Search This Blog

2.11.09

பக்தியென்றால் சுயமரியாதைக்கு இழப்பு என்று இன்னும் புரியவில்லையா?


பாதுகைப் பூஜை

ஸ்ரீ குரு பாதுகை களை பூஜித்தால் அனைத்து கஷ்டங்களும் விலகும். சகல கார்யங்களும் கைகூடும். எல்லா ஐஸ்வர் யங்களும் வந்து சேரும். அஞ்ஞானம் விலகி ஞானம் உண்டாகும் குரு பாதுகா பஞ்சகத்தில் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர் இப்படி தெரிவிக்கிறார்.

ஸ்ரீ ஜகத்குருவின் பாது கைக்கு பூஜை செய்தால் சகல மேன்மையையும் அடையலாம். இந்த அரிய வாய்ப்பு உங்கள் வீட்டி லேயே கிடைக்க உள்ளது. ஸ்ரீஜகத்குரு பாதுகைகள் புதுவை ரங்கப்பிள்ளை வீதி ஸ்ரீமடம் இடத்தில் உள்ளது.

இந்துக்கள் அனை வரும் ஜாதி வேறுபா டின்றி குடும்பத்துடன் சங்கல்பம் செய்துகொண்டு எளிய கட்டணத்தில் பூஜையில் பங்கேற்கலாம். நாடெங் கிலும் மக்கள் வழங்கும் இக்கட்டணத்துகையில் 100 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீமஹாஸ்வாமிக்கு தங்கத்தேர் செய்யப்படு கிறது.

_ இவ்வாறு ஒரு விளம்பரம் ஏடுகளில் வெளிவந்துள்ளது.

பக்திக்கு எந்தவித சேதாரமும் வந்துவிடக்கூடாது என்பதிலேயே பார்ப்பனர்கள் எப்பொழுதும் குறியாகவே இருப்பார்கள்.

அதற்காக ஒன்று போனால் இன்னொன்றைத் தயாராகவே வைத்திருப்பார்கள்.

பாதுகை என்றால் ஏதோ பெரிய சமாச்சாரம் என்று கருதிவிடக்கூடாது. செருப்பு என்று அதற்குப் பொருள்.

இப்பொழுது புரிந்திருக்கவேண்டுமே! சங்கராச்சாரியாரின் செருப்பைப் பூஜிக்கத்தான் அழைப்புக் கொடுத்திருக்கிறார்கள். இதனை விளம்பரமாகவும் தந்துள்ளார்கள்.

மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலந்து குடித்தால் (பஞ்சகவ்யம்) புண்ணியம் என்கிறார்கள். பக்தர்களும் அதற்காகத் தட்சணை கொடுத்தும் குடிக்கிறார்கள்.

இப்பொழுது என்னடா என்றால், சங்கராச்சாரியாரின் கால் செருப்பைப் பூஜிக்கவேண்டும் என்கிறார்கள்.

காற்செருப்பைப்

பிறனொருவன்

கழிவிடத்தில்

தள்ளிடினும்

பொறாத உள்ளம்

என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

இதற்குப் பெயர்தான் சுயமரியாதை என்பது.

இந்தச் சுயமரியாதையை அவமரியாதை செய்வதுதான் அவாளின் நோக்கம்.

யார் இந்த சங்கராச்சாரியார்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர்,

இதற்காகப் பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின்கீழ் அவரை உள்ளே தள்ளியிருக்கவேண்டாமா?

பக்தியென்றால் சுயமரியாதைக்கு இழப்பு என்று இன்னும் புரியவில்லையா?

இவரது செருப்பைத் தொழ, பூஜை செய்ய அழைப்பாம்!

அவர்களைச் சொல்லிக் குற்றமென்ன? இதற்கும் தயாராக உள்ள சூத்திரர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

--------------- மயிலாடன் அவர்கள் 2-11-2009"விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: