Search This Blog

26.1.09

காந்தியாரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியவர்கள் பார்ப்பனர்கள்தான்.!




பார்ப்பனர் மாநாடு புனே நகரில் நடந்தது


காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பார்ப்பனர் மாநாடு நடந்துள்ளது. புனே நகரம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்துமத வெறிக்கும், பார்ப்பனர்களின் கொலைப் பாதகச் செயல்களுக்கும் குறிப்பிடத்தக்கது. காந்தியாரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியவர்களும் இந்த ஊர்ப் பார்ப்பனர்கள்தான். கொலை செய்த கோட்சேயும் இந்த ஊர்ப் பார்ப்பனர்தான் பார்ப்பனர்களை வன்கொலையாளர்களாக்க வேண்டும் எனக் கூறிச் செயல்பட்ட திலகரும் இந்த ஊர்ப் பார்ப்பனர்தான்.

அண்மையில் மாலேகாவ்ன் நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட்டவர்களும் இவ்வூர்ப் பார்ப்பனர்கள்தான். லெப். கர்னல் உள்பட பலருக்கும் ராணுவப் பயிற்சி அளித்து முப்படை களிலும் ஊடுருவிட உதவிய தனியார் ராணுவப் பயிற்சிப் பள்ளிகள் அமைத்திருப்பதும் இந்த ஊரில்தான். பார்ப்பன வன்முறைகளுக்குப் பிரசித்தி பெற்ற புனே நகரில் பார்ப்பனர்கள் மாநாடு நடத்தி இருக்கிறார்கள். பார்ப்பனப் பையன்களின், பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு நிலைகளை மேலும் உயர்த்துவதற்கான மாநாடாம்.

புகாவ்ன் எனும் புறநகர்ப் பகுதியில் சாணகியா நகர் எனப் பெயர் சூட்டப்பட்ட இடத்தில் நடந்துள்ளது. இரண்டு நாள்கள் நடந்த இந்த மாநாட்டில் யோகாசனம் கற்றுத்தரும் பாபா ராம்தேவ் (சூத்திரர்) காஞ்சிபுரம் சங்கரராமனைக் கொலை செய்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயேந்திர சரசுவதி, டில்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டையும், அதன் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும், பார்ப்பன மாணவ மாணவியரின் கல்வி வாய்ப்புகளைக் கூடுதலாக்க உதவி செய்யும் நிறுவனங்களை உருவாக்கிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்கள் தத்தம் ஜாதிகளுக்குள் மட்டுமே திருமண உறவுகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்றும், அதன்மூலம் ஜாதியின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து, எந்தக் கட்சிகாரராக இருந்தாலும் பார்ப்பனர்களுக்கே தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது. ஆடுகளை அடித்து தின்ன புலிகள் கோரிக்கை வைத்த மாநாடு என்பதாகவே நடந்து முடிந்துள்ளது.. சாணக் கியன் பெயராலே அமைந்த நகரில் சாணக்கியத்தை அமலாக்க அவாள் தயாராகிவிட்டனர். நாம்?



---------------- நன்றி: - "விடுதலை" 26-1-2009

1 comments:

Unknown said...

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் கொலைப் பாதகச் செயல்களை இப்படித் துணிந்து செய்வதற்கு ஏதாவது காரணம் உண்டா?