தாண்டி வட கிழக்கு மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் அளிக்கப்பட்டுக் கொண்டு-தானிருக்கிறதே!

உண்மை இவ்வாறு இருக்க, சோ இப்படிக் குழப்புவது ஏன்? தமிழ்நாட்டுக்கோ, தமிழர்களுக்கோ நன்மை _ உரிமை கிடைக்கும் எதையும் கொச்சைப்படுத்துவதும், குறுக்குச்சால் ஓட்டுவதும்தான் பார்ப்பனர்களின் பூணூல் தர்மமும், ரத்த ஓட்டமும் ஆகும்.

கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார்பற்றி எழுதும்போது, அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூசாமல் இந்தக் கூட்டத்தால் எழுத முடிகிறதே!

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்டான் என்ற டாக்டர் டி.எம்.நாயரின் பொன்மொழியை தமிழர்கள் கண்ணாடி சட்டம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வார்களாக!

----------- மயிலாடன் அவர்கள் 30-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: