Search This Blog

14.6.14

ஜெர்மனியில் பெரியார் கொள்கை முழக்கம்


தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கை உலகமயமாக்கல்
ஜெர்மனியில் பெரியார் கொள்கை முழக்கம்

தமிழர் தலைவர் ஆசிரியர் தம் சுற்றுப் பயணம் பற்றிய  அறிக்கை


காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளைக் கூறிய நிலையிலும்  எதையும் செயல்படுத்தாததுதான் கருநாடக அரசு
வெளிநாட்டுப் பல்கலைக் கழகத் துறைகளில் பெரியார் பாடங்களைத் தேடுகின்றன நிலை ஏற்பட்டிருப்பதாகவும், ஜெர்மனியில் பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பெரியார் தத்துவங்களை எடுத்துரைத்து வந்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரும் திராவிடர் கழகத் தலைவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ஜெர்மனியின் மிகப் பழைமை வாய்ந்த பல்கலைக் கழகம் கொலோன் பல்கலைக் கழகம். இது 14ஆம் நூற்றாண்டு (1340 ஆண்டு) துவக்கப்பட்ட ஒன்று; இடையில் பிரெஞ்சுப் படையெடுப்பினால் இது நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் துவங்கி நடைபெறும் வரலாற்றைக் கொண்ட பல்கலைக் கழகம். இதனுடன் நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் - போட்டுள்ளது.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


இதன் தென் கிழக்காசிய, தென் ஆசிய நாடுகளின் பாடங்கள் தமிழ், மற்றொரு மொழியாராய்ச்சித் துறையின் தலைவராக உள்ள பேராசிரியர் திருமதி யுல்ரிக் நிக்லஸ் அவர்களது அழைப்பினை ஏற்று (வேந்தர் என்ற முறையிலும் திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற முறை யிலும்) ஜெர்மனி நாட்டின் மூத்த பல்கலைக் கழகமான கொலோன் பல்கலைக் கழக விருந்தினராகச் சென்றேன்; என்னுடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களும், அவர்தம் அழைப்பினை ஏற்று உடன் வந்திருந்தார்.


ஜூன் 2 பிராங்க்ஃபர்ட் (Frankfurt) அடைந்தபோது, விமான நிலையத்திற்கே வந்து பேராசிரியர் யுல்ரிக் நிக்லஸ் அவர்களும் அவரது துறையில் பணியாற்றும் திரு. சுவன் அவர்களும் வந்து வரவேற்று, எங்களை ரயில் மூலம் கொலோன் நகரத்திற்கு அழைத்துச் சென்று, ஹோட்டல் ஈபீஸில் (Hotel Ibis) தங்க வைத்தனர். அத்துறையின் தலை வரான பேராசிரியர் நிக்லஸ் அம்மையார் அவர்களும் அத்துறையில் பணியாற்றும் தமிழ் கற்கும் ஆர்வலர்களான சுவன் அவர்களது டாக்டர் கிளாடியா அம்மையாரும் எங்களை கவனித்துக் கொள்ள வசதியாகவும், எங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் மூன்று அறைகளை எடுத்து, அதே ஓட்டலில் எங்களுடன் தங்கி மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் உபசரித்தனர்!


3ஆம் தேதியில் டிராம் மூலம் (அங்கு நகரங்களில் மிக வசதியான போக்குவரத்து சாதனம் டிராம்) கொலோன் பல்கலைக் கழக வளாகத்திற்கு - பரந்து விரிந்த பகுதி - அதன் பெயர் அதிகார (Albertus Magnus Platz) ஆல் பர்ட்டஸ் மேக்னஸ் என்பவர் ஜெர்மன் தத்துவஞானி.


அங்கு பல துறைகளைச் சுற்றிக் காண்பித்தனர். அவரது துறைக்கும் நடந்தே சென்று பார்த்து, பல்கலைக் கழகத்தின் டீன் பேராசிரியர் டாக்டர் ஸ்டீபென் குரோகி  அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அவரை பகல் ஒரு மணிக்குச் சந்தித்து நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பற்றியும் சுருக்கமாக விளக்க, அவரிடம் நமது ஆங்கில நூல்களை பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி, அவரும் அன்புடன் வரவேற்று, இரு பல்கலைக் கழகங்களும் விரிவான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை   விளக் கினார். நன்றி தெரிவித்து விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.


மதிய உணவு, சிறிய ஓய்வுக்குப் பின், மாலை  5 மணி அளவில் கிளம்பி, ஜெர்மனி இந்திய நட்புறவு வாரத்தை யொட்டி, கொலோன் பல்கலைக் கழகத்துறையும் இணைந்து பிரபல கொலோன் அருங்காட்சியகம் (மியூசியத்தை)  ஒட்டிய பெரிய மண்டபத்தில், திராவிடர் இயக்கமும் - தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை களும் என்ற தலைப்பில் ஜெர்மனியின் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துக் கூடிய ஒரு சிறப்புக் கூட்டத்தில் எனது முதல் சொற்பொழிவு (3.6.2014) நடைபெற்றது. (நிகழ்வுகள் எல்லாம் ஜெர்மனியிலும், ஆங்கிலத்திலும்) மாலை 7.30 மணிக்குத் துவங்கி 9.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது).

முதலில் ஜெர்மன் இந்திய நட்புறவு கழகச் செயலாளர் ருத்இ.ஹீப் அம்மையார் வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்து, பேராசிரியர் நிக்லஸ் அம்மையார் வந்துள்ள விருந் தினர் - பேச்சாளர்களைப்பற்றி அறிமுக உரை யாற்றினார்.


பெரியார் புரா திட்டம்

அடுத்து, பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகம் பற்றியும் குறிப்பாக பெரியார் புரா திட்டம் மற்றும் ஆய்வுத்  துறைகளைப் பற்றியும் Power Point மூலம் சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றினேன். அதன்பிறகு  Power Point மூலம் மேற்காட்டிய தலைப்பில் தந்தை பெரியார் பற்றிய வரலாறு, தொண்டு, கொள்கை லட்சியங்கள், சிந்தனைகள், மனிதநேயம் தொண்டு, பெரியார் பட்டம் பெண்கள் மாநாட்டில் வழங் கியது; சுயமரியாதை தத்துவம், அறிவியல் தத்துவம் இவைகளைப்பற்றி Power Point  முடிந்து, அதன் மேல் தனி விளக்கங்கள் மூலம் சுமார் 45 நிமிடங்கள் உரை யாற்றினேன்.
பிறகு கேள்விகளைக் கேட்டவர்க்கு விடையளித்தேன். அது 30 நிமிடங்களுக்கு மேலாக மிக அருமையாக உண்மையாகவே  உரையில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்தது. அனைவரும் வரவேற்று தங்களது மகிழ்ச்சியை முடிவில் எங்களுக்குத் தெரிவித்தனர். கூட்ட முடிவில் அந்த செயலாளர் ருத்இ.ஹீப் அம்மையார் (ஜெர்மனியர்) இவ்வளவு செய்தி கள் இந்திய சமூகம்பற்றி எங்களுக்கு இதுவரை தெரியாது. மிகவும் அரிய தகவல்களை நாங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சொற்பொழிவு அமைந்திருந்தது என்று தெரிவித்தனர். (புத்தகங்களையும் வாங்கிச் சென்றனர்).

சுயமரியாதை திருமணம்

அடுத்த நாள் 4ஆம் தேதி ஜூன் காலை 11 மணியளவில் கொலோன் பல்கலைக் கழக துறையின் கட்டடத்திற்குள் இலங்கை முல்லைத் தீவினைச் சேர்ந்த ராகுலன் சிவநாயகம் அவர்களுக்கும், முல்லைத் தீவைச் சேர்ந்த ஒலிவியா அவர்களுக்கும் சுயமரியாதைத் திருமணம் - தாலி, வேறு எந்த சடங்கும், சம்பிரதாயம் இன்றி மாலை மாற்றுவதுடன் நடந்தது! முதலில் பேராசிரியர் யுல்ரிக் நிக்லஸ் அம்மையார் அனைவரையும் வரவேற்றார். ஜெர்மானிய மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்  ஈழத் தமிழர்களான இருபாலர், பெற்றோர் என சுமார் 40 பேர்  வந்திருந்தனர். மணமகள் ஒலிவியா, இத்துறையின் மாணவி. மணமகன் ராகுலன் (இளையர் இயக்கத்தில் தொண்டாற்றியவர்; ஒளிப்பட நிபுணர்).

சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும் விளக்கி தந்தை பெரியார் எப்படித் துவக்கி, இது இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பதை சுமார் 35 நிமிடங்கள் தமிழிலும் சுருக்கி 50 நிமிடங்கள் ஆங்கிலத்திலும் உரை யாற்றி, மணமக்கள் உறுதி மொழி கூறி நடத்தி வைத்தேன். மணமக்களது பெற்றோர்களும், உறவினர்களும் வந்திருந் தனர். எல்லோருக்கும் மகிழ்ச்சி. இந்த சுயமரியாதை முறைத் திருமணத்தை முதல் முறையாக பார்த்து, கேட்ட தாய் மார்கள் உட்பட பலரும் பாராட்டினர் - இரண்டு பார்ப்பன நண்பர்களும் வந்து என்னிடம் பாராட்டிப் பேசி விட்டுச் சென்றனர். அன்று (4.6.2014) மாலை 4 மணியளவில் மீண்டும் அதே துறைக்கான வகுப்பறையில் சுமார் 30 பேருக்கு மேல் (பிற பல்கலைக் கழக ஆய்வாளர்கள், பேராசிரியர் சிலர் உட்பட) கலந்து கொண்டனர்.


இந்தி எதிர்ப்பு இயக்கம் அதன் தாக்கங்கள் பற்றிய சொற்பொழிவு சுமார் 40 நிமிடங்கள் - Power Point Presentation   விளக்கவுரையுடன் நிகழ்த்தினேன் பலரும் கேட்டனர்; குறிப்பெடுத்துக் கொண்டனர். பிறகு 35 நிமிடங்கள் கேள்வி  - பதில்கள் நேரத்தில் பலரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தேன். பிறகு நிகழ்ச்சி 5.45 மணி அளவில் முடிந்தது.


அடுத்த நாள்  (5.6.2014) ஜெர்மனியின் மற்றொரு பெரிய பல்கலைக் கழகமான ஆகென் (‘Rwth Aachen’ University) அழைப்பை ஏற்று நாங்கள் (துணைவேந்தர், பேராசிரியர் நிக்லஸ், ஜெர்மெனி கொலோன் பல்கலை சுவான்,  நான் ஆகிய நால்வரும்) ஆகேன் நகருக்கு ரயில் மூலம் சென்றும் அந்த பல்கலைக் கழக முகப்பில் பேராசிரியர் சார்ட்ஜி பன்னாட்டுத் தொடர்பாளர் ஆண்ட்சன்  ஆகியோர் எங்களை வரவேற்று, அழைத்துச் சென்றனர். இரு நாட்டுக் கொடிகள் பறந்தன.


அப்பல்கலைக் கழகத்தின் மாணவர் - வளர்ச்சி கல்வித் துறை - மற்றவைகள்பற்றி விளக்கி, மதியம் எங்களுக்கு விருந்தளித்து, மகிழ்வித்தனர்.
அப்பல்கலைக் கழக அடையாள வெள்ளி சாவிகளை  தந்தனர். மிகப் பெரிய திட்டமான 2000 கோடி யூரோ திட்டம் மெலட்டன் என்ற இடத்தில் எல்லாத் துறைகளை யும் ஒரே பகுதியில் அமைத்திட திட்டமிட்டு 2003இல் துவங்கி, 2023இல் முடிக்க விருப்பதை விளக்கினர். மாலை 5 மணி அளவில் கொலோன் துறைத் தலைவர்களுடன் விடைபெற்று  கொலோன் நகரத்திற்குத் திரும்பினோம்.


மறுநாள் 6.6.2014 அன்று கொலோன் பல்கலைக் கழக தமிழ்மொழி ஆராய்ச்சித் துறையில் - பேராசிரியர் நிக்லஸ் அவர்கள் முன்னிலையில் - திராவிடர் இயக்கம் இந்தி எதிர்ப்பு - மற்றும் உரையாற்றிய பலவற்றைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நான் தந்தை பெரியார் வாழ்க்கை, லட்சியங்கள், சாதனைகள் பற்றி முதலில் ஒரு சிறு அறிமுக உரை நிகழ்த்திய பின், முழு நேர கேள்வி பதில் அடங்கிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வு துவங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது!
பல்வேறு சந்தேகங்களைக் கேட்டனர், அத்துறை மாண வர்கள் மட்டுமின்றி, வேறு துறைகள், வேறு பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்களும் வந்து கலந்து கொண்டு நல்ல ஆய்வு அரங்கமாக அதனை பயன்படுத்திக் கொண்டனர்.  வெளிநாட்டுப் பல்கலைக் கழகத் துறைகள் பெரியார் பாடங்களைத் தேடுகின்ற நிலை!


நம் தந்தை 1932இல் ஜெர்மனி நாட்டிற்குச் சென்ற அதே ஜூன் திங்களில் அவரது தொண்டனும் வாழ்நாள் மாணவனும் ஆகிய எனக்குக் கிடைத்த வாய்ப்பு அவர்தம் வாழ்வும் வாக்கும் சாதனையும்பற்றி விளக்கி அவர்களில் பலரைச் சிந்திக்க வைத்த வாய்ப்பு, நாம் - நமது இயக்கம் - பெற்ற பெரு வாய்ப்பு - பேறு அல்லவா?


1. வெளிநாட்டுப் பல்கலைக் கழகத் துறைகள் பெரியார் பாடங்களைத் தேடுகின்ற நிலை!


2. அங்கே நடந்த சுயமரியாதைத் திருமணம் (தாலி, சடங்குகள், ஜாதி, மத மறுப்புக் கொள்கை வெற்றிச் சின்னம் அல்லவா?)


3. எந்த ஜெர்மனி ஆரிய வடமொழிக்கு முதலில் பெருமை சேர்த்ததோ, அதே ஜெர்மனியில் இப்போது திராவிடப் பண்பாடு மொழியின் சிறப்பு பெரியார் இயக்கம் பற்றி பரப்புரை செய்யப்பட்டு அமைதிப் புரட்சி.


4. உடனடியாக பெரியார் பன்னாட்டு மய்யம் அமைப்பு அங்கு முகிழ்த்துக் கிளம்பிய நல் விளைவு.

5. பெரியாரியல் பாடங்கள் - பட்டயம், சான்றிதழ் படிப்புகளை ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகம்  ஏற்றுச் செயல்படத் தயார் என்ற ஜெர்மனி பேராசிரியர் அம்மையாரின் விழைவு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது!
இதைவிட நமக்கு  வேறு  என்ன பேறு - மகிழ்ச்சி வேண்டும்!


   -----------------------தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  திராவிடர் கழகம்- 14-6-2014

20 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

பார்ப்பனத்தனம்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். ஆனால் இன்னம்பர் என்ற திருத்தலத்தில் இறைவனே எழுத்தறிவிக்கிறான். திருநாவுக்கரசர், தனது பதிகத்தில் எண்ணும் எழுத்தும் கொல் ஆனாய் போற்றி என்று ஈசனை போற்றுகிறார்.

தமிழ் இலக்கணத்தில் சிறப்புற்று திகழ்ந்தவர் குறுமுனி அகத்தியர். ஆனால் அந்த அகத்தியருக்கே தமிழ் இலக்கணத்தை எடுத் துரைத்தவர் திரு இன்னம் பரில் எழுந்தருளியிருக்கும் ஈசனாம்.

அகத்தியர் கதை இருக் கட்டும்; அந்த அகத்திய ருக்கே தமிழ் இலக்க ணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். இன்னம் பரில் வீற்றிருக்கும் ஈசன் என்பது உண்மையானால் தமிழில் அர்ச்சனை செய் தால் அந்த ஈசன் தீட்டுப் பட்டுப் போய்விடுவான் என்பது அசல் பார்ப்பனத் தனம் தானே?

Read more: http://viduthalai.in/e-paper/82132.html#ixzz34fHFT35x

தமிழ் ஓவியா said...


எடுத்துக்காட்டாகிய புனே மக்கள்


பூனா தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் பூனா தொழில்நுட்பப் பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார். பலியான மொசின்மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சமூகவலைதளமான முகநூலில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது பூனா நகரில் பதற்றத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, முகநூலில் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கினர். இந்நிலையில் பூனாவில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது.

ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லீம் வாலிபர் மொசின் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார். கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் பாதுகாப்பை மிகவும் உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அப்பகுதி மக்கள் மதங்களைக் கடந்து அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உண்மையிலேயே இது ஓர் எடுத்துக்காட்டான முயற்சியாகும். இந்த வகையில் மற்ற மற்ற பகுதிகளுக்கும் பூனா வழிகாட்டுகிறது. மனிதனை இணைக்கத்தான் ஏற்பாடுகள் தேவையே தவிர பிரிப்பதற்கும், பிளப்பதற்கும் அல்ல.

புனே பகுதியில் முஸ்லிம் பெரு மக்கள் மேற்கொண்ட அணுகுமுறை அதற்கு ஒத்துழைத்த அனைத்துக் கட்சிப் பொது மக்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!

தழைக்கட்டும் மனித தர்மம்! தகரட்டும் - மனுதர்மம்

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/82136.html#ixzz34fHgYdFk

தமிழ் ஓவியா said...


மணம் பரப்பும் பாலைப்பூக்கள்!

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

அதுவென்னவென்று கேட் கிறீர்களா? (இளம் நண்பர்களுக் காக) 1940-இல் இலண்டன் பெரும் பொறுப்பு - பதவியேற்கச் சென்ற திராவிடர் தளபதி என்று தந்தை பெரியார் அவர்களால் அன் பொழுக அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் ஹனி பால் என்ற விமானத்தில் சென்ற போது அதனையே விழுங்கிய கடல் ஓமான் கடல் என்பதே அந்த மறக்க முடியாத வேதனை!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு பாகவி பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!
வீதியினில் திரிகின்ற
மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!
சாதியின் பிரிவினையை
சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/82139.html#ixzz34fI9hDPx

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு


தமிழ்நாடு பத்திரிகையில் ஆலயப் பிரவேசம் என்ற தலைப்பில் வரும் விஷயங்களுக்கும் திரு. தண்டபாணி பிள்ளையின் பேரால் வரும் சுயமரியாதைச் சரித்திரம் என்னும் விஷயங் களுக்கும், திரு. கீர்த்திவாசய்யர் நாம் குடிஅரசில் ஆலயப் பிரவேசம் என்னும் தலைப்பின் கீழ் எழுதினவைகளில்தான் ரயில் சார்ஜ் வாங்கினதை மாத்திரம் மறுத்திருக்கும் விஷயத்திற்கும், பொதுவாக இப்படி ஒரு கூட்டம் ஏன் இந்த மாதிரி வேலையில் தலைப்பட்டது என்ப தற்கும், திரு. வரதராஜுலு மறுபடியும் தலையெடுப்பதற்கு எந்தவிதமான தந்திரத்தின் மூலம் இக்கூட்டத்தை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றார்.

மற்றும் பலரும் எப்படி ஒன்றானார்கள் என்பதையும் தக்க காரணங்களுடன் ரிக்கார்டுகளுடன் பின்னால் தெரிவிக்கிறோம். ஏனெனில் தொடர்ச்சிகளும் மற்றும் திரைமறைவில் இருக்கும் இரண்டொருவர்களுடைய மறுப்புகளோ, எதிர்ப்புகளோ, கண்டனங்களோ கொண்ட கட்டுரைகளும் முடிவு பெற்று வெளியாகிவிட்டால் பிறகு ஒரே தடவையில் எழுதிவிடலா மென்பதே நமது கருத்தாகும்.

ஆனால் ஒரு விஷயம் இப்போதே எழுதவேண்டியது அவசரமென தோன்றுகின்றது. அதாவது திரு. கீர்த்தி வாசய்யர் ரயில் சார்ஜ்க்குப் பணம் நம்மிடம் வாங்கவில்லை யென்று எழுதி யிருப் பதில் அவர் அந்தப்படி எழுதுவதற்கு நாம் ஆச்சரியப் பட வில்லையானாலும் பொதுஜனங்கள் உண்மையை அறியவேண்டி மறுபடியும் ஒரு தடவை நாம் கீர்த்திவாசய்யருக்கு ரயில் சார்ஜ் கொடுத்தது உண்டு என்று எழுதுகின்றோம்.

அதுவும் நாம் சென்னையில் குடிஅரசு ஆபீசின் முன் கொட்டியிருந்த மணல் மேட்டில் இருக்கும் போது இந்தக் கேசு விசாரணைக்கு மிகச்சமீபத்திய முந்திய நாள் கேசு வாய்தாவைச் சொல்லி ஈரோட்டுக்குப் போக வேண்டுமென்று கேட்டு நாம் 5ரூ. நோட்டாக ஒன்று எடுத்துக் கொடுத்தோம் என்று உறுதியாகச் சொல்லுகின் றோம்.

இந்தத் தடவையும் அவர் மறுப்பாரானால் அதுசமயம் திரு. கீர்த்திவாசய்யருடன்கூட வந்த மற்றொரு அய்யரு டையவும் அவர் கேட்டு வாங்கிக்கொண்டு போகும்போது நம்முடன்கூட இருந்த அய்யர் அல்லாதவர் களுடையவும் பெயர்களையும் வெளிப்படுத்துகின்றோம். அப்பொழுதும் இல்லை யென்று சொல்லுவாரானால் பிறகு பொதுஜனங்கள் எதை வேண்டுமானாலும் நம்ப உரிமையுடையவர் களாவார்கள்.

தவிர, இதுசம்பந்தமாக சில நிருபங்களும் சில கண்டனக் கூட்ட நடவடிக்கைகளும் பிரசுரிக்க சற்று தாமத மேற் படுவதற்கு ஆக நேயர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக திருச்சி, மதுரை நிருபர்களுக்கு இவ் விஷயத்தில் நன்றி செலுத்துகிறோமாயினும் அவர்களின் ஆத்திரத்தின் உணர்ச்சியில் காட்டியிருக்கும் மிதமிஞ்சிய வேகத்தை ஆதரிக்க முடியாததற்கு வருந்துகின்றோம்.

- குடிஅரசு-செய்திவிளக்கக் குறிப்பு -16.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82156.html#ixzz34fJma4BF

தமிழ் ஓவியா said...


தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்


தஞ்சை ஜில்லாபோர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறக்கூடும் என்று தெரிய வருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுயமரியாதை இயக்க சங்கத்தின் உபதலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றே எதிர்பார்க் கின்றோம்.

ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது. திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந்தாலும் இருக்கலாம். ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக் கின்றோம்.

ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொது மக்களைப் பொறுத்த வரையிலும் குறிப்பாக பார்ப்பனரல் லாதார் நன்மை யைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத் தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லாபோர்டுக்கு இதுசமயம் மறு படியும் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட வேண்டியது அவசியமான தென்பதே நமது அபிப்பிராய மாகும்.

அன்றியும், இந்த அபிப்பிராயத்தையே தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுகொண்ட சில செல்வந்தர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கொண்டுள்ளார்கள்.

தவிர, பார்ப்பனரல்லாத சமுகப் பிரமுகர்களில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பொறுப்பும் நாணயமும் அற்ற சிலர் தங்கள் சுயநலம் காரணமாக ஒருவரை ஒருவர் கெடுக்க எண்ணியதும் அதனால் ஒருவருக்கொருவர் தற்காப்பிற்குப் பத்திரங்கள் தேடிக்கொள்ள ஏற்பட்டதுமான காரியங்களால் இனி தென்னாட்டில் நடந்தேறும் ஒவ்வொரு தேர்தல்களிலும் நியமனங் களிலும் இவ்விதமான எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் எதிர்பார்த்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதைக் குறித்து நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை.

அன்றியும் இந்நிலைமை காரணமாக பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் வளர்க்க ஒருவருக் கொருவர் போட்டி போடுவதைப் பார்த்து நாம் வெட்கப்படாம லிருக்கவும் முடியவில்லை.

நெல்லூர் மகாநாடானது எப்படியோ நமக்கு இந்நிலை மையை அளித்து விட்டது. நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாத சமுகத்திற்குள் ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களிட மிருந்தாவது, அதற்குள் ஏற்பட்ட உள்கட்சியாகிய ஒழுங்கு முறைக்கு உட்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் என்பவரிடமிருந்தாவது,

மந்திரி கட்சியாரிடமிருந்தாவது மற்றும் இவைகளின் சார்புக் கட்சியாரிட மிருந்தாவது அவரவர்கள் கட்சிக் கொள்கைகள் முழுமையுமோ, அல்லது, அதிலுள்ளவர்களின் நடத் தைகள் முழுவதையுமோ அடி யோடு ஒப்புக்கொண்டு நாம் அதில் கலந்திருக்கவில்லை என்பதையும் அல்லது வேறு எந்த விதமான சுயநல லட்சியத்தைக் கொண்டோ அல்லது யாருக்காவது பயந்தோ நாம் அவற்றை ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆனால், நமது சுயமரியாதைக் கொள்கைகளுக்கு மற்ற கட்சியார் மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவைகளை விட இவைகள் எத்தனையோ மடங்கு மேலானது என்பதாகவும், வசதியுள்ளது என்பதாகவும் கருதி நமது இயக்கத்தின் நன்மையை உத்தேசித்தே நாம் அவற்றில் களங்கமறக் கலந்திருந்ததுடன் கூடுமானவரை ஒத்துழைத்தும் வந்தோம்.

எனவே, இந்த முறையில்தான் தஞ்சை ஜில்லாபோர்டு தலைமைப் பதவியானது திரு பன்னீர் செல்வம் கையை விட்டுப் போக நேருமானால் கண்டிப்பாய் அது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே அல்லாமல் மற்றப்படி அதற்கு இடையில் வேறு இடமில்லை என்று கருதுவதுடன் திரு. பன்னீர் செல்வம் தோல்வியானது பார்ப்பனரல்லாத மக்கள் தோல்வியாகுமென்றும் கருது கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 19.01.1930

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fJvgDxl

தமிழ் ஓவியா said...


கணமேனும் வீண் காலம் கழிக்கலாமா...?


முப்பது மணி நேரம்
முழு நாளுக்கும் மேலே
முதியோர் மகளிர் குழந்தைகள்
கண் விழித்து கதியற்றுக்
காத்துக் கிடந்தனர்
கல் முதலாளியைக் காண
வெட்டவெளி கொட்டும் பனி
மொட்டைத் தலை முழுப்பட்டினி
இலவச தரிசனமாம் அதனால்
இடித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும்
ப(க்)தர்கள் கூட்டம் அந்தோ பரிதாபம்!
விலகி நில்லுங்கோ
வி.அய்.பி. வர்றார் என
பூணூல் பேர்வழி வழி மறைக்க,
பணம் தள்ளியவர்களுக்கு
பாதை கிடைக்க
திருப்பதியானைச் சேவித்து
திரும்பும் திருவாளர்களின்
கடைக்கண் பார்வைகூட படவில்லை
கால் கடுக்க காத்திருப்போர்மீது
பஞ்சாயத்து முதல்
பாராளுமன்றம் வரை நடைபெறும்
தேர்தல்களில் வாக்களிக்க வருவோர்
வரிசையில் நிற்பர்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை
கையூட்டல் இல்லாமலே
கைவிரலில் மை இடலாம்
வி.அய்.பி., வி.வி.அய்.பி. என்பதெல்லாம்
இங்கே இல்லை
இதுவே நடைமுறை
வாக்களிக்கும் கடமையை விடவா போக்கத்த மூடபக்தி முக்கியம்?

- சிவகாசிமணியம்

Read more: http://viduthalai.in/page2/82175.html#ixzz34fL604oc

தமிழ் ஓவியா said...


புகைந்து போவீர்கள்


புகையிலையினால் அரசிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.32,500 கோடி. பெரிய வருமானம் தான். அதற்கு அரசு அளிக்கும் விலை ஆண்டிற்கு 9 லட்சம் மக்களின் உயிர்.

மத்திய அரசு, புகையிலை சீர் கேடுகளை சரி செய்வதற்காக (மனித னுக்கு ஏற்படும் சீர்கேடுகள் மற்றும், நாட்டின் சுகாதார சீர்கேடுகளை சீர்படுத்த) செலவிடும் தொகை ரூ.37,500 கோடி. அதாவது ரூ.5,000 கோடி புகையிலை வருமானத்தைவிட ஏற்படும் அதிக செலவு. தவிர இந்த உயிர்க்கொல்லி புகையிலையை பயிரிடுவதற்காக அரசால் அழிக்கப்படும் உயர் பெருங்காடுகளின் பரப்பளவு, இரண்டு லட்சம் ஹெக்டேர்.

புகையிலையில் 3,000 வகை நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன. பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகைக்கும் புகையிலையில் 4,000 நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன.

இந்த நச்சுப் பொருட்களில் புற்றுநோயைக் கட்டாயம் ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் மட்டும் 200 வகை. நச்சுப் பொருட்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஹெக்சாமின் - தீப்பெட்டியின் உரசும் பகுதி
எத்தனால் - ஆல்கஹால் வினைல் குளோரைடு - ப்ளாஸ்டிக் பை தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்.
நைட்ரோ பென்சின் - பெட்ரோலில் உள்ள நச்சுப் பொருள்
மீத்தேன் - பெட்ரோலியம் வாயு
காட்சியம் - கார் பேட்டரியில் பயன்படுத்தும் திரவம்
அசட்டோன் - நகப்பூச்சு சுத்தப்படுத்தும் திரவம்
நாப்தலின் - பூச்சிக்கொல்லி மருந்து
ஸ்டிரிக் அமிலம் - மெழுகு தயாரிக்கப்படும் அமிலம்
டிடிடி - டியோட்ரான் பூச்சிக்கொல்லி மருந்து
கார்பன் மோனாக்ஸைடு - வாகனத்திலிருந்து வெளிவரும் நச்சுப் புகை
ஆர்காலிக் ஹைட்ரஜன் - சைனைடு நச்சுப் பொருள்
நிக்கோடின் - அடிமைப்படுத்தும்பொருள்
அமோனியா - கழிவறையை சுத்தப்படுத்தும் ஆசிட்
பினாயில் - பூச்சிக்கொல்லி

Read more: http://viduthalai.in/page4/82181.html#ixzz34fLaMuug

தமிழ் ஓவியா said...


வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் எஸ்சி/எஸ்டி சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்கள் எனப்படும் பட்டிய லினத்தவருக்கு எதிரான கொடுமை களைத் தடுப்பதற்காகவும், அச் சமூகத்தினருக்கு எதிரான கொடு மைகள், வன்முறைகள், துன்புறுத் தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடி யுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியின மக்களுக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 1989இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995இல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட் டத்தைக் காவல்துறையினர் தங் களுக்கு எதிரானதாகவே நினைத் தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page4/82179.html#ixzz34fLoArhU

தமிழ் ஓவியா said...


பொய்ம்மையும் வாய்மை இடத்து


ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். இந்தியர்களுக்குப் பெரியம்மை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது (1804). ஆனால், அன்றைய மக்கள் அதனை ஏற்கவில்லை. அவர்களைச் சரிக்கட்ட எல்லீசு துரை ஒரு புனித மோசடி செய்தார். அம்மை குத்திக் கொள்வதன் அவசியம் பற்றி வடமொழியில் அவர் தானே ஒரு கவிதை இயற்றி, அதனை ஒரு பழைய தாளில் எழுதிப் பழம் பாடல் என நம்ப வைத்தார். அம்மருந்து புனிதப் பசுவிலிருந்து பெறப்பட்டது என அப்பாடலில் குறிப்பிட்டார். எனவே, மக்கள் அம்மருந்தை ஏற்றனர்.

பி.கு. எல்லீசு துரை திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அதனால் பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்த்த, நன்னை பயக்கும் மெனின் என்ற திருக்குறள் அவர் நினைவுக்கு வந்திருக்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/82184.html#ixzz34fNMgnUC

தமிழ் ஓவியா said...


சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) என்று கூறி குழந்தைகளிடையே மூடத்தனத்தை வளர்ப்பதா?


செல்டென்ஹாம் அறிவியல் திருவிழாவில் நாத்திகத் தலைவரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பங்கேற்றார். அவர் பேசும்போது, இயற்கையை மீறிய சக்தியால் (கடவுளால்) உலகம் இயக்கப்பட்டுவருவதாக கூறுவதன்மூலம் குழந்தைகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதுபோலவே சாந்தாகிளாஸ் (கிறிஸ் துமஸ் தாத்தா) என்கிற கதையால், இல் லாத ஒன்றை இருப்பதாக குழந்தைகளை நம்பவைக்கலாமா? என்று டாக்கின்ஸ் கேட்டார். மதக்கருத்துக்களை குழந்தை களிடம் திணிப்பதுகூட குழந்தைகள் மீதான வன்முறையாகும் என்றார். தற்காலத்தில் நிகழ்ந்துவரும் குழந்தை கள்மீதான அளவுகடந்த பாலியல் வன்முறைகள்குறித்த குற்றச்சாட்டுகள் பரவிவருவதற்கு காரணமாகவும் உள்ளன.

விளையாட்டாக புனையப்படும் கதைகள், கிறிஸ்துமஸை நம்புகின்ற பெற்றோர் களால் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மாறுபட்ட கருத்து களைக் கொண்டுள்ளவரும், உயிரியல் வல்லுநராகிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் அறிவியல் விழாவில் பங்கேற்ற பார்வை யாளர்களைநோக்கி, குழந்தைகளிடம் மூடத்தனமான நம்பிக்கைகளை உண்டாக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இயற்கையை மீறிய சக்தி (கடவுள்) யால்தான் உலகம் இயக்கப் பட்டு வருகிறது என்று குழந்தைகளிடம் கூறுவதன்மூலம் அவர்களுக்கு கடும்தீங்கிழைக்கிறார்கள் என்று தீப்பிழம்பாகி எச்சரிக்கிறார். விளையாட் டான, பழங்கதைகளை மதத்தின்பேரால் குழந்தைகளிடம் கூறி அவர்களை நம்பவைப்பது என்பது நாம் நினைப் பதைக் காட்டிலும் அவர்களுக்கே அதிகத் தீங்கு நேர்ந்துவிடும். இல்லாத கிறிஸ் துமஸ் தாத்தா இருப்பதாகக் கூறி, நம்பவைக்கலாமா? என்றும் கேட்கிறார். விண்வெளி வண்ணமயமானது என்று யார் அறிவார்கள்? 10 ஆண்டு களில் 10ஆயிரம் அதிசயித்தக்க படங் களை தொலைநோக்கிமூலம் பெற்று பார்க்கிறோம்.

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் முகநூலைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர்கள் 13 வயதுக்குமேல் சமூக வலைதளங்களைப் பார்க்கட்டும் என்று திட்டமிடுகிறார்கள். இது சரியே. குழந்தைகளின் புதுமையான விருப்பங்களைப் புரிந்து இணைந்து இருப்பதுபோல், குழந்தைகளிடம் (கடவுள் நம்பிக்கையில்/நம்பிக்கையின் மையில்) உண்மை அறியும் அறிவை, சிந்தனையை அவர்கள் விருப்பத்துக்கு வளரவிடுகிறோமா? என்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் பார்வையாளர்களிடம் கேள்வியை எழுப்பினார். தன்னுடைய அனுபவமாகக் கூறும்போது, ஆப்பிரிக் காவில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தன்னுடைய எட்டு வயதில் கதைகளில் வரும் மாயாஜாலங்களை நம்பி, அதுபோன்ற அதிசயங்களைக் காண முயன்று தேடி யதாகவும் கூறினார்.

நாம் நினைப்பது போலன்றி கதைகளாகக் குழந்தைகளிடம் கூறப்படுவது, அவர்களிடம் கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். கிறிஸ் துவின் தந்தை, கிறிஸ்துமஸ் என்று எல் லாவற்றையும் குழந்தைகள் நம்புவதற்கு விடலாமா? கடவுள் என்கிற கருத்தை சிறிதுசிறிதாக குழந்தைகளிடம் திணிப்பது குழந்தைகளுக்கு தீங்கிழைப்பது ஆகாதா?

விவிலியத்தில் குழந்தைகளின் அறிவை வலிமையாகவே கெடுக்கும்படியாகத்தான் உள்ளது. எதையாவது குழந்தைகளிடம் சொல்லி அதைப் பின்பற்றாவிட்டால், நரகத்தில் வறுக்கப்படுவார்கள் என்பதும் கூட ஒரு வழியில் குழந்தைகளைக் கெடுப்பதுதான். மதத்தைத் திணிப்பது என்பது குழந்தைகளிடம் அதிக அளவில் கெடுதலை விளைவிக்கக் கூடியதாகும். எந்தவிதத்திலும் கேள்வி கேட்கக்கூடாது என்று மதத்தைத் திணிப்பதைவிட மோசமான செயல் வேறில்லை.

சிந்திப் பதற்கு இடமின்றி மதத்தை புகுத்துவது என்பது மூளைக்கு வேலை கொடுக்காமல் அப்படியே ஏற்க வலியுறுத்துவதாகும். கடவுள்தான் படைப்பதாக சொல்லுவது பகுத்தறிவுக்கு முரணானது. சமுதாயத் துக்கு கேடானதுமாகும் என்று டாக் கின்ஸ் கூறுகிறார். கத்தாரிலிருந்து ஒளி பரப்பாகிவரும் அல்-ஜசீரா தொலைக் காட்சியில் ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஒரு பெண் தன்னுடைய நண்பன் இறந்தபின் நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவான் என்று தன்னிடம் பாதிரியார் ஒருவர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறியதால் அதிர்ச்சிக்குள்ளானார் என்றார். மேலும் அவர், பாலியல் வன்முறை என்பது கொடுமையானது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. கத்தோலிக் கனாக(மதவாதியாக) ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது உளவியல்ரீதியாக காலம்முழுவதும் மதத்துக்கு அடிமை யாக்குதுவது என்பது அதைவிட கொடுமையானதாகும் என்று கூறினார். அவரே 1976இல் எழுதிய நூலில் பல்வேறு நம்பிக்கைகள் வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் கடவுள் ஒரு பொய்க்கதை நூலை எழுதியுள்ளார். பள்ளிப்பருவத்தில் வெற்றுக் கூச்சலிடு பவர்களையும், எதையும் கவனத்தில் கொள்ளாத பொறுப்பற்றவர்களையும், காயங்கள் ஏற்படும்படியாக தாக்கிக் கொள்பவர்களையும் கண்டுள்ளதாக கூறுகிறார். மதவாதிகள் என்பவர்கள் அனுபவத்தில் மிக மோசமானவர் களாகவே இருந்துள்ளார்கள் என்றும் டாக்கின்ஸ் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது,மதத்தால்எந்தவிதத்திலும் நன்மை கிடையாது என்று பள்ளிப் பருவத்தில் கூறியபோது, பிரம்படி வாங்கினேன். பெரிதாக இல்லை என் றாலும், நாகரிகக் குறைவு உள்ள மக்க ளாக வாழ்ந்து கொண்டு புண்படுத்திய மோசமான நிலையை அனுபவத்தில் கண்டுள்ளேன் என்றார்.

_- -டெய்லி மெயில், இலண்டன், 4-_6_-2014

Read more: http://viduthalai.in/page8/82188.html#ixzz34fPHTAMO

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


மந்திர மகத்துவம்

மகாவிஷ்ணுவின் நெஞ்சில் நிலைத்திருக் கும் அருள் பெற்ற மகா லட்சுமியைப் பூஜித்து வழிபடாதவர்கள் எவரும் இருக்க முடியாது. திருப் பாற்கடலில் தோன்றிய இந்த தேவியானவள், செல்வத்திற்கு அதிபதி யாவாள்.

சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் திருப்பாற்கடலில் மகா லட்சுமியை, மகாவிஷ்ணு பூஜிப்பதாக அய்தீகம் கூறப்படுகிறது. அனைத் துச் செல்வ வளங்களும் வழங்கும் மகாலட்சுமி யின் காயத்திரி மந்தி ரத்தை உச்சரித்தால் நன்மைகள் பெருகுமாம்.

இந்தக் கதைகளை ஸ்மார்த்தர்களிடம் (சிவனை வழிபடுபவர் களிடம்) சொல்லிப் பாருங்கள்; முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். இவை யெல்லாம் தங்கள் தங்கள் கடவுள்களைப் பெரு மைப்படுத்தும் பேர் வழிகளின் அறிவுக்குப் பொருத்தமற்ற சரடுகள் என்பது விளங்கவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/82239.html#ixzz34l7L2PSe

தமிழ் ஓவியா said...


மனித கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலை தடுக்க அம்பேத்கரின் சாதி ஒழிப்பு பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூல்களை பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்


சென்னை பல்கலை. இதழியல் துறைத் தலைவர் பேச்சு

சென்னை, ஜூன் 15- மனித கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலைத் தடை செய்ய அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற நூலும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை பல்கலைக் கழக இதழியல் துறைத் தலைவர் ரவீந்திரன் கூறினார். "கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ் வுக்கான சட்டம் 2013 மற்றும் அதற்கான விதிகள்' என்ற தலைப்பிலான பயி லரங்கம் சென்னை பல் கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடை பெற்றது.

இதில் ஆர். தாண்டவன் பேசியதாவது:

நாட்டில் பல்வேறு சட் டங்களும், மசோதாக்களும் தொடர்ந்து நிறைவேற்றப் பட்டு வருகின்றன. ஆனால், அவை குறித்தும், இயற்றப் படும் சட்டங்களில் உள்ள சரத்துக்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மக்கள் அறிவதில்லை. இதனால் சட்டம் இயற்றப்பட்டதின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.

இது குறித்து பல் கலைக்கழகத்தின் பொருளா தார கல்விக்கான டாக்டர் அம்பேத்கர் மய்யமும், இளைஞர் மேம்பாட்டுக் கான ராஜீவ்காந்தி தேசிய நிறுவனம் மற்றும் சமூக அமைப்புகள் மேற் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

புதுடில்லி சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் அமைப்பின் தேசிய ஒருங் கிணைப்பாளர் பெஸ் வாடா வில்சன்: கழிவு களை அகற்றும் தொழி லில் ஈடுபடும் சமூகத்தின ரின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ. 4,500 கோடி திட்ட நிதியை ஒதுக் கியுள்ளது. மேலும், வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கழிவுகளை கையால் அள்ளும் சூழலே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வரு கிறது.

மேலும் அண்மையில் இயற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தில், கழிவுகளை கையால் அகற்றும் தொழி லில் ஈடுபடுபவர்களின் மறுவாழ்வுக்காகவும், இந்த தொழிலில் ஊழியர்களை கட்டாயமாக ஈடுபடுத்து பவர்களுக்கான தண்டனை களும் இடம் பெற்றுள்ளன. தேசிய குற்றப் பதிவு அமைப்பில், நாடு முழு வதும் நடைபெறும் வாகன விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவ ரம் உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் குறித்த புள்ளி விவரங்கள் பதிவு செய் யப்பட்டிருக்கும் நிலையில், சாக்கடை மற்றும் கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தவர்கள் குறித்த விவ ரங்கள் இடம் பெறவில்லை.

எனவே, முதலில் நாம் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் எத்தனை பேர் இறந்துள்ளனர், இந்தத் தொழிலில் எவ்வளவு பேர் இப்போது ஈடுபட்டு வரு கின்றனர் என்பது குறித்த முழுமையான தகவலை முறைப்படி சேகரிக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புள்ளி விவரத்தைத் தயாரித்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் ரவீந் திரன் கூறியதாவது: கழிவு களை கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமை யாகத் தடை கொண்டுவர வேண்டுமானால், முதலில் ஜாதியற்ற சமூகம் உரு வாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே, இந்த தொழில் தொடருவதற்கு காரணமாகக் கருதப்படு கிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், சட்ட மேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும், தந்தை பெரியா ரின் பெண் ஏன் அடிமை யானாள் என்ற நூலும் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும், பல் கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித் துறை மற்றும் புத்தர் கல்வித் துறை என்ற இரண்டு புதிய துறைகள் உருவாக்கப் பட வேண்டும்.

இந்த இரு கருத்துகளை யும் ஏற்றுக்கொண்ட பல் கலைக்கழக துணைவேந் தர், விரைவில் இந்த இரு கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார் என்றார்.

பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணைச் செயலர் சஞ்சீவ் குமார், 1993-இல் இயற்றப் பட்ட சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் இயற்றப்பட் டது ஏன் என்பது குறித்து விளக்கிக் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82233.html#ixzz34l7XnVyj

தமிழ் ஓவியா said...


இப்போது இருக்கக் கூடிய சூழ்நிலையைப் பார்த்தால் காந்தியாரை கொன்ற கோட்சேவிற்கு பாரத ரத்னா விருது கிடைத்துவிடும் போலிருக்கிறது நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி கர்ஜனை


புதுடில்லி, ஜூன் 15-_முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முஸ் லிம்கள் அறிஞர்கள் தங் களது சொற்பொழிவு களில் பேசி வந்த கர் ஜனைகளை அய்தராபாத் எம்.பி அசத்துன் உவைசி அவர்கள் (11.6.2014) அன்று நாடாளுமன்றத் தில் மோடி மற்றும் நூற் றுக்கணக்கான பா.ஜ.க எம்பிக்களுக்கு முன்னால் பேசி நாடாளுமன்றத் தையே ஆச்சரிப்பட வைத்துவிட்டார்.

அவர் கேட்கும் ஒவ் வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத பி.ஜே.பி எம்.பிக்கள் இடையில் அவரை மறித்து கூச்சலிட்டனர். இருந்த போதிலும் அவர் களைச் சமாளித்து அசத்து உவைசி பேசியது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் பி.ஜே.பி எம்.பி ஒருவர் அவரது பேச்சை நிறுத்தச் சொல்லும் போது உன் தம்பிக்கு போய் சொல் லிக்கொடு என்ன பேசனும் ன்னு; எனக்கு நீ சொல்லாதே; எதுவா இருந்தாலும் சபாநாயகர் கிட்ட சொல்லு; எனக்கு நான் என்ன பேசுறேன்னு தெரியும் என்றார்.

அவர் பேசிய உரையின் சுருக்கம் வருமாறு: இந் தியாவில் நான்கு சம் பவங்கள், இந்த நாட்டின் அடித்தளத்தை ஆட்டும் அளவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. முத லாவது காந்தியார் படு கொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு. இந்த சம்பவங் களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதத்தன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையைப் பார்த்தால், காந்தியை கொன்ற கோட் சேவிற்கு பாரத ரத்னா அல்லது வீர் சக்ர விருது கிடைத்து விடும் போலி ருக்கிறது. மோடியின் வெற்றி ஒரு சோககரமான வெற்றி. இந்திய அரசி யலமைப்பை காப்பாற்ற உறுதியெடுத்து, நாட்டு மக்களின் மேம்பாடு பற்றி அனைத்து எம்.பி க்களும் பேசுகின்றார்கள். நாட்டு மக்கள் என்பது அனைவரையும், அனைத்து சமுதாயத்தை யும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

உங் களது (மோடியை பார்த்து) அமைச்சர் முதல் நாளிலேயே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை, பார்சிகள் மட் டும்தான் சிறுபான்மை யினர் என்கிறார், என்பதா யிரம் பார்சிகளுக்காகவா ஒரு மத்திய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீக்கியர்கள், புத்தர்கள், கிறிஸ்துவர்களின் நிலை என்ன? நாலரை சதவிகித இட ஒதுக்கீட்டில் இந்த அரசின் நிலை என்ன? பிரதமர் மோடி சமபங்கு, சம உரிமை என பேசு கிறார்.

அக்ஷாதம் விஷ யத்தில், உச்சநீதிமன்றம் தற்போதைய பிரதமரும், அன்று குஜராத்தின் முதல்வருமாக இருந்த மோடி அமைச்சகத்தை விமர்சித்துள்ளது. இதற்கு இந்த மோடி அரசு மன்னிப்பு கேட்குமா? நான் இங்கு பாதிக்கப் பட்டவர்களின் சொந் தக்காரனாக, பேச முடி யாதவர்களின் குரலாக கேட்கிறேன், அநீதி இழைக்கப்பட்டோருக் கும், குஜராத்தில் படு கொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.

மோடி அரசு வந்ததும் இந்த நாட்டில் என்ன நடக்கிறது? புனே உட் பட நாட்டில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படு கிறது. இதற்கு காரண மான இயக்கங்களையும், அபினவ் பாரத் உட்பட அனைத்து இயக்கங்களை யும் தடை செய்ய வேண் டும் என்று கர்ஜித்த குர லில், பல இடைமறியல் களுக்கு மத்தியில் சலிக்கா மல் சமாளித்து பதில் கொடுத்து நாடாளுமன் றத்தில் பேசியுள்ளார் அசத்துன் உவைசி!

Read more: http://viduthalai.in/page-2/82230.html#ixzz34l7rJtnW

தமிழ் ஓவியா said...


பூரணலிங்கனார்


மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (மே 25, 1866 - சூன் - 6, 1947) தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன் மையையும், உயர்வை யும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முந் நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் 1866 இல் பிறந்தார். இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத் தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங் கோட்டை இந்துக் கல் லூரி, சென்னை கிறிஸ் தவக் கல்லூரி, கோயம் புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெ ரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங் களில் ஆங்கிலப் பேரா சிரியராகப் பணியாற் றினார். ஆங்கிலப் பேரா சிரியராக இருந்த பூரண லிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர் வும் கொண்டு வாழ்ந்த துடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

நூல்கள் இயற்றல்: பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல் களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள் ளார். திருக்குறள் முழு வதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரை யும் எழுதினார். நீதிக்கட்சி நடத்திய ஜஸ்டிஸ் ஏட்டின் துணை ஆசிரியராகவும் இருந் துள்ளார். இவரால் எழுதப் பட்ட இராவணப் பெரியார் என்னும் ஆய்வு நூலை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 1936ஆம் ஆண்டிலேயே முதல் பதிப்பாக வெளியிட்டது. அதற்குப் பின் பல பதிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

அந்நூலில் அவர் கூறுகிறார்: இராமா யணம் கட்டுக் கதையாக இருந்தாலும், இராவணன் ஒரு வீரன் என்பதில் சந்தேகமே இல்லை. திரா விடர்கள் இராவணனை ஒரு வீரப் புருஷனாகவே மதித்து வந்தார்கள். அவன் அனேக தேசங் களை வென்றதாகவும், ஆரியரை எதிர்த்துப் போராடியதாகவும் மதித் தார்கள். திராவிட சிசு வான சம்பந்தரும்கூட இராவணனைப் பாராட் டிப் பாடியிருக்கிறார். அவனது காலத்தில் அவன் பெரிய வீரனா கவே விளங்கினான் என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் பூரண லிங் கனார்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/82255.html#ixzz34oBuVxzc

தமிழ் ஓவியா said...

அர்ச்சகர்கள் பட்டினி!

ஆந்திர மாநிலம் தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள கோயில் - ராமன் கடவுளுக்குப் பூஜைகள் செய்யும் போது ஸ்ரீ ராமச்சந்திர நமஹ என்று பாராயணம் செய்யாமல் ஸ்ரீராம நாராயண நமஹ என்று அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லி வருகிறார்கள். இதனைச் செவியுற்ற பக்தர்கள் இதுபோல் சொல்லக் கூடாது என்றார்கள் அர்ச்சகர்கள் இதனை ஏற்கவில்லை. கோயில் அதிகாரிகளிடம் பிரச்சினை சென்றது.

இனிமேல் ஸ்ரீ நாராயண நமஹ என்ற மந்திரத்தைச் சொல்லக் கூடாது; ஸ்ரீராமச்சந்திர நமஹ என்று தான் கூற வேண்டும் என்று அர்ச்ச கர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

இதனை அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் காலமாக நாங்கள் சொல்லிக் கொண்டு வரும் மந்திர வாசகத்தை மாற்ற முடியாது என்று கூறி பட்டினி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றன. ஆனால் கடவுளை எப்படித் துதிப்பது என்பதில் குஸ்தி நடந்து கொண்டு இருக்கிறது.

இவ்வளவுக்கும் ராமன் யார் என்றால் நாராயணனின் (விஷ்ணுவின்) அவதாரம் தானாம் - இதில் நாராயணப் பெயரைச் சொன்னால் குடியா மூழ்கிப் போகும். வைணவர்களுக்குள் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென் கலை நாமம் போடுவதா என்று நீதிமன்றம் செல்லவில்லையா? சரி... அந்த இராமச்சந்திரமூர்த்தியாவது இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று பக்தர்கள் கனவிலும், அர்ச்சகர் கனவிலும், அதிகாரிகளின் கனவிலும்தான் சொல்லித் தொலைக்கக் கூடாதா? அது என்ன செய்யும்? அதுதான் குத்துக் கல்லாயிற்றே! அதனால் என்ன செய்ய முடியும்? மறைந்த கணபதி ஸ்தபதி சொன்னாரே - கடவுளை யார் கண்டது? நாங்கள் வடித்து வைத்தது தானே என்று சொல்லவில்லையா!

Read more: http://viduthalai.in/e-paper/82262.html#ixzz34oC7gzmd

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

பஞ்சகவ்யம்

பஞ்ச என்றால் ஐந்து, கவ்ய(ம்) என்றால் பசுவிடமி ருந்து அல்லது பசுவினுடை யது என்று பொருள். பசுவிலிருந்து கிடைக்கப்படும் ஐந்து பொருட்களை சரியான விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை பஞ்சகவ்யம் எனப்படும். பால், தயிர், நெய், கோமி யம், கோமயம் (பசுஞ் சாணம்) ஆகியன பசு விடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட் களாகும். இந்த ஐந்து பொருட் களுக்கும் பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றைச் சுத்தி செய்யும் திறன் உள்ளது. பால் ஆகா சத்தைச் சுத்தி செய்யும். தயிர் வாயுவைச் சுத்தி செய்யும். நெய் அக்னி யைச் சுத்தி செய்யும். கோமியம் ஜலத்தைச் சுத்தி செய்யும். கோமயம் ப்ருதிவியைச் சுத்தி செய்யும். மனித சரீரம் பஞ்ச பூதங்களால் உருவான படியால் மேற் கூறியபடி, பால், சோர்வடைந்த ஆத்ம (பிராண) சக்தியைச் சீர் செய்யும். தயிர், சீர்கெட்டுப் போன வாயுவை சரி செய்யும். நெய், உஷ்ணச் சீர் கேட்டைச் சரி செய்யும். கோமூத்திரம், நீர்க்கட்டு சம்பந்தப்பட்ட உபாதைகளைச் சரி செய்யும். கோமயம், உடம்பில் உள்ள அசுத்த மலங்களை நீக்கும்.

பஞ்சகவ்யத்தை உட் கொள்வதால் ஆத்ம சுத்தியும், சரீர சுத்தியும் அடைய முடியும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பஞ்சகவ்யத்தை உட்கொள்வதால் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி வலு வடைகிறது என்ற நம்பிக்கை யும் நிலவி வருகிறது. செடி களுக்கும் பயிர்களுக்கும் செயற்கையான நச்சுப் பொருட்கள் அடங்கிய உரங் களைத் தவிர்த்து, பஞ்சகவ் யத்தை உரமாக உபயோகிப்ப தன் மூலம் இயற்கை விவசாய மும் வெற்றிகரமாக நடக்கிறது. - தி தமிழ் இந்து

மாட்டின் கழிவுப் பொருள்களான சாணியையும், மூத்திரத்தையும் உணவுப் பொருள் களான பால், தயிர், நெய் யோடு கலப்பது என்பது முத லில் கலப்படக் குற்றம்.

மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதும் மாட் டுச் சாணியைத் தின்னச் சொல்வதும்தான் ஆன்மிகமா? இந்தக் கலவையை சோதனைச் சாலையில் பரி சோதிக்கச் செய்தால் அதன் முடிவு எதுவாக இருக்கும்? பக்தி வந்தால் புத்தி போகும் என்பது இது தானோ!

Read more: http://viduthalai.in/e-paper/82261.html#ixzz34oCSwE9J

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்



வயிற்றெரிச்சல்

செய்தி: எம்.பி.பி.எஸ். கட் ஆஃப் மார்க் மொத்தம் - 132 பேர் 200-க்கு 200 வாங்கி யிருக்காங்களாம்! நீங்க வேணா பாருங்க, வரப் போற வருஷங்கள்ல இது 200-க்கு 205, 210,215.. ன்னு அதிகரிச்சாலும் ஆச்சரியப் படறதுக்கில்லை...!
- தினமணி 16.6.2014

சிந்தனை: 200-க்கு 150, 155, 160 என்று வாங்கி இருந்தால் இவாளுக்குச் சந்தோஷமா இருந்திருக்கும். சூத்ராள் பஞ்சமா எல்லாம் 200-க்கு 200 வாங்கிட்டாளே... வயிறு எரியாதா இலாளுக்கு!)?

ராஜநாகம்

செய்தி: செங்கம் அனுபாம் பிகை ஷபேஸ்வரர் கோயில் பூஜையின் போது அம்பாள் சன்னதியில் ராஜநாகம் புகுந்து படம் எடுத்தது - தீயணைப்பு துறையினர் வந்து பிடித்துச் சென்றனர்.

சிந்தனை: சன்னதியில் புகுந்தது சாதாரணமா? அதைப் பிடித்துச் சென்றது தெய்வ குற்றம் என்று ஏன் யாரும் சொல்லவில்லை? ஓ, பாம்பு என்றால்தான் படை யும் நடுங்குமே!

Read more: http://viduthalai.in/e-paper/82266.html#ixzz34oCg6kC4

தமிழ் ஓவியா said...


நெஞ்சு பொறுக்கு தில்லையே!



நாள் தோறும் ஏடுகளைப் புரட்டும் போது தவறாமல் ஒரு செய்தி மட்டும் வெளி வந்து கொண்டேதான் இருக்கிறது. அதுதான் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாகும்.

மத்தியப் பிரதேசத்தில் கணவனே தனது கூட்டாளி களை ஏவி, தன் மனைவியைச் சீரழித்ததுடன் நிர்வாண மாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றான் என்பதும் அந்தவூரில் உள்ள எந்த ஒரு மனிதரும் அவனைத் தடுக்கவில்லை என்பதும் நாம் நாகரிக உலகத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை நள்ளிரவில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றெல்லாம் செய்தி வருகிறது. டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் சூறையாடப்பட்டார் என்ற போது தலை நகரமாம் டில்லியே கொந்தளித்து எழுந்தது.

இதுபோன்ற பிரச்சினைகள் நடக்கும்பொழுது அது பற்றியெல்லாம் கருத்துத் தெரிவிக்க வேண்டுமா? ஏன் அமைதியாக இருந்து விடக் கூடாது? நம் பெண்களின் கவுரவத்துடன் விளையாடிக் கொண்டு இருக்கிறோம் என்று இதோபதேசம் செய்கிறார் பிரதமர் மோடி அவர்கள். டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்த்து, பெரிய கொந்தளிப்புத் தீயை விசிறி விட்டதில் பிஜேபிக்குப் பங்கு இல்லையா?

டில்லி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு பிஜேபி சங்பரிவார், ஆம்ஆத்மி அமைப்புகள் டில்லியையே ஸ்தம்பிக்கச் செய்தனரே!

இன்றைக்கு பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கணவனே தன் மனைவியைச் சீரழித்து நிர்வாண ஊர்வலம் நடந்திருக்கிறது என்றவுடன் பிரதமர் வேறு குரலில் பேசுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பான்வாரி என்ற சமூக சேவகி - குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார் என்பதற்காக உயர் ஜாதியினர் அந்தப் பெண்ணைச் சூறையாடினர். அப்பொழுதும் அங்கு நடந்தது பிஜேபி ஆட்சிதான். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனை செய்து உரிய நேரத்தில் சான்று கொடுப்பதற்கு மருத்துவரும் முன்வரவில்லை.

கடைசியில் நீதிமன்றம் என்ன தீர்ப்புக் கூறியது தெரியுமா? உயர் ஜாதி பிராமணர்கள் கீழ் ஜாதிப் பெண்ணைக் கற்பழித்து இருப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்? என்று நீதிபதிகளே தீர்ப்பில் சொல்லவில்லையா? மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது தானே இது!

மத்தியப் பிரதேசத்தில் இப்பொழுதுதான் இந்தக் காட்டு விலங்காண்டித்தனம் நடைபெறுவதாக யாரும் கருதத் தேவையில்லை. 1998 செப்டம்பர் 25இல் நடந்த குரூரம் அது! ஜாபுலா கிராமத்தில் கிறித்தவர்கள் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வந்தார்கள். நள்ளிரவில் கதவைத் தட்டி மருத்துவமனையில் புகுந்த சங்பரிவார்க் கும்பல் நான்கு கன்னிகாஸ்திரிகளை கதறக் கதற பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார்கள்.

அதைவிட வன்கொடுமை எது தெரியுமா? தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்று மிக்க இந்து இளைஞர்களின் கோபம் என்று அதனை வருணித் தவர் பி.ஜே.பி.யின் முன்னாள் மக்களவை உறுப்பினர் வைகுந்தலால் சர்மா.

இவற்றையெல்லாம் பார்த்துதான் மேற்குவங்க அன்றைய முதல் அமைச்சரும் மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு ஹிஸீநீவீஸ்வீறீவீமீபீ ஙிக்ஷீமீயீஷீக்ஷீநீமீ (அநாகரிகமான காட்டுமிராண்டிக் கும்பல்) என்று மிகச் சரியாகவே சொன்னார். இப்பொழுதுள்ள பிரதமரோ பெண்கள் மீதான இத்தகு வன்கொடுமைகள் பற்றிக் கருத்துத் தெரிவித்து அவர்களின் கவுரவத்துடன் விளையாட வேண்டாம் என்று கூறுகிறார்.

மக்கள் மன்றத்தில் பெண்கள்மீதான இந்தப் பிரச் சினை விவாதிக்கப்பட்டே தீர வேண்டும். இதற்கொரு தீர்வைக் கண்டே ஆக வேண்டும். இதுபோன்ற குற்றங் களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகள், வழமையான முறையில் காலங் கடத்தாமல் உடனுக்குடன் நீதி வழங்கப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டாக வேண்டும்; பெண்களும் தற்காப்பு பயிற்சிகளையும் சட்டத்திற்குட்பட்ட ஆயுதங்களையும் கைவசம் வைத் திருக்க வேண்டும். நாலு இடத்தில் உதைப்பட்டார்கள் கயவர்கள் என்றால் பரிகாரம் தானாகக் கிடைக்கும் - ஈரோட்டு மருந்தே சரியான தீர்வாக இருக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/82269.html#ixzz34oD0C2OH

தமிழ் ஓவியா said...


திருக்குறள்


நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும். - (விடுதலை,3.10.1958)

Read more: http://viduthalai.in/page-2/82268.html#ixzz34oD6q5qu