Search This Blog

1.6.14

மாணவர்களும் பொதுநலத் தொண்டும் - பெரியார்




    மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
    மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தைகளாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான் பெரியவர்களாய் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள்.

    இந்த நிலையற்ற பருவத்தில் எது நல்ல காரியம் என்று உங்களால் சிந்தித்துச் சுலபத்தில் அறிந்துகொள்ள முடியாது. மாணவர்கள் தாமாகவே ஒரு நல்ல காரியத்தை ஆராய்ந்தறிந்து அதைச் செய்து முடிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. அவர்களைக் கொண்டு பல நல்ல நல்ல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன். ஆகவே, அவர்கள் தம்மைத் தம்முடைய திரண்ட சக்தியை நல்ல தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிக் கூறுவதற்காக மாணவர்கள் என்மீது கோபித்துக் கொள்ளக்கூடாது. மாணவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கக் கூடியவர்கள்.

    சொல்லிக் கொடுப்பதைப் படிக்கக் கூடியவர்கள். ஆதலால் தமக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக அவர்கள் ஒருபோதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி நினைப்பவர்களிடமிருந்துதான் காலித்தனம், கட்டுப்பாட்டுக்கு அடங்காத தன்னிச்சைத்தனம் விரைவில் புறப்படுகிறது. ஆகவே, அவர்கள் மிக ஜாக்கிரதையாக விஷயங்களைச் சிந்திக்க வேண்டும். தம்மால் கூடுமான அளவுக்கு நல்ல தலைவர்களை அவர்கள் தேடித் திரிதல் வேண்டும். எந்த அளவுக்கு தாம் அன்பு செலுத்துகிறார்களோ அந்த அளவுக்கேனும் தம்மீது அன்பு செலுத்தக் கூடிய, தம்மை நல்வழிப்படுத்துவதில் ஆசையும், அக்கறையும் உள்ள தக்க பெரியார்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் அவர்கள். அந்த வழியில் நாங்கள் முயற்சி செய்து அவர்களில் ஒரு சிலரையாவது எங்களையும், எங்கள் கொள்கைகளையும் நம்பச் செய்து, அப்படிப் பெற்ற சிலரை நாங்கள் எங்களுக்குச் சொந்தமான பெருஞ்சொத்தாக மதித்து மகிழ்ந்து வருகிறோம்.

    மாணவர்களின் உண்மையான தகுதி

    மாணவர்கள் நல்ல சோல்ஜர்கள்; நல்ல ஜெனரல்களல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள், நல்ல கமாண்டர்களல்ல. ஆகவே, நல்ல சிப்பாய்களைப்போல அவர்கள் பல கட்டு திட்டங்களுக்குட்பட்டு நடக்கவேண்டும்.

    தொண்டின் முன்பு சோதனை

    மாணவர்கள் பொதுநலத் தொண்டில் ஈடுபட நினைக்கும்போது, முதலில் பொதுநலத் தொண்டில் ஈடுபடத் தமக்குத் தகுதியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் நலன்களை விட்டுக் கொடுக்க, அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க அவர்கள் தயாராக இருக்கவேண்டும். தங்கள் உயர்வைக் கருதாமல், தங்கள் பட்டத்தைப் பெரிதாகக் கருதாமல், தங்களைச் சாதாரண சராசரி மனிதனாகக் கருதிக் கொள்ள அவர்கள் முதலில் சம்மதிக்க முடியுமா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையையும், அவர்கள் கூடுமான அளவுக்குச் சராசரி மனிதனுடைய வாழ்க்கைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
                                                                               * * *
    தன்னலம் பேணாமை
    நீங்கள் உங்களைச் சாதாரண மனிதர்களாக நினைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைச் சவுகரியங்களையும் எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மிகமிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிகமிக தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மாணவர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும். மாணவர்கள் தம் மைனர் வாழ்க்கைத் தன்மையை அறவே விட்டொழிக்க வேண்டும். மைனர் வாழ்க்கை நடத்தக் கூடியவர்களை இயக்கத்தில் சேர்த்துக் கொண்டால், அவர்கள் தம் சொந்த வாழ்விற்காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தம் சொந்த வாழ்விற்குத் தடை ஏற்படும்போது பேசாமல் வெளியேறிவிடுவார்கள். அல்லது எதிர்ப்பு வேலை செய்வார்கள். அல்லது எதிரிகள் கையாளாக ஆகிவிடுவார்கள். அப்படிப்பட்ட நொண்டி மாடுகள் நுழையவொட்டாமல், மாணவர் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.

    தொண்டிற்குத் தகுதியற்றோர்

    பொதுத் தொண்டுக்கு வந்த உடனே தங்களைப் பெரிய மேதாவியாக நினைத்துக் கொள்ளக் கூடியவர்களும், தங்கள் தகுதிக்கு மேலாக போக போக்கியம், பெருமை, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய விகிதாச்சாரத்திற்கு மேலாக மதிப்பு, தங்களுக்குக் கிடைக்கவேண்டுமென்று நினைப்பவர்களும், எந்த இயக்கத்திலும் இருக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர்களால் பொதுவாழ்க்கையில் எப்போதும் எந்தக் கொள்கையிலும் நிலைத்திருக்க முடியாது.

    அபாயகரமான நோய்

    பொதுநலத் தொண்டர் எவருக்கும் உள்ளத்தில் அடக்கம் வேண்டும். தான் என்ற அகம்பாவம் கூடாது; ஏமாற்றம் ஏற்படுமானால், அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு மற்றுமொரு கெட்ட நோய் இருந்து வருகிறது. ஒன்றிரண்டு தடவை மேடை ஏறினால் போதும். ஒன்றிரண்டு தடவை கைதட்டல் கிடைத்துவிட்டால் அதைவிட மேலாகப் போதும். பத்திரிகைகளில் அவர்களால் எழுதப்பட்ட ஒன்று, இரண்டு கதைகளோ பாட்டுகளோ வியாசங்களோ வந்துவிட்டால் போதும். உடனே தங்களைப் பெரிய தலைவர்கள் என்றும், ஆசிரியர்கள் என்றும், தங்களை மற்றவர் யாவரும் மதிக்கவேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விடுவார்கள். இது மகா அபாயகரமான நோய். இந்நிலை வந்துவிட்டால் எப்படிப்பட்ட இயக்கமும், கொள்கையும் அவர்களைச் சீக்கிரம் கைவிட்டு விடும். அதற்கப்புறம் அவன் சீக்கிரத்தில் பொது வாழ்வில் வெறுப்பேற்பட்டு எதற்கும் தகுதியற்றவனாகி விடுவான். ஆகவே தான் அடக்கம் வேண்டும் என்று அவ்வளவு வற்புறுத்திக் கூறவேண்டியிருக்கிறது.

    * * *
    என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரணச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது, 1916 அல்லது 1917 இல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய புரஹாம் வண்டி வைத்திருந்தேன். ஊத்துக்குழி ஜமீன்தார், ஆனரபிள் சம்பந்த முதலியார் மற்றும் 3, 4 பிரபலஸ்தர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தனர். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப் போகவேண்டியிருந்தது. ஜமீன்தார் முதலிய எல்லோரையும் வண்டியில் அமர்த்தினேன். வண்டியில் மேற்கொண்டு இடமில்லை. நான் ஒருவன்தான் பாக்கி. வண்டி அவர்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வரவேண்டுமென்றால் நேரமாகிவிடும். ஆதலால் என்னையும் உடன்வரவில்லையா என்று ஜமீன்தார் கேட்டதற்கு, இதோ பின்னால் வருகிறேன் என்று பதில் கூறி, வண்டியை விடு என்று சொல்லிவிட்டு, அவர்கள் அறியாமலே நான் வண்டி மீதேறி கோச்மேன் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். குறிப்பிட்ட இடத்தை வண்டி அடைந்ததும், அவர்கள் இறங்கவும், கோச்மேன் பக்கத்திலிருந்து நான் இறங்குவதைப் பார்த்து அவர்கள் திடுக்கிட்டார்கள். அன்றையிலிருந்து என்னை அவர்கள் ஒருபடி உயர்வாகவே மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜமீன்தார் என்னைக் கண்டால் பெரிய ஞானி என்று குனிந்து கும்பிடுவார். நான் அவரைப் பரிகாசம் செய்வேன். கோச்மேன் பக்கத்தில் உட்காருவதை நான் கேவலமாக மதிக்கவில்லை என்பதையும், விருந்தினர்களுக்காக எனது சவுகரியத்தை எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்து வருகிறவன் என்பதையும், அவர்கள் அறிந்து கொண்டதினால்தான் என்னை மிக மேலானவனாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்.

    விட்டுக்கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல

    இப்படி நம் சவுகரியத்தைப் பிறருக்காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய போதுகூட நான் மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வேன். ராஜகோபாலாச்சாரியாரும், திரு.வி.க.வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு.வி.க. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார், கூச்சப்படுவார். உடம்புக்குச் சவுகரியமில்லாதபோது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது என்று நான் கூறி அவர்களைச் சமாதானப்படுத்துவேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வாழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக் கொள்ளவேண்டும். சாதாரண உணவில் திருப்தி அடையவேண்டும். நான் காங்கிரஸ் தலைவனாய் இருந்தபோதுகூட எவ்வளவோ தர்க்க வாதம் செய்வேன். ஆயினும் ராஜகோபாலாச்சாரியார், திரு.வி.க. ஆகியவர்களின் ஆலோசனையின் பேரில்தான் எதையும் செய்து வந்தேன். எதிலும் அவர்கள் அபிப்பிராயப்படியே செய்வேன். விட்டுக் கொடுப்பதில், தலைவர்களை மதிப்பதில், நான் மிக்க தாராளமாக நடந்து வந்தேன். அந்தப்படியே நீங்களும் எதிலும் பிறருக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.
    * * *
    அறிவின் அடையாளம் அகிம்சை

    மாணவத் தோழர்களுக்கு அகிம்சையில் நம்பிக்கை இருக்கவேண்டும்; புண்ணியம் சம்பாதித்துக் கொள்வதற்காக அல்ல. ஹிம்சை சகலருக்கும் பொது, யாவருக்கும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது என்பதற்காகத்தான்.
    நமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக் கொள்ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத்தனத்தை ஏன் நாம் கடைப்பிடிக்கவேண்டும். மனிதத் தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான்.

    நாம்தானே இந்நாட்டில் பெரும்பான்மை மக்களாக இருக்கிறோம். பலாத்காரத்தை வளர்த்தால் நாம்தானே அதற்குப் பலியாக நேரிடும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். முடிவாக ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் நல்ல எளிய முறையில் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை இலகுவானதாக, இன்பமானதாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு அளவற்ற பொறுமையும், அடக்கமும் கீழ்ப்படிதலும் வேண்டும்.

    ----------------------------------------21.2.1948 அன்று திருச்சியில் நடந்த திராவிடர் மாணவர்கள் மாநாட்டில், தந்தை பெரியார் ஆற்றிய  பேருரையிலிருந்து..."குடிஅரசு"-  சொற்பொழிவு - 03.04.1948

    11 comments:

    Yarlpavanan said...

    சிறந்த பயன்தரும் பகிர்வு

    Yarlpavanan said...

    சிறந்த பயன்தரும் பகிர்வு

    தமிழ் ஓவியா said...


    அரசு அலுவலகங்களில் புகைப்பிடிக்க தடை கர்நாடக அரசு அறிவிப்பு


    கர்நாடகத்தில் அரசு அலுவலங்கள், பேருந்து நிலையம், மருத்துவ மனை ஆகிய இடங்களில் புகைப் பிடித்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன் னிட்டு, சனிக்கிழமை பெங்கருவில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் கூறிய தாவது:

    உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 60 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களால் இறக்கிறார்கள். ஒவ்வொரு 6 வினாடிக்கும் உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் பலியாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்லா மல் வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறு நீரகம் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன. ரத்தக்குழாய், ரத்த நாளங் களில் ஏற்படும் பாதிப் பால் மாரடைப்பு, பக்க வாதமும் ஏற்படுகிறது. மனைவி கருவுற்றி ருக்கும் போது கணவன் அருகிலி ருந்து புகைப்பிடித்தால், வயிற்றில் இருக்கும் குழந் தையின் மனவளர்ச்சி பாதிக் கப்படும் என தெரியவந் துள்ளது.

    உலக அளவில் புகை யிலை பொருட்களைப் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-ஆம் இடத்திலும் இருக் கிறது. இந்தியாவில் 57 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும், 34.6 சதவீத இளைஞர்களும் புகையிலை பயன்படுத்து கிறார்கள். கர்நாடகா வைப் பொறுத்தவரை 45 சதவீத ஆண்களும், 5 சதவீத பெண்களும் புகையிலை பயன்படுத் துகிறார்கள்.

    புகைப்பிடிப்பதைத் தடுக்கவும், புகையிலை உபயோகப்படுத்துவதைத் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை முதல் அரசு அலுவலகங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப் படுகிறது.

    புகைப்பிடிப்பவருக்கு மட்டுமில்லாமல் அருகில் இருப்பவருக்கும் பிரச் சினை ஏற்படுவதால், முதல் கட்டமாக அரசு அலுவ லகங்களில் தடையை மீறி புகைப்பிடிப்ப வருக்கு நிச்சயம் தண்டனை வழங் கப்படும். மேலும் பேருந்து நிலையம், மருத்துவ மனை, அரசு அலுவலகங் கள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பிடிப்பவருக்கு தண் டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

    இதுதவிர கர்நாடகா வில் புகையிலை விளைச் சலை குறைக்குமாறு தோட் டக் கலைத் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு அருகில் நூறு மீட்டர் சுற்றளவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாட கத்தை புகையிலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றார்.

    Read more: http://www.viduthalai.in/e-paper/81386.html#ixzz33RDGf3jP

    தமிழ் ஓவியா said...

    சீமாந்திராவுக்கு அடிக்கிறது லாட்டரி சீட்!

    திருப்பூர், ஜூன் 1- திருப்பதி ஏழுமலையான் என்ற கல் முதலாளிக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ளது. 11 டன் தங்க நகைகளும் உள்ளன. 4000 ஏக்கர் நிலமும் உள்ளது.

    ஆந்திராவிலிருந்து தெலங்கானா, சீமாந்தரா பிரிந்து விட்டதால், அந்தக் கோயிலும் சொத்தும் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இச்சொத்துக்கள் தேவஸ்தானத்துக்கும், கோயில் அமைந்துள்ள சீமாந்திரா வுக்குமே சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்கள் முடங்கிக் கிடக்கின்றனவே தவிர, பொது மக் களுக்கு எள் மூக்கு முனை அளவுகூடப் பயன் கிடையாது.

    Read more: http://www.viduthalai.in/e-paper/81381.html#ixzz33RDXEzl8

    தமிழ் ஓவியா said...


    80 ஆம் ஆண்டில் ‘விடுதலை’ சந்தாக்களைக் குவிப்பீர்


    கழகக் குடும்பத்தவர்களே, தமிழ் இன உணர் வாளர்களே,

    நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் தந்த அருட்கொடையான அறிவாயுதம் விடுதலை நாளேடு.

    இந்த நாளேடு 80ஆம் ஆண்டை அடைகிறது. தமிழில் ஒரு நாளேடு 80 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறுவது என்பதும் - அதிலும் கொள்கை லட்சிய நெறியோடு - வெறியாளர்களை எதிர்த்து, வீறு கொண்டு வேக நடை போடுவது என்பதும் எளிதான செயலா? எண்ணிப் பாருங்கள்.

    அக்காலத்துப் பிரபலமான நாளேடுகள் - அதுவும் அரசு ஆதரவு, விளம்பர வருவாய் போன்ற பல்வேறு சலுகைகளைப் பெற்று நடந்த நாளேடுகள்கூட 80 ஆண்டைத் தொடவில்லை.

    கொள்கை இல்லாமல், வெறும் சர்க்குலேஷன் என்ற எண்ணிக்கையை எப்படிப் பரப்புவது என்பதையே குறியாகக் கொண்டு, அரை நிர்வாணம், சினிமா, ஜோதிட மூடநம்பிக்கை, ஆன்மீகம் என்ற பெயரில் அதிகமான புராணக் குப்பைக் கதைகளைப் பரப்புதல் போன்ற பாமரத்தனத்தின் பசிக்கு இரை போட்டு தங்கள் வயிறுகளை வளர்த்துக் கொள்ளும் மலிவுச் சுவையால் கொழுத்துக் கொண்டுள்ள ஏடுகள் ஏராளம் உண்டு.

    மேற்காட்டிய ஜனரஞ்சகம் என்ற ஏமாற்று வேலைகளாலும், ஆட்சியை அனுசரித்தால் போதும் அமோகமாய் பக்க பக்கமாக விளம்பரங்கள் என்ற நிலவரம் ஒருபுறம்.

    இவைகளை ஒதுக்கி மனிதர்களை பகுத்தறிவுவாதிகளாகவும், சமூக நீதிக்கு, எதிரான சக்திகளுக்கு எதிராக சங்கநாதம் செய்யும் பணியை, எந்நிலையிலும் நிறுத்த மாட்டோம் என்ற சூளுரையோடு சுயமரியாதை உலகு சமைக்க, பயணம் செய்யும் இந்த ஏடு, ஒரு தனித் தன்மையான லட்சிய ஏடு!

    இதனைப் பரப்ப, நமது தோழர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டாமா?

    எனது 50 ஆண்டு ஆசிரியப் பணியை ஊக்குவிக்கும் வகையில், 50ஆயிரம் சந்தாக்களை தந்தீர்கள் - மகிழ்ந்தோம்.

    நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினீர்கள். அந்த அரும்பணிக்கு உங்களை அர்ப்பணித்துக் கிளம்புங்கள் தோழர்களே, தோழியர்களே!

    தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறினாரே, தமிழன் இல்லம் என்பதற்கான அடையாளம் விடுதலை நாளேடு அங்கு இருப்பதே என்று.

    அது கல்லில் செதுக்கப்பட்ட உண்மை என்று காட்டிடும் வகையில், சந்தாக்களை சேர்க்க தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குங்கள் தோழர்களே!

    ஒருவர் இரு ஆண்டு சந்தாக்கள் என்ற ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டு உழைத்தால் உடனே 50 ஆயிரத்திற்கு மேல் சந்தாக்கள் கிடைக்காதா என்ன?

    திருமணங்களுக்கு சந்தாக்களை அன்பளிப்பாகத் தரும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!

    மாணவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் பரிசுகள் தரும்போது, நம் ஏடுகளின் சந்தாவைத் தந்து படிக்கப் பழக்குங்கள் -உங்கள் செயல் திறனில், நமக்குள்ள நம்பிக்கை ஒரு போதும் வீண் போனதில்லை.



    கி.வீரமணி
    தலைவர், திராவிடர் கழகம்

    Read more: http://viduthalai.in/e-paper/81429.html#ixzz33XGMmFZf

    தமிழ் ஓவியா said...


    விடுதலைக்கு 12 ஆயிரம்!


    கழகத் தோழர்களே! நமது விடுதலை ஏடு 80ஆம் ஆண்டில் எடுத்தடி வைத்து விட்டது. விடுதலையின் பெருமைகளையோ, சாதனைகளையோ புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்களின் மூச்சுக் காற்று அது.

    விடுதலை வெள்ளி விழா வேண்டுகோள் ஒன்றைப் பகுத்தறிவுப் பகலவன் வெளியிட்டார் (விடுதலை 6.6.1964).

    அதில் அய்யா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை!

    ஒழுக்கக் கேடானதும்; மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும் தமிழ் மக்களுக்குச் சமுதாயத் திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடளிக்கக் கூடியதான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை விடுதலை.

    விடுதலை பத்திரிகை இல்லா திருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும்.

    முதலாவது விடுதலையில் வரும் செய்திகளை நமது தமிழ்நாட்டு அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளும் நல்ல வண்ணம் கவனித்து ஒரு அளவுக்காவது பரிகாரம் செய்து வந்திருப்பதுடன், கவனம் செலுத்தும்படியான நிலையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. மற்றும் விடுதலை பத்திரிகையானது மற்ற பத்திரிகைக்காரர்கள் யாரும் இருட்டடிக்கும் செய்திகளையும், வெளியிடப் பயப்படும் செய்திகளையும் தைரியமாய் வெளியாக்கி, மக்கள் கவனத்தையும், அரசாங்கத்தின் கவனத்தையும் திருப்பும் படியாய் செய்து வந்திருக்கிறது.

    இதையெல்லாம்விட விடுதலை பத்திரிகையானது பார்ப்பன ஆதிக்கத்தையும் அவர்களது அட்டூழியங் களையும் வளர விடாமல் செய்வதற்கு நல்ல பாது காப்பாய் இருந்து வந்திருக்கிறது என்று துல்லியமாக, தெளிவுபடுத்தி இருக்கிறார் தந்தை பெரியார்.

    அதன் காரணமாகத் தான், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், பெரியார் திடலில் விடுதலை பணிமனையைத் திறந்து வைத்தபோது மிக அழகாகவே அவருக்கே உரித்தான முறையில் சொன்னார்கள்.

    தமிழர்கள் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் விடுதலை தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். (விடுதலை 2.11.1965) என்றார். உலகில் நாத்திக ஏடு ஒன்று இத்தனை ஆண்டுக் காலம் நடைபெற்று வருகிறது என்பது சாதாரண மானதல்ல! அந்த வகையில் உலகில் உள்ள கோடானுகோடி பகுத்தறிவாளர்கள், நாத்திகர்களின் மதிப்பிற்குரிய அறிவாயுதமாக ஒளிர்கிறது.

    ஜாதியால் பிரிந்து கிடந்த தமிழர்களை ஒன்று திரட்டிய சாதனையும், அந்த ஜாதியின் காரணமாக மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தந்ததிலும், மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பைப் பிளந்து பகுத்தறிவு வெளிச்சம் தந்ததிலும், பெண்ணடிமை ஒழித்த திசையிலும், கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்குச் சட்டப்படியாக உரிமை களைப் பெற்றுத் தந்ததிலும் விடுதலைக்கு நிகர் விடுதலையே!

    தமிழ்நாட்டில் ஆசிரியர் என்று சொன்னாலே அது விடுதலை ஆசிரியரைத்தான் குறிக்கும் என்ற நிலை என்றால் அதன் பொருள் என்ன? ஒட்டு மொத்த தமிழி னத்திற்கே நல்லாசானாக அது விளங்கி வருவதால்தான் அந்தச் சிறப்பினைத் தமிழர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

    80 ஆண்டு விடுதலை வரலாற்றில் நமது தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்

    52 ஆண்டுக் காலம் ஆசிரியராக இருந்து புதிய சாதனை படைத் துள்ளார்கள்.

    50 ஆண்டு விடுதலையின் ஆசிரியராக இருந்த நிலையில், அவர்களின் பிறந்த நாளில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டித் தந்தோம். அது புதிய தலை முறையினரைச் சந்தித்துப் புத்தியைக் கூர் தீட்டியிருக்கிறது. இப்பொழுது 80 ஆண்டு வயதை விடுதலை எட்டியிருக்கும் இந்தக் கால கட்டத்தில் மேலும் 12 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டிட முடிவு செய்துள்ளோம்.

    இந்த ஒரு மாதத்துக்குள் கழகத் தோழர்களே, பொறுப்பாளர்களே, உங்கள் வீட்டுத் திருமணப் பணிக்கு ஓடியாடிப் பணியாற்றுவதுபோல, இன்னும் சொன்னால் அதற்கும் ஒரு படி மேலாகப் பாடுபட்டு இலக்கை முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    விடுதலைக்குச் சந்தா சேர்ப்பது விடுதலைக்காக அல்ல; தமிழரினத்தின் விடுதலைக்காகத்தான் இந்தச் சந்தா சேர்க்கும் பணியாகும்.

    அதுவும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இந்தச் சந்தா சேர்ப்புப் பணியினைத் தொடங்கியிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

    மதவாதம் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறது. ஜாதீயவாதப் பேர் வழிகள் மக்கள் மத்தியில் கொம்பு சீவும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

    இந்தச் சக்திகளை முறியடிக்கும் போர் ஆயுதம் தந்தை பெரியார் நமக்குத் தந்த விடுதலை யல்லவா!

    எனவே, கழகத் தோழர்களே, களத்தில் இறங்குவீர்!

    தமிழர் இல்லமெல்லாம் சென்று விடுதலையின் அவசியத்தை எடுத்துச் சொல்லுவீர்.

    ஒவ்வொரு கழகத் தோழரும் இரு சந்தா சேர்ப்பது என்ற முடிவுடன் வீதியில் இறங்குங்கள். கண் மூடிக் கண் திறப்பதற்குள் இலக்கை எட்டி விடலாமே!

    நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்பதைச் செயலில் காட்ட களத்தில் இறங்குவீர் கருஞ்சட்டைத் தோழர்களே!

    Read more: http://viduthalai.in/page-2/81432.html#ixzz33XGhzB4F

    தமிழ் ஓவியா said...


    பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?


    ஆசிரியருக்குக் கடிதம் >>>

    பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

    16-ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள கோபமும், பொருளா தார நெருக்கடியும், காங்கிரசுக்கு மாற்றாக சரியான ஒரு மூன்றாவது அணி அமை யாததாலும், இது பா.ஜ.க வுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால், தான்தோன்றித்தனமாக நடக்காமல், தன்னடக்கத்தோடு மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதே நடுநிலையா ளர்களின் கருத்து.

    இந்திராகாந்தி ஆட்சி காலத்திலே, இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் பட்ட கச்சத்தீவை, ஒப்பந்தங்களை மீறி நடக்கும் ராஜபக்சேவின் சர்வாதிகார அரசி டமிருந்து, திராணியுள்ளதாகச் சொல்லும் பா.ஜ.க அரசு கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

    தமிழக மீனவர்களைப் படாதபாடு படுத்தும் சுண்டைக்காய் நாடான இலங் கையின் தலையிலே ஒரு தட்டுத்தட்டி அடக்கி வைக்குமா?

    பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம், காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டு, மாண்புமிகு ஜெயலலிதா அரசின் (ஈகோ) தன் முனைப்பால் முடக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி - சென்னை இடையிலான கப்பல் போக்குவரத்து பயண நேரம் 32 மணி மிச்சமாகும் என்கிற நிலையிலே - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - பா.ஜ.க அரசு நிறைவேற்றுமா?

    இந்தியர்களின் கறுப்புப்பண வங்கிக் கணக்கை, இந்தியாவின் இரட்டை வரிக் கொள்கையை காரணங்காட்டி வெளியிட மறுக்கும், சுவிஸ் வங்கியிடமிருந்து பட் டியலை வாங்கி பா.ஜ.க அரசு கறுப்புப் பணத்தை வெளிக்கொணருமா?

    நீராதாரப் பிரச்சினை:- ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய தென் மாநிலங்களில் அணைகளில் 16 பில்லியன் கனமீட்டர் மட்டும் சேமித்து வைக்கப் படுகிறது. ஆனால் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளில் ஆண்டுக்கு 2000 முதல் 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக் கிறது. தென் மாநிலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை நீர்வழிச்சாலை திட்டம் வழியாக இணைத்து அனைத்து மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று வெ.பொன்ராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திட்டச்செலவு ரூ. 50,000 கோடி ஆகுமாம்.

    பா.ஜ.க அரசு, நீர் வழிச்சாலைத் திட் டத்தை நிறைவேற்றி நாட்டின் பொருளா தாரத்தை உயர்த்துமா?

    ஆட்சி அமைக்க, தமிழ்நாட்டின் (அதிமுக 37 இடங்கள்) தயவு தேவையில்லை என்கின்ற நிலையிலே தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நியாயமான நிதியினை பா.ஜ.க அரசு வழங்குமா?

    தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட தென்மாநில ரயில் கொள்ளையில் ஈடுபடும் உத்தரபிரதேச மாநில கொள்ளையர்களை, பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்துமா?

    உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்றாலும்கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு 5 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. சீனாவில் கூட மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8 சதவீதம் ஆகும். உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியராம். இந்த நிலையை மாற்றியமைக்க நரேந்திரமோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்குமா?

    சாதாரண காய்கறி முதல் பெட்ரோல், டீசல் விலை வரை உயர்ந்து கொண்டே போகிறது. இதை தடுத்து நிறுத்தி பெட்ரோல், டீசல் விலையை, பா.ஜ.க அரசு குறைக்குமா?

    வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் நீடிக்கிறது, படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை பா.ஜ,க அரசு உருவாக்குமா?

    உற்பத்திச் செலவுக்கும் கீழாக, மஞ்சள் விலை விற்பதால், விவசாயிகள் பெருத்த நட்டத்தில் இருக்கிறார்கள், உற்பத்திச் செலவையாவது கணக்கிட்டு, பா.ஜ.க அரசு மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்ய லாமே?

    பா.ஜ.க மிகப்பெரிய சக்தியாக உருவெ டுத்திருக்கும் நிலையிலே பா.ஜ.க வில் நிறுத் தப்பட்ட 5 முஸ்லீம்களும் தோல்வியடைந் தது எப்படி? இதற்கான காரணங்களை பா.ஜ.க கண்டறியுமா?

    இப்படி ஏராளமான எதிர்பார்ப்பு களோடு, இந்தியத் திருநாட்டின் குடி மகன்கள், ஏக்கப்பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றாமல் புதிய ஏற்றம் தருமா? நல்ல மாற்றம் தருமா? வாழுமா, ஜனநாயகம்! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    - கா.நா.பாலு, மேடடூர் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்

    Read more: http://viduthalai.in/page-2/81437.html#ixzz33XGrAPDr

    தமிழ் ஓவியா said...


    கவிவேந்தர் கா. வேழவேந்தனின் கவிதைத் தேன் - சுவைப்போம்!

    புரட்சிக் கவிஞர் அவர்களது பாரதிதாசனின் பரம்பரையைச் சார்ந்த பெருமைக்குரிய கவிஞர்கள் வரிசையில் வரும் கவிவேந்தர் தோழர் கா.வேழவேந் தன் திமுக வின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவர்.

    கொள்கையில் மாறாத குணக்கவிஞர் மிசா காலத்தில் எங்களுடன் தொல்லைகளை ஏற்ற தோழர்.

    பெரியார் - அண்ணா - கலைஞர் தம் கொள்கை வாழ்க்கை நெறிகளை கவிதைத்தேனில் குழைத்து தெவிட்டாத தேன் பாகாய் ஆக்கித்தரும் பகுத்தறிவுக் கவிஞர்.

    நாடறிந்தோர் வாழ்வில் என்ற தலைப்பில், உலகறித்த தலைவர்கள், சிந்தனையாளர், அறிவியல் மேதைகள் வாழ்வில் நிகழ்ந்த சரித்திர சுவை நிகழ்வு களின் சங்கமக் கவிதைத் தொகுதி ஒன்றினை 30.5.2014 மாலை பெரியார் திடல் நிகழ்ச்சி ஒன்றில் நேரில் அளித்தார்.

    உடன் படித்தேன்; சுவைத்தேன்; முடித்தேன் ஆம் அத்தனையும் கொம்புத்தேன்! அண்ணாவின் எளிமையும் ஈரமும்! (பக்கம் 97)

    எளிமைக்கே இலக்கியமாய்த் திகழ்ந்த அண்ணா
    ஈடில்லாப் பேருழைப்பால் முதல்வர் ஆனார்!
    பளபளக்கும் மாளிகையும் வேண்டாம்; என்றன்
    பழைமைமிகு சிறுவீடே போதும்! என்றார்!

    அளவினிலே படகைப்போல் வடிவம் கொண்ட
    ஆடம்ப ரக்காரும் வேண்டாம்! என்றார்!
    மிளகுக்கே உளபெருமை தோற்றத் தாலா?
    மேன்மைமிகு பயனால்தான்! என்றே சொன்னார்!
    அன்றைக்கு வெளியூரின் நிகழ்ச்சி ஒன்றை
    அவர் முடித்துத் தமதில்லம் நுழைந்தார்; வீட்டில்
    என்றைக்கு மில்லாமல் புதுநாற் காலி
    எழில்சோஃபா குவிந்திருக்கக் கண்ட அண்ணா,
    இன்றைக்குப் பதவியிலே இருப்ப தாலே
    இவைகுவியும்; இப்பதவி போன பின்னால் அன்றைக்கே கொண்டுவந்தோர் அள்ளிப் போவார்;

    அதனாலே இவற்றையெலாம் அனுப்பு என்றார்.

    அவ்வரலாற்று நிகழ்வுகளை தலைவர்களைப் பற்றியவை மிகச்சுருக்கமான முறையில் ஒரே பக்கத்தில் வேழத்தின் பிளிறலாக, வேங்கையின் பாய்ச்சலாக - சிற்சில வற்றில் குயிலின் இசையாகப் பாடியுள்ளார்.

    படித்தால் உலகத் தலைவர்களின் அரிய பண்பு, வாழ்க்கை நிகழ்வுகளை, நம் முன் விதைக்கிறார் வேழவேந்தன் என்பது புரியும்.

    எடுத்துக்காட்டாக, இரண்டு, மூன்று கவிதைகள் இதோ
    பெரியாரின் அறிவுக்கூர்மை (பக்கம் 63) என்ற தலைப்பிலான கவிதையில்
    பொதுவுடைமைப் பூஞ்சோலை ரஷ்ய நாட்டைப்
    போய்ப்பார்த்துத் திரும்பியபின் குழந்தைக்கெல்லாம்
    புதுமையுடன் பெயர்சூட்டி, ரஷ்யா என்றும்
    புகழ் மாஸ்கோ என்றெல்லாம் அழைக்கச் சொன்னார்!
    இதுவென்ன? மண்பெயரா மழலை கட்கே?

    எப்படித்தான் ஏற்ப தென்றார் சிலரோ! அய்யா, சிதம்பரத்தைப் பழனியினை, மதுரை தன்னைத்திருப்பதியை ஏற்பதுபோல் ஏற்பீர்! என்றார்!

    எளிமைக்கே இலக்கியமான காமராசர்! (பக்கம் 115)

    என்ற கவிதையில் இரண்டாம் பத்தியில் உள்ள ஒரு செய்தி கவிதை வரிகளில்
    கோட்டைவிட்டு வீட்டுக்கே வந்த தோன்றல்
    குழுமிநின்ற பொதுமக்கள் குறைகள் கேட்டார்;
    கூட்டத்துள் இருந்த ஒரு பழைய தொண்டர்
    கும்பிட்டார்; கொண்டுவந்த ஓர் அழைப்பை
    நீட்டி, மகள் மணத்தை வந்து வாழ்த்த வேண்டும்;
    நெடுங்கால ஊழியன்நான்! எனநெ ளிந்தார்.
    கேட்டவுடன் வரஇயலா தென்னால்; சென்றே
    கிளைசூழ நடத்துங்கள்! முதல்வர் சொன்னார்.
    அன்றைக்குத் திருமணநாள்; அந்தத் தொண்டர்

    அதிர்ச்சிபெற எதிர்பாரா வகையில் ஆங்கே சென்றடைந்தார் பெருந்தலைவர்! வருகை நல்கும்

    செய்தியை ஏன் கூறவில்லை? கேட்டார் அன்பர்.
    அன்றைக்கே வருவதை நான் சொன்னால், நீங்கள்
    ஆர்ப்பாட்ட வரவேற்புச் செலவு செய்வீர்
    என்பதனால் கூறவில்லை! என்றார் செம்மல்!
    இருவிழிகள் குளமாக நெகிழ்ந்தார் தொண்டர்!
    கலைஞரின் சொல்விளையாட்டு (பக்கம் 141)
    அன்றைக்கு விழாஒன்றில் பங்கு கொள்ள
    அவசரமாய்ச் சாலைவழிப் பயண மானார்;
    சென்னையினைத் தாண்டியபின் சிற்றூர் ஒன்றன்
    சீர்ஊராட் சித்தலைவர் வழிம றித்தே
    அன்போடு நிறுத்தியபின் மாலை யிட்டார்;
    அடுக்கடுக்காய்க் கோரிக்கை தொடுத்துச் சொன்னார்;

    தன்பெயரில் கருணையையும் நிதியும் வைத்த தாராள முதல்வர்நிதி தருவார்! என்றார்.
    பலலட்சம் ஒரே ஊர்க்குக் கேட்ட வர்க்குப் பக்குவமாய் நம் கலைஞர் பதிலாய்ச் சொன்னார்;

    இலங்குகின்ற என் பெயரில் கருணை என்னும்

    எழிற்சொற்கோ மூன்றெழுத்து; நிதி என் றீங்கே
    சொலும்போதோ இரண்டெழுத்தே தேறும்! என்றால்
    சுடர்க்கருணை மிக அளிப்பேன் இன்று; பின்னர்
    நிலவுகின்ற நிதி நிலைமை ஆய்ந்தளிப்பேன்;
    நேரமிங்கே கடக்கிறதே! என்றார்; சென்றார்!

    அன்புடனும், உரிமையுடனும் இந்த கவிவேந்தருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்டுதல் நமது கசப்பான கடமை யாகும்.

    எமன் போன்ற கவிதை உவமைக்காகக்கூட கருத்துக்கள் - மூடநம்பிக்கையை புதுப்பிக்கும் வகையி ருப்பதால் கையாளாமல் தவிர்க்க வேண்டும்.

    பகுத்தறிவாளர்களும் நம் கவிஞர்கள் தானே; இப்படிப்பட்டவைகளை தவிர்த்திட புதிய படைப்பாளி களுக்கு புது உலகம் காட்ட வேண்டாமா?

    - கி.வீரமணி

    Read more: http://viduthalai.in/page-2/81433.html#ixzz33XGzJEcA

    தமிழ் ஓவியா said...


    உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்


    இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. புதுபுது நோய்களால் ஏராளமானோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டு உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம்.

    மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண் களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண் களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம் வரை இருக்கும். மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர் களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

    புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை. குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவை.

    அறிகுறிகள்: மாரடைப்பின் அறிகுறிகளை அடை யாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம்.

    நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம். மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

    தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம். எனவே நீரிழிவு நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    Read more: http://viduthalai.in/page-7/81408.html#ixzz33XHPpdbQ

    தமிழ் ஓவியா said...


    நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை


    பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும். அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

    கொய்யா இலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண் டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யா இலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்து விடும் சிறந்த உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல் சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களி லிருந்து பாதுகாக்கும்.

    தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுவவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

    கொய்யா இலையின் பயன்பாடுகள்

    நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக் கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப் படுத்தியுள்ளது. இது நீரிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சும் தன்மை கொண்டது.

    மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத் தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளன.

    குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட் கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு தன்மையை கொண் டுள்ளது.

    மேலும் இந்த கொய்யா இலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

    Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHiLve1

    தமிழ் ஓவியா said...

    தேங்காயில் புதைந்துள்ள சத்துகள்

    தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப் படுகிறது.

    தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி யுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

    மனிதனுக்கு அழகும் ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அருந்திய உடனேயே புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது, இளநீர். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில், தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது.

    சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந் துள்ளது.

    100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண் டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.

    புதிய இளநீரில் உள்ள நீரானது நீரிழிவு நோயை போக்க கூடியது. தாய்ப்பாலுக்கு இணையானது. தேங்காய் எண்ணெய் உடலை குளிர்ச்சியுடன் பாதுகாக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டுவதில் தேங்காய்க்கு நிகர் தேங்காய் தான். தேங்காய் பாலை மலமிளக்கியாகவும் சிறுநீர் கோளாறுகளுக்கும் எலும் புருக்கி நோய்க்கும் பயன்படுத்துகின்றனர்.

    Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHvdrwh