Search This Blog

11.6.14

உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்-பெரியார்

 (முஸ்லீம் மதத்தை பெரியார் ஆதாரித்தாரா? என்பது பற்றி முகநூல் மற்றும் பல இடங்களில் விவாதிக்கபட்டுக் கொண்டிருக்கிறது. அது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து பெரியார் என்ன சொல்லியுள்ளார் என்று தேடியதில் கிடைத்த செய்தியை உள்ளது உள்ளபடி அப்படியே பதிவு செய்து உள்ளோம். வினா? நம்முடையது, விடை:- பெரியாருடையது. ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள். நன்றி .-------------------------------தமிழ் ஓவியா)

வினா:-

அய்யா,மதங்கள் அனைத்தும் ஒழிய வேண்டும் என்று சொல்லும் நீங்கள்,முகமதிய மதத்தை ஆதரிப்பது ஏன்?

விடை:-

இந்து மதத்தை விட முகமதிய மதம் மேலானதே! ஏனெனறால் அதில் ஒற்றுமை சமத்துவம், விக்கிரகாராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன. அந்த மதம் இன்று துருக்கி, ஆப்கானிஸ்தானும் ஈஜிப்டு (எகிப்து)முதலிய நாடுகளை ஆட்சி கொண்டு வருகின்றது இவைகளையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுவதானாலும் இந்து வாயிருப்பதின் காரணத்தால்  தீண்டப்படதாவராகவும்,காணப்படாதவராகவும்,கடவுள் சந்நிதானத்தில் நிற்கப்படாதவராகவும் இருக்கின்ற ஆறறிவு படைத்து ஆண்டவனுடைய தூய திருக்கோயிலாக அடைய சரீரத்தைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதன் இந்து மதத்தை விட்டு முகம்மதிய மதம் புகுந்தானானால் அப்போதே சூரியனைக் கண்ட குமரி இருட்டு பறந்தோடுவது போல் மறைந்து போகின்றதென்பது மட்டும் உறுதி!உறுதி!!உறுதி!!!

இதையாராவது  மறுக்கின்றார்களா என்று கேட்கின்றோம். மற்றபடி  மேல்லோகமும் ஆண்டவன் சன்னிதானமும்; பாவமன்னிப்பும் இந்து மதத்தை விட முகமதிய மதத்தில் மிக்க சமீபமென்றோ மிக்க சுலபமென்றோ நாம் சிறிதும் ஒப்புக் கொள்வதில்லை. தவிர இந்து மதத்தில் இருக்கின்ற ஒரு சக்கிலியோ, பறையனோ,பள்ளனோ அன்றையதினம் இந்து மதத்தை விட்டு விட்டேன் என்று சொல்லுவானானால் அவை ஒருக்காலும் தொட்டுக்கொள்ளவோ,தெருவில் நடக்கவிடவோ பக்கத்தில் வர சம்மதிக்கவோ எவரும் ஒப்புக்கொள்வதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களிடம் தாழ்த்தப்பட்டவர்கள் மதத்தை விட்டு விடுவதனால் மாத்திரம் எப்படி சுதந்திரமடையக் கூடியவர்களாகி விடுவார்கள்?ஆனால் மகமதியர்களாகவோ கிறத்துவர்களாவோ ஆகிவிட்டால் கண்டிப்பாக சட்டத்தில் ஆட்சேபனை இல்லை என்பதுடன் சிறப்பாக மகம்மதியர்களாகி விட்டால் சட்டத்தில் ஆட்சேபனை இல்லாத்தோடு அனுபவத்திலும் ஆட்சேபனையில்லாமல் போய் விடுகின்றது.

பொதுவாக நமது இலட்சியம் சாதி மத வித்தியாசம் ஆகிய இரண்டும் ஒழிந்து அவைகளால் ஏற்படும் மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டுமென்பதாகும். மத வித்தியாசம் ஒழிகின்ற வரையிலும் சாதி வித்தியாசம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் மத வித்தியாசம் ஒழிய பாடுபட்டு கொண்டிருப்பதுடன் சாதி வித்தியாசம் ஒழியச் செய்ய வேண்டிய காரியங்களையும் கூட செய்து கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கிறது. ஆகவே அம்முயற்சியில் ஒன்றுதான் நாம் இப்போது மகமதிய மதத்தை தழுவியர்களை ஆதரிப்பதும்,பாராட்டுவதுமே ஒழிய வேறில்லை
                ------------------------- தந்தைபெரியார் -“குடிஅரசு”- “03-11-1929
**************************************************************************************
வினா:-


அய்யா,ஆதிதிராவிடர்களை, இஸ்லாம் மதத்தில் சேருங்கள் என்று தாங்கள் அறிவுரை சொன்னது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது? இது பற்றி தாங்கள் கருத்து என்ன?
விடை:-

ஆதிதிராவிடர்களை நான் இஸ்லாம் மத்தில் சேருங்கள் என்று சொன்னதிற்காக ஆனேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள்.அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை சொல்வதைச் கிரகிக்கச் சக்தியும் இல்லை சிலருக்குத் தங்கள் மேன்மை போய் விடுமே- தக்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல என்னவும் ஏனெனில் மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது ஆத்மார்த்தத்திற்கேர் கடவுளை அடைவதற்கோ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதிதிராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது,சக்தியாகிரகம் செய்வதுபோலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்

இனியும் சொல்கின்றேன் சட்டம் செய்வது இஷ்டம்,செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம் செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம் இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கும் ஆனால் ஆதித்திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ, துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கும் ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் வித்தகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? யாருக்கும் எவ்விதக்  கஷ்டமும் இல்லாமல் வேண்டுமானால் எவ்வித மனமாறுதல் கூட இல்லாமல், தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் சொன்ன ஆசையும்  அவசரமும் பட்ட ஒரு மனிதன் மாலை 5 மணிக்கு இஸ்லாம் மதக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் சொல்லி, 5-30 மணிக்கு தீண்டாதவன் என்கின்ற இழிலிருந்து மீண்டும் தெருவில் நடக்க உரிமைபெற்று மனிதனாவதில் என்ன மற்றவர்கள் ஆட்சேபிக்க  வேண்டும்? கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100-க்கு 90 மக்கள் என்னென்னமோ_ அவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருந்து இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்.
------------------------தந்தைபெரியார் -“குடிஅரசு”-02-08-1931

9 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......


வால்மீகி ராமாயணத் தில் பாலகாண்டம் 18 ஆவது சர்க்கத்தில் இராமன் பிறந்த நாள்,

நட்சத்திரம் அப்போதி ருந்த கிரக நிலைகள் ஆகியவற்றைக் குறிப் பிட்டு ஜாதகம் கணித் திருக்கிறார் வால்மீகி.

சித்திரை மாதம் வளர் பிறை நவமியில் ஆதித்ய வாரத்தில், மாத்யானிக வேளையில், புனர் வஸு நட்சத்திரம் 4 ஆம் பாதம் சந்திரன் ஆட்சியி லும், குரு உச்சத்திலும் அமைந்த கடக ராசியில், கடக லக்னத்தில் ஸ்ரீராமன் ஜனனம்.

கிரஹமாலிகா ஜாத கம், குரு, சந்திர யோகம், சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி உச்சம், இத் தகைய ஜாதகர்கள் மனி தருள் தெய்வமாக மதிக் கப்படுவார்கள் என்று பிர ஹத் ஜாதகம் கூறுகிறது.

- சக்தி, விண்மணி,

இந்த ஜாதகப்படி இராமன் தெய்வமாக மதிக்கப்படுவார் என்று கூறுவது உண்மை என் றால், இராமன் ஏன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றான்? சராயு நதி யில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான்?

Read more: http://viduthalai.in/e-paper/81950.html#ixzz34Nn4cgPc

தமிழ் ஓவியா said...


தமிழ் கட்டாய மொழிப்பாடம் என்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்


சென்னை, ஜூன் 11_ அடுத்த கல்வியாண்டில் (2015_20-16) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலி யுறுத்தினர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் சார்பில் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கட்டாய மொழிப்பாடமாக தமிழ் என்ற தலைப்பில் கருத்த ரங்கம் சென்னையில் திங் கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில், தமிழைக் கட்டாய மொழிப் பாடமாக பத்தாம் வகுப்புத் தேர்வில் எழுதச் செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு உறுதியுடன் எதிர் கொண்டு வரும் 2015--_2016-ஆம் ஆண்டில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக பயிலுவதையும், தேர்வு எழுதுவதையும் உறுதி செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத் துக்குமரன் பேசியதாவது: தமிழகத்தில் வசிப்பவர் கள் தமிழ் படிக்க வேண் டும் என்று சொல்வதற்கு நீதிமன்றமோ, சட்டமோ தேவையில்லை.

அடுத்ததாக, தமிழ் இலக்கியத்தை ஏன் படிக்க வேண்டும் என்றால் ஒரு மொழியின் இலக்கியத் தைப் படித்தால்தான் அந்த மக்களைப் புரிந்துகொள்ள முடியும். தமிழர்களின் பழக்க வழக்கங்களைப் புரிந்து கொள்ளவேண்டு மானால் தமிழ் இலக்கியங் களைப் படிக்கவேண்டும்.

நம்மை நாம் புரிந்து கொள்வதற்கும், இங்கு வாழ்வதற்கும் தமிழ் படிக்க வேண்டியது அவசியம்.

இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையைப் பெற ஆங்கிலம் மட்டும் தெரிந் தால் போதாது. ஆங்கிலேய பண்பாட்டைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருந் தால்தான் குடியுரிமையைப் பெற முடியும்.

தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருப்பதை உறுதிசெய்யக் கோரி இந்தக் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை நாம் மீண்டும், மீண்டும் வலி யுறுத்த வேண்டும் என்றார் அவர்.

சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பொற்கோ: பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்திய தால்தான் தமிழ் கட்டாய மொழிச் சட்டம் இயற்றப் பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான துணிச்சல் தனியார் பள்ளிகளுக்கு எங்கிருந்து வந்தது? தமிழ் பயிற்றுமொழிதான் நமது இலக்கு. தமிழைப் பயிற்று மொழியாக்குவதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்தவேண்டும். இத்தனை ஆண்டுகாலம் போராடியும் தமிழ் கட் டாய மொழி சட்டம் மட் டுமே இயற்ற முடிந்துள் ளது. அதையும் எதிர்ப் பதை எப்படி அனுமதிக்க முடியும் என்றார் அவர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு:

தமிழ் கட்டாய மொழிப் பாட சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடுத்துள்ள வழக் கில் கருநாடகத்துக்கு எதி ராக அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட் டியுள்ளனர். அந்த வழக்கு பயிற்று மொழி தொடர் பான வழக்கு. இது கட் டாய மொழிப்பாடம் தொடர்பானது. அந்த வழக்கில் அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டு பயிற்று மொழி முடிவு அமல்படுத்தப்பட்டது.

ஆனால், இங்கு தமிழ் கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்கிற சட்டம் 2006-இல் நிறை வேற்றப்பட்டு, அதற்கான செயல்வழிமுறைகளையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு வகுப் பாக எட்டு ஆண்டுகளில் இந்தச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத் தப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண் டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தச் சட்டம் அமல் செய்யப்பட உள்ள நிலையில், இப் போது இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள் ளது.

இதுவரை இந்தச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/81951.html#ixzz34NnCmQs2

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை- பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- (குடிஅரசு, 25.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/81958.html#ixzz34NnOi5Gx

தமிழ் ஓவியா said...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூடாதா?



வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தி யாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பட்டியலினத்த வருக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறை கள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை ஆய்வு செய்ய இளையபெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1989 இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995 இல்தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

இவ்வளவுக் காலதாமதமாக இந்தச் சட்டம் நடை முறைக்கு வந்தபோதிலும் இன்றும் இதனை நடைமுறைப் படுத்துவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர்.

மக்கள் தொகையில் 20 விழுக்காடு இருக்கும் தாழ்த்தப்பட்டோர், அதிக எண்ணிக்கையில் இருக்கும் உயர்ஜாதியினரின் கொடுமைகளைப்பற்றி புகார் கொடுக்கும்போதுகூட அதை தங்களது ஜாதிக்கு எதிரானதாக புகார் பெறும் அதிகாரிகள் பார்க்கின்றனர்.

இதன் காரணமாக பல்வேறு தளங்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் வெளியுலகிற்கு வராம லேயே போகின்றன. நேர்மையான அதிகாரிகளை நியமித் தாலும் அரசியல் தலையீடு அந்த அதிகாரிகளைத் தங் களின் பணிகளைச் சரிவர செய்ய அனுமதிப்பதில்லை.

கிராமங்களில் மட்டுமா? மதுரை அரசு மருத்துவ மனையில் குறிப்பிட்ட சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருக்கும் மருத்துவப் பேராசிரியர், சக மருத்துவர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானதை டி.என்.ஏ. என்ற ஆங்கில நாளிதழ் மே 30 ஆம் தேதி செய்தியாக வெளியிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கர்ணன் அவர்களே, தான் அவமதிக்கப்படுவது குறித்து கூற வில்லையா?

தீண்டாமை ஒழிக்கப்படுகிறது - எந்த வடிவில் அது கடைப்பிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (17 ஆவது பிரிவு).

இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன. இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு கண்ணாடித் தம்ளர்கள் இருக்கத்தான் செய்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஒரு பள்ளியின் கல்வெட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் பெயர் இருந்ததால், ஆத்திரப்பட்ட உயர்ஜாதி ஆணவக்காரர்கள் அந்தப் பெயரைத் தார் கொண்டு அழித்திருக்கின்றனர்.

இந்தியா முழுமையும் எடுத்துக்கொண்டால்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தீண்டாமைக் கொடுமைபற்றிய புள்ளி விவரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் 8061, ராஜஸ்தானில் 5235, மத்தியப் பிரதேசத்தில் 4503, தமிழ்நாட்டில் 3505, ஆந்திரப்பிரதேசத்தில் 2088, குஜராத்தில் 1452, கருநாடகாவில் 1409, ஒரிசாவில் 1100, பிகாரில் 955, மகராஷ்டிராவில் 573, அரியானா 243.

இவை 2011-2012 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் - எடுத்துக்காட்டுக்காகக் குறிப்பிட்டுள்ளோம்.

உண்மைகள் நிதர்சனமாக இவ்வாறு இருக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதன் நோக்க மென்ன?

தமிழ் ஓவியா said...

இந்தச் சட்டம் சுயநலத்துக்காகப் பயன்படுத்தப்படு வதாகக் கூறப்பட்டுள்ளது; எந்தச் சட்டத்தையும் இந்த வகையில் பயன்படுத்தலாம். கொலைக்கே சம்பந்த மில்லாதவர்களைக்கூட பழிவாங்கும் நோக்கத்தோடு சாட்சிகளைப் புனைந்து வழக்குத் தொடுக்கப்படுவது கிடையாதா?

தந்தை பெரியார் அவர்களாலும், அவர் கண்ட இயக்கத்தாலும் விழிப்புணர்வு உண்டாக்கப்பட்ட தமிழ் மண்ணில்கூட, தருமபுரிகள் நடந்திருக்கின்றன. தாழ்த் தப்பட்ட ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதற்காக ஒரு கிராமமே எரிக்கப்படவில்லையா?

உண்மையிலேயே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த - தேவையில்லாத அளவுக்கு மக்களிடத்தில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை ஆக்க ரீதியான செயல்பாடுகளை முன்னிறுத்துவதுதான் முற்போக்கான சிந்தனையாக, தீர்வாக இருக்க முடியும்.

அதை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனம் ஆகாது.

இன்னும் தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப் பட்டவர்களும் சரி, பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியினரும் சரி நம் நாட்டுக் கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியுமா? இது இன்னொரு வகை தீண்டாமை அல்லவா?

மிகவும் அவசியமான இதுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தீண்டாமையை விசிறிவிடும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

Read more: http://viduthalai.in/page-2/81960.html#ixzz34NnYGQr9

தமிழ் ஓவியா said...


மருத்துவர்களுக்கு பிறகு நோயாளிகளை பாதுகாப்பது செவிலியர்கள்தான் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி தமிழர் தலைவர் பாராட்டு


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, ஜூன் 11_ திருச்சி திருவெறும்பூரில் தந்தை பெரியார் முழு உருவ சிலை நிறுவப்பட்ட இடத்தில் பெரியார் படிப்பகமும், பெரியார் மருத்துவமனையும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் கீழ் செவி லியர்களுக்கான மருத்துவ பயிற்சி வகுப்புகள் நடை பெற்று வருகின்றன.

ஓராண்டு பயிற்சிக் கான 2013-_2014 கல்வி ஆண் டில் 40 மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 29 பயிற்சி முடித்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன்.10) பெரியார் மருத்துவமனை யில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கி உரையாற்றும் போது: செவிலியர் பணி என் பது நோயாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவர்கள் கூட அவ ரது பணிகளை முடித்து விட்டு சென்றுவிடுவார் கள்.

ஆனால், செவிலியர் கள் அந்த நோயாளிக ளுக்கு அனைத்து உதவி களை செய்துகடைசி வரை உதவி வருபவர்கள் செவிலியர்கள் தான். பெரி யார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர் கள் மலர்ந்த மலர்களாகி யிருக்கிறார்கள்.

செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

செவிலி யர்கள் பயிற்சி பெற்றது டன் நமது மருத்துவமனை யில் தொண்டாற்றியது டன் பொதுமக்களுக்கும் சிறந்த சேவை செய்ய வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் கடவுளை மற! மனிதனை நினை! என்று. அவர் செய்த தொண்டின் மிக முக்கியமானது மனித தொண்டு. இம்மனித தொண்டினை சிறப்பாக செய்து வரும் உங்களை பாராட்டுகிறேன் என்று பேசினார்.

முன்னதாக இப்பயிற்சி வகுப்பில் பயின்று சான் றிதழ் பெறும் மாணவிகள் சார்பில் மருத்துவமனை வளாகத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அருள்மொழி மாலை அணிவித்தார்.

இதில் மருத் துவர் ஜான்போஸ்கோ, பெரியார் கல்வி நிறுவனங் களின் ஒருங்கிணைப்பா ளர் பேரா.ப.சுப்ரமணியன், மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர் உள்பட அனை வரும கலந்து கொண்ட னர்.

இந்நிகழ்ச்சியில் மண் டல தலைவர் ஞா.ஆரோக் கியரார், பெல் தி.தொ.க. தலைவர் ம.ஆறுமுகம், செல்வம், சிங்கராஜ், விடுதலை கிருட்டிணன், காமராஜ், கனகராஜ், சங்கிலிமுத்து, பழனிவேல், தங்கப்பன், கருத்தகண்ணு, கருணாநிதி, கென்னடி, பாஸ்கர், பன்னீர்செல்வம், அசோகன், பால்சாமி, ஆசைத்தம்பி, திருவரங்கம் நகரத் தலைவர் மோகன் தாஸ், இளைஞரணி தோழர்கள் சண்முகம், தமிழ்ச்செல்வம், இளந் தமிழன், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மருத்துவ மனை ஊழியர்கள் புவ னேஸ்வரி, செல்வி,விமலா ஆகியோர் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் செவி லியர் படிப்பில் பயிற்சி பெற்று முதல் மதிப்பெண் களை பெற்ற கழகத் தோழர் ஜெயில்பேட்டை தமிழ்மணியின் சகோதரி இளையராணி ஆவார்.

அவர் இம்மதிப்பெண் பெற்றமைக்காக நாகம்மை குழந்தை இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Read more: http://viduthalai.in/page-8/81991.html#ixzz34NoU76Gz

தமிழ் ஓவியா said...





காலங் கடந்த ஞானோதயம்!

பிஜேபிவெற்றிபெற்றதுஎப்படி?

சமூகம் பிளவுபட்டதால் ஏற்பட்ட விளைவு!

டில்லி, ஜூன் 12-_ வகுப்புரீதியில் சமூகம் பிளவுபட்டதால் மக்க ளவைத் தேர்தலில் பாஜக நல்ல பலனை அறுவடை செய்தது என மாநிலங் களவையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள் ளது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன் னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் பேசிய தாவது:

தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சி யானது திட்டமிட்டு மத ரீதியில் சமூகத்தை பிளவு படுத்தியது. மேம்பாட்டுக் கொள்கைகளை முன் வைத்து அது தேர்தலில் வெற்றி பெறவில்லை. சமூகம் பிளவுபட்டதால் பாஜக நல்ல பலன் பெற்றுள்ளது. நல்ல நிர்வாகம் வழங்குவதிலும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என் றார் ஜெய்ராம் ரமேஷ்.

திரிணாமுல் காங்கிரஸ்

மக்கள் நல கொள் கைகளிலிருந்து அரசு விலகிச் சென்றால் அதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கும் என்றார் அக் கட்சியின் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய். முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்வது அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

சந்தன் மித்ரா (பாஜக):

அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் யோச னைகளை மோடி அரசு அப்படியே காப்பி அடிப் பதாக கூறுவது தவறா னது. சாமானியர்களின் கனவுகளை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது மோடி அரசு

டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)

காவிரி உள்பட நதி நீர் பிரச்சினைகளுக்கும் மாநிலங்களுக்கு இடையே யான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண எல்லா மாநிலங்களையும் அழைத் துப் பேச அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங் கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண் டும். இதை செய்யாமல் மீனவர் பிரச்சினையில் நியாயம் கிடைக்க வழி காண முடியாது.

இலங்கைத் தமிழர் களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்யவேண்டும். ஒரு கட்சியின் கொள்கை அடிப்படையில் அல்லா மல் தேசிய அளவில் கருத் தொற்றுமை கண்டு அதனை அடித்தளமாக கொண்டு வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டும்.

இந்தியாவில் கல்வி தனியார் மயமாக்கப்படு கிறது. தனியார், அரசு பங்கேற்புடன் கல்வித்திட் டத்தை அறிமுகப்படுத்து வது வியாபாரமாகும். இதை 12-ஆவது அய்ந் தாண்டுத்திட்டத்தில் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். நவீன தாரா ளமய கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால் நாட்டில் தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண் டும்.

திருச்சி சிவா (திமுக)

நதிநீர் பங்கீடு தொடர் பான பிரச்சினை, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர் கள் வேதனை போன்றவை பற்றி குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாதது ஏமாற்றம் தருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் மறுவாழ்வு நடவடிக் கைகள் பற்றிய கொள்கை எதுவும் இந்த உரையில் அறிவிக்கப்படவில்லை.

தில்லுமுல்லு செய்து குறுக்கு வழியில் மக்கள வைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதாக இந்த விவாதத்தில் சிவா குறிப்பிட்டதற்கு அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சைபுதீன் சோஸ் (காங்கிரஸ்), அஸ் வனி குமார் (காங்கிரஸ் ) ஜி.என்.ரத்தன்புரி (தேசிய வாத காங்கிரஸ்), பிர மோத் மகாபாத்ரா (சுயேச்சை), ரண்பீர்சிங் பிரஜாபதி (இந்திய லோக் தளம்)உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்ற னர்.

Read more: http://viduthalai.in/e-paper/82013.html#ixzz34Taes2w9

தமிழ் ஓவியா said...

திருவவதாரம்

வைகையாற்றங்கரையில் மதுரை மாநகரத்திலி ருந்து ஏழு கி.மீ. தொலை வில் திருவாதவூர் என்ற தலம் உள்ளது. இத்தலத் தில் இறைவன் வாதபுரீசு வரர் என்னும் திருநாமத் தோடு எழுந்தருளியுள் ளார். இத்தலம் வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என வழங்கப் பெறுகிறது. இந்நகரில் அமாத்திய அந்தணர் குலத்தில் சிவநெறி பிற ழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாதா சிருதர்.

அவர் மனைவியாரின் பெயர் சிவஞானவதி என் பதாகும். இவ்விருவரும் இல்லறம் வழுவாது ஒழுகி வரும் நாளில் தென்னாட்டில் புறச் சமய மாகிய புத்தம் மேலோங்கி இருந்தது. சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறை வன் திருவருளால் இவ்விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்கவும் திருமகனார் ஒருவர் திரு அவதாரம் செய்தருளினார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து அம்மகனார்க்கு திருவாதவூரர் என்னும் திருப்பெயர்ச் சூட்டினாராம்.

மத மாற்றம் உள் ளிட்ட பிரச்சினைகளில் கூட கடவுள் தலையிடு வாரோ!

மதத்தைத் தாண்டி கடவுள் இல்லை என்கிறபோது கடவுள் மதத்தின் கைக்கருவி ஆகி விடவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/82012.html#ixzz34TarP8u0

தமிழ் ஓவியா said...


இராணுவ தளபதி சர்ச்சை சூடு பறக்கிறது!


மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்த நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி வி.கே. சிங்குக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பதவி ஓய்வுக் குப்பின் பிஜேபி.யில் சேர்ந்தவருக்குத் தேர்தலில் நிற்கவும் வாய்ப்புக் கொடுக் கப்பட்டது.

இராணுவம் போன்ற அதி முக்கிய துறைகளில் மிக உயர்ந்த பதவியை வகித்தவர் ஓர் அரசியல் கட்சியில் சேர்வதும், அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிப்பதும், தேர்தலில் வென்றபின் அமைச்சர் பதவி கொடுப் பதும் ஒழுங்குமுறைதானா? இராணுவத் துறைமீது அரசியல் வண்ணம் படியும் நிலை ஏற்படலாமா என்ற சர்ச்சை ஒரு பக்கம். (இவர் வயதுப் புகாரில் சிக்கிய வரும்கூட!)

அமைச்சரவையில் இடம் பெற்ற வி.கே. சிங் சும்மா இருக்கவில்லை; முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் போது இந்தியாவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட தல்பீர்சிங் சுஹாக்கைப்பற்றி டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதனை மிகவும் மோசமான நிலைப்பாடு என்று குற்றஞ் சாட்டினர். வி.கே. சிங் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லியோ அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி பதவியில் தொடர் வார்; மாற்றம் என்ற பேச்சுக்கே இட மில்லை என்று கூற முடிந்ததே தவிர, இந்தியாவின் இராணுவத் தளபதி பற்றி கடுமையான விமர்சனம் செய்த அமைச் சரின் நிலைப்பாடு குறித்து ஏதும் பேச வில்லை.

இதற்கிடையே இராணுவத் தளபதி தல்பீர்சிங் சுஹாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத் திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத் தில் தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் இது. இது எப்படி நடந்தது என்று இராணு வத்துறை செயலாளர் ஆர்.கே. மாத்தூர் உட்பட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளாராம், பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி.
தொடக்கமே குழப்பக் கூத்து சும்மா தூள் பறக்கிறது - போகப் போக என்னென்ன நடக்குமோ - யார் கண்டது?

Read more: http://viduthalai.in/e-paper/82016.html#ixzz34Tb47Ek5