Search This Blog

30.7.09

பூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்த்து வாடா என் தேவடியாள் மகனே! என்று கூப்பிடவேண்டும்


தினமணிக்குத் தீராக் காதலா?



பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்காது; பிரச்சாரம் இருக்காது; அவர் கொள்கைப் பரவாது என்று மனப்பால் குடித்த கூட்டத்துக்கு மரண அடி விழுந்தது.

இந்தியாவையே குலுக்கிய இராவண லீலா நடைபெற்றது அன்னை மணியம்மையார் தலைமையில். நீதிமன்றம்வரை சென்று இராமனை, சீதையை, இலட்சுமணனைக் கொளுத்தியது குற்றமல்ல கொள்கையுடைய மாந்தர்களுக்கு உள்ள உரிமை என்பதை நிலைநாட்டப்பட்டது.

நாட்டைக் களவாடிடக் கலகம் விளைவிக்கும் காவிக் கொடியைக் கொளுத்தி இந்தியத் துணைக் கண்டத்தையே திராவிடர் கழகத்தின்பால் ஈர்த்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கறுஞ்சட்டை இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி.

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்ம சாஸ்திரத்தை மகளிரையே தலைமை தாங்கச் செய்து நாடெங்கும் கொளுத்தி பெண்ணுலகின் பார்வையைப் பெரியாரை நோக்கிப் பயணிக்கச் செய்தவரும் அவரே!

விதவைக்குப் பூ சூட்டும் விழாக்களை நடத்திக் காட்டி வைதீகத்தின் நச்சுப் பல்லைப் பிடுங்கி எறிந்து பெரியாரின் சரியான வாரிசு இதோ என்று மக்கள் மத்தியில் பவனி வந்தார் வருகிறார்.

இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பைப் புகுத்தி, சமூகநீதியின் ஆணிவேரை எம்.ஜி.ஆர். அழிக்கிறார் என்றவுடன், ஆரியத்தை வீரியத்துடன் அணைக் கும் எம்.ஜி.ஆர். என்று நாடெங்கும் சுவரொட்டிகளை ஒட்டி, ஆனந்தத் தாண்டவம் ஆரியம் ஆடிய நேரத்தில், ஒடுக்கப்பட்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, தந்தை பெரியார் மூட்டிய சமூகநீதி என்னும் எரிமலையின் சீற்றம் எத்தகையது என்பதைக் காட்டும் வண்ணம், மக்களவைத் தேர்தலில் (1980) எம்.ஜி.ஆர். அவர்களைத் தோற்கச் செய்து (39 இடங்களில் 37 இடங்களில் தோல்வி!) தான் பிறப்பித்த வருமான வரம்பு ஆணையைத் தானே திரும்பப் பெறும்படிச் செய்து, அதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்துவந்த 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக அதே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்த ஆற்றலுக்குச் சொந்தக்காரரும், மானமிகு வீரமணியே!

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்-டோருக்கு இட ஒதுக்கீடு என்பது அறவேயில்லை என்ற நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளை அம்பலப்படுத்த வைக்கவேண்டும் என்பதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி (டில்லி வரை சென்று பிரதமர் இந்திரா காந்தி வீட்-டின் முன்பும் மறியல், நாடாளுமன்றத்தின் முன்பும் மறியல்) இந்தியத் துணைக் கண்டத்தில் முதன்முதலாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடுக்கு வழி செய்த வரலாறும் அவருக்குண்டு.

பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு மாநாடு, பார்ப்பனர் ஆதிக்க ஒழிப்பு மாநாடு, ஜாதி ஒழிப்பு மாநாடுகள், மதவெறியை மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்! என்ற முழக்கத்தோடு வட்டார மாநாடுகள், மாநில மாநாடுகள், பேரணிகள், பகுத்தறிவுக் கண்காட்சிகள், கிராமப் பிரச்சாரத் திட்டம், பயிற்சி முகாம்கள், அணி அணியாக நூல்கள் வெளியீடு, புத்தகச் சந்தைகள், ஆஃப்செட்டில் விடுதலை (8 பக்கங்களுடன்) இரண்டு இடங்களில் பதிப்பு என்று இன எதிரிகள் மருண்டோட இடைவெளியின்றிப் பெரியாரின் பணிகள்! பணிகள்!! பணிகள்!!!

தாம் ஆசிரியராய் பொறுப்பேற்ற காலம்முதல் (1962) தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலர் என்னும் வரலாற்றுப் பேழை வெளியிடல் என்பதெல்லாம் கண்ணும், கருத்தும் உடையோர்க்கு தெரிந்த அத்துப்படி.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று பார்ப்பனர்கள் பழனியில் மாநாடு கூட்டி பாடை கட்டித் தூக்கிச் சென்றனர் என்றால், வேறு என்ன மதிப்பீடு வேண்டும் மானமிகு வீரமணி அவர்களுக்கு?

நான்கு இடங்களில் அவர் உயிருக்குக் குறி வைத்தனர். ஆனாலும், தப்பினார் ஆம், தமிழினமும் தப்பிப் பிழைத்தது, நாடாளுமன்றம்வரை வீரமணிக்கு ஜிந்தாபாத்! என்று முழக்கம் கேட்கவில்லையா!

அடடே, தப்புக் கணக்குப் போட்டுவிட்டோமே என்று ஆரியப் பார்ப்பனர்கள் அங்கலாயித்தனர். அக்னிக் குண்டத்தில் வீழ்ந்ததுபோல் துடியாய்த் துடித்தனர்.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து நிர்வாண ஆட்டம் போட்ட ஆரியப் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி எங்களுக்கும் இத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு என்னும் அருள்பாலியுங்கள்! என்று பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஒரு நிலையை உருவாக்கியவருக்குப் பெயர்தான் வீரமணி.

பெரியார் அறிவித்த இறுதி ஆணையான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான சட்டம், அதற்கானப் பயிற்சிகள், அடுத்து நியமனங்கள் என்ற எல்லைவரை உருவாக்கம், ஆபாச ஆரிய ஆண்டு பிறப்பைத் தூக்கி எறிந்து, தைமுதல்நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற ஆணை உள்ளிட்ட பண்பாட்டு மறுமலர்ச்சிகள் அரசு ரீதியாகப் பெற்றுத்தர உந்து சக்தியாக நிற்கும் ஒப்பரும் தலைவராக ஒளிர்பவர் தான் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களாலேயே தமிழர் தலைவர் என்று மதிக்கப்படும் மானமிகு கி. வீரமணி அவர்கள்.


பொறுக்குமா பார்ப்பனர்களுக்கு? புழுங்கிச் சாகிறார்கள் இந்த இராட்சசனை எப்படி ஒழிப்பது? எப்படி மட்டம் தட்டுவது? என்பதில்தான் அவர்களின் குறியும், கோபமும்!

சிறு துரும்பு கிடைக்காதா? அதைத் தூணாக்கித் தூள் பரப்பிடுவோம் என்று காத்துக் கிடந்தனர். ஈரையும் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிக் காட்டும் எத்தர்களாயிற்றே!

இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைக்கிறார்கள். திராவிடர் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் தூக்கி எறியப்பட்டவர்கள் விளம்பரத்துக்காக ஒரு மோதல் போக்கை உருவாக்கவேண்டும் என்பதற்காக பெரியாரின் குடிஅரசு இதழ்களை வெளியிடப் போகிறோம் என்று விளம்பரப்படுத்தினார்கள்.

தந்தை பெரியார் மறைந்தபோது இயக்கம் வெளியிட்ட நூல்கள் எத்தனை? அதற்குப்பின் இன்றைய காலகட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை எத்தனை?

300க்கு மேற்பட்ட நூல்கள் இருமடங்கு எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ளனவே. தமிழ்நாட்டில் இணைய தளத்தில் முதன்முதல் வந்த ஏடு விடுதலைதானே! பெரியார் வலைக்காட்சிமூலம் கொள்கைப் பிரச்சாரம் இன்னொரு பக்கம்! ஒரு பகுத்தறிவு இயக்கம் இதைவிட வேறு என்ன செய்யவேண்டும்? உலகப் பகுத்தறிவாளர்களே, வியக்கின்றனரே!

ஒரு சித்தாந்தத்தை இயக்கத்தை உருவாக்குவோர் வரலாற்றுச் சிறப்புக்குரியவர்கள். அவர் மறைவிற்குப் பிறகு அதனைத் தொடர்ந்து நடத்திச் செல்பவர்களுக்கும் மிக முக்கியத்துவம் உண்டு வரலாற்றில் என்று உலகப் பகுத்தறிவு மனிதநேய சிந்தனையாளர் பால்கர்ட்ஸ் (நியூயார்க்) பெரியார் இயக்க நடவடிக்கைகளைப் பார்த்து வியந்து பாராட்டவில்லையா?

மலிவு விலையில் மக்கள் நெஞ்சில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை மலிவுப் பதிப்பாக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது கழகம். முதலமைச்சர் கலைஞர் அவர்களே, மனதாரப் பாராட்டியிருக்கிறாரே!

எல்லாம் தெரிந்திருந்தும் வீம்புக்காக, வெட்டி விளம்பரத்துக்காக பதிப்புரிமை பெற்றவை என்று தெரிந்திருந்தும் பெரியார் படைப்புகளைத் தாங்கள் வெளியிடப் போவதாக அறிவித்தனர்.

முறைப்படி நீதிமன்றத்தை அணுகி அதற்கான தடை ஆணை பெறப்பட்டுவிட்டது.

அவ்வளவுதான்? ஆகா! பெரியார் கொள்கையைப் பரப்பிட தடை வாங்குவதா? பெரியார் வீரமணிக்கு மட்டும் சொந்தமா? நாட்டோரே கேளீர், கேளீர்! என்று எகிறிக் குதிப்பது கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சிலர் மட்டுமல்ல பார்ப்பன ஏடுகளும்தான்!

தினமணி கார்ட்டூனே போடுகிறது. பெரியார் எனக்கு மட்டுமே தான் சொந்தம் என்று வீரமணி சொல்கிறாராம் அவரைப் பார்த்து, இதுக்குப் பெயரா பகுத்தறிவு? வெங்காயம்? என்று பெரியார் சொல்கிறாராம் இதற்குப் பெயர் மதி கார்ட்டூனாம்.

காலே இல்லாதவருக்கு நடராஜர் என்று பெயர் வைப்பதில்லையா? பேசாப் பெண்ணுக்குத் தேன்மொழி என்று நாமகரணம் சூட்டுவதில்லையா? அதுபோல்தான் இதுக்குப் பெயர் மதி.

அது இருக்கட்டும், தினமணிக்குப் பெரியாரின் பகுத்தறிவின்மீது அளவு கடந்த காதலா? அடக்கவே முடியாத ஆர்வக் கோளாறா?

பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளில் எதை எதையெல்லாம் தினமணி ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று பட்டியல் போடத் தயாரா? சோவின் பரமார்த்த சீடர் வைத்தியநாதய்யர் ஆசிரியராக வந்த பிறகு, பார்ப்பனர்களுக்கு நாளேடு கிடைத்துவிட்டதே! பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்திலேயே பச்சையாகப் பேசியிருக்கிறார்களே நமக்கு ஒரு நாளேடு கிடைத்துவிட்டது என்று.

தினமணி ஒன்று செய்யுமா? பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையில் எங்கள் உள்ளத்தை அப்படியே பறிகொடுத்துவிட்டோம். இனி ராசி பலனை வெளியிடுவதில்லை என்று அறிவிக்கத் தயாரா?

ஆன்மிக சிந்தனைப் பகுதியில், அதற்குப் பதிலாக அய்யாவின் இராமாயணச் சிந்தனைகளை வெளியிடுவார்களா?

நம்மை சூத்திரன் என்று கூறி, பூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்த்து வாடா என் தேவடியாள் மகனே! என்று கூப்பிடவேண்டும் என்று தந்தை பெரியார் இறுதி உரையிலே (19.12.1973) சொல்லியிருக்கிறார்.


என்ன தினமணியாரே! பெரியாரின் இந்தக் கூற்றை வரவேற்று மதி கார்ட்டூன் போடுவாரா? அதனை வெளியிட தினமணி வைத்தியநாதய்யரும் தயார்தானா?

எந்த அளவுக்கு தினமணி தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் புரிந்திருக்கிறது?

தந்தை பெரியார் மறைந்த நேரத்தில், ஈ.வெ.ரா. மறைவு என்ற தலைப்பில் எழுதியபோதுகூட, அரிஜனங்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமை கிடைக்கச் செய்வதற்கு நடைபெற்ற வைக்கம் சத்யாக்கிரகத்தில் பங்குகொண்டதன் விளைவாக அவர் (ஈ.வெ.ரா.) பெயர் பிரபலமாயிற்று (25.12.1973) என்று எழுதியதே! வீதியில் நடக்கும் உரிமைக்காகவா _ ஆலய வழிபாட்டு உரிமைக்காகவா? எதற்காகப் போராடினார் தந்தை பெரியார்?

கழகம் வெளியிட்ட தீண்டாமையை ஒழித்தது யார்? என்ற சிறு நூலை இனியாவது படித்துப் பார்க்கட்டும். அதே கட்டுரையில் மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்படுத்தியவர் பெரியார் என்று எழுதவில்லையா தினமணி? இந்த லட்சணத்தில் பெரியார் கொள்கைக்காக வக்காலத்து வாங்குவதாக நீலிக்கண்ணீரா?


தி.க. தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற ஒரு கட்டுரையை இதே தினமணி (13.1.1990) வெளியிடவில்லையா?

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகத்தை குறைகூறி எழுதிடவில்லையா? அப்படிப்பட்டவர்களுக்கு இப்பொழுது என்ன பெரியார் கொள்கைமீது திடீர் பக்தி? வீரமணிமீது பாய்வோர்களை கொஞ்சம் தட்டிக் கொடுத்தால் அது மறைமுகமாகப் பார்ப்பனியத்திற்குப் பயனாக மாறும் என்ற பார்ப்பனிய நரித்தனம்தானே இதில் பதுங்கியிருக்கிறது.

அந்தக் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுதி அனுப்பியபோது, அதனை வெட்டிச் சுருக்கி ஆசிரியர் கடிதம் பகுதியில் வெளியிட்ட தினமணி பத்திரிகாதர்மத்தை என்னவென்று சொல்ல!

பெரியார் கொள்கைகளைப் பரப்புவதே தனது உயிர்மூச்சு என்று வீரமணி நினைக்கிறார் செயல்படுகிறார் என்பதை தம்மை அறியாமலேயே தினமணி கூட்டம் ஒப்புக்கொண்டுவிட்டதே இந்தக் கார்ட்டூன்மூலம்!

வீரமணியின்மீது சேற்றை வாரி இறைக்கும் ஒரு சிறு கூட்டத்தைத் தூக்கி விடுவதால் சமுதாயத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை; அதேநேரத்தில், வீரமணியைக் கொச்சைப்படுத்தினால் திராவிடர் கழகத்தின்மீது களங்கத்தைக் கற்பித்தால் அதன்மூலம் பெரியார் கொள்கைக்கு ஒரு சிறு ஊனத்தையாவது ஏற்படுத்தலாம்; பெரியார் கொள்கைப் பரப்பும் பாதையில் ஒரு முள்ளையாவது எடுத்துப் போடலாம் என்பதுதான் பார்ப்பனர்களின் கணிப்பு ஒரு எதிர்ப்பார்ப்பு அவ்வளவுதான்.

பெரியார் நூல் வெளியீட்டுப் பிரச்சினையில் யார் யார் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள்? தந்தை பெரியார் பார்வையில் பார்த்தால், இவர்களின் அடையாளத்தை எளிதாக அறிந்துகொண்டு விடலாமே!

------------ வளரும்

-----------------கலி. பூங்குன்றன் பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 30-7-2009

6 comments:

bandhu said...

பாவம். சேற்றில் கல்லெரிந்தால் மேலே தெறிக்கும் என்று தெரியாதவர்கள். விட்டுவிடுங்கள்.

Jawahar said...

சரியாகச் சொன்னீர்கள் ரவி.

http://kgjawarlal.wordpress.com

வால்பையன் said...

அந்த தமிழ் ஓவியா வேணுமுன்னே பண்ணமாதிரி தெரியல!

என் ஐடி
http://valpaiyan.blogspot.com/

புதிதாக வந்தது
http://vaalpaiyan.blogspot.com/

விசாரித்ததில் அவருக்கு நான் யாரென்றே தெரியாது என்பது தெரிந்தது!

குரு said...

//
நம்மை சூத்திரன் என்று கூறி, பூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்த்து வாடா என் தேவடியாள் மகனே! என்று கூப்பிடவேண்டும் என்று தந்தை பெரியார் இறுதி உரையிலே (19.12.1973) சொல்லியிருக்கிறார்.
//


பாம்பு உன்னை தீண்டினால் மட்டுமே அதனை நீ அடிக்கலாம். அதுபோல் பார்ப்பார்கள் உன்னை சூத்திரன் (ஜாதியை வைத்து பிரித்தால்) என்றால் நீயும் அவர்களை தேவிடியா மகனே என்று அழைக்கலாம். சும்மா இருக்கிற பார்பனர்களை எதற்கு வம்புக்கு இழுக்கிறாய்?

நீ போட்டிருக்கிற தலைப்புக்கும் பெரியார் சொன்னதுகுமே உனக்கு வித்தியாசம் தெரியல. நீ எல்லாம் பகுத்தறிவ பரப்ப போறியா? இன்னும் ரெண்டு வாட்டி பெரியார் படம் பாத்துட்டு வா.

தமிழ் ஓவியா said...

பார்ப்பான் பூணூல் போடுவதன் நோக்கமே தமிழனை சூத்திரனாக்குவதற்குத் தான்.

ஒருதெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினி வீடு என்று எழுதி வைக்கிறான் ஒருவன். அப்ப மற்ற வீடுகளுக்கு என்ன பொருள்?

தமிழ் ஓவியா said...

குரு உங்களின் அய்யம் தெளிய கீழ்கண்ட கட்டுரை உதவும்.படியுங்கள்.

"ஆவணி அவிட்டம்!

இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? நீங்கதான் தேவையில்லாமல் பாப்பான், தமிழன் என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் அவுட்டேட் என்று கூறும் படித்த மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் உண்டு. கெட்டியாக மூடிக்கொண்டிருக்கும் இந்த அறியாமைக் கண்களைத் திறக்க இதோ ஒரு செய்தி. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் திரு. வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி (1.8.2009, பக்கம் 4) ஏட்டில் இடம்பெற்றுள்ள சேதிதான்.

ஆவணி அவிட்டத் தினத்தன்று (ஆகஸ்ட் 5) இணைய தளம் மூலம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூல் மாற்றிக் கொள்ளும் வசதியை டிரெடிஷனல் விஸ்டம் என்ற அமைப்புச் செய்துள்ளது.

www.traditionalwisdom.in என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய... (ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).

..... ..... .....

இதற்குப் பிறகும் இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? என்று எவராவது மே(ல்)தாவித்தனமாகச் சொல்வார்களே யானால் அவர்களுக்கு ஆப்புக் கொடுக்க இதனைக் கத்தரித்து சட்டைப் பைக்குள்ளேயே தயாராக வைத்துக் கொள்ளலாம்.

பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?

அதுவரை பார்ப்பனச் சிறுவனாக இருந்தவன், துவிஜாதியாக இரு பிறப்பாளனாக பிராமணனாக ஆக்கப்படுவதற்குப் பெயர்தான் பூணூல் கல்யாணம். வருடந்தோறும் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்குத்தான் இந்த ஆவணி அவிட்டம்.

இன்னும் சில அறிவு ஜீவிகள், ஏன் சார் நம்ப ஆசாரி, பத்தர், செட்டியார் எல்லாம்கூட பூணூல் போட்டுக் கொள்கிறார்களே, பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லலாமா? என்று கேட்பதுண்டு.

இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.

பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பூணூல் மாட்டுவது புதுப்பிப்பது என்பது நம்மைச் சூத்திரன் என்று இழிவுபடுத்தும் அதிகாரப்பூர்வமான ஏற்பாடு என்பதை சற்சூத்திரர்கள் அறிவார்களாக!

"தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!"

- தந்தை பெரியார்.

--------------------- மயிலாடன் அவர்கள் 1-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை "