Search This Blog

30.6.14

மதப் பிரசாரம் மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண்டதே-பெரியார்

ஈரோடு நபிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்


அக்கிராசனாதிபதிகளே! சகோதரர்களே!

இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என்போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில் பேசிய மௌலானா மௌல்வி அ. க. அப்துல் அமீது சாயபு (பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்திய வர்களும், மௌலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மௌலானா அவர்கள், மௌலானா அசாத் சோபானி அவர்களின் உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனை வருக்கும் ஞாபகமிருக்கலாம். அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது வெறும் வேஷத்திலில்லையென்றும், அது மக்களின் நன்மைக் காகவே இருக்க வேண்டுமென்றும், அத்தோடு அது எவருக்கும் நம்பிக்கை யில் மாத்திரம் இல்லாமல், பகுத்தறிவிற்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத் திற்கும் ஏற்றதா யிருக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். இதை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன். மற்றும் உலகத்திலுள்ள மதக்காரர்களெல் லாம் இதை ஒப்புக் கொள்ளும்பட்சம் நாட்டில் மத சம்மந்தமான எவ்வித சண்டையும், அபிப்பிராயபேதமும், பிரிவும் பல மதங்களும் ஏற்பட இடமே இருக்காது. தவிர மௌலானா அவர்கள் இஸ்லாம் மதத்தில் பெண்க ளுக்கும், தீண்டாதார் என்பவர்களுக்குமுள்ள பல சுதந்திரங்களையும், இந்து மதத்தில் அவை இல்லாததையும் எடுத்துச் சொன்னார்கள். அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும் அதைப் பற்றியே இரு சமூகத்திற்கும் பயன் படுமாறு சில வார்த்தைகள் பின்னால் பொதுவாகச் சொல்லுகிறேன். மதம் என்பது மக்களின் வாழ்க்கைக்கு ஏற்பட்ட கொள்கைகள் என்பதாக எல்லா மத சம்பிரதாயக்காரர்களும் குறிப்பு எழுதி இருக்கிறார்கள்.  (டார்வின் தியரி எவுலூஷன் தியரி) என்பவையான மிருகத் திலிருந்து மனிதன் வந்த ஆராய்ச்சி, மாறுதல் முற்போக்கு ஆகிய கொள்கை களின்படி பார்த்தால் மனிதனுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி இல்லாத காலத்தில் அதாவது மனிதன் எதை எதைக் காண்கின்றானோ, எதை எதை அனுபவிக் கின்றானோ அதன் தத்துவத்தை அறிந்துகொள்ள அறிவில்லாமலிருந்த காலத்திலும்அறிந்தவர்கள் சொல்லுவதை உணர்ந்து கொள்ளப் போதிய ஆற்றலில்லாத காலத்திலும், தோன்றியத் தோற்றங்களைப் பற்றியும் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றியும் திருப்திக்கும், பயத்திற்கும் கட்டுப்பாட்டிற்குமாகப் பல கட்டுக்கதைகள் மூலம் புகுத்தி அவைகளைப் பயத்தின் பேரில் நம்பச் செய்தவைதான் இன்றையக் கடவுள் உணர்ச்சியின் ஆரம்பமும் மதக் கொள்கைகளின் உற்பவமுமாகும். அந்த ஆரம்ப முறைதான் ஒரே விதமாய் உலகமெங்கும் பரவியிருந்ததாகுமென் றாலும் பின்னால் உலகம் மாறுதலாக ஆக அனுபவம் முதிர முதிர கொள்கை களும் உணர்ச்சிகளும் மாற வேண்டியதாயிற்று. அந்த மாறுதல் கொள்கை கள்தான் இன்று நாம் பல மதங்களாகச் சொல்லிக் கொள்ளப்படுபவை களாகும்.


ஹெட்மாஸ்டர் திரு. இராஜகோபாலைய்யர் அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக அநாகரீகர் களாகவும், அறிவில்லாதவர்களாகவும்தான் இருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து அவ்வப்போது சீர்திருத்தஞ் செய்ய முயற்சித்தவர்கள்தான் மதத் தலைவர்களானார்கள். அவர்கள் பொதுவாக அந்தக் காலத்தில் அநேக மனிதர்களுக்கு மேற்பட்ட அறிவுடையவர்களாகயிருந்ததாகக் காணப் பட்டதால் அவர்கள் அந்த மக்களால் காலத்திற்கேற்றபடி கடவுள் அவதார மென்றும், கடவுள் புத்திரரென்றும் மற்றும் பலவாறாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் பின்னால் உள்ள ஜனங்களும் தங்களுடைய வழக்கமான மூடத்தனத்தை கொண்டும் மக்கள் மதிக்க வேண்டு மென்கின்ற ஆசையைக் கொண்டும் அப்பெரியார்கள் மீது அமானுஷிகமான கட்டுக் கதைகளைக் கட்டி அநேக “அற்புதங்கள்” செய்தார்கள் என்று பெருமைப்படுத்தி விட்டார்கள். அதனால்தான் இப்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதத் தலைவர்களை மனிதத் தன்மைக்கு மேலாகவே மதித்து மனிதசக்திக்கு மீறினதும், அனுபவத்திற்கு ஒவ்வாததுமான குணங்களை ஏற்றிப் போற்றுகின்றார்கள். என்றாலும் காலமாறுபாட்டிற்குத் தகுந்தபடி பழைய கொள்கைகள் மாற மாற புதிய புதிய மதங்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் வரும். ஆனால் இனிமேல் தெய்வீகம் பொருந்தியவர்கள் மாத்திரம் ஏற்படமுடியாது.


மிகப் பழைய காலத்தில் அதாவது இந்து மத காலத்தில் கடவுள்களே நேரில் வருவதாகச் சொன்னார்கள். அதற்கடுத்த கிறிஸ்தவ மத காலத்தில் கடவுள் குமாரர் (பிதாமகன்) வந்ததாகச் சொன்னார்கள். மகமதிய மதக் காலத்தில் கடவுளின் தூதர்கள் வந்ததாகச் சொன்னார்கள். இது மாத்திரமல் லாமல் “இனி தூதர்கள் வரமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள். தெளிவாக இன்னுந் தெரிய வேண்டுமானால் இந்துக்களில் 10 அவதாரங்களுடனும் 12 ஆழ்வார்களுடனும் 4 சமயாச்சாரிகள் உள்பட 64 நாயன்மார்களுடனும் அநேகமாய் அவதாரங்களும், தெய்வீகங்களும் நின்றே விட்டன. எத்த னையோ தடவை எதிர்பார்த்தும் எத்தனையோ பெயர்களைப் பழையபடி பொது ஜனங்கள், அவதாரமென்று கற்பித்தும் ஒன்றும் சிறிதும் பயன் பெறாமலே போய்விட்டது. அதுபோலவே கடவுளைப் பற்றியே தெரியா தென்று சொன்ன பௌத்த “அவதாரமும்” அத்துடனேயே நின்று விட்டது. கிறிஸ்துவ மதத்திலும் கிறிஸ்துவுடனும் அவர்கள் சிஷ்யர்களுடனுமே நின்று விட்டது. அவர் மறுபடியும் வருவார் என்று சொல்லி வெகுகாலமா கியும் இப்போது எதிர்பார்ப்பதே பரிகாசத்திற்கிடமாய் விட்டது. மார்டின் லூதர் முதலியவர்களும் மனிதர்களாகவே பாவிக்கப்பட்டு விட்டார்கள். அதனால் தான் கிறிஸ்து மதத்தில் கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்லாம் மார்க்கத்திலும் மகமத் நபி அவர்களோடேயே நபிகள் தோற்றம் நின்று விட்டது. திரு. மகமது நபி அவர்கள் எல்லாத் தெய்வத்தன்மை பொருந்திய வர்கள் என்பவர்களிலும் பிந்தியவராதலாலும் எல்லோரையும் விட மிக்க பகுத்தறிவும், முன் யோசனையும் அனுபவ ஞானமும் உடையவரான தினாலும் “ இனி உலகில் நபிகள் தோன்றப் போவதே கிடையாது” என்று சொல்லி விட்டார். அவர் இரண்டு காரணத்தால் அப்படி சொல்லியிருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகின்றது; அதாவது ஒரு சமயம் மறுபடியும் யாராவது புறப்பட்டு சில ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தன்னை தேவ அவதாரமென்றும், தெய்வாம்சம் என்றும் சொல்லி பழைய படி மக்களைப் பாழாக்கி விடாமலும் தனது கொள்கைகளை கெடுத்து விடாமலும் இருக்கட்டும் என்று மிக முன் ஜாக்கிரதையாகச் சொல்லி யிருந்தாலுமிருக்கலாம். அல்லது “இனி வரும் காலத்தில் மக்களை அறிவு டையவர்களாக இருப்பார்கள்; இம்மாதிரி ஒருவரை சுலபத்தில் தெய்வத் தன்மை பொருந்தியவர் என்று கருதிவிட இடமிருக்காது” என்று கருதி சொல்லியிருந்தாலுமிருக்கலாம். எப்படியிருந்தாலும் திரு. மகமது நபி அவர் கள் சொன்னது பலித்துவிட்டதுடன் அவரது கொள்கைக்கு மேலானதொரு கொள்கையை இது வரை வேறு எவரும் கொண்டு வந்து அமுலில் நடத்த வில்லை என்பது மாத்திரம் உறுதி. இதுவரைத் தோன்றிய எல்லா புது மதங் களும் கடைசியாக வந்த திரு. மகமது நபி அவர்களது கொள்கைகளுக்குப் பின் போகிறதேயல்லாமல் முன் போகவில்லை. கிறிஸ்தவர்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டுமானாலும் இந்துக்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டு மானாலும் புதியக் கொள்கைகளை திரு. நபி அவர்களிடம் தான் கடன் வாங்கியாக வேண்டும். அவரது கொள்கைகளுக்கு மேல் மக்கள் நலத்திற் குக் கொள்கைகள் வகுப்பதற்கு இப்போதுள்ள எந்த மதஸ்தருக்கும் தைரிய மில்லையென்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. இஸ்லாம் மதக் கொள்கைகளுக்கு மேலாக ஒரு கொள்கை வகுக்க வேண்டுமானால் அது இப்போதைய ருஷிய மதமாகத் தானிருக்க வேண்டும். மற்றபடி அது கூடிய வரையில் மக்களுக்குத் தாராளமாக சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் வீரத்தையும் கொடுத்திருக்கின்றது.

ஆனால் மற்ற மதங்களிலும் அவைகள் இருப்பதாய் சொல்லிக் கொள்ளலாமே தவிர அந்தப்படி கொடுக்கப்படுமாயின் - அமுலுக்கு வருமாயின் அம்மதங்களே மறைந்து போய்விடும்.

இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் கொள்கைகளில் தலைகீழ் வித்தியாசமிருக்கின்றது.

இந்து மதத்திற்கு அகராதிகளில் “மகமதிய மதத்திற்கு விரோதமான மதம்” என்று ஒரு பெயர் இருக்கின்றது. அதன் கொள்கைகள் பெரும்பாலும் இந்து மதக் கொள்கைகளைத் தான் கண்டித்திருக்கின்றன.

இன்றைய தினமும் இந்திய அரசியலில் இந்துக்களுக்கு மகமதியர் அல்லாதார் என்று தான், அதாவது பார்ப்பனீயத்திற்கு எதிரிடையான மக்க ளுக்கு பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயர் இருப்பதுபோலவே மகமதியர் அல்லாதார் என்கின்ற பெயரே ஏற்பட்டிருக்கின்றது.

இந்து மதம் என்பது உலக மக்களின் ஆதி முதல் நிலைமையாகும். அது இதுவரையில் சிறிது கூட திருந்தவில்லை.

எனக்கு முன் பேசிய எட்மாஸ்டர் திரு. ராஜகோபாலய்யர் அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மக்கள் அநாகரீகர்களாய் பகுத்தறிவு இல்லாமல் இருந்த காலத்தில் ஏற்பட்ட கொள்கைகள் என்பதுதான் இன்றைய தினம் இந்து மதத்தின் பேறால் அப்படியே இருக்கின்றன. மத்தியில் பலர் பல விஷயங்கள் சொல்லி இருந்தாலும் அவைகள் புத்தக அளவில்தான் இருக்கின்றன. மற்றபடி கடவுள் விஷயத்தில் பல கோடி கடவுள்களும் - தொட்டதெல்லாம் கடவுளாயும், நினைத்ததெல்லாம் கடவுள்களாயும், தென் பட்டதெல்லாம் கடவுளாயும் இனியும் விளங்குகின்றன. இஸ்லாம் மார்க்கம் சமீப மார்க்கமானதால் அதில் அந்தக் காரியம் மாத்திரம் அதாவது கடவுள் காரியம் வெகு கண்டிப்பாய் இருக்கின்றது. எப்படியெனில் ஒரு கடவுளுக்கு மேல் நினைத்தால் பாவம் என்றும் நினைத்துக் கொண்டிருப்பவனைக் கொன்றால் புண்ணியம் என்கின்றவரை கூடவும் இருப்பதாய் தெரிகின்றது. நிற்க,

இந்துக் கடவுள்கள் உருவத்தை எல்லாம் இஸ்லாமியர்கள் உடைத்து சின்னாபின்னமாக்கப்பட்டதாகவும், ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் குரானையும் வைத்து மதப் பிரசாரம் செய்ததாகவும் சொல்லப் படு கின்றது. அது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம், பொய்யாயிருந்தா லும் இருக்கலாம். ஆனாலும் அது உண்மை யாயிருந்தால் அந்த கொள்கை கொண்ட மகமதிய அரசாங்கம் இதுவரை இந்தியாவில் இருந்திருக்குமாயின் இன்றைய இந்தியாவின் நிலை எவ்வளவோ மேன்மையாய் இருந்திருக்கும். தீண்டாதார்களாக ஆறு கோடியும் பயங்காளிகளும், கோழைகளும் ஒற்று மையற்றவர்களும் சோம்பேறிகளுமாக இருபது கோடியுமுள்ள மக்கள் இன்று கண்டிப்பாய் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார்கள் என்பது கல்லு போன்ற உறுதி.

குழவிக் கல்லுக்கு கோடி ரூபாய்

ஒரு பக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் - நாட்டை விட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும் பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்தி லிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி, வைப்பாட்டி, பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டு பல்லக்கு, ரதம், தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?

இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜியத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக் கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இஸ்லாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்தமடைய வில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும் பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது.

எல்லா மதமும் மூர்க்கப் பிரசாரமே

சங்கராச்சாரி மதம் பௌத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ மதம் சமணர்களைக் கழுவேற்றினதும், வைணவ மதம் புத்த விக்கிரகங் களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப் போமானால் அந்தக் காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப் படுப வைகள் எதற்கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல என்று தோன்றும் ஆனாலும் மகமதிய மதம் வாள் கொண்டு பிரசாரம் செய்யப்பட்டதா இல்லையா என்பதில் இன்னமும் தகரார் இருக்கின்றது. மகமதியர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்றபடி அதை தங்கள் எதிரிகளால் தங்கள் மீது கற்பிக்கப்பட்ட ஓர் பழி என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் சமணர்களை சைவர்கள் கழுவேற்றியதை சைவர்களே ஒப்புக் கொண்டு தங்களாலேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரசாரம் செய்வதுடன் அதன் பெருமையைக் காட்டிக் கொள்ள வருஷந் தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற் சவங்கள் நடத்திக் காட்டப்படுகின்றன. அக்கோயில்களில் இன்றும் கழு வேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.

அது போலவே வைணவர்களும் புத்த மத விக்கிரகத்தை அழித்த தற்கு ஆதாரமாய் ஸ்ரீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத்தை திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெரு மையாகவும் எழுதி புண்ணிய சரித்திரமாகப் பாவித்து தினமும் படிக்கப் பட்டும் வருகின்றன. இவைகள் ஒரு புறமிருக்க இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றி பேசும் பல பேச்சுகளையும் பார்த்தாலும் எனது கொள்கைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர் செய்ததாய்ச் சொல்லப்படும் வாள் பிரசாரத்திற்கு சிறிதும் இளைத்ததல்ல வென்றே தோன்றும்.

கிறிஸ்து நாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒளியப்பட்டார்? என்பவைகளை எல்லாம் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரசாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றன என்பது விளங்கும். இவைதவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் அதாவது “நாஸ்திகர்களை நாக்கருக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும், சித்திர வதை செய்ய வேண்டும், நாட்டை விட்டுத்துறத்த வேண்டும்” என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கின்றேன்.

மற்றும் இந்து “வேத சாஸ்திரங்களைப் படித்தால் நாக்கருக்க வேண் டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும், மனதில் ஏறிவிட்டால் நெஞ்சைப் பிளக்க வேண்டும்” என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன்.

மற்றும் “பெரியோர் வாக்கை புராண இதிகாசங்களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின்றானோ அவன் நாஸ்திகனாவான். அப்படிப்பட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும்” என்பனவாகிய வெல் லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

ஆகவே உலகில் மதப் பிரசாரம் என்பதே மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண்டதே யொழிய அனுபவத்தில் அன்புமயமான மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.

இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்தக் காலத்திய வேத மதக்காரர்களுக்கு தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்ய சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும் அழிக்க வேண்டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க்கலாம்.

ஆகவே எப்பொழுதும் மத விஷயத்தில் கையிலானவர்கள் எல்லாம் பலாத்காரத்திலும் கையிலாகாதவர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக்கிறார்கள். தவிர இந்து மதத்தில் உள்ள தீண்டாமையும், பெண் அடிமையும் சிறிதும் மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உலகமே சொல்லுகின்றது.

எல்லாருக்குமே அவமானம்

மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திர மல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன். அதோடு அந்த மதத்தை ஏற்படுத்தினதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கும், தெய்வீகத் தன்மைக்கும் மிக மிக இழிவு என்றும் சொல்லுவேன். இந்து மதத்தில் ஒவ்வொருவனும் மற்றவனைக் கீழ் ஜாதியான் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள ஆணவத்தை அனுபவிக்கின்றானேயல்லாமல் தான் மற்றொரு ஜாதிக்கு கீழ் ஜாதியாய் இருக்கின்றோமே என்கின்ற இழிவை உணரும் உணர்ச்சியே கிடையாது. பொதுவாக இந்துக்களுக்கே சுய மரியாதை கிடையாது என்று சொல்லுபவர்களுக்கு இந்த ஒரு காரியமே போதுமான ஆதாரமாகும்.

அன்றியும் இந்து என்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவன் கீழ் ஜாதியாக மதித்து இழிவு படுத்துவதையும் மனித உரிமை தடுக்கப்பட்டி ருப்பதையும் ஈனமான அர்த்தம் கொண்ட சூத்திரன் என்ற பேரால் குறிக்கப் பட்டிருப்பதையும் கண்டு சிறிதும் வெட்கப்படுவதில்லை. யாராவது ஒருவர் இருவர் வெட்கப்படுவதாய் பாசாங்கு செய்தாலும் காரியத்தில் உதைத்த காலுக்கு முத்தம் வைப்பதுபோல் அந்தப்படி தன்னை இழிவு படுத்துவதற்கு அஸ்திவாரமாகவும், ஆஸ்பதமாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் மதத்தையும் கடவுளையும் போற்றுகின்றான். காக்கப் பாடுபடுகிறான். இப்படிப்பட்ட வர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. எவ்வளவோ அபிலாசைகளையும், பெருமைகளையும், கீர்த்திகளையும் ஆசைப்படுகின்ற மனிதன்தான் ஏன் கீழ் ஜாதியாய் மதிக்கப்படுகிறான். தன்னை ஏன் சமூக வாழ்வில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கின்றான். தன்னுடைய சொந்த இழிவை யும், கொடுமையையும் நீக்கிக் கொள்ளக் கவலையும் முயற்சியும் ஆற்றலும் இல்லாத மனிதன் மற்றவர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருகிறேன் சுய மரியாதை உண்டாக்கித் தருகிறேன் என்றால் அதில் ஏதாவது நாணயமோ பொருளோ இருக்க முடியுமா? இஸ்லாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப் படலாம், பெறாமைப்படலாம், அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத் திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலானவர்களாகவுமே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் மதக் கொள்கைகளேயாகும். அதாவது சமத்துவமும், சகோதரத்துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்த சுத்தமாய்க் கிடையாது. ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோ ரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான். முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும் இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினேகிதர்களையும், இதரர்களையும், குழந்தை களையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவைச் சாத்துவான். இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கின்றது. ஆகவே மதக் கொள்கைகளின் உயர்வு, தாழ்வு களை பலனில் இருந்து பார்த்தறிகின்றதா? அல்லது நாமே எழுதிவைத்துக் கொண்டதிலிருந்து அறிகின்றதா?

இஸ்லாமிய மதம் மதிக்கப்படுவது போல் இந்து மதம் உலக மக் களால் மதிக்கப்படுகின்றதா? ஏன் நமது யோக்கியதை அப்படி இருக்கிறது? இந்துக்களில் 100-க்கு 90 பேர் வேதத்தில் சூத்திரர், சாஸ்திரத்தில் சூத்திரர், புராணத்தில் சூத்திரர், சட்டத்தில் சூத்திரர், தர்மத்தில் சூத்திரர், பழக்கத்தில் சூத்திரர், வழக்கத்தில் சூத்திரர் என்று சொல்லப்படுவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி எதில் சூத்திரராக இருக்க வேண்டியது பாக்கி இருக்கின்றது என்பது நமக்குப் புரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் இந்த யோக்கியதை உள்ள மக்கள் பெரிய விஷயங் களில் ஆசைப்படுவதில் என்ன பிரயோஜனம்? அது போலவே இந்து மதத் தில் இந்துப் பெண்களின் நிலை என்ன என்று பாருங்கள். ஒரு “வேசி”க்கு இருக்கும் சுதந்திரமும், சுயமரியாதையும், சுகமும் கூட நமது “பெண் தெய்வங்களுக்கு” இல்லை. சொத்தில்லை, படிப்பு இல்லை, விவாக சுதந்திர மில்லை, விதவை ஆகி விட்டால் மறுமண மில்லை. இதற்கு என்ன பெயர் சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை.

உயிருடன் கட்டையில் வைத்து எரிப்பதை நிறுத்தியதே அவர் களுக்கு பெரிய உபகாரம் செய்ததாய் கருதப்படுகின்றது. ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு பெரிய அபகாரமாய் முடிந்திருக்கிறது. இம்மாதிரி கொள்கைகளுடன் உலக மக்கள் முன்னால் நாமும் நம்மை எப்படி மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? உயர்ந்த மதம் என்றால் மேலான சமூக மென்றால் உயர்ந்த கொள்கைகளும் மேன்மையான தன்மைகளும் இருக்க வேண்டும். அதில்லாமல் காட்டிமிறாண்டி நிலையில் இருந்து கொண்டு அதைத் தெய்வீகத் தன்மை பொருந்திய சடங்கு என்று சொல்லிக் கொள்வதால் உலகத்தை ஏமாற்றி விட முடியுமா? தவிர இந்த சமயத்தில் இஸ்லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டியிருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றது. இந்துக் கோயில்களில் தப்புக் கொட்டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக்கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? வேண்டுமானால் “அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல” என்றும் “சாவகாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறுதல்கள்” என்றும் சொல்லலாம். அது போதிய சமாதானமாகுமா? எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக்காரர்களும் “இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோக்ஷம் தேடிக் கொள்ள நாம் யாத்திரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும்” என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீமாவது பட்டினியாகவும் தொழில் இல்லாமலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அதுதான் யோக்கியமான பணக்காரனின் லக்ஷியமாகும். இந்தக் குணங்கள் இல்லாத பணக்காரன் கொள்ளைக்காரனுக்கு சமானமானவனே யாவான்.

தவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் “தங்கள் மதம் உயர்ந்த மதம்” என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மாத்திரம் போதாது. கஷ்டப்படுகின்ற இழிவு படுத்தப்பட்ட மக்களைத் தங்கள் மார்க்கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். தாங்கள் அனுபவிக்கும் சமத்துவ இன்பத்தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப்படுகின்ற மக்கள் யாவரும் அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும்” என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கியமான மனித னுக்கும் தலையாயதாகும்.

அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களேயாவார்கள்.

ஆகவே சகோதரர்களே! இந்த சமயத்தில் எனக்கு அளித்த சந்தர்ப் பத்தில் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். நீங்கள் தயவு செய்து அவற்றை நன்றாய் யோசித்துத் தங்களுக் குச் சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டு மற்றதை தயவுசெய்து தள்ளி விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.


         ------------------------------------ ஈரோடு முனிசபல் எலிமெண்டரி பாடசாலையில் நடந்த திரு. நபி அவர்கள் பிறந்த நாள் விழாவிலும் சத்தியமங்கலம் விழாவின் தலைவர் முடிவுரையிலும் பெரியார் அவர்கள்பேசியது.-”குடி அரசு” - சொற்பொழிவு - 24.08.1930

12 comments:

தமிழ் ஓவியா said...

ஆவியோ - ஆவி!


விழுப்புரம் ரயில்வே காவலதுறையினர் இப்பொழுது ரயில் நிலையத்திற்குள் தங்குவதில்லையாம்; படபடத்துப் போயிருக் கிறார்களாம். பயத்தால் ரத்தம் உறைந்து போய்க் கிடக்கிறார்களாம்.

அப்படி என்ன நடந்து விட்டதாம்? ரயில்வே போலீசார் புத்தக வியா பாரி ஜெயவேல் என்பவர் மரணம் தொடர்பாக போலீசார் விசார ணையை மேற்கொண் டனர். இரவு நேரத்தில் ஜெயவேலுவின் ஆவி மிரட்டுவதாகச் சிலர் பீதியைக் கிளப்பி விட்ட னராம். இதன் காரணமாக போலீசார் யாரும் காவல் நிலையத்துக்குள் தங்கு வதில்லையாம்.

இதற்கு ஏதாவது பரிகாரம் வேண்டாமா? இப்படியெல்லாம் சொல் லுவதற்கென்றே சில ஆசாமிகள் இருப்பார்கள் அல்லவா! ஆவியை விரட்ட சில சடங்கு களைச் செய்ய வேண் டும்; சுத்திகரிக்க வேண் டும் என்று சொல்லவே, அச்சத்தின் பிடியில் கிடந்த போலீசார் அதற் கான ஆட்களை அழைத்து கணபதி பூஜை நடத்தப் பட்டு, பூஜை புனஷ் காரங்களும் சாங்கோ பாங்கமாக நடத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டதாம்!

சரி. இந்த முட்டாள் தனத்தோடாவது ஆவி பயம் தொலைந்திருக்க வேண்டும் அல்லவா!

அதுதான் இல்லை மறைந்த ஜெயவேலின் ஆவிக்குப் பயந்து இன் னும் காவல் நிலையத்திற் குள் தங்கிட அஞ்சி, வெளியில் காற்றாட இரவுப் பணியாளர்கள் படுத்து கிடக்கிறார்களாம்.

எப்படி இருக்கிறது? காவல்துறையினருக்கு உடல் பயிற்சிகள் எல் லாம் அவ்வப்போது கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. உடல் பலமாக இருந்து என்ன பயன்?

மனபலம், அறிவுப் பலம் இல்லையே! ஆவி என்றால் என்ன? மனிதன் இறந்து விட்டான் அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆவி என்றோ, உயிர் என்றோ தனியாக இருக் கிறதா! மனிதர் சத்துப் போய் செத்துப் போய் விட்டான் என்றால் அவ்வளவுதான்!

ஆத்மா, மோட்சம், நரகம், பிதுர்லோகம், மறுபிறப்பு ஆகியவற் றைக் கற்பித்தவன் அயோக் கியன் நம்புகிறவன் மூடன்; இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை என்பது இதன் மூலம் தெற்றென விளங்க வில்லையா?

உண்மையான ஆவி யிலிருந்து இட்லியாவது சுடலாம். இதுபோன்ற முட்டாள்தனமான ஆவி யிலிருந்து மனிதனின் அறிவைச் சுட்டுப் பொசுக்கலாம்.

வெறும் உடற்பயிற் சியைவிட, பகுத்தறிவுப் பயிற்சி தான் அவசியம் என்பது இப்பொழுது விளங்கவில்லையா?

காவல்துறைக்குப் பெரியார் நூல்களைக் கொடுத்துப் படிக்க வைத்து அதில் தேர்ச்சி பெறுகிறவர்களை மட்டும் வேலையில் அமர்த்துக! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83186.html#ixzz36AhS9Uwp

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு ஒன்று - நினைவிருக்கட்டும்!


பி.ஜே.பி.யின் தமிழகப் பிரமுகர் திரு இல. கணேசன் அவர்கள் இந்தியைப் புகுத்த போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாட்டில் பேசி இருக்கிறார்.

இத்தகையவர்கள் இதுபோன்ற வகையில் பேசுவதைக்கூட ஒரு வகையில் வரவேற்கலாம் என்று தோன்றுகிறது. இத்தகைய வெளிப்படையான சாட்சியங்கள்தான் பிஜேபி என்பது என்ன? அதன் உள்ளுறைப் பொருள் என்ன? என்பதை நம் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அரிய வாய்ப்புகள் ஆகும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டால் அதன் விளைவு என்ன என்பதற்கு இதற்கு முன் ஏராளமான எடுத்துக்காட்டுகள் தமிழ்நாட்டில் உண்டு.

1937இல் சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த ஆச்சாரியார் (ராஜாஜி) இந்தியைப் புகுத்தினார்; தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. ஆயிரக்கணக்கானோர் சிறை ஏகினர்; பெண்கள் கைக் குழந்தைகளுடன் சிறைக்குச் சென்றனர்.

இந்தி எதிர்ப்புப் பிரச்சார வழி நடைப்படையை கால்நடைகள் (விலங்குகள்) என்றும், கூலிக்கு குழந்தைகளை வாங்கிக் கொண்டு பெண்கள் சிறை சென்றார்கள் என்றும் தினமணி அன்று எழுதியது.

சிறைச்சாலையில் நடராசன் என்ற தாழ்த்தப்பட்ட தோழர் முதல் களப்பலியானபோது படிப்பறிவில்லாத ஹரிஜனன் என்று மரணம் அடைந்த நிலையிலும்கூட அந்தத் தோழரை சட்டசபையிலேயே எள்ளி நகையாடினார். பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

இந்தியை இரண்டு பேர்தான் எதிர்க்கிறார்கள். ஒருவர் ராமசாமி நாயக்கர், இன்னொருவர் புலவர் (நாவலர் சோமசுந்தர பாரதியார்) என்றார் பிரதமரான ராஜாஜி. அதற்குச் சட்டசபையிலேயே பதிலடி கொடுத்தார் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா!

தமிழ் ஓவியா said...

ஆமாம் - இந்தியை எதிர்ப்பவர்கள் இருவர் - ஆதரிப்பவரோ நீங்கள் ஒரே ஒருவர்தானே? என்று பளிச்சென்று அறைந்தார்.

இறுதி வெற்றி யாருக்கு? இந்தி எதிர்ப்பவர்களுக்கு தான். அந்த இந்தித் திணிப்பு தான் கட்சிகளை, ஜாதிகளை மதங்களை, ஆத்திகம் - நாத்திகம் என்பவற்றையெல்லாம் கடந்து தமிழர்களை ஓரினம் என்ற உணர்வில் ஒன்று சேர வைத்தது! இந்தித் திணிப்பு தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.

இந்தித் திணிப்பு தான் தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை விரட்டியது. இந்த வரலாறு எல்லாம் புரியாமல் இல. கணேசன்கள் பூணூல்களை முறுக்கிக் காட்ட வேண்டாம்; காட்டினால் புலியை இடறிய கதையாகத்தான் முடியும்.

இந்திக்காக வக்காலத்து வாங்கும் இந்த பிஜேபி வகையறாக்கள் தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பட்டம் பெறலாம் என்ற நிலை இருக்கிறதே -தமிழ்நாட்டில் நடைபெறும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் கேந்திரா வித்யாலயங்களிலும் தமிழ் அறவே கற்றுக் கொடுப்பதில்லையே அதுபற்றிக் குரல் கொடுத்தது உண்டா?

தமிழை வெறுக்கும் ஒரு கூட்டம் இந்த நாட்டில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அத்தகையவர்கள் எப்பொழுதும் இந்திக்காக நலுங்கு வைப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

அண்மையில் மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி, கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல சமூக வலைத் தளங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்றது.

இந்தி பேசாத பகுதிகளிலும் இந்தியை மறைமுக மாகப் புகுத்தும் வேலையில் இறங்கியுள்ளது பிஜேபி அரசு.

இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் எல்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 27.6.2014 தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், மத்திய அரசு இந்த முடிவைக் கைவிடா விட்டால் தந்தை பெரியார் வழக்கமாக போராட்டம் அறிவிக்கும் நாளான ஆகஸ்டு முதல் தேதியன்று (1.8.2014) இரயில்வே நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் திராவிடர் கழகம் குதிக்கும் என்று அறிவித்துள்ளார்.

பி.ஜே.பி.யின் கொள்கை - ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்பது சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதே. ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் இதனைத் திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளார்.

இந்தியை பள்ளிகளில் நான் புகுத்துவதன் நோக்கம் படிப்படியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கே என்று சென்னை இலயோலா கல்லூரியில் பிரதமர் ராஜாஜி அவர்கள் பேசியதை (24.7.1937) இங்குப் பொருத்தமாக நினைவு கூரலாம்.

மத்திய அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் சமஸ் கிருதத்திலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டதை யும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வளவுக்கும் 127 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை வெறும் 14135 தான். சதவீத கணக்கில்கூட கூற முடியாத எண்ணிக்கை இது.

செத்த மொழியைச் சிங்காரிக்க இந்தியை முன் னோட்டமாக விட்டுப் பார்க்கிறார்கள்!

தமிழ்நாடு இதனை அனுமதியாது - இந்தி பேசாத அனைத்து மக்களின் உரிமைக் குரலாகத் தமிழகம் பொங்கி எழும்!

தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற தார் சட்டியும் புருசும் தயாராகவே உள்ளது - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/83192.html#ixzz36AhjEYVN

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பின் அடுத்த கட்டம் இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத, தேர்வு எழுதாத 11 பேருக்கு தண்டனையா?


சென்னை, ஜூன் 30-_ தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, இந்தியை கட்டயமாக்க முயன்று வருகிறது. ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங் களில் வருகைப் பதிவேடு அரசு ஆணைகள் இந்தி மயமாகியுள்ளது. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத!! ஊழியர்களுக்கு காரணம் கேட்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர் களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுத் துறை களில் பணியாற்றுவோர் சமூக வலைத் தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத் திலும் எழுதிக் கொள்ள லாம் என்று மே 27-ஆம் தேதி உள்துறை அமைச்ச கம் உத்தர விட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங் களின் ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி மற்றும் இந்தி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள் ளன. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கலக்கத் தில் உள்ளனர். இந்தி மொழி பயிற்சிக்கு செல் லாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 11 பேருக்கு மெமோ கொடுக் கப்பட்டுள்ளது. சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே, பணிக்கு அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

அலுவலக வருகைப் பதிவேட்டில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே கையெப்பமிடும் முறை இருந்து வருகிறது. இப் போது புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம் உருவாக்கப்பட்டுள் ளது.

மேலும் அலுவலக கடிதங்கள், பதவி உயர்வு ஆணைகள், பணி மாற்று ஆணைகள் உள்பட அனைத்து நிர்வாக ஆவணங்களும் ஆங்கிலத் துடன் தற்போது இந்தியி லும் அச்சிடப்பட்டு வழங் கப்படுகின்றன.

இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரை பாண்டியனிடம் கேட்ட போது, அவர் கூறிய தாவது:

தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 6 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பல்வேறு அலுவலகங் களில் பணியாற்றி வருகின் றனர். தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற் றுகின்றனர். மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியை கட்டாய மாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங் களில் ஏற்கெனவே செயல் படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண் டும் செயல் படுத்த உத்தர விட்டுள்ளது.

சென்னையில், இந்தி பயிற்சி வகுப்பு மற்றும் இந்தி தேர்வு எழுதாத 11 மத்திய அரசு ஊழியர் களுக்கு கடந்த 2 வாரங் களில் மெமோ கொடுக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. தென்மா நிலங்களில் இந்தி மொழி தேவையில்லாதது. எங் களுக்கான ஆவணங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகின்றன. அதை சரி பார்த்து ஆங்கிலத்தில் அரசுக்கு விளக்கம் அளிக் கிறோம்.

எனவே, ஊழியர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும், இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்று கொள்ள வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும். விருப்பமுள்ள வர்கள் படிக்கலாமே தவிர, இந்தி மொழி கட்டாயம் என்பது கூடாது. இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்ளுக்கான தேசிய கூட்டு ஆலேசனைக் குழு விடம் முன்வைக்க உள்ளேம்.

இவ்வாறு துரை பாண்டியன் கூறினார்.

வழக்கமான நடவடிக்கைதானாம்!

இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபேது, மத்திய அரசுத் துறைகளில் பணி யாற்றும் இந்தி மொழி தெரியாத பணியாளர் களுக்கு பயிற்சி கொடுத்து தேர்வு நடத்துவது வழக் கமான ஒன்று தான்.

தேர்வில் கலந்து கொள் ளாதவர்களுக்கு மெமோ வும் வழங்கப்பட்டு வரு கிறது. இது வழக்கமான நடவடிக்கைதான். இப் போது, இந்தி மொழி பற்றி பிரச்சினை எழுந்துள்ள தால், இதை சிலர் பெரிது படுத்துகின்றனர் என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83189.html#ixzz36AiKcslQ

தமிழ் ஓவியா said...

செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page-2/83197.html#ixzz36AiWzAK4

தமிழ் ஓவியா said...

ஜூன் 30: வகுப்புரிமை நாள்


ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப் பட்ட அனைவரும் இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டிய,நினைவு கூர வேண்டிய நாள் (30 ஜுன்). சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணையை நடைமுறைப்படுத்திய முத்தையா(முதலியார்) அவர்கள் மறைவுற்ற நாள்.

பானகல் அரசர் சென்னை மாகாண முதலைமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவுடன் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் எல்லாச் சமூகத்தினர்க்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அரசாணையப் பிறப்பித்தார்.

இதற்குப்பலத்த எதிர்ப்பு சட்டமன்றத்தில் எழுந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனாலும் அதன்பிறகு அவ் ஆணையை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர்.

1926 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவோடு அமைக்கப்பட்ட டாக்டர் சுப்ப ராயனைத் தவிர மற்ற மந்திரிகள் ராஜினாமா செய்து விடவே சுயேச் சைக் கட்சியினராக இருந்த திரு. முத்தையா (முதலியார்) அவர்கள் இரண்டாவது அமைச்சராகவும், திரு.சேதுரத்தினமய்யர் மூன்றாவது அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

திரு.முத்தையா (முதலியார்) அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்ற பின்னர்தான் நீதிக்கட்சியின் சமூக லட்சியமான, பார்ப்பனரல்லா தாரின் உரிமைச் சாசனமான வகுப் புரிமை எளிதில் நிறைவேறிய 'கம் யூனல் ஜி.ஓ' ஆக சட்டப்படி மலர்ந்தது. அமைச்சர் முத்தையா (முதலியார்) அவர்களின் மதிநுட்பம்,சமூக நீதி

உணர்வு ,இவைகளால் தான் வகுப் புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது( என்கிறார்தமிழர் தலைவர்)
1928 முதல் அப்பயன் அனை வருக்கும் கிடைத்தது.அந்த இட ஒதுக் கீட்டை செயல்படுத்திய முறை. அரசாங்க நியமனம் செய்ய 12 இடங்கள் உள்ளன என்றால் அவற்றை

இந்து - பார்ப்பனரல்லாதவர்களுக்கு 5

பார்ப்பனர்களுக்கு 2

இஸ்லாமியர்களுக்கு 2

கிருத்துவர்களுக்கு 2

ஆதி திராவிடர் 1

மொத்தம் 12

திரு. முத்தையா (முதலியார்) அவர்களால் தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது, அதன் தொடர்ச்சி- மீட்சி தான் இன்று தமிழர் தலைவரால் சட்டம் உருவாக்கி அதனை மாநில,மத்திய அரசுகள் ஏற்று 9 ஆவது அட்டவனையில் பாதுகாப்பாக இருக்கும் 69/ சதவிகித இடஒதுக்கீடு. இவற்றால் பயன்பெற்ற அனைவரும் இதற்கு அடித் தளமிட்ட திரு.முத்தையா அவர்களின் நினைவு நாளான ஜுன் 30 நன்றியோடு நினைவு(வகுப்புரிமை நாள்) கூர்வோம்.

இதை 'வகுப்பு வாதம்' என்று பார்ப்பனர்கள் கூறி விசமப் பிரச்சாரம் செய்தபோது,தந்தை பெரியார் அவர்கள் 'அத்துனை எதிர்ப்புகளையும் அடித்து வீழ்த்தி முறியடித்து, முத்தையா (முதலி யார்) வாழ்க .என்று வாழ்த்தினார்.

ஈரோடு. த. சண்முகம்

Read more: http://viduthalai.in/page-2/83194.html#ixzz36AikitqP

தமிழ் ஓவியா said...

அதிகத் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல்பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.

எனவே, உடல் எடையை குறைக்க பகீரத முயற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி, பட்டினி போன்றவை மூலம் உடலை வருத்திக் கொள்கின்றனர்.

ஆனால், உடல் பருமனை தடுக்க இதுபோன்று கஷ்டப்பட தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார துறை பேராசிரியர் சூசன் செப் தலைமையிலான நிபுணர்கள் உடல் பருமனை தடுப்பது குறித்து பலவித ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அதன்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஜூஸ்கள் மற்றும் நுரை ததும்பும் மது உள்ளிட்ட பானங்கள் அருந்துவதை தடுக்க வேண்டும். மாறாக அவர்களுக்கு அதிக அளவில் குடிநீர் வழங்க வேண்டும்.

இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்பருமன் ஆவதை தடுக்க முடியும். ஏனெனில் ஜூஸ்கள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. அதுவே உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகிறது.

சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் அது போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று பேராசிரியர் சூசன் செப் தெரிவித்துள்ளார். இந்த மிகவும் எளிமையான அறிவுரையை குழந்தை களுக்கு பெற்றோர் தெரிவிக்கலாம்.

இதன் மூலம் உடல் பருமன் ஏற்படுவதை குழந்தை பருவத்தில் இருந்தே தடுக்க முடியும். வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப் பழங் களை சாப்பிடுவது நல்லது.

சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.

Read more: http://viduthalai.in/page-7/83152.html#ixzz36AjJqbo9

தமிழ் ஓவியா said...

திக்குவாயை குணப்படுத்தும் வல்லாரை


வல்லாரை தரையில் படர்ந்து வளரும் இயல் புடையது. இதன் சிறுநீரக வடிவ இலைகள் கீரையாக பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன.

வல்லாரை மூளைக்கான உணவு என அழைக்கப்படுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும். பெங்கால் புலிகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது.

அவை காயமடைந்தால் வல்லாரை வளர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று வல்லாரை இலைகளை கடித்து விட்டு நாக்கால் காயத்தின் மீது நக்குமாம். அப்போது அதன் காயம் விரைவில் குணமடைந்து விடுமாம். இதனால் வல்லாரைக்கு புலிப்புல் என்ற பெயரும் உண்டு. லெப்ரசி, யானைக்கால் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆயின்மெண்ட்களிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

காய்ச்சலுக்கு: வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

சிறுநீர் பெருக்கி: சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல் படுகிறது. ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

நினைவாற்றல் பெருக: பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பல், ஈறு பாதுகாப்புக்கு: வல்லாரை இலைகள், மா இலைகள், கொய்யா இலைகள், கிராம்பு, நல்லமிளகு, உப்பு சேர்த்து செய்யப்படும் பற்பொடி பல், ஈறுகளை பாதுகாக்கும்.

திக்குவாய் குணமாக: தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும். திக்குவாய் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/83155.html#ixzz36Ajh13Ix

தமிழ் ஓவியா said...

கருப்புப் பண விவகாரம் சுவிஸ் வங்கிக்கு இந்தியா கடிதம்


புதுடில்லி, ஜூன் 30- கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரின் விவரங் களை தருமாறு மத்திய நிதி அமைச்சகம், சுவிஸ் வங்கிக்கு அதிகாரப்பூர்வமான புதிய கடிதத்தை எழுதியுள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர் கள் பதுக்கி வைக்கப்பட்டி ருக்கும் கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் வைத்திருப்போர் என சந்தேகப்படுபவர்களின் பட்டி யலை, எந்த வித நிபந்தனை யும் இன்றி மத்திய அரசுக்கு அளிக்க தயார் என்று, சுவிஸ் அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து சுவிஸ் வங் கிக்கு மத்திய நிதி அமைச்சகம் புதிய கடிதத்தை எழுதியுள் ளது.

இது குறித்து நிதித்துறை யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கருப்புப் பணம் வைத் திருப்போர் பட்டியலை அளிக்குமாறு சுவிஸ் வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

சுவிஸ் வங்கி நமக்கு இந்த தகவலை அளிப் பதற்கு, இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள ராஜ ரீதியிலான ஒழுங்குமுறை ஆகியவை பயன்படுத்தப்படும். கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக் கைகள் தொடரும் என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.

கருப்புப் பண விவ காரத்தில் புதிதாக அமைந் துள்ள மத்திய அரசுடன் இணைந்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுப் போம் என சுவிஸ் அரசின் சர்வதேச நிதி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/83161.html#ixzz36AjwXU14

தமிழ் ஓவியா said...


வெளியானது இந்துத்துவா முகம்! ஆண் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டி விட வேண்டும்!


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ஆரியத்தனம்

இந்தூர் ஜூலை 1-_ ஆணின் தேவையை நிறை வேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும் என்று பேசி தன் ஆரிய -_ இந்துத்துவா கொள் கையை வெளிப்படுத்தியுள் ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத். இந்தூரில் நடந்த ஆர் எஸ் எஸ் பொதுக் கூட்டத் தில் பேசிய மோகன் பகவத்: இன்று பெண்கள் அதிகம் கல்விகற்க ஆரம் பித்து விட்டனர்.

திரு மணத்தின் போது கணவன் மனைவி இருவரின் கல்வி யும் சரிசமமாக இருந்து விடுகிறது, சில வேலை களில் கணவனை விட மனைவி அதிகம் படித்த வளாக இருக்கிறாள் அல்லது திருமணத்திற்கு பிறகு படித்து பட்டம் பெற்றுவிடுகிறாள். சிலர் கணவனை விட உயர் பதவிக்கு சென்று விடுகிறார்கள். வருமான மும் கணவனைவிட அதி கம் வரத்துவங்கிவிட்டது.

இந்த இடத்தில் கண வனின் மனநிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனை விக்கு ஏற்பட்டுவிடும். இங்கு ஈகோவும் தோன்றி விடுகிறது, இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிக மான விவாகரத்திற்கு கார ணமாக அமைந்துவிடு கிறது என மோகன் பகவத் கூறினார்.

ஆணின் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிடவேண்டும் பெண்கல்வியையும் பெண்ணின் சுதந்திரத்தை யும் மறைமுகமாக தாக்கிப் பேசிய மோகன் பகவத் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய உரையை கூறினார். அதா வது மனைவி, கணவ னுக்கு (அடிமைச்)சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ளவேண்டும்.

பெண் கள் இந்தக்கடமையில் இருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கி விடுவது நல்லது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் (சோசியல் காண்ராக்ட்) மாத்திரமே என்று தன் னுடைய பேச்சில் கூறினார். மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட் டுமே தலையாய கடமை யாக கொள்ளவேண்டும்.

வீட்டைக்கவனிக்கவேண்டும், கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும், கணவனுக்கு இன்பம் தரவேண்டும், இது பெண் ணின் கடமை; இந்தக் கடமையில் இருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது.

விலக்கி விடவேண்டும் கணவனின் தேவைகளை நிறைவேற் றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவ னுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விடவேண்டும். என்று கூறினார்.

பாரதமும், இந்தியாவும்

பாரதத்தில் கற்பழிப்பு நடக்கவில்லை; இந்தியா வில்தான் கற்பழிப்பு நடந் துள்ளதாக முன்பு ஒரு முறை மாட்டிக் கொண்டு கடும் விமர்சனத்துக்கு ஆளானார். இதே ஆர். எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்.

Read more: http://viduthalai.in/e-paper/83246.html#ixzz36GXuFPnh

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பு - முல்லைப் பெரியாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, ஜூலை 1_ இந்தித் திணிப்புக் குறித்தும், முல்லைப் பெரியாறு குறித்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் கூறியிருப்பதாவது:_

கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக தி இந்து தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதே?

கலைஞர் :- 17-.6-.2014 அன்று தி எகானமிக் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை,- சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானதும், நான் உடனடியாக அதுபற்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, பிரதமர் அவர்கள் உடனடியாக அதுபற்றி கவனம் செலுத்த வேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும் என்று தெரிவித்திருந்தேன்.

இந்த அறிக்கைக்குப் பிறகு பிரதமர் அலுவலகம், சமூக வலைத் தளங்களில் இந்தி மொழி தொடர்பு மொழியாக, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், இந்தி பேசாத மாநிலங் களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித் திருந்தது.

மேலும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்களும் செய்தியாளர் களிடம் கூறும்போது, எந்த மக்கள் மீதும் மொழியைத் திணிக்க முடியாது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை சமூக வலைத் தளங்களில் அலுவலக மொழியாக இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் தாய்மொழிக்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க. வின் நிலைப்பாடு! என்று தெரிவித்தார்.

இந்தச் செய்திக்குப் பிறகுதான் தற்போது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது என்றும், இந்தி பயிற்சிக்குச் செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப் பட்டுள்ளது என்றும், வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு அலுவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இன்று (30.6.2014) செய்தி வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. எம். துரைபாண்டியன் இது பற்றிக் கூறும்போது, மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மத்திய அரசும், பிரதமர் அவர்களும் இந்தப் பிரச்சினையில் மீண்டும் கவனம் செலுத்தி, இந்தி பேசாத மக்களிடம் எழுந்துள்ள கலக்கத்தைப் போக்க முன் வரவேண்டு மென்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி :- முல்லைப் பெரியாறு, பரம்பிக் குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று மீண்டும் கேரள முதலமைச்சர் தெரிவித் திருக்கிறாரே?

கலைஞர் :- இதைத்தான் நான் 27-.6-.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந் தேன். கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை.

2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும், தமிழ்நாட் டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தான் நான் குறிப்பிட்டு, கேரள முதலமைச்சர் இவ்வாறு கேரள சட்டசபையில் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேரள முதலமைச் சருக்குப் பதில் சொல்லாமல், அவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று கேட்ட என்னை எந்த அளவுக்கு அநாகரிகமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து, பின் குறிப்பில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்ற வார்த்தைகள் உள்ளன என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார்.

ஆனால் நேற்றையதினம் (29.-6.-2014) கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, 4 அணைகளும் தங்களுக்கே சொந்தமானவை என்று தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தவறானது. அந்த அணைகள் தமிழ்நாட்டால் இயக்கி, பராமரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது.

இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு அணைகளை தமிழ்நாடு பராமரித்தும், பரிபாலனை செய்தும் வருகிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் கேரளா நல்லுறவைப் பராமரிக்க விரும்புகிறது.

இந்த விவகாரத்தில் கேரளா தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேசிய பேரணைகள் பதிவேட்டில் நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தமானவை என்றே பதிவாகி உள்ளது என்று பதில் கூறியதாக தினத்தந்தி, தினமணி போன்ற நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள் ளன.

எனவே ஜெயலலிதா பதில் கூற வேண்டியது கேரள முதல் அமைச்சருக்குத் தானே தவிர, என்னிடம் கோபப்பட்டு ஆத்திரத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை. கேரள முதல்வரின் இன்றைய பதிலுக் குப் பிறகாவது தமிழக முதலமைச்சர் அரைவேக்காடு அவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டி ருப்பார் என்று நம்புகிறேன்.

(முரசொலி, 1.7.2014

Read more: http://viduthalai.in/page-3/83220.html#ixzz36GZ0pXnB