Search This Blog

4.1.09

ஜாதி மறுப்பு இணையர்களின் குழந்தைகள் - எந்த ஜாதி?


ஆரியப் பண்டிகைகளை விலக்குக
குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைத்திடுக
கலப்புமணக் குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் ஜாதியை குறிக்க அனுமதித்திடுக
மயிலாடுதுறை திராவிடர் எழுச்சி மாநாட்டின் சிறப்புமிகு தீர்மானங்கள்



3.1.2009 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

மாண்புமிகு வி.பி. சிங் அவர்களுக்கு வீர வணக்கம்
சமூகநீதிக்காவலரும், சமூகநீதிக்காக பிரதமர் நாற்காலியையே தூக்கி எறிந்தவரும், குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் பேரன்புக்கும், பெருமதிப்புக்கும் உரியவருமான மாண்புமிகு வி.பி. சிங் அவர்களின் மறைவிற்கு (27.11.2008) இம்மாநாடு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், சமூகநீதிக் காவலரின் தொண்டுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் வகையில் ஆரிய மயமான பண்டிகைகளை, நடப்புகளை விலக்கிட வேண்டும் என்று தமிழர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தைமுதல்நாளை தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென சட்டமியற்றி நடைமுறைக்குக் கொண்டு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசை இம்மாநாடு பாராட்டுகிறது.
தமிழ்நாடெங்கும் தமிழர் திருநாளாம் புத்தாண்டுப் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று தமிழர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தமிழர்களின் வீரவிளையாட்டான சடுகுடு போட்டிக்கு ஊக்கம் கொடுக்குமாறு தமிழ் அமைப்புகளை, தமிழர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
நாடெங்கும் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தை ஏற்படுத்தி, சடுகுடு, சிலம்பாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்து முதலிய விளையாட்டு களை ஊக்குவிக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் 3:

ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்தைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமாகும். நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பே இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்கத் தேவையான அனைத்து முயற் சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தமிழர்களுக்கு உரிமையான ஒகேனக்கல் - தருமபுரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் தடுக்க முயலும் கருநாடக மாநிலத்தின் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதற்காக இம்மாநாடு தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறது.

தீர்மானம் 4:

ஜாதி மறுப்பு இணையர்களின் குழந்தைகள் - எந்த ஜாதி?

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்க்குப் பிறக்கும் குழந்தைகள் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரின் ஜாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டு வந்த நிலைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், தந்தையின் ஜாதியைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதித்துறை, நிருவாகத் துறை, மத்திய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் வலியுறுத்துவது சமூகநீதிக் கண்ணோட்டத்திலும், ஜாதி ஒழிப்பு ஊக்குவிப்புக் கண்ணோட்டத்திலும், பெண்ணுரிமைக் கண்ணோட்டத்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. குழந்தை வாழும் முறையை வைத்து ஜாதியைக் கணிக்கவேண்டும் என்று சொல்வது நடைமுறைச் சாத்திய மற்றது என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன், தாய் அல்லது தந்தை ஜாதியை விருப்பத்துக்கு ஏற்பப் பதிவு செய்யும் பழையமுறை தொடரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இடஒதுக் கீட்டுக் கண்ணோட்டத்தில் இது அவசியம் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.



தீர்மானம் 5:

திராவிட என்பதைக் கொச்சைப்படுத்துவதா?

அண்மைக்காலமாக திராவிடம் என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் திட்டமிட்ட வகையில் ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இது ஒரு வகையில் பார்ப்பனர்களை நமது சமூக அமைப்பில் ஊடுருவச் செய்வதில்தான் முடியும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.
திராவிட இயக்கத்தின் பார்ப்பன எதிர்ப்பும், பிரச்சாரமும், போராட்டங்களும், தொண்டுகளும்தான் தமிழர்களுக்கு பொதுவான உரிமைகளையும், கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இடத்தையும் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல், ஆரியப் பார்ப்பனர்களின் பண்பாட்டுப் படையெடுப்பையும் முறியடித்திருக்கிறது என்கிற வரலாற்று உண்மையை இம்மாநாடு திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறது. தமிழ்மொழி வளர்ச்சிக்கும், திராவிட இயக்கம்தான் அளப்பரிய தொண்டினைச் செய்திருக்கிறது என்பதையும் இத்திராவிடர் எழுச்சி மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.


--------------நன்றி: "விடுதலை" 4-1-2005

2 comments:

bala said...

//கழக இணையர்கள் எந்த ஜாதி?//

ஜாதி வெறி பிடித்து அலையும்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கழக பொறிக்கிகள் உலகத்திலேயே கீழ்த்தர ஜாதியான வெறி பிடித்த சொறி நாய் ஜாதி அல்லாமல் வேறு என்ன ஜாதி என்று கேட்கிறேன்.கழக பேமானிகளே,பொறிக்கிகளே,சொன்
டிகளே,பன்னாடைகளே,பிரியாணி குஞ்சுகளே சொல்லுங்கள் வேறு சரியான பதில இருப்பின் கேட்டுக்கொள்கிறோம்

பாலா

தமிழ் ஓவியா said...

///கழக இணையர்கள் எந்த ஜாதி?//

கடவுள் மதம் ஜாதி போன்றவைகளை வைத்து வயிறுவளர்க்கும் கூட்டத்தின் முகத்திரையை கிழித்து மக்களை மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் யார் என்பதைதான் மறைந்த அக்னி கோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் மரண வாக்குமூலம் போல் சொல்லிவிட்டுப் போய் விட்டாரே. அவர் சொல்லியவைகளை இந்த வலைப் பூவில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது வாசகர்கள் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

பார்ப்பனர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிய காலம் மலையேறிவிட்டது பார்ப்பன பயங்கரவாதி பாலா.
உன்னுடைய நாகரிகமில்லாத பின்னூட்டம் ஒன்று போதுமே பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களை வாசகர்கள் எளிதாக புரிந்து கொள்ள.

உன்னுடைய நரகல் (எழுத்து) நடையை உனக்கு எதிரி.