Search This Blog

25.7.09

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்




பெரியார் மருத்துவமனைகள், பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்கள்
பல தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு நிலைத்து பயன்பட்டு வருகின்றன

அய்யா சிலை திறப்பில் அவர்தம் புகழ் போற்றி தமிழர் தலைவர் நன்றிப் பெருக்குரை


பெரியார் பொது மக்களிடமிருந்து பெற்ற ஒவ்வொரு காசையும் மீண்டும் பொது மக்களுக்கு கல்வி நிறுவனங்களாக மருத்துவமனைகளாக தந்தை பெரியார் வழங்கினார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூரில் 5.7.2009 அன்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திரா-விடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு.:

உண்மையாகக் கடவுளை நம்புகிறார்களா?

யாராவது உண்மையாகக் கடவுளை நம்புகிறவர்கள் இருந்தால், எல்லாம் அவன் செயல் என்று யாரும் சும்மா இருப்பதில்லையே! யாராவது கழனிக்குச் சென்று விவசாயம் செய்யாமல் இருக்கிறார்களா? எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று சும்மா இருக்கிறார்களா? விதைக்க வேண்டிய அவசியமில்லையே!


தானாகவே ஆண்டவனே என்று வேண்டிக்கொண்டாலே போதுமே! தானாகவே கிளம்பியதா? அப்படி வருமா? வராது.

இன்னும் கேட்டால் நம்மாள் என்ன செய்கி-றான்? உயிரைக் கொடுத்த சாமிக்கு வேண்டுதலுக்காக மயிரைக் கொடுக்கலாம் என்று போகிறான். வசதிப்படி. திருப்பதிக்குப் போகலாமா? பழனிக்கு போகலாமா? அல்லது இன்னொரு ஊருக்குப் போகலாமா? காசு குறைவாக இருந்தால் இங்கேயே போகலாமா? என்று பார்க்கிறான்.

மொட்டை அடிப்பதில் கூட, வேண்டுதல் என்று சொன்னால் இரவோடு இரவாக அவன் மயிரை எடுத்துக்கொண்டு போய்விடுவது தானே?

குத்தகை எடுத்தவன்தான் பார்க்க வேண்டும்

குத்தகைக்கு நிலத்தை விடுகிறோம். குத்தகை கொடுப்பது நம்முடைய வேலை. குத்தகை எடுத்தவன் மற்ற வேலைகளை எல்லாம் அவன் பார்த்துக்கொள்வது. ஆனால், முடியை நீங்கள் கடவுளுக்கு விட்டுவிட்ட பிறகு கூட நீங்களே கோவிலுக்குச் சென்று அங்கு முடி மழிக்கிறவரிடம் தலையைக் காட்டி முழுக்க மொட்டை அடித்து அந்த முடிகளை எல்லாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து அதிகப் பணத்தைப் பெறுகின்றார்கள்.

அதிலும் நம்மாள் முட்டாளாகிறான். ஆகவே எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால், நம்முடைய அறிவு பாழ்பட்டு நிற்கிறது. பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும். வெளிச்சம் வந்தால் இருட்டு போய்விடும்.

பெரியார் கொள்கை பரவியதால் தான்

ஆகவே, வெளிச்சத்தில் மக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்-கள் தன்னம்பிக்கையை உருவாக்கினார். பெரியாருடைய கொள்கை என்பது தானே மிக முக்கியம். பெரியாருடைய கொள்கை பரவியதை ஒட்டித்தான் மக்கள் படிக்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். சவுகரியமாக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில் கூட நம்மாள் வச, வச, கொச, கொச என்று பெற்றுக்கொள்வான். தாய்மார்களுக்கெல்லாம் தொல்லை.

ஆண்களைவிட, பெண்களுக்குத்தான் ரொம்பத் தொல்லை. ஏனய்யா 14 குழந்தைகள் பெற்றாய் என்று கேட்டால், அது நமது கையிலா இருக்கிறது என்று கேட்பான்.

பெரியாருக்குக் கோபம் வந்தது


பெரியாருக்குக் கோபம் வந்து கேட்டார்: அட மடப்பயலே இந்த ஒரு சங்கதியாவது உன்கையில் இருக்க வேண்டாமா? என்று கேட்டார். அப்பொழுது நம்மாளுக்குக் கோபம் வரவில்லை. உடனே என்ன சொல்லுகிறார்கள், பகவான் கொடுக்கிறாரே என்ன செய்வது? என்று பதில் சொல்லுகின்றான்.

பகவான் கொடுத்திருந்தால் பத்து பசு மாட்டை சேர்த்துக்கொடுத்திருக்க வேண்டாமா? கொடுத்தானா அந்தப் பயல். 20 ஏக்கரா பூமியைக் கொடுத்திருப்பானே அதைக் கொடுத்தானா? அதை எல்லாம் கொடுக்காத பயல் இதை மட்டும்கொடுத்தால் அவனை விட பொறுப்-பில்லாத பயல் உலகத்தில் வேறு எவனாவது இருப்பானா? என்று தந்தை பெரியார் கேட்டார்.

பகவான் முட்டினாலும் குழந்தை வராது

இப்பொழுது நேராக சிகப்பு முக்கோணம் தொங்குகின்ற இடத்திற்குப் போய், எனக்கு ஒரு குழந்தை போதும்,

இரண்டு குழந்தை போதும் என்று சொல்லிவிட்டால் டாக்டர் கத்தியை எடுத்த ஒரு கீறு கீறு கீறி ஒரு முடிச்சு போட்டுவிட்டார் என்றால் எந்த பகவான் முட்டு, முட்டென்று முட்-டினாலும் கொடுக்க முடியுமா? மறுபடியும் டாக்டராகப் பார்த்து முடிச்சை அவிழ்த்து விட்டால்தான் பகவானுக்கு வேலை. பகவான் அவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டான். இப்பொழுது அப்படிப்பட்ட ஒரு கற்பனை. ஏமாறுகிறான். ரூபாய் நோட்டு கொடுத்தால் எண்ணிப்பார்க்கின்றான். அது மட்டுமல்ல நல்ல நோட்டுதானா என்று பார்க்கின்றான். அது மாதிரி நாம் நம்புகிற கொள்கை நல்ல கொள்கை என்று வரவேண்டாமா? நமக்குத் தன்னம்பிக்கை வரவேண்டாமா? ஆகவே தான் தன்மான உணர்வு வரவேண்டும். சுயமரியாதை உணர்வு வரவேண்டும்.

எல்லா மக்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும். நாம் எல்லோரும் இன்னொருவருக்கு உதவ வேண்டும்; அவசியம் வரும்பொழுது உதவ வேண்டும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும். இதை எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

அய்யா அவர்களிடத்திலே மக்கள் அன்போடு கொடுத்த பணம் அது காலணாவாக இருந்தாலும் 101 காலணாவாக இருந்தாலும் அது எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்தை எல்லாம் என்ன செய்தார்?

அதை எல்லாம் வாங்கி மக்களுக்கே மீண்டும் பயன்படும்படி செய்தார். அவரே பெரிய பணக்காரர் அவருக்கே ஏராளமான சொத்து சுகம் உண்டு. ஏராளமான வருமானம் உண்டு. எவ்வளவோ வசதியாக இருக்க வேண்டியவர். அதை எல்லாம் விட்டு விட்டு ஞானி மாதிரி இருந்தார்.

பெரியார் காலடி படாத கிராமமே இல்லை.

தந்தை பெரியார் காலடி படாத கிராமமே இல்லை. இந்த ஊர் உள்பட என்று சொல்லக்-கூடிய அளவிற்கு நடந்தாரே யாருக்காக? சொந்தக்காரர்கள் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போனாரா? இல்லை சொந்த பந்தங்களுக்கு கொடுத்து விட்டுப் பேனாரா? இல்லையே. அவ்வளவும் மக்களாகிய நமக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாரே! அதனால்தான் இன்று பெரியார், மணியம்மை பல்கலைக் கழகம் வந்தது.

உலகளாவிய நிலையிலே பெண்களுக்கும் கல்வி கொடுக்கக் கூடிய பல்கலைக் கழகம் வந்தி-ருக்கிறது. மருத்துவமனைகள் வந்திருக்கின்றன. பக்கத்திலே உள்ள ஊர் சோழங்கநல்லூரைப் பாருங்கள். அந்த சோழங்கநல்லூரியில் எவ்வளவு பெரிய பெரியார் மருத்துவமனை இயங்குகிறது.

கடவுளை மற! மனிதனை நினை!

கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் மனிதனை நினை என்று சொன்னார்கள். ஆகவே அவர்களிடத்திலே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காசும் பத்திரமாக முடிச்சு போடப்-பட்டு, மக்களுக்கே திருப்பிக்கொடுத்து அதற்காகவே அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

எனவே தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லும் பொழுது, தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும். மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் என்று தெளிவாக எடுத்துச் சுட்டிக்காட்டினார்.

எனவே, அப்படிப்பட்ட ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு இந்த சிறு கிராமத்திலே நம்முடைய இராமு அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பிற்பாடும் கூட, ஒரு உறுதியோடு இருந்து தந்தை பெரியார் அவர்களுடைய சிலையைத் திறந்து வைத்திருக்கின்றீர்கள்.

இதற்கு உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. சில மாதங்களாகவே இந்தச் சிலை அமைக்கப்பட்டு, நம்முடைய தோழர்கள் தேதி கேட்டு வற்புறுத்திக்கொண்-யிருந்தார்கள்.

இன்றைக்கு அந்த வாய்ப்பு வந்தது. உங்களை மீண்டும் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அருமைத் தாய்மார்களே, ஏராளமாக வந்திருக்கின்றீர்கள். நன்றாகப் படிக்க வையுங்கள்

விவசாயத் தாய்மார்கள், பெரியோர்கள் எல்லாம் உங்கள் குழந்தைகளை நன்றாகப் பள்ளிக்கு அனுப்புங்கள், படிக்க வையுங்கள். கல்லூரிகளுக்கு அனுப்புங்கள், சிறப்பாகப் படிக்க வையுங்கள். படித்த பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, நமக்குப் படிப்பு வராது என்ற நிலை யாருக்கும் இருக்கக் கூடாது. நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரங்களாக நீங்கள் எல்லோரும் வாழுங்கள் என்று கேட்டு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். அடுத்து முரசொலி முகிலன் அவர்களுடைய அற்புதமான, சிறப்பான பகுத்தறிவுப் பிரச்சாரம், ஈரோட்டு பூகம்பம் என்ற பெயரிலே சிறப்பான நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள். நீங்கள் பகுத்தறிவுப் பாடங்களைப் பெறுங்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-------------------"விடுதலை" 25-7-2009

3 comments:

dondu(#11168674346665545885) said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்.

உங்கள் பெயரைப் போலவே போலி ஒருவர் ஆரம்பித்த தளம் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அங்கு போய் பார்த்தேன். உங்களது சில இடுகைகளையும் எடுத்து போட்டுள்ளார்.

இது விஷமத்தனமான செயல், கண்டிக்கப்பட வேண்டியது. எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்பு குறிகளுக்குள் உங்கள் பதிவர் எண்ணும் வருமாறு செய்ய வேண்டும். அதாவது தமிழ் ஓவியா (#14608694080821167765).

ஏனெனில் சில நாட்கள் கழித்து அந்த போலி உங்கள் பெயரால் தவறான பின்னூட்டங்கள் இடவியலும். இம்மாதிரி டிஸ்ப்ளே பெயர் வைத்து கொண்டால் அந்த அபாயம் குறையும்.

இது போலி டோண்டுத்தனமான செயல்பாடு. அந்த நபர் வேண்டுமென்றே அவரும் தனது டிஸ்ப்ளே பெயரை தமிழ் ஓவியா (#14608694080821167765) என வைத்து கொண்டாலும் எலிக்குட்டி சோதனையில் அவர் போலி என்பது தெரிந்து விடும், ஏனெனில் அவர் பதிவர் எண் வேறாக இருக்கும்.

போலி டோண்டுவுடன் எனது யுத்தம் பற்றி அறிய எனது வலைப்பூவில் போலி டோண்டு என்னும் லேபலில் அழுத்தி பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைகும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/