Search This Blog

30.7.09

அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா?




ஆனந்தவிகடன் அன்றும் இன்றும்
முதல்வர் கலைஞரின் கடிதம்


ஆனந்தவிகடன் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் முதல்வர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் எழுதியுள்ள உடன்பிறப்புக்கான கடிதத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.

உடன் பிறப்பே,

அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உன்னைப் போன்ற உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும் அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதி மொழிகளை வழங்கிக் கொண்டும் என் நாடி நரம்புகளில பாசப் பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது சில பார்ப்பன வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும் - கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.

இதோ! என் துணைவி ஆம் - உன் அண்ணி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச்சித்திரம் போடவும், பார்ப்பனீய பேனா தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24.6.2009 தேதிய ஆனந்த விகடனில் வந்துள்ள கன்னா பின்னா கார்ட்டூன்களில் ஒன்றை உனக்குக் காட்டியிருக்கிறேன்.

உடன்பிறப்பே, அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?

என்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கு எழுதி அதே ஆனந்தவிகடன் 25.4.1954 இல் எழுதிய மனோகரா திரைப்பட விமர்சனத்தையும் அந்த ஏட்டிலிருத்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார்.

நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு மனோகராவை எடுத்துக் காட்டலாம். இவ்வாறு விகடன் விமர்சனம் எழுதியது 1954 இல்!

அந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்!

தம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு மனோகரா படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய அய்ம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா? அதே போல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வர மறுத்த நிலையிலும் கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்ச ரூபாய்க்கு வாங்கிட வேண்டும் என்றும் ஆணையிட்டிருப்பேனா? அது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் மீது தமிழக சட்டமன்றத்தின் சார்பில், அ.தி.மு.க. ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச் செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியில் கேட்டுவிட்டு உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா?

நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா?

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ளார்

----------------நன்றி:-"விடுதலை" 29-7-2009

3 comments:

Thamizhan said...

அவர்களை வைக்க வேண்டிய இடத்திலே வைக்காமல் நடு வீட்டிற்கு அழைத்து வந்ததற்கு நன்றிக்கடன் செய்கிறார்கள்.
இன்று ஒரு மூன்றாந்தர நடிகனுக்கு மரியாதை செய்யும் உடன் பிறப்புக்கள் இதை உடனே உணரவேண்டும்.
பார்ப்பான் என்று சொல்ல்த் தயங்கும் தொண்டர்களுக்கு இப்போதாவது உணர்வு வரட்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா

Unknown said...

Oviya Just because you guys are black shirt wearing dirty dravidian tamilsshould you behave like vicious sons of bitches?BTW is thamizan your brother?how come he is so dirty and dumb just like you?You both must be atleast having the same mother or father correct?