Search This Blog

21.6.14

தமிழக நீதித்துறையில் தலைவிரித்தாடிய பார்ப்பனிய வல்லாண்மை

    தமிழக நீதித்துறையில் தலைவிரித்தாடிய  பார்ப்பனிய வல்லாண்மை


     

    இன்றைய இந்திய நிலப்பரப்பிலும் சரி, தமிழகத்திலும் சரி, நீதித்துறையில் பல்வேறு அமைப்புகளில் பார்ப்பனர்கள் வல்லாண்மை செலுத்தி, சமயம் கிடைத்த போதெல்லாம் பார்ப்பன நீதிபதிகள் சிலர் மட்டுமே இருந்தாலும் சரி திராவிடர் _ தமிழர்களின் சமூகநீதிக்கு உலைவைக்கும் அநீதிகளைச் செய்துவருவது அனைவரும் அறிந்தது. உயர் _ உச்ச நீதிமன்றங்களில் இந்நிலை வெகுவாக பரவிக் கிடப்பதையும் பார்க்கிறோம்.

    நீதிகெட்டது யாரால்?

    இந்த நிலை கண்ட நம் சுயமரியாதைச் சூரியன் அய்யா தந்தை பெரியார் நீதித்துறை கெட்டுக் கிடக்கும் நிலை கண்டு, துணிவாக, வெளிப்படையாக கருத்து வெளிப்படுத்தியுள்ளார். இது நீதி கெட்டது யாரால்? _ என்ற தலைப்பில் நூலாகவே வெளிவந்துள்ளது.

    காலந்தோறும் காலூன்றிய பார்ப்பனியம்
    இப்பொழுது, நாம் பண்டைய, இடைக்கால நீதித்துறையில் பார்ப்பன வல்லாண்மையைப் பார்க்க இருக்கிறோம்.

    தற்போது கிடைத்த சில வரலாற்றுப் புதிய வரவுகள் அடிப்படையில் அதனை அறிவோம்! தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இந்தப் புதிய செய்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

    நீதியின் வரையறையை நிறுவிய திருக்குறள்

    இந்தியத் துணைக் கண்டம் முழுதும் ஒரு குலத்துக்கு ஒரு நீதி கூறும் மனு நீதியின் தாக்கம் தமிழகத்திலும் கொடி கட்டிப் பறந்துள்ளது. ஒருவன் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாரிடத்தும் ஓரவஞ்சனை காட்டாது நடுவுநிலையுடன் அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டனையை அறிஞர்களோடு ஆராய்ந்து செய்வதே நீதி (முறை) ஆகும் என, நீதிக்கு இலக்கணம் வகுத்துள்ளார் வள்ளுவர்.

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை! (குறள்: 541)

    நிலைகுலைக்கப்பட்ட நீதி

    இந்த நீதிநிலை நாட்டில் முழுதும் பின்பற்றப் படாமல் ஊடே பார்ப்பன வல்லாண்மை _ மனு(அ)நீதி இடைபுகுந்து நீதியை நிலைகுலைத்து விட்டது. அனைத்து நீதிமுறைகளுக்கும் மன்னனே மூல அடிப்படையாக விளங்கினான். மவுரியர் காலத்தைச் சார்ந்த கவுடில்(சாணக்கி)யரின் அர்த்த சாஸ்திரத்திலும் ஏறத்தாழ, அதே காலத்தில் இறுதி வடிவம் பெற்ற மனுஸ்மிருதியும் அரசநீதியைப் பேசுகின்றன.

    சேக்கிழாரின் வாக்குமூலம்

    கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார், மூவேந்தர்கள் மனுதர்ம சாஸ்திரத்தின்படி நீதி வழங்கியதாகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.

    உலகு புரக்கும் கொடை வளவர் உரிமைச் செழியர் உடன்கூட நிலவு பெருமுக் கோக்கள் எலாம்
    நீதி மனுநூல் நெறிநடத்தி...
    ஆட்சிபுரிந்தனர் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
    - (கழறிற்றறிவார் நாயனார் புராணம், பெரிய புராணம்)

    மனுநூல் நெறி என்றால் என்ன பொருள்? மனுஸ்மிருதி மார்க்கப்படி என்றுதானே பொருள்? பார்ப்பன நீதிப்படி என்றுதானே பொருள்? ஜாதிக்கொரு நீதி என்பதுதானே பொருள்?

    அவாள் மயம், அப்படித்தானே?

    பண்டைத் தமிழ் இலக்கியங்களில், நடுவு, நடுவு நிலைமை, நடுவர் போன்ற தூய தனித்தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளிலும் இவ்வண்ணமே  பொறிக்கப்பட்டுள்ளன. பின்னாளில், இச்சொற்கள், மத்தியம், மத்யத்ஸம், மத்யத்ஸர் என்னும் வடசொற்களாக பார்ப்பன மயமாக்கப்பட்டுவிட்டன.

    இதற்கு முழுமையான காரணம் பண்டைத் தமிழகத்தில் நடுவர்பணி செய்தவர்கள் மிகப் பெரும்பாலும், பார்ப்பனர்களே!

    முதல்முதலாகக் கேட்டபோது

    சேக்கிழாரின் பெரிய புராணத்தில் ஒரு செய்தி. தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் என்றழைக்கப்பட்ட நம்பியாரூரன் தனக்கு வழிவழி அடிமை என்று சிவன் வேதியர் வடிவில் வந்து புத்தூர் என்னும் ஊரில் நடந்த நம்பியாரூரனின் திருமண நிகழ்ச்சியில் அங்குள்ளவர்களிடம் முறையிட்டான்.
    சுந்தரமூர்த்தியின் காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டு. அப்பொழுது மணமகனாக இருந்த சுந்தரன், ஓர் பார்ப்பனன் இன்னொரு பார்ப்பனனுக்கு அடிமையாதல் வழக்கமில்லை என்று கூறி சிவ வேதியரை மறுத்தான். ஆசில்அந் தணர்கள் வேறோர்
    அந்தணர்க்(கு) அடிமை யாதல்
    பேச, இன்றுன்னைக் கேட்டோம்...
    - (தடுத்தாட்கொண்ட புராணம்  பாடல் 40, பெரிய புராணம்)

    வழக்கை விசாரித்த திருவெண்ணெய் நல்லூர் மகாசபை யாரும், பார்ப்பனருக்கு, பார்ப்பனர் அடிமையாதல் என்பது இன்று நீ சொல்லித்தான் நாங்கள் கேள்விப்படுகிறோம்

    சொன்னது நீதானா, சொல், சொல், சொல்?
    அந்தணர் அவையில் மிக்கார்
    மறையவர் அடிமை ஆதல்
    இந்த மா நிலத்தில் இல்லை
    என் சொன்னாய் அய்யா? என்றார்
    - (தடுத்தாட்கொண்ட புராணம்  பாடல் 52, பெரிய புராணம்)

    பாரினில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்!

    இதிலிருந்து, பார்ப்பானுக்கு ஓர் அரசன் (சத்திரியன்) அடிமையாகலாம்; வைசியன் அடிமையாகலாம்; சூத்திரன் அடிமையாகலாம். ஆனால், வேறொரு பார்ப்பனன் மட்டும் அடிமையாதல் கூடாது; முடியாது; தகாது என்கிற நடைமுறைச் சட்டமாக, நீதிமுறையாக இருந்த மனுநீதிப் பார்ப்பன வல்லாண்மையைப் பார்க்கிறோம்.

    வல்லடி வழக்கு

    கி.பி.911இல் நாராயணன் கேசவன் என்கிற பார்ப்பனன் ஒருவன், திருமங்கலம், சோழமாசிக் குறிச்சி ஆகிய ஊர்களில் வாழ்ந்த பார்ப்பனர்கள் சார்பாக கடற்றிருக்கைக் கிழவன் என்ற சூத்திரன் மீது ஒரு வழக்குத் தொடுத்தான்.

    ஏன் இந்த வழக்கு?

    பாண்டியன் கடுங்கோன் (கி.பி.550-_575) திருமங்கலம் கிராமத்தை பன்னிரெண்டு பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்திருந்தான். இறந்துபோன இன்னொரு பாண்டியன் காடக சோமாஜி என்ற இன்னொரு பார்ப்பனனுக்கு சோமாசிக்குறிச்சி என்ற கிராமத்தைத் தானம் கொடுத்திருந்தான்.

     

    உழுதுண்டு வாழ்வோரை உயர்த்திய பண்பாளன்

    கடற்றிருக்கைக் கிழவன் என்ற தமிழன் சோமாசிக்குறிச்சியைக் கையகப்படுத்தி மதுரதரநல்லூர் (மதுரதானசத் கிராமம்) என்ற பெயரில் குடிநிலமாகச் செய்து உழுதுண்டு வாழும் ஊராக்கினான்.
    இதனால் ஆத்திரம்கொண்ட நாராயணன் கேசவன் கடற்றிருக்கைச் சூத்திரன்மீது பாண்டியன் பராந்தக வீரநாராயணன் இடம் வழக்குத் தொடுத்தான். கடற்றிருக்கை என்னும் ஊரைச் சேர்ந்தவன் இந்தக் கடற்றிருக்கைக் கிழவன் (கிழவன்_உரியவன்)
    பாண்டிய ராசனா? பார்ப்பன தாசனா?

    உழுதுண்ணும் மக்கள் வாழ்ந்த அந்தச் சோமாசிக்குறிச்சியை, பாண்டியன் தன்னிச்சையாக தண்டச் சோறுண்ணும் பார்ப்பனர்க்குத் (உபயம்_ சுப்பிரமணியபாரதி) தானமாகத் தந்த செயலைக் கண்டித்துத்தான் கடற்றிருக்கைக்கிழவன் அவ்வாறு செய்து, உழுது வாழ்வார்க்கு சோமாசிக்குறிச்சியை உரிமையாக்கினான்.

    பொறுப்பார்களா பூசுரர்கள்? வழக்குத் தொடுத்தனர் பார்ப்பனர். இந்த ஊர் இன்றைக்கு, வெப்பக்கோட்டை எனப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் உள்ளது.

    இருதரப்பு வாதங்கள் இல்லாமலே தீர்ப்பு

    பார்ப்பனக் கொத்தடிமையாக இருந்த இந்த பாண்டிய பராந்தக வீர நாராயணன் வழக்கின் எதிர்வாதியாகிய கடற்றிருக்கைக் கிழவனை அழைத்து விசாரணை செய்யாமலேயே நாராயணகேசவன் என்னும் அந்தப் பார்ப்பனனுக்குச் சாதகமாக ஒருதலைப் பக்கமாக, நெறிமுறை நழுவி, வழுவி அந்தத் தேராமன்னன் தீர்ப்பளித்தான். அதாவது, திருமங்கலம், சோமாசிக்குறிச்சி என்ற ஊர்களை பார்ப்பனர்களுக்கே தானமாகத் தாரைவார்த்து பழைய நிலையிலேயே பார்ப்பனர்கள் அவ்வூர்களைத் தம்மகப்படுத்தி வாழலாம் என்பதே அந்தத் தீர்ப்பு!

    நெறிதவறிய நீதிமுறை

    மேற்கொண்ட தீர்ப்பின் மூலம் பண்டைநாளில் முதல் வர்ணத்தவரான பிராமணர்களுக்கும் நாலாம் வர்ணத்தவரான சூத்திரர்களுக்கும் இருந்த உயர்வு_தாழ்வு நிலை வெளிப்படுகிறதல்லவா? என்னே பார்ப்பன வல்லாண்மை? நீதியிலும் இந்த வர்ணஜாதி நிலையா? பண்டை நாளில் முதலாம் வருணத்தவரான பிராமணர்களுக்கும் நான்காம் வர்ணத்தவரான சூத்திரர்களுக்கும் இருந்த சமூக அந்தஸ்து வெளிப்படுகிறது (நூல்: பண்டைத் தமிழகத்தில் சட்டமும் நீதியும் பக்கம்: 121)

    செப்பேடு செப்பும் செய்திகள்:

    மேற்கூறப்பட்ட சோமாசிக்குறிச்சி, திருமங்கலம் பார்ப்பனர்க்குத் தானம் செய்திகள் அடங்கிய சில பகுதிகளை மட்டும் செப்பேடு வாயிலாகக் காட்டுகிறோம். இது, தளவாய்புரச் செப்பேடு எனப்படுகிறது.

    .....களப்பாளரைக் களைகட்ட, மல்திரள்தோள் மாக்கடுங்கோன் மானம் போர்த்து அருளியகோன்
    நன்று நான்மறை பேணி, அய்வேள்வி நலம்படுத்து,
    அறுதொழில்கள் மேம்பட, மறையோர்கள் பன்னிருவர்க்குக்
    காராண்மை மீஆட்சி உள்ளடங்கக் கண்டமைத்து, செப்பேடு செய்து கொடுத்தருளினான்...
    - செப்பேட்டின் ஒரு பகுதி)

    .... கழுதூரில் சித்திசெய்த கடிக்கூடல் நகர்க் காவலன்
    சோமாஜிகுறிச்சியிது தொல்லை மேற்படி கிடந்ததனை
    சோமபான மநோசுத்தராகிய
    காடகஸ் ஸோமாஜி யார்க்கு ஏகபோகம் அதுவாக,
    எழிற் செப்பேட்டோடு கொடுத்தனை

    - (செப்பேட்டின் மற்றொரு பகுதி)

    ஆரியப் பகைவரை அழித்த தமிழரசன்

    ஆரிய வல்லாண்மையை அடியோடு அழித்தவர்கள் களப்பிரர்கள் (களப்பாளர்கள்). இவர்களைப் பார்ப்பன அடிவருடிப் பாண்டியன் களை எடுத்துப் பார்ப்பனர்களுக்கு ஆதரவளித்தானாம். என்னே கொடுமை!
    சொல்லிய ஊரிரண்டும் தம்மில் எல்லை கலந்து கிடக்குமாதலின்
    ஒன்றாக உடன்கூட்டிப் புரவு எழுதிப் பிடி சூழ்ந்து நன்றாகிய சாசனம் செய்து நன்கருள வேண்டுமென்றும்....
    ....... மீனவன் வீரநாராயணற்கு விச்வாச கர்மங்களுக்கான
    தன்மையா னாதலின் அருளறிந்து விண்ணப்பம் செய்ய....
    - (இன்னொரு பகுதி)

    மதுர தர நல்லூர் என்னும் வளம்பதி சோமாசிக்குறிச்சி அதன்மேலை புரவேற்றி ஆங்கதும் திருமங்கலமும்
    உடன் கூடப் பிடிசூழ்வித்து உலகறிவன் கொடுத்தருளினன்
    - பண்டிததாசன் பாண்டித் தமிழாபரணன் பாண்டிய மாராயப் பெருங்கொல்லன். (இறுதிப் பகுதி)

    சிரீவல்லவன் - (இவன் செப்பேடு செதுக்கியவன்)
    இப்படியும் ஒரு தமிழ் மன்னனா?

    சோமாசிக்குறிச்சியும் திருமங்கலமும் தங்களுக்கு மறுபடி தந்தருள வேண்டும் என, நாராயணகேசவன் எனும் பார்ப்பனன் மன்னனிடம் விண்ணப்பம் செய்தவுடன், கடற்றிருக்கைக் கிழவனாகிய சூத்திரனை வரச் செய்து அவன் வாதத்தைக் கேட்காமலேயே பாண்டியன் ஒருதலைப்பட்சமாக உடனடியாக ஊரிரண்டையும் பார்ப்பனர்களுக்கு மறு உரிமையுடன் ஆண்டனுபவிக்கத் தானம் ஆகக் கொடுத்துவிட்டான். இதுதான் நீதிமுறையா?

    பார்த்தவை சில; பாராதவை பல

    இந்தப் பொல்லாத பார்ப்பனியம் நீதித்துறையில் புகுந்து விளையாடி ஆதாயம் கண்டது.

    பார்ப்பனிய வல்லாண்மைக்கு நீதிநெறி வழுவக்கூடாது தமிழரசன் இரையாகிவிட்ட இழிநிலையை _ நீதிமுறையினைக் கொலை செய்த கொடுமையை அறியும்போது நம் உள்ளம் கொதிக்கிறதே?

    எரிமலையாய்க் குமுறுகிறதே! நீதித்துறையில் தலைவிரித்தாடிய பார்ப்பனியக் கொடுமையின் ஒருசில காட்சிகள் தாம் இவை! இன்னும் தெரியாமல் இருப்பன எத்தனையோ?

     -------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன்- "உண்மை” ஜூன் 16-30 - 2014

    28 comments:

    தமிழ் ஓவியா said...


    காரவன் கேள்வி


    காரவன் 1.4.1978 ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ள தலையங்கத்தின் சுருக்கம் வருமாறு:-

    கடவுளைப்போல், கடவுள் அவதாரங்களும் அதிகாரம் இருக்கும் இடத்தைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருப் பார்கள். அன்பையும், கருணையையும் உபதேசிக்கும் சர்ச்சுகள், ஜெர்மனியில் ஹிட்லர் பல லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த போது, சுட்டு விரலை உயர்த்தியதுண்டா?

    இத்தாலியில் சர்வாதிகாரத்தை கட்ட விழ்த்துவிட்ட முசோலினிக்கு போப் ஆசிர்வாதம் தந்தார். காஞ்சி சங்கராச்சாரியிலிருந்து வீதி ஓரத்து சாதுக்கள் வரை இந்திராகாந்தி அதிகாரத்தில் இருந்த போது அவருக்குத் துதிபாடி வந்தனர்.

    இந்திராகாந்தி உறுதியான ஒரு மூடநம்பிக்கைவாதி என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் கொஞ்சம் பொது அறிவு அவருக்கு இருந்தது. இப்போது ஜனதா அமைச்சர்கள் இந்த மூடநம்பிக்கை விவகாரத்தில் இந்திராகாந்தியையும் தோற்கடித்து விடுவார்கள் போலிருக்கிறது.

    பல லட்சம் ரூபாய் பாழடித்து நடத்தப்பட்ட ஆமதாபாத் யாகத்துக்கு வாஜ்பாயும், ராஜ் நாராயணனும் நேரில் போய் கலந்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளிடம் இந்தியா உதவியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, இப்படி யாகத்தில் போய் அமைச்சர்கள் கலந்து கொள்வது கேலிக் கூத்தானதாகும்.

    தன்னைக் கடவுள் என்று பறைசாற்றிக் கொள்ளும் சாயிபாபா அண்மையில் டில்லியில் கலந்து கொண்ட ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வாஜ்பாய் தலைமை வகிக்கிறார்.

    அப்போது வாஜ்பாய் பேசுகையில், அவசர நிலையின் போது பாபாவை வாஜ்பாய் சந்தித்ததாகவும் அப்போது பாபா, வாஜ்பாய் கவலைப்படாதீர்கள் தர்மம் ஜெயிக்கும் என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.

    அவசர நிலையின் போதே இந்த பாபா அந்தக் கொடுமைகளை எதிர்த்து இந்த தர்ம உபதேசத்தை செய்திருக்கக் கூடாதா? என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் அதர்மம் ஆட்சி செய்யும் போது இந்த அவதாரங்கள் மக்களிடம் கருணை காட்டியிருக்க வேண்டாமா? இவ்வாறு அந்த தலை யங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/page-7/82551.html#ixzz35EXnc49o

    தமிழ் ஓவியா said...


    திருப்பதியில் தகிடுதத்தம்!


    25.5.1978 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் பக்தர்கள் எழுதியுள்ள வாசகருக்கு கடிதங்கள் வருமாறு:-

    ருப்பதி திருமலையை பூகோள வைகுண்டம் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத்தான் அது நரகம் என்பது தெரியவரும்.

    எங்கும் லஞ்சம், ஊழல்!

    திருப்பதி திருமலையில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை எங்கும் லஞ்சம் ஊழல் நெளிகிறது. பேருந்துக்கு பயணச்சீட்டு வாங்குவதிலிருந்து ஏழுமலை யானைத் தரிசனம் செய்வது வரை எங்கும் லஞ்சமும், ஊழலும்தான் நடமாடுகிறது.

    தங்குவதற்கும் சரியான வசதி கிடையாது. தங்குவதற்கு காட்டேஜ் வாடகை பிடிப்பதற்கு நீண்டதூரம் வரிசையில் கால்கடுக்க அவதிப்பட வேண்டியுள்ளது.

    கடைநிலை ஊழியரிலிருந்து நடுநிலை ஊழியர்கள், உயர் அதி காரிகள் வரை மிகவும் மோசமாக வும், அராஜகமாகவும், பக்தர்களிடம் நடந்து கொள்ளுகின்றனர்.

    சுகாதாரம் இல்லை

    தங்கும் விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. படுக்கை விரிப்புகள் தினசரி மாற்றப்படுவ தில்லை; குடி தண்ணீர் கிடைப்ப தில்லை. மேஜை, நாற்காலிகள், கட்டில்கள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை. மருத்துவமனை வசதி போதுமானதாக இல்லை. சுகாதார நிலையோ மிகவும் அருவருக்கதக்கதாக உள்ளது.

    ரேட் இருந்தும்

    ஏழுமலையானை தனியாக தரிசனம் செய்ய 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் தரும தரிசனம் செய்யும் பக்தர்களுடனேயே ஏழுமலை யானை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

    புரோக்கர்கள் கமிஷன்

    பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் அதிகார பூர்வமற்ற புரோக்கர்கள் பலர் பக்தர்களிடம் தலைக்கு ரூ.5 லிருந்து ரூ.20 வரை வசூலித்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

    கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரால் கர்ப்பக்கிரக வாசலில் நிற்கும் ஆண் காவலாளிகள் வேண்டுமென்றே பெண்களின் மீது கைகளை வைத்து தள்ளுகின்றனர்.

    நாளுக்குநாள் திருப்பதி கோயில் வியாபார நிலைய மாகிக் கொண்டு வருகிறது. அது காய்கறி கடைகளைத் திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - மேற்கண்டவாறு சுலோசனா என்ற பக்தை எழுதியிருக்கிறார்.

    இன்னொரு பக்தர்

    ஜெகந்நாதன் என்ற மற்றொரு பக்தர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

    மலைமீது நாங்கள் காரில் சென்றால் பாதி வழியில் ரேடியேட் டருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. வழியில் ரேடியேட்டருக்கான தண்ணீர் கிடைக்கும் என்ற போர்டு கள் மட்டும் இருக்கின்றன. ஆனால் தொட்டிகளில் தண்ணீர் கிடையாது.

    ஆனால், சிலர் பானை தண்ணீர் 25 பைசா என்று கூறி விற்கிறார்கள். அதிகாரிகள் அதன்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?

    பக்தைகளை கட்டுப்படுத்த ஆண்களா?

    பெண் பக்தைகளைக் கட்டுப் படுத்த பெண் ஊழியர்கள் இல்லை. ஆண் ஊழியர்கள் தான் கூட்டத்தில் புகுந்து கட்டுப்படுத்துகிறார்கள். கூட்டத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி எல்லோரையும் பிடித்துத் தள்ளுகின்றார்கள்.

    சேவா தரிசனத்திற்கு சிறப்பு சீட்டு வாங்கினால் கூட அவர்களுக்கும் இதே நிலைதான். இவ்வாறு அந்த பக்தர் எழுதியுள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYCP4zA

    தமிழ் ஓவியா said...

    யார் காரணம்?

    ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர்கள்,

    திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக் கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

    ஈ.வெ.ரா. பகுத்தறிவு 1.9.1935

    Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYQkm5J

    தமிழ் ஓவியா said...


    பாம்புபற்றிய மூடநம்பிக்கைகள்: வானொலியின் நற்பணி

    நேற்று முன்னாள் இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை எனது காரில் வடசென்னைக் கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், வானொலியில் பாம்புகள்பற்றி ஒரு சுவாரஸ்யமான உரையாடல் - கேள்வி பதில் பேட்டியைக் கேட் டேன்!

    தமிழில் கேள்வி கேட்ட வானொலி நண்பரும், பதில் கூறிய சென்னை பாம்புப் பண்ணை இயக் குநர் இராஜரத்தினம் அவர்களும் இருவரும் மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை அமைத்தனர்.

    பொதுவாக பாம்புகளைப்பற்றி நாம் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றும் பாம்புப் புற்றையே கடவுள் நாகராஜன் வசிக்கும் இடம் என்றும் கருதி அதற்குப் பாலூற்றி பக்தியாக வழிபடுவதும் காலங் காலமாக நாடு முழுவதும் நாம் பார்க்கும் நடப்புகள்.

    பாம்புகள் இந்தியாவில் மட்டு மின்றி உலக முழுவதும் சுமார் 2500 வகைகளுக்கு மேல் உள்ளன என்ற அரிய தகவலுடன் பேட்டி துவங்கியது!

    அவற்றில் விஷம் உள்ள பாம்புகளும் விஷமற்ற பாம்புகளும் என இருவகை உண்டு என்பதும், பாம்பைக் கண்டால் நமக்கு எப்படி பயமோ, அதுபோலவே பாம்புகளுக்கு மனிதர்களின் அரவம் கேட்டாலே பயம்!

    எந்த காட்டு பிராணிக்கும்கூட இதே விதிதான். பாம்பைப்பற்றி பழங்குடி மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளபடியால் அவற்றைக் கண்டு அவர்கள் பயப்படுவதில்லை.

    அவைகளிடத்தில் எப்படி பக்குவமாக நடந்து கொண்டு அதன் போக்கில் அதனை விட்டு விட வேண்டுமோ அப்படி விட்டு விடுவார்கள்.

    பாம்பினைப் பற்றிய மூடநம்பிக்கைக் கருத்துக்கள் பற்றி திரு. இராஜரத்தினம் அவர்கள் பல அரிய தகவல்களை அடுக்கடுக்காகக் கூறி அசத்தினார்கள். கேள்வி கேட்ட நண்பர் எடுப்பும் சிறப் பானதாக அதற்குக் காரணமாகவும் அமைந்தது!

    1. பாம்பு பால் குடிக்கிறது என்பதும் பொய்; கற்பனை, உண்மை அப்படி அல்ல.

    2. பாம்பு வகையில் கொம்பேறி மூக்கன் என்று ஒரு வகைப் பாம்பு, கடித்து சாகடிக்கப்பட்ட வரைச் சுடுகாட்டில் எரித்து அந்த பிணத்தின் புகை நுகரும் வரையில் மரத்தில் ஏறிப் பார்த்துதான் அமையும் என்பது சரியான புருடா - பொய்ச் செய்தி.

    3. பாம்பு தங்களுக்குத் தொல்லைக் கொடுப் போரை நினைவில் வைத்துக் கொண்டு பழி வாங்கும் வகையில் சாகடிக்கும் என்பது உண்மையே அல்ல. வெறும் கற்பனை.

    4. பாம்பு பால் குடித்து, புற்று கட்டிய தன் மூலம் பலருக்குப் பலன் தருகிறது என்பது மூடநம்பிக்கை.

    5. பாம்பு மாணிக்கத்தைக் கக்கும் என்பதெல்லாம் கட்டுக் கதை.

    6. நாகரெத்தினம் கிடைக்கும் என்பது புதினத்திற்குரியதே தவிர (கற்பனையானது) வேறில்லை.

    இப்படி பாம்புகளைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்க மிகுந்த சுவையுடனும் சுவாரஸ்யத்தோடும் சொன்ன நண்பர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

    வானொலியின் இத்தகைய சேவைகள் வளரட்டும்!

    அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை அகற்றிட இது போன்ற பல செய்திகள் வெகு மக்களைச் சென்றடைதல் அவசியம் ஆகும்.



    - கி.வீரமணி

    Read more: http://viduthalai.in/page-2/82516.html#ixzz35EYadijw

    தமிழ் ஓவியா said...




    இந்தியாவில் பாலியல் குற்றங்கள்:

    கடமை தவறும் அதிகாரிகள், நீதித்துறையினர், அரசியல்வாதிகள்

    அய்.நா. குற்றச்சாற்று

    இந்தியாவில் அதி கரித்து வரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக அய்க்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சகோ தரிகளான இரு இளம் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக் கப்பட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப் பட்ட சம்பவம் உள் நாட்டில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர் களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர் பாக இந்திய அதிகாரி களுடன் சர்வதேச குழந் தைகள் உரிமை கண் காணிப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில், இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் பெரிய அளவிலான புறக் கணிப்புக்கு குழந்தைகள் இலக்காக்கப்படுவதாக அய்,.நா குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன் முறைக்குள்ளாவதாக கூறப்படும் இந்தியாவில் பாலியல் வன்முறை செய் யப்படும் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர். இவர்களை நாசப் படுத் தியவர்களில் சரிபாதிப் பேர் நன்கு அறிமுக மானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர் களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளது.

    சர்வதேச ஊடகங் களில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக, இது போன்ற பல சம்பவங்கள் உள்ளூர் வீதிகளில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தாமல், அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படா மல், இதன் மூலமாக ஊடகங்களின் பார்வை யில் படாமல் பலரது கவனத்தை ஈர்க்க தவறி விடுகிறது. அவற்றைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்ற சம்பவங்கள் தொடர்பான போதிய தொகுப்புகள் இல்லாமை, மத்திய, -மாநில அரசு களிடையே நிலவும் சீரற்ற சட்டங்களும் அவற்றை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் நீதித் துறையும் தங்களது கட மையை நிறைவேற்ற தவறி விடுவது ஆகிய வற்றை சுட்டுக்காட்டி இந்த கண்காணிப்பகத் தின் துணை தலைவர் பென்யாம் மெஸ்மர் வேதனையை வெளிப் படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளின் போக்கு பாலியல் வன்முறை சம்பவங்களை விபத்து என்றும் சில வேளை களில் சரி - சில வேளை களில் தவறு என்றும் கேலியாக கருத்து கூறிய சில இந்திய அரசியல் வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண் சிசுக் கொலை, பெண்களை புறக்கணித்து கைவிடுதல், பெண் கருக்கலைப்பு ஆகி யவற்றை தடுக்க இந்தியா கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அய்க் கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்த பட்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/82500.html#ixzz35EYmlB6u

    தமிழ் ஓவியா said...


    இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்


    உடமைகள், உறவுகள், உரிமைகள் ஆகியவற்றை தொலைத்து எவ்வித ஆதர வும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக வாழ்கின்றனர்.

    இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டு அகதிகளாக வாழும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு பாதுகாப்பு மற் றும் வாழ்க்கையை முன்னேற்றும் நோக் கத்துடன், ஜூன் 20 ஆம் தேதி உலக அகதி கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலக நாடுகளில் இனவெறி, அரசியல், மதம், வன்முறை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, சொந்த இடத்தை விட்டு அகதிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உள்ள உரிமைகளைத் திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும்.

    அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப்போல நடத்தப்படவேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

    உலகளவில் 1.4 கோடி பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என 2013 இல் எடுக்கப்பட்ட அய்.நா., கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

    உலகிலேயே ஆப்கானிஸ்தானில் இருந்துதான், அதிக மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 2 ஆவது இடத்தில் சிரியா, 3 ஆவது இடத்தில் ஈராக், 4 ஆவது இடத்தில் சோமாலியா, 5 ஆவது இடத்தில் பாலஸ்தீனம் உள்ளன. அகதிகள் குடிபெயர்ந்துள்ள நாடுகள், அங்கு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்வரவேண்டும்

    Read more: http://viduthalai.in/page-8/82534.html#ixzz35EZs4hIa

    தமிழ் ஓவியா said...


    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக் குழு இலங்கை செல்கிறது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு


    சென்னை, ஜூன் 20_ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் எம்.பி., எம். அப்துல் ரஹ் மான், மாநில செயலாளர் கள் காயல் மகபூப், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜா முதீன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று, துணை தூதர் ஏ. ஜபருல்லாஹ்கானை சந் தித்து அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு மனு ஒன்றை அளித்தனர்.

    அம்மனுவில், சிறீலங்கா இறுதிப் போருக்கு பின்ன ரும் அந்நாட்டில் வாழும் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும் பான்மை சிங்கள மக்களின் தாக்குதலுக்கு ஆளாவது குறித்து கவலை தெரிவிக் கப்பட்டிருந்தது.

    சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், அதற்கு பவுத்த துறவிகளே தலைமை தாங்கியதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த அம்மனுவில், தற்போது களுத்துரை மாவட்டம் அளுத்தகமா பேருவளை பகுதிகளில் பவுத்த பல சேனா வன்முறையாளர் களால் முஸ்லிம்கள் தாக் கப்பட்டு உயிர் உடைமை களை இழந்து தவிப்பது குறித்து பெரும் வேதனை தெரிவிக்கப்பட்டிருந்து.

    இலங்கையில் பெரும் பான்மை சமூகத்தின் தீவிர வாத எண்ணம் கொண்ட வர்கள் அடக்கப்படுவ தோடு தமிழ் பேசும் சிறு பான்மையினர் பாதுகாக் கப்பட வேண்டும் என்றும், பள்ளிவாசல்கள், கோவில் கள், கிறிஸ்துவ தேவாலயங் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், கலவரத் தால் பாதிக்கப்பட்ட முஸ் லிம்களுக்கு நீதியும், நிவா ரணமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக் கப்பட்டிருந்தது.

    இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர் வாகிகள் இலங்கை துணைத் தூதரை சந்தித்து அந்நாட்டில் நடைபெறும் சிறுபான்மையினருக்கெதிரான கலவரங்கள் குறித்து எங் களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.

    பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக நீதி யும், நிவாரணமும் வழங் கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கும் மனுவை வழங்கினோம். அதை உடனடியாக அதி பரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் துணைத் தூதர் உறுதிய ளித்தார்.

    இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் தூதுக் குழு இலங்கைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதி களைப் பார்வையிடவும், அதிபரை சந்திப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள், புத்த பிட்சுகளின் தலைவர்கள், பவுத்த பொதுபல சேனா வின் தலைவர்களை சந் திப்பதற்கும் அனுமதி தரு வதோடு, ஆவன செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தோம், எங்கள் கோரிக்கையை வரவேற்ற இலங்கைத் தூதர் உடனடியாக ஆவன செய்வதாக உறுதி கூறினார்.

    எங்கள் இலங்கை பயணத்தின்போது முஸ் லிம் பிரச்சினை மட்டு மின்றி, அங்குள்ள இலங் கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச் சினை குறித்தும் எடுத்து ரைப்போம். ஆர்ப்பாட்ட அரசியலில் நாட்டமில் லாத இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அணுகு முறை எப்போதுமே ஆக் கப்பூர்வமாகவே இருக்கும்.

    - இவ்வாறு பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

    Read more: http://viduthalai.in/page-8/82532.html#ixzz35Ea6f5wk

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மீகம்? .......

    தண்டனையா?

    ஒருமுறை மும் மூர்த்திகளில் யாருக்கு சத்வ குணம் அதிகம் இருக்கும்? என்ற எண் ணம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

    இதை சோதிக்க ஒவ்வொரு மூர்த்தியையும் நேரில் சந்திக்கச் சென்றார் முனிவர். பெருமாளே சத்வ குணம் படைத்தவர் என்று அறிந்தார்.

    முனிவர். திருமகள் உறையும் பெருமாளின் மார்பில் உதைத்தபோதுகூட திருமால் கோபம் கொள்ளாது.

    முனிவரின் கால்கள் நோகக் கூடாதே என்று கவலை கொண்டானாம். ஆனால் முனிவரின் செய்கையால் கோபம் கொண்ட திருமகள் திரு மாலைப் பிரிந்து பூலோகம் சென்றாள்.

    திருமால் தேவியைத் தேடிச் சென்ற போது, சுவர்ண முகி நதிக்கரை யில் ஒரு தடாகம் ஏற் படுத்தி அதன் கரையில் தவமியற்றுக என்று ஒரு அசரீரி கேட்டது. பெரு மாளும் அதன்படி 12 ஆண்டு காலம் தவம் செய்தார்.

    இறுதியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச திதியில் வெள்ளிக் கிழமை உத்திராட நட்சத்திரத்தில் மைத்திரம் என்ற முகூர்த்த நேரத்தில் திருமகள் பொற்றாமரை மலரில் தோன்றி திருமா லுக்கு மாலையிட்டாளாம்.

    கடவுளுக்கே சாபம் - தண்டனையா? அப்படி என்றால் அந்தக் கடவுள் எப்படி சர்வ சக்தி வாய்ந்தவர் ஆவார்? பக்தரைப் பகவான் சோதிப்பார் என்பார்கள்; இங்குப் பகவானைப் பக்தர் சோதிப்பது எப்படி?

    Read more: http://viduthalai.in/e-paper/82602.html#ixzz35K5E6fi9

    தமிழ் ஓவியா said...


    காரணம்


    வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)

    Read more: http://viduthalai.in/page-2/82620.html#ixzz35K65dmt5

    தமிழ் ஓவியா said...


    இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை வெறும் 26 சதவீதம்தான்!- இது சென்சஸ் கணக்கு


    புதுடில்லி, ஜூன் 21_ பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான். இந்தக் கணக்கைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்!

    இந்தி பேசுவோர் 2001- ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேர் என கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45 சதவீதம் பேர்.

    அய்ந்தாவது இடம் தமிழுக்கு வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசு வோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப் பதிவு செய்திருந்தனர்.

    மத்திய அரசின் மோசடி இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய அரசு கணக்கு காட்டியிருப்பது ஒரு மோசடியான வேலை என்பது அம்பலமாகியுள்ளது. காரணம், இந்த 42 கோடி மக்களும் இந்தி பேசுபவர்கள் அல்ல.. வெவ்வேறு மாநிலங்களில் இந்தியின் கிளை மொழிகளைப் பேசுபவர்கள்.

    26 சதவீதம்தான் இந்தியை மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 கோடியே 79 லட்சம் பேர். அதாவது நாட்டு மக்கள் தொகையில் 26 சதவீதம். இந்தி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளான போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, சத்தீஸ்கரி, ஹரியான்வி, மேவாரி, மால்வி, மார்வாரி உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர் 15 கோடிக்கு மேல் உள்ளனர். இவை வட்டார வழக்கு மொழிகள் அல்ல. தனி எழுத்துருக்களைக் கொண்டவை. இந்த மொழி பேசுவோர் தங்கள் தாய்மொழி இந்தி என்று சொல்வதில்லை. அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.

    குற்றச்சாட்டு ஆனால் இதை மறைத்து விட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 42 கோடி பேர் என கணக்கு சொல்கிறது மத்திய அரசு. இதன் மூலம் பெரும்பான்மை யோர் பேசும் மொழி இந்தி என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

    முரண்பாடு "இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது. இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள். இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது," என்கிறார் இந்திய மொழிகள் கணக் கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி.

    Read more: http://viduthalai.in/page-2/82623.html#ixzz35K6QcpeU

    தமிழ் ஓவியா said...


    இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் மோதல் கைதான இந்து முன்னணியினர் சிறையில் அடைப்பு!


    அம்பத்தூர், ஜூன் 21- இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி நேற்று பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 அரசு பேருந்து கண்ணாடிகள், 3 கார், லாரி உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

    மேலும் சுரேஷ்குமார் உடலை மண்ணூர் பேட்டை சிடிஎச் சாலை சந்திப்பில் இந்து முன்னணி தொண்டர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டை பேருந்து நிலையம் வழியாக ஊர்வல மாக வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். அந்த வழியில் மசூதி இருப்பதால் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 10_க்கு மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர். பலர் சிதறி ஓடினர். மேலும் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டதில் 3 காவல் துறையினர் காய மடைந்தனர். இதையடுத்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் துறையினர் 52 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    பின்னர் 52 பேரில் 39 பேரை விடுதலை செய்தனர். 13 பேர் மீது பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தது, கற்கள் கம்புகளை வைத்து தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வழக்குகளின் கீழ் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குமரியில் பதற்றம்

    அம்பத்தூரில் வெட்டி கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் உடல் குமரிக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. இறுதி ஊர் வலத்தின் போது திடீரென வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    Read more: http://viduthalai.in/page-3/82634.html#ixzz35K6pbv7V

    தமிழ் ஓவியா said...

    கழகப் பேச்சாளர்கள், பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

    கழகப் பரப்புரை கூட்டங்கள், திருமணங்கள், இல்லத்திறப்பு, படத்திறப்புகளுக்கு கலந்து கொள்ள ஒப்புதல் அளித்து தேதி கொடுக்கும் கழகப் பேச்சாளர்கள், இது தொடர்பாக மாவட்ட, ஒன்றிய கிளைக்கழக பொறுப்பாளர்களுக்கு தங்கள் வருகையினை அருள்கூர்ந்து, அஞ்சல் அட்டை மூலமாகவோ, தொலைப்பேசி வாயி லாகவோ தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள் கிறோம்.

    மேலும், மேற்கண்ட நிகழ்ச்சிகளை நகல் பிரதி எடுத்து அனுப்பாமல் துண்டறிக்கைககள் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள் நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். தந்தை பெரியாரின் தலையாய கொள்கை தமிழர் தலைவரின் தலைமையில் தரணியெங்கும் தழைக்கச் செய்வோம்! - செல்வம், சண்முகம், நெய்வேலி வெ.ஞானசேகரன்
    மாநில அமைப்புச் செயலாளர்கள்

    Read more: http://viduthalai.in/page-4/82638.html#ixzz35K7EfKWt

    தமிழ் ஓவியா said...


    மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்


    கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு

    சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர்கள் செய்யும் ஏமாற்றையும் வஞ்சகத்தையும் பற்றியும், ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கியமற்றவர்கள் என்றும், உதாரணமாக சென்னையில் உள்ள ராம கிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லையென்றும்,

    அங்கு புழங்கும் பணம் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பார்ப்பனரல்லா தாருடையதென்றும், வருஷம் 20, 30 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றதென்றும் இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலைவருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியர் சட்டசபையில்கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும்,

    ஆனாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக்கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமையாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொதுமக்கள் பணத்தை வசூல் செய்து, கொடுக்கின்றார்கள் என்றும், இங்கும் அதுபோல் இருக்கக்கூடாதென்று ஆசைப்படுவ தாகவும், விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்துமதப் பிரதி நிதியாய் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான பிரதிநிதியாய் இல்லாமல் இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாய் போய் கேசை ஜெயித்துக்கொண்டு வந்தாரென்றும்,

    ஆகையால் அதனாலேயே இந்துமதம் என்பதற்கு யோக்கியதை வந்து விடாதென்றும், அவர் இந்தியாவையும் இந்துக்களையும் பற்றி இந்தியாவில் பேசி இருப்பதைப் பாருங்கள் என்றும், பார்ப்பனர்களைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதும், வருணாசிரமம், ஜாதி வித்தியாசம் ஆகியவைகளைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்ப தையும்,

    இந்து அரசாங்கமாகிய மலையாளத்தைப் பற்றிச் சொல்லி இருப்பதையும், அவர் விக்கிரகங்களைப் பற்றிச் சொல்லும்போது அவை பாமர மக்களுக்கு வேண்டி ஏற்பட்டதே ஒழிய மற்றவர்களுக்கு அல்ல என்றுதான் சொன்னாரென்றும்,

    ஆனால், இப்போதைய விக்கிரகங்களை பாமர மக்களுக்கு உபயோகப்படாமலும், கண்ணில் பார்க்கக்கூட இடம் தராமலும், பண்டிதர்கள் பிரமஞானம் உடையவர்கள் கடவுளாலேயே அறிவாளிகளாய் பிறப்பிக்கப்பட்ட மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும், அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கும்தான் சாதனமாயிருக்கின்ற தென்றும்,

    மற்றும் தென்இந்தியாவுக்கு வேண்டியதெல்லாம் உண்மையான சுயமரியாதையே என்று அவர் சொல்லி இருக்கின்றார் என்றும் மற்றும் இப்படி அவர் சொன்ன அனேக விஷயங்களைப் புத்தகத்தைப் பார்த்தே எடுத்துச் சொல்லி 2 மணி நேரம் கூட்டத்தையே ஆச்சரியப்படும்படி செய்து விட்டார்.

    - குடிஅரசு - சொற்பொழிவு - 09. 02. 1930

    Read more: http://viduthalai.in/page-7/82600.html#ixzz35K7aVtOo

    தமிழ் ஓவியா said...


    சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாட்டில் பேசியது


    சகோதரர்களே!

    இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக்கை யைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்பகால நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றது. அதாவது இந்தியப் பொதுமக்களுடையவும், பாமரமக்களுடையவும் நன்மைக்காக வென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக் கப்பட்டது.

    ஆனால் இதை ஆரம்பித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகத்திற்கும், தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப் புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையா யிருந்தார்கள். அம்மகாநாடுகளில் தங்கள் உத்தியோகத்திற் கேற்ற பல தீர்மானங்கள் செய்துவிட்டு பாமர மக்களை ஏமாற்ற ரோடுகள் போட வேண்டும், வரி குறைக்க வேண்டும், காடு திருத்தவேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள்.

    காரியத்தில் சீர்திருத் தம் என்னும் பேரால் கொழுத்த சம்பளமுள்ள சில உத்தியோகங் களை அந்தப் படித்தக் கூட்டத்தினர் அனுபவிக்கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்த படி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதி காரங்களும் மற்றும் தொல்லை களும் பெருகினதைத் தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்பட வில்லை.

    சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சி களும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய்விட்டது. ஏனென்றால், ஸ்தாபனங்களில் முக்கியஸ்தர்களாயிருக் கின்றவர்கள் அதனால் ஏற்படும் உத்தியோகங்கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர் களுக்குப் பங்கு கொடுக்காமல் ஏமாற்றச் சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள் பிரிந்துபோய் வேறு ஸ்தா பனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர்களா வதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப்படாதவர்கள் ஜாதி மத வகுப்புகளின் பேரால் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

    எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமூக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும், ஸ்தாபனங்களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதிலுள்ளவர்களின் சுயநல சூழ்ச்சி யாலும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.

    ஆகையால், இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தும் படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும்.

    அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுய மரியாதையையும் உண்டாக்குவதே தவிர, உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டுமென்பதல்ல என்பதே எனதபிப்பிராயம்

    இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்று படுத்திக் கொண்டா லொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது.

    ஆதலால் நீங்கள் ஏதாவது எங்கள் காங்கிரசைப் பின்பற்றி, எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப்போல பாழாக்கி, ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளைவித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன்.

    (மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சபாஷ், சபாஷ், உண்மை, உண்மை என்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. இராமசாமியாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்).

    - குடிஅரசு -சொற்பொழிவு - 02.02.1930

    Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7mgszo

    தமிழ் ஓவியா said...

    தந்தை பெரியார் பொன்மொழி

    மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டி யிருக்கின்றது.



    ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன்.

    எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன் மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.

    Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7wElnl

    தமிழ் ஓவியா said...

    5 ரூபாய் இனாம் -சித்திரபுத்திரன் -

    திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாகிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த் தாலும் பெரிதும் பார்ப்பனர்களே கலந்து அவர்களே முழுதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன?

    திரு. காந்தி இந்த சத்தியாகிரகப் போருக்குப் பணமே வேண்டியதில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோ பாலாச்சாரியார் பணம் வேண்டும் மென்று கேட்பதின் இரகசியமென்ன? அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூழ்ச்சி என்ன?

    இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார் களையே ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன? இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்கக் காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையளிப்பவர் களுக்கு குடிஅரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனா மாகவும் அளிக்கப்படும்.

    குறிப்பு : - முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான விடை எது என்பதை நிர்ணயிப்பதற்கும் நானேதான் ஜட்ஜு எனக்குமேல் அப்பிலோ கேள்வியோ கிடையாது.

    - குடிஅரசு - அறிவிப்பு - 30.03.1930

    Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K8Gbv1c

    தமிழ் ஓவியா said...


    த.பெ.தி.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தமிழர் தலைவர் முன்னிலையில் தோழர்களுடன் கழகத்தில் இணைந்தார்!

    சென்னை, ஜூன் 21- தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், இன்று (21.6.2014) சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து, திராவிடர் கழகத்தில் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் ஓரணியில் இணைந்து பணியாற்றும் நோக்கில், திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

    வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களுடன் த.பெ.தி.க. தோழர்கள் சொ.அன்பு (வடசென்னை மாவட்டத் தலைவர்), வி.ஜனார்த்தனன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), கண்ணதாசன் (காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்), ரகுநாத் (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), ஜெய்சங்கர் (திருவல்லிக்கேணி துணை அமைப்பாளர்), எருக்கஞ்சேரி தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், வழக்குரைஞர் காண்டீபன், பாட்சா உள்ளிட்ட த.பெ.தி.க. தோழர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    முன்னதாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், விடுதலை சந்தாவுக்கான நன்கொடையும் அளித்தார். தோழர் வி.ஜனார்த்தனன் ஈராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.

    திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Read more: http://viduthalai.in/page-8/82578.html#ixzz35K917aBe

    தமிழ் ஓவியா said...


    மாட்டுச் சாணத்தில் இருந்து குடிநீர்


    மாட்டு சாணத்தில் இருந்து குடிநீர் தயாரிக்க முடியும் என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு, மெக் லானஹன் நியூட்ரியண்ட் செப்ப ரேஷன் சிஸ்டம் என பெயரிடப்பட் டுள்ளது. எதிர்காலத்தில், ஏற்பட வுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்த தொழில் நுட்பத்தின் உதவியுடன், சாணத்தில் இருந்து சுத்தமான, சுகாதாரமான நீரை தயாரித்து குடிநீராக பயன்படுத்த லாமாம். இந்த தொழில்நுட்பத்தை, மிக்சிகன் பல்கலைக்கழக விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    Read more: http://viduthalai.in/page2/82559.html#ixzz35K9XV4QV

    தமிழ் ஓவியா said...


    கழக மருத்துவர் புகழேந்தியின் மனித நேயப் பயணம்


    தந்தை பெரியார் கொள்கையின் பால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஈர்க்கப் பட்டு அதனை ஏற்று இயக்கத்தை வலுப்படுத்த வந்தவர்கள் ஏராளம். அந்த வகையிலே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற சிற்றூரில் இருந்த கொள்கை வீரர்கள் ராமமூர்த்தி _- சாந்தா இவர்கள் தமது மகன், மகள் களை பெரியார் கொள்கை நெறியோடு வளர்த்தது மட்டுமல்ல தந்தை பெரியாரின் மனித நேயத்தையும், ஈகை குணத்தையும், கல்வியையும் போதித்தது சிறப்பாகும்.

    தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் நிறுவனங்களுக்கு செல்லும் போது அதன் நிர்வாகிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தும் மிக முக்கிய கருத்துகளில் முதன்மை வாய்ந்தது என்ன வென்றால் அனைவரும் பள்ளி நடத்துவது போன்று நம் பள்ளி நடைபெறுவது சிறப்பல்ல. தந்தை பெரியார் கூறியதை போல வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், சமுதாயத் தில் பின் தங்கியவர்களுக்கும் முதல் தலைமுறையினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு பல பள்ளிகள் வாய்ப்பு வழங்கும். படிப்பில் ஆவரேஜாக (பின் தங்கி) உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி அவர்களை பள்ளியில் சேர்த்து அந்த மாணவர்களை நல்ல சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும் எனக் கூறுவார்.

    அந்த வகையிலே ராமமூர்த்தி - சாந்தா ஆகியோரது மகன் மருத்துவர் புகழேந்தி அரசு மருத்துவராக பணி யாற்றி வந்தார். தன்னுடைய சேவை பின்தங்கிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நோக்கோடு மலை வாழ் மக்கள் வாழும் நீலகிரி, குன்னூர் பகுதி அரசு மருத்துவ மனைக்கு மாற்ற லாகி சென்று தொண்டு செய்து வந்தார். அவரது தொண்டினால் கவரப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவரை பணிகள் முடிந்ததும் தங்கள் தொண்டு நிறுவனத்தில் இணைந்து மலைவாழ் மக்களுக்கு பணியாற்றக் கேட்டுக் கொண்டனர். அந்த வகையில் அவருடைய பணிக்காலம் நிறைவடைந் ததும் நீலகிரி ஆதிவாசி நல்வாழ்வு அமைப்பு என்ற தொண்டு நிறுவனத் தின் மூலம் அம்மக்களுக்கு தொண் டாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

    இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் குன்னூர் பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் (இருளர், தோடர்) வாழும் சுமார் 26 கிராமங்களுக்கு மாதத்தில் ஒரு முறை என வகை பிரித்து சென்று அந்த மக்கள் வாழும் இடத் திற்கே நேரில் மருத்துவர் புகழேந்தி, செவிலியர் வனிதா, இரத்த அழுத்த ஆய்வகர் கலைவாணி, ஓட்டுநர் அசோக் ஆகியோர் சென்று மக்களை பரிசோ தித்து ஊசிபோட்டும், அடுத்து இவர் கள் செல்லும் நாள் வரைக்கும் தேவை யான மருந்துகள் வழங்கியும் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கிராமங்களுக்கு பேருந்து வசதி என்பது ஒரு நாளுக்கு காலை, இரவு இருமுறைதான் உண்டு. அந்த மக்கள் ஏதேனும் பொருட்கள் வாங்க வெளியே செல்ல நேரிட்டால் காலையில் சென்று இரவுதான் திரும்ப முடியும்.

    சில கிராமங்களில் மாணவர்கள் படிப்பதற்கு அங்கேயே அரசு பள்ளி சிறந்த கட்டடத்துடன் அமைந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று.

    மருத்துவர் புகழேந்தியுடன் ஒருநாள் பயணத்தில் அங்கே உள்ள மக்களுக்கு புன்முறுவலோடு அந்த மக்களின் மன நிலைக்கேற்ப பதில் கூறி நகைச்சுவை உணர்வோடு அம்மக்களிடம் பழகியதை காணமுடிந்தது. ஒரு மருத்துவர் அணுகுமுறை நோயாளியின் பாதி நோயை சரிசெய்துவிடும் என்ற எண்ணம் தோன்றியது. திரும்பும் வழியில் முதியவர் ஒருவர் நின்று கைகாட்டியதும் வண்டியை நிறுத்தி அவருக்கு சிகிச்சை, மருந்து, ஊசி வழங்கிய பின் வாகனம் புறப்பட்டது.

    அமெரிக்காவிலிருந்து குன்னூர் வருகை தந்த முக்கிய பிரமுகர் பொறியாளர் பாலகுரு அவர்கள் தான் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல விரும்பவில்லை. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு செல்ல வேண்டும் என விரும்பி தனது குடும்பத்தாருடன் மருத்துவர் புகழேந்தி சென்ற கிராமத்திற்கு சென்று அவர் பணியை கண்டு வியந்து பொதுவாக மருத் துவர்கள் நல்ல வசதியுள்ள இடத்தில் தான் பணியாற்ற விரும்புவார்கள். நீங்கள் செய்யும் இந்த பணி மகத்தான பணி என 60ஆம் ஆண்டு அகவை காணும் மருத்துவர் புகழேந்தியை மனதார வாழ்த்தினார்.

    தந்தை பெரியாரின் தொண்டுள்ளத் தால் மனித நேயத்தோடு வளர்ந்த மருத்துவர் புகழேந்தி சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தொண்டாற்ற அடுத்த கிராமத்தை நோக்கி புறப்பட்டார். தொடரட்டும் அவரது சமுதாய தொண்டு.

    Read more: http://viduthalai.in/page4/82561.html#ixzz35KA3xUn4

    தமிழ் ஓவியா said...


    மத(யானை) அட்டகாசம்!


    மோதல்கள் போதுமடா! - மதங்களின்
    மோதல்கள் போதுமடா! . . . (மோதல்கள்)
    வாதங்கள் ஆயிரம் பக்கம் - பக்தி
    வாழ்க்கையில் செத்தபின் சொர்க்கம்!
    சேதங்கள் எதற்கு மீண்டும்? - மக்கள்
    சிந்தித்துத் தெளிந்திட வேண்டும்! . . .
    (மோதல்கள்)
    1. இந்துநாடா இசுலாம் நாடா - இது
    எந்தநாடு சொல்லவா?
    இந்து அல்ல இசுலாம் அல்ல - இந்தியா
    ஏழைநாடு அல்லவா?
    தானமே வேண்டும் இன்றும் - சமா
    தானமே வேண்டும் என்றும்! . . .
    (மோதல்கள்)
    2 கடப்பாறை சூலம் வெடிகுண்டு - வலிய
    கரங்களுக்கு தேவையா?
    கடல்போல குருதி வெள்ளம் - அன்புக்
    கடவுளுக்குத் தேவையா?
    புத்திவந்தால் பக்திபோகும் - உனக்கு
    பக்தி வந்தால் புத்திபோகும்! . . .
    (மோதல்கள்)

    - குபேரன்

    Read more: http://viduthalai.in/page6/82574.html#ixzz35KBQ76ND

    தமிழ் ஓவியா said...


    மலேரியாவை ஒழிக்க கொசுக்களே!


    கொசுக்கள் மூலம் மலேரியா ஒழிப்பு நட வடிக்கையை மேற்கொள்ள விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டியுள்ளனர். மலேரியா நோய், கொசுக்கள் மூலம் பரவுகின்றது. இது அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க் கிருமிகளை உற்பத்தி செய்கிறது. பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. எனவே மலேரியா என்ற கொடிய நோயை கொசுக்கள் மூலமே ஒழிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டி ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற் கொண்டனர்.

    அதன்படி புதிய மரபணு மூலம் மலேரியாவை உருவாக்கும் அனோபிலெஸ் காம்பியே கொசுக் களில் ஆண் கொசுக்களை மட்டும் 6 தலைமுறைகளாக மாற்றி மாற்றி உரு வாக்கினர். அதன் மூலம் மலேரி யாவை பரப்பும் பெண் கொசுக்கள் ஒழிந்து ஆண் கொசுக்களை மட்டும் பெருக்கமடைய செய்தனர். இதன் மூலம் மலேரியா கிருமிகளை உரு வாக்கும் கொசுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என விஞ் ஞானிகள் நம்புகின்றனர்.

    Read more: http://viduthalai.in/page6/82576.html#ixzz35KBg8oLa

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மீகம்?

    எந்த வகை?

    பிறர் காதில் விழும்படி பிரார்த்தனை செய்வது வாசிகம் இது ஒரு மடங்கு பலன் தரும். தன் காதில் விழும்படி செய்வது உபாம்சு ஆகும் - இது நூறு மடங்கு பலன்தரும். ஆனால் மனதில் மட்டும் பிரார்த்தனை சொல்லு வது உபாம்சு - 100 மடங்கு பலன் தருமாம்.

    சரி. காந்தியார் பிரார்த் தனை செய்யும் பொழுது தானே சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் அது எந்த வகைப் பலனோ?

    Read more: http://viduthalai.in/e-paper/82691.html#ixzz35PvS3zei

    தமிழ் ஓவியா said...


    தாழ்த்தப்பட்டோர்களுக்கு முடி வெட்டக் கூடாதாம் சலூன் கடைக்காரரை தாக்கிய ஆதிக்க ஜாதியினர் கர்நாடகத்தில் அதிர்ச்சிச் சம்பவம்


    பெங்களூரு, ஜூன் 22- கர்நாடக மாநிலம் பெல் லாரியில் தாழ்த்தப்பட் டோருக்கு முடி வெட்டக் கூடாது, சவரம் செய்யக் கூடாது என ஆதிக்க ஜாதியினர் சலூன் கடைக் காரர்களை மிரட்டியுள் ளனர். இதை மீறி தாழ்த் தப்பட்டவர்களுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைக்காரர்கள் தாக்கப் பட்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகத்தின் பெல் லாரி மாவட்டம், தாலூர் பகுதியில் ஜாதி பாகு பாடு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் இன்ன மும் தொடர்கின்றன. தாலூ ரில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு சலூன் கடை களில் சுழல் நாற்காலி யில் அமர்ந்து முடி திருத்திக்கொள்ளவோ, சவரம் செய்து கொள் ளவோ அனுமதியில்லை. மரத்தடியிலோ, ஒதுக்குப் புறமாகவோ அமர்ந்து தான் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்.

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன்படுத்திய கத்தி, கத்தரிக்கோல் போன்ற உபகரணங்களை ஜாதி இந்துக்களுக்கு பயன் படுத்தக் கூடாது. மீறி னால் ஊர் பஞ்சாயத்தால் கடும் தண்டனை வழங் கப்படுவது காலங்கால மாக உள்ளது என்கிறார் கள் அப்பகுதி மக்கள்.

    தாலூரில் தற்போது 5 சலூன் கடைகள் உள் ளன. கடந்த சில வாரங் களுக்கு முன் இங்கு வந்த ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீங்கள் முடி வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாது. மீறினால் உங்கள் கடையும் இருக்காது. உங்கள் கையும் இருக்காது என்று மிரட்டியதாக மஞ்சுநாத் என்ற முடி திருத்தும் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள் ளார்.

    மிரட்டலை மீறி 5 சலூன் கடைக்காரர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து முடி திருத்தி வந்துள்ளனர். இதை யறிந்த ஆதிக்க சாதியினர் கடந்த சில தினங்களுக்கு முன் 5 சலூன் கடைகளை யும் அடித்து நொறுக்கி யுள்ளனர். இது தொடர் பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்கின்றனர்.

    தொடர்ந்து ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட் டவர்கள் முடிவெட்டிய கடையில் இனி முடி வெட்ட மாட்டோம் என தங்களுடைய ஜாதி சங்கங் களில் கடந்த செவ்வாய்க் கிழமை தீர்மானமும் போட்டதாக தெரிகிறது. அன்று முதல் ஆதிக்க ஜாதியினர் யாரும் எங்கள் கடைகளுக்கு வருவ தில்லை. பக்கத்து ஊருக் குச் செல்கின்றனர். இதன ல் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்று சலூன் கடைக் காரர்கள் சார்பில் மாநில சமூகநலத் துறையில் கடந்த புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக உடனே விசாரணை நடத் துமாறு அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை அமைச் சர் ஆஞ்சநேயா உத்தர விட்டார். இதையடுத்து தாலூரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சலூன் கடைக் காரர்கள் மிரட்டப்பட் டதும், தாக்கப்பட்டதும் உண்மை தான் என சமூக நலத்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    இதையடுத்து 5 சலூன் கடைக்காரர்களையும் வெள்ளிக்கிழமை பெங் களூருக்கு வரவழைத்த அமைச்சர் ஆஞ்சநேயா, ஆதிக்க ஜாதியினர் புறக் கணிப்பால் நஷ்டம் அடைந்த 7 முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    மேலும் தாழ்த்தப்பட் டவர்களுக்கு தொடர்ந்து முடித்திருத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சலூன் கடைக் காரர்கள் மீதான தாக் குதல் தொடர்பாக நட வடிக்கை எடுக்குமாறு பெல் லாரி காவல் துறையின ருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Read more: http://viduthalai.in/e-paper/82694.html#ixzz35PvnVWGv

    தமிழ் ஓவியா said...


    புக்கர் விருதை அடுத்து பின்டர் விருதை வென்றார் சல்மான் ருஷ்டி


    இலண்டன், ஜூன் 22- சாத்தானின் கவிதைகள் என்கிற புகழ்பெற்ற நூலின் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1989ஆம் ஆண்டில் அந்த நூலை எழுதியபோது இசு லாமிய அடிப்படைவாதி களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். நாடு கடத் தல்கள், ஈரானின் ஹயதுல்லா கொமேனியின் ஃபத்வா (மரண) தண்டனை அறி விப்பு என்று பல சவால் களை எதிர்கொண்டவர் சல்மான்ருஷ்டி. 67வயதான சல்மான் ருஷ்டி 2007ஆம் ஆண்டில் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளவர்.

    ருஷ்டியின் நள்ளிரவில் குழந்தைகள் என்கிற நாவ லுக்காக 2008ஆம் ஆண்டில் சிறந்த புக்கர் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட் டார். தற்போது எழுத்தாளர் ஹரோல்டு பின்டர் நினை வாக அளிக்கப்படும் பென் பின்டர் விருது வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த விருது நாடக எழுத்தாளர் ஹரோல்டு பின் டரை கவுரவப்படுத்துவதற் காக 2009ஆம் ஆண்டில் எழுத்தாளர்கள் அமைப்பு மூலம் தொடங்கப்பட்டது.

    இந்த விருதுக்கு தேர்வு செய்யும் குழுவின் இடம் பெற்றுள்ளவராகிய மவ்ரீன் ஃப்ரீலி என்பவர் கூறுகை யில், இந்த பரிசு ஆங்கில எழுத்தாளர்களின் வழியில், சல்மான்ருஷ்டிக்கு புத்தகங் களை எழுதியவர் என்பதற்கு மட்டுமின்றி, அவர் கருத்துச் சுதந்திரத்துக்காக பல ஆண் டுகள் பேசிவருவதற்கும், அவருடைய எண்ணிலடங் காத தனிப்பட்ட அன்பான செயல்களுக்காகவும் அவ ருக்கு நன்றி கூறும் வகையில் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

    மேலும் ருஷ்டி குறித்து அவர் கூறும் போது, எழுத் தாளர்களை முறையின்றி எதிர்ப்பது, கைது செய்வது, கட்டாயமாக நாடு கடத் துவது என்று உலகின் எந்த மூலையில் எழுத்தாளர் களுக்கு எதிராக இருந்தாலும், சல்மான் ருஷ்டி தாமாகவே முன்வந்து அக்கறையுடன் குரல் கொடுப்பார். கவன முள்ள எழுத்தாளர் உறங்கு வதில்லை என்கிற வரி களுக்கு ஹரோல்டு பின் டரையடுத்து ருஷ்டி முதல் நபராக இருப்பதாக நான் எண்ணுகிறேன் என்று கூறினார்.

    இந்த விருது வழங்கப் பட உள்ளது குறித்து ருஷ்டி கூறும்போது, என் நண்பர் ஹரோல்டு பின்டர் பெயரில் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெரிதும் ஆவ லாக உள்ளேன். எழுத்தாளர் கள் டோனி ஹாரிசன், டேவிட் ஹேரி, கரோல் ஆன் டஃப்பி மற்றும் டாம் ஸ்டாப்பர்டு ஆகியோரின் வழியில் பின்டரின் இலக்கிய அறிவு, சமூகநீதியில் உணர்ச் சியுடன் பொருந்தியிருந்தது.

    எழுத்தாளர் பணி என்பது உலகின் இலக்கிய வளர்ச் சிக்கு மட்டுமின்றி, சுதந்திர மனித உரிமைப் பறிப்பை எதிர்க்க வேண்டியது மிக வும் முக்கியமானதாகும். அதில் இங்கிலாந்திலும், அமெரிக்க அய்க்கிய நாடு களிலும் என்னுடைய பங் களிப்பும் உள்ளது என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ருஷ்டி கூறினார்.

    இலண்டனில் அக்டோ பர் 7ஆம் தேதி அன்று நியூயார்க்கிலில் உள்ள எழுத் தாளர் விருது வழங்கும் விழாவில் ருஷ்டிக்கு பிரிட் டிஷ் நூலகத்தில் வழங்க உள்ளார். சர்வதேச எழுத் தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. ருஷ்டி யால் தேர்வு செய்யப்படும் எழுத்தாளர் ஒருவருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப் படும் என்று ஆங்கில எழுத் தாளர் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/82688.html#ixzz35Pw1RVxi

    தமிழ் ஓவியா said...


    மன்னார்குடி அய்யருக்கு எவ்வளவு பெரிய வக்காலத்து!

    டில்லி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 31. இதில் ஜஸ்டீஸ் எஸ். ரத்தினவேல் பாண்டியன், ஜஸ்டீஸ் பி. சதாசிவத்திற்குப் பின் பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் எவரும் இன்றும் இல்லை; சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆனபின்பும்கூட.

    தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களில் இன்றும் 31 பேரில் ஒருவர்கூட நீதிபதியாக உச்சநீதிமன்றத்தில் இல்லை.

    ஒரு ஜஸ்டீஸ் வரதராஜன், ஜஸ்டீஸ் ராமசாமி இருவர் தான் (S.C.) சமூகத்திலிருந்து சென்று ஓய்வு பெற்றவர்கள்.

    இவ்விருவரின் சமூக மக்கள் எண்ணிக்கையில் சுமார் 80 விழுக்காட்டிற்கு மேல் - இருந்தும் இந்த புண்ணிய பூமியில் பஞ்சம, சூத்திரர்களுக்கு அங்கே இடமில்லை. அத்துணை நீதிபதிகளும் உயர் ஜாதிக்காரர்களே; மக்கள் எண்ணிக்கையில் அவர்கள் 10 விழுக்காட்டினரே முன்னேறிய ஜாதிகளைச் (F.C.) சேர்த்தாலும்கூட!

    அப்படியிருந்தும் அவாள் ஆதிக்கமே இன்று வரை! இப்போது காலியான பதவிகளில் 3 நீதிபதிகளின் பதவிகளை நிரப்ப, தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றி உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் இரு பார்ப்பனர்களோடு மேலும் இரு பிரபல சட்ட நிபுணர்கள் வழக்குரைஞர் களாக இருந்தவர்கள் பெயரை முந்தைய தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த கொலிஜியம் பரிந் துரைத்தது!

    பிரபல சட்ட நிபுணரான பார்சி வழக்குரைஞருடன் முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த மன்னார்குடி பார்ப்பனர் கோபால் சுப்பிரமணியத்தையும் பரிந்துரை செய்திருந்தனர்.

    மத்திய அரசு அவர் பெயரை நிராகரித்து மற்ற மூவரை (இரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்; ஒரு சட்ட நிபுணரான பார்சி மூத்த வழக்குரைஞர்) மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்!

    தமிழ் ஓவியா said...


    அது கண்டு இனமலர், இந்து போன்ற ஏடுகள் கொதித்து எழுந்து தங்களது துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன!

    எதற்கு இவரை (கோபால் சுப்ரமணிய அய்யரை) ஏற்க முடியவில்லை என்பதற்கு ஒரு ரகசிய நோட் தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த நபர் (மன்னார்குடி அய்யர்) அதீத பக்தி, பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர்; தன்மீது சாமி வருவதாகச் சொல்வார்; இப்படிப்பட்ட மன நிலை உள்ளவர்களை அப்பதவியில் அமர்த்தக் கூடாது என்று, நோட்டில் (Notes) சொல்லியுள்ளார்களாம்!

    நியாயமான காரணம் தானே? ஆனால் பார்ப்பன ஏடுகள் வேறு ஏதோ காரணம் குஜராத் வழக்கு என்று கூறி மோடி அரசை அச்சுறுத்திப் பார்க்க முன் வந்துள்ளனர்?

    (இன்றைய இனமலர் ஏட்டில் - டில்லி உஷ் பக்கம் 7)

    தமிழருக்கு நீதிபதி மறுப்பு ஏன்?

    (மன்னார்குடியைச் சேர்ந்தவர், உச்ச நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சுப்ரமணியத்தை நியமிக்க, தலைமை நீதிபதி அடங்கிய குழு, சிபாரிசு செய்தது.

    ஆனால், மோடி அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உங்கள் சிபாரிசை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று, பைலை திருப்பி அனுப்பிவிட்டது.'2ஜி' விவகாரம் மற்றும் நீரா ராடியாவின், தொலைபேசி விஷயங்களில் சுப்ரமணியத்திற்கு தொடர்பு எனவே தான், இவரை நீதிபதியாக்க அரசு மறுக்கிறது என்று செய்திகள் வெளியாயின. ஆனால், முக்கிய காரணம், சொராபுதீன் என்பவரையும், அவரது மனைவியையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளிய வழக்கில், குஜராத் அரசு மற்றும் மோடியின் வலது கரமான, அமித் ஷா மீது கடுமையாக குற்றம் சாட்டி, சி.பி.அய்., விசாரணைக்கு உத்தரவிட,

    இந்த வழக்கில் கோர்ட்டிற்கு உதவும் வழக்கறிஞராக இருந்தவர் கோபால் சுப்ரமணியம், இதனால் தான், இவரை எதிர்க்கிறது மோடி அரசு. மேலும், எதற்கு இவரை நீதிபதியாக்கக் கூடாது என்று, ஒரு ரகசிய நோட் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். அதீத பக்தி, பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர் கோபால். தன் மீது சாமி வருவதாக சொல்வார். இப்படி மனநிலை உள்ளவர்களை பதவியில் அமர்த்தக் கூடாது என்று, அந்த நோட்டில் சொல்லப்பட்டுள்ளதாம்.இதனால், தற்போது, '2ஜி' வழக்கில், சி.பி.அய்., வழக்கறிஞராக உள்ள, உதய் லலித் என்பவரை நீதிபதியாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.)

    என்னே திடீர் தமிழர் பற்று பார்த்தீர்களா?

    தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.

    காஷ்மீரத்திலுள்ள பார்ப்பனருக்கு ஜூரம் வந்தால் கன்னியாகுமரி பார்ப்பனருக்கு நெறி கட்டும் என்று!

    அது எவ்வளவு சரியானது என்பது இப்போது புரியவில்லையா?

    ஆங்கில ஹிந்து நாளேட்டில் (11.6.2014) ராஜகோபால் என்ற செய்தியாளர் இதற்காக வரிந்து கட்டி டெல்லியை - மோடி அரசை மிரட்டிச் செய்திகளை இரண்டு பக்கங்களில் தனித்தனியே வெளியிட்டு முயற்சித்தார்!

    என்றாலும் பிள்ளை பிழைக்கவில்லை; வெறும் எண்ணெய்ச் செலவுதான்!

    இந்தியாவின் பல உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி முதல் மூத்த நீதிபதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (பெண் நீதிபதிகள் உட்பட) பலர் இருந்தும் அதுபற்றி - சமூகநீதிக்கான போராட்டத்தில் - எழுத பேச நாதியேயில்லை.

    மேலும் ஒரு பூணூல் திருமேனிக்கு இடமில்லை என்றவுடன், அக்கிரகாரத்தில் பூகம்பமே வெடிக்கிறது; அட, வீபிடணத் திராவிடர்களே, உங்களுக்கு இத்தகைய உணர்வு எப்போதுதான் வரும்? அவாளைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?

    Read more: http://viduthalai.in/e-paper/82686.html#ixzz35PwBeOVo

    தமிழ் ஓவியா said...


    அப்பட்டமான பண்பாட்டுப் படையெடுப்பு!


    - கவிஞர் கலி.பூங்குன்றன்
    துணைத்தலைவர், திராவிடர் கழகம்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவா தத்துவத்தை மறைமுகமாக திணிக்க முயற்சி செய்கிறது. இந்தி சமஸ்கிருதம் சார்ந்த மொழியாகும்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் தோற்றுநரான எம்.எஸ்.கோல்வால்கர் சமஸ்கிருதத்தை இந்நாட்டின் ஆட்சிமொழியாக்கவேண்டும் என்றார்.

    1937இல் சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றிய ராஜகோபாலாச்சாரியார், "சமஸ்கிருத கலாச்சாரத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கு இந்தியே முதல்படி" என்று பேசினார்.

    ஒவ்வொருமுறையும் டில்லி இந்தியை திணிக்க முயலும்போதும் தமிழ்நாடு அதை எதிர்த்துப் போராடியே வந்துள்ளது. 1927இல் தந்தை பெரியார் எதிர்த்து எழுதினார். 1937, 1948 என தொடர்ந்தது. 1960இல் திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.

    தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார் (1.8.1955). அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராசர் அவர்கள் பிரதமர் நேருவின் சார்பில் "பிற மொழி பேசும் மாநிலங்களில் இந்தி திணிக்கப் படமாட்டாது" என்கிற ஒரு உறுதிமொழியை அளித்தார். போராட்டத்தைப் பெரியார் ஒத்தி வைத்தார்.

    பெரியாருக்கு அன்று ஏற்பட்ட அய்யம் உண்மை என்பதையே இன்று மோடி நிரூபித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும், இந்தி மொழி பேசும் இந்துத்துவா வாக் காளர்களையும் குளிர்விக்கவே பாஜக அரசு இதை செய்திருக்கிறது. அரசியல் சாசன 8ஆவது பிரிவில் பல மொழிகள் இருக்க இந்திக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும்? நேருவின் உறுதி மொழி எங்கே போயிற்று?

    இந்தியா ஒரு நாடு அல்ல! பல்வேறு கலாச்சாரங்களையும், மொழிகளையும், மதங்களையும் கொண்ட மக்கள் வாழும் துணைக்கண்டம். ஒரு மொழியையோ அல்லது கலாச்சாரத் தையோ பிறமொழி பேசும், பிற கலாச்சார மக்களிடம் எப்படி திணிக்க முடியும்? அப்படி திணிக்க நினைப்பவர்கள் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.

    முக்தர் அபாஸ் நக்வி இந்தி பேசும் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றால் அதற்கு அங்கே தீர்வுகாணாமல் பிறமக்களிடம் அரசு இந்தியை திணிக்க முயலக்கூடாது. தமிழ் மக்களிடையே எழுந்த இந்தி எதிர்ப்புணர்ச்சி வலுவிழந்துவிட்டதாக அரசு கருதுமானால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி எந்தவித போராட்டத்துக்கும் தங்களை ஆட்படுத்திக்கொள்ள தயங்கமாட்டார்கள் என்பதை உணரவேண்டும்.

    இந்தி திணிப்பிற்காண முதல் எதிர்ப்புக் குரல் - இப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து கிளம்பியிருப்பது தமிழர்களின் இந்தி எதிர்ப்புணர்ச்சித் தணல் இன்னும் தணியவில்லை என்பதையே காட்டுகிறது.

    வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருபவர்கள் தமிழ் கற்றுக்கொண்டா வருகிறார்கள்? பிறகு ஏன் எங்கள் மீது மட்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறீர்கள்?

    (தமிழில்: அருவி தளபதிராஜ்)
    டெக்கான் கிரானிக்கல் ஏட்டுக்கு அளித்த பேட்டி 21.6.2014.

    Read more: http://viduthalai.in/page-2/82684.html#ixzz35PwsGhM6

    தமிழ் ஓவியா said...


    இது என்ன கொடுமை?இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு!


    சென்னை, ஜூன் 22_ பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப் பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக்கடிதம் கிடைக் காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990- ஆம் ஆண்டு இலங்கையிலி ருந்து வந்த 164 குடும்பங் களைச் சேர்ந்த 523 தமி ழர்கள் இங்கு தங்கியுள்ள னர். இவர்களில், பெயிண் டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று.

    தனது தாய் ரூபா வதி மற்றும் மூன்று தம்பி களுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகா மைச் சேர்ந்த அல்லிமலருக் கும் கடந்த 1995- ஆம் ஆண்டு திருமணம் நடந் தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.

    அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி யில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற் றுள்ளார்.

    தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந் தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்காக விண்ணப் பித்தார். அவரது விண்ணப் பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந் தாய்வில் பங்கேற்க அவ ருக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை. 197.50 கட்ஆப் மதிப்பெண் பெற்றவர் களுக்கு இன்று (21- ஆம் தேதி) மருத்துவக் கலந் தாய்வு நடக்கவுள்ள நிலை யில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.

    இதுகுறித்து நந்தினி கூறியதாவது: மருத்துவக் கலந்தாய் வுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப எண் (245143), ஏ.ஆர்.எண் (1529), ரேண் டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும், எனக்கு கிடைத்தன.

    ஆனால், எனது கட்ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய் வுக்கான அழைப்புக் கடித மும் வரவில்லை. கலந்தாய் வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய்வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறை யிட உள்ளேன் என்றார்.

    இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் (டி.எம்.இ.,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனை வருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகு தியான விண்ணப்பதாரர் கள் பெயர் மட்டும், புர விஷனல் பட்டியலில் வெளியிடுவோம்.

    தமிழ கத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடி யுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதி கள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந் தாய்வில் பங்கேற்க முடி யாது என்றனர்.

    Read more: http://viduthalai.in/page-8/82666.html#ixzz35PxoSoiS