Search This Blog

20.6.14

சுயமரியாதை இயக்கம் அரசியலில் தலையிடுவது ஏன்?-பெரியார்

சுயமரியாதை இயக்கம்


சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்பந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும், விஷமப் பிரச்சாரங்களாலும் பொதுமக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது.


இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொதுஜனங்களுக்கு விளக்கி இருந்தும் சில பகுதிகளில் அவ்வித தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால், முன்பு விளக்கியவைகளையே மறுபடியும் விளக்க வேண்டியிருக்கிறது.


சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கருத்தெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது, அவர்களைத் தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டுமென்பதே.

இந்தக் கருத்து வெற்றிபெற வேண்டுமானால் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகிய மூன்று துறைகளிலும் கவலை எடுத்து உழைத்து வந்தாலொழிய பயனேற்படாது. ஆதலால் சுயமரியாதை இயக்கமானது முக்கியமாய் இத்துறைகளில் உழைத்து வரவேண்டியதாகிறது.

எனவே, இம்மூன்று துறை உழைப்பிலும் இயக்கத்தின் திட்டம் என்ன என்பதை ஒருவாறு பொதுஜனங்களுக்கும், அரசாங்கத்திற்கும், இயக்கத்தைக் குறை கூறுகின்ற நண்பர்களுக்கும் விளங்குவதற்காக கீழே விவரிக்கின்றேன்.

அரசியல்

சுயமரியாதை இயக்கம் ஆரம்ப காலத்தில் அரசியல் துறையில் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற ஓர் அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தபோதிலும்,   அரசியலின்  பேரால்  காங்கிரஸ்  என்னும்  ஒரு ஸ்தாபனத்தை  பார்ப்பனர்கள் கைப்பற்றி அதைத் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு வந்து இந்நாட்டில் எவ்விதமான சமுதாய சீர்திருத்தமும், பொருளாதார சீர்திருத்தமும் ஏற்பட முடியாமல் அவ்விரண்டுக்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்ததால், குறிப்பாகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டுமானால் காங்கிரசை சுயமரியாதைக் கொள்கைகள் முழுவதற்குமே விரோதமாக வேலை செய்வதற்கே பயன்படுத்தி வந்ததால், அப்படிப்பட்ட காங்கிரசை எதிர்க்க வேண்டியதும், அதன் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டியதற்கு எவ்வித முறைமையும் கையாள வேண்டியதும் அவசியம் என்னும் தன்மையில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது அவசியமானால் அந்தப்படியும் செய்வது என்றும் கருதியும் வந்திருக்கிறது என்பதோடு இனியும் அந்தக் கருத்தையே கொண்டிருக்கிறது.

ஆதலால் சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிரவேசிக்கிறது என்று  சொல்லப்படுமானால், பார்ப்பன ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகவும் காங்கிரசை - பார்ப்பனர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு விரோதமாய் உபயோகப்படுத்தி பயன் பெறாமல் இருப்பதற்காகவுமே ஒழிய, மற்றபடி அரசாங்க சட்டத்திட்டங்களை எதிர்க்கவோ அவற்றிற்கு மாறாக நடக்கவோ என்பதற்காக அல்லவென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதே அபிப்பிராயத்தை இதற்கு முன்னும் பல தடவை தெரியப்படுத்தியுமிருக்கிறோம்.

அன்றியும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பல அமலுக்கு வர வேண்டுமானால் அரசாங்கத்தின் மூலம் பல சட்டத் திட்டங்கள் ஏற்பட வேண்டியிருப்பதால் அதை உத்தேசித்தும் அரசியலில் தலையிட வேண்டியது அவசியமாகிறது.

ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில் தலையிட்டது என்று சொல்ல வேண்டிவருமானால் அரசாங்க சட்டத் திட்டங்களை மீறவோ, அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்.

பொருளியல்
நாட்டு மக்களின் பொதுநலத்துக்கும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர்விற்கும், பொருளாதார நிலையை விருத்தி செய்து அது எல்லா மக்களுக்கும் ஓர் அளவுக்கான சமமாய் பரவப்படும் படியாயும், ஒரே கையில் ஏராளமாய் குவியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதும், அவசியமானதுமான காரியமாகும். ஆதலால், அந்த அளவுக்குப் பயன் ஏற்படும்படிச் செய்ய வியாபாரம், லேவாதேவி, விவசாயம் முதலிய துறைகளில் சில மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்பது யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்கதாகும்.

அப்படிச் செய்வதிலும் பலாத்காரம் செய்வதோ, திடீரென்று தலைகீழ் புரட்சியான காரியங்களால் மனித சமூகத்தில் பயமும், அதிருப்தியும், சமாதான பங்கமும் ஏற்படும்படிச் செய்து சட்டம், சமாதானம் சீர்குலையும்படிச் செய்வதோ ஆகிய காரியங்கள் இல்லாமல் பொதுஜன உபயோககரமான தொழிற்சாலைகள், வியாபாரங்கள், லேவாதேவி முதலான காரியங்களை அரசாங்க நிர்வாகத்திற்குள்ளாகவே கொண்டு வரும்படிச் செய்வதும் அரசாங்க நேர்பார்வை நிர்வாகத்திற்குட்பட்ட கூட்டுறவு முறையின்கீழ் அவை நடைபெறும்படிச் செய்து லாப நஷ்டங்கள் எல்லா மக்களுக்கும் சமமாய் இருக்கும்படிச் செய்வது முதலான சமதர்ம கொள்கையே இயக்கத்தின் பொருளாதாரத் தத்துவமாகும்.
சமூக இயல்

மக்கள் அரசியலிலாகட்டும், பொருள் இயலிலாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்கு சமுதாயத்துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத் துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால் ஜாதி மத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும், குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை சுயமரியாதை இயக்கம் ஆதியிலிருந்தே வற்புறுத்தி வந்திருக்கிறது.
ஆகவே, இந்தக் காரியங்கள் செய்வதற்கு வகுப்பு பேதங்கள், ஜாதி பேதங்கள் ஆகியவைகளை அறவே ஒழிக்க முயற்சிப்பதும், ஜாதி வகுப்பு முதலியவைகளுக்கு ஆக்கமளிக்கும் மதங்களின் தன்மைகளை வெளிப்படுத்துவதும், நியாயமான முறைகளில் ஜாதி, வகுப்பு, மதம் ஆகியவைகளின் தத்துவங்களைக் கண்டிப்பதுமான காரியங்கள் செய்ய வேண்டியது அவசியமென்றும் கருதுகிறது.
இப்படிச் செய்வதில் ஜாதி வகுப்புத் துவேஷங்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்பதோ, எந்த ஜாதி, எந்த மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குள் துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படிச் செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவது என்பதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக் கொள்வதும் இல்லை.

முடிவு
எனவே சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் சமுதாய இயலில் ஜாதிமத பேதங்களை அகற்றுவதும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் பொருளியலில் சமதர்மமுமேயாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடை பிரச்சாரம் செய்யவும், அமலுக்குக் கொண்டுவரச் செய்யவுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயமாகும்.
             ----------------------தந்தைபெரியார்- ”குடிஅரசு” - அறிக்கை - 10.03.1935

32 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......



பஞ்ச மூலிகை

துளசி - பக்தியை வளர்க்கும்

சங்குப்பூ - பெருஞ்செல்வம் கிட்டும்

விருட்சிப்பூ - நோய் தீர்க்கும்

குவளைப்பூ - குழந்தை பாக்கியம் கிட்டும்

ஆவாரம்பூ - கடன் தொல்லை தீரும்

ஓர் ஆன்மீக இதழ் இவ்வாறு கூறுகிறது.

இதனைப் பார்த்தால், அரசு தேவையில்லை, மருத்துவமனை தேவை யில்லை, வாங்கிய கட னைத் தீர்க்க உழைக்கத் தேவையில்லை, மூடத் தனம் + சோம்பேறித்தனம் தான் ஆன்மீகமா?

Read more: http://viduthalai.in/e-paper/82451.html#ixzz358GdpIN9

தமிழ் ஓவியா said...


யாரிடம் மரியாதை



நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய, இருப்பவர்களிடமில்லை.
_ (குடிஅரசு, 22.3.1931)

Read more: http://viduthalai.in/page-2/82459.html#ixzz358H0ybt8

தமிழ் ஓவியா said...


தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு இணங்க, மேற்பார்வைக் குழுவினை அமைப்பதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவைக் குழு வழங்கி யுள்ளது.

வெள்ளைக்காரர்கள் ஆட்சியின்போது, இயற்கைச் சூழலைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.

அப்படி அந்த அணையை உருவாக்கியவர் களுக்குத் தெரிந்ததெல்லாம், மக்களுக்குப் பயன் படவேண்டும்; குறிப்பாக விவசாயம் சிறப்பாக நடை பெற அப்படி ஒரு திட்டம் தேவை, என்பது மட்டும் தான் அவர்களின் பொதுநலச் சிந்தனையாக இருந்தது!

வெள்ளைக்காரன் வெளியேறிய சுதந்திர இந்தியாவிலோ, அந்த மக்கள் நலன் தூக்கி எறியப்பட்டு, சுயநல அரசியல் நலன் என்ற புதிய சிந்தனைத் தேக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது.

அதன் விளைவுதான் காவிரி நீர்ப் பிரச்சினையும், முல்லைப் பெரியாறுப் பிரச்சினையும்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம். அதற்கான உறுதியோடுதான் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கீழ்மட்டம் அகலம் 200 அடி. மேல் மட்ட அகலம் 21 அடி. உலகில் இவ்வளவு உறுதி யான கீழ்மட்ட கட்டுமானம், வேறு எங்கும் கிடையாது.

அணை இடிந்துவிடும் - இடுக்கி மாவட்டம் மூழ்கிவிடும் என்று மலையாள மனோரமா என்ற ஏடு கிளப்பி விட்ட பீதி - இன்றுவரை சிக்கலுக்கான கடு முடிச்சாக மாறி விட்டது.

கேரளாவில் கட்டப்பட்ட இடுக்கி அணைக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காததால், குறுக்கு வழிச் சிந்தனையாக முல்லைப் பெரியாறு அணையின் பக்கம் அவர்களின் கண்கள் திரும்பின என்பதுதான் உண்மையின் இரகசியம்.

நிபுணர்கள் அறிக்கை கொடுத்தும், அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளத் தடை போட்டு வருகிறது கேரள மாநில அரசு.

1979 முதல் இந்தச் சிக்கல் தொடர்கிறது. அதன் தீய விளைவு என்ன தெரியுமா? 86 ஆயிரம் ஏக்கர் இரு போக நிலங்கள் ஒரு போகம் ஆயின. 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யவே முடியாத அவல நிலை.

உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படாமல் ஆக்க குறுக்கு வழியைக் கேரள அரசு தேர்வு செய்துள்ளது. நீர்ப் பரப்புப் பகுதியில் ஆனவச்சால் என்ற இடத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய அளவில் வாகனங்கள் நிறுத்தத்திற்காக என்று சொல்லி, கேரள வனத்துறை அமைத்து வருகிறது.

காலங்கடந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையை மேற்பார்வையிடும் குழு அமைக்க மத்திய அமைச்சரவை முன்வந்துள்ளது, வரவேற்கத் தக்கதாகும். இதற்கும் ஏதாவது குறுக்குச்சால் ஓட்டாமல் இருக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.

அதேநேரத்தில், இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறக்கூடாது. முல்லைப் பெரியாறு அணைக்கு இப்படி ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது போலவே, காவிரி நீர்ப் பிரச்சினையிலும் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை அமைத்திட இதே மத்திய அமைச்சரவை இதுவரை ஏன் அனுமதியளிக்கவில்லை?

இதற்குள்ளும் அரசியல் புகுந்திருக்கிறது என்பதில், எவ்வித அய்யமும் இல்லை.

இந்த அரசியல் நிலை குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளி யிட்ட அறிக்கையில் (விடுதலை, 12.6.2014) குறிப் பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.,க்குச் செல்வாக்கு இல்லை; கருநாடகத்தைப் பொறுத்தவரை செல்வாக்கு உண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, கருநாடக மாநிலத்தில் தன் கட்சிக்குள்ள செல்வாக்கை ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று மத்திய பி.ஜே.பி. ஆட்சி நினைக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தெரிவித்த கருத்தினை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்த்தால், மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் இரட்டை அணுகுமுறையை, அரசியல் உள்நோக்கத்தோடு பிரச்சினையை அணுகும் போக்கை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இது ஏதோ இரு மாநிலங்களின் பிரச்சினையாகக் கருதிடக் கூடாது - இது இன்றைய மத்திய பி.ஜே.பி. அரசின் நேர்மையையே சந்தேகிக்கும் - கேள்விக் குறியாக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்!

தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா? என்பார்கள். முல்லைப் பெரியாறுக்கு ஓர் அளவு கோல் - காவிரிக்கு வேறொரு அளவுகோலா? எதிலும் அரசியல் என்பது ஆபத்தானதே!

Read more: http://viduthalai.in/page-2/82460.html#ixzz358HCy0IB

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள்?


விமர்சனங்கள் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று மதுரை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. மதம் மனி தனை மடையர்களாக ஆக்கிவிட்டதை இன்றைய அறிவுலகம் அடையாளம் காட்டிவிட்டது. இதற்கு விலையாக தனது இன்னு யிர் நல்கியவர்கள் 18 ஆம் நூற்றாண் டின் கலிலியோ, கோபர் நிகஸ் போன் றோர் என்பதை உலகறியும். இருப் பினும் இன்றும் நீதி மன்றங்கள் மத போதனை மனிதனின் மனதை மாய்த் திடும் தண்டனைக்கு உரிய செயலைச் செய்வதாக அறிவித்திட தயங்குகின் றன. இல்லாததை இருப்பதாக நம்பிடச் செய்வதற்கு மடமும் கோயிலும் கொடி யும் கதையும் பொய்யுரையும் சம் பிராதயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட கொள்கையில் அகப்பட்டோர் இல்லாததை இல்லை என்று சொல்வதைக் கேட்பது பாவம் என்ற கொள்கையில் வாடுகின்றனர். மனம் புண்படுவதாக நீதி மன்றம் நாடுகின்றனர். நீதிமன்றங்களோ இல்லாததை இருப்பதாக சாதிப்போரது சொல்லும் செயலும் உண்மையின்பால் பற்று கொண்ட மனித மனங்களை புண் படுத்துவதை உணரும் உள்ளமில்லா தவர்களை நீதியாளர்களாகக் கொண் டுள்ளது. அதாவது நாத்திகர் மனது ஆத் திகம் பேசி வேள்வி காத்திடும் கயமை கண்டு கண்கலங்குகிறது. வேள்வி யாத்திடும் பார்ப்பன வித்தகர்கள் என்றும் தங்களது கைப்பணம் செல விட்டு மதத்தினை மதக்கொள்கையை அல்லது கடவுளைக் காப்பதில்லை.

அத்தகைய செயலுக்கு மண்ணின் மைந்தனது பொருளும் வரிப்பணமும் அவர்களது ஏமாற்று வேள்விக்கு அவிஸ் ஆவது கண்டிக்கத் தக்க தன்றோ? இத்தகைய இழி செயலை செய்வதற்கு இந்து மதம் என்ற போர் வையில் கடவுளின் முகத்தில் உதித்த வர்களாகிய பார்ப்பனர்கள் மட்டுமே உரிமை கொண்டவர்கள் என்ற சனா தன தர்மத்தை மண்ணின் மைந்தர்கள் மீது திணிப்பது கண்டிக்கத் தக்க தன்றோ? இதற்கு இந்து மதம் காத்திடும் சாதிக் கொள்கையை உயர்த்திப் பிடித்திட இப்படிப்பட்ட பிராமணாள் காபி கிளப் என்றும் சங்கர மடம் என்றும் ஜன் கல் யாண ஜன் ஜாக்ரத் என்றும் இந்த பார்ப்பனர் கூட்டம் கரவு மனத்தோடு திராவிட இனத்தை வேட்டையாடு வதை என்ன சொல்ல? ஆரிய கலாச் சாரத்தில் திராவிட சமுதாயம் தனது அறிவை அறிதலை இழந்துவிட்டதை யார் அறிவார்? காக்கும் கடவுள் பூணூல் அணிந்து கொண்டால் அது யாரை காப்பாற்றும்? என்ற கேள்வியை வள்ளலார் எழுப்பினார். மனிதனின் கால் மற்றவரின் காலில் தவறாகப் பட்டுவிட்டால் துடிதுடித்து போகிறான். மன்னியுங்கள் என்கிறான். காரணம் மனிதனை மனிதன் மதிப்ப தால் அவனது மனது கொண்ட அன்பு இப்படிப்பட்ட நிலையைத் தருகிறது. ஆனால் பூணூல் அணிந்த நடராசப் பெருமான் திராவிட இனத்தானை தனது காலடியில் போட்டு மிதிப்பதில் இன்பம் கண்டால் அவன் யாருக்கு அருள் தருவான் என்ற கேள்வி இன் றைய திராவிட இனத்திற்கும் இல்லா மல் போனதற்கு வழி வகுப்பது இது போன்ற சாதியப் பிரகடனங்களால் வரும் பயன்பாடன்றோ? மனிதனை காலில் போட்டு மிதித்திடும் சாமி சிலைகளை திராவிடன் கை எடுத்து கும்பிட்டு நிற்பது வேதனையன்றோ? சாதி ஒழிய வேண்டும் என்பது சட்ட மாகியுள்ள நிலையில் பிராமணாள் கிளப் என்று நிறுவனப் பெயர் நாட்டு வது சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்து இன்றைய மண்ணின் மைந் தர்களை அசுரர்களாக சூத்திரர்களாக சித்தரித்திட துடித்திடும் சங்கரர்களின் சதிச் செயலன்றோ? எனவே நாத்திகனின் சொல்லும் செயலும் ஆத்திகனது மனத்தைப் பண் படுத்துகிறது என்பது ஒரு மன நோயா ளியின் உணர்வு என்பதை நீதிமன் றங்கள் உணரவேண்டும். உண் மையில் பார்ப்பனர்களின் சொல்லும் செயலும் வேள்வியில் அழி பொரு ளாகும் நெய்யும் பாலும் உடையும் பொருளும் மண்ணின் மைந்தர்களின் உயிர் காத்திடும் உயர் பொருள் என் பதை நீதிமன்றங்கள் உணர வேண்டும். நீதிமன்றங்களை எதிர்த்து குரல் கொடுப்பது தண்டணைக்கு உரிய செயலன்று என்பதை நீதிமன்றங் களுக்கு உணர்த்த வேண்டும்.

காரணம் 2ஜி போன்ற கொள்கை முடிவுகளைக்கூட தண்டனை முறைச் சட்டத்திற்கு உட்படுத்தியது கண்டிக்கத் தக்கச் செயல். அதுபோன்றே இந்து சமய அறநிலையத்தின் துணையோடு ஆகமம் நியதி என்ற பெயரில் அன் றாடம் சிலைகளுக்கு பால் அபிஷே கம், நெய் அபிஷேகம் என்று மனித உயிர் காக்கும் பொருட்களை வீணடிப் பது தண்டனைக்கு உரிய செயல் என் பதை இன்றைய நீதிமன்றங்கள் உணர்ந் திட வேண்டும். வேறு எந்த மதத்திலும் இப்படிப்பட்ட அழி செயல்களை ஆக மம் நியதி என்று மதிப்பது உண்டா? திராவிட இனம் தனிப்பெரும் குணம் கொண்ட சங்கத் தமிழ் இனம். அது இன்று பார்ப்பனர்களது கைப்பாவை யாகி விட்டது. அது இலவசத்திற்கு (ஒரு சில கோடிகளுக்கு) ஏங்கும் திராவிடக் கோழைகளாகிவிட்டது. குனிந்து நின்று கும்பிடு போடும் மந்திரிகளாகிவிட்டது

- கவிஞர் சீனிபழனி, வருமானவரி அதிகாரி (ஓய்வு)
கொளத்தூர், சென்னை-99.

Read more: http://viduthalai.in/page-2/82472.html#ixzz358HcBOkO

தமிழ் ஓவியா said...

இந்திதான் தொடர்பு மொழியா? உள்துறை முடிவுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 19-_ தொடர்பு மொழியாக இந்தியை முதன்மைப்படுத்தும் மத்திய உள்துறையின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:-_

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரி மைப்படி வெளியிடப்படும் ஆணை -_ சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு (தி எகானமிக் டைம்ஸ்) 17.-6.-2014 அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும். 27-.5-.2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாய மாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற தங்களுடைய சமூக வலைத் தளங் களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால், இந்தியைப் பயன்படுத்து வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (It is ordered that Government Employees and Officials of all Ministries, Departments, Corporations, or Banks, who have made official accounts on “Twitter”, “Face Book”, “Google”. “You Tube” or “Blogs” should use Hindi, or Both Hindi and English but give priority to Hindi) மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டு, அது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டரில் இந்தி மொழியைத் தான் பயன்படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பின் தொடக்கமே!

ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசா ணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. 1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப்பதிவு செய்து வைத்திருக்கிறது. மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு - ஆட்சி மொழி பற்றிய பிரிவு - கட்டாயமாக அரபிக் கடலிலே தூக்கி எறியப்பட வேண்டுமென்றும்; நல்ல நாட்டுப்பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடி மக்களான தமிழ் மக்களை, கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே இது என்றும்; மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எடுத்துரைத்து எச்சரித்ததை யாரும் மறந்து விடவில்லை. 4.-3.-1965 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.க. வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமானஅடல் பிகாரி வாஜ்பாய் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் மொழிப் பிரச்சினையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும், ஆட்சிமொழிகளாகும் வரை, ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப் போக்குக்கு விட்டு விடலாம் என்று அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கியதை மறந்து விடத் தான் முடியுமா?

பண்டித நேருவின் வாக்குறுதி!

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பை எதிர்த்திடவும், எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதி பூண்டுள்ளது. இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம் வரையில், மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப் பட மாட்டாது என்றும், பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனது உரையில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும், மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்கு உரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில் தேவையான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அதன் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான, இலக்கியப் பண்பாட்டு வளம்நிறைந்த, தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் .இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாக மேற்கொண்டு வரும்நிலைப்பாடாகும்.

வேண்டாம் அவசரம்!

இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பேணிக் காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது , இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப் பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும். எனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பொருளா தார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல் படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/82475.html#ixzz358HqGlqU

தமிழ் ஓவியா said...


குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு


சென்னை, ஜூன் 19- குடும்ப அட்டை பெறு வதில் பிரச்சினைகள் ஏதே னும் இருந்தால் அவை குறித்து செல்பேசியில் புகார்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை பெறு வதற்கு விண்ணப்பித்த பிறகு அதன் நிலைமை குறித்து செல்பேசி குறுஞ் செய்தி மற்றும் மின்னஞ் சல் மூலம் விண்ணப்ப தாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி ஆணை யாளர் அலுவலகங்களில் அமைச்சர் இரா.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இந்த அலுவ லகங்களில்தான் மக்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் நடை பெறுகின்றன.

புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர் களுக்கு, 60 நாள்களுக்குள் உரிய ஆய்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும், மனுக்களை நிராகரிக்கும் போது அவற்றின் விவரங் களை மனுதாரர்களுக்கு தாமதமின்றி தெரியப் படுத்த வேண்டும் எனவும், செல்போன் அல்லது மின்னஞ்சல் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மனுவின் நிலை குறித்து தகவல் தெரிவிக்க வேண் டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தப் பட்டனர்.

எஸ்.எம்.எஸ்.-மின் னஞ்சல்: விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) அல்லது மின்னஞ்சல் மூலமாக தவறாமல் வழங்க வேண் டும். குறிப்பிட்ட காலக்கெ டுவுக்குள் தகவல் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர் வடக்கு அல்லது தெற்கு அல்லது மண்டல உதவி ஆணையர் கள் ஆகியோரின் செல்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கைகள் அனுப்பியும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறும் தகவல்கள் கிடைக்காவிட்டால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை ஆணையா ளரின் அலுவலக மின்னஞ் சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம். அலுவலர் களின் செல் பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறையின் இணையத ளத்தில் அளிக்கப்பட் டுள்ளது.

தொலைபேசி எண்கள்: நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் தங்க ளது புகார்களைத் தெரி விக்க, சென்னை மாநகரில் உள்ள அந்தந்த மண்டல அலுவலக உதவி ஆணை யாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆணையாளர் அலுவலகத் தில் செயல் படும் புகார் பிரிவையும், தொடர்பு கொள்வதற்கு வசதியாக ஏழு தொலை பேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறுஞ் செய்தி அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்கள்:

94454 64748, 72999 98002, 86800 18002, 72000 18001. புகார்களைத் தெரி விக்க தொலைபேசி எண் கள்: 72990 08002, 86800 28003, 72000 48002.

Read more: http://viduthalai.in/page-5/82449.html#ixzz358IgMcX8

தமிழ் ஓவியா said...


மூடத்தின் முடை நாற்றம்: ஆட்சியாளர்களின் தீய நடவடிக்கைகளால் சபரிமலையில் தெய்வ அருள் குறைந்துள்ளதாம்


திருவனந்தபுரம், ஜூன் 19_ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தீய நட வடிக்கைகளால் சபரிமலை யில் தெய்வ அருள் குறைந்து வருவதாக தேவபிரசன்னத் தில் தெரிய வந்துள்ளதாம்.

கடந்த 2006ஆம் ஆண்டு சபரிமலை அய்யப் பன் கோயிலில் பிரபல ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணிகிருஷ்ண பணிக் கர் தலைமையில் தேவ பிர சன்னம் நடத்தப்பட்டது. அப்போது, சபரிமலை கோயிலில் ஒரு இளம் பெண் தரிசனம் செய்ததா கவும், அவர் அய்யப்பவிக் ரகத்தை தொட்டதாகவும் உண்ணிகிருஷ்ண பணிக் கர் கூறினார்.

மறுநாளே நடிகை ஜெயமாலா, தான் சபரி மலை கோயிலுக்கு தரி சனம் செய்ய வந்ததாகவும், அப்போது நெரிசலில் தடுமாறி விழுந்தபோது அய்யப்பன் விக்ரகத்தை தொட்டதாகவும் கூறியிருந் தார். இதுகுறித்து குற்றப் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்ணிகிருஷ்ண பணிக் கரும், நடிகை ஜெயமாலா வும் நாடகமாடியது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் கடந்த 8 ஆண்டு களாக சபரிமலையில் தேவ பிரசன்னம் நடத்தப்பட வில்லை. இந்நிலையில், சபரிமலையில் மாளிகை புரம் கோயில், பஸ்மக் குளம் உட்பட சில பகுதி களில் சீரமைப்பு பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக தேவபிரசன் னம் நடத்த முடிவு செய் யப்பட்டது. இதன்படி, கோழிக்கோடு செறுவள் ளியை சேர்ந்த ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் நேற்று தேவ பிரசன்னம் தொடங்கியது. இதில் 3 முக்கிய ஜோதிடர் கள் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் தேவபிர சன் னம் நிறைவடைந்தது.

பின்னர் ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:

சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் ஆட்சியாளர் கள் மற்றும் சில அதிகா ரிகள் கடந்த பல ஆண்டு களாக சில தீய நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது தெய்வ கோபம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சபரிமலையில் தெய்வ அருள் குறைந்து வருகிறது. எனவே தெய்வ அருளை அதிகரிக்கும் வகையில் உட னடியாக பரிகார பூஜை களை தொடங்க வேண்டு மாம். பரிகார பூஜைகள் நடத்தினால் மட்டுமே பழைய தெய்வ அருளை திரும்ப கொண்டுவர முடி யுமாம்.

அய்யப்பனுக்கும் மாளி கைபுரத்து அம்மனுக்கும் சபரிமலையில் நடத்தப் பட்டு வரும் பல செயல் களில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இதற்கு பரிகார மாக சபரிமலையில் உள்ள அதிகாரிகளும் ஊழியர் களும், விளிச்சுசொல்லி (கடவுளிடம் மன்றாடுதல்) பிராயசித்த சடங்குகளை நடத்த வேண்டுமாம்.

(அதிலும் பார்ப்பனச் சுரண்டல் தானோ!)
_ இவ்வாறு நாராயணன் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/82482.html#ixzz358JMYNCg

தமிழ் ஓவியா said...


காரவன் கேள்வி


காரவன் 1.4.1978 ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ள தலையங்கத்தின் சுருக்கம் வருமாறு:-

கடவுளைப்போல், கடவுள் அவதாரங்களும் அதிகாரம் இருக்கும் இடத்தைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருப் பார்கள். அன்பையும், கருணையையும் உபதேசிக்கும் சர்ச்சுகள், ஜெர்மனியில் ஹிட்லர் பல லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த போது, சுட்டு விரலை உயர்த்தியதுண்டா?

இத்தாலியில் சர்வாதிகாரத்தை கட்ட விழ்த்துவிட்ட முசோலினிக்கு போப் ஆசிர்வாதம் தந்தார். காஞ்சி சங்கராச்சாரியிலிருந்து வீதி ஓரத்து சாதுக்கள் வரை இந்திராகாந்தி அதிகாரத்தில் இருந்த போது அவருக்குத் துதிபாடி வந்தனர்.

இந்திராகாந்தி உறுதியான ஒரு மூடநம்பிக்கைவாதி என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் கொஞ்சம் பொது அறிவு அவருக்கு இருந்தது. இப்போது ஜனதா அமைச்சர்கள் இந்த மூடநம்பிக்கை விவகாரத்தில் இந்திராகாந்தியையும் தோற்கடித்து விடுவார்கள் போலிருக்கிறது.

பல லட்சம் ரூபாய் பாழடித்து நடத்தப்பட்ட ஆமதாபாத் யாகத்துக்கு வாஜ்பாயும், ராஜ் நாராயணனும் நேரில் போய் கலந்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளிடம் இந்தியா உதவியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, இப்படி யாகத்தில் போய் அமைச்சர்கள் கலந்து கொள்வது கேலிக் கூத்தானதாகும்.

தன்னைக் கடவுள் என்று பறைசாற்றிக் கொள்ளும் சாயிபாபா அண்மையில் டில்லியில் கலந்து கொண்ட ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வாஜ்பாய் தலைமை வகிக்கிறார்.

அப்போது வாஜ்பாய் பேசுகையில், அவசர நிலையின் போது பாபாவை வாஜ்பாய் சந்தித்ததாகவும் அப்போது பாபா, வாஜ்பாய் கவலைப்படாதீர்கள் தர்மம் ஜெயிக்கும் என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.

அவசர நிலையின் போதே இந்த பாபா அந்தக் கொடுமைகளை எதிர்த்து இந்த தர்ம உபதேசத்தை செய்திருக்கக் கூடாதா? என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் அதர்மம் ஆட்சி செய்யும் போது இந்த அவதாரங்கள் மக்களிடம் கருணை காட்டியிருக்க வேண்டாமா? இவ்வாறு அந்த தலை யங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/82551.html#ixzz35EXnc49o

தமிழ் ஓவியா said...


மோட்சம் வேண்டுமா?


இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?

இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.

அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருத வில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந் தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா?

அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தாங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.

ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்து கிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?

பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே.

அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத்திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா?

- வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

Read more: http://viduthalai.in/page-7/82549.html#ixzz35EY40haq

தமிழ் ஓவியா said...


திருப்பதியில் தகிடுதத்தம்!


25.5.1978 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் பக்தர்கள் எழுதியுள்ள வாசகருக்கு கடிதங்கள் வருமாறு:-

ருப்பதி திருமலையை பூகோள வைகுண்டம் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத்தான் அது நரகம் என்பது தெரியவரும்.

எங்கும் லஞ்சம், ஊழல்!

திருப்பதி திருமலையில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை எங்கும் லஞ்சம் ஊழல் நெளிகிறது. பேருந்துக்கு பயணச்சீட்டு வாங்குவதிலிருந்து ஏழுமலை யானைத் தரிசனம் செய்வது வரை எங்கும் லஞ்சமும், ஊழலும்தான் நடமாடுகிறது.

தங்குவதற்கும் சரியான வசதி கிடையாது. தங்குவதற்கு காட்டேஜ் வாடகை பிடிப்பதற்கு நீண்டதூரம் வரிசையில் கால்கடுக்க அவதிப்பட வேண்டியுள்ளது.

கடைநிலை ஊழியரிலிருந்து நடுநிலை ஊழியர்கள், உயர் அதி காரிகள் வரை மிகவும் மோசமாக வும், அராஜகமாகவும், பக்தர்களிடம் நடந்து கொள்ளுகின்றனர்.

சுகாதாரம் இல்லை

தங்கும் விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. படுக்கை விரிப்புகள் தினசரி மாற்றப்படுவ தில்லை; குடி தண்ணீர் கிடைப்ப தில்லை. மேஜை, நாற்காலிகள், கட்டில்கள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை. மருத்துவமனை வசதி போதுமானதாக இல்லை. சுகாதார நிலையோ மிகவும் அருவருக்கதக்கதாக உள்ளது.

ரேட் இருந்தும்

ஏழுமலையானை தனியாக தரிசனம் செய்ய 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் தரும தரிசனம் செய்யும் பக்தர்களுடனேயே ஏழுமலை யானை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

புரோக்கர்கள் கமிஷன்

பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் அதிகார பூர்வமற்ற புரோக்கர்கள் பலர் பக்தர்களிடம் தலைக்கு ரூ.5 லிருந்து ரூ.20 வரை வசூலித்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரால் கர்ப்பக்கிரக வாசலில் நிற்கும் ஆண் காவலாளிகள் வேண்டுமென்றே பெண்களின் மீது கைகளை வைத்து தள்ளுகின்றனர்.

நாளுக்குநாள் திருப்பதி கோயில் வியாபார நிலைய மாகிக் கொண்டு வருகிறது. அது காய்கறி கடைகளைத் திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - மேற்கண்டவாறு சுலோசனா என்ற பக்தை எழுதியிருக்கிறார்.

இன்னொரு பக்தர்

ஜெகந்நாதன் என்ற மற்றொரு பக்தர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மலைமீது நாங்கள் காரில் சென்றால் பாதி வழியில் ரேடியேட் டருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. வழியில் ரேடியேட்டருக்கான தண்ணீர் கிடைக்கும் என்ற போர்டு கள் மட்டும் இருக்கின்றன. ஆனால் தொட்டிகளில் தண்ணீர் கிடையாது.

ஆனால், சிலர் பானை தண்ணீர் 25 பைசா என்று கூறி விற்கிறார்கள். அதிகாரிகள் அதன்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?

பக்தைகளை கட்டுப்படுத்த ஆண்களா?

பெண் பக்தைகளைக் கட்டுப் படுத்த பெண் ஊழியர்கள் இல்லை. ஆண் ஊழியர்கள் தான் கூட்டத்தில் புகுந்து கட்டுப்படுத்துகிறார்கள். கூட்டத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி எல்லோரையும் பிடித்துத் தள்ளுகின்றார்கள்.

சேவா தரிசனத்திற்கு சிறப்பு சீட்டு வாங்கினால் கூட அவர்களுக்கும் இதே நிலைதான். இவ்வாறு அந்த பக்தர் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYCP4zA

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன்.

மனிதனால் - எண்ணப் படும், பேசப்படும், செய்யப்படும் காரியங் களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYKWb6E

தமிழ் ஓவியா said...


பாம்புபற்றிய மூடநம்பிக்கைகள்: வானொலியின் நற்பணி

நேற்று முன்னாள் இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை எனது காரில் வடசென்னைக் கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், வானொலியில் பாம்புகள்பற்றி ஒரு சுவாரஸ்யமான உரையாடல் - கேள்வி பதில் பேட்டியைக் கேட் டேன்!

தமிழில் கேள்வி கேட்ட வானொலி நண்பரும், பதில் கூறிய சென்னை பாம்புப் பண்ணை இயக் குநர் இராஜரத்தினம் அவர்களும் இருவரும் மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை அமைத்தனர்.

பொதுவாக பாம்புகளைப்பற்றி நாம் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றும் பாம்புப் புற்றையே கடவுள் நாகராஜன் வசிக்கும் இடம் என்றும் கருதி அதற்குப் பாலூற்றி பக்தியாக வழிபடுவதும் காலங் காலமாக நாடு முழுவதும் நாம் பார்க்கும் நடப்புகள்.

பாம்புகள் இந்தியாவில் மட்டு மின்றி உலக முழுவதும் சுமார் 2500 வகைகளுக்கு மேல் உள்ளன என்ற அரிய தகவலுடன் பேட்டி துவங்கியது!

அவற்றில் விஷம் உள்ள பாம்புகளும் விஷமற்ற பாம்புகளும் என இருவகை உண்டு என்பதும், பாம்பைக் கண்டால் நமக்கு எப்படி பயமோ, அதுபோலவே பாம்புகளுக்கு மனிதர்களின் அரவம் கேட்டாலே பயம்!

எந்த காட்டு பிராணிக்கும்கூட இதே விதிதான். பாம்பைப்பற்றி பழங்குடி மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளபடியால் அவற்றைக் கண்டு அவர்கள் பயப்படுவதில்லை.

அவைகளிடத்தில் எப்படி பக்குவமாக நடந்து கொண்டு அதன் போக்கில் அதனை விட்டு விட வேண்டுமோ அப்படி விட்டு விடுவார்கள்.

பாம்பினைப் பற்றிய மூடநம்பிக்கைக் கருத்துக்கள் பற்றி திரு. இராஜரத்தினம் அவர்கள் பல அரிய தகவல்களை அடுக்கடுக்காகக் கூறி அசத்தினார்கள். கேள்வி கேட்ட நண்பர் எடுப்பும் சிறப் பானதாக அதற்குக் காரணமாகவும் அமைந்தது!

1. பாம்பு பால் குடிக்கிறது என்பதும் பொய்; கற்பனை, உண்மை அப்படி அல்ல.

2. பாம்பு வகையில் கொம்பேறி மூக்கன் என்று ஒரு வகைப் பாம்பு, கடித்து சாகடிக்கப்பட்ட வரைச் சுடுகாட்டில் எரித்து அந்த பிணத்தின் புகை நுகரும் வரையில் மரத்தில் ஏறிப் பார்த்துதான் அமையும் என்பது சரியான புருடா - பொய்ச் செய்தி.

3. பாம்பு தங்களுக்குத் தொல்லைக் கொடுப் போரை நினைவில் வைத்துக் கொண்டு பழி வாங்கும் வகையில் சாகடிக்கும் என்பது உண்மையே அல்ல. வெறும் கற்பனை.

4. பாம்பு பால் குடித்து, புற்று கட்டிய தன் மூலம் பலருக்குப் பலன் தருகிறது என்பது மூடநம்பிக்கை.

5. பாம்பு மாணிக்கத்தைக் கக்கும் என்பதெல்லாம் கட்டுக் கதை.

6. நாகரெத்தினம் கிடைக்கும் என்பது புதினத்திற்குரியதே தவிர (கற்பனையானது) வேறில்லை.

இப்படி பாம்புகளைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்க மிகுந்த சுவையுடனும் சுவாரஸ்யத்தோடும் சொன்ன நண்பர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

வானொலியின் இத்தகைய சேவைகள் வளரட்டும்!

அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை அகற்றிட இது போன்ற பல செய்திகள் வெகு மக்களைச் சென்றடைதல் அவசியம் ஆகும்.



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/82516.html#ixzz35EYadijw

தமிழ் ஓவியா said...




இந்தியாவில் பாலியல் குற்றங்கள்:

கடமை தவறும் அதிகாரிகள், நீதித்துறையினர், அரசியல்வாதிகள்

அய்.நா. குற்றச்சாற்று

இந்தியாவில் அதி கரித்து வரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக அய்க்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சகோ தரிகளான இரு இளம் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக் கப்பட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப் பட்ட சம்பவம் உள் நாட்டில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர் களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர் பாக இந்திய அதிகாரி களுடன் சர்வதேச குழந் தைகள் உரிமை கண் காணிப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில், இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் பெரிய அளவிலான புறக் கணிப்புக்கு குழந்தைகள் இலக்காக்கப்படுவதாக அய்,.நா குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன் முறைக்குள்ளாவதாக கூறப்படும் இந்தியாவில் பாலியல் வன்முறை செய் யப்படும் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர். இவர்களை நாசப் படுத் தியவர்களில் சரிபாதிப் பேர் நன்கு அறிமுக மானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர் களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளது.

சர்வதேச ஊடகங் களில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக, இது போன்ற பல சம்பவங்கள் உள்ளூர் வீதிகளில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தாமல், அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படா மல், இதன் மூலமாக ஊடகங்களின் பார்வை யில் படாமல் பலரது கவனத்தை ஈர்க்க தவறி விடுகிறது. அவற்றைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்ற சம்பவங்கள் தொடர்பான போதிய தொகுப்புகள் இல்லாமை, மத்திய, -மாநில அரசு களிடையே நிலவும் சீரற்ற சட்டங்களும் அவற்றை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் நீதித் துறையும் தங்களது கட மையை நிறைவேற்ற தவறி விடுவது ஆகிய வற்றை சுட்டுக்காட்டி இந்த கண்காணிப்பகத் தின் துணை தலைவர் பென்யாம் மெஸ்மர் வேதனையை வெளிப் படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளின் போக்கு பாலியல் வன்முறை சம்பவங்களை விபத்து என்றும் சில வேளை களில் சரி - சில வேளை களில் தவறு என்றும் கேலியாக கருத்து கூறிய சில இந்திய அரசியல் வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண் சிசுக் கொலை, பெண்களை புறக்கணித்து கைவிடுதல், பெண் கருக்கலைப்பு ஆகி யவற்றை தடுக்க இந்தியா கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அய்க் கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்த பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82500.html#ixzz35EYmlB6u

தமிழ் ஓவியா said...


இலங்கையில் குழந்தை பெற்றால் சிங்கள பெண்களுக்கு பரிசு தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பாம்!


சென்னை, ஜூன் 20: இலங்கையில் குழந்தை பெறும் சிங்கள பெண்க ளுக்கு பரிசு கொடுத்து அந்நாட்டு அரசு கவுரவப் படுத்துகிறது. அதே சமயம் தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பு செய்கிறது. இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புலம் பெயர் தமிழர்கள், காணொ லிக்காட்சி மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.

இலங்கையில் நடை பெறும் சிங்கள குடியேற் றம், தமிழ் பெண்கள் கரு கலைப்பு உள்பட பல்வேறு மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனவே, புதிதாக மத்தி யில் அமைந்துள்ள பாஜக அரசுக்கு, இலங்கை பிரச் சினையை தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கை வைக்கும் வகையிலும் காணொலிக் காட்சி மூலம் பத்திரிகையாளர்களி டம் கலந்துரையாடலுக்கு திரைப்பட இயக்குநர் கவுத மன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தபடியே, காணொலிக் காட்சி மூலம் சென்னை பத்திரி கையாளர் மன்றத்தில் இருந்த செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தனர்.

இதில் கனடா நாட்டில் வாழும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை இணைத் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன், டென்மார்க்கை சேர்ந்த தமிழ் இளையோர் அமைப்பின் நிர்வாகி சுகுநேந்திரன், டென் மார்கை சேர்ந்த சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமேன் வீராஜ் மென் டிஸ், டென்மார்க்கை சேர்ந்த நிர்மானுசன் பால சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது நிர்மானுசன் பாலசுப்ரமணியன் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கையில் ஈழ தமிழர் பகுதிகளில் ராஜ பக்சே அரசு கட்டாய சிங்களர் குடியேற்றத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழர் பகுதிகளில் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பள வில் சிங்களர்களை குடி யேற்றியுள்ளனர்.

மேலும், தமிழர்கள் பகுதிகளில் உள்ள பெண் களை பாலியல் வன் கொடுமையை சிங்கள ராணுவம் செய்து வருகிறது. ராஜபக்சே அரசு, சிங்கள பெண்கள் குழந்தை பெற் றால் பரிசுகள் வழங்கு கிறது. ஆனால் தமிழ் பெண்களின் கருக்களை மட்டும் திட்டமிட்டு கலைத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுக்க வேண் டும். தமிழக முதல்வர் மற்றும் இந்திய அரசு தமிழ் ஈழம் அமைவது, தமிழர் பகுதிகளில் மேற் கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தை தடுப்பது உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82507.html#ixzz35EZB01wU

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்


உடமைகள், உறவுகள், உரிமைகள் ஆகியவற்றை தொலைத்து எவ்வித ஆதர வும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக வாழ்கின்றனர்.

இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டு அகதிகளாக வாழும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு பாதுகாப்பு மற் றும் வாழ்க்கையை முன்னேற்றும் நோக் கத்துடன், ஜூன் 20 ஆம் தேதி உலக அகதி கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக நாடுகளில் இனவெறி, அரசியல், மதம், வன்முறை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, சொந்த இடத்தை விட்டு அகதிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உள்ள உரிமைகளைத் திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும்.

அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப்போல நடத்தப்படவேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

உலகளவில் 1.4 கோடி பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என 2013 இல் எடுக்கப்பட்ட அய்.நா., கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

உலகிலேயே ஆப்கானிஸ்தானில் இருந்துதான், அதிக மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 2 ஆவது இடத்தில் சிரியா, 3 ஆவது இடத்தில் ஈராக், 4 ஆவது இடத்தில் சோமாலியா, 5 ஆவது இடத்தில் பாலஸ்தீனம் உள்ளன. அகதிகள் குடிபெயர்ந்துள்ள நாடுகள், அங்கு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்வரவேண்டும்

Read more: http://viduthalai.in/page-8/82534.html#ixzz35EZs4hIa

தமிழ் ஓவியா said...


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக் குழு இலங்கை செல்கிறது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு


சென்னை, ஜூன் 20_ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் எம்.பி., எம். அப்துல் ரஹ் மான், மாநில செயலாளர் கள் காயல் மகபூப், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜா முதீன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று, துணை தூதர் ஏ. ஜபருல்லாஹ்கானை சந் தித்து அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சிறீலங்கா இறுதிப் போருக்கு பின்ன ரும் அந்நாட்டில் வாழும் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும் பான்மை சிங்கள மக்களின் தாக்குதலுக்கு ஆளாவது குறித்து கவலை தெரிவிக் கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், அதற்கு பவுத்த துறவிகளே தலைமை தாங்கியதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த அம்மனுவில், தற்போது களுத்துரை மாவட்டம் அளுத்தகமா பேருவளை பகுதிகளில் பவுத்த பல சேனா வன்முறையாளர் களால் முஸ்லிம்கள் தாக் கப்பட்டு உயிர் உடைமை களை இழந்து தவிப்பது குறித்து பெரும் வேதனை தெரிவிக்கப்பட்டிருந்து.

இலங்கையில் பெரும் பான்மை சமூகத்தின் தீவிர வாத எண்ணம் கொண்ட வர்கள் அடக்கப்படுவ தோடு தமிழ் பேசும் சிறு பான்மையினர் பாதுகாக் கப்பட வேண்டும் என்றும், பள்ளிவாசல்கள், கோவில் கள், கிறிஸ்துவ தேவாலயங் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், கலவரத் தால் பாதிக்கப்பட்ட முஸ் லிம்களுக்கு நீதியும், நிவா ரணமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக் கப்பட்டிருந்தது.

இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர் வாகிகள் இலங்கை துணைத் தூதரை சந்தித்து அந்நாட்டில் நடைபெறும் சிறுபான்மையினருக்கெதிரான கலவரங்கள் குறித்து எங் களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.

பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக நீதி யும், நிவாரணமும் வழங் கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கும் மனுவை வழங்கினோம். அதை உடனடியாக அதி பரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் துணைத் தூதர் உறுதிய ளித்தார்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் தூதுக் குழு இலங்கைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதி களைப் பார்வையிடவும், அதிபரை சந்திப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள், புத்த பிட்சுகளின் தலைவர்கள், பவுத்த பொதுபல சேனா வின் தலைவர்களை சந் திப்பதற்கும் அனுமதி தரு வதோடு, ஆவன செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தோம், எங்கள் கோரிக்கையை வரவேற்ற இலங்கைத் தூதர் உடனடியாக ஆவன செய்வதாக உறுதி கூறினார்.

எங்கள் இலங்கை பயணத்தின்போது முஸ் லிம் பிரச்சினை மட்டு மின்றி, அங்குள்ள இலங் கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச் சினை குறித்தும் எடுத்து ரைப்போம். ஆர்ப்பாட்ட அரசியலில் நாட்டமில் லாத இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அணுகு முறை எப்போதுமே ஆக் கப்பூர்வமாகவே இருக்கும்.

- இவ்வாறு பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-8/82532.html#ixzz35Ea6f5wk

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

தண்டனையா?

ஒருமுறை மும் மூர்த்திகளில் யாருக்கு சத்வ குணம் அதிகம் இருக்கும்? என்ற எண் ணம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

இதை சோதிக்க ஒவ்வொரு மூர்த்தியையும் நேரில் சந்திக்கச் சென்றார் முனிவர். பெருமாளே சத்வ குணம் படைத்தவர் என்று அறிந்தார்.

முனிவர். திருமகள் உறையும் பெருமாளின் மார்பில் உதைத்தபோதுகூட திருமால் கோபம் கொள்ளாது.

முனிவரின் கால்கள் நோகக் கூடாதே என்று கவலை கொண்டானாம். ஆனால் முனிவரின் செய்கையால் கோபம் கொண்ட திருமகள் திரு மாலைப் பிரிந்து பூலோகம் சென்றாள்.

திருமால் தேவியைத் தேடிச் சென்ற போது, சுவர்ண முகி நதிக்கரை யில் ஒரு தடாகம் ஏற் படுத்தி அதன் கரையில் தவமியற்றுக என்று ஒரு அசரீரி கேட்டது. பெரு மாளும் அதன்படி 12 ஆண்டு காலம் தவம் செய்தார்.

இறுதியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச திதியில் வெள்ளிக் கிழமை உத்திராட நட்சத்திரத்தில் மைத்திரம் என்ற முகூர்த்த நேரத்தில் திருமகள் பொற்றாமரை மலரில் தோன்றி திருமா லுக்கு மாலையிட்டாளாம்.

கடவுளுக்கே சாபம் - தண்டனையா? அப்படி என்றால் அந்தக் கடவுள் எப்படி சர்வ சக்தி வாய்ந்தவர் ஆவார்? பக்தரைப் பகவான் சோதிப்பார் என்பார்கள்; இங்குப் பகவானைப் பக்தர் சோதிப்பது எப்படி?

Read more: http://viduthalai.in/e-paper/82602.html#ixzz35K5E6fi9

தமிழ் ஓவியா said...

குஜராத்தும் தமிழ்நாடும்

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் 2011-இல் 0.42 சதவீதம் ஆகும்.

1981ஆம் ஆண்டிலோ 0.98; படிப்படியாகக் குறைந் துள்ளது - இப்பொழுது எண்ணிக்கை 17,351.

வளர்ச்சி வளர்ச்சி என்று தம்பட்டம் அடிக்கும் குஜராத்திலோ குழந்தைத் தொழிலாளர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்து 687.

Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5ituj6

தமிழ் ஓவியா said...

தலைக் கவசமும் மதமும்

மத சம்பிரதாயம் காரண மாக சீக்கியப் பெண்கள் தலைக் கவசம் அணியத் தேவையில்லை என்ற உத்தரவு போல, இஸ்லாமி யப் பெண்களுக்கும் மத சம்பிரதாயத்தின் அடிப் படையில் தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை டில்லி ஆளுநரி டம் வைக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5rdqnd

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/82620.html#ixzz35K65dmt5

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை வெறும் 26 சதவீதம்தான்!- இது சென்சஸ் கணக்கு


புதுடில்லி, ஜூன் 21_ பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான். இந்தக் கணக்கைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்!

இந்தி பேசுவோர் 2001- ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேர் என கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45 சதவீதம் பேர்.

அய்ந்தாவது இடம் தமிழுக்கு வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசு வோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப் பதிவு செய்திருந்தனர்.

மத்திய அரசின் மோசடி இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய அரசு கணக்கு காட்டியிருப்பது ஒரு மோசடியான வேலை என்பது அம்பலமாகியுள்ளது. காரணம், இந்த 42 கோடி மக்களும் இந்தி பேசுபவர்கள் அல்ல.. வெவ்வேறு மாநிலங்களில் இந்தியின் கிளை மொழிகளைப் பேசுபவர்கள்.

26 சதவீதம்தான் இந்தியை மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 கோடியே 79 லட்சம் பேர். அதாவது நாட்டு மக்கள் தொகையில் 26 சதவீதம். இந்தி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளான போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, சத்தீஸ்கரி, ஹரியான்வி, மேவாரி, மால்வி, மார்வாரி உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர் 15 கோடிக்கு மேல் உள்ளனர். இவை வட்டார வழக்கு மொழிகள் அல்ல. தனி எழுத்துருக்களைக் கொண்டவை. இந்த மொழி பேசுவோர் தங்கள் தாய்மொழி இந்தி என்று சொல்வதில்லை. அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.

குற்றச்சாட்டு ஆனால் இதை மறைத்து விட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 42 கோடி பேர் என கணக்கு சொல்கிறது மத்திய அரசு. இதன் மூலம் பெரும்பான்மை யோர் பேசும் மொழி இந்தி என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

முரண்பாடு "இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது. இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள். இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது," என்கிறார் இந்திய மொழிகள் கணக் கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி.

Read more: http://viduthalai.in/page-2/82623.html#ixzz35K6QcpeU

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் மோதல் கைதான இந்து முன்னணியினர் சிறையில் அடைப்பு!


அம்பத்தூர், ஜூன் 21- இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி நேற்று பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 அரசு பேருந்து கண்ணாடிகள், 3 கார், லாரி உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

மேலும் சுரேஷ்குமார் உடலை மண்ணூர் பேட்டை சிடிஎச் சாலை சந்திப்பில் இந்து முன்னணி தொண்டர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டை பேருந்து நிலையம் வழியாக ஊர்வல மாக வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். அந்த வழியில் மசூதி இருப்பதால் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 10_க்கு மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர். பலர் சிதறி ஓடினர். மேலும் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டதில் 3 காவல் துறையினர் காய மடைந்தனர். இதையடுத்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் துறையினர் 52 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர் 52 பேரில் 39 பேரை விடுதலை செய்தனர். 13 பேர் மீது பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தது, கற்கள் கம்புகளை வைத்து தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வழக்குகளின் கீழ் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குமரியில் பதற்றம்

அம்பத்தூரில் வெட்டி கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் உடல் குமரிக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. இறுதி ஊர் வலத்தின் போது திடீரென வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/82634.html#ixzz35K6pbv7V

தமிழ் ஓவியா said...

கழகப் பேச்சாளர்கள், பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

கழகப் பரப்புரை கூட்டங்கள், திருமணங்கள், இல்லத்திறப்பு, படத்திறப்புகளுக்கு கலந்து கொள்ள ஒப்புதல் அளித்து தேதி கொடுக்கும் கழகப் பேச்சாளர்கள், இது தொடர்பாக மாவட்ட, ஒன்றிய கிளைக்கழக பொறுப்பாளர்களுக்கு தங்கள் வருகையினை அருள்கூர்ந்து, அஞ்சல் அட்டை மூலமாகவோ, தொலைப்பேசி வாயி லாகவோ தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள் கிறோம்.

மேலும், மேற்கண்ட நிகழ்ச்சிகளை நகல் பிரதி எடுத்து அனுப்பாமல் துண்டறிக்கைககள் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள் நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். தந்தை பெரியாரின் தலையாய கொள்கை தமிழர் தலைவரின் தலைமையில் தரணியெங்கும் தழைக்கச் செய்வோம்! - செல்வம், சண்முகம், நெய்வேலி வெ.ஞானசேகரன்
மாநில அமைப்புச் செயலாளர்கள்

Read more: http://viduthalai.in/page-4/82638.html#ixzz35K7EfKWt

தமிழ் ஓவியா said...


மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்


கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு

சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர்கள் செய்யும் ஏமாற்றையும் வஞ்சகத்தையும் பற்றியும், ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கியமற்றவர்கள் என்றும், உதாரணமாக சென்னையில் உள்ள ராம கிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லையென்றும்,

அங்கு புழங்கும் பணம் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பார்ப்பனரல்லா தாருடையதென்றும், வருஷம் 20, 30 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றதென்றும் இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலைவருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியர் சட்டசபையில்கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும்,

ஆனாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக்கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமையாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொதுமக்கள் பணத்தை வசூல் செய்து, கொடுக்கின்றார்கள் என்றும், இங்கும் அதுபோல் இருக்கக்கூடாதென்று ஆசைப்படுவ தாகவும், விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்துமதப் பிரதி நிதியாய் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான பிரதிநிதியாய் இல்லாமல் இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாய் போய் கேசை ஜெயித்துக்கொண்டு வந்தாரென்றும்,

ஆகையால் அதனாலேயே இந்துமதம் என்பதற்கு யோக்கியதை வந்து விடாதென்றும், அவர் இந்தியாவையும் இந்துக்களையும் பற்றி இந்தியாவில் பேசி இருப்பதைப் பாருங்கள் என்றும், பார்ப்பனர்களைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதும், வருணாசிரமம், ஜாதி வித்தியாசம் ஆகியவைகளைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்ப தையும்,

இந்து அரசாங்கமாகிய மலையாளத்தைப் பற்றிச் சொல்லி இருப்பதையும், அவர் விக்கிரகங்களைப் பற்றிச் சொல்லும்போது அவை பாமர மக்களுக்கு வேண்டி ஏற்பட்டதே ஒழிய மற்றவர்களுக்கு அல்ல என்றுதான் சொன்னாரென்றும்,

ஆனால், இப்போதைய விக்கிரகங்களை பாமர மக்களுக்கு உபயோகப்படாமலும், கண்ணில் பார்க்கக்கூட இடம் தராமலும், பண்டிதர்கள் பிரமஞானம் உடையவர்கள் கடவுளாலேயே அறிவாளிகளாய் பிறப்பிக்கப்பட்ட மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும், அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கும்தான் சாதனமாயிருக்கின்ற தென்றும்,

மற்றும் தென்இந்தியாவுக்கு வேண்டியதெல்லாம் உண்மையான சுயமரியாதையே என்று அவர் சொல்லி இருக்கின்றார் என்றும் மற்றும் இப்படி அவர் சொன்ன அனேக விஷயங்களைப் புத்தகத்தைப் பார்த்தே எடுத்துச் சொல்லி 2 மணி நேரம் கூட்டத்தையே ஆச்சரியப்படும்படி செய்து விட்டார்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 09. 02. 1930

Read more: http://viduthalai.in/page-7/82600.html#ixzz35K7aVtOo

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாட்டில் பேசியது


சகோதரர்களே!

இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக்கை யைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்பகால நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றது. அதாவது இந்தியப் பொதுமக்களுடையவும், பாமரமக்களுடையவும் நன்மைக்காக வென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக் கப்பட்டது.

ஆனால் இதை ஆரம்பித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகத்திற்கும், தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப் புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையா யிருந்தார்கள். அம்மகாநாடுகளில் தங்கள் உத்தியோகத்திற் கேற்ற பல தீர்மானங்கள் செய்துவிட்டு பாமர மக்களை ஏமாற்ற ரோடுகள் போட வேண்டும், வரி குறைக்க வேண்டும், காடு திருத்தவேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள்.

காரியத்தில் சீர்திருத் தம் என்னும் பேரால் கொழுத்த சம்பளமுள்ள சில உத்தியோகங் களை அந்தப் படித்தக் கூட்டத்தினர் அனுபவிக்கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்த படி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதி காரங்களும் மற்றும் தொல்லை களும் பெருகினதைத் தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்பட வில்லை.

சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சி களும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய்விட்டது. ஏனென்றால், ஸ்தாபனங்களில் முக்கியஸ்தர்களாயிருக் கின்றவர்கள் அதனால் ஏற்படும் உத்தியோகங்கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர் களுக்குப் பங்கு கொடுக்காமல் ஏமாற்றச் சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள் பிரிந்துபோய் வேறு ஸ்தா பனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர்களா வதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப்படாதவர்கள் ஜாதி மத வகுப்புகளின் பேரால் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமூக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும், ஸ்தாபனங்களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதிலுள்ளவர்களின் சுயநல சூழ்ச்சி யாலும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.

ஆகையால், இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தும் படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும்.

அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுய மரியாதையையும் உண்டாக்குவதே தவிர, உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டுமென்பதல்ல என்பதே எனதபிப்பிராயம்

இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்று படுத்திக் கொண்டா லொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது.

ஆதலால் நீங்கள் ஏதாவது எங்கள் காங்கிரசைப் பின்பற்றி, எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப்போல பாழாக்கி, ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளைவித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன்.

(மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சபாஷ், சபாஷ், உண்மை, உண்மை என்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. இராமசாமியாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்).

- குடிஅரசு -சொற்பொழிவு - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7mgszo

தமிழ் ஓவியா said...


செங்கல்பட்டு ஜில்லாபோர்டு தேர்தல்


செங்கல்பட்டு ஜில்லாபோர்டுக்கு 30 - 01 - 1929 தேதியில் தலைவர் தேர்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேர்தல் அடுத்த மார்ச்சு மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டதாக ஒரு சேதியும், தேர்தல் நடந்து ராவ்சாகிப் திரு. ஜெயராம் நாயுடு அவர்கள் தலைவராக தேர்தல் ஆகிவிட்டதாக ஒரு சேதியும் கிடைத்திருக்கின்றது.

எப்படியானாலும் தேர்தல் முடிவு நமது உண்மை நண்பர்களான திரு. திவான்பகதூர் எம்.கே.ரெட்டியாருக் காவது அல்லது திரு. ராவ்சாகிப் சி. ஜெயராம் நாயுடு காருக்காவது ஆகாமல் அதற்கு விரோதமாய் வெளியாருக்கு அதாவது பார்ப்பன அடிமைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதே நமது ஆசை.

இருவரும் சுயமரியாதை வீரர்களே ஆவார்கள். நிற்க, நாம் கொஞ்ச காலத்திற்கு முன் பார்ப்பனர்களும், பார்ப்பனக் கூலி களும், அடிமைகளும் அவர்களது யோக்கியதை வெளி யாக அடங்கிப் போய்விட்டார்கள். ஆனாலும் மறுபடியும் தலைகாட்ட நமக்குள் ஏதாவது சண்டை ஏற்படவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்று சொன்னபடிக்கு இச்சிறு விஷயங்களைக் கண்டே பார்ப்பனர்களும், அடிமைகளும் தலைநீட்ட புறப்பட்டு விட்டார்கள். ஆனாலும், ஜாண் நீட்டினால் முழம் கத்தரிக்க நமக்குச் சக்தி உண்டு. பழைய ஆயுதங்கள் எண்ணெய் இட்டு உறையில் வைத்திருக்கின்றதே தவிர மழுங்கிப் போய்விடவில்லை. யாரும் பயப்படத் தேவையில்லை!

- குடிஅரசு - கட்டுரை - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K83xhpp

தமிழ் ஓவியா said...

5 ரூபாய் இனாம் -சித்திரபுத்திரன் -

திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாகிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த் தாலும் பெரிதும் பார்ப்பனர்களே கலந்து அவர்களே முழுதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன?

திரு. காந்தி இந்த சத்தியாகிரகப் போருக்குப் பணமே வேண்டியதில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோ பாலாச்சாரியார் பணம் வேண்டும் மென்று கேட்பதின் இரகசியமென்ன? அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூழ்ச்சி என்ன?

இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார் களையே ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன? இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்கக் காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையளிப்பவர் களுக்கு குடிஅரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனா மாகவும் அளிக்கப்படும்.

குறிப்பு : - முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான விடை எது என்பதை நிர்ணயிப்பதற்கும் நானேதான் ஜட்ஜு எனக்குமேல் அப்பிலோ கேள்வியோ கிடையாது.

- குடிஅரசு - அறிவிப்பு - 30.03.1930

Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K8Gbv1c

தமிழ் ஓவியா said...


த.பெ.தி.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தமிழர் தலைவர் முன்னிலையில் தோழர்களுடன் கழகத்தில் இணைந்தார்!

சென்னை, ஜூன் 21- தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், இன்று (21.6.2014) சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து, திராவிடர் கழகத்தில் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் ஓரணியில் இணைந்து பணியாற்றும் நோக்கில், திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களுடன் த.பெ.தி.க. தோழர்கள் சொ.அன்பு (வடசென்னை மாவட்டத் தலைவர்), வி.ஜனார்த்தனன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), கண்ணதாசன் (காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்), ரகுநாத் (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), ஜெய்சங்கர் (திருவல்லிக்கேணி துணை அமைப்பாளர்), எருக்கஞ்சேரி தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், வழக்குரைஞர் காண்டீபன், பாட்சா உள்ளிட்ட த.பெ.தி.க. தோழர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், விடுதலை சந்தாவுக்கான நன்கொடையும் அளித்தார். தோழர் வி.ஜனார்த்தனன் ஈராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/82578.html#ixzz35K917aBe

தமிழ் ஓவியா said...


கழக மருத்துவர் புகழேந்தியின் மனித நேயப் பயணம்


தந்தை பெரியார் கொள்கையின் பால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஈர்க்கப் பட்டு அதனை ஏற்று இயக்கத்தை வலுப்படுத்த வந்தவர்கள் ஏராளம். அந்த வகையிலே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற சிற்றூரில் இருந்த கொள்கை வீரர்கள் ராமமூர்த்தி _- சாந்தா இவர்கள் தமது மகன், மகள் களை பெரியார் கொள்கை நெறியோடு வளர்த்தது மட்டுமல்ல தந்தை பெரியாரின் மனித நேயத்தையும், ஈகை குணத்தையும், கல்வியையும் போதித்தது சிறப்பாகும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் நிறுவனங்களுக்கு செல்லும் போது அதன் நிர்வாகிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தும் மிக முக்கிய கருத்துகளில் முதன்மை வாய்ந்தது என்ன வென்றால் அனைவரும் பள்ளி நடத்துவது போன்று நம் பள்ளி நடைபெறுவது சிறப்பல்ல. தந்தை பெரியார் கூறியதை போல வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், சமுதாயத் தில் பின் தங்கியவர்களுக்கும் முதல் தலைமுறையினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு பல பள்ளிகள் வாய்ப்பு வழங்கும். படிப்பில் ஆவரேஜாக (பின் தங்கி) உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி அவர்களை பள்ளியில் சேர்த்து அந்த மாணவர்களை நல்ல சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும் எனக் கூறுவார்.

அந்த வகையிலே ராமமூர்த்தி - சாந்தா ஆகியோரது மகன் மருத்துவர் புகழேந்தி அரசு மருத்துவராக பணி யாற்றி வந்தார். தன்னுடைய சேவை பின்தங்கிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நோக்கோடு மலை வாழ் மக்கள் வாழும் நீலகிரி, குன்னூர் பகுதி அரசு மருத்துவ மனைக்கு மாற்ற லாகி சென்று தொண்டு செய்து வந்தார். அவரது தொண்டினால் கவரப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவரை பணிகள் முடிந்ததும் தங்கள் தொண்டு நிறுவனத்தில் இணைந்து மலைவாழ் மக்களுக்கு பணியாற்றக் கேட்டுக் கொண்டனர். அந்த வகையில் அவருடைய பணிக்காலம் நிறைவடைந் ததும் நீலகிரி ஆதிவாசி நல்வாழ்வு அமைப்பு என்ற தொண்டு நிறுவனத் தின் மூலம் அம்மக்களுக்கு தொண் டாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் குன்னூர் பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் (இருளர், தோடர்) வாழும் சுமார் 26 கிராமங்களுக்கு மாதத்தில் ஒரு முறை என வகை பிரித்து சென்று அந்த மக்கள் வாழும் இடத் திற்கே நேரில் மருத்துவர் புகழேந்தி, செவிலியர் வனிதா, இரத்த அழுத்த ஆய்வகர் கலைவாணி, ஓட்டுநர் அசோக் ஆகியோர் சென்று மக்களை பரிசோ தித்து ஊசிபோட்டும், அடுத்து இவர் கள் செல்லும் நாள் வரைக்கும் தேவை யான மருந்துகள் வழங்கியும் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கிராமங்களுக்கு பேருந்து வசதி என்பது ஒரு நாளுக்கு காலை, இரவு இருமுறைதான் உண்டு. அந்த மக்கள் ஏதேனும் பொருட்கள் வாங்க வெளியே செல்ல நேரிட்டால் காலையில் சென்று இரவுதான் திரும்ப முடியும்.

சில கிராமங்களில் மாணவர்கள் படிப்பதற்கு அங்கேயே அரசு பள்ளி சிறந்த கட்டடத்துடன் அமைந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று.

மருத்துவர் புகழேந்தியுடன் ஒருநாள் பயணத்தில் அங்கே உள்ள மக்களுக்கு புன்முறுவலோடு அந்த மக்களின் மன நிலைக்கேற்ப பதில் கூறி நகைச்சுவை உணர்வோடு அம்மக்களிடம் பழகியதை காணமுடிந்தது. ஒரு மருத்துவர் அணுகுமுறை நோயாளியின் பாதி நோயை சரிசெய்துவிடும் என்ற எண்ணம் தோன்றியது. திரும்பும் வழியில் முதியவர் ஒருவர் நின்று கைகாட்டியதும் வண்டியை நிறுத்தி அவருக்கு சிகிச்சை, மருந்து, ஊசி வழங்கிய பின் வாகனம் புறப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து குன்னூர் வருகை தந்த முக்கிய பிரமுகர் பொறியாளர் பாலகுரு அவர்கள் தான் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல விரும்பவில்லை. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு செல்ல வேண்டும் என விரும்பி தனது குடும்பத்தாருடன் மருத்துவர் புகழேந்தி சென்ற கிராமத்திற்கு சென்று அவர் பணியை கண்டு வியந்து பொதுவாக மருத் துவர்கள் நல்ல வசதியுள்ள இடத்தில் தான் பணியாற்ற விரும்புவார்கள். நீங்கள் செய்யும் இந்த பணி மகத்தான பணி என 60ஆம் ஆண்டு அகவை காணும் மருத்துவர் புகழேந்தியை மனதார வாழ்த்தினார்.

தந்தை பெரியாரின் தொண்டுள்ளத் தால் மனித நேயத்தோடு வளர்ந்த மருத்துவர் புகழேந்தி சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தொண்டாற்ற அடுத்த கிராமத்தை நோக்கி புறப்பட்டார். தொடரட்டும் அவரது சமுதாய தொண்டு.

Read more: http://viduthalai.in/page4/82561.html#ixzz35KA3xUn4

தமிழ் ஓவியா said...


மத(யானை) அட்டகாசம்!


மோதல்கள் போதுமடா! - மதங்களின்
மோதல்கள் போதுமடா! . . . (மோதல்கள்)
வாதங்கள் ஆயிரம் பக்கம் - பக்தி
வாழ்க்கையில் செத்தபின் சொர்க்கம்!
சேதங்கள் எதற்கு மீண்டும்? - மக்கள்
சிந்தித்துத் தெளிந்திட வேண்டும்! . . .
(மோதல்கள்)
1. இந்துநாடா இசுலாம் நாடா - இது
எந்தநாடு சொல்லவா?
இந்து அல்ல இசுலாம் அல்ல - இந்தியா
ஏழைநாடு அல்லவா?
தானமே வேண்டும் இன்றும் - சமா
தானமே வேண்டும் என்றும்! . . .
(மோதல்கள்)
2 கடப்பாறை சூலம் வெடிகுண்டு - வலிய
கரங்களுக்கு தேவையா?
கடல்போல குருதி வெள்ளம் - அன்புக்
கடவுளுக்குத் தேவையா?
புத்திவந்தால் பக்திபோகும் - உனக்கு
பக்தி வந்தால் புத்திபோகும்! . . .
(மோதல்கள்)

- குபேரன்

Read more: http://viduthalai.in/page6/82574.html#ixzz35KBQ76ND

தமிழ் ஓவியா said...


மலேரியாவை ஒழிக்க கொசுக்களே!


கொசுக்கள் மூலம் மலேரியா ஒழிப்பு நட வடிக்கையை மேற்கொள்ள விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டியுள்ளனர். மலேரியா நோய், கொசுக்கள் மூலம் பரவுகின்றது. இது அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க் கிருமிகளை உற்பத்தி செய்கிறது. பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. எனவே மலேரியா என்ற கொடிய நோயை கொசுக்கள் மூலமே ஒழிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டி ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற் கொண்டனர்.

அதன்படி புதிய மரபணு மூலம் மலேரியாவை உருவாக்கும் அனோபிலெஸ் காம்பியே கொசுக் களில் ஆண் கொசுக்களை மட்டும் 6 தலைமுறைகளாக மாற்றி மாற்றி உரு வாக்கினர். அதன் மூலம் மலேரி யாவை பரப்பும் பெண் கொசுக்கள் ஒழிந்து ஆண் கொசுக்களை மட்டும் பெருக்கமடைய செய்தனர். இதன் மூலம் மலேரியா கிருமிகளை உரு வாக்கும் கொசுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என விஞ் ஞானிகள் நம்புகின்றனர்.

Read more: http://viduthalai.in/page6/82576.html#ixzz35KBg8oLa