Search This Blog

17.6.14

நத்திப் பிழைக்கும் ஊடகங்கள் பற்றி பெரியார்

நத்திப் பிழைக்கும் ஊடகங்கள் பற்றி நம் பெரியார் அன்றே சொன்னார்



தந்தை பெரியார் நவம்பர் 25, 1954 முதல் சனவரி 17, 1955 வரை அய்ம் பத்தைந்து நாட்கள் ஈ.வெ.ரா.மணியம் மையார், தம் குழுவினர் சிலருடன் மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடு களுக்குச் சுற்றுப்பயணம் சென்று வந்தார்.
சென்ற ஊர்களில் எல்லாம் நூற் றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் மக்கள் பெரியாரை வரவேற்கக்கூடினர். பொதுக்கூட்டங்களில் எல்லாம் மக்கள் திரள் நிரம்பி வழிந்தது.

பெரியாரே தம் பேச்சில் கூறுகிறார். மலேயா நாட்டில் ஏராளமான பரிசுகள் வழங்கினார்கள். ஏறக்குறைய 3000 ரூபாய் போல நன்கொடை கொடுத்தார்கள். நம்முடன் கூட வந்தவர்கட்கும் பல சன்மானங்கள் வழங்கினர்.

சென்ற ஊர்களில் எல்லாம் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் பெரியாரும் அவருடன் சென்ற குழுவினரும் விருந்துகளில் மூழ்கித் திளைத்தனர். நிலைமை இப்படி இருக்கச் சில கைக்கூலி ஏடுகள் அய்யாவிற்கு எதிர்ப்பு ஏற்பட்டது என்று இங்கே புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தனர்.

17.1.55 அன்று சென்னை திரும்பிய பெரியாருக்கு வரவேற்பு என்றால் அப்படிப்பட்ட வரவேற்பு. ஏறக்குறைய 50,000 பேர் கூடி ஊர்வலமாக வந்த ஒப்பற்ற பாராட்டு. மாலையில் நடை பெற்ற கூட்டத்தில் பத்திரிகையாளர் களை அடையாளம் காட்டினார் பெரியார். அன்று பெரியார் குறிப் பிட்டுச் சொன்னவை, சுட்டிக்காட் டியவை இன்றைக்கும் ஊடகங்கள் பற்றிய நம் பார்வைக்கும் பொருத்தமாக அமைகிறது அவற்றைக் காண்போம்.


நான் இல்லாதபோது இங்கே ஒருநாடகத் தடைச் சட்டத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். இவர்கள் சட்டம் செய்கிறபோது நான் இங்கே இருந்திருப்பேனேயானால் குறைந்த அளவு 1000 பேரையாவது, சிறைக் குள்ளே தள்ளி, 200 பேர்களையாவது கை, கால் ஒடியும்படியாகக் காயப்படுத்தி 7-_8 பேர்களாவது சுட்டுக் கொல் லப்பட்டு அதன் பிறகு தான் இச்சட் டத்தைக் கொண்டுவர விட்டிருப்பேன். இப்போது நாள் ஆகிவிட்டது. ஆயி னும் கருமாதிக் காரியம் 10 நாளில் செய் தால் என்ன, 15 நாளில் செய்தாலென்ன என்று சற்று இந்தப் பிரச்சினையைத் தள்ளி வைத்திருக்கிறேன்.
ஒரு வாரத்தில் திருச்சியில் திராவிட கழக மத்திய நிர்வாகக் கமிட்டிக்கூட்டம் கூடி ஆலோசித்து வழக்கம் போல அரசாங்கத்திற்கு ஒரு வார நோட்டீஸ் கொடுத்துவிட்டுக் காரியத்தை ஆற்ற லாம் என்று எண்ணுகிறேன். நமக்கு ஆதரவான பத்திரிகைகள் எதுவும் இல்லை. நன்றாக இராமாயணத்தைக் கரைத்துக் குடித்துவிட்டுத் தக்க ஆதா ரங்களை எடுத்துக்காட்டிக் கொண்டே இப்படிப் பிரச்சாரம் செய்கையில், நல்ல மானம், ஈனம் இல்லாமல் வெட்கம் இல்லாமல் கீமாயணம் என்று எழுதுகின்றார்கள் என்றால் எவ்வளவு அயோக்கியத்தனம் பாருங்கள்.

புளுக அஞ்சாத பார்ப்பனப் பத்திரிகையாளர்

சுத்தக்காலிப் பசங்களையும் இரு பிறப்புப் பசங்களையும் ரிப்போர்ட்டர் களாக வைத்துக் கொள்வது, அவர்கள் நாம் சொல்வதற்குப் புறம்பாக நேர் மாறாக எழுதுவது, இப்படியே இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளும் தங்கள் தொழிலாகச் செய்து கொண்டு வரு கின்றன இதை என்னால் பொறுக்க முடியவில்லை.
இது உண்மையா?

இந்த மானமற்ற பத்திரிகைகள் எனக்கு இரங்கூனில் கொடும்பாவி கட்டி இருந்தான் என்று எழுதி னார்கள். நான் 10,000 ரூபாய் பணம் பந்தயம் கட்டுகிறேன். இது உண்மையா என்று எந்தப் பத்திரிகை ரிப்போர்ட் டராவது போய்ப்பார்த்து வரட்டும். நான் வேண்டுமானால் அந்த ரிப்போர்ட்டருடன் என்னுடைய ஒரு ஆளையும் கூட விமானத்தில் அனுப் புகிறேன். பார்த்து விட்டு வந்து சொல் லட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன். எனக்குத் தெரியும். பத்திரிகைக்காரன் வந்தால் மரியாதை பண்ணுவதற் கென்றே ஒரு கூட்டம் உண்டு. அவர் களிடத்திலே கொஞ்சுவது உண்டு. அப்படி மரியாதையாக நடந்து இவர்கள் தயவைப் பெற வேண்டும் என்று பாடு பட்டவர்கள் கூட அவரும் உருப்படி யாகவில்லை என்று எனக்குத் தெரியும்.

பத்திரிகைச் செய்திகளை அப்படியே நம்பி விடாதீர்கள்

என்னைப் பொறுத்தவரையில் அப் படியில்லை நான் அவர்களை வண்டை -வண்டையாகப் பேசுகிறேன். கழுத்தைப் பிடித்துக் கூடத்தள்ளியிருக்கிறேன். போவெளியே என்றும் துரத்தி இருக்கிறேன்.

தோழர்களே! தயை செய்து பத்திரிகையில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்
அதிலும் என்னைப்பற்றி எந்தப் பத்திரிகையில் வந்தாலும் நம்பாதீர்கள்  ரங்கூனில் நடைபெற்ற செய்தி தவறு என்று மலேயாவிலுள்ள பெரிய ஆங்கிலப் பத்திரிகை வருத்தம் தெரிவித்து எழுதியதை சிங்கப்பூர் தமிழ் முரசு ஆசிரியர் சாரங்கபாணி வெட்டி எடுத்துக் கொடுத்தார்கள். அதை நான் கொண்டுவந்திருக்கிறேன். நாம் பெரிய காரியத்தில் இறங்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் இதில் சற்று சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

அங்கே புத்த மதத்தில் ஏராளமான சடங்குகள் இருக்கின்றன. அந்த மாநாட்டிற்கு ஒரு பார்ப்பன பிட்சு வங்காளத்தில் இருந்த வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்து நீங்கள் ஏன் கருப்புச்சட்டை போட்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான் சமுதாயத்தில் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டு வருகிறோம். அப்படிப் பட்ட நிலை மாறி சமுதாயத்தைச் சீர்திருத்தி உயர்நிலை அடையும் வரை இதைப் போட்டுக் கொள்வது என்று அணிந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன். அதற்கு அந்த பிட்சு நீங்கள் புத்தமதத்தை ஒழிக்க வந்தீர் களா? அல்லது வளர்க்க வந்தீர்களா? என்று கேட்டார்.

இதை நான் டாக்டர் அம்பேத் காரிடம் சொன்னேன். அதற்கு அம்பேத்கர் இவர்களை ஒழிக்கத்தான் நாம இதில் சேர வேண்டும் என்றார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினேன். அதில் பேசுகையில் நம்முடைய சமுதாயத் திலும், மதத்திலும் இருக்கிற பல கேடு களைப் பற்றி எடுத்துச் சொன்னேன்.

அங்கே ஒரு பத்திரிகைக்காரன் அவன் ஒரு நொந்து போன பத்திரிகைக் காரன் அவர் தமிழ்நாட்டிலே இருந்து வந்து நான் தமிழ்ச் சமுதாயத்தையே குறைகூறிப் பேசுகிறேன் என்று தன் பத்திரிகையில் போட்டு அதை நாட் டுக்கோட்டைச் செட்டியார்களிடமும், சைவர்களிடமும் காட்டி ஏதோ காசு பெறுவதற்காக அப்படி அதைப் பயன்படுத்திக் கொண்டான்.

இதைப்பார்த்த புத்த சாசன கவுன்சில் தலைவர் தன்னை வந்து சந்திக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். நான் எதற்கும் நிலை மையை அறிந்து வரும்படி நம்மவரில் ஒருவரை அனுப்பினேன். அதற்கு அவர் நானே வந்து அவரைப் பார்க்க இருந்தேன். ஆனால் புத்த மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் ரயிலில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கட்கு ஏதாவது தொல்லை வந்துவிடப் போகிறதோ என்ற அச்சத்தில் டெலிபோனைக் காதில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அதனால்தான் வர இயலவில்லை என்று சொல்லி அனுப்பினார்.

பிறகு நானே அவரைச் சந்தித்தேன். சந்தித்தபோது அவர் இந்த மாதிரி உங்களைப் பற்றிப் பத்திரிகைகளில் போடுகிறார்கள் மற்றும் நீங்களோ புத்த மாநாட்டிற்கு வந்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நேரத்தில் தொல்லை வந்துவிட்டால் அதற்கு நாங்கள் அல்லவா பொறுப்பு. தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண் டியது உங்கள் பொறுப்பு என்று சொன்னார்.
அதற்கு நான் என்னுடைய சொற் பொழிவைப் பற்றி எடுத்துச் சொன் னேன். சிலர் தொல்லை தருவதைப் பற்றியும், வேண்டும் என்றே தங்கட்குத் தொல்லை தர எண்ணுகிறார்கள் என்றும் அவர் சொன்னார். அதை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினேன்.

உடனே அவர் முகர்கி என்ற டி.எஸ்.பி யை என்னோடு எல்லா இடங் கட்கும் அனுப்பினார். அவரும் கூட் டங்களில் இருந்து மேடை மீது அமர்ந்து கொண்டு மாலை முதலிய மரியாதைகளையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய சொந்த வண்டியிலேயே எங்களை அழைத்துக் கொண்டும் சில இடங்கட்கு வந்திருந்தார்.

இவ்வளவு சிறப்போடு பந்தோபஸ் தோடு மிக வசதியாகக் கூட்டங்கள் நடந்தன. இப்படியிருக்கையில் கொடும் பாவி  கட்டியதாக விஷமத்தனமாகப் போட்டார்கள். மலேயாவிலும் ஒரு பத்திரிக்கை இருக்கிறது. தமிழ்நேசன் என்று பெயர். அது நாட்டுக் கோட்டைச் செட்டியார் கையில் இருக்கிறது. அதுவும் இப்படிச் செய்தி வெளியிட்டது.

பர்மாவில் ஏறக்குறைய 10 கூட்டம் போல் நடைபெற்றது. பல விருந்துகள் முதலில் தோழர்களாலும் மற்றவர் களாலும் அளிக்கப்பட்டன. அங்கிருந்து மலேயாவுக்குப் போனோம். அங்கேயும் சில நாட்டுக் கோட்டைச் செட்டி மார்கள் என்னைப் பற்றி ஏதோதோ எழுதினார்கள். நான் பினாங்கு சென்றதும் அங்குள்ள பெரிய போலீஸ் அதிகாரி எனக்கு வி.அய்.பி. என்ற வண்டியை அனுப்பி அழைத்து வரும் படி ஒரு டி.எஸ்.பி யை அனுப்பி இருந்தார். (வி.அய்.பி என்றால் க்ஷிமீக்ஷீஹ்  மினீஜீஷீக்ஷீணீஸீ றிமீக்ஷீஷீஸீ) மிக முக்கியமான மனிதர்கட்கு அனுப்புகின்ற வண்டியை எனக்கு அனுப்பியுள்ளதாக மிகப் பெருமையோடு கூறி என்னை அந்த அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். அந்த அதிகாரி தங்களைப்பற்றி இப்படி ஒரு விண்ணப்பம் வந்துள்ளது. அதைப்பற்றிக் கூறத்தான் அழைத்தேன் என்றார்.
நான் சமுதாயத்திலே திராவிடர்கள் உள்ள நிலையைப் பற்றியும் அதை மாற்ற வேண்டி சமுதாய சீர்திருத்தப் பணியாற்றுவது பற்றியும் அவரிடம் சொன்னேன். அதற்கு அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே உங்க ஆட்களிலே சிலர் தான் தொல்லை கொடுக்கிறார் கள் என்று சொல்லி எனக்குப் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையெல்லாம் செய்து அனுப்புனார்கள்.

மலேயா நாட்டில் ஏராளமான பரிசுகள் வழங்கினார்கள். ஏறக்குறைய 3000 ரூபாய் போல நன்கொடை கொடுத்தார்கள், நம்முடன் கூட வந்தவர்கட்கும் பல சன்மானங்கள் வழங்கினர்.

இவ்வாறு நிலைமை இருக்கப் பெரியாரைக் குறித்துச் சில ஊடகங்கள் தவறான பிரச்சாரம் அன்று செய்தது போலவே இன்றும், திராவிட இயக்கம் குறித்து எழுதி வருகின்றன. இதுதான் உண்மை, பிரத்யட்ச நிலை.

----------------------------------முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் --"விடுதலை”14-6-2014

Read more: http://viduthalai.in/page6/82183.html#ixzz34fN68vHc

22 comments:

தமிழ் ஓவியா said...


திருக்கழுக்குன்றம் ஹிதேந்திரனையடுத்து மகத்தான மனிதநேயம்!


மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது

சென்னை, ஜூன் 17_ காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் பொறி யியல் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிவந் தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக ஓட்டுநர் வேலை செய்து வந்தார்.

கடந்த 11 ஆம் தேதி லோகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரு டைய உடல் உறுப்புகளை குடும்பத்தினர் கொடை யாகக் கொடுக்க முடி வெடுத்தனர். மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் பொறியாளர் அஸ்பி வினோகர் நேம்ஜி என்ப வரின் மகள் ஹவோபியா (21) சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப் பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹவோபியாவிற்கு இரு தயக் கொடை பெறுவதற் காக அவருடைய குடும்பத் தினர் எதிர்நோக்கியிருந் தனர்.

லோகநாதனின் இருத யத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது. இரு தயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து மருத்துவர்கள் காவல் துறையினருடன் ஆலோ சனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவ மனையில் பிரித்து எடுக்கப் பட்டன. இதில் 20 மருத் துவர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித் தெடுக்கப்பட்டது.

மாலை 5.45 மணி அள வில் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மின்னல் வேகத்தில் இருதயம் ஆம் புலன்சு மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் போக்கு வரத்து காவல்துறையினர் நின்று வயர்லெஸ் மூலம் போக்குவரத்தைச் சீர்படுத் தினர்.

ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 விநாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு மருத் துவர் குழுவினர் இத யத்தை அறுவைச் சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.

லோகநாதனின் 2 கண் கள் எழும்பூர் கண் மருத் துவமனைக்கும், 2 சிறுநீர கங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல் லீரல் வேலூர் அரசு மருத் துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் கொடையாக கொடுக்கப் பட்டன. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.

லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கண்ணீரு டன் கூறும்போது, "என் மகனை காப்பாற்ற முடியாது என்று மருத் துவர்கள் கூறியதும் இடி விழுந்தது போல் இருந்தது. அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவனை நேரில் காண முடியும் என்று கருதினேன். எனவே அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன்வந் தேன். என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர்வாழ வேண்டும் என்றார்.

2008 ஆ-ம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத் தினை தமிழக அரசு செயல்படுத்தியது. இதன் மூலம் தமிழகத்தில் இது வரை 76 இருதயங்கள், 861 சிறுநீரகங்கள், 37 நுரை யீரல்கள், ஒரு கணையம், 500 இதய வால்வுகள், 730 கண்கள் மற்றும் ஒரு தோல் ஆகியவை கொடை யாகப் பெறப்பட்டுள்ளன.

இதில் 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இத யங்கள், 28 நுரையீரல்கள் சென்னையில் கொடை யாக பெறப்பட்டவை என் பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தான் உடல் உறுப்புகள் கொடைய ளிப்பதில் முதலிடத்தில் உள்ளது.

குறிப்பு: 2008இல் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் மகனான ஹிதேந்திரனின் இதயம் பெங்களூரைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுக்குப் பொருத் தப்பட்டது தெரிந்ததே!

Read more: http://viduthalai.in/e-paper/82326.html#ixzz34wWRbVUV

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே கவனியுங்கள்!



கட்சி ஜெயிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள்! தோல்வியை நன்மையாக்கிக் கொண்டு இரட்டை வெற்றி அடையப் போகிறோம்.

ஆனால், நீங்கள் (தமிழ் மக்கள்) ஒவ்வொரு வரும் ஒரு குடிஅரசு விடுதலை வாங்கிப் படியுங்கள்!

குடிஅரசு வருட சந்தா 3-0-0
பகுத்தறிவு வருட சந்தா 1-0-0
மேற்படி இரண்டும் சேர்த்து
வரவழைப்பவர்க்கு 3-8-0
விடுதலை வாரம் இருமுறைக்கு வருடம் 1-க்கு 3-10-0

இப்பத்திரிகைகளைப் படித்தால்தான் அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர முடியும். பார்ப்பனப் பத்திரிகைகள் வேண்டுமென்றே செய்யும் பொய்யான விஷமப் பிரச்சாரத்தின் யோக்கியதையை அறியக்கூடும். - (விடுதலை 18.4.1937 பக்.22)

இதனைப் படிக்கும் பொழுதே - பலருக்கும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். இப்பொழுது நடந்து முடிந்த தேர்தலை மனதிற் கொண்டு சொல்லப்பட்டதாகக் கூடத் தோன்றக் கூடும்.

1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றபோது தந்தை பெரியார் சொன்னவை -16ஆவது மக்களவைத் தேர்தலில் நீதிக்கட்சியின் வழி வந்த திமுக தோல்வியடைந்துள்ள இந்த நிலையில் மிகச் சரியாகவே பொருந்துவதைக் கவனிக்கத் தவறாதீர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பார்ப்பன ஊடகங்கள் எப்படி நடந்தனவோ, அதுபோலவே 1937ஆம் ஆண்டிலேயே இந்தப் பார்ப்பன ஊடகங்கள் ஒரு சார்பாக நடந்து கொண்டுள்ளன என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

அவர்கள் எப்பொழுதுமே நமக்கு எதிர்ப் பக்கம்தான்!

அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர குடிஅரசு விடுதலை வாங்கிப் படியுங்கள் என்று 77 ஆண்டு களுக்குமுன் தந்தை பெரியார் கூறினார்.

இன்று அதே நோக்குக்காக விடுதலைக்குச் சந்தா சேர்ப்பீர் என்ற வேண்டுகோளைத் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் அவர்கள் விடுத்துள்ளார்.

தோழர்களே! விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் இறங்கி விட்டீர்களா? உங்கள் மாவட்டத்துக்குள்ள இலக்குகளை நிறைவேற்றுவதில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

இம்மாத இறுதிக்குள் இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பீர்! முடிப்பீர்! உதவாதினி ஒரு தாமதம் - உடனே புறப்படுவீர் மானமிகு தோழர்களே!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/82337.html#ixzz34wXbCaR8

தமிழ் ஓவியா said...

இந்தியா முழுவதும் மது விலக்காம்

இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலன் வேண்டுகோள் விடுத் துள்ளார். நல்லது; மத்திய அரசு பிஜேபி கையில் தானே இருக்கிறது - இந்தியா முழுவதும் மது விலக்கைச் செயல்படுத்தும் வகையில் பொது சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாமே - யார் தடுத்தது? முதற்கட்டமாக பிஜேபி ஆளும் மாநிலங் களில் கொண்டு வந்து காட்டி, முன் மாதிரி நாங்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்கள்தான் என்று மார் தட்டலாமே!

ஒரு சேதி தெரியுமா? 2014 ஏப்ரல் 30ஆம் தேதி ஏடுகளில் வெளி வந்ததுதான்.

மோடி முதல் அமைச்சராக இருந்த போது குஜராத்தில் 23 லட்சம் மதுப் பாட்டில்கள் பறி முதல் என்பது தான் அந்தச் செய்தி. இதன் பொருள் என்ன? காந்தி பிறந்த மாநிலத்தில், மோடி ஆண்ட மாநிலத்தில்தான் இந்த லட் சணம்! இந்த நிலையில் இராம.கோபாலன்வாள் இப்படி யெல்லாம் பேட்டி கொடுக்கிறார். அவாள் பேட்டி கொடுத்தால் அப்படியே வெளியிடக் கூடிய அவாள் ஊடகங்களும், தொங்கு சதைகளான நம்மவாள் ஊடகங் களும்தான் இருக்கின்றனவே. இந்த நிலையில் அவாள் கொட்டாவி விட்டாலும் சேதியாக நான்கு பத்தி செய்தியாக வெளிவரும்தான்.



Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYLaCmb

தமிழ் ஓவியா said...

டாஸ்மாக் பிரச்சனை

இன்னொரு முக்கிய தகவல் நாள்தோறும் ஏடுகளில்; டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பெண்கள் நடத்தும் போராட்டம்தான் அது. பள்ளிகள் அருகிலும், மக்கள் நடமாடும் முக்கிய கடை வீதிப்பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இருப்பது பெரும் தொல்லையாக இருக்கின்றன. பெண்கள் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கி வர முடிய வில்லை. ஆங்காங்கே குடித்து விட்டுக் கலாட்டா செய்கின்றனர். எனவே கடைகளை ஊருக்கு வெளியே வைக்க வேண்டும் என்பது தான் பெண்களின் கோரிக்கை, பெண்கள் மத் தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.

டாஸ்மாக் கடையை எங்கே வைப்பது என்பது குறித்து தெளிவான வழிமுறைகள் கூறப்பட்டு இருந்தும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி அனுமதி வழங்குவது யார்?
நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதி கரிப்பதற்குக் காரணம் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதுதான், எனவே நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

விதிகளும், ஆணைகளும் வெறும் காகிதக் குப்பைகள்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYYAxm8

தமிழ் ஓவியா said...

பொது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம் தேவிப் பட்டினத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடற் கரையில் அவர்களுக்கே உரிய பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான காவல்துறை அனுமதியைப் பெறவில்லை. இந்த நிலையில் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். இதனை எதிர்த்து சென் னையைச் சேர்ந்த சங்பரிவார்க் கூட்டமும், பிஜேபியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள் ளனர். பழனி உள்ளிட்ட வேறு சில இடங்களி லும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பொது இடத்தில் இது போன்ற பயிற்சி களைச் செய்யக் கூடாது என்று ஏற்கெனவே சுற்றறிக்கைகள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். பயிற்சி என்றாலே அது வன்முறைக்கான பயிற்சி தான். மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பும் கூட! இந்த நிலையில் காவல்துறை தன் கட மையைச் செய்துள்ளது. இதனைப் பாராட்ட வேண்டுமே தவிர, எதிர்த்துப் போராடுவது எப்படி சரி? மத்தியில் ஆட்சிக்கு வந்து விட் டார்கள் அல்லவா? அந்தத் தைரியம் தான்!

Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYiDLfJ

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://www.viduthalai.in/page-2/82341.html#ixzz34wYwEsnE

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் >>>


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி!

மதிப்பிற்குரிய வீரமணி அய்யா அவர்களுக்கு,

நினைவில் வாழும் திருவனந்தபுரம் என். நயினார் அவர்களின் மூத்த புதல்வன் என். சுந்தரம் எழுதிக் கொண்டது.

எனது தகப்பனாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (14.6.2014) விடுதலை வளர்ச்சி நிதிக்காகவும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்குமாக சேர்ந்து ரூபாய் 300/அய் இந்தியன் வங்கி சென்னையில் மாற்ற தகுந்த (ரூபாய் 300/-) காசோலையை இத்துடன் அனுப்பியுள்ளேன் (No.619290 Date: 10.6.2014)

இதை எனது தகப்பனாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் நன்கொடையாக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- என்.சுந்தரம், திருவனந்தபுரம்
தங்களின் உணர்வுக்கு மிக்க நன்றி.

- ஆசிரியர்

Read more: http://www.viduthalai.in/page-2/82358.html#ixzz34wZXPKZO

தமிழ் ஓவியா said...

முக நூல் ஜோக்!

தேர்தல் முடிந்தும் கூட, மோடி குறித்த தேர்தல் பிரச்சாரத் தகவல்கள் பறிமாறப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்பது மாத தேர்தல் புனித யாத்திரையில், அவர் மூன்று லட்சம் கிலோ மீட்டர் தொலைவு அயராது பயணம் செய்திருக்கிறார்; 440 கூட்டங்கள் உட்பட 5187 நிகழ்ச்சி களில் பங்கேற்றிருக்கிறார். இவையெல்லாம் இன்றும் ஊடகங்களில் தொடரும் அம்சங்கள். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முகநூலில் அண்மையில் வெளி வந்திருக்கும் ஜோக்: மோடி பதவி ஏற்றார். முதல் நாளிலேயே அவர் ரஷ்யாவை விலைக்கு வாங்கி விட்டார். உக்ரேன் நெருக்கடி தீர்ந்தது. சிறுமிகளைப் பிடித்துச் சென்ற போக்கோ பயங்கரவாதிகள் சிறுமிகளைத் திருப்பித் தந்து விட்டு, அனைவரும் ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து விட்டனர். கதைகளில் வரும் கதாநாயகர்கள் போன்று மோடியின் தோற்றமும் மாறி வருகிறது. ரஜனிகாந்த் போன்று மோடியும் ஒரு கதாநாயகனாக மாறி வருகிறாரோ என்னவோ?

தமிழ் ஓவியா said...


பெண் விடுதலைக்கு போராடிய ரோசா லக்சம்பர்க்


19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஆளுமை களில் ஒருவர் ரோசா லக்சம்பர்க். அவர் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள் மூன்று புரட்சிகளில் பங்கேற்றவர். சிந்தனையாளர். புரட்சியாளர். எழுத்தாளர்!

1871இல், ரஷ்ய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போலந்தில் பிறந்தார் ரோசா. 5 வயதில் இடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட போது, அவருடைய காலில் ஊனம் நிரந்தரமானது. பள்ளியில் படிக்கும்போதே நிறைய விஷயங்களை ஆர்வத்தோடு அறிந்துகொண்டார். நிறைய சிந்தித்தார். எதையும் தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய மனநிலையைப் பெற்றிருந்தார்.

1889இல், லியோ ஜோகித்சே நட்பு கிடைத்தது. இருவரும் நிறையப் பேசினார்கள். விவாதித்தார்கள். 1893இல், ரோசாவும் ஜோகித்சேவும் சேர்ந்து தொழிலாளர் குரல் பத்திரிகையை ஆரம்பித்தனர். போலந்தில் இருந்த சோசலிசக் கட்சியின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்து எழுதினார் ரோசா.

1898இல், ஜெர்மனைச் சேர்ந்த குஸ்தாவ் லூபெக்கைத் திருமணம் செய்துகொண்டு, ஜெர்மனியில் குடியுரிமை பெற்றார் ரோசா. அங்கு, சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து வேலை செய்தார். இந்தக் காலகட்டத்தில் ரோசா உலக அளவில் மார்க்சிஸ்ட் சிந்தனையாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டார்.

1905இல், ரஷ்யா சென்ற ரோசா, அங்கு நடைபெற்று வரும் புரட்சியை நேரில் கண்டார். லெனினைச் சந்தித்தார். போலந்திலும் புரட்சி மூலம் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்தது. வார்சா திரும்பியவர் தன் கருத்துகளை அழுத்தமாக எடுத்து வைத்தார். அரசாங்கம் ரோசாவைச் சிறையில் அடைத்தது.

முதல் உலகப் போருக்கான ஆயத்தங்கள் ஜெர்மனியில் நடைபெற்று வந்தன. பாட்டாளி மக்கள் உலகப் போரை எதிர்க்க வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் ரோசா போராடிக் கொண்டிருந்தார். 1919இல், கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பர்க் தலை மையில் ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.

ஜெர்மனியில் இரண்டாவது புரட்சி வெடித்தது. 1919 ஜனவரி 15 அன்று ரோசாவையும் கார்ல் லீப்னெக்ட்டையும் ஃப்ரிகோர்ப்ஸ் என்ற ராணுவம் கைது செய்தது. ஓட்டோ ரூஞ்ச் என்ற ராணுவ வீரன் ரோசாவை துப்பாக்கியால் அடித்து கீழே தள்ளினான். ஹெர்மன் சூக்கோன் சுட்டுக் கொன்றான். அவரது உடல் லாண்ட்வெர் கால்வாயில் வீசப்பட்டது.

கார்ல் லீப்னெக்ட்டும் சுட்டுக் கொல்லப் பட்டார். 47 வயது வரையே வாழ்ந்தாலும் தெளிவான சிந்தனை, துணிச்சல் மிக்க போராட்டங்கள் மூலம் பாட்டாளி மக்களின் விடிவுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்தவர் ரோசா லக்சம்பர்க். அவருடைய பெயரில் லக்சம்பர்க் தத்துவம் இருக்கிறது. இன்று பெண் விடுதலையின் அடையாளமாக ரோசா உலகம் முழுவதும் அறியப்படுகிறார்!

Read more: http://www.viduthalai.in/page-7/82314.html#ixzz34waicHgu

தமிழ் ஓவியா said...


திராவிட இயக்கப் போராளி விருது பெற்ற ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு


சென்னை சி.அய்.டி. காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் 15.6.2014 அன்று மாலை சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின் சார்பில் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாருக்கு திராவிட இயக்கப் போராளி என்று வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கிப் பெருமைப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, அ.பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த விருதினை இன்று (17.6.2014) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேரில் காண்பித்து, வாழ்த்து பெற்றார் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார். அவருக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உடன் கு.தங்கமணி, இ.திருமகள், அம்மையாரின் பெயர்த்தி ஆகியோர் உள்ளனர்.

Read more: http://www.viduthalai.in/page-8/82338.html#ixzz34wazEdRU

தமிழ் ஓவியா said...

இன்னும் எழுகிறேன்





என்னைப்பற்றி கசப்புக் கலந்த திரிக்கப்பட்ட பொய் வரலாற்றைப் புனைந்தாலும்
புழுதியில் போட்டு மிதித்தாலும்
அணுத்துகள் போல் எழுகிறேன்
இன்னும் மேலேமேலே

உங்களுக்கு என்துணிவு திகிலூட்டுகிறதா?
என் வீட்டில் எண்ணெய்க் கிணறு இருப்பதுபோல் இறுமாந்து இருக்கிறேனே அதனாலா?
எதற்கு என்மேல் இந்த இருட்டு முற்றுகை?

உலவும் நிலவாக
உதிக்கும் சூரியனாக
உறுதி அலைகளாக
உயர்கின்றன என் நம்பிக்கைகள்
அதனால்
எந்நிலையிலும் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே...

உடைந்த உள்ளத்துடன் தலை கவிழ்ந்து
கண்கள் கவிழ தோள் கண்ணீராய் வழிய
ஆற்றல் குன்றிய உணர்ச்சிமிக்க
என் கூக்குரலைக் கேட்க விரும்பினீர்கள் அல்லவா?
மட்டிலா துன்பம் தர கருதினீர் ஆனாலும்
என் தோட்டத்தில் பொன் சுரங்கம் இருந்து அதை
வெட்டி எடுப்பது போல் சிரிக்கின்றேனே இன்னும்
அந்தத் தன்னம்பிக்கை தகிக்கிறதா உங்களை?

சொற்களால் என்னைச் சுட்டு விடலாம்
கண்களால் என்னைப் பிளந்து விடலாம்
வெறுப்பால் என்னைக் கொன்று விடலாம்
ஆனாலும் காற்றாய் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே!

என் கவர்ச்சி நிலைகுலைய வைக்கிறதா? எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்துக் கொண்டு
நான் ஆடுவதுபோல் திகைக்கிறீர்களா?

வரலாற்றின் அவமானக் குடிசையிலிருந்து
நான் எழுகிறேன்
கடந்த கால வலியின் ஆழத்திலிருந்து
நான் எழுகிறேன்

நான் கருங்கடல்
திகிலும் அச்சமும் நிறைந்த இருளைவிட்டு
இன்பமும் எழுச்சியும் ஏந்திய
அகன்று குதிக்கும் அலைகளாய்
நான் எழுகிறேன்
களங்கமில்லாத விடியலை நோக்கி
நான் எழுகிறேன்
அடிமை மக்களின் நம்பிக்கையும் கனவுமாக
என் மூதாதையர் கொடுத்த பரிசுகளுடன்
நான் எழுகிறேன்...
நான் எழுகிறேன்...
நான் எழுகிறேன்...

தமிழில்: அருள்பேரொளி

தமிழ் ஓவியா said...

கால் பந்தாட்டத்தில் கடவுளின் கையாம்


- மயிலாடன்

மூட நம்பிக்கை எல்லாத் துறைகளிலுமே உண்டு என்கிறபோது விளையாட்டுப் போட்டிகளிலும் இல்லாமற் போய்விடுமா?

உலகக் கால்பந்து போட்டி என்னும் உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் மெய்ம்மறந்துகிடந்தோம்.

கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் எங்கெங்கெல்லாம் ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்களோ, அந்த நாடுகளில் மட்டுமே இடம்பெறக் கூடிய சோம்பேறி விளையாட்டாகும்.

ஒருவர் பந்து வீசுவார்; இன்னொருவர் அடிப்பார். மற்றொருவர் பந்தை விரட்டிக் கொண்டு ஓடுவார். எல்லைக்கோட்டருகில் நிற்பவர்களோ ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

கால் பந்தாட்டமோ, ஹாக்கியோ அத்தகையதல்ல; ஒவ்வொரு நொடியிலும் இரு அணிகளைச் சேர்ந்த 22 பேர்களும் சுறுசுறுப்புடன் அதிவேகத்துடன், பரபரப்பாகத் தயார் நிலையில் இருந்து தீரவேண்டியவர்கள்.

ஆனால், மூடநம்பிக்கை மற்ற போட்டிகளில் முட்டி மோதுவதுபோல, கால்பந்தாட்டத்திலும் உண்டு. கானா அணிக்கும், உருகுவே அணிக்கும் நடைபெற்ற போட்டியின்போது கானா அணியைச் சேர்ந்த ஒருவர் அடித்த பந்து கோல் நோக்கிப் பறந்தது. அந்த நேரத்தில் உருகுவே நாட்டு அணியின் லூயிஸ் சாரஸ் என்பவர், அந்தப் பந்தைக் கோலுக்குள் போகாமல் கையால் தடுத்துவிட்டார் (கோல் கீப்பரைத் தவிர மற்றவர்கள் கையில் தடுத்தால் அது குற்றமாகும்). செய்த குற்றத்துக்காக நடுவரால் சாரஸ் வெளியேற்றப்-பட்டார் என்றாலும், இதுகுறித்து சாரஸ் என்ன கூறினார் என்பதுதான் முக்கியமானதாகும்.

அந்தப் பந்தைக் கையால் நான் தடுத்தது குற்றம்தான். அப்படிச் செய்திராவிட்டால், அந்தப் பந்து எங்கள் கோலுக்குள் போயிருக்கும். நாங்கள் தோல்வி அடைந்திருப்போம். எனவே, அந்தப் பந்தை என் கைதான் தடுத்தது என்றாலும், அது என் கையல்ல, கடவுளின் கை! அதுதான் தடுத்தது என்று சமாதானம் கூறினார்.

பொதுவாக, தவறு செய்பவர்கள் அதற்கான பொறுப்பைத் தாங்கள் ஏற்காமல் கடவுளின்மீது பழி போடுவது பொறுப்பற்ற வாடிக்கைதான். அந்தக் குற்றத்தைத்தான் உருகுவே ஆட்டக்காரரான சாரசும் செய்தார்.

ஒரு கேள்வி, கையால் பந்தைத் தடுத்தது குற்றம் என்பது அவருக்கே தெரியும். தெரிந்திருந்தும், பந்தைத் தடுத்தது கடவுள் கை என்றால், தவறுக்குத் துணை போகக்கூடியவர் கடவுள் என்று விளங்கவில்லையா? விளையாட்டாக இருந்தாலும் அதில் ஒழுக்கம் தேவையில்லையா?

சரி, அவர் கைதான் கடவுள் கையாயிற்றே, அவர் ஏன் வெளியேற்றப்பட்டார்? அவர் அணி அடுத்த போட்டியில் ஏன் தோற்றது? கடவுள் சக்தி அவ்வளவுதானா? அட, பரிதாபத்திற்குரிய கடவுளே, பக்தர்களே உங்களை நினைத்தால் கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.

ஸ்பெயின் 5_1 என்ற கோல்களில் டென்மார்க்கை வென்றது. இங்கிலாந்து பராகுவேயையும், பிரேசில் போலந்தையும் வீழ்த்தின. மேற்கு ஜெர்மனி 1_0 என்ற கோலில் மொரோக்கோவையும், மெக்சிகோ பல்கேரியாவையும் வீழ்த்தின. காலிறுதியில் பிரான்ஸ் பிரேசிலை வீழ்த்தியது. பெல்ஜியம் ஸ்பெயினை வெளியேற்றியது. மேற்கு ஜெர்மனி மெக்சிகோவை வெளியேற்றியது. அர்ஜென்டினா 2-_1 என்ற கோல்களில் இங்கிலாந்தை வென்றது. அர்ஜென்டினாவின் முதல் கோல் கடவுளின் கை போட்ட கோல் என்று பின்னால் மரடோனாவால் வர்ணிக்கப்பட்டது. தனியாக வானில் வந்த பந்தைப்பிடிக்க இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷெல்டனும், அதைத் தன்வசப்படுத்த மரடோனாவும் வானில் தாவினர். ஆனால் மரடோனா அந்தப் பந்தை தனது கையால் குத்திக் கோலாக்கினார். நடுவரும் லைன்ஸ்மேன்களும் அதைக் கவனிக்கவில்லை. அடுத்து மரடோனா அடித்த கோல் அபாரமான கோலாகும். உலகின் சிறந்த கால்பந்து வீரரான மரடோனா கடைசி வரை இந்தக் கோலுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. அரை இறுதியில் மேற்கு ஜெர்மனி 2_-0 என்ற கோல்களில் பிரான்சை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அர்ஜென்டினா 2-_0 என்ற கோல்களில் பெல்ஜியத்தை வென்றது. இறுதியாட்டத்தில் அர்ஜென்டினா 3_-2 என்ற கோல்களில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி ஃபிபா கோப்பையைக் கைப்பற்றியது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். கடவுள் என்ற உணர்வு தவறு செய்வதைத் தடுக்கவில்லை; மாறாக தவறு செய்பவர்கள் தப்பிக்கத் துணைப் போகிறது. இதன் மூலம் ஒழுக்கக்கேட்டுக்கு அரணாகத்தானே இருக்கிறது. இதுகுறித்து எந்த ஆன்மிகவாதிகளும் வாய்திறப்பதில்லையே _ ஏன்?

குறிப்பு: 2014-இல் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டம் ஜூன் 13 அன்று தொடங்குகிறது

தமிழ் ஓவியா said...

பூமியைவிட 2 மடங்கு பெரிய கோள்

பூமிக்கோளில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் (ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்) தொலைவில் நாம் வாழும் பூமியைவிட இரண்டு மடங்கு பெரிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியைவிட 17 மடங்கு எடையுள்ள இந்தப் புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். 45 நாள்களுக்கு ஒருமுறை சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கோளினை, ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் இயற்பியல் மய்யத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, கெப்ளர்_10சி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கோளினைக் கண்டு பிடித்திருப்பது தங்களுக்கு மிகுந்த வியப்பினை அளித்துள்ளதாக விஞ்ஞானி சேவியர் டைஸ்கியூவும், இது அனைத்து பூமிகளின் காட்சில்லா போன்றது. இந்தக் கோளில் உயிர் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை உள்ளது என்று டிமிட்டர் சாஸ்செலோவ் அவர்களும் கூறியுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

பரிதவிக்கும் பாபநாசம்

தாமிரபரணி ஆறு வடக்கு நோக்கிப் பாயும் பாபநாசத்திற்குச் சென்றால் பாவங்கள் நீங்கும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கின்றனர். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களைச் சென்றடையும் என்று ஆற்றில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

இப்படி அடுக்கடுக்காக மூடநம்பிக்கைகளைச் சுமந்து வருபவர்களின் மூலமாக துணி சோப்பு, குளியல் சோப்பு மூலம் ஒரு நாளைக்கு 585 கிலோ கழிவுகளும், பேஸ்ட், ஷாம்பு, எண்ணெய் பாட்டில்கள் மூலம் 185 கிலோ கழிவுகளும் ஆடைகளின் அழுக்கு, எண்ணெய், பூ, வாழை இலை போன்றவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 291 கிலோ குப்பையும் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதக் கழிவுகள் 200 கிலோ, பரிகாரத் துணிகள் 200 கிலோ ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 1591 கிலோ கழிவுகள் பாபநாசத்தில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைத் தூய்மை செய்யும் பணியில் இதுவரை 125 டன் துணிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

உலகத் தலைவர்கள் பெண்களை மதிக்கிறார்களா?

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி சார்பில் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பெண்களின் கல்வித் தேவை குறித்துப் பேசினார். இது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது:-

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அல்லது ஹார்வேர்டு பல்கலைக்கழகங்களில் தங்களது பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்குச் சென்றால் பெருமிதம் கொள்ளும் உலகத் தலைவர்கள், அதற்கு அப்பால் அவர்களது கல்வியைப் பற்றியோ அவர்களது தேவையைப் பற்றியோ ஏதும் சிந்திப்பதில்லை.

இதன்மூலம் சமூகக் கோட்பாடுகளை உலகத் தலைவர்கள் மதிக்காமல் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே, தலைவர்கள் தங்களது மகள்களின் கல்விக்கு மட்டுமல்ல, தனது நாட்டின் ஒட்டுமொத்த மகள்களுக்காகவும் சிந்திக்க வேண்டும்.
பெண்களை மதிக்கும் மனப்பான்மையை உலகத் தலைவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் ஓவியா said...

தொடங்கியது காவிக்கூட்டத்தின் மிரட்டல் ஆட்டம்!




வரலாற்றுப் பாட நூல்களைத்
திரிக்கும் அவலம்

காவிக்கும்பல் ஆட்சிக்கு வந்தாலே அவர்களின் முதல் பார்வை விழும் இடம் அவர்களுக்கு எப்போதுமே பாதகமாக இருக்கும் வரலாறு தான். இதோ இந்த முறை மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் கச்சை கட்டிக் கிளம்பிவிட்டது காவிக்கும்பல். அதுவும் இம்முறை முழு வலுவோடு இருப்பதாகக் கருதப்படுவதால், வேகம் கொஞ்சம் கூடுதலாகத் தானே இருக்கும்.

பிரபல பாடநூல் வெளியீட்டு நிறுவனமான ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்தின் வரலாற்றுப் பாடநூலுக்கு எதிராக சட்ட அறிவிக்கை (லிமீரீணீறீ ழிஷீவீநீமீ) அனுப்பியதன் மூலம் கணக்கைத் தொடங்கியுள்ளார் தினநாத் பத்ரா என்பவர். இதையடுத்து அந்த நிறுவனம் அதனுடைய பல்வேறு நூல்களை மறுஆய்வு செய்து கொண்டுள்ளது. இவற்றுள் கல்வியாளர் மேகா குமார் எழுதியுள்ள 1969லிருந்து அகமதாபாத்தில் நடக்கும் மதவாதம் மற்றும் பாலியல் வன்முறை என்ற நூலும் மறு ஆய்வு செய்யப்படும் நூல்களின் பட்டியலில் இருப்பதாக ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் அவருக்குத் தெரிவித்ததை அடுத்து இந்தத் தகவல் வெளியே வந்துள்ளது. இந்த நூல் 1969, 1985 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் அகமதாபாத் நகரத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது முஸ்லிம் மதப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளைக் குறித்து ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த கல்வியியலாளரான தனக்கு சமீபத்திய தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட மாறுதல் கவலையளிப்பதாகக் கூறியுள்ளார் மேகா குமார்.

சரி, யாரிந்த தினநாத் பத்ரா?

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வித்யபாரதி கல்வி குழுமங்களின் பொதுச் செயலாளராக இருந்தவர் தினநாத் பத்ரா. தற்போது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். வித்யபாரதி பயன்படுத்தும் பாடநூல்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவும், குழந்தைத் திருமணம், சதி என்ற உடன்கட்டை ஏறுதல் ஆகியவை இந்தியக் கலாச்சாரம் என்பது போலவும் இன்னமும் பல மூடநம்பிக்கை களைக் கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதன் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதை எதிர்த்து 2001ஆம் ஆண்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியவர் தினநாத் பத்ரா.

வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடநூல்களில் உள்ள தகவல்களை எதிர்த்து (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) எதிராக 2006ஆ-ம் ஆண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தவரும் இவரே! அவ்வழக்கு பழங்காலத்தில் ஆரியர்கள் மாட்டிறைச்சி உண்பார்கள் என்று பாடநூலில் இருப்பதை எதிர்த்து பதியப்பட்டிருந்தது என்பதும், அந்தக் கருத்தைப் பாடநூலில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2007ஆ-ம் ஆண்டு அன்றைய மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், தினநாத் பத்ராவின் அறிவுரைப்படி, மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து பாலியல் கல்வியை நீக்கினார். மேலும், பாலியல் கல்வியைப் போதித்தால் சட்டப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி டெல்லி பள்ளி ஆசிரியர்களுக்குக் கடிதம் அனுப்பியது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி.

2008ஆம் ஆண்டு, டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ராமாயணம் தொடர்பான ராமானுஜனின் கட்டுரையை நீக்க வழக்குத் தொடர்ந்தவர்களில் தினநாத் பத்ராவும் ஒருவர்.

2010ஆம் ஆண்டு, இந்துக்கள் தொடர்பான வரலாற்று நூலை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்திற்கு எதிராகவும், இந்து ராஷ்டிரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்ட பிரான்ட்லைன் ஆசிரியர் இந்து ராமுக்கு எதிராகவும் லீகல் நோட்டீஸ் அனுப்பினார் தினநாத் பத்ரா.

இப்படித் தொடரும் செயல்களுக்கு மத்தியில் இப்போது நவீன இந்திய வரலாறு குறித்து சேகர் பந்தோபாத்யாய எழுதி ஓரியன்ட் பிளாக்ஸ்வான் வெளியிடும் நூலுக்கு எதிராகவும் தினநாத் பத்ரா கிளம்பியுள்ளார். சேகர் பந்தோபாத்யாய எழுதியுள்ள நவீன இந்திய வரலாறு குறித்த நூல் மிகச் சிறந்த வரலாற்று நூல், அந்த நூலைத் தடை செய்ய யாராவது முயன்றால், அது இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாக அமையும். தினநாத் பத்ராவுக்கு அந்த நூலில் பிரச்சினை இருந்தால் அந்த நூலைத் தடை செய்வதற்குப் பதிலாக அந்த நூலுக்கு மறுப்பாக ஒரு நூலை எழுதட்டும் என்று கூறியுள்ளார் பிரபல வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குகா.

தினநாத் பத்ராவின் சட்ட அறிவிக்கையை அடுத்து தனது பல நூல்களை ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் மறுஆய்வு செய்வது என்று தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது எண்ணற்ற வரலாற்று, சமூக சிந்தனை யாளர்களைக் கவலையடைய வைத்துள்ளது. இவ்வாறு மிரட்டல்களின் மூலமாக வரலாற்றைத் திரிக்க முயலும் மதவாத அமைப்பினரின் செயல்கள், ராமச்சந்திர குகா சொல்லியுள்ளது போல, இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாகவே அமையும்.

- திராவிடப் புரட்சி

தமிழ் ஓவியா said...

விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்!


எச்சரிக்கைக் குரல் எழுப்பிய
திராவிடர் விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாடு


திருவாரூரில் 26.5.2014 அன்று நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது, விவசாயம் என்பதை வருணாசிரம முறையில் பாவத் தொழிலாகக் கூறும் மனுதர்மம்- பார்ப்பனர்கள் தான் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிராசுதாரர்களாக உள்ளனர். அந்த பாவப்பட்ட தொழிலின் இலாபத்தை அனுபவிப் பவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயலில் உழைக்கும் விவசாயிகளின் நிலையோ அன்று தொட்டு இன்றுவரை பரிதாப நிலைதான்.

நகர்ப்புறங்களில் மக்கள் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் கிராமப் பகுதியில் உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று 1944ஆம் ஆண்டிலேயே இதுபற்றிச் சிந்தித்து தம் கருத்தினை தந்தை பெரியார் வெளியிட்டுள்ளார்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடங்கிய புரா திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் கூறிய அந்தக் கருத்தின் அடிப் படையில் தான் தஞ்சை வல்லத்தைச் சுற்றியுள்ள 67 கிராமங்களைத் தத்தெடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்த ஆசிரியர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 10 கிராமங்களில் ஆய்வு செய்து அங்கும் புரா திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்றும் அறிவித்தார்.

காவிரி நீர்ப் பங்கீடு, நீர் சேமிப்பு, விவசாயிகளுக்கான இழப்பீடு, மானியம் முறையாகச் சென்றடைதல் உள்ளிட்ட தீர்மானங்களுடன் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் களைதல், ஆண் - பெண் ஊதிய வேறுபாட்டை நீக்குதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு முதியோர் காப்பகங்கள் போன்ற இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான 12 முக்கியத் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஒன்று விவசாயத்தை வாழ வைக்க வேண்டும்; அல்லது விவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகளை வாயாரப் புகழ்ந்துவிட்டு அவர்களது வாழ்வை உறிஞ்சக் கூடாது என்று ஒலித்த குரல் விவசாயிகளைப் புறக்கணித்து விட்டு வளர்ச்சி பேசும் அத்தனைப் பேருக்குமான எச்சரிக்கையும் அறைகூவலும் ஆகும். திருவாரூர் மாநாடு பெரியார் பார்வையில் புதிய அணுகுமுறையில் விவசாயிகளைப் பார்த்திருக்கிறது; இனி வழிகாட்டும்.

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பஞ்சகவ்யம் என்றால் பால், தயிர், மாட்டு மூத்திரம் (கோமியம்), சாணி, நெய் இவற்றின் கலவைதானே! இதனைப் பக்தியின் பெயரால் தட்சணை கொடுத்து மனிதன் குடிக்கிறானே- இந்து மதத்தில் என்று நாம் கேள்வி கேட்டால், அதற்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள் தெரியுமா?

பாலில் - சந்திரன்

தயிரில் - வாயு பகவான்

மாட்டு மூத்திரத்தில் - வருணதேவன்

சாணியில் - அக்னி பகவான்

நெய்யில் - சூரிய பகவான் இருப்பதாகக் கதை அளக் கிறார்களே, விஞ்ஞான ரீதியாக இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் சங்கராச் சாரியார் இந்தப் பஞ்ச கவ்யத்தைக் குடிப்பாரா?

சரி, மாட்டு சாணிக்கே இவ்வளவு சக்தி என்றால், மனித சாணிக்கு...?

Read more: http://viduthalai.in/e-paper/82379.html#ixzz352kUnUlB

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டிலும் இந்த நிலையா? - மகாவெட்கம்!


தமிழ்நாட்டிலும் இந்த நிலையா? - மகாவெட்கம்!

தேவிப்பட்டினத்தில் கோயிலில் பெண்ணுக்கு நிர்வாணப் பூஜையாம்!

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்பது உண்மைதானே!

ராமநாதபுரம், ஜூன் 18_ பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை நிர் வாணப்படுத்தி பாலியல் குறும்புகள் செய்த, தேவி பட்டினத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய் தனர்.

ராமநாதபுரம் மாவட் டம், தேவிப்பட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந் தவர் கணேசமூர்த்தி (35). அதிமுகவைச் சேர்ந்த இவர் தேவிப்பட்டினம் கிளை ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உள்ளார். தேவிபட்டினம், நவ பாஷாண கோயிலுக்கு வரு வோரை அணுகி தோஷம் கழிக்கப் பரிகாரம் என்ற பெயரில் பூஜை செய்து வந்துள்ளார். 3 நாள்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட் டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தொப்புள்கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்ததால் பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன் தேவிபட்டினம் கோயி லுக்கு அழைத்து வந்தனர்.

அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக் குள் கணேசமூர்த்தி தனி யாக அழைத்துச் சென் றுள்ளார். பூஜையின்போது அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந் திருந்த அந்தப் பெண் ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில் வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால் பார்க்க முடியாது.

இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார பூஜை செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த பெண்ணை நிர் வாணமாக்கியுள்ளார். சிறிய லிங்கத்தை வைத்து பெண் ணின் உடல் முழுவதும் 108 முறை தடவி கொடுத்து, பாலியல் குறும்புகளில் ஈடுபட்டுள்ளார். கணேச மூர்த்தியின் இந்த பூஜை குறித்து, பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக சொல்லவில்லை. ஊருக்குச் சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார்.

தேவிபட்டினத்தைச் சேர்ந்த சுற்றுலா வழி காட்டி கற்பூரசுந்தரம் என் பவர்தான் பரிகார பூஜைக் காக கணேசமூர்த்தியை சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் ணின் உறவினர்கள் கற் பூரசுந்தரத்திடம் தெரிவித் துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம், கணேசமூர்த் தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார். ஆத்திர மடைந்த கணேசமூர்த்தி கற்பூரசுந்தரத்தை கடுமை யாகத் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டி யுள்ளார்.

இதையடுத்து கற்பூர சுந்தரம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், பெண் களை இரவில் தேவிபட்டி னம் கோயிலுக்கு அழைத் துச் சென்று நிர்வாணப் படுத்தி, பாலியல் குறும்பு கள் செய்து வந்த விவரத் தையும் விரிவாக தெரிவித் துள்ளார். கொலை மிரட் டல் விடுத்த வழக்கில் கணேசமூர்த்தியை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பெண்களிடம் பாலியல் குறும்புகள் செய்தது குறித்து, வழக்கு ஏதும் பதியவில்லை.

எப்போது வரும் தடை?

வெளியூரைச் சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேசமூர்த்தி தனது பாலியல் குறும்புகளை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டு களாகவே பெண் பக்தர் களை குறி வைத்து இந்தப் பரிகார பூஜைகளை செய் துள்ளார்.

இளம்பெண்கள் என்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்யவேண்டும் என்பா ராம். கோயில் வளாகத்தில் இதுபோன்ற ஏமாற்று மனிதர்கள் ஏராளமா னோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என பொது மக்கள் கடவுளிடம் சொல் லாமல் காவல்துறையினரி டம் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82376.html#ixzz352kgIPCv

தமிழ் ஓவியா said...


நுகம்பலில் இரு பிரிவினர்க்கிடையே மோதல் - அரசு தலையிட்டுத் தடுத்திடுக!


செங்கற்பட்டு வட்டம், சித்தாமூர் ஒன்றியம், நுகம்பல் ஊராட்சியில் இரு பிரிவினர்க்கிடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டுள்ளன. கோவில் திருவிழாவை முன்வைத்து இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. காவல்துறை ஒரு சார்பாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றத்துடன் சொல்லுகிறார்கள்.

மற்றொரு தருமபுரி நாயக்கன் கொட்டாயாக மாறுவதற்குமுன் தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா?

Read more: http://viduthalai.in/e-paper/82381.html#ixzz352kvW9OG

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


மவுனம்

செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச் சர் உமாபாரதி கருத்துக் கூற மறுப்பு!

சிந்தனை: பி.ஜே.பி. ஆட்சியில் துறை அமைச் சர், துறைத் தொடர்பான கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டார்கள். துறைக்குச் சம்பந்தமே இல்லாத அமைச்சர்கள் அனந்த குமாரும், வெங்கய்ய நாயுடுவும்தான் பதில் சொல்லுவார்கள் போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/82384.html#ixzz352l3pQxT

தமிழ் ஓவியா said...


2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் 55 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தேர்ச்சி தகுதி கிடைக்க வேண்டும்




நமது தமிழக முதல்வர் அவர்கள் 2014 இல் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத் தில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீட்டு பிரி வினரில் 55 சதவிகித மதிப்பெண் பெற்ற வர்களும் அரசு வேலை பெற தகுதியு டையவர்கள் என்று அறிவித்தார்கள்.

அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு பணியில் சேர காத்திருக்கிறார்கள். இதே போன்று 2012 ஆம் ஆண்டில் நடை பெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி பின்பற்ற வேண்டும் என்று சட்டசபையில் பல தலைவர்கள் எடுத்துக்கூறியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

2012 ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும் இம் முறை பின்பற்றப்பட்டால் எம் போன்ற பலரது வாழ்வு வசந்தமாகும்.

2010 ஆம் ஆண்டில் மே மாதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு தகுதித்தேர்வு எழுத வேண்டிய அவசிய மில்லை.

அவர்களுக்கு உரிய பணியிடம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் 2010 மே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்களுக்கு இதுவரை பணியிடம் வழங்கப்பட வில்லை.

ஒருவர் ஆசிரியர் தகுதிபெற வேண்டு மானால் கண்டிப்பாக மூன்று ஆண்டுகள் கல்லூரியில் சேர்ந்து படித்து இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என 2012 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் முற்றிலும் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் நிரந்தர பணியிடம் பெற்றுள்ளனர்.

எனவே, இதுகுறித்து நமது தமிழக அரசு, எம் போன்றவர்களுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி அளிக்கப்பட்டு தகுந்த பணியிடம் அளிக்கவேண்டும் என்று பணிவன்புடன் வேண்டுகிறோம்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள

வேலையில்லா மாற்றுத்திறனாளி
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்

Read more: http://www.viduthalai.in/page-2/82390.html#ixzz352pfUgZv