Search This Blog

1.11.09

ஆரியம் இல்லை என்றால் பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?


ஆரிய - திராவிடக் கலப்பு - உண்மையா?

அண்மையில் திருச்சியில் நடந்த ஒரு வரலாற்றுக் கருத்தரங்கில் பேசிய அய்ராவதம் மகாதேவன் (அய்யர்) அவர்கள் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்றும், சிந்து வெளியில் வாழ்ந்த (திராவிடர்) மக்கள் நலிந்து, சிதறுண்டு, வலுவான தலைமை இழந்த நிலையில், அதாவது சிந்துவெளி நாகரிகம் அழிந்த பிறகே ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறினர் என்றும், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் வலிமை குன்றியிருந்த காரணத்தால் ஆரியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த போதிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முடிந்தது என்றும், காலப் போக்கில் ஆரிய _ திராவிடக் கலப்பு ஏற்பட்டு ஒரு புதிய சமுதாயம் உருவானது என்றும், வேளிர்குடியினர் கொங்கணத்திலிருந்து தமிழகத்தில் குடியேறியவர் என்றும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிட மொழியையும் ஆரிய மொழியையும் பேசிய மக்கள் ஒருங்கிணைந்து ஒரு கலப்புச் சமுதாயமாக உருவாகிவிட்டனர் என்றும் எனவே இன்றைய நிலையில் ஆரியம், திராவிடம் என்ற சொற்கள், மொழிகளை மட்டுமே குறிக்கின்றன, இனங்களை அல்ல என்றும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். (தினமணி _ 11.10.09)

மேலோட்டமாகப் பார்க்கும் போது...

மேலோட்டமாகப் பார்க்கும்போது அய்ராவதம் மகாதேவன் எவ்வளவு பெரிய உண்மையைக் கண்டுபிடித்து வெளிப்படுத் தியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். இளம் ஆய்வாளர்களுக்குப் பெரும் வியப்பாகவே இக்கருத்து, தோற்றமளிக்கும். ஆனால் உண்மை நிலை என்ன?

சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதனை இருநூறு ஆண்டுகளுக்குமுன்பே (கி.பி. 1800) தொல்லியல் ஆய்வு மூலம் நிறுவிய அறிஞர்கள் சர் ஜான் மார்சல், ஈராஸ் பாதிரியார், மார்ட்டிமர் வீலர், வில் டுராண்ட், முதலியோராவர். இவர்களும் இவர்களையொத்த பிற அய்ரோப்பிய வரலாற்று ஆய்வாளர்களும் நிறுவிய கருத்தினையே இன்றுவரை ஆய்வாளர்கள் திரும்பத் திரும்பத் தம் சொந்தக் கண்டுபிடிப்புகளைப் போலக் கூறிவருகின்றனர். எனவே சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்னும் கருத்து அய்ராவதம் மகாதேவன் கண்டுபிடித்த கருத்தல்ல. அய்ரோப்பிய ஆய்வாளர்களுக்கே அப் பெருமை உரியதாகும். ஆதலின் அய்ராவதத்தின் கருத்து ஒன்றும் புதுமையானதல்ல!

இரண்டாவதாக, சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் நலிந்து சிதறுண்டு வலுவான தலைமை இழந்த நிலையில், அதாவது சிந்து வெளி நாகரிகம் அழிந்த பிறகே ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறினர்; இவ்வாறு சிந்துவெளி மக்கள் வலிமை குன்றியிருந்த காரணத்தால் ஆரியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தபோதிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முடிந்தது, என்கிறார் அய்ராவதம். இக்கருத்தும் ஏற்புடையதில்லை.

திராவிட மன்னரும் மக்களும் வலிமை குன்றிப் போனமைக்கு ஆரியர்களே காரணம் என்னும் வரலாற்றுண்மையை அய்ராவதம் மறைப்பதால் இனி என்ன பயன் விளையப்போகிறது? இமயம் வரை சென்று ஆரிய அரசர்களை வணக்கிய சேரன் செங்குட்டுவன், இறுதியில் மாடலமறையோன் என்னும் வேதியனின் கால்களில் விழுந்து இனி நீ சொல்கிறபடியே நடப்பேன் என்று கோழையானான். பார்ப்பனரைத் தவிர வேறு எவருக்கும் நீ பணியாதவனாயிற்றே என்று ஒரு சேரனைப்பற்றிப் பதிற்றுப்பத்து கூறுகிறது. வேள்வியறியாத் தமிழ் அரசர்களை வேள்வி செய்ய வைத்து இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்றும், பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி என்றும் பட்டங்கள் கொடுத்து வெஞ்சின வேந்தர்களை வேள்வித்தீமுன் மண்டியிடச் செய்தவர்கள் ஆரியர்கள்!

சேர்ந்தமங்கலம், சத்தியமங்கலம், கண்ணாடி மானியம் முதலான இத்தொடர்களின் பொருள்களை விரித்து எழுதினால் ஆரிய இனத்தின் ஒழுக்கம் பற்றி ஊர் சிரிக்குமே!

வெள்ளை உடம்பு காட்டி வெறும் வாக்கு நயம் காட்டி

கள்ளங்கள் செய்தாரடி! _ சகியே

கள்ளங்கள் செய்தாரடி!

என்று புரட்சிக் கவிஞர் ஆரியர் இயல்பைப் படம் பிடிப்பார்.

ஆதலின் திராவிடர் வலிமை குன்றிப் போனமைக்கு ஆரியரே காரணமாவர். திராவிடர் வலிமை குன்றிய பிறகு ஆரியர் வந்தனர் என்பது பொய். திராவிடர் வலிமையோடு இருந்த காலத்திலேயே சிந்து வெளிக்குள் ஆரியர் நுழைந்து விட்டனர் என்பதுதான் உண்மை.

நேரு எழுதியது

அய்ராவதம் ஓர் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஆரியர் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களாகவே இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்தனர்; ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டனர்! அதன் பின்னர் அவர்கள் அலை அலையாய் இங்குவந்து குடியேறினர் என்று நேரு தமது இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திராவிடரின் போர் முறை நேருக்கு நேர் நின்று மோதுவது! அடுத்துக் கெடுப்பது ஆரியரின் போர் முறை !

அறிஞர் அண்ணா குறிப்பிடுவதைப்போல ஆரியர்கள் அரச போகத்திற்கு ஆசைப்படுவதில்லை! ஏனென்றால் ஆரியம் விதைக்காது விளையும் கழனி, வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம். (அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்)

ஆரியரின் போர்முறை மரத்தின்பின் மறைந்து தாக்குவது! ஆரியக் கூட்டம் ஒரு சிறு கும்பல்தான். மிகச்சிறு கும்பல்! ஆனால் நீர் மூழ்கிக் கப்பல்போல் (சப்மெரைன் போல்) மறைந்திருந்து தாக்கும் இயல்பு விடவாயு போல் பரவினதும் மாய்க்கும் கொடிய சக்தி; வெடிகுண்டுபோல் வீசப்பட்டதும் அரண்களைப் பிளந்தெறியும் வலிமை பெற்றது. இல்லையேல் சிறுகும்பல் பெரியதோர் கூட்டத்தை எங்ஙனம் எதிர்க்கத் துணியும்? (அறிஞர் அண்ணா; தமிழரின் மறு மலர்ச்சி)

மூன்றாவதாக வேளிர்கள் வடக்கிலிருந்துவந்து தமிழகத்தில் குடியேறினார்கள் என்னும் கருத்தைப் போகிற போக்கில் வீசி விட்டுப் போகிறார் அய்ராவதம்! இதன் உட்பொருள் தமிழர்களும் வடபுலத்திலிருந்து தெற்கு நோக்கிவந்து குடியேறியவர்கள் என்பதாகும். வேளிர் என்ற சொல் வேளாண்தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும். வேள்_ வேளாண் _ வேளாண்மாந்தர் _ வேளாண்மை _ வேளாளர் _ வேளிர் என்பன உழுதொழிலை மய்யமாகக் கொண்டு எழுந்தவை. தொல்பழங்காலந் தொட்டு இம் மண்ணின் மைந்தர்களாக விளங்கிவரும் வேளாண் மக்களை (திராவிடரை) வடபுலத்திலிருந்து வந்தேறிகள் எனக் கூறுவது தமிழ் இனவரலாறு தெரியாதோர் கூற்றெனக் கொள்ள வேண்டும்.

பறம்புமலையரசன் வேள்பாரியும், இருங்கோவேளும் அவன் மரபினரும், அயற்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பது வரலாற்றுப் பிழையாகும்.

கலப்பு சமுதாயமா?

நான்காவதாகக், காலப்போக்கில் ஆரிய _ திராவிடக் கலப்பு ஏற்பட்டு ஒரு புதிய சமுதாயம் உருவானது என்றும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிட மொழியையும் ஆரிய மொழியையும் பேசிய மக்கள் ஒருங்கிணைந்து ஒரு கலப்புச் சமூதாயமாக உருவாகி விட்டனர்என்றும் அய்ராவதம் குறிப்பிடுகிறார்.

ஆரியரும் திராவிடரும் ஒன்றாகக் கலந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கினர் என்றால் அந்தப் புதிய சமுதாயத்தின் பெயர் என்ன என்பதை அய்ராவதம் ஏன் குறிப்பிடவில்லை!

ஆரியமாவது திராவிடமாவது எல்லாம் கலந்து ஒன்றாகி விட்டன என்று பார்ப்பனர் தொடர்ந்து இந்தப் பொய்யைப் பரப்பி வருகின்றனர். ஒன்றாகி விட்டன என்றால் அந்த ஒன்றின் பெயர் என்ன? இன்றுவரை ஆரியம் வேறாகவும், திராவிடம் வேறாகவும்தான் இருந்து வருகின்றன. ஆரியம் இல்லை என்றால் பூணூல் அணிவதன் நோக்கம் என்ன? பேச்சு வழக்கில் இல்லாத செத்துப் போன மொழியான சமற் கிருதத்தை தேவ பாஷை என்றும் திராவிட மொழிகளை நீச பாஷைகள் என்றும் சங்கராச்சாரிகள் கூறி வருவதன் பொருள் என்ன? திராவிடர் நிறத்தாலும் பழக்க வழக்கங்களாலும் பேசும் மொழியாலும் ஆரியரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். திராவிடர் பேசும் மொழிகளில் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இவர்கள் ஓரினத்தவர் என்பதை எளிதில் அடையாளம் காண முடியும் ஆனால் இன்றுவரை ஆரியர்கள், திராவிடத் தொல்குடி மக்களிடமிருந்து வேறுபட்டே வாழ்ந்து வருகின்றனர். ஆரியர் தமிழைப் பேசினாலும் அந்தத் தமிழே தனியானது கணவனை, அண்ணா என்றழைக்கும் கொடுமை உலகில் எந்த இனத்திலும் கிடையாது, ஆரிய இனத்தைத் தவிர ! அபிஷ்டு, அம்பி, அத்திம்பேர், அம்மாமி, அவாள், இவாள், இதராள் முதலான சொற்களைக் கொண்டே இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆரியர் வேறு- திராவிடர் வேறு

ஆரியரின் வாழ்வியல் முறையும் திராவிடமிருந்து வேறுபட்டதாகும். அவர்கள் உடுத்தும் உடை எப்படி? தலையில் குடுமி, மார்பில் பூணூல், வேட்டியை வேஷ்டியாக்கி அதை அருவருப்பான முறையில் உடுத்துவது. இவற்றைப் போன்ற எண்ணற்ற வேறுபாடுகளை நாம் எடுத்துக் காட்டலாம். ஆரியர் ஒருபோதும் தாங்கள் குடியேறிய நாட்டு மக்களோடு ஒன்று சேர்ந்து கலந்து வாழ்ந்தது கிடையாது. மக்களோடு கலந்து வாழாமல் தங்களுக் கென்று தனிக் குடியிருப்புகளை அவர்கள் அமைத்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் தனித்தே வாழ்ந்து வருகின்றனர்.

தமிழரின் பண்பாட்டையும் மொழி, கலை முதலான செல்வங்களையும் அழித்தொழிப்பதற்கு இன்றுவரை ஆரியர்கள் இடைவிடாது முயன்று வருகின்றனர். அறிஞர் அண்ணா இது பற்றிக் கூறுவதை அப்படியே தருகின்றோம்.

"கூவுங்கள் ஆரியர்களே! கொக்கரியுங்கள்! தமிழ் மீது மோதிக் கொள்ளுங்கள்; தமிழரின் முயற்சிக்கெல்லாம் தடை செய்யுங்கள்! தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்; தமிழிலே வடமொழியை ஆங்கிலத்தை, இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள்; தமிழன் தன்னைத் தமிழன் என்றுரைத்தால் சீறுங்கள். தமிழ்மொழியில் இசை இருக்கட்டும் என்றால் எதிர்த்துப்பேசுங்கள். கலைச் சொற்களுக்கு வடமொழியே இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள்; தமிழனைத் தாழ்ந்த சாதி என்று சொல்லுங்கள். கூட இருக்கக் கூடாது என்று கட்டளை-யிடுங்கள். கோயிலிலும் குளத்திலும் இழிவு படுத்துங்கள். சாப்பாட்டு விடுதி-களிலும் சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள். உம் ஆணவச் செயலைத், திமிர்வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம். ஆம்! உம் எதிர்ப்பு வளர வளரத்தான் தமிழனின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல்பட்ட புலிபோலச் சீறுவான்! "(தமிழரின் மறுமலர்ச்சி)

அண்ணா தரும் பட்டியல்

ஆரியர்கள் தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதற்கு என்னென்ன செய்துவருகிறார்கள் என்பதை அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இவ்வளவு கொடுமைகளைச் செய்து கொண்டே ஆரியமும் திராவிடமும் ஒன்று கலந்து உருமாறிப் போய்விட்டன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

மாநிலங்களவையில் அண்ணா தன் உரையைத் தொடங்கும்போது, “I belong to the Dravidian stock; I am proud to call myself a Dravidian” என்று கம்பீரமாகத்தான் ஒரு திராவிடன் என்பதை டெல்லியில் வெளிப்படுத்தினார்கள். அண்ணாவின் உரையை முழுமையாகக் கேட்டுவிட்டு வெளியில் வந்த பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அண்ணாவை மனந்திருந்து பாராட்டிவிட்டு நீங்கள் அடிக்கடி இந்த அவையில் இவ்வாறு பேச வேண்டும், என்று கைகுலுக்கிவிட்டுப் போனார். ஆதலின் திராவிடர் என்ற இனம் ஆரிய இனத்தோடு ஒரு போதும் ஒன்று சேர வாய்ப்பில்லை. கடைசிப் பூணூல் இருக்கும்வரை அய்ராவதம் மகாதேவனின் ஆசை நிறைவேறாது.

இனி ஆரியம், திராவிடம் என்ற சொற்கள் மொழிகளை மட்டுமே குறிக்கின்றன; இனங்களை அல்ல என்கிறார் அய்ராவதம் இவை அப்படியே மொழிகளை மட்டுமே குறிக்கின்றன என்று வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் திராவிட மொழியைப் பேசுபவன் யார்? ஆஸ்திரேலியனா இல்லை ஆங்கிலேயனா? திராவிட மொழியைப் பேசுபவன் திராவிடன் தானே! ஆரிய மொழியைப் பேசுபவன் ஆரியன்தானே! இஃது இயற்கை அறிவு படைத்த எவருக்கும் எளிதில் விளங்கும்.

வெவ்வேறு இனமே!

ஆதலின், ஆரியரும் திராவிடரும் வெவ்வேறு இன மரபுகளைச் சேர்ந்தவர்கள். வெவ்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆரியர் வாழ்வியல் முறை வேறு; திராவிடர் வாழ்வியல் முறை வேறு; ஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடப் பண்பாடு வேறு; இவை இரண்டும் எதிர் எதிர் நிலையில் நிற்பவை. எக்காலத்தும் இவை இரண்டும் ஒன்று கலப்பதற்கு வாய்ப்பே இல்லை!

-------------டாக்டர் ப.காளிமுத்து அவர்கள் 31-10-2009 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

3 comments:

Manoj Isaac G said...

Hi,

I went through your blogs.

Can you accept that 70% of a human body is water.

So we cannot afford to carry our identities in expense of our own self imperfectness.

So we need to reconcile and treat the other human having deficiencies equally vulnerable.

so we need to stop magnifying our differences and we need to have confidence on our own culture that it will melt change and reform if it is really relevant.

With regards,
Manoj.

Arivoli said...

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் அல்ல. மாறாக அது தமிழர் நாகரீகம். சிந்துசமவெளி நாகரிக காலத்தில் தமிழ் மொழி மற்றும் இருந்தது. திராவிடம் என்பதே பொய். இந்த தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழனை ஏமாற்ற வைத்துக்கொண்ட பெயர் திராவிடம். தமிழ விழித்துகொள். இல்லாவிடில் உன்னை விழுங்கிவிடுவார்கள். திராவிடம் பேசுபவர்கள் சிங்களவனை விட கொடியவர்கள்.

நம்பி said...

Blogger Arivoli said...

// திராவிடம் பேசுபவர்கள் சிங்களவனை விட கொடியவர்கள்.//
November 5, 2009 10:42 PM
அப்படியா! என்ன பன்றது உனக்கு உன் பிரச்சினை...