Search This Blog

13.6.14

ஆர்.எஸ்.எஸ். தடை நீக்கம்: இந்திய அரசு வெளியிட்ட அறிக்கை என்ன?

ஆர்.எஸ்.எஸ். தடை நீக்கம்: இந்திய அரசு வெளியிட்ட அறிக்கை என்ன?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொண்டு இந்திய அரசு 11.7.1949 வெளியிட்ட அறிக்கையில் இருந்து சில பகுதிகள்.

மாகாண அரசுகளுடன் கலந்தா லோசித்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்மீது விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்வது பற்றி மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த ஆண்டு சர்தார் பட்டேலுடன் இந்த அமைப்பின் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் மேற் கொண்ட பேச்சு வார்த்தைகளின் போது இந்தப் பிரச்சினையைப் பற்றிய உண்மைகள் தெளிவாகப் புலனாயின. சுருக்கமாகக் கூறுவதானால், இந்த பேச்சு வார்த்தைகளில் இந்த அமைப் பின் விதிமுறைகள் எழுத்து மூலமாக எழுதி வெளியிடப்பட வேண்டும்; அதன்படி அமைப்பு செயல்பட வேண் டும்; தனது செயல்பாடுகளை கலாச் சாரக் களத்துடன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்; வன்முறையையும், ரகசிய செயல்பாடுகளையும் கைவிட வேண்டும்; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும்; ஒரு ஜனநாயக அமைப்பாக செயல்பட வேண்டும் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

கோல்வால்கரின் கடிதம்

இதைத் தவிர இந்த அமைப்புப் பற்றிய அரசின் கண்ணோட்டத்திற்கு பழி வாங்கும் உணர்வு எதுவும் காரண மாக அமைந்திருக்க வில்லை. மேற் கூறப்பட்ட நிபந்தனைகளை நிறை வேற்ற அவரை ஒப்புக் கொள்ளச் செய்வதற்காக சிறையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவரைச் சந்திக்க வேண்டும் என்று எந்த குறிப்பிட்ட அரசு அதிகாரி அல்லாத கன வான் விரும்பி வந்தாலும், அதற்கு வசதிகளை அரசு செய்து தந்துள்ளது.
இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்
 வரைவு விதி முறைகளை இணைத்து கோல்வால்கர் அரசுக்கே கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மாநில அரசுகளின் கலந்தாலோசனையுடன் இந்த வரைவு அமைப்பு விதி முறைகளின் ஷரத்துகள் பரிசீலனை செய்யப்பட்டன. இந்த மாதிரி வரைவு விதிமுறைகளைப் பற்றிய தங் களது கருத்தினை இந்திய அரசு ஆர். எஸ்.எஸ். தலைவருக்கு தெரியப்படுத் தியது. இந்திய அரசு தெரிவித்த பொது வான யோசனைகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏற்றுக் கொண்டு இருப்பதாகத் தோன்றுவதாகவும், சம்பந்தப்பட்ட விதி முறைகள் அரசு கூறியுள்ள உணர்வுடன் பின்பற்றப்படும் என்று அவர் அளித்துள்ள விளக்கங்கள் சுட்டிக் காட்டுவதாகவும் அரசு அக்கடிதத்தில் தெரிவித்திருந்தது


விதிகள் திருத்தம்!

இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விசுவாசமாக செயல்படுவதாகவும், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், இவைபற்றி அமைப்பின் மாதிரி வரைவு விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள் ளதாகவும், ரகசிய செயல்பாடுகள். வன் முறை செயல்பாடுகளில் ஈடுபடுவோர் அல்லது நம்பிக்கை கொண்டுள்ளோ ருக்கு இந்த சங்கத்தில் இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதிமொழி அளித்துள்ளார். இந்த அமைப்பு விதி முறைகளின்படி ஜனநாயக முறையில் அமைப்பு செயல்படும் என்றும் ஆர். எஸ்.எஸ். தலைவர் விளக்கம் அளித்துள் ளார். குறிப்பாக அமைப்பின் தலைவரான சார்சங்சலக் நியமிக்கப்படுவது காரியக் கார மண்டலின் ஒப்புதலோடு செய்யப்படும் என்பதால் அந்த நியமனம் ஜனநாயக முறைப்படிதான் செய்யப் படுவதாகக் கருதலாம் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விதிமுறை களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், அதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்துள்ள விளக்கங்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்த பிறகு ஒரு ஜன நாயக, கலாச்சார அமைப் பாக, இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விசுவாசமாக நடந்து கொண்டு, தேசிய கொடிக்கு உரிய மரி யாதையை அளித்துக் கொண்டு, ரகசிய செயல் பாடுகளையும் வன்முறைச் செயல்பாடுகளையும் கைவிட்டு விட்டு, செயல்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு மாகாண அரசுகளின் கலந்தாலோசனையுடன் இந்திய அரசு வந்துள்ளது. இத்தகைய கொள்கைகள் இடம் பெற்றுள்ள ஓர் அமைப்பு விதி முறைகளின்படி உண்மையான உணர் வுடன் செயல்படுவதில் எந்த ஒரு நியாயமான ஆட்சேபணையும் இருக்க முடியாது என்றும் அரசு கருதுகிறது. அதன்படி அந்த அமைப்பின்மீது விதிக் கப்பட்டிருந்த தடையை திரும்பப் பெற்றுக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

ஆதாரம்: டி.ஆர். கோயல், 1979
----------------------------------------------நன்றி:-" தி இந்து" 16.10.2013 தமிழில்: த.க. பாலகிருட்டிண் 18-10-2013

34 comments:

தமிழ் ஓவியா said...





காலங் கடந்த ஞானோதயம்!

பிஜேபிவெற்றிபெற்றதுஎப்படி?

சமூகம் பிளவுபட்டதால் ஏற்பட்ட விளைவு!

டில்லி, ஜூன் 12-_ வகுப்புரீதியில் சமூகம் பிளவுபட்டதால் மக்க ளவைத் தேர்தலில் பாஜக நல்ல பலனை அறுவடை செய்தது என மாநிலங் களவையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள் ளது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன் னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் பேசிய தாவது:

தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சி யானது திட்டமிட்டு மத ரீதியில் சமூகத்தை பிளவு படுத்தியது. மேம்பாட்டுக் கொள்கைகளை முன் வைத்து அது தேர்தலில் வெற்றி பெறவில்லை. சமூகம் பிளவுபட்டதால் பாஜக நல்ல பலன் பெற்றுள்ளது. நல்ல நிர்வாகம் வழங்குவதிலும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என் றார் ஜெய்ராம் ரமேஷ்.

திரிணாமுல் காங்கிரஸ்

மக்கள் நல கொள் கைகளிலிருந்து அரசு விலகிச் சென்றால் அதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கும் என்றார் அக் கட்சியின் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய். முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்வது அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

சந்தன் மித்ரா (பாஜக):

அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் யோச னைகளை மோடி அரசு அப்படியே காப்பி அடிப் பதாக கூறுவது தவறா னது. சாமானியர்களின் கனவுகளை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது மோடி அரசு

டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)

காவிரி உள்பட நதி நீர் பிரச்சினைகளுக்கும் மாநிலங்களுக்கு இடையே யான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண எல்லா மாநிலங்களையும் அழைத் துப் பேச அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங் கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண் டும். இதை செய்யாமல் மீனவர் பிரச்சினையில் நியாயம் கிடைக்க வழி காண முடியாது.

இலங்கைத் தமிழர் களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்யவேண்டும். ஒரு கட்சியின் கொள்கை அடிப்படையில் அல்லா மல் தேசிய அளவில் கருத் தொற்றுமை கண்டு அதனை அடித்தளமாக கொண்டு வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டும்.

இந்தியாவில் கல்வி தனியார் மயமாக்கப்படு கிறது. தனியார், அரசு பங்கேற்புடன் கல்வித்திட் டத்தை அறிமுகப்படுத்து வது வியாபாரமாகும். இதை 12-ஆவது அய்ந் தாண்டுத்திட்டத்தில் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். நவீன தாரா ளமய கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால் நாட்டில் தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண் டும்.

திருச்சி சிவா (திமுக)

நதிநீர் பங்கீடு தொடர் பான பிரச்சினை, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர் கள் வேதனை போன்றவை பற்றி குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாதது ஏமாற்றம் தருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் மறுவாழ்வு நடவடிக் கைகள் பற்றிய கொள்கை எதுவும் இந்த உரையில் அறிவிக்கப்படவில்லை.

தில்லுமுல்லு செய்து குறுக்கு வழியில் மக்கள வைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதாக இந்த விவாதத்தில் சிவா குறிப்பிட்டதற்கு அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சைபுதீன் சோஸ் (காங்கிரஸ்), அஸ் வனி குமார் (காங்கிரஸ் ) ஜி.என்.ரத்தன்புரி (தேசிய வாத காங்கிரஸ்), பிர மோத் மகாபாத்ரா (சுயேச்சை), ரண்பீர்சிங் பிரஜாபதி (இந்திய லோக் தளம்)உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்ற னர்.

Read more: http://viduthalai.in/e-paper/82013.html#ixzz34Taes2w9

தமிழ் ஓவியா said...

திருவவதாரம்

வைகையாற்றங்கரையில் மதுரை மாநகரத்திலி ருந்து ஏழு கி.மீ. தொலை வில் திருவாதவூர் என்ற தலம் உள்ளது. இத்தலத் தில் இறைவன் வாதபுரீசு வரர் என்னும் திருநாமத் தோடு எழுந்தருளியுள் ளார். இத்தலம் வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என வழங்கப் பெறுகிறது. இந்நகரில் அமாத்திய அந்தணர் குலத்தில் சிவநெறி பிற ழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாதா சிருதர்.

அவர் மனைவியாரின் பெயர் சிவஞானவதி என் பதாகும். இவ்விருவரும் இல்லறம் வழுவாது ஒழுகி வரும் நாளில் தென்னாட்டில் புறச் சமய மாகிய புத்தம் மேலோங்கி இருந்தது. சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறை வன் திருவருளால் இவ்விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்கவும் திருமகனார் ஒருவர் திரு அவதாரம் செய்தருளினார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து அம்மகனார்க்கு திருவாதவூரர் என்னும் திருப்பெயர்ச் சூட்டினாராம்.

மத மாற்றம் உள் ளிட்ட பிரச்சினைகளில் கூட கடவுள் தலையிடு வாரோ!

மதத்தைத் தாண்டி கடவுள் இல்லை என்கிறபோது கடவுள் மதத்தின் கைக்கருவி ஆகி விடவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/82012.html#ixzz34TarP8u0

தமிழ் ஓவியா said...

குழந்தைத் தொழிலாளர்களும் - தந்தை பெரியார் தொலைநோக்கும்


குழந்தைத் தொழிலாளர்களுக்காக ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் நாம் எப்போதும் போல் வரலாறு என்ன என்று பார்த்துவிட்டும் ஆர்வத்தில் மாத்திரம் இருந்து விடுகிறோம். இந்த மாதம் இரண்டு முக்கியமான தினங்கள் வருகின்றன. அவை உலக சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு தினம் மற்றொன்று உலகக் கடல் தினம். இவை இரண்டுமே எதிர்காலத்தில் உலகை உயிரோட்டமாக வைக்க வேண்டியதன் கடமையை நமக்கு உணர்த்துபவைகள். உலகம் உயிரோட் டமாக இருக்கவேண்டுமென்றால் அங்கு உயிரினம் அதுவும் இப்பெருவெளியில் இன்றுவரை அறிவுள்ள உயிரினம் என்று கூறப்படும் மனிதர்கள் இருக்கவேண்டும். எதிர்கால மனிதர்கள் இன்றைய குழந் தைகள் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நாம் சுற்றுப்புறத் தையும் அளவுக்கு மீறி மாசுபடுத்து கிறோம், கடலையும் மாசுபடுத்துகிறோம்.

இதில் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களின் எதிர்காலத்தையும் முடக்கி விடுகிறோம். ஜுன் எட்டாம் தேதி அய்தராபாத் நகரத்தில் ஒரு சம்பவம் "வளையல் தொழிற்சாலை ஒன்றில் இருந்து 6 வயது முதல் 13 வயதுவரையான குழந்தை தொழிலாளர்கள் மீட்பு " இது குறித்து பேட்டியளித்த நகர காவல்துறை ஆணையர் ராஜேந்தர் கூறியதாவது "உத்தரபிரதேசம், பிகார், ஜார்கண்ட், ஒரிசா, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து அனாதைக் குழந்தைகளை கடத்தி வந்து வளையல் தொழிற்சாலை ஒன்றில் வைத்து வேலை வாங்குவதாக எங்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. சார்மினாருக்கு அருகில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் சட்டவிரோதமாக கழிவுக் கண்ணாடிகளை உருக்கி அதில் இருந்து வளையல்கள் தயாரிக்கும் ஒரு சட்ட விரோத தொழிற்சாலை ஒன்றை கண்டு பிடித்து சோதனை நடத்திய பொது இந்த உண்மை தெரியவந்தது. அங்கிருந்த 25 குழந்தைகளை மீட்டு அய்தராபாத குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டும்.இது தொடர்பாக அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 2 நபர்களை கைது செய்துள்ளோம். குழந்தைகள் கடத்தி வந்து வேலைக்காக விற்பவர்கள் தொடர்பாக கைது செய்த வர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.



பெரியாரின் எண்ணமும் யுனிசெப் விதியும்

குழந்தைத் தொழிலாளர் விவகாரம் தொடர்பாக சில அமைப்பு களின் கோரிக்கைகளான மேய்த்தல், ஆடை நெய்தல், விவசாயம் போன்றவை குடும்பச்சூழலில் செய்யும் போது அரவணைப்பும் அனுபவமும் கிடைக்கிறது என்ற வறட்டு வாதத்தை யுனிசெப் ஏற்கமறுத்துவிட்டது. இது போன்ற குடும்ப பாரம்பரிய தொழிலில் உதவும் குழந்தைகளுக்கு கல்விதான் முதற்கட்டமாக வழங்க முன்னுரிமை தரவேண்டும். பாரம்பரியத் தொழில் என்ற பெயரில் குழந்தைகளிடம் வேலைவாங்க கூடாது, என்ற விதியும் யுனிசெப் வகுத்துள்ளது. தந்தைப் பெரியார் எந்த காரணத்திற்காக குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்துப் புரட்சி செய்தாரோ அவரின் அன்றைய போராட்ட இலக்குதான் இன்று யுனிசெப் அமைப்பின் விதியாக மாறியுள்ளதை கவனித்தீர்களா? சட்டதிட்டங்கள் இருப்பினும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை என்னவோ கூடிக் கொண்டே தான் இருக்கிறது. தனிமனித அக்கறையின்மை, மற்றும் சமூகவிரோதிகளின் ஆதிக்கம் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுவதற்கு காரணமாக் அமைந்துவிடுகிறது.



தமிழ் ஓவியா said...

கைது செய்யப்பட இடம் எப்போதும் சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் உலகப் புகழ்பெற்ற சார்மினார் பகுதி, 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இது போன்ற பகுதியிலேயே 6 வயது குழந் தைகளைக் கூட இரக்கமின்றி வேலை வாங்குகிறார்கள் என்றால் நாட்டின் இதர பகுதிகளின் நிலையை சிந்தித்துப் பாருங்கள். இந்தச்சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியைச்சார்ந்த பிரபல சமூக சேவகர் ஒருவர் கூறியதாவது "அய்தராபாத்தின் இந்தப் பகுதியில் மாத்திரம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிய வற்புறுத்தப் படுகின்றனர், சிலர் உள்ளூர் குழந்தைகள் பெரும்பாலானோர் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டவர்கள். வளையல் தொழிற்சாலைகள் மிகவும் ஆபத்தானவை, பழைய கண்ணாடிகளை உருக்கும் போது அதில் இருந்து கிளம்பும் புகை உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஆகையால் பெரியவர்கள் இந்த தொழிலுக்கு வரமாட்டார்கள். இது போன்ற தொழிற்சாலைகள் நகரத்திற்கு வெளியே காற்றோட்டமான பகுதியில் தான் இருக்கவேண்டும். அதே நேரத்தில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியான பாதுகாப்பு கருவிகளைக் கொடுத்திருக்க வேண்டும்.

நெருக்கடி மிகுந்த இந்த தொழிற்சாலையே சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இதில் விதிமுறைகளை எதிர்பார்க்க முடியாது. தொழிலாளர் நல சர்வதேச அமைப்பின் ஆய்வின் படி உலகில் ஆசிய நாடுகள் தான் அதிக அளவில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் செயலைச்செய்கின்றன. இந்தியா, நேபாளம், பங்களதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள கட்டுப்பாடில்லாத, சமூக அக்கறை இல்லாத நிர்வாகத்தின் காரணமாக கட்டுப்பாடுகள் இன்றி குழந்தைகள் வேலைக்கு அமர்த்துவது மிகவும் சாதாரணமான ஒன்றாக ஆசியப் பிராந்தியத்தில் உள்ள இந்த நாடுகளில் காணப்படும் சூழல். நிர்வாக சீர்கேடு ஒரு புறம் என்றாலும் தனி மனிதனுக்கும் குழந்தைத்தொழிலாளர்கள் விவகாரத்தில் முக்கியப்பங்கு உள்ளது. பெற்றோர்களின் அலட்சியம் ஆதவற்ற குழந்தைகளுக்கு தேவையான பராமரிப்பு உதவிகளைச் செய்ய முன்வராத தொண்டு மய்ய அமைப்புகள் போன்றவைகளால் குழந்தைகள் சமூக விரோதிகளின் கரங்களில் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வேதனையான செய்தி என்னவென் றால் குழந்தை தொழிலாளர் விவகாரத்தில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கிறது. சுமார் 89 விழுக்காடு குழந்தைத்தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலைவாங்கப்படுகின்றனர். கண்ணில் பட்டவுடன் தென்படும் குழந்தைத் தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்தக் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றாலும் நாம் பார்க்கலாம், இந்திய அளவில் வேறு எங்கும் இல்லாத இந்த கொடுமை தமிழகத்தில் நடக்கிறது இதற்கு அடுத்த படியாக கட்டுமானத் தொழில், பட்டாசு ஆலை, தீப்பெட்டித் தொழிற் சாலை, கழிவுப்பொருள் சேகரிப்பு, சிறு தொழிற்சாலைகள், சாலையோர உண வகம் என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். இதனை அடுத்து டில்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உள்ளன "குழந்தை தொழி லாளர் ஒழிப்பு என்பது தனி மனித அக் கறை அல்ல அனைத்து தளத்திலும் கள மிறங்குவோம், வளமான எதிர்காலத்தை அவர்களுக்கு வழங்குவோம்"
- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/82019.html#ixzz34TbIi4lb

தமிழ் ஓவியா said...


முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font



வாசக நேயர்களுக்காகவும், பொது மக்கள் அறிந்துகொள்ளவும் கீழ்க்கண்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது: பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப் பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்: ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, காப் பீட்டுத் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் காப் பீட்டுத் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாள் களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத் திரத்தில் தட்டச்சு செய்துகொள்ள வேண்டும். இன் னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவ ரங்கள் கேள்வி- பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை நிரப்பி நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி)

யாரை அணுகுவது: பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்: உயர்நிலைப் பொதுத் தேர்வு (10 ஆம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத் தேர்வு (+2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாள்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ் வாங்கிய பிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை நிரப்பி வட்டாட்சியரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத் தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பவேண் டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற் பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும்.

3.குடும்ப அட்டை!

யாரை அணுகுவது: கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை.

எவ்வளவு கட்டணம்: புதிய குடும்ப அட்டை வாங்கும்போது ரூ.10 கட்டணம் செலுத்தவேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாள்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் நிரப்பித் தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4. ஓட்டுநர் உரிமம்!

யாரை அணுகுவது: மாவட்டப் போக்குவரத்துத் துறை அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: பழைய உரிமம் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்: கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.


தமிழ் ஓவியா said...

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.

5. பான் கார்டு

யாரை அணுகுவது: பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, அடை யாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்: அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாள்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்சன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்

யாரை அணுகுவது: சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்: தனியாகக் கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தவேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாள்களிலிருந்து 90 நாள்

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத் திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து, சான்றிதழ் வாங்கவேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

.

தமிழ் ஓவியா said...

7. கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது: பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம் பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்: ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.

இதுதவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாள்களில் கிடைக்கக் கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிட மிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்லவேண்டும்.

8. டெபிட் கார்டு

யாரை அணுகுவது: சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: கணக்குத் தொடர்பான விவரங்கள்.

தமிழ் ஓவியா said...

எவ்வளவு கட்டணம்: ரூ.100

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாள்கள் அல்லது அதிகபட்சம் 15 நாள்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மய்யத்திற்கு தகவல் தெரிவித்து, அதன்மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்கவேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா யாரை அணுகுவது: வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்: ரூ.20

கால வரையறை: ஒரு சில நாள்களில் கிடைக்கக் கூடும்.

நடைமுறை: முதலில் வட்டாட்சியரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9. பாஸ்போர்ட்

யாரை அணுகுவது: மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்: ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாள்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப் படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையொப்பம் பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண் டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10. கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மய்யத்துக்கு தகவல் அளித்து பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது: நிறுவனத்தின் வாடிக்கை யாளர் சேவை மய்யம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்: ரூ.100 (நிறுவனத்துக் கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாள்கள்.

நடைமுறை: தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு அட்டை அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாள்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/82044.html#ixzz34TbuZddM

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை அரிச்சுவடி


1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சு மாறிகள் பேச்சு

2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி

3. இதிகாசம் என்பது - மதிமோச விளக்கம்

4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே.

5. ஊழ்வினை என்பது - ஊக்கத்தை கெடுப்பது.

6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம்

7. கல்லை தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம்

8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது

9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம்

10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல்

11. சூத்திரன் என்றால் - ஆத்திரங் கொண்டடி

12. திதி கொடுப்பது - நிதியைக் கெடுப்பது

13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்கு கேடு

14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க

15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற் கொள்ளைக்காரர்கள்

16. புராணங்கள் - பொய் களஞ்சியங்கள்

17. பேதமென்பது - வேதியருக் கணிகலம்

18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்

19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள்

20. மதக்குறி என்பது - மடையர்க்கறிகுறி

21. முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே

22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது

23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது

24. ஜாதி வேறுபாடு - ஜன சமூகத்திற்குக் கேடு

25. க்ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு

- குடிஅரசு 23.2.1930

Read more: http://viduthalai.in/page-7/82104.html#ixzz34ZTNEPXz

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை - அறியாமை -இவற்றின் விளைவாக ஏற்படுகிற சுடுகாட்டு அமைதியை விட, சுய சிந்தனை - பகுத்தறிவு - இவற்றின் விளைவாக ஏற்படுகிற கடும் புயலை யும், கோடை இடியையும்தான் நான் விரும்புகிறேன்.

-இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/82104.html#ixzz34ZTXnwpF

தமிழ் ஓவியா said...


பைபிள் படிப்பவர்கள் பதில் கூறுவார்களா?


ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் - ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார்; (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்?) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்; இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார்; பொறாமை அடைந்த காயீன் ஆபேலைக் கொன்று விட்டான்.

கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார்; பிதாவே! அங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடு வார்களே என்றான் காயீன்.

காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார், இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர், அவர்களின் பிள்ளைகள் இருவர்; ஆக மொத்தம் நாலே பேர்; அதிலும் ஒருவன் இறந்து விட்டான்; பாக்கி இருப்பது மூன்றே பேர்; அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?

தகவல்: ச.ராமசாமி, சென்னை-18

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZTeraAY

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZTnKDBn

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

தீண்டாமை விலக்கு என்றால் தீண்டாத வனைத் தொடுவதும் அவனை மோட்சத் திற்கு அனுப்ப என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும் தானா என்று கேட்கிறேன். ஒரு மனிதனுக்குச் சாப்பாடும், உடையும், இடமும் கல்வியும் வேண்டுமா? மனிதனைத் தொடுவதும், செத்தபிறகு அனுபவிப்பதான மோட்சமும் வேண்டுமா என்று கேட்கிறேன்.

Read more: http://viduthalai.in/page-7/82102.html#ixzz34ZU6yKLJ

தமிழ் ஓவியா said...


பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்?

தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி. அதை ராத்திரி அறுத்தாய்விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியவில்லையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை.

குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!

குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரை யாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!

குடிஅரசு, 1-4-1928

Read more: http://viduthalai.in/page-7/82103.html#ixzz34ZUFejKP

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப்பட்டி ருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக்கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார்.

அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கையில்லாதவர்கள், ஆண்டவனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

Read more: http://viduthalai.in/page-7/82103.html#ixzz34ZUOOw5F

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZVD44QV

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? விநாயகரின் சிறப்புத் தலங்கள்



பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் விநாயகர் முதற் கடவுளாக இருப்பார். ஆனால் விநாயகர் வழிபாட்டுக்கு என்றே அமைந்த சிறப்பு வாய்ந்த தலங்கள் சில தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

கற்பக விநாயகர் கோயில் - பிள்ளையார் பட்டி, பிரளயம் காத்த விநாயகர் - திருப்புறம் பயம், பொல்லாப்பிள்ளை யார் - திருநாரையூர், முக்குறுணி விநாயகர் - மதுரை, ராஜகணபதி - சேலம், ஈச்சநாரி விநாயகர் - பொள்ளாச்சி, மணக்குள விநாயகர் - புதுச்சேரி, இரட்டை விநாயகர் - தாடிக்கொம்பு, லட்சுமி கணபதி - குன்றக்குடி முருகன் கோவில் என் கிறது ஓர் ஆன்மீக இதழ். கடவுள் உருவமற்றவர் - வழி பாட்டுக்காகத்தான் உருவச்சிலைகள் என்று சமாதானம் கூறும் ஆன்மீகச் சிரோன்மணிகள், இப்படி சில ஊர்களின் பெயர்களைச் சொல்லி அந்த ஊர்களில் உள்ள உருவச்சிலைதான் (கடவுள்தான்) பிரசித்தம் என்பது முரண்பாடு அல்லவா?

Read more: http://viduthalai.in/e-paper/82066.html#ixzz34ZVQR0Lm

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கடவுள் சக்தி இவ்வளவுதான்!
சாமி கும்பிடுவதற்காக வந்த 4 பேர் பலி

தலைவாசல், ஜூன்.13- சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் அம்பாயிர அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடு வதற்காக கோவை பி.என்.புதூரை சேர்ந்த சமையல் காண்டிராக்டர் மாதேஸ் என்பவர் தனது உறவினர்களுடன் 2 வேன் களில் நேற்று ஆறகளூர் வந்தார்.

காலையில் அவர்கள் கோவிலில் பொங்கல் வைத்து அங்கேயே சாப் பிட்டனர். இவர்களுடன் வந்த ராஜி என்பவரின் மகன் சஞ்சய் (வயது 13), சேகர் என்பவரின் மகன் செந்தில் (16) ஆகிய 2 பேரும் பி.என்.புதூரில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 9-ஆம் வகுப்பும், பிளஸ் 1-ம் படித்து வந் தனர். முருகன் என்ப வரின் மகன் விவேக் (19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். மதியம் 2 மணியளவில் இவர்கள் 3 பேரும் விளை யாடுவதற்காக வசிஷ்ட நதிக்கு சென்றனர்.

கடந்த சில நாட் களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வசிஷ்ட நதியில் நீர்வரத்து ஏற் பட்டு ஆங்காங்கே தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதைப் பார்த்த 3 பேருக்கும் அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினார் கள். சிறிது நேரத்தில் 3 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீச்சல் தெரி யாததால் அவர்கள் தண் ணீரில் மூழ்கினார்கள்.

தண்ணீரில் தத்தளித்த படி உயிருக்கு போராடி னார்கள். இதைப்பார்த்த செந்திலின் தந்தை சேகர் தண்ணீரில் இறங்கி அவர் களை காப்பாற்ற முயன் றார். ஆனால், அவரால் முடியவில்லை. மாறாக அவரும் ஆழமான பகு திக்கு சென்றதால் தண் ணீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரி ழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு உடல் பரிசோத னைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82065.html#ixzz34ZVYzpXA

தமிழ் ஓவியா said...


பெண்களை அர்ச்சகராக்க அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் பந்தர்பூர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம்



பூனா.ஜுன்.13-_ 900 ஆண்டு கால பழமை வாய்ந்த பந்தர்பூர் வித்தல் ருக்மணி கோயிலில் அர்ச் சகர் பணியில் பார்ப் பனர்களே இருந்துவந்துள் ளனர். அந்தக் கோயி லுக்கான வித்தல்-ருக்மணி கோயில் அறக்கட்டளை நிர்வாகம் பார்ப்பனர்கள் அல்லாத மற்றவர்களையும், குறிப்பாக பெண்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்தது. அதன்படியே விளம் பரங்கள் அளிக்கப்பட்டன. அர்ச்சகர்கள் பணிவாய்ப்பு கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 16பெண்கள் உட்பட 129பேர் நேர் காணலுக்கு அழைக்கப் பட்டனர். உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பு கடந்த சனவரியில் வழங்கப்பட்டு அதன்படியே இரு (பார்ப்பனக்) குடும்பத்தவர் களின் ஆதிக்கத்திலிருந்து அர்ச்சகர்பணி விடுவிக்கப் பட்டு அறக்கட்டளை நிர்வாகம் நேர்காணலை நடத்தி உள்ளது குறிப் பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் பக்தர்கள் திரளும் அந்தக் கோயிலுக்கு வர்காரி பிரி வைச் சேர்ந்த பக்தர் களேஅதிக அளவில் பக்தர்களாக உள்ளனர்.

இதனிடையே அறக் கட்டளை நிர்வாகத்தை எதிர்த்து வர்காரி அமைப் பினர் போராட்டம் நடத்தி உள்ளனர். வர்காரி சாகித்ய பரிஷத் என்கிற அமைப்பின் சார்பில் விட்டல் பாடீல் என்பவர் கூறும்போது: பார்ப்பனர் அல்லாதவர்களையும், பெண்களையும் அர்ச்சக ராக நியமிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே போல் நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. எல்லோ ரையும் சமமாக மதிக் கிறோம். பழமையான விஷ யங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது வர்காரி பிரிவினரையும் கலந்தா லோசிக்க வேண்டும். கோயிலின் அறக்கட்டளை நிர்வாகத்தில் வர்காரி பிரி வினருக்கு இடமளிக்கும வகையில் அறக்கட்டளை நிர்வாகம் மாற்றி அமைக் கப்பட வேண்டும் என்று கோருகிறோம் என்று கூறினார்.

அறக்கட்டளைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமாகிய அன்னா டாங்கே (இவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாகிய தன்கர் வகுப்பைச் சேர்ந்தவர்) கூறும்போது, வேகமான முன்னேற்றத்துக்கிடையே விரும்பத்தகாத நிலையில் அரசின் இடையூறு உள் ளது. அரசே மீண்டும் நிர் வாகத்தின் நடவடிக்கைக்கு மீண்டும் உறுதியை அளிக் கும் என்று எதிர்பார்க் கிறோம் என்று டாங்கே கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82061.html#ixzz34ZVhwyyD

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது.
(விடுதலை,5.4.1961)

Read more: http://viduthalai.in/page-2/82067.html#ixzz34ZW3Glge

தமிழ் ஓவியா said...


கருநாடகத்தில் ஒரு சேரன்மாதேவி!



உடுப்பி கிருஷ்ண மடத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி சாப்பிடும் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு சாப்பிடும் இடமும் இடம் பெறுகின்றன. இதற்குப் பங்கி பேதா என்று பெயராம்!

இந்தப் பிறவி வருணாசிரமக் கொடுமையை எதிர்த்து மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி போராட்டங்களை நடத்தியுள்ளதானது - பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

இதுகுறித்து அக்கட்சியின் கருநாடக மாநில செயலாளர் ஜி.வி. ராம (ரெட்டி) கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யவும் வேண்டும் - மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர் கள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பிராமணரல்லாத வர்கள் படுத்தும் புரளும் மடஸ்நானா என்னும் இழிவான நடைமுறைக்கு கருநாடக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.

பார்ப்பனர்களாவது, சூத்திரர்களாவது - எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? அதெல்லாம் முடிந்து பல காலம் ஆகி விட்டது என்று பேசும் மேதாவிகள் நாட்டில் உண்டு.

அத்தகையவர்கள் இந்த யதார்த்த நடப்புகளை கவனிக்க வேண்டும்; கவலைப்படுவதோடு நின்று விடக்கூடாது; அவற்றின்மீது ஆழமான சிந்தனையைச் செலுத்த வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த போதே 1924இல் சேரன் மாதேவியில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத மாணவர்களையும் தனித் தனியாக அமர வைத்து உணவுப் பரிமாறப்பட்டதை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கினார்.

டாக்டர் பி. வரதராஜலு நாயுடு திருவிக போன்றவர்கள் தந்தை பெரியார் தலைமையில் அந்த வேறுபாட்டை ஒதுக்கவில்லையா? கடைசியில் அந்தக் குருகுலமே இழுத்து மூடப்பட்டதே.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மன்னர் கல்லூரியில்கூட பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று மாணவர்கள் மத்தியில் வேறுபாடு காட்டப் பட்டதை ஒழித்தது நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்த - அன்றைய மாவட்டக் கழகத் தலைவர் (District Board president)சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அல்லவா!

வைக்கம் கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை கடை வீதிகளில் இலை ஒன்று அரையணாவுக்கு விற்கப்பட்டதுண்டு.

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் சாப்பிட்டால் வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கிய மாகி விடும் என்றும் சந்தானம் இல்லாதவர்களுக்கு (குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு)ச் சந்தான விருத் தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாதாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, ரூ.500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி, பூசை செய்து அந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாவம் போய் விடும் என்று நம்பும் படியாக செய்கிறதைவிடப் பெரிய மோசடியல்ல (குடிஅரசு 9.8.1925).

என்று தந்தை பெரியார் குடிஅரசில் குறிப்பிட் டிருந்தது உண்மைதான் என்றாலும், இன்று அத்தகைய காட்சிகள் தமிழ்நாட்டில் காண்பது அரிது - அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் இயக்கம் விழிப் புணர்வை ஏற்படுத்தி விட்டது.

கருநாடக மாநிலத்தில் அந்தக் கொடுமைகள் இன்றும் தலை விரித்தாடுகின்றன என்றால் அது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும் அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா பகுத்தறிவு சிந்தனையாளர் சாம்ராட் நகருக்குச் சென்று வந்தால் அந்த முதலமைச்சர் பதவி விலகுவார் என்று நம்பிக்கை உண்டு. அதனை முறியடித்த முதல் அமைச்சர்தான் சித்தாராமையா.

இந்த நிலையில் பங்கி பேதாக்களையும் மடஸ் நானாக்களையும் அவர் கண்டிப்பாக முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம் - முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/82068.html#ixzz34ZWC1LKB

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

பார்ப்பனத்தனம்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். ஆனால் இன்னம்பர் என்ற திருத்தலத்தில் இறைவனே எழுத்தறிவிக்கிறான். திருநாவுக்கரசர், தனது பதிகத்தில் எண்ணும் எழுத்தும் கொல் ஆனாய் போற்றி என்று ஈசனை போற்றுகிறார்.

தமிழ் இலக்கணத்தில் சிறப்புற்று திகழ்ந்தவர் குறுமுனி அகத்தியர். ஆனால் அந்த அகத்தியருக்கே தமிழ் இலக்கணத்தை எடுத் துரைத்தவர் திரு இன்னம் பரில் எழுந்தருளியிருக்கும் ஈசனாம்.

அகத்தியர் கதை இருக் கட்டும்; அந்த அகத்திய ருக்கே தமிழ் இலக்க ணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். இன்னம் பரில் வீற்றிருக்கும் ஈசன் என்பது உண்மையானால் தமிழில் அர்ச்சனை செய் தால் அந்த ஈசன் தீட்டுப் பட்டுப் போய்விடுவான் என்பது அசல் பார்ப்பனத் தனம் தானே?

Read more: http://viduthalai.in/e-paper/82132.html#ixzz34fHFT35x

தமிழ் ஓவியா said...


எடுத்துக்காட்டாகிய புனே மக்கள்


பூனா தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் பூனா தொழில்நுட்பப் பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார். பலியான மொசின்மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சமூகவலைதளமான முகநூலில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது பூனா நகரில் பதற்றத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, முகநூலில் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கினர். இந்நிலையில் பூனாவில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது.

ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லீம் வாலிபர் மொசின் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார். கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் பாதுகாப்பை மிகவும் உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அப்பகுதி மக்கள் மதங்களைக் கடந்து அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உண்மையிலேயே இது ஓர் எடுத்துக்காட்டான முயற்சியாகும். இந்த வகையில் மற்ற மற்ற பகுதிகளுக்கும் பூனா வழிகாட்டுகிறது. மனிதனை இணைக்கத்தான் ஏற்பாடுகள் தேவையே தவிர பிரிப்பதற்கும், பிளப்பதற்கும் அல்ல.

புனே பகுதியில் முஸ்லிம் பெரு மக்கள் மேற்கொண்ட அணுகுமுறை அதற்கு ஒத்துழைத்த அனைத்துக் கட்சிப் பொது மக்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!

தழைக்கட்டும் மனித தர்மம்! தகரட்டும் - மனுதர்மம்

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/82136.html#ixzz34fHgYdFk

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.

- (விடுதலை,20.9.1964)

Read more: http://viduthalai.in/page-2/82133.html#ixzz34fHt5rhj

தமிழ் ஓவியா said...


மணம் பரப்பும் பாலைப்பூக்கள்!

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

அதுவென்னவென்று கேட் கிறீர்களா? (இளம் நண்பர்களுக் காக) 1940-இல் இலண்டன் பெரும் பொறுப்பு - பதவியேற்கச் சென்ற திராவிடர் தளபதி என்று தந்தை பெரியார் அவர்களால் அன் பொழுக அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் ஹனி பால் என்ற விமானத்தில் சென்ற போது அதனையே விழுங்கிய கடல் ஓமான் கடல் என்பதே அந்த மறக்க முடியாத வேதனை!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு பாகவி பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!
வீதியினில் திரிகின்ற
மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!
சாதியின் பிரிவினையை
சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/82139.html#ixzz34fI9hDPx

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு


தமிழ்நாடு பத்திரிகையில் ஆலயப் பிரவேசம் என்ற தலைப்பில் வரும் விஷயங்களுக்கும் திரு. தண்டபாணி பிள்ளையின் பேரால் வரும் சுயமரியாதைச் சரித்திரம் என்னும் விஷயங் களுக்கும், திரு. கீர்த்திவாசய்யர் நாம் குடிஅரசில் ஆலயப் பிரவேசம் என்னும் தலைப்பின் கீழ் எழுதினவைகளில்தான் ரயில் சார்ஜ் வாங்கினதை மாத்திரம் மறுத்திருக்கும் விஷயத்திற்கும், பொதுவாக இப்படி ஒரு கூட்டம் ஏன் இந்த மாதிரி வேலையில் தலைப்பட்டது என்ப தற்கும், திரு. வரதராஜுலு மறுபடியும் தலையெடுப்பதற்கு எந்தவிதமான தந்திரத்தின் மூலம் இக்கூட்டத்தை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றார்.

மற்றும் பலரும் எப்படி ஒன்றானார்கள் என்பதையும் தக்க காரணங்களுடன் ரிக்கார்டுகளுடன் பின்னால் தெரிவிக்கிறோம். ஏனெனில் தொடர்ச்சிகளும் மற்றும் திரைமறைவில் இருக்கும் இரண்டொருவர்களுடைய மறுப்புகளோ, எதிர்ப்புகளோ, கண்டனங்களோ கொண்ட கட்டுரைகளும் முடிவு பெற்று வெளியாகிவிட்டால் பிறகு ஒரே தடவையில் எழுதிவிடலா மென்பதே நமது கருத்தாகும்.

ஆனால் ஒரு விஷயம் இப்போதே எழுதவேண்டியது அவசரமென தோன்றுகின்றது. அதாவது திரு. கீர்த்தி வாசய்யர் ரயில் சார்ஜ்க்குப் பணம் நம்மிடம் வாங்கவில்லை யென்று எழுதி யிருப் பதில் அவர் அந்தப்படி எழுதுவதற்கு நாம் ஆச்சரியப் பட வில்லையானாலும் பொதுஜனங்கள் உண்மையை அறியவேண்டி மறுபடியும் ஒரு தடவை நாம் கீர்த்திவாசய்யருக்கு ரயில் சார்ஜ் கொடுத்தது உண்டு என்று எழுதுகின்றோம்.

அதுவும் நாம் சென்னையில் குடிஅரசு ஆபீசின் முன் கொட்டியிருந்த மணல் மேட்டில் இருக்கும் போது இந்தக் கேசு விசாரணைக்கு மிகச்சமீபத்திய முந்திய நாள் கேசு வாய்தாவைச் சொல்லி ஈரோட்டுக்குப் போக வேண்டுமென்று கேட்டு நாம் 5ரூ. நோட்டாக ஒன்று எடுத்துக் கொடுத்தோம் என்று உறுதியாகச் சொல்லுகின் றோம்.

இந்தத் தடவையும் அவர் மறுப்பாரானால் அதுசமயம் திரு. கீர்த்திவாசய்யருடன்கூட வந்த மற்றொரு அய்யரு டையவும் அவர் கேட்டு வாங்கிக்கொண்டு போகும்போது நம்முடன்கூட இருந்த அய்யர் அல்லாதவர் களுடையவும் பெயர்களையும் வெளிப்படுத்துகின்றோம். அப்பொழுதும் இல்லை யென்று சொல்லுவாரானால் பிறகு பொதுஜனங்கள் எதை வேண்டுமானாலும் நம்ப உரிமையுடையவர் களாவார்கள்.

தவிர, இதுசம்பந்தமாக சில நிருபங்களும் சில கண்டனக் கூட்ட நடவடிக்கைகளும் பிரசுரிக்க சற்று தாமத மேற் படுவதற்கு ஆக நேயர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக திருச்சி, மதுரை நிருபர்களுக்கு இவ் விஷயத்தில் நன்றி செலுத்துகிறோமாயினும் அவர்களின் ஆத்திரத்தின் உணர்ச்சியில் காட்டியிருக்கும் மிதமிஞ்சிய வேகத்தை ஆதரிக்க முடியாததற்கு வருந்துகின்றோம்.

- குடிஅரசு-செய்திவிளக்கக் குறிப்பு -16.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82156.html#ixzz34fJma4BF

தமிழ் ஓவியா said...


தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்


தஞ்சை ஜில்லாபோர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறக்கூடும் என்று தெரிய வருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுயமரியாதை இயக்க சங்கத்தின் உபதலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றே எதிர்பார்க் கின்றோம்.

ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது. திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந்தாலும் இருக்கலாம். ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக் கின்றோம்.

ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொது மக்களைப் பொறுத்த வரையிலும் குறிப்பாக பார்ப்பனரல் லாதார் நன்மை யைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத் தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லாபோர்டுக்கு இதுசமயம் மறு படியும் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட வேண்டியது அவசியமான தென்பதே நமது அபிப்பிராய மாகும்.

அன்றியும், இந்த அபிப்பிராயத்தையே தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுகொண்ட சில செல்வந்தர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கொண்டுள்ளார்கள்.

தவிர, பார்ப்பனரல்லாத சமுகப் பிரமுகர்களில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பொறுப்பும் நாணயமும் அற்ற சிலர் தங்கள் சுயநலம் காரணமாக ஒருவரை ஒருவர் கெடுக்க எண்ணியதும் அதனால் ஒருவருக்கொருவர் தற்காப்பிற்குப் பத்திரங்கள் தேடிக்கொள்ள ஏற்பட்டதுமான காரியங்களால் இனி தென்னாட்டில் நடந்தேறும் ஒவ்வொரு தேர்தல்களிலும் நியமனங் களிலும் இவ்விதமான எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் எதிர்பார்த்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதைக் குறித்து நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை.

அன்றியும் இந்நிலைமை காரணமாக பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் வளர்க்க ஒருவருக் கொருவர் போட்டி போடுவதைப் பார்த்து நாம் வெட்கப்படாம லிருக்கவும் முடியவில்லை.

நெல்லூர் மகாநாடானது எப்படியோ நமக்கு இந்நிலை மையை அளித்து விட்டது. நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாத சமுகத்திற்குள் ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களிட மிருந்தாவது, அதற்குள் ஏற்பட்ட உள்கட்சியாகிய ஒழுங்கு முறைக்கு உட்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் என்பவரிடமிருந்தாவது,

மந்திரி கட்சியாரிடமிருந்தாவது மற்றும் இவைகளின் சார்புக் கட்சியாரிட மிருந்தாவது அவரவர்கள் கட்சிக் கொள்கைகள் முழுமையுமோ, அல்லது, அதிலுள்ளவர்களின் நடத் தைகள் முழுவதையுமோ அடி யோடு ஒப்புக்கொண்டு நாம் அதில் கலந்திருக்கவில்லை என்பதையும் அல்லது வேறு எந்த விதமான சுயநல லட்சியத்தைக் கொண்டோ அல்லது யாருக்காவது பயந்தோ நாம் அவற்றை ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆனால், நமது சுயமரியாதைக் கொள்கைகளுக்கு மற்ற கட்சியார் மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவைகளை விட இவைகள் எத்தனையோ மடங்கு மேலானது என்பதாகவும், வசதியுள்ளது என்பதாகவும் கருதி நமது இயக்கத்தின் நன்மையை உத்தேசித்தே நாம் அவற்றில் களங்கமறக் கலந்திருந்ததுடன் கூடுமானவரை ஒத்துழைத்தும் வந்தோம்.

எனவே, இந்த முறையில்தான் தஞ்சை ஜில்லாபோர்டு தலைமைப் பதவியானது திரு பன்னீர் செல்வம் கையை விட்டுப் போக நேருமானால் கண்டிப்பாய் அது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே அல்லாமல் மற்றப்படி அதற்கு இடையில் வேறு இடமில்லை என்று கருதுவதுடன் திரு. பன்னீர் செல்வம் தோல்வியானது பார்ப்பனரல்லாத மக்கள் தோல்வியாகுமென்றும் கருது கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 19.01.1930

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fJvgDxl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக் கின்றது. ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள்.

ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம் தான். அத்தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண் டிருக்கிறான்.

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fK4WdgS

தமிழ் ஓவியா said...


கணமேனும் வீண் காலம் கழிக்கலாமா...?


முப்பது மணி நேரம்
முழு நாளுக்கும் மேலே
முதியோர் மகளிர் குழந்தைகள்
கண் விழித்து கதியற்றுக்
காத்துக் கிடந்தனர்
கல் முதலாளியைக் காண
வெட்டவெளி கொட்டும் பனி
மொட்டைத் தலை முழுப்பட்டினி
இலவச தரிசனமாம் அதனால்
இடித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும்
ப(க்)தர்கள் கூட்டம் அந்தோ பரிதாபம்!
விலகி நில்லுங்கோ
வி.அய்.பி. வர்றார் என
பூணூல் பேர்வழி வழி மறைக்க,
பணம் தள்ளியவர்களுக்கு
பாதை கிடைக்க
திருப்பதியானைச் சேவித்து
திரும்பும் திருவாளர்களின்
கடைக்கண் பார்வைகூட படவில்லை
கால் கடுக்க காத்திருப்போர்மீது
பஞ்சாயத்து முதல்
பாராளுமன்றம் வரை நடைபெறும்
தேர்தல்களில் வாக்களிக்க வருவோர்
வரிசையில் நிற்பர்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை
கையூட்டல் இல்லாமலே
கைவிரலில் மை இடலாம்
வி.அய்.பி., வி.வி.அய்.பி. என்பதெல்லாம்
இங்கே இல்லை
இதுவே நடைமுறை
வாக்களிக்கும் கடமையை விடவா போக்கத்த மூடபக்தி முக்கியம்?

- சிவகாசிமணியம்

Read more: http://viduthalai.in/page2/82175.html#ixzz34fL604oc

தமிழ் ஓவியா said...


புகைந்து போவீர்கள்


புகையிலையினால் அரசிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.32,500 கோடி. பெரிய வருமானம் தான். அதற்கு அரசு அளிக்கும் விலை ஆண்டிற்கு 9 லட்சம் மக்களின் உயிர்.

மத்திய அரசு, புகையிலை சீர் கேடுகளை சரி செய்வதற்காக (மனித னுக்கு ஏற்படும் சீர்கேடுகள் மற்றும், நாட்டின் சுகாதார சீர்கேடுகளை சீர்படுத்த) செலவிடும் தொகை ரூ.37,500 கோடி. அதாவது ரூ.5,000 கோடி புகையிலை வருமானத்தைவிட ஏற்படும் அதிக செலவு. தவிர இந்த உயிர்க்கொல்லி புகையிலையை பயிரிடுவதற்காக அரசால் அழிக்கப்படும் உயர் பெருங்காடுகளின் பரப்பளவு, இரண்டு லட்சம் ஹெக்டேர்.

புகையிலையில் 3,000 வகை நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன. பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகைக்கும் புகையிலையில் 4,000 நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன.

இந்த நச்சுப் பொருட்களில் புற்றுநோயைக் கட்டாயம் ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் மட்டும் 200 வகை. நச்சுப் பொருட்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஹெக்சாமின் - தீப்பெட்டியின் உரசும் பகுதி
எத்தனால் - ஆல்கஹால் வினைல் குளோரைடு - ப்ளாஸ்டிக் பை தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்.
நைட்ரோ பென்சின் - பெட்ரோலில் உள்ள நச்சுப் பொருள்
மீத்தேன் - பெட்ரோலியம் வாயு
காட்சியம் - கார் பேட்டரியில் பயன்படுத்தும் திரவம்
அசட்டோன் - நகப்பூச்சு சுத்தப்படுத்தும் திரவம்
நாப்தலின் - பூச்சிக்கொல்லி மருந்து
ஸ்டிரிக் அமிலம் - மெழுகு தயாரிக்கப்படும் அமிலம்
டிடிடி - டியோட்ரான் பூச்சிக்கொல்லி மருந்து
கார்பன் மோனாக்ஸைடு - வாகனத்திலிருந்து வெளிவரும் நச்சுப் புகை
ஆர்காலிக் ஹைட்ரஜன் - சைனைடு நச்சுப் பொருள்
நிக்கோடின் - அடிமைப்படுத்தும்பொருள்
அமோனியா - கழிவறையை சுத்தப்படுத்தும் ஆசிட்
பினாயில் - பூச்சிக்கொல்லி

Read more: http://viduthalai.in/page4/82181.html#ixzz34fLaMuug

தமிழ் ஓவியா said...


வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் எஸ்சி/எஸ்டி சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்கள் எனப்படும் பட்டிய லினத்தவருக்கு எதிரான கொடுமை களைத் தடுப்பதற்காகவும், அச் சமூகத்தினருக்கு எதிரான கொடு மைகள், வன்முறைகள், துன்புறுத் தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடி யுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியின மக்களுக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 1989இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995இல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட் டத்தைக் காவல்துறையினர் தங் களுக்கு எதிரானதாகவே நினைத் தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page4/82179.html#ixzz34fLoArhU

தமிழ் ஓவியா said...


பொய்ம்மையும் வாய்மை இடத்து


ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். இந்தியர்களுக்குப் பெரியம்மை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது (1804). ஆனால், அன்றைய மக்கள் அதனை ஏற்கவில்லை. அவர்களைச் சரிக்கட்ட எல்லீசு துரை ஒரு புனித மோசடி செய்தார். அம்மை குத்திக் கொள்வதன் அவசியம் பற்றி வடமொழியில் அவர் தானே ஒரு கவிதை இயற்றி, அதனை ஒரு பழைய தாளில் எழுதிப் பழம் பாடல் என நம்ப வைத்தார். அம்மருந்து புனிதப் பசுவிலிருந்து பெறப்பட்டது என அப்பாடலில் குறிப்பிட்டார். எனவே, மக்கள் அம்மருந்தை ஏற்றனர்.

பி.கு. எல்லீசு துரை திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அதனால் பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்த்த, நன்னை பயக்கும் மெனின் என்ற திருக்குறள் அவர் நினைவுக்கு வந்திருக்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/82184.html#ixzz34fNMgnUC

தமிழ் ஓவியா said...


சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) என்று கூறி குழந்தைகளிடையே மூடத்தனத்தை வளர்ப்பதா?


செல்டென்ஹாம் அறிவியல் திருவிழாவில் நாத்திகத் தலைவரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பங்கேற்றார். அவர் பேசும்போது, இயற்கையை மீறிய சக்தியால் (கடவுளால்) உலகம் இயக்கப்பட்டுவருவதாக கூறுவதன்மூலம் குழந்தைகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதுபோலவே சாந்தாகிளாஸ் (கிறிஸ் துமஸ் தாத்தா) என்கிற கதையால், இல் லாத ஒன்றை இருப்பதாக குழந்தைகளை நம்பவைக்கலாமா? என்று டாக்கின்ஸ் கேட்டார். மதக்கருத்துக்களை குழந்தை களிடம் திணிப்பதுகூட குழந்தைகள் மீதான வன்முறையாகும் என்றார். தற்காலத்தில் நிகழ்ந்துவரும் குழந்தை கள்மீதான அளவுகடந்த பாலியல் வன்முறைகள்குறித்த குற்றச்சாட்டுகள் பரவிவருவதற்கு காரணமாகவும் உள்ளன.

விளையாட்டாக புனையப்படும் கதைகள், கிறிஸ்துமஸை நம்புகின்ற பெற்றோர் களால் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மாறுபட்ட கருத்து களைக் கொண்டுள்ளவரும், உயிரியல் வல்லுநராகிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் அறிவியல் விழாவில் பங்கேற்ற பார்வை யாளர்களைநோக்கி, குழந்தைகளிடம் மூடத்தனமான நம்பிக்கைகளை உண்டாக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இயற்கையை மீறிய சக்தி (கடவுள்) யால்தான் உலகம் இயக்கப் பட்டு வருகிறது என்று குழந்தைகளிடம் கூறுவதன்மூலம் அவர்களுக்கு கடும்தீங்கிழைக்கிறார்கள் என்று தீப்பிழம்பாகி எச்சரிக்கிறார். விளையாட் டான, பழங்கதைகளை மதத்தின்பேரால் குழந்தைகளிடம் கூறி அவர்களை நம்பவைப்பது என்பது நாம் நினைப் பதைக் காட்டிலும் அவர்களுக்கே அதிகத் தீங்கு நேர்ந்துவிடும். இல்லாத கிறிஸ் துமஸ் தாத்தா இருப்பதாகக் கூறி, நம்பவைக்கலாமா? என்றும் கேட்கிறார். விண்வெளி வண்ணமயமானது என்று யார் அறிவார்கள்? 10 ஆண்டு களில் 10ஆயிரம் அதிசயித்தக்க படங் களை தொலைநோக்கிமூலம் பெற்று பார்க்கிறோம்.


தமிழ் ஓவியா said...

குழந்தைகள் முகநூலைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர்கள் 13 வயதுக்குமேல் சமூக வலைதளங்களைப் பார்க்கட்டும் என்று திட்டமிடுகிறார்கள். இது சரியே. குழந்தைகளின் புதுமையான விருப்பங்களைப் புரிந்து இணைந்து இருப்பதுபோல், குழந்தைகளிடம் (கடவுள் நம்பிக்கையில்/நம்பிக்கையின் மையில்) உண்மை அறியும் அறிவை, சிந்தனையை அவர்கள் விருப்பத்துக்கு வளரவிடுகிறோமா? என்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் பார்வையாளர்களிடம் கேள்வியை எழுப்பினார். தன்னுடைய அனுபவமாகக் கூறும்போது, ஆப்பிரிக் காவில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தன்னுடைய எட்டு வயதில் கதைகளில் வரும் மாயாஜாலங்களை நம்பி, அதுபோன்ற அதிசயங்களைக் காண முயன்று தேடி யதாகவும் கூறினார்.

நாம் நினைப்பது போலன்றி கதைகளாகக் குழந்தைகளிடம் கூறப்படுவது, அவர்களிடம் கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். கிறிஸ் துவின் தந்தை, கிறிஸ்துமஸ் என்று எல் லாவற்றையும் குழந்தைகள் நம்புவதற்கு விடலாமா? கடவுள் என்கிற கருத்தை சிறிதுசிறிதாக குழந்தைகளிடம் திணிப்பது குழந்தைகளுக்கு தீங்கிழைப்பது ஆகாதா?

விவிலியத்தில் குழந்தைகளின் அறிவை வலிமையாகவே கெடுக்கும்படியாகத்தான் உள்ளது. எதையாவது குழந்தைகளிடம் சொல்லி அதைப் பின்பற்றாவிட்டால், நரகத்தில் வறுக்கப்படுவார்கள் என்பதும் கூட ஒரு வழியில் குழந்தைகளைக் கெடுப்பதுதான். மதத்தைத் திணிப்பது என்பது குழந்தைகளிடம் அதிக அளவில் கெடுதலை விளைவிக்கக் கூடியதாகும். எந்தவிதத்திலும் கேள்வி கேட்கக்கூடாது என்று மதத்தைத் திணிப்பதைவிட மோசமான செயல் வேறில்லை.

சிந்திப் பதற்கு இடமின்றி மதத்தை புகுத்துவது என்பது மூளைக்கு வேலை கொடுக்காமல் அப்படியே ஏற்க வலியுறுத்துவதாகும். கடவுள்தான் படைப்பதாக சொல்லுவது பகுத்தறிவுக்கு முரணானது. சமுதாயத் துக்கு கேடானதுமாகும் என்று டாக் கின்ஸ் கூறுகிறார். கத்தாரிலிருந்து ஒளி பரப்பாகிவரும் அல்-ஜசீரா தொலைக் காட்சியில் ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஒரு பெண் தன்னுடைய நண்பன் இறந்தபின் நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவான் என்று தன்னிடம் பாதிரியார் ஒருவர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறியதால் அதிர்ச்சிக்குள்ளானார் என்றார். மேலும் அவர், பாலியல் வன்முறை என்பது கொடுமையானது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. கத்தோலிக் கனாக(மதவாதியாக) ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது உளவியல்ரீதியாக காலம்முழுவதும் மதத்துக்கு அடிமை யாக்குதுவது என்பது அதைவிட கொடுமையானதாகும் என்று கூறினார். அவரே 1976இல் எழுதிய நூலில் பல்வேறு நம்பிக்கைகள் வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் கடவுள் ஒரு பொய்க்கதை நூலை எழுதியுள்ளார். பள்ளிப்பருவத்தில் வெற்றுக் கூச்சலிடு பவர்களையும், எதையும் கவனத்தில் கொள்ளாத பொறுப்பற்றவர்களையும், காயங்கள் ஏற்படும்படியாக தாக்கிக் கொள்பவர்களையும் கண்டுள்ளதாக கூறுகிறார். மதவாதிகள் என்பவர்கள் அனுபவத்தில் மிக மோசமானவர் களாகவே இருந்துள்ளார்கள் என்றும் டாக்கின்ஸ் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது,மதத்தால்எந்தவிதத்திலும் நன்மை கிடையாது என்று பள்ளிப் பருவத்தில் கூறியபோது, பிரம்படி வாங்கினேன். பெரிதாக இல்லை என் றாலும், நாகரிகக் குறைவு உள்ள மக்க ளாக வாழ்ந்து கொண்டு புண்படுத்திய மோசமான நிலையை அனுபவத்தில் கண்டுள்ளேன் என்றார்.

_- -டெய்லி மெயில், இலண்டன், 4-_6_-2014

Read more: http://viduthalai.in/page8/82188.html#ixzz34fPHTAMO