Search This Blog

19.6.14

சவாலை ஏற்குமா ஜோதிடம்? 10 இலக்கம் வெகுமதி

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...


நூல்: சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை
ஆசிரியர்: சிந்தனையாளர்: பேரா.ஏ.எஸ்.நடராஜ்
தமிழ் மொழியாக்கம்: பகுத்தறிவுப் பாவலர். வீ.இரத்தினம், பெங்களூரு.
பக்கங்கள்: 108  |  விலை: ரூ.10  |  வெளியீடு: தங்கம் இராமச்சந்திரா
நூல் கிடைக்குமிடம்: வீ.இரத்தினம்,
1157, 11ஆவது மெயின் ரோடு, ஹம்பி நகர்,
பெங்களூரு - 560 014.  செல்பேசி: 94498 80117.

மிகப்பெரிய ஜோதிட குடும்பத்தில் பிறந்து ஜோதிடத்தை நன்கு கற்று தொழில் நடத்தி, ஆயிரக்கணக்கான ஜாதகம் எனப்படும் பிறந்த நாள் குறிப்புகளை எழுதி, ஒரு காலத்தில் அதையே நம்பி அதில் ஆய்வு செய்த பிறகு ஜோதிடம் பொய் என்னும் உண்மையை அறிந்துகொண்டு அதைத் துணிவுடன் வெளிச் சொன்னதோடு மட்டுமல்லாமல், ஜோதிடம் உண்மை என்று மெய்ப்பிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தருவதாக அறைகூவல் விடுத்துள்ளவர் பேராசிரியர் ஏ.எஸ்.நடராஜ். விரிவான அவருடைய ஜோதிடத்திற்குச் சாவல் என்ற நூலைத் தொடர்ந்து, அதைவிடக் கூர்மையாக ஜோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை என்ற நூலை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவமே இந்நூல். பாராட்டுக்குரிய வெளியீடான இந்நூலிலிருந்து சில பகுதிகள்...
சில பலசோதிடம் (பலன் கூறல்) வெற்றி / தோல்வியாவதன் இரகசியம் -
1. சோதிடர்களின் சில முற்குறிப்பு Prediction) உண்மையாவது எப்படி? என்று கேட்கிற கேள்விகளில் இரகசியம் இருக்கிறது?

சோதிடம் பொய், அறிவியல் அல்ல என்பதே விஞ்ஞானிகள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் ஆகியோரின் வாதம்: சோதிடம் பொய் மற்றும் அறிவியல் அற்றது. சில சோதிடர்களின் சில முற்குறிப்புகள் உண்மையாவது சோதிட சாத்திரத்திலிருந்து அல்ல. சோதிடம் தெரியாதிருந்தாலும் பலன் சொல்கிறவனுடைய கீழ்க்கண்ட சிந்தனையிலிருந்து சில உண்மைகள் நடக்கக் கூடியனவே!

i.. கேள்வி விதி, ii. திறன், iii. அனுபவம், iv. வாக்குச் சாதுரியம், v. சாதகனின் மனநிலை, vi. சாதாரண அறிவு மற்றும் vii. வாய்ப்பும் திறமைமிக்க ஊகமும் ஆகிய ஏழு கூறுகள் (அம்சங்கள்) மீது சோதிடம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறுஎந்த ஆதாரத்தின் மீதும் இது நடப்பதில்லை. எ.கா: கண்கட்டி வித்தைகள் மந்திரத்தின் மேல் அல்லாமல் உண்மையில் அது அவன் செய்யும் தந்திரத்திலும் அவனது கைச் சாதுரியத்திலும் இருக்கின்றது. அதைப் போலவே பலன்கள் சோதிடத்தில் இல்லை, சோதிடனின் திறமையில் இருக்கின்றன. சில சோதிடர்கள் சிலருக்குச் சொல்லும் சோதிடங்களில் ஒரு சிலவே உண்மையாகின்றன.

அந்த சில சோதிடம் உண்மையாவது சோதிடம் உண்மை என்ற காரணத்திற்காக அல்ல. சூழ்நிலைக்கேற்றபடி ஊகிக்கும் அவனது திறன், இருமுறை சொல்வதில் யாரும் எதிர்பார்க்காதபடி உண்மையைத் தேர்ந்தெடுக்கும் அவனது அனுபவ நுண்ணறிவு ஆகியவைகளே சோதிடம் உண்மையாவதற்கான காரணங்களாகும்.

1. கேள்வி விதி - சோதிடர்கள் கேட்கும் கேள்விகளில் அமைந்திருக்கும் திறன்.

கேள்வி அதிகப்படியான சோதிடர்களை வெற்றி பெறச் செய்ய பெரும் உதவியாக இருக்கிறது. வெற்றியின் இரகசியத்தை மக்கள் அறிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அது எப்படி என்றால்:

1.1.  50 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம்:-

சோதிடரிடம் வந்து சோதிடம் கேட்பவர்கள் எல்லோரும் அதிகமாக இரு கருத்துகளடங்கிய கேள்விகளைக் கேட்கிறார்கள். எ.கா: காரியத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால் ஆகுமா, ஆகாதா? வெற்றி _ தோல்வி தொடர்புடையதானால் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? மங்கள காரியமானால், நடக்குமா, நடக்காதா? படிப்பு தொடர்புடையதானால் தேர்வில் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? (பாசா _ பெயிலா), நலம் கிட்டுமா _ நலம் கிட்டாதா? ஈட்டமாகுமா _ இழப்பு ஏற்படுமா? இப்போது காலம் நன்றாக இருக்கிறதா _ இல்லையா? திருமணம் இப்போது நடக்குமா _ நடக்காதா? குழந்தை ஆணாகப் பிறக்குமா _ பெண்ணாகப் பிறக்குமா? பொதுத் தேர்தலில் இந்தத் தடவை காங்கிரசுக் கட்சி வருமா _ பா.ஜ.க. வருமா? இப்படி இரண்டு பதில்கள் இருப்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாக உள்ளது. இந்தக் கேள்விகளில் எப்போதும் சோதிடம் பாதி மெய் _ பாதி பொய் (பஞ்சபவேத் _ பஞ்ச நா பவேத்) என்பதைப் போல 50 விழுக்காடு முற்குறிப்பு உண்மையாகிறது.

1.2. சோதிடம் 100 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம். எ.கா:-

தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று வருமா? பா.ஜ.க. வருமா? அவன் முதலமைச்சர் ஆவானா _ இல்லையா? இந்தக் கேள்விகளில் சில சோதிடர்கள் பா.ஜ.க. என்று சொல்கிறார்கள். சிலர் காங்கிரசு என்கின்றனர். அப்பொழுது எந்தக் கட்சி வந்தாலும் அப்படிச் சொன்ன சில சோதிடர்கள் வெற்றி பெற்றவர் ஆகின்றனர். காரணம், வந்த கட்சி வெல்லும் என்று சொன்ன சோதிடர்கள் இருக்கிறார்கள் அல்லவா? யாரோ சோதிடர்கள் சொன்னது உண்மையாகுவதானது சோதிடம் உண்மையானதைப் போல ஆனதல்லவா? அப்படி ஆவது ஒவ்வொரு தேர்தலிலும் யாரேனும் சோதிடர்களின் முற்குறிப்புகள் உண்மையாவதனால்தான்!

1.3. நீண்ட கால தீர்மானத்திற்கான கேள்விகள்:-

நடந்தாலும் உண்மை, நடக்காவிட்டாலும் உண்மையே! எ.கா: எனது மகளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அதற்கு பதில்: தற்போது 3 திங்கள் கிரகபலன் இல்லை. இப்போது திருமணம் நடப்பது சற்று கடினம். 4லிருந்து 6 திங்களுக்குள் நடந்தால் நடக்க வேண்டும். இல்லையானால் இரண்டு ஆண்டுகள் வரை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதன் பிறகு கண்டிப்பாக ஆகும். இப்படி நீண்டகால பவிஷியம் (எதிர்கால பலன்) சொல்லும்போது சிலருக்கு நடந்தே நடக்கும்.

1.4. சரியாகச் சொல்வதில் சோதிடர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் அப்படிச் சொல்வது பொய்யாகி விடுகிறது. எ.கா:

எனது மகனுக்கு எந்தத் திங்கள் எந்த நாளில் திருமணம் நடக்கும்? எங்கள் பாட்டி எந்த ஆண்டு, எந்தத் திங்கள், எந்த நாளில் இறப்பாள்? எனது மனைவிக்கு எந்த நாளில் மகப்பேறு (பிரசவம்) ஆகும்? எனக்கு பதவி உயர்வு எந்த ஆண்டு, எந்த நாளில் கிட்டும்? தேர்தலில் பேராயக் கட்சி (காங்கிரசு) எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும்? பா.ஜ.க. எவ்வளவு இடங்களைப் பிடிக்கும்? ஒரு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் எவ்வளவு வாக்கில் வெற்றி பெறுவார்? எந்தக் காலத்தில், எந்த நேரத்தில் நேர்ச்சி (விபத்து) நிகழும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவு. அப்படி ஏதாவது ஒன்றோ இரண்டோ உண்மையாக இருக்குமானால் அது தப்பித் தவறி இருப்பதே அல்லாமல் சோதிடனின் தந்திரத்திலிருந்து ஆனதல்ல.

1.5. எதிர்கால பலன் (பவிஷியம்) - Prediction) சொல்லும் காலத்தின் கேள்விகள்:

இதை எந்த சோதிடனும் சரியாகச் சொல்வது இல்லை. ஊகத்தினால் சொல்வது ஏதோ ஒரு சமயத்தில் உண்மையாகி விடலாம். நீங்கள் ஆய்விலும் பார்க்க வேண்டுமானால் 1 திங்களில் அல்லது 3 திங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றிய கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள்.

1.6. இறந்தகால கேள்விகள்

அங்கே கூட முன்பே சொன்ன எல்லா தந்திரங்களும் பயன்பாட்டிற்கு வருகின்றன. இந்த எல்லா பின்னணியிலும் சில சோதிடர்களின் சில குறிப்புகள் உண்மையாகின்றன.

1.7. சோதிடர்கள் அல்லாத பிறர் எவ்வளவோ எதிர்கால பலன் சொல்கிறார்கள். 

இந்தக் கேள்விகளை எல்லாம் அவர்களிடம் கேட்டால் சோதிடம் தெரியாத அவர்கள் சொல்லும் எதிர்கால பலனில் சில சரியாக இருக்கும். சில தடவை சோதிடர்கள் சொல்வதைவிட இன்னும் நன்றாகவே சொல்வார்கள். இதனால் எதிர்கால பலன் உண்மையாகுவது சோதிடத்திலிருந்து அல்ல, புத்தி கூர்மையான சோதிடனின் மோசம் செய்யும் திறமையினாலும் தந்திரத்தினாலுமே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

2. சோதிடரின் திறமை - புத்தி சாதுரியம், அனுபவம், சந்தர்ப்பம்.

பல சோதிடம் பல சோதிட நூல்களில் சொல்லப்பட்ட சில கூறுகளை (அம்சங்களை) உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னணியில் சிலர் வெறும் ஊகத்தின் மேல் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வெறும் சாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலையின் ஊகத்தை சோதிடரின் புத்திசாலித்தனம், அனுபவங்களின் பின்னணியில் சில தடவை சரியாகச் சொல்லி விடுகின்றனர்.

3. அனுபவம் - சோதிட அனுபவம் அதிக வேலை செய்கிறது. சொல்லிச் சொல்லி என்ன செய்ய வேண்டும் என்னும் திறமை தெரிவிக்கிறது.
சோதிடரின் வெற்றிக்கு சோதிடத்தில் அவர் முன்பே சொல்லிச் சொல்லிப் பெற்றிருக்கும் அனுபவம் மிகவும் உதவிக்கு வருகிறது. பாடிப்பாடி பாடகன் ஆகு என்று சொல்லும் பழமொழி போல பொய்யை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் இறுதியில் பொய்யே ஒரு தடவை உண்மையாகி விடுகிறது.

4. வாக்குச் சாதுரியம் - இதுவே சோதிடனின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திறமையாகப் பேச வராதவன் சோதிடனாக இருக்க மாட்டான். இருக்க முடியாது.

இது சோதிடனின் வெற்றிக்கு முதன்மையானதாக இருக்கிறது. ஈர்க்கும்படியான பேச்சு, சொல்லுக்குச் சொல் சுலோகங்கள் சொல்வது, இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் சில மேற்கோள் சொல்வது, பலன் சொல்லும்போது குறுக்குச் சுவற்றின் மீது விளக்கு வைத்ததைப் போல சொல்வது ஆகிய இவை யாவுமே மிக மிக உதவிக்கு வருகின்றன. வாக்குச் சாதுரியமே சோதிடம் சொல்வதில் இருக்கும் உயிர். சோதிடம் சொல்பவனுக்கு சோதிடம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடம்பரம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

5. சாதகனின் மனநிலை அறிந்து கொள்ளல்

சாதகனின் மனநிலை, துக்கம், கவலை, அச்சம், நிறைவேறாத ஆசை, பிற ஆசைகள் முதலிய மனத்தின் நிலைமையை சோதிடன் பயன்படுத்திக் கொண்டு ஊகம் செய்கிறான். திறமையான ஊகம் சில சமயம் உண்மையாகலாம்.

6. சாமானிய அறிவு

சோதிடனின் சாமானிய அறிவு, விஞ்ஞான அறிவு, சமூக மற்றும் குடும்ப அறிவு ஆகிய அனைத்துமே சோதிடம் சொல்பவனுக்கு முன்வந்து கை கொடுத்து உதவுகின்றன. சந்தர்ப்பம், சூழ்நிலையை அறிந்து அதற்குத் தகுந்தபடி பவிஷியம் சொல்பவன் வெற்றி பெறுவான். பலதுறை அறிவு படைத்த ஒருவன் சோதிடம் சொல்வதில் சிறந்து விளங்குவான்.

7. சந்தர்ப்பம் அறிய வல்லவனின் ஊகம்

நிலைமை, சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவைகளைத் திறம்பட அறிந்து கொண்டு திறமையாக ஊகம் செய்வதில் வல்லமையுடைய சோதிடன் அதிகமாக வெற்றி பெறுகிறான்.

8. எந்த சோதிடனும் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே சொல்வதில்லை. ஒருவேளை சொன்னால்கூட குறுக்குச் சுவற்றின் மேல் இட்ட விளக்கு நாலா பக்கமும் ஒளி கொடுப்பதைப் போல அது எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துமாறு சொல்வதாக இருக்கும்.

அதிகப்படியான சோதிடர்கள் நிகழ்ச்சி, சம்பவம், விளைவுகள் ஆகியன இயற்கையாக நடந்ததன் பிறகு அவைகள் எப்படி நடந்தனவென்று ஆய்வு செய்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சி நடப்பது, வெற்றி _ தோல்வி ஏற்படுவது, வியாதி வருவது _ அது குணமாவது, விபத்து உண்டாவது, இலாப _ நட்டம் ஏற்படுவது ஆகியன பற்றி முன் கூட்டியே உறுதியாக உரைக்கும் சோதிடர் இல்லவே இல்லை. ஒருவேளை சொன்னாலும், குறுக்குச் சுவற்றின் மேல் விளக்கு ஏற்றி வைப்பதைப் போல சொல்கின்றனர்.

9. பல சோதிடம் பொய்யான அனேக எடுத்துக்காட்டுகள்

சில சந்தர்ப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை வெளிக்கொண்டு வருவதற்குப் பரப்புரை செய்யப்படுவதில்லை. விஞ்ஞானமில்லாத, உண்மை இல்லாத, தர்க்கத்திற்கு உட்படாத மற்றும் மயக்கம் (பிரமை) என்று மேலே சொல்லப்பட்ட எல்லாம் நிரூபணங்களால் தெளிவாகி உள்ளன. அவ்வளவின் மேல் சோதிடத்தை உண்மையாக்கிக் காட்டுகிறேன் என்பவர் என்னுடைய ஒரு சாதகத்தின் மேல் கேட்கும் 10 கேள்விகளில் 8 கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுத்து உண்மையை மெய்ப்பித்து ரூபாய் ஒரு கோடியைப் பரிசாகப் பெறலாம். சவாலை ஏற்றுக் கொள்ளும் எந்தத் தனிப்பட்ட மனிதரானாலும் அல்லது குழுவானாலும் கீழ்க்கண்ட எனது கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விவரம் பெறுக.

10. சவால் 1: 1 கோடி

பவிஷியம் _ இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் ஒரு சாதகத்தின் மீது கேட்கும் 10 கேள்விகளில் 80 விழுக்காடு சரியான பதிலுக்கு ரூபாய் ஒரு கோடி சவால். இது சரியாக எதிர்கால பலன் சொல்லும் தைரியசாலிகளுக்குக் கொடுக்கப்படும். ரூபாய் ஒரு கோடி சவாலின் விவரங்கள்:

இந்த ரூ. ஒரு கோடி சவாலுக்குக் கொடுக்கப்படும் சாதகம் ஒரே ஒரு சாதகம் மட்டுமே. அப்படிக் கொடுக்கப்படும் ஒரு சாதகத்தின் மேல் 10 கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சரியான கேள்விகளாக இருக்கும். எந்த விதம் மற்றும் எந்த விடயங்களுடன் தொடர்புடைய கேள்விகள் என்பது பற்றிய விவரங்கள், அத்துடன் தீர்மானிக்கப்பட்ட கேள்விகள் எவை மற்றும் அவைகளுக்கான பதில்களை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த 10 கேள்விகளில் (ஏ _ பாகம்) 1 முதல் 6 கேள்விகள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால், (பி _பாகம்) கேள்வி 7 முதல் 10 வரையிலான 4 கேள்விகள் 3 திங்கள் பவிஷிய காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சி பற்றிய கேள்விகளாக இருக்கும். சோதிடர்கள் எதிர்கால பலன் சொல்பவராக இருப்பதனால் அவர் குறிப்பிடும் காலத்தில் நடக்கும் கேள்விகள் மிக முக்கியமாக இருக்கின்றன. அதிகப்படியான சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷியம் 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை சரியானது என்று சொல்லிக் கொள்வதால் அவர்கள் சொல்வதைப் போலவே நாம் அவர் சொல்லும் எதிர்கால பலன் 80 விழுக்காடு மற்றும் அதைவிட அதிகம் சரியான பதில் சொல்பவருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

அந்த 80 விழுக்காடு எப்படி இருக்க வேண்டு மென்றால் ஏ _ பாகத்தில் _ அப்படி என்றால் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேலுள்ள 6 கேள்விகள் குறைந்தது 5 எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும். இப்படி 5 கேள்விக்கான பதில்களில் ஒரு கேள்விக்கான பதில் தப்பானாலும் 5 கேள்விக்கான பதில்களும் தப்பு என்றே அறிவிக்கப்படும்.

பி பாகத்தில் அதாவது கேள்வி 7லிருந்து 10 வரையிலான பவிஷிய கால 3 திங்களுக்குள் நிகழும் சம்பவம் தொடர்பான 4 தீர்மானமான கேள்விகளில் குறைந்தது 3 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கொடுக்க வேண்டும். இப்படி 10 கேள்விகளில் குறைந்தது 8 கேள்விகளுக்கு (80%) சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகள் எளிதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கும். இறந்த மற்றும் நிகழ்காலம் பற்றிய கேள்விகள் அனைத்துமே எளிதாகவும் மற்றும் சாதாரணமானதாகவும் இருக்கும். சோதிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் கூட 3 திங்களுக்குள் நிகழக் கூடியதான சாதாரண கேள்விகளாக இருக்கும். ஆயுள் காலம், மரணம், தனயோகம், திருமணம், மக்கள் பேறு முதலான நீண்ட காலத்தில் நிகழும் சம்பவங்கள் பற்றிய கேள்விகள் இல்லை. மிகுதியான நன்னடத்தை, ஊர்திகள் (வாகனம்) வாங்குதல், வழிபாட்டு இடங்களுக்குப் பயணம் செய்தல் ஆகியவைகளின் மேல் கேள்விகள் இருக்கும்.
சவால் 2:  ரூ. 10 இலக்கம்
வெறும் இறந்த காலத்தின் மேல் மற்றும் 10 சாதகங்களின் மேல் வெறும் 3 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில்களின் மேல் ரூ.10 இலக்கம் சவால். இது பவிஷியம் சொல்வது பற்றி அதைரியப்படும் பயந்தாங் கொள்ளிகளுக்காக. சில சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷிய வாணியில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்வது நடக்கக் கூடியதல்ல. நீங்கள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் கேள்வி கேட்டு நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்கிறோம் என்று சொல்கிறீர்கள். அந்த அச்சப்படும் சோதிடர்களுக்காக இந்தச் சவாலை இப்போது விடுக்கிறேன்.

10 சாதகங்களின் மேல் வெறும் 4 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதிலுக்குச் சவாலாக நான் 10 சாதகங்களைக் கொடுக்கிறேன். அந்த சாதகங்களின் மீது பின்வரும் கேள்விகள் கேட்கப்படும்.

கேள்வி 1: எந்த சாதகர் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்? எந்த சாதகர் இப்பொழுது மரணமடைந்தவர்? இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும்.

கேள்வி 2: அந்தச் சாதகங்களில் எந்தச் சாதகம் பெண்ணுக்குரியது, எந்தச் சாதகம் ஆணுக்குரியது என்று சொல்ல வேண்டும்.

கேள்வி 3: அந்த பத்து சாதகங்களில் எந்தச் சாதகருக்குத் திருமணம் ஆகி இருக்கிறதோ அவருடைய முதல் திருமண காலம் அதாவது திருமண நாள், திங்கள், ஆண்டு ஆகியவைகளைத் தெரிவிக்க வேண்டும்.

கேள்வி 4: சாதகன் படித்த படிப்பு அதாவது பத்து சாதகத்தில் யார் எந்த வகை பல்கலைக்கழக பட்டம் அல்லது அதை விடவும் அதிகம் படித்திருந்தால் அப்படி அதிகம் படித்துப் பெற்ற பட்டம் குறிப்பிட வேண்டும். சான்று அளிக்கப்பட வேண்டும். (டிப்ளொமா மற்றும் அதைவிடக் குறைந்த கல்வியைக் கணக்கில் எடுக்கக்கூடாது.) பட்டப்படிப்பு அல்லது அதைவிட அதிகப் படிப்பு படித்தவரை மட்டும் சொல்ல வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் ரூ.10 இலக்கம் வெகுமதி இருக்கிறது. ஒவ்வொரு சாதகத்தின் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் ((Column) வீ. வாழ்பவர் / இறந்தவர், வீவீ. பெண் / ஆண், வீவீவீ. திருமணம் ஆகியிருந்தால் திருமணமான நாள், திங்கள் மற்றும் ஆண்டு கிறித்தவ காலண்டர் (நாள்காட்டி)படி, திருமணம் ஆகவில்லையானால் ஆகவில்லை என்று, வீஸ். பட்டம் பெற்றவர் / பெறாதவர் போன்ற விவரங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான விவரங்களுக்கு மூடத்தனம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் (மௌடிய மத்து வைச்சாரிகே) என்ற கன்னட நூலில் சோதிடத்திற்கு ரூபாய் கோடி சவால் என்னும் அத்தியாயம் படிக்கவும்.

பொய்யான ஜோதிடர்கள்
பலசோதிடங்கள் (பலன் சொல்லும் சோதிடங்கள்) அதிகமான தடவைகளில் பொய்யாய்ப் போனதற்கான பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. இங்கே சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

11.1. 1982இல் எக்கனாமிக் டைம்சில் வைசம்பாயா என்னும் சோதிடர் எழுதிய பல சோதிடம் முற்றிலும் பொய்யாகி விட்டது.

11.2. 1983இல் ஜகஜித்பால் என்பவர் சன்டே அப்சர்வர் என்ற வார இதழில் தூமகேது மற்றும் கிரகண பலத்தைப் பற்றி பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று தீர்மானமாகச் சொன்னது எதுவும் நடக்கவில்லை.

11.3.: அஷ்ட்ட கிரகங்களின் (8 கிரகங்கள்) யோக சம்பந்தம் குறித்து எல்லா சோதிடர்களும் ஆபத்து, நாசம், கேடு, வெள்ளம், தீ, பூகம்பம், போர் முதலியன நடக்கப் போகின்றன என்று பெரும் பரப்புரையைச் செய்தார்கள். ஆனால் அஷ்ட்ட கிரகம் அமைதியாக வந்து போனது. யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

11.4: இராஜீவ் காந்தியின் கொலையைப் பற்றி எந்த ஜோதிடனும் முன்னதாகச் சொல்லவே இல்லை. கொலையுண்ட பிறகு நான் முன்பே சொல்லி இருந்தேனே என்று சொல்லத் தொடங்கினார்கள்.

11.4.1: 21, மே, 1991இல் இராஜீவ் காந்தியின் கொலை ஆனது. கொலையாகும் முன்பு மே, 1991இல் இல்லஸ்ட்ரேட் வீக்லியின் 1991க்குப் பிறகு இராஜீவ் காந்தி இந்த நாட்டின் முக்கிய தலைவராகி ஆட்சி நடத்துவார் என்று எழுதியது.

11.4.2: 1991 மே திங்களுக்கு முன்பே இந்த நாட்டின் மிகையான பத்திரிகைகள், அதிகப் படியான சோதிடர்கள் இராஜீவ் காந்திக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பல ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுவார் என்று சொன்னார்கள்.

11.4.3: புகழ்பெற்ற சோதிடர் கே.எஸ்.சரஸ்வதி இதையே ஆதரித்தார்.
11.4.4: புகழ்பெற்ற சோதிடர் பி.கே.சக்கரவர்த்தி 1991க்குப் பிறகு இராஜீவ் காந்திக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று எதிர்கால பலன் சொன்னார்.
11.4.5: மற்றொரு புகழ்பெற்ற சோதிடர் ஏ.கே.இராசா என்பவர் அதே சந்தர்ப்பத்தில், இராஜீவ் காந்தி 10ஆவது லோக்சபை (மக்கள் அவை) ஆளும் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து அவருடைய தலைமையில் முழுமையாக அய்ந்து ஆண்டுகள் அவர் இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருப்பார் என்று  எதிர்கால பலன் சொன்ன இரண்டாவது வாரத்திலேயே அவரது படுகொலை நிகழ்ந்துவிட்டது.
11.4.6: வந்தனா முண்டேல்கர் என்ற வேறொரு சோதிடர் இராஜீவ் காந்தி சாவது தெரிந்திருந்தது; ஆனால் தான் வேண்டுமென்றே சொல்லவில்லை என்று கனமானதொரு பொய்யை அனுப்பினார்.
11.4.7: இன்னுமொரு சோதிடர் கே.என்.ராவ் என்பவர் இராஜீவ் காந்திக்கு சாவு வருவது தனக்கு முதலிலேயே கட்டாயம் தெரியுமென்றும் அதனால்தான் இராஜீவ்காந்தி 1991 சூலையிலிருந்து ஆகஸ்ட் நடுவிற்குள் இறப்பார் என்றும் தெரிவித்தேன் என்றும் கணக்கு கொஞ்சம் தப்பியதால் அவருடைய இறப்பு சற்று வேகமாகவே வந்துவிட்டது என்றும் பெரிய இரயில் விட்டார்.
இப்படியே தேர்தல் பற்றி, மந்திரி பதவிகள் பற்றி, ஆளும் கட்சிகள் பற்றி, இடங்கள் பற்றி ஒவ்வொரு தேர்தலிலும் இந்தச் சோதிட இரயில் விடும் சோதிடர்கள் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விடும் இரயிலுக்கு தண்டவாளமும் இல்லை, சக்கரங்களும் இல்லை. இருந்தாலும் அவர்களது சோதிட இரயில் அப்பாவிகள், மூடர்கள் ஆகியோர் மீது ஓடுகிறது.

-----------------------சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வைநூலிலிருந்து...

19 comments:

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டிலும் இந்த நிலையா? - மகாவெட்கம்!


தமிழ்நாட்டிலும் இந்த நிலையா? - மகாவெட்கம்!

தேவிப்பட்டினத்தில் கோயிலில் பெண்ணுக்கு நிர்வாணப் பூஜையாம்!

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்பது உண்மைதானே!

ராமநாதபுரம், ஜூன் 18_ பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை நிர் வாணப்படுத்தி பாலியல் குறும்புகள் செய்த, தேவி பட்டினத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய் தனர்.

ராமநாதபுரம் மாவட் டம், தேவிப்பட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந் தவர் கணேசமூர்த்தி (35). அதிமுகவைச் சேர்ந்த இவர் தேவிப்பட்டினம் கிளை ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உள்ளார். தேவிபட்டினம், நவ பாஷாண கோயிலுக்கு வரு வோரை அணுகி தோஷம் கழிக்கப் பரிகாரம் என்ற பெயரில் பூஜை செய்து வந்துள்ளார். 3 நாள்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட் டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தொப்புள்கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்ததால் பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன் தேவிபட்டினம் கோயி லுக்கு அழைத்து வந்தனர்.

அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக் குள் கணேசமூர்த்தி தனி யாக அழைத்துச் சென் றுள்ளார். பூஜையின்போது அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந் திருந்த அந்தப் பெண் ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில் வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால் பார்க்க முடியாது.

இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார பூஜை செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த பெண்ணை நிர் வாணமாக்கியுள்ளார். சிறிய லிங்கத்தை வைத்து பெண் ணின் உடல் முழுவதும் 108 முறை தடவி கொடுத்து, பாலியல் குறும்புகளில் ஈடுபட்டுள்ளார். கணேச மூர்த்தியின் இந்த பூஜை குறித்து, பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக சொல்லவில்லை. ஊருக்குச் சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார்.

தேவிபட்டினத்தைச் சேர்ந்த சுற்றுலா வழி காட்டி கற்பூரசுந்தரம் என் பவர்தான் பரிகார பூஜைக் காக கணேசமூர்த்தியை சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் ணின் உறவினர்கள் கற் பூரசுந்தரத்திடம் தெரிவித் துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம், கணேசமூர்த் தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார். ஆத்திர மடைந்த கணேசமூர்த்தி கற்பூரசுந்தரத்தை கடுமை யாகத் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டி யுள்ளார்.

இதையடுத்து கற்பூர சுந்தரம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், பெண் களை இரவில் தேவிபட்டி னம் கோயிலுக்கு அழைத் துச் சென்று நிர்வாணப் படுத்தி, பாலியல் குறும்பு கள் செய்து வந்த விவரத் தையும் விரிவாக தெரிவித் துள்ளார். கொலை மிரட் டல் விடுத்த வழக்கில் கணேசமூர்த்தியை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பெண்களிடம் பாலியல் குறும்புகள் செய்தது குறித்து, வழக்கு ஏதும் பதியவில்லை.

எப்போது வரும் தடை?

வெளியூரைச் சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேசமூர்த்தி தனது பாலியல் குறும்புகளை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டு களாகவே பெண் பக்தர் களை குறி வைத்து இந்தப் பரிகார பூஜைகளை செய் துள்ளார்.

இளம்பெண்கள் என்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்யவேண்டும் என்பா ராம். கோயில் வளாகத்தில் இதுபோன்ற ஏமாற்று மனிதர்கள் ஏராளமா னோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என பொது மக்கள் கடவுளிடம் சொல் லாமல் காவல்துறையினரி டம் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82376.html#ixzz352kgIPCv

தமிழ் ஓவியா said...


நுகம்பலில் இரு பிரிவினர்க்கிடையே மோதல் - அரசு தலையிட்டுத் தடுத்திடுக!


செங்கற்பட்டு வட்டம், சித்தாமூர் ஒன்றியம், நுகம்பல் ஊராட்சியில் இரு பிரிவினர்க்கிடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டுள்ளன. கோவில் திருவிழாவை முன்வைத்து இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. காவல்துறை ஒரு சார்பாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றத்துடன் சொல்லுகிறார்கள்.

மற்றொரு தருமபுரி நாயக்கன் கொட்டாயாக மாறுவதற்குமுன் தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா?

Read more: http://viduthalai.in/e-paper/82381.html#ixzz352kvW9OG

தமிழ் ஓவியா said...


அளவுக்கு மீறிய உற்சாகம்


உற்சாகமாக இரு, தைரியமாக இரு என்கின்ற அறிவுரைகள் சிறந்தவையேயாகும். ஆனால், அளவுக்கு மீறிய உற்சாகமும், கண்மூடித்தனமான துணிவும் பயனளித்துவிடாது என்பதோடு, எதிர்ப்பான பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் ஆகிவிடலாம். - (குடிஅரசு, 29.9.1945)

Read more: http://www.viduthalai.in/page-2/82385.html#ixzz352pVCGDu

தமிழ் ஓவியா said...


2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் 55 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தேர்ச்சி தகுதி கிடைக்க வேண்டும்




நமது தமிழக முதல்வர் அவர்கள் 2014 இல் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத் தில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீட்டு பிரி வினரில் 55 சதவிகித மதிப்பெண் பெற்ற வர்களும் அரசு வேலை பெற தகுதியு டையவர்கள் என்று அறிவித்தார்கள்.

அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு பணியில் சேர காத்திருக்கிறார்கள். இதே போன்று 2012 ஆம் ஆண்டில் நடை பெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி பின்பற்ற வேண்டும் என்று சட்டசபையில் பல தலைவர்கள் எடுத்துக்கூறியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

2012 ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும் இம் முறை பின்பற்றப்பட்டால் எம் போன்ற பலரது வாழ்வு வசந்தமாகும்.

2010 ஆம் ஆண்டில் மே மாதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு தகுதித்தேர்வு எழுத வேண்டிய அவசிய மில்லை.

அவர்களுக்கு உரிய பணியிடம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் 2010 மே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்களுக்கு இதுவரை பணியிடம் வழங்கப்பட வில்லை.

ஒருவர் ஆசிரியர் தகுதிபெற வேண்டு மானால் கண்டிப்பாக மூன்று ஆண்டுகள் கல்லூரியில் சேர்ந்து படித்து இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என 2012 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் முற்றிலும் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் நிரந்தர பணியிடம் பெற்றுள்ளனர்.

எனவே, இதுகுறித்து நமது தமிழக அரசு, எம் போன்றவர்களுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி அளிக்கப்பட்டு தகுந்த பணியிடம் அளிக்கவேண்டும் என்று பணிவன்புடன் வேண்டுகிறோம்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள

வேலையில்லா மாற்றுத்திறனாளி
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்

Read more: http://www.viduthalai.in/page-2/82390.html#ixzz352pfUgZv

தமிழ் ஓவியா said...


இங்கல்ல...


கத்தார் நாட்டில் ஷபியத் கலிஃபா பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற இந்தியருக்கு 40 சவுக்கடி தண்டனை வழங்கிட நீதிபதி உத்தரவிட்டார். ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ஒன்றரை மாதங்களுக்கு ரத்துச் செய்யப்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/82458.html#ixzz358GqdMIR

தமிழ் ஓவியா said...

இந்திதான் தொடர்பு மொழியா? உள்துறை முடிவுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 19-_ தொடர்பு மொழியாக இந்தியை முதன்மைப்படுத்தும் மத்திய உள்துறையின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:-_

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரி மைப்படி வெளியிடப்படும் ஆணை -_ சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு (தி எகானமிக் டைம்ஸ்) 17.-6.-2014 அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும். 27-.5-.2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாய மாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற தங்களுடைய சமூக வலைத் தளங் களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால், இந்தியைப் பயன்படுத்து வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (It is ordered that Government Employees and Officials of all Ministries, Departments, Corporations, or Banks, who have made official accounts on “Twitter”, “Face Book”, “Google”. “You Tube” or “Blogs” should use Hindi, or Both Hindi and English but give priority to Hindi) மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டு, அது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டரில் இந்தி மொழியைத் தான் பயன்படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பின் தொடக்கமே!

ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசா ணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. 1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப்பதிவு செய்து வைத்திருக்கிறது. மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு - ஆட்சி மொழி பற்றிய பிரிவு - கட்டாயமாக அரபிக் கடலிலே தூக்கி எறியப்பட வேண்டுமென்றும்; நல்ல நாட்டுப்பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடி மக்களான தமிழ் மக்களை, கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே இது என்றும்; மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எடுத்துரைத்து எச்சரித்ததை யாரும் மறந்து விடவில்லை. 4.-3.-1965 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.க. வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமானஅடல் பிகாரி வாஜ்பாய் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் மொழிப் பிரச்சினையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும், ஆட்சிமொழிகளாகும் வரை, ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப் போக்குக்கு விட்டு விடலாம் என்று அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கியதை மறந்து விடத் தான் முடியுமா?

பண்டித நேருவின் வாக்குறுதி!

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பை எதிர்த்திடவும், எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதி பூண்டுள்ளது. இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம் வரையில், மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப் பட மாட்டாது என்றும், பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனது உரையில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும், மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்கு உரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில் தேவையான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அதன் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான, இலக்கியப் பண்பாட்டு வளம்நிறைந்த, தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் .இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாக மேற்கொண்டு வரும்நிலைப்பாடாகும்.

வேண்டாம் அவசரம்!

இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பேணிக் காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது , இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப் பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும். எனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பொருளா தார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல் படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/82475.html#ixzz358HqGlqU

தமிழ் ஓவியா said...


குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு


சென்னை, ஜூன் 19- குடும்ப அட்டை பெறு வதில் பிரச்சினைகள் ஏதே னும் இருந்தால் அவை குறித்து செல்பேசியில் புகார்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை பெறு வதற்கு விண்ணப்பித்த பிறகு அதன் நிலைமை குறித்து செல்பேசி குறுஞ் செய்தி மற்றும் மின்னஞ் சல் மூலம் விண்ணப்ப தாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி ஆணை யாளர் அலுவலகங்களில் அமைச்சர் இரா.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இந்த அலுவ லகங்களில்தான் மக்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் நடை பெறுகின்றன.

புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர் களுக்கு, 60 நாள்களுக்குள் உரிய ஆய்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும், மனுக்களை நிராகரிக்கும் போது அவற்றின் விவரங் களை மனுதாரர்களுக்கு தாமதமின்றி தெரியப் படுத்த வேண்டும் எனவும், செல்போன் அல்லது மின்னஞ்சல் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மனுவின் நிலை குறித்து தகவல் தெரிவிக்க வேண் டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தப் பட்டனர்.

எஸ்.எம்.எஸ்.-மின் னஞ்சல்: விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) அல்லது மின்னஞ்சல் மூலமாக தவறாமல் வழங்க வேண் டும். குறிப்பிட்ட காலக்கெ டுவுக்குள் தகவல் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர் வடக்கு அல்லது தெற்கு அல்லது மண்டல உதவி ஆணையர் கள் ஆகியோரின் செல்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கைகள் அனுப்பியும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறும் தகவல்கள் கிடைக்காவிட்டால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை ஆணையா ளரின் அலுவலக மின்னஞ் சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம். அலுவலர் களின் செல் பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறையின் இணையத ளத்தில் அளிக்கப்பட் டுள்ளது.

தொலைபேசி எண்கள்: நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் தங்க ளது புகார்களைத் தெரி விக்க, சென்னை மாநகரில் உள்ள அந்தந்த மண்டல அலுவலக உதவி ஆணை யாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆணையாளர் அலுவலகத் தில் செயல் படும் புகார் பிரிவையும், தொடர்பு கொள்வதற்கு வசதியாக ஏழு தொலை பேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறுஞ் செய்தி அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்கள்:

94454 64748, 72999 98002, 86800 18002, 72000 18001. புகார்களைத் தெரி விக்க தொலைபேசி எண் கள்: 72990 08002, 86800 28003, 72000 48002.

Read more: http://viduthalai.in/page-5/82449.html#ixzz358IgMcX8

தமிழ் ஓவியா said...


இலங்கையில் இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்

சென்னை, ஜூலை 19- இலங்கையில் இஸ் லாமியர்கள்மீது சிங்களவர்கள் வன்முறை வெறியாட்டம் போடுவதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறு பான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப் பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவ தற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.

இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிச் சின்னாபின்னப்படுத்திய சிங்கள வெறியர் கள், கடந்த சில நாள்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான முஸ்லீம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளார் கள். 2012 ஆம் ஆண்டு மியான்மா நாட்டில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட் டனர்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக வும், தொடர்ச்சியாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கொழும்பு நகருக்கருகில் அலுதமா பகுதியில் கடந்த நான்கு நாள்களுக்கு முன் திடீரென வன் முறை மூண்டு, முஸ்லீம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதலில் மூன்று பேர் பலியாகியிருக்கிறார்கள். நூற்றிற் கும் மேற்பட்டோர் படுகாயமுற்றிருக்கிறார் கள்.

மேலும் பள்ளிவாசல்களும், முஸ்லீம் களுக்குச் சொந்தமான வீடுகளும், கடை களும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே இலங்கை அரசின் அமைச்சர் பைசர் முஸ்தபா என்பவர், கல்லுரி விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது மற்றொரு பிரிவைச் சேர்ந்த வர்கள், அவரைத் தடுத்து நிறுத்தியதோடு, அவரைக் கல்லுரியிலிருந்து வெளியேற விடாமல் சிறைப்பிடித்திருக்கிறார்கள்.

பின்னர் காவலர்கள் வந்து ஒரு மணிநேரத் துக்குப் பின் அவரை மீட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் மற்றும் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இலங்கையின் இந்தக் கடினமான போக் குக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள் ளது. வேறு பல நாடுகளும் கண்டனம் தெரி வித்துள்ளன. தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து தங்கள் கண்ட னத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத் திலே போராட்டம் நடத்திப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் இருக்கின்றன.

இலங்கையில் இதுவரை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இனப் படுகொலை நடத்தி முடித்ததை அடுத்து, இஸ்லாமியர்களும் கடுமையாகத் தாக்கப் படுகின்ற நிலையில், அவர்களைப் பாது காக்கும் வகையில் இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/82483.html#ixzz358JEupLK

தமிழ் ஓவியா said...


மூடத்தின் முடை நாற்றம்: ஆட்சியாளர்களின் தீய நடவடிக்கைகளால் சபரிமலையில் தெய்வ அருள் குறைந்துள்ளதாம்


திருவனந்தபுரம், ஜூன் 19_ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தீய நட வடிக்கைகளால் சபரிமலை யில் தெய்வ அருள் குறைந்து வருவதாக தேவபிரசன்னத் தில் தெரிய வந்துள்ளதாம்.

கடந்த 2006ஆம் ஆண்டு சபரிமலை அய்யப் பன் கோயிலில் பிரபல ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணிகிருஷ்ண பணிக் கர் தலைமையில் தேவ பிர சன்னம் நடத்தப்பட்டது. அப்போது, சபரிமலை கோயிலில் ஒரு இளம் பெண் தரிசனம் செய்ததா கவும், அவர் அய்யப்பவிக் ரகத்தை தொட்டதாகவும் உண்ணிகிருஷ்ண பணிக் கர் கூறினார்.

மறுநாளே நடிகை ஜெயமாலா, தான் சபரி மலை கோயிலுக்கு தரி சனம் செய்ய வந்ததாகவும், அப்போது நெரிசலில் தடுமாறி விழுந்தபோது அய்யப்பன் விக்ரகத்தை தொட்டதாகவும் கூறியிருந் தார். இதுகுறித்து குற்றப் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்ணிகிருஷ்ண பணிக் கரும், நடிகை ஜெயமாலா வும் நாடகமாடியது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் கடந்த 8 ஆண்டு களாக சபரிமலையில் தேவ பிரசன்னம் நடத்தப்பட வில்லை. இந்நிலையில், சபரிமலையில் மாளிகை புரம் கோயில், பஸ்மக் குளம் உட்பட சில பகுதி களில் சீரமைப்பு பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக தேவபிரசன் னம் நடத்த முடிவு செய் யப்பட்டது. இதன்படி, கோழிக்கோடு செறுவள் ளியை சேர்ந்த ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் நேற்று தேவ பிரசன்னம் தொடங்கியது. இதில் 3 முக்கிய ஜோதிடர் கள் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் தேவபிர சன் னம் நிறைவடைந்தது.

பின்னர் ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:

சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் ஆட்சியாளர் கள் மற்றும் சில அதிகா ரிகள் கடந்த பல ஆண்டு களாக சில தீய நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது தெய்வ கோபம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சபரிமலையில் தெய்வ அருள் குறைந்து வருகிறது. எனவே தெய்வ அருளை அதிகரிக்கும் வகையில் உட னடியாக பரிகார பூஜை களை தொடங்க வேண்டு மாம். பரிகார பூஜைகள் நடத்தினால் மட்டுமே பழைய தெய்வ அருளை திரும்ப கொண்டுவர முடி யுமாம்.

அய்யப்பனுக்கும் மாளி கைபுரத்து அம்மனுக்கும் சபரிமலையில் நடத்தப் பட்டு வரும் பல செயல் களில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இதற்கு பரிகார மாக சபரிமலையில் உள்ள அதிகாரிகளும் ஊழியர் களும், விளிச்சுசொல்லி (கடவுளிடம் மன்றாடுதல்) பிராயசித்த சடங்குகளை நடத்த வேண்டுமாம்.

(அதிலும் பார்ப்பனச் சுரண்டல் தானோ!)
_ இவ்வாறு நாராயணன் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/82482.html#ixzz358JMYNCg

தமிழ் ஓவியா said...


காரவன் கேள்வி


காரவன் 1.4.1978 ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ள தலையங்கத்தின் சுருக்கம் வருமாறு:-

கடவுளைப்போல், கடவுள் அவதாரங்களும் அதிகாரம் இருக்கும் இடத்தைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருப் பார்கள். அன்பையும், கருணையையும் உபதேசிக்கும் சர்ச்சுகள், ஜெர்மனியில் ஹிட்லர் பல லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த போது, சுட்டு விரலை உயர்த்தியதுண்டா?

இத்தாலியில் சர்வாதிகாரத்தை கட்ட விழ்த்துவிட்ட முசோலினிக்கு போப் ஆசிர்வாதம் தந்தார். காஞ்சி சங்கராச்சாரியிலிருந்து வீதி ஓரத்து சாதுக்கள் வரை இந்திராகாந்தி அதிகாரத்தில் இருந்த போது அவருக்குத் துதிபாடி வந்தனர்.

இந்திராகாந்தி உறுதியான ஒரு மூடநம்பிக்கைவாதி என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் கொஞ்சம் பொது அறிவு அவருக்கு இருந்தது. இப்போது ஜனதா அமைச்சர்கள் இந்த மூடநம்பிக்கை விவகாரத்தில் இந்திராகாந்தியையும் தோற்கடித்து விடுவார்கள் போலிருக்கிறது.

பல லட்சம் ரூபாய் பாழடித்து நடத்தப்பட்ட ஆமதாபாத் யாகத்துக்கு வாஜ்பாயும், ராஜ் நாராயணனும் நேரில் போய் கலந்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளிடம் இந்தியா உதவியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, இப்படி யாகத்தில் போய் அமைச்சர்கள் கலந்து கொள்வது கேலிக் கூத்தானதாகும்.

தன்னைக் கடவுள் என்று பறைசாற்றிக் கொள்ளும் சாயிபாபா அண்மையில் டில்லியில் கலந்து கொண்ட ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வாஜ்பாய் தலைமை வகிக்கிறார்.

அப்போது வாஜ்பாய் பேசுகையில், அவசர நிலையின் போது பாபாவை வாஜ்பாய் சந்தித்ததாகவும் அப்போது பாபா, வாஜ்பாய் கவலைப்படாதீர்கள் தர்மம் ஜெயிக்கும் என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.

அவசர நிலையின் போதே இந்த பாபா அந்தக் கொடுமைகளை எதிர்த்து இந்த தர்ம உபதேசத்தை செய்திருக்கக் கூடாதா? என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் அதர்மம் ஆட்சி செய்யும் போது இந்த அவதாரங்கள் மக்களிடம் கருணை காட்டியிருக்க வேண்டாமா? இவ்வாறு அந்த தலை யங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/82551.html#ixzz35EXnc49o

தமிழ் ஓவியா said...


மோட்சம் வேண்டுமா?


இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?

இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.

அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருத வில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந் தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா?

அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தாங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.

ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்து கிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?

பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே.

அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத்திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா?

- வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

Read more: http://viduthalai.in/page-7/82549.html#ixzz35EY40haq

தமிழ் ஓவியா said...

யார் காரணம்?

ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர்கள்,

திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக் கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

ஈ.வெ.ரா. பகுத்தறிவு 1.9.1935

Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYQkm5J

தமிழ் ஓவியா said...


பாம்புபற்றிய மூடநம்பிக்கைகள்: வானொலியின் நற்பணி

நேற்று முன்னாள் இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை எனது காரில் வடசென்னைக் கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், வானொலியில் பாம்புகள்பற்றி ஒரு சுவாரஸ்யமான உரையாடல் - கேள்வி பதில் பேட்டியைக் கேட் டேன்!

தமிழில் கேள்வி கேட்ட வானொலி நண்பரும், பதில் கூறிய சென்னை பாம்புப் பண்ணை இயக் குநர் இராஜரத்தினம் அவர்களும் இருவரும் மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை அமைத்தனர்.

பொதுவாக பாம்புகளைப்பற்றி நாம் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றும் பாம்புப் புற்றையே கடவுள் நாகராஜன் வசிக்கும் இடம் என்றும் கருதி அதற்குப் பாலூற்றி பக்தியாக வழிபடுவதும் காலங் காலமாக நாடு முழுவதும் நாம் பார்க்கும் நடப்புகள்.

பாம்புகள் இந்தியாவில் மட்டு மின்றி உலக முழுவதும் சுமார் 2500 வகைகளுக்கு மேல் உள்ளன என்ற அரிய தகவலுடன் பேட்டி துவங்கியது!

அவற்றில் விஷம் உள்ள பாம்புகளும் விஷமற்ற பாம்புகளும் என இருவகை உண்டு என்பதும், பாம்பைக் கண்டால் நமக்கு எப்படி பயமோ, அதுபோலவே பாம்புகளுக்கு மனிதர்களின் அரவம் கேட்டாலே பயம்!

எந்த காட்டு பிராணிக்கும்கூட இதே விதிதான். பாம்பைப்பற்றி பழங்குடி மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளபடியால் அவற்றைக் கண்டு அவர்கள் பயப்படுவதில்லை.

அவைகளிடத்தில் எப்படி பக்குவமாக நடந்து கொண்டு அதன் போக்கில் அதனை விட்டு விட வேண்டுமோ அப்படி விட்டு விடுவார்கள்.

பாம்பினைப் பற்றிய மூடநம்பிக்கைக் கருத்துக்கள் பற்றி திரு. இராஜரத்தினம் அவர்கள் பல அரிய தகவல்களை அடுக்கடுக்காகக் கூறி அசத்தினார்கள். கேள்வி கேட்ட நண்பர் எடுப்பும் சிறப் பானதாக அதற்குக் காரணமாகவும் அமைந்தது!

1. பாம்பு பால் குடிக்கிறது என்பதும் பொய்; கற்பனை, உண்மை அப்படி அல்ல.

2. பாம்பு வகையில் கொம்பேறி மூக்கன் என்று ஒரு வகைப் பாம்பு, கடித்து சாகடிக்கப்பட்ட வரைச் சுடுகாட்டில் எரித்து அந்த பிணத்தின் புகை நுகரும் வரையில் மரத்தில் ஏறிப் பார்த்துதான் அமையும் என்பது சரியான புருடா - பொய்ச் செய்தி.

3. பாம்பு தங்களுக்குத் தொல்லைக் கொடுப் போரை நினைவில் வைத்துக் கொண்டு பழி வாங்கும் வகையில் சாகடிக்கும் என்பது உண்மையே அல்ல. வெறும் கற்பனை.

4. பாம்பு பால் குடித்து, புற்று கட்டிய தன் மூலம் பலருக்குப் பலன் தருகிறது என்பது மூடநம்பிக்கை.

5. பாம்பு மாணிக்கத்தைக் கக்கும் என்பதெல்லாம் கட்டுக் கதை.

6. நாகரெத்தினம் கிடைக்கும் என்பது புதினத்திற்குரியதே தவிர (கற்பனையானது) வேறில்லை.

இப்படி பாம்புகளைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்க மிகுந்த சுவையுடனும் சுவாரஸ்யத்தோடும் சொன்ன நண்பர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

வானொலியின் இத்தகைய சேவைகள் வளரட்டும்!

அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை அகற்றிட இது போன்ற பல செய்திகள் வெகு மக்களைச் சென்றடைதல் அவசியம் ஆகும்.



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/82516.html#ixzz35EYadijw

தமிழ் ஓவியா said...




இந்தியாவில் பாலியல் குற்றங்கள்:

கடமை தவறும் அதிகாரிகள், நீதித்துறையினர், அரசியல்வாதிகள்

அய்.நா. குற்றச்சாற்று

இந்தியாவில் அதி கரித்து வரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக அய்க்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சகோ தரிகளான இரு இளம் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக் கப்பட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப் பட்ட சம்பவம் உள் நாட்டில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர் களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர் பாக இந்திய அதிகாரி களுடன் சர்வதேச குழந் தைகள் உரிமை கண் காணிப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில், இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் பெரிய அளவிலான புறக் கணிப்புக்கு குழந்தைகள் இலக்காக்கப்படுவதாக அய்,.நா குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன் முறைக்குள்ளாவதாக கூறப்படும் இந்தியாவில் பாலியல் வன்முறை செய் யப்படும் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர். இவர்களை நாசப் படுத் தியவர்களில் சரிபாதிப் பேர் நன்கு அறிமுக மானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர் களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளது.

சர்வதேச ஊடகங் களில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக, இது போன்ற பல சம்பவங்கள் உள்ளூர் வீதிகளில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தாமல், அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படா மல், இதன் மூலமாக ஊடகங்களின் பார்வை யில் படாமல் பலரது கவனத்தை ஈர்க்க தவறி விடுகிறது. அவற்றைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்ற சம்பவங்கள் தொடர்பான போதிய தொகுப்புகள் இல்லாமை, மத்திய, -மாநில அரசு களிடையே நிலவும் சீரற்ற சட்டங்களும் அவற்றை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் நீதித் துறையும் தங்களது கட மையை நிறைவேற்ற தவறி விடுவது ஆகிய வற்றை சுட்டுக்காட்டி இந்த கண்காணிப்பகத் தின் துணை தலைவர் பென்யாம் மெஸ்மர் வேதனையை வெளிப் படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளின் போக்கு பாலியல் வன்முறை சம்பவங்களை விபத்து என்றும் சில வேளை களில் சரி - சில வேளை களில் தவறு என்றும் கேலியாக கருத்து கூறிய சில இந்திய அரசியல் வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண் சிசுக் கொலை, பெண்களை புறக்கணித்து கைவிடுதல், பெண் கருக்கலைப்பு ஆகி யவற்றை தடுக்க இந்தியா கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அய்க் கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்த பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82500.html#ixzz35EYmlB6u

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


இனிமை தானோ! இறைத் தரிசனம் கிடைத்து விட்டால் அனைத்தும் இனிமை தான் என்பதை உணர்த் துவதே திருப்பதி தலத் தில் லட்டுப் பிரசாதத்தின் தாத்ப்ரியமாம் அப்படியா னால் திருப்பதி செல்லும் பக்தரின் கழுத்தை அறுத்து நகைகளைக் கொள்ளை அடித்துள்ளார்களே - இதுவும் இனிமையின் பட்டியலில் இடம் பெறுமோ?

Read more: http://viduthalai.in/e-paper/82505.html#ixzz35EYyVxkD

தமிழ் ஓவியா said...


இலங்கையில் குழந்தை பெற்றால் சிங்கள பெண்களுக்கு பரிசு தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பாம்!


சென்னை, ஜூன் 20: இலங்கையில் குழந்தை பெறும் சிங்கள பெண்க ளுக்கு பரிசு கொடுத்து அந்நாட்டு அரசு கவுரவப் படுத்துகிறது. அதே சமயம் தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பு செய்கிறது. இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புலம் பெயர் தமிழர்கள், காணொ லிக்காட்சி மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.

இலங்கையில் நடை பெறும் சிங்கள குடியேற் றம், தமிழ் பெண்கள் கரு கலைப்பு உள்பட பல்வேறு மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனவே, புதிதாக மத்தி யில் அமைந்துள்ள பாஜக அரசுக்கு, இலங்கை பிரச் சினையை தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கை வைக்கும் வகையிலும் காணொலிக் காட்சி மூலம் பத்திரிகையாளர்களி டம் கலந்துரையாடலுக்கு திரைப்பட இயக்குநர் கவுத மன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தபடியே, காணொலிக் காட்சி மூலம் சென்னை பத்திரி கையாளர் மன்றத்தில் இருந்த செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தனர்.

இதில் கனடா நாட்டில் வாழும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை இணைத் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன், டென்மார்க்கை சேர்ந்த தமிழ் இளையோர் அமைப்பின் நிர்வாகி சுகுநேந்திரன், டென் மார்கை சேர்ந்த சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமேன் வீராஜ் மென் டிஸ், டென்மார்க்கை சேர்ந்த நிர்மானுசன் பால சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது நிர்மானுசன் பாலசுப்ரமணியன் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கையில் ஈழ தமிழர் பகுதிகளில் ராஜ பக்சே அரசு கட்டாய சிங்களர் குடியேற்றத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழர் பகுதிகளில் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பள வில் சிங்களர்களை குடி யேற்றியுள்ளனர்.

மேலும், தமிழர்கள் பகுதிகளில் உள்ள பெண் களை பாலியல் வன் கொடுமையை சிங்கள ராணுவம் செய்து வருகிறது. ராஜபக்சே அரசு, சிங்கள பெண்கள் குழந்தை பெற் றால் பரிசுகள் வழங்கு கிறது. ஆனால் தமிழ் பெண்களின் கருக்களை மட்டும் திட்டமிட்டு கலைத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுக்க வேண் டும். தமிழக முதல்வர் மற்றும் இந்திய அரசு தமிழ் ஈழம் அமைவது, தமிழர் பகுதிகளில் மேற் கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தை தடுப்பது உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82507.html#ixzz35EZB01wU

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்


உடமைகள், உறவுகள், உரிமைகள் ஆகியவற்றை தொலைத்து எவ்வித ஆதர வும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக வாழ்கின்றனர்.

இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டு அகதிகளாக வாழும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு பாதுகாப்பு மற் றும் வாழ்க்கையை முன்னேற்றும் நோக் கத்துடன், ஜூன் 20 ஆம் தேதி உலக அகதி கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக நாடுகளில் இனவெறி, அரசியல், மதம், வன்முறை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, சொந்த இடத்தை விட்டு அகதிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உள்ள உரிமைகளைத் திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும்.

அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப்போல நடத்தப்படவேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

உலகளவில் 1.4 கோடி பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என 2013 இல் எடுக்கப்பட்ட அய்.நா., கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

உலகிலேயே ஆப்கானிஸ்தானில் இருந்துதான், அதிக மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 2 ஆவது இடத்தில் சிரியா, 3 ஆவது இடத்தில் ஈராக், 4 ஆவது இடத்தில் சோமாலியா, 5 ஆவது இடத்தில் பாலஸ்தீனம் உள்ளன. அகதிகள் குடிபெயர்ந்துள்ள நாடுகள், அங்கு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்வரவேண்டும்

Read more: http://viduthalai.in/page-8/82534.html#ixzz35EZs4hIa

தமிழ் ஓவியா said...


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக் குழு இலங்கை செல்கிறது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு


சென்னை, ஜூன் 20_ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் எம்.பி., எம். அப்துல் ரஹ் மான், மாநில செயலாளர் கள் காயல் மகபூப், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜா முதீன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று, துணை தூதர் ஏ. ஜபருல்லாஹ்கானை சந் தித்து அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சிறீலங்கா இறுதிப் போருக்கு பின்ன ரும் அந்நாட்டில் வாழும் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும் பான்மை சிங்கள மக்களின் தாக்குதலுக்கு ஆளாவது குறித்து கவலை தெரிவிக் கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், அதற்கு பவுத்த துறவிகளே தலைமை தாங்கியதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த அம்மனுவில், தற்போது களுத்துரை மாவட்டம் அளுத்தகமா பேருவளை பகுதிகளில் பவுத்த பல சேனா வன்முறையாளர் களால் முஸ்லிம்கள் தாக் கப்பட்டு உயிர் உடைமை களை இழந்து தவிப்பது குறித்து பெரும் வேதனை தெரிவிக்கப்பட்டிருந்து.

இலங்கையில் பெரும் பான்மை சமூகத்தின் தீவிர வாத எண்ணம் கொண்ட வர்கள் அடக்கப்படுவ தோடு தமிழ் பேசும் சிறு பான்மையினர் பாதுகாக் கப்பட வேண்டும் என்றும், பள்ளிவாசல்கள், கோவில் கள், கிறிஸ்துவ தேவாலயங் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், கலவரத் தால் பாதிக்கப்பட்ட முஸ் லிம்களுக்கு நீதியும், நிவா ரணமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக் கப்பட்டிருந்தது.

இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர் வாகிகள் இலங்கை துணைத் தூதரை சந்தித்து அந்நாட்டில் நடைபெறும் சிறுபான்மையினருக்கெதிரான கலவரங்கள் குறித்து எங் களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.

பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக நீதி யும், நிவாரணமும் வழங் கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கும் மனுவை வழங்கினோம். அதை உடனடியாக அதி பரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் துணைத் தூதர் உறுதிய ளித்தார்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் தூதுக் குழு இலங்கைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதி களைப் பார்வையிடவும், அதிபரை சந்திப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள், புத்த பிட்சுகளின் தலைவர்கள், பவுத்த பொதுபல சேனா வின் தலைவர்களை சந் திப்பதற்கும் அனுமதி தரு வதோடு, ஆவன செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தோம், எங்கள் கோரிக்கையை வரவேற்ற இலங்கைத் தூதர் உடனடியாக ஆவன செய்வதாக உறுதி கூறினார்.

எங்கள் இலங்கை பயணத்தின்போது முஸ் லிம் பிரச்சினை மட்டு மின்றி, அங்குள்ள இலங் கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச் சினை குறித்தும் எடுத்து ரைப்போம். ஆர்ப்பாட்ட அரசியலில் நாட்டமில் லாத இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அணுகு முறை எப்போதுமே ஆக் கப்பூர்வமாகவே இருக்கும்.

- இவ்வாறு பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-8/82532.html#ixzz35Ea6f5wk