Search This Blog

12.11.09

மனோரமா அவர்களும்-மருத்துவப் பரிசோதனையும்

16 ஆவது
திருமணமாம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜோதிபா புலே மாவட்டம் ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் வாகித் என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் 15 திருமணங்களைச் செய்துகொண்டு இப்-பொழுது 16 ஆவது திருமணத்திற்கும் ‘அடி’ போடுகிறாராம். என்ன காரணமாம்? இதுவரை ஒரு குழந்தைகூடப் பிறக்கவில்லையாம்; அதற்காகத்தான் 16 ஆவது திருமண ஏற்பாடாம்.

ஒரு அப்துல் வாகித் மட்டுமல்ல; இதுபோல எத்தனையோ வாகித்துகளும், வாஞ்சிநாதர்களும் நாட்டிலே இருக்கவே செய்கிறார்கள். குழந்தைகள் இல்லையென்றால் அதற்குப் பெண்கள்தான் காரணம் என்கிற அறியாமை, ஆண்களுக்கே உரிய ஓர் அகம்பாவம் இந்த நாட்டிலே தலை கொழுத்துக் காணப்படுகிறது.

15 பெண்களைத் திருமணம் செய்தும் குழந்தை இல்லையென்றால், கண்டிப்பாக குறைபாடு இந்த ஆணிடம்தான் இருக்கிறது என்பது வெளிப்படை; இதனை அந்த ஆசாமியிடம் சுட்டிக்காட்டி இடித்துக் கூற எந்த பகுத்தறிவுவாதியும் அல்லது பொது அறிவுவாதியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இல்லை போலும்.

திருமணத்துக்குமுன் மருத்துவ சோதனை ஆண் _ பெண் இருபாலரிடத்திலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தினை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடர்ந்து திருமண மேடைகளில் சொல்லிக் கொண்டு வருகிறார்.

ஜாதகப் பொருத்தம் என்பது பொய்; குருதிப் பொருத்தமே தேவை என்பது பகுத்தறிவு அறிவியலின் நிலைப்பாடாகும்.

இந்த நாட்டில் சோதிடப் பலன்களையும், ராசிப் பலன்களையும் பக்கம் பக்கமாக எழுதும் ஏடுகள், இதழ்கள் மக்களுக்குத் தேவையான இதுபற்றியெல்லாம் எழுதாதது அவற்றின் பொறுப்பற்ற தன்மையையும், பகுத்தறிவற்ற நிலையையும் தான் படம் பிடித்துக் காட்டும்.

மக்கள் கலையரசி மனோரமா திருமணத்துக்குமுன் மருத்துவ சோதனை என்று வலியுறுத்துவது வரவேற்கத்தக்கதாகும். கலை உலகினர் எடுத்துக் கூறினால் மக்களிடத்திலே வேகமாகச் சென்றடையும்தானே!

இன்னொரு மூட நம்பிக்கை உண்டு. குழந்தை ஆணா, பெண்ணா என்று முடிவு செய்வது ஆண்களின் ‘குரோமோசோம்கள்’தான். இந்த அறிவியல் உண்மை தெரியாத நிலையில், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து திருமணம் செய்துகொள்ளும் மூடர்களை என் சொல்ல!

---------------- மயிலாடன் அவர்கள் 11-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

3 comments:

Chittoor Murugesan said...

பத்திரிக்கைகள் சோதிடப்பலனை மட்டுமா எழுதுகின்றன (பத்திரிக்கைகளில் வெளிவரும் ராசிபலனெல்லாம் சோதிடத்தில் எல்.கே.ஜி. மாதிரி) பரிகாரதலங்கள் என்று பக்கம் பக்கமாய் எழுதி பார்ப்பனர் கல்லாபெட்டிய நிறைக்கின்றன. சுப்பிரமணியம் சுவாமி,எஸ்.வி.சேகர் பற்றி எழுதவே பக்கங்கள் போதவில்லை.

செக்ஸ் கல்வி வழங்கினால் இவர்கள் தரும் கிளுகிளு கதைகளை எவன் படிப்பான். மக்கள்/வாசகர்கள் மடமைகளில் மூட நம்பிக்கைகளில் தொடர்ந்தாலே தங்களுக்கு லாபம் என்று கருதும் பத்திரிக்கைகள் தங்கள் பிழைப்பை கெடுத்துக்கொள்ளுமா என்ன ?

கிருஷ்ண சேதுராமன் said...

இந்த கட்டுரைகள் சொல்லப்பட்டு இருக்கிற செய்தி முற்றிலும் நம் சமுதாயத்துக்கு தேவை தான் என்பதனை நான் ஒப்புக்கொள்கிறேன். . அது பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களை சமூக ஆர்வலரான நீங்களும், சமுதாயத்தில் உறுப்பினர் என்ற வகையில் நானும் செய்கின்றோம் எனில் அதில் ஒரு நியாயம் இருக்கிறது......

கலைதுறையினர் செய்யும் இழி செயல்களை அறிந்துதான் தாங்கள் இவ்வாறு அவர்களை ஆதரவுக்கு அழைக்கிறீர்களா? ஆம் எனில் நான் உங்களுக்காக வருத்தம் கொள்கின்றேன். .

எந்த ஒரு சமுதாய முற்போக்கு பிரசாரங்களிலும் கலைதுறையினர் கலந்து கொள்வதற்கான தகுதியை அவர்கள் இழந்து விட்டனர். . .

கி. சேதுராமன்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

சித்தூர்.எஸ்.முருகேசன்

&
Sethuezhil