Search This Blog

20.7.09

சந்திரன் (நிலா) பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்





நிலவில் மனிதன் முதன்முதலில் இறங்கி நடந்த நாளான இன்று (20.7.1969) நிலவைப்பற்றிய
சில சேதிகள்

கட்டுக் கதைகள்:

1. பழங்காலத்தில் சந்திரனை கோள வடிவமாக கருதினர். புளுடார்ச் போன்ற சித்தாந்தவாதிகள் கூட அதன் மேற்பரப்பில் கடல், ஆறு போன்றவைகளின் நிழல்கள் காணப்படுவதாக நம்பினர்.

2. பவுர்ணமி வெளிச்சத்தில் படுத்துக் கிடந்தால் ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் பவுர்ணமி காலத்தில் அறுவடை நடந்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று நம்பினார்கள். அதே வேளை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றினால் கெடுதல்கள் ஏற்படும் என்றும் நம்பினர்.

3. உலகத்தில் உள்ள நீர், நிலம், நெருப்பு, காற்று போன்றவைகளுக்கும், அழிக்க முடியாத நட்சத்திரங்களுக்குமிடையே சந்திரன் தான் எல்லைக் கோடு என்று கருதினார் அரிஸ்டாட்டில். அதன் பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட இயற்பியல் மாற்றத்தால் தனித்தனியாகப் பிரிந்தது என்றும் அவர் கூறினார்.

4. சந்திரனில் சாங்கி என்ற சீனப் பெண் வாழ்ந்ததாக ஒரு கதை உள்ளது.அவளும், அவளுடைய கணவனும் என்றும் அழியாத மனிதர்களாக இருந்ததாகவும், பின்னர் அவர்களின் கெட்ட நடத்தைகளால் அவர்களால் மரணமடையும் மனிதர்களாக சபிக்கப்பட்டார்கள் என்றும் ஒரு கதை சீனாவில் இன்றும் உலவுகிறது. இதன் அடிப்படையில்தான் அந்தப் பெண் பெயரான சாங்கி என்பதையே சீன செயற்கைகோள் ஆராய்ச்சி மய்யத்திற்கு சூட்டி உள்ளனர்.

உண்மைகள்:

1. சூரியனும், சந்திரனும் பெரிய கோள வடிவிலான ராட்சத பாறைகள் என்றும் சூரியனின் ஒளியை உள்வாங்கி சந்திரன் ஒளிருவதாக மேற்கத்திய நாடுகளில் முதல் முதலாக தனது கருத்தை பதிவு செய்தார் அனாக்சோகிராச்.

2. 1609 இல் தன்னுடைய தொலை நோக்கியின் மூலம் முதல் முறையாக சந்திரனை ஆய்வு செய்தார்.அதில் சந்திரனில் மலைகள் மற்றும் சிறு சிறு பள்ளங்கள் காணப்படுவதாகவும் கூறினார். 17 ஆம் நூற்றாண்டில் ரிச்சியோலி மற்றும் கிரிமால்டி ஆகியோர் சந்திரனின் வரைபடைத்தை வெளி-யிட்டு அங்கு காணப்படும் பள்ளங்களுக்கு பெயர்களும் சூட்டினர். அந்தப் பெயர்கள் இன்னும் அழியாமல் உள்ளன.

3. பல தொடர் முயற்சிகளுக்குப் பிறகு பூமியில் உள்ள சந்திரனை தொலை நோக்கி மூலம் கண்டு அங்-குள்ள சந்திரனின் உண்மையான தோற்றத்தை 1645 இல் வரைபடமாகத் தந்தார் மைக்கேல் புளோரென்ட். அவருடைய வரை படம்தான் சந்திரனை பற்றிய முதல் உண்மையான வரைபடம். எரிமலைகள், மலைகள், பள்-ளங்கள் ஆகியவற்றை வரைபடத்தில் குறிப்பிட்டார்.

4. சந்திரனில் காற்று இல்லை என்பதை 1753 இல் குரோட்டைன் ஜெசூட் கண்டுபிடித்தார். 1824 இல் சந்திரனில் மலைகள் ஏற்பட்டதற்கான காரணங்களையும் அதனால் எரி நட்சத்திரக் கற்கள் தோன்றும் விதத்தையும் பிரான்ஸ் வொன் என்ற வானியல் நிபுணர் கண்டுபிடித்து தெரிவித்தார்.

சந்திரனில் முதன் முதலாக காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கோலின்ஸ் ஆகியோர் கையொப்பமிட்டுக் கொடுத்த தங்களின் புகைப்படங்களை இந்தியாவின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் தொலைத்து விட்டது.


**********************************************************************************************



40 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில் சந்திரனில், மனித குலத்தின் மகத்தான சாதனையாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும் காலடி பதித்த நாள் (20.7.1969).


---------------நன்றி "விடுதலை" 20-7-2009

0 comments: