Search This Blog

31.7.09

150 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வின் கூற்று நிரூபணம்




கடலுக்குள் வாழும் உயிரினங்கள் அனைத்துமே ஆய்வு என்ற ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள். அவ்வாறு கடலுக்குள் வாழும் சிறு மீன் ஒன்றினால் , பரிணாம வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் டார்வினின் கூற்று 150 ஆண்டுகளுக்குப் பின் நிரூபணம் ஆகி உள்ளது. சூரியனுக்கு கீழே ஆழ்கடலில் பூமத்திய ரேகைக்கும், துருவங்களுக்குமிடையே குளிர்ந்த நீரும், வெப்ப நீரும் மாறி மாறி ஒன்று சேருவதுதான் சமுத்திரக் கலவை எனப்படுகிறது. கடல் உயிரின ஆய்வில் மிக முக்கியமானதாக கருதப்படும் இதற்கும் பூமியின் தட்ப வெப்ப நிலை மாற்றத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால்தான் மீன் மற்றும் கடலில் நீந்தும் உயிரினங்கள் நீரோட்டத்தின் போக்கிலேயே நீந்துகின்றன என்ற கருத்தை சார்லஸ் டார்வின் 19 ஆம் நூற்றாண்டிலேயே தெரிவித்தார்.ஆனால் அவருடைய கருத்தை ஏற்க அன்றைய விஞ்ஞானிகள் மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக தற்போது தீவிர ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் , பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் உள்ள உப்பு ஏரியில் ஆய்வு நடத்தினர். அதில் மீன்கள் நீந்திச் செல்லும் பாதையில் சாயத்தைக் கலந்தனர். இது பற்றி வீடியோ படமும் எடுத்தனர். அதில் ஆழமான குளிர்ந்த நீர் உள்ள பகுதியிலிருந்து , மேற்பரப்பில் உள்ள வெப்ப நீருக்கு மீன்கள் செங்குத்தாக நீந்திச் செல்லும் போது குளிர்ந்த நீரும் அதனைப் பின்பற்றிச் செல்வதைக் காணமுடிகிறது. இதிலிருந்து கடலில் குளிர்ந்த நீரும், வெப்ப நீரும் இரண்டறக் கலந்திருப்பது தெளிவாகி உள்ளது.

இதே கருத்தைதான் டார்வின் 150 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருந்தார்.அக்கருத்து இப்போது ஒரு மீன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

--------------------"விடுதலை" 30-7-2009

3 comments:

Anonymous said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net

Unknown said...

தலைப்பு தப்புங்க

தமிழ் ஓவியா said...

தலைப்பை சரிசெய்து விட்டேன் கீத் குமாரசாமி.
சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி