Search This Blog

30.7.09

ஏழுமலையான் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயமாம்!


திருப்பதி தேவஸ்தானத்தின் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு ஓர் அரிய ஆலோசனை வழங்கியுள்ளனர்.திருமலை வெங்கடாசலபதிக்கு சிலைக்கு அதிக எடை கொண்ட கிரீடம் அணிவிக்கப்படுவதால் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்! குறைந்த எடையுள்ளவற்றை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது வெங்கடாசலபதிக்கு அணிவிப்பதற்காக மட்டும் 11 டன் அளவுக்கு தங்கம், வெள்ளி, வைர, வைடூரிய நகைகள் உள்ளனவாம்!

தினமும் ஏழுமலையானுக்கு 60 முதல் 70 கிலோ எடையுள்ள நகைகள் அணிவிக்கப்படுகின்றனவாம்! இது மட்டுமல்லாமல், 30 கிலோ எடை கொண்ட வைர கிரீடமும் அணிவிக்கப்படுகிறது!

இவ்வளவு எடை கொண்ட நகைகள் எட்டு அடி உயரமுள்ள மூலவருக்கு அணிவிக்கப்படுவதால் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது என அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனராம்!


சிலையைப் பாதுகாக்கும் பொருட்டு தினமும் சந்தனமும், புனுகும் பூசப்படுகிறதாம்! இருப்பினும் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிட அதிக அளவு எடை கொண்ட கிரீடங்களைக் காணிக்கையாக அளிக்கின்றனராம்!

சமீபத்தில் கர்நாடக அமைச்சர் 34 கிலோ எடை கொண்ட ஒரு வைரக் கிரீடத்தை திருமலை கோயிலுக்கு வழங்கினார்.

அதிக எடை கொண்ட கிரீடத்தை ஒரு அர்ச்சகரால் தூக்கி ஏழுமலையானுக்கு அணிவிப்பது மிகவும் சிரமமாம்!

எனவேதான், அர்ச்சகர்கள் மேற்சொன்ன இலவச ஆலோசனையை வழங்கியுள்ளார்கள்!

அடடா, என்னே பக்தி! என்னே பக்தி! அதிலும் ஏடு கொண்டலவாடு (ஏழுமலையான்) தான் இருக்கும் கடவுள்களிலேயே பெரிய கேப்டலிஸ்ட் கடவுள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை அசையாது நின்ற இடத்திலேயே அன்றாடம் சம்பாதிக்கும் அருமையான முதலாளிக் கடவுள்.

அவரைக் கடவுளாகக் கருதிதான் பக்த கோடிகள் கொள்ளையடிப்பதில் ஒரு பகுதி திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டுதல் என்ற பெயரில் லஞ்சமாகக் கொடுத்து, அப்பா ஏழுமலையானே, எங்களை வருமான வரியிலிருந்தும் மற்றும் நாங்கள் செய்யும் பல்வேறு லீலா வினோதங்களிலிருந்தும் காப்பாற்றி, தொடர்ந்து சுரண்டிட தொய்வின்றி உதவுக பகவானே!

தீராத நோய் எல்லாம் தீர்த்து வைக்கும் உனக்கு கோவிந்தா, கோவிந்தா போட நாங்கள் எப்போதும் தயார்! தயார்! ஒரு பங்கு உனக்கும் தானே! சில கம்பெனிகளில் (Sleeping Partner) தூங்கும் பங்குதாரர்கள் _ (அதாவது நேரடியாக வணிகத்தில் ஈடுபடாதவர்களைப்போல் உள்ளவர்) நீ எங்களுக்கு ‘Standing Partner’ தானே எப்போதும்!

தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் ஏழுமலையானே, உனக்கா எடை தாங்க முடியவில்லை? நம்ப முடியவில்லையே!


என்ன செய்வது சிலையின் விரிசல் காட்டிக் கொடுத்துவிட்டதே நீ கடவுள் அல்ல; வெறும் சிலைதான் என்று இந்த கறுப்புச் சட்டைகளும், நாத்திகாளும் பேசுவாளே அதுதான் எங்களுக்குச் சங்கடம்!

இந்த லோகத்தையே தாங்கும் உன்னாலா இந்தக் கிரீடத்தையும், நகைகளையும் தலையில் வைத்து சுமக்க முடியவில்லை?

அபச்சாரம்! அபச்சாரம்!

அர்ச்சகர்களிலும் ஒருவேளை சு.ம.னாக்கள் இருப்பாளோ?

மனுஷாள்பற்றிதான் ஓர் ஆங்கிலப் பழமொழி முன்பு உண்டு! அதாவது, பொறுப்புகளை ஏற்கும் பெரிய மனிதர்களுக்கு மிகுந்த சங்கடம் சிரமம் எப்போதும் உண்டு என்று அர்த்தப்படும் வகையில் அப்பழமொழி,

‘uneasy lies on the head that wears the crown.’

கிரீடத்தை அணியும் தலைக்குள் எப்போதும் பல்வேறு சங்கடங்கள் தோன்றுவது இயல்பு என்பதே அது!

ஆட்சி, அதிகாரம் என்றால் அவ்வளவு எளிதானதல்ல என்பதை அது வலியுறுத்தும்!

உனக்கு அதுபோல் தலைக்குள் நெளிய ஒன்றுமில்லையே; காரணம், அர்ச்சகர்களே நன்னா சொல்லிட்டாளே சிலையால் தாங்க முடியவில்லை பாரத்தை. எனவே, அதிக எடையோடு நகைகளைக் கொண்டு வராதீர்ன்னு!

எனவே, ஒன்று தெளிவாகிவிட்டது! ஏழுமலையான் கடவுள் அல்ல; வெறும் கற்சிலைதான் என்பது!

ஆனால், பக்திப் பரவசம் வந்தவர்களுக்குப் புத்திப் பிரவேசம் எப்போதும் கிடையாதே! ஜாம், ஜாம் என்று வருமானத்தை வாரிக் கொட்டி தூக்கி வைக்கையில் அர்ச்சகர்கள் வசதிக்காகத்தானே இப்படி ஒரு வேண்டுகோள்! ஏ.கே. 47 துணையோடு என்றும் வாழும் ஏடுகொண்டல வாடு விரிசல் ஏற்பட்டால், ரிப்பேர் செய்தால் போச்சு!

-------------------- 28-7-2009 "விடுதலை"யில் "அகப்பையார்" எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

moodikittu podaa ongoyyaala. paruppu maadhiri vandhutta, naaye