Search This Blog

15.6.14

ஜெர்மனியில் பெரியார் குரல்


மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர். புரட்சிக் கவிஞரின் தொலைநோக்கு - தொலை நோக்காளர் தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு துல்லிய மாகவே அமைந்து விட்டது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு  (Periyar International) அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1994இல் (நவம்பர் 13) தொடங்கப்பட்டது.

அன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி. வீரமணி சமூக நீதி மய்யத்தின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சந்திரஜித் (யாதவ்) அந்தத் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

அமெரிக்க வாழ் தமிழர்களான டாக்டர் சோம. இளங்கோவன் பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத் தின் அலுவலரான சின்காவும் அவ்விழா வில் சிறப்பாகப் பங்கேற்றார்.

தந்தை பெரியார் தத்துவங்களைப் பாரெங்கும் பரப்பிடும் இந்த நிறுவனம்.
சமூக நீதிக்காகப் பாடுபடுவோரை அடையாளம் கண்ட அவர்களுக்கு சமூக நீதிக்கான வீரமணி விருதும் ரூபாய் ஒரு லட்சமும் அளித்து ஊக்குவிக்கும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு தந்து (மண்டல் குழுப் பரிந்துரைப்படி) புதுவாசல் திறந்த சமூக நீதிக் காவலர் பிரதமர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களுக்கு முதல் விருது அளித்து அமைப்புப் பெருமிதப்பட்டது. (24.12.1996) தொடர்ந்து சமூக நீதி மய்யத்தில் தலைவரும் முன்னாள் மத்திய அமைச் சருமான சந்திரஜித் யாதவ் (15.5.1998); அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரி (25.12.1998); உத்தரப் பிரதேச முதல்அமைச்சர் செல்வி மாயாவதி (1.10.2000); சிங்கப்பூர் பெரியார் பெருந் தொண்டர் சு.தெ. மூர்த்தி (27.12.2002); மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் (2.12.2003); ஓய்வு பெற்ற ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.ஏ. சாமி (9.1.2005); தமிழக முதல் அமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி (7.9.2008); கருநாடக மாநில சமூக நீதிப் போராளி மூத்த வழக்குரைஞர் இரவி வர்மகுமார் (4.11.2009); அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி (9.1.2011). பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் ஆந்திர மாநிலம் அனுமந்தராவ் (5.12.2012) மராட்டிய மாநிலப் பொதுப் பணித்துறை அமைச்சர் ஜகன்புஞ்பல் (11.1.2014) ஆகி யோருக்குப் பெரியார் பன்னட்டு மய்யத்தின் சார்பில் சமூக நீதிக்கான விருதும் நிதியும் அளிக்கப்பட்டன.

சமூக நீதித் திசையில் இந்த விருது உன்னத மானதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் சிகாகோவில் உருவாக் கப்பட்ட இந்தப் பெரியார் பன்னாட்டு மய்யம் இங்கிலாந்து, பிரான்சு, மியான்மர், சிங்கப்பூர், துபாய், குவைத் முதலிய நாடுகளில் சிறப்பாக இயங்குகிறது. ஜெர்மனியில் உள்ள சில பல்கலைக் கழகங்களின் அழைப்பினை ஏற்று தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்கம் குறித்தும் ஆய்வின் சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு  கி. வீரமணி அவர்கள் முத்தாய்ப்பாக ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் கிளையினையும் துவக்கிப் புதிய பொன் னேட்டை   உருவாக்கிய (6.6.2014).

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு மய்யத் (ஜெர்மனி கிளை)  தலைவர் பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் திரு. சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் உள்ளனர்.
ஜெர்மன் கிளையின் தலைவராக பேராசிரியர் டாக்டர் யுர்லிக் நிக்லசு, துணைத்தலைவராக சுவன்வோர்ட், செயலாளராக கிளவுடியா வெப்பர் ஆகியோர் பொறுப் பேற்றுக் கொண்டனர்.

புதிதாகப் பொறுப்பேற்ற கல்வியில் சிறந்த இம்மாமணி களுக்குப் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் புரவலர் கி. வீரமணி அவர்கள் சால்வைகள் அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தமிழர் தலைவரின் ஜெர்மன் சுற்றுப் பயணத்தில் இன்னொரு கூடுதல் சிறப்பு -அங்கு ஓர் இணையருக்கு ஜாதி மறுப்பு- சுயமரியாதைத் திருமணமான வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்து, தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, பெண்ணுரிமை, வாழ்வியல் சிந்தனைகளைக் கொட்டி முழங்கினர்.
1932இல் தந்தை பெரியார் சென்ற ஜெர்மன் நாட்டுக்கு அவரின் சீடரும் சிறந்த  மாணாக்கருமான மானமிகு கி. வீரமணி அவர்கள் 82 ஆண்டுகளுக்குப் பிறகு, அறிவுலக ஆசானின் கொள்கைகளைப் பரப்பிடச் சென்றார் - வெற்றிகரமாக அந்தக் கடமையை நிறைவேற்றினார் என்பது சாதாரணமானதல்ல.


தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர்களின் கொள்கைகளை அகிலப் பரப்புக்கெல்லாம் அவரின் நம்பிக்கைக்குரிய சீடர் ஆசிரியர் பரவ வகை செய்ததன் மூலம் அய்யாவின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார்.
தலைவர்களுக்குப் பிறகுச் சீடர்கள் பிரச்சாரகர்கள், பொறுப்பாளர்கள் அமைவது நம் நாட்டில் பெரும்பாலும் இல்லை. அதில் விதி விலக்குதான் நமது தலைவர் ஆசிரியர் ஆவார். தந்தை பெரியாரின் கொள்கையை, புகழை உலகம் அறியச் செய்யும் ஆசிரியர் அவர்களுக்குத் தமிழுலகம் திராவிடர் இயக்க உலகம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது.


மதவாதம் மனித குலத்தை வதம் செய்து கொண்டிருக்கும்  கால கட்டத்தில், மதமற்ற ஒப்புரவு உலகம் ஒன்று தேவைப்படும் தருணத்தில் அதற்குச் சரியான மருத்துவ மூலிகை மருந்தாய் அமைந்ததுதான் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுத் தத்துவம் சுயமரியாதைச் சூரணம்!
அதனை உலகப் பந்து முழுவதும் கொண்டு செல்லும் தந்தை பெரியார் அவர்களின் தலையாய மாணவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்குப் பகுத்தறிவு உலகம் நன்றிக் கடன்பட்டுள்ளது.

----------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 14-06-2014 “விடுதலை” ஞாயிறும்லரில் எழுதிய கட்டுரை


வாழ்க பெரியார்! வாழ்க ஆசிரியர்!!
ஜெர்மனியில் தமிழர் தலைவரின் உரைகள் ஜெர்மனியின் கொலோன்  பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களின் அழைப்பையேற்று சென்ற பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் ஜெர்மனி கொலோன் மய்யப் பகுதியில் உள்ள நியூ மார்க்கெட்  ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பொது மக்களிடையே “The Dravidian Movement and Periyar’s ideology of Rationalism” அதாவது, திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுத் தத்துவ கொள்கை களும் மற்றும் பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்து தன் னுடைய சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஜெர்மனியில் சுய மரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து சுயமரியாதைத் திருமணத் தின் தத்துவம் பற்றியும் உரை யாற்றினார், மற்றொரு நிகழ்வில் தந்தை பெரியாரின் வாழ்க்கை லட்சி யங்கள், சாதனைகள் குறித்து உரை நிகழ்த்தினார்.

35 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

பார்ப்பனத்தனம்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். ஆனால் இன்னம்பர் என்ற திருத்தலத்தில் இறைவனே எழுத்தறிவிக்கிறான். திருநாவுக்கரசர், தனது பதிகத்தில் எண்ணும் எழுத்தும் கொல் ஆனாய் போற்றி என்று ஈசனை போற்றுகிறார்.

தமிழ் இலக்கணத்தில் சிறப்புற்று திகழ்ந்தவர் குறுமுனி அகத்தியர். ஆனால் அந்த அகத்தியருக்கே தமிழ் இலக்கணத்தை எடுத் துரைத்தவர் திரு இன்னம் பரில் எழுந்தருளியிருக்கும் ஈசனாம்.

அகத்தியர் கதை இருக் கட்டும்; அந்த அகத்திய ருக்கே தமிழ் இலக்க ணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். இன்னம் பரில் வீற்றிருக்கும் ஈசன் என்பது உண்மையானால் தமிழில் அர்ச்சனை செய் தால் அந்த ஈசன் தீட்டுப் பட்டுப் போய்விடுவான் என்பது அசல் பார்ப்பனத் தனம் தானே?

Read more: http://viduthalai.in/e-paper/82132.html#ixzz34fHFT35x

தமிழ் ஓவியா said...


எடுத்துக்காட்டாகிய புனே மக்கள்


பூனா தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் பூனா தொழில்நுட்பப் பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார். பலியான மொசின்மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சமூகவலைதளமான முகநூலில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது பூனா நகரில் பதற்றத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, முகநூலில் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கினர். இந்நிலையில் பூனாவில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது.

ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லீம் வாலிபர் மொசின் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார். கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் பாதுகாப்பை மிகவும் உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அப்பகுதி மக்கள் மதங்களைக் கடந்து அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உண்மையிலேயே இது ஓர் எடுத்துக்காட்டான முயற்சியாகும். இந்த வகையில் மற்ற மற்ற பகுதிகளுக்கும் பூனா வழிகாட்டுகிறது. மனிதனை இணைக்கத்தான் ஏற்பாடுகள் தேவையே தவிர பிரிப்பதற்கும், பிளப்பதற்கும் அல்ல.

புனே பகுதியில் முஸ்லிம் பெரு மக்கள் மேற்கொண்ட அணுகுமுறை அதற்கு ஒத்துழைத்த அனைத்துக் கட்சிப் பொது மக்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!

தழைக்கட்டும் மனித தர்மம்! தகரட்டும் - மனுதர்மம்

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/82136.html#ixzz34fHgYdFk

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.

- (விடுதலை,20.9.1964)

Read more: http://viduthalai.in/page-2/82133.html#ixzz34fHt5rhj

தமிழ் ஓவியா said...


மணம் பரப்பும் பாலைப்பூக்கள்!

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

அதுவென்னவென்று கேட் கிறீர்களா? (இளம் நண்பர்களுக் காக) 1940-இல் இலண்டன் பெரும் பொறுப்பு - பதவியேற்கச் சென்ற திராவிடர் தளபதி என்று தந்தை பெரியார் அவர்களால் அன் பொழுக அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் ஹனி பால் என்ற விமானத்தில் சென்ற போது அதனையே விழுங்கிய கடல் ஓமான் கடல் என்பதே அந்த மறக்க முடியாத வேதனை!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு பாகவி பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!
வீதியினில் திரிகின்ற
மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!
சாதியின் பிரிவினையை
சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/82139.html#ixzz34fI9hDPx

தமிழ் ஓவியா said...

குருதிக் கொடையாளர் நாள்


இன்று உலகெங்கிலும் குருதிக் கொடையாளர் நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.

அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினா லேயோ அல்லது வேறு ஏதாவது நோயி னாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை அளிக்கப் படும் போது, அங்கு தேவைப்படுவது குருதி.

அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்கிறோம். இன்று நம்மில் 20-30 விழுக்காட்டினர் மட்டுமே குருதிக் கொடையினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் குருதிக் கொடை யளித்து உயிர் காக்கும் மகத்தான தொண் டினைச் செய்து வருகின்றனர்.

நம்மில் அநேகம் பேர் குருதிக் கொடையளிப்பது என்றாலே பயந்து காத தூரம் ஓடுகின் றோம். குருதிக் கொடை பற்றிய விழிப் புணர்வு இன்மையே இதற்கு காரணம். நாம் எழுதுவதன் மூலம் இந்த எண் ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். இரத்த தானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத் தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் கொடை யாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக் கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. குருதிக் கொடையளிப்பவர்கள் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

குருதிக் கொடையளிப்பதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே குருதிக் கொடை செய்வ தால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

குருதிக் கொடையளிப்பதற்குத் தேவையான தகுதிகள்:

குருதிக் கொடை செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 - 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.

குருதிக் கொடை செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் குருதிக் கொடையளிக்க தகுதியுடையவர்கள்.

குருதிக் கொடையளிக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:

தமிழ் ஓவியா said...

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட் டவர் எனில் குருதிக் கொடையளிப் பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்

முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் குருதிக் கொடை யளிப்பதை தவிர்க்க வேண்டும்.

குருதிக் கொடையளிப்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:

மாதவிடாய் காலங்களில் குருதிக் கொடையளிப்பதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை குருதிக் கொடையளிப் பதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் குருதிக் கொடை யளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

குருதி வங்கியும் அதன் செயல்பாடுகளும்:

கொடையாகப் பெறப்பட்ட குருதியைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவமனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் குருதி வங்கிகள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

குருதிக் கொடையளிப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு குருதிக் கொடையளிப்பது நல்லது. அதே போன்று குருதிக் கொடை செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

குருதிக் கொடையளிப்பவர் நன்கு உணவு உண்ட பிறகே குருதிக் கொடை செய்யவேண்டும். குருதிக் கொடை செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். குருதிக் கொடை தொடர்ச்சியாக வழங்க விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே குருதிக் கொடை செய்ய வேண்டும். குருதிக் கொடையளித்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலை களைத் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. குருதிக் கொடை செய்ய வருபவரிடமி ருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட குருதி, குருதி வங்கிகளில் குளிரூட்டப் பட்டுபாதுகாக்கப்படுகின்றது.
சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலி ருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாது காக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

தூய இரத்தம் 35 நாட்கள்

இரத்தச் சிவப்பணு 42 நாட்கள்

இரத்தத் தட்டுக்கள் 5 நாட்கள்

பிளாஸ்மா ஓராண்டு

குருதிக் கொடை செய்தவர்களின் குருதி ஆய்வு செய்தபிறகே நோயாளிக் குச் செலுத்தப்படுகின்றது. குருதிக் கொடை செலுத்தப்படுவதற்கு முன் அந்த குருதி நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படு கின்றது. வாருங்கள்! குருதிக் கொடையளித் திடுவோம்! குவலயத்து மாந்தர்களை காத்திடுவோம்!

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/82141.html#ixzz34fIgRaKy

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு


தமிழ்நாடு பத்திரிகையில் ஆலயப் பிரவேசம் என்ற தலைப்பில் வரும் விஷயங்களுக்கும் திரு. தண்டபாணி பிள்ளையின் பேரால் வரும் சுயமரியாதைச் சரித்திரம் என்னும் விஷயங் களுக்கும், திரு. கீர்த்திவாசய்யர் நாம் குடிஅரசில் ஆலயப் பிரவேசம் என்னும் தலைப்பின் கீழ் எழுதினவைகளில்தான் ரயில் சார்ஜ் வாங்கினதை மாத்திரம் மறுத்திருக்கும் விஷயத்திற்கும், பொதுவாக இப்படி ஒரு கூட்டம் ஏன் இந்த மாதிரி வேலையில் தலைப்பட்டது என்ப தற்கும், திரு. வரதராஜுலு மறுபடியும் தலையெடுப்பதற்கு எந்தவிதமான தந்திரத்தின் மூலம் இக்கூட்டத்தை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றார்.

மற்றும் பலரும் எப்படி ஒன்றானார்கள் என்பதையும் தக்க காரணங்களுடன் ரிக்கார்டுகளுடன் பின்னால் தெரிவிக்கிறோம். ஏனெனில் தொடர்ச்சிகளும் மற்றும் திரைமறைவில் இருக்கும் இரண்டொருவர்களுடைய மறுப்புகளோ, எதிர்ப்புகளோ, கண்டனங்களோ கொண்ட கட்டுரைகளும் முடிவு பெற்று வெளியாகிவிட்டால் பிறகு ஒரே தடவையில் எழுதிவிடலா மென்பதே நமது கருத்தாகும்.

ஆனால் ஒரு விஷயம் இப்போதே எழுதவேண்டியது அவசரமென தோன்றுகின்றது. அதாவது திரு. கீர்த்தி வாசய்யர் ரயில் சார்ஜ்க்குப் பணம் நம்மிடம் வாங்கவில்லை யென்று எழுதி யிருப் பதில் அவர் அந்தப்படி எழுதுவதற்கு நாம் ஆச்சரியப் பட வில்லையானாலும் பொதுஜனங்கள் உண்மையை அறியவேண்டி மறுபடியும் ஒரு தடவை நாம் கீர்த்திவாசய்யருக்கு ரயில் சார்ஜ் கொடுத்தது உண்டு என்று எழுதுகின்றோம்.

அதுவும் நாம் சென்னையில் குடிஅரசு ஆபீசின் முன் கொட்டியிருந்த மணல் மேட்டில் இருக்கும் போது இந்தக் கேசு விசாரணைக்கு மிகச்சமீபத்திய முந்திய நாள் கேசு வாய்தாவைச் சொல்லி ஈரோட்டுக்குப் போக வேண்டுமென்று கேட்டு நாம் 5ரூ. நோட்டாக ஒன்று எடுத்துக் கொடுத்தோம் என்று உறுதியாகச் சொல்லுகின் றோம்.

இந்தத் தடவையும் அவர் மறுப்பாரானால் அதுசமயம் திரு. கீர்த்திவாசய்யருடன்கூட வந்த மற்றொரு அய்யரு டையவும் அவர் கேட்டு வாங்கிக்கொண்டு போகும்போது நம்முடன்கூட இருந்த அய்யர் அல்லாதவர் களுடையவும் பெயர்களையும் வெளிப்படுத்துகின்றோம். அப்பொழுதும் இல்லை யென்று சொல்லுவாரானால் பிறகு பொதுஜனங்கள் எதை வேண்டுமானாலும் நம்ப உரிமையுடையவர் களாவார்கள்.

தவிர, இதுசம்பந்தமாக சில நிருபங்களும் சில கண்டனக் கூட்ட நடவடிக்கைகளும் பிரசுரிக்க சற்று தாமத மேற் படுவதற்கு ஆக நேயர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக திருச்சி, மதுரை நிருபர்களுக்கு இவ் விஷயத்தில் நன்றி செலுத்துகிறோமாயினும் அவர்களின் ஆத்திரத்தின் உணர்ச்சியில் காட்டியிருக்கும் மிதமிஞ்சிய வேகத்தை ஆதரிக்க முடியாததற்கு வருந்துகின்றோம்.

- குடிஅரசு-செய்திவிளக்கக் குறிப்பு -16.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82156.html#ixzz34fJma4BF

தமிழ் ஓவியா said...


தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்


தஞ்சை ஜில்லாபோர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறக்கூடும் என்று தெரிய வருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுயமரியாதை இயக்க சங்கத்தின் உபதலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றே எதிர்பார்க் கின்றோம்.

ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது. திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந்தாலும் இருக்கலாம். ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக் கின்றோம்.

ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொது மக்களைப் பொறுத்த வரையிலும் குறிப்பாக பார்ப்பனரல் லாதார் நன்மை யைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத் தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லாபோர்டுக்கு இதுசமயம் மறு படியும் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட வேண்டியது அவசியமான தென்பதே நமது அபிப்பிராய மாகும்.

அன்றியும், இந்த அபிப்பிராயத்தையே தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுகொண்ட சில செல்வந்தர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கொண்டுள்ளார்கள்.

தவிர, பார்ப்பனரல்லாத சமுகப் பிரமுகர்களில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பொறுப்பும் நாணயமும் அற்ற சிலர் தங்கள் சுயநலம் காரணமாக ஒருவரை ஒருவர் கெடுக்க எண்ணியதும் அதனால் ஒருவருக்கொருவர் தற்காப்பிற்குப் பத்திரங்கள் தேடிக்கொள்ள ஏற்பட்டதுமான காரியங்களால் இனி தென்னாட்டில் நடந்தேறும் ஒவ்வொரு தேர்தல்களிலும் நியமனங் களிலும் இவ்விதமான எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் எதிர்பார்த்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதைக் குறித்து நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை.

அன்றியும் இந்நிலைமை காரணமாக பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் வளர்க்க ஒருவருக் கொருவர் போட்டி போடுவதைப் பார்த்து நாம் வெட்கப்படாம லிருக்கவும் முடியவில்லை.

நெல்லூர் மகாநாடானது எப்படியோ நமக்கு இந்நிலை மையை அளித்து விட்டது. நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாத சமுகத்திற்குள் ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களிட மிருந்தாவது, அதற்குள் ஏற்பட்ட உள்கட்சியாகிய ஒழுங்கு முறைக்கு உட்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் என்பவரிடமிருந்தாவது,

மந்திரி கட்சியாரிடமிருந்தாவது மற்றும் இவைகளின் சார்புக் கட்சியாரிட மிருந்தாவது அவரவர்கள் கட்சிக் கொள்கைகள் முழுமையுமோ, அல்லது, அதிலுள்ளவர்களின் நடத் தைகள் முழுவதையுமோ அடி யோடு ஒப்புக்கொண்டு நாம் அதில் கலந்திருக்கவில்லை என்பதையும் அல்லது வேறு எந்த விதமான சுயநல லட்சியத்தைக் கொண்டோ அல்லது யாருக்காவது பயந்தோ நாம் அவற்றை ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆனால், நமது சுயமரியாதைக் கொள்கைகளுக்கு மற்ற கட்சியார் மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவைகளை விட இவைகள் எத்தனையோ மடங்கு மேலானது என்பதாகவும், வசதியுள்ளது என்பதாகவும் கருதி நமது இயக்கத்தின் நன்மையை உத்தேசித்தே நாம் அவற்றில் களங்கமறக் கலந்திருந்ததுடன் கூடுமானவரை ஒத்துழைத்தும் வந்தோம்.

எனவே, இந்த முறையில்தான் தஞ்சை ஜில்லாபோர்டு தலைமைப் பதவியானது திரு பன்னீர் செல்வம் கையை விட்டுப் போக நேருமானால் கண்டிப்பாய் அது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே அல்லாமல் மற்றப்படி அதற்கு இடையில் வேறு இடமில்லை என்று கருதுவதுடன் திரு. பன்னீர் செல்வம் தோல்வியானது பார்ப்பனரல்லாத மக்கள் தோல்வியாகுமென்றும் கருது கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 19.01.1930

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fJvgDxl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக் கின்றது. ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள்.

ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம் தான். அத்தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண் டிருக்கிறான்.

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fK4WdgS

தமிழ் ஓவியா said...


கடவுள், மதம், வேதம்


அய்க்கிய இந்திய சங்கத்தாரின் வரவேற்பு

தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற்பும், உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றி பேசிய புகழ் வார்த்தைகளும், தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்துதான் மிகுதியும் வெட்கமடை வதாயும் இவைகளில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்த மற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந் தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மலாய் நாட்டுப் பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டி ருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரதாபங்களைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும், ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு அந்த எண்ணமே அடியோடு மறைபட்டு தனது கொள் கைகளுக்கும்,

தொண்டுக்கும் முன்னிலும் அதிகமான உறுதியும், ஊக்கமும் ஏற்பட்டு விட்டதென்றும், யோக்கிய மான எவ்வித அரசியல் காரர்களும், மத இயல்புக் காரர்களும், சமுக இயல்புக் காரர்களும், அரசாங்கத்தார்களும் தன்னைக் கண்டு பயப்படவேண்டியதில்லை என்றும் சுயமரியாதையும், சமத்துவமும், அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் லட்சிய மென்றும், ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடா தென்றுதான் உறுதியாய்க் கருதி இருப்பதாயும் சொல்லி முடித்தார்.

நாங்கள் இங்கு எந்தக் கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ, ஆதரவையோ உண்டாக்க வரவில்லையென்றும், மற்றவர் களைப்போல் பணம் வசூல் செய்து மூட்டை கட்டிப்போக வரவில்லையென்றும்,

உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோ மென்றும் அதற்குத் தக்க உதாரணங்கள் காட்டிப் பேசினார். கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82160.html#ixzz34fKCwsWU

தமிழ் ஓவியா said...

குருப்பெயர்ச்சியும், குழப்பங்களும்


குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் தங்கியிருப்பாராம். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகுமாம். குருபகவான் வரும் ஜூன் 13ஆம் தேதி மாலை சரியாக 5.57 மணிக்கு கடகராசிக்கு பெயர்ச்சி ஆகிறாராம். இன்னொரு தினசரி நாளிதழ் அதே தேதியில் மாலை 6.03 மணிக்கு ஷிப்ட் ஆகிறார் என குறிப்பிடுகிறது. திருக்கணித பஞ்சாங்கமோ ஜூன் மாதம் 19ஆம் தேதி தான் குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணித்துள்ளதாம். எனவே, குருபகவான் ஷிப்ட் ஆகிறார் என குறிப்பிடுகிறது. திருக்கணித பஞ்சாங்கமோ ஜூன் மாதம் 19ஆம் தேதி தான் குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணித்துள்ளதாம். எனவே குருபகவான் ஷிப்ட் ஆகும். தேதியையும், நேரத்தையும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.

தினமலர் நாளிதழ் குரு பக வானுக்கு தனியாக குரு பயோ டேட்டா வெளியிட்டுள்ளது. இதில் குரு பகவானின் மனைவி தாரை, பிள்ளைகள் பரத்வாஜர், கசன் என்று விவரம் குறிப்பிட்டி ருந்தாலும் பெற்றோர் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய குறிப்புகள் இடம் பெறவில்லை. பகவான்கள் பயோடேட்டா அரை குறையாகத்தான் இருக்கும் போலி ருக்கிறது. குரு பகவான் பெரும் பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகள் செய்யவே விரும்புவா ராம். கெடு பலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டா லும் அது நமக்கு படிப்பினையைத் தருவதற்காகத்தான் இருக்குமாம். ஏதோ குரு பகவான் அடுத்த தேர்தலில் நிற்பதற்கு ஆதரவு கேட்பது போல் உள்ளது. மேலும் குரு பகவான் சஞ்சரிக்கும் வீடு குருவிற்கு உச்ச வீடாம். இவர் தங்கிய மற்ற வீடுகள் நிலை என்னவென்று தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...

தினசரி, வார இதழ்கள் பெரும் பாலானவை ராசி பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் வெளியிடுவதில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட ராசியில் தனக்கு பலன்கள் சரியாக இல்லையே என்று வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அதே நாளில் வெளியாகும் வேறு நாளிதழில் அதே ராசிக்கு சாதகமான பலன்கள் தாராளமாக இருக்கும். ஒரு சில ராசிக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் என்று குறிப்பிட்டிருக் கும். ஆனால் இன்று இந்த ராசிக்கு வாகன விபத்து உண்டாகும் என்று மட்டும் சொல்வதில்லை. இன்று நாள்தோறும் நடக்கும் வாகன விபத்துகளில் பாதிக்கும், உயிரையும் இழக்கும் நபர்கள் எந்த ராசியிலும் சேராதவர்கள் போலிருக்கிறது.

குருப் பெயர்ச்சிக்கு ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன்களைக் குறிப்பிட்டு அலுத்துப் போய் 100-க்கு இவ்வளவு மதிப்பெண்கள் என்று போட ஆரம்பித்து விட் டார்கள். ஒரு நாளிதழில் (தினமலர்) மேச ராசிக்கு 100க்கு 55 மதிப் பெண்கள் தரப்பட்டுள்ளது. அதே மேச ராசிக்கு வேறொரு நாளிதழ் (தினத்தந்தி) 65 மதிப்பெண்கள் வழங்க உள்ளது. எந்த ராசிக்கும் பெயில் மார்க் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ராசிக்கு எது சரியான மதிப்பெண் என்பதை சீனியர் சோதிடர் மறு மதிப்பீடு செய்து அறிவிக்க வேண்டுமோ என் னவோ தெரியவில்லை. இவர்கள் வெளியிடும் ராசி பலன்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமா? ஆசியா கண்டத்தில் உள்ளவர்களுக்கா? அல்லது உலக மக்கள் அனைவருக்குமா? என்றெல் லாம் கேட்க முடியாது. ஒபாமா முதல் ஒசாமா பின்லேடன் வரை அனைவருக்கும் பொருந்தும் என்றுகூட குறிப்பிடுவார்கள்.

குறிப்பிட்ட ராசியில் ஏதாவது குறையாக குறிப்பிட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்களையும் பக்தர்கள் மனம் நோகாமல் சொல்லி விடுவார்கள். முன்பெல்லாம் பரிகாரம் செய்ய திரு நள்ளாறு சென்று சனி பகவானை வழிபடுங்கள் அல்லது புதுக் கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டிக்கும், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டிக்கும் செல்லுங் கள் என்பார்கள். ஆனால், முச் சந்தியில் இருக்கும் லோக்கல் சாமி களை பரிகாரத்திற்கு பரிந்துரை செய்ய மாட்டார்கள். முச்சந்தி கோயில்களுக்கு எத்தனை கும்பா பிஷேகம் நடத்தினாலும் பரிகாரம் செய்யும் சக்தி லோக்கல் சாமி களுக்கு குறைவுதான் போலிருக் கிறது. பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று பக்தர்கள் கருதி விடக் கூடாது என்பதற்காகவே இப்பொழுதெல்லாம் ஏழைகளுக்கு, முதியோர்களுக்கு, ஊனமுற்றவர் களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். குருபகவான் வேறு ராசிக்கு மாறுவதால் இந்த ஆண்டு மழை அதிகரிக்குமா? டெல்டா சாகு படிக்காக இந்த ஆண்டு மேட்டூர் நீர் மட்டம் உயருமா? இந்திய பாகிஸ்தான் பிரச்சினை தீருமா? இலங்கை தமிழர் பிரச்சினையில் இனியாவது முன்னேற்றம் இருக் குமா? குருவின் சாதாரணப் பார் வையில் இவையெல்லாம் சாத்திய மில்லாமல் போனாலும்கூட சோதி டர்கள் குறிப்பிடுகின்ற குருவின் வக்கிரப் பார்வையால் தீவிர வாதிகள் ஒழிந்து விடுவார்களா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். எது எக்கேடு கெட்டாலும் குருவின் பெயர்ச்சி என்று சொல்லி சோதிட வியாபாரிகளும், நாளிதழ்களும் குறி, ஜோதிட மூடநம்பிக்கையை வளர்ப் பதில் குறியாக உள்ளனர்.

- கீழ்வேளூர் வெற்றிச்செல்வன்

Read more: http://viduthalai.in/page2/82176.html#ixzz34fKwmRGp

தமிழ் ஓவியா said...


கணமேனும் வீண் காலம் கழிக்கலாமா...?


முப்பது மணி நேரம்
முழு நாளுக்கும் மேலே
முதியோர் மகளிர் குழந்தைகள்
கண் விழித்து கதியற்றுக்
காத்துக் கிடந்தனர்
கல் முதலாளியைக் காண
வெட்டவெளி கொட்டும் பனி
மொட்டைத் தலை முழுப்பட்டினி
இலவச தரிசனமாம் அதனால்
இடித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும்
ப(க்)தர்கள் கூட்டம் அந்தோ பரிதாபம்!
விலகி நில்லுங்கோ
வி.அய்.பி. வர்றார் என
பூணூல் பேர்வழி வழி மறைக்க,
பணம் தள்ளியவர்களுக்கு
பாதை கிடைக்க
திருப்பதியானைச் சேவித்து
திரும்பும் திருவாளர்களின்
கடைக்கண் பார்வைகூட படவில்லை
கால் கடுக்க காத்திருப்போர்மீது
பஞ்சாயத்து முதல்
பாராளுமன்றம் வரை நடைபெறும்
தேர்தல்களில் வாக்களிக்க வருவோர்
வரிசையில் நிற்பர்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை
கையூட்டல் இல்லாமலே
கைவிரலில் மை இடலாம்
வி.அய்.பி., வி.வி.அய்.பி. என்பதெல்லாம்
இங்கே இல்லை
இதுவே நடைமுறை
வாக்களிக்கும் கடமையை விடவா போக்கத்த மூடபக்தி முக்கியம்?

- சிவகாசிமணியம்

Read more: http://viduthalai.in/page2/82175.html#ixzz34fL604oc

தமிழ் ஓவியா said...

பழங்களின் நன்மைகள்

மாம்பழம்: மாம்பழத்தில் வைட்ட மின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக் கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப் பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்: சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர் களுக்கு வைட்டமின் சி உயிர்சத்து எலும் புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப் பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷக் கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி: வருடம் முழுவதும் கிடைக் கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக் கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மைத் தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப் பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளிப் பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி: அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவ தாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்த மில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னா சிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப் படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல் களை 40 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் பித்தம் சம்பந்த மான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.

தமிழ் ஓவியா said...


விளாம்பழம்: விளாம்பழம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளன. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்தக் கிறு கிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத் திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர் களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம் பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்: மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலி லிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்பந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப் பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமைத் தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபட லாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல செரிமான சக்தி உண்டாகும்.

எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண்பார்வை கொஞ் சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக் கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இது போன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் இருப் பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

பேரீச்சம்பழம்: தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறு களும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்பந்தமான வியா திகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

Read more: http://viduthalai.in/page3/82178.html#ixzz34fLJSzro

தமிழ் ஓவியா said...


புகைந்து போவீர்கள்


புகையிலையினால் அரசிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.32,500 கோடி. பெரிய வருமானம் தான். அதற்கு அரசு அளிக்கும் விலை ஆண்டிற்கு 9 லட்சம் மக்களின் உயிர்.

மத்திய அரசு, புகையிலை சீர் கேடுகளை சரி செய்வதற்காக (மனித னுக்கு ஏற்படும் சீர்கேடுகள் மற்றும், நாட்டின் சுகாதார சீர்கேடுகளை சீர்படுத்த) செலவிடும் தொகை ரூ.37,500 கோடி. அதாவது ரூ.5,000 கோடி புகையிலை வருமானத்தைவிட ஏற்படும் அதிக செலவு. தவிர இந்த உயிர்க்கொல்லி புகையிலையை பயிரிடுவதற்காக அரசால் அழிக்கப்படும் உயர் பெருங்காடுகளின் பரப்பளவு, இரண்டு லட்சம் ஹெக்டேர்.

புகையிலையில் 3,000 வகை நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன. பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகைக்கும் புகையிலையில் 4,000 நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன.

இந்த நச்சுப் பொருட்களில் புற்றுநோயைக் கட்டாயம் ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் மட்டும் 200 வகை. நச்சுப் பொருட்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஹெக்சாமின் - தீப்பெட்டியின் உரசும் பகுதி
எத்தனால் - ஆல்கஹால் வினைல் குளோரைடு - ப்ளாஸ்டிக் பை தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்.
நைட்ரோ பென்சின் - பெட்ரோலில் உள்ள நச்சுப் பொருள்
மீத்தேன் - பெட்ரோலியம் வாயு
காட்சியம் - கார் பேட்டரியில் பயன்படுத்தும் திரவம்
அசட்டோன் - நகப்பூச்சு சுத்தப்படுத்தும் திரவம்
நாப்தலின் - பூச்சிக்கொல்லி மருந்து
ஸ்டிரிக் அமிலம் - மெழுகு தயாரிக்கப்படும் அமிலம்
டிடிடி - டியோட்ரான் பூச்சிக்கொல்லி மருந்து
கார்பன் மோனாக்ஸைடு - வாகனத்திலிருந்து வெளிவரும் நச்சுப் புகை
ஆர்காலிக் ஹைட்ரஜன் - சைனைடு நச்சுப் பொருள்
நிக்கோடின் - அடிமைப்படுத்தும்பொருள்
அமோனியா - கழிவறையை சுத்தப்படுத்தும் ஆசிட்
பினாயில் - பூச்சிக்கொல்லி

Read more: http://viduthalai.in/page4/82181.html#ixzz34fLaMuug

தமிழ் ஓவியா said...


வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் எஸ்சி/எஸ்டி சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்கள் எனப்படும் பட்டிய லினத்தவருக்கு எதிரான கொடுமை களைத் தடுப்பதற்காகவும், அச் சமூகத்தினருக்கு எதிரான கொடு மைகள், வன்முறைகள், துன்புறுத் தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடி யுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியின மக்களுக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 1989இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995இல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட் டத்தைக் காவல்துறையினர் தங் களுக்கு எதிரானதாகவே நினைத் தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page4/82179.html#ixzz34fLoArhU

தமிழ் ஓவியா said...


புவியில் கடவுள் இல்லாத பகுதியாக கிழக்கு ஜெர்மனி இருப்பது ஏன்?



ஒரே நாடாக இருந்த ஜெர்மனி பெர்லின் சுவரால் பிரிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இருந்தன. பின்னர் அரசியல்ரீதியில் மீண்டும் ஒன்றாக இணைந்து இருபதாண்டுகள் கடந்த பின்னரும் ஜெர்மனி மதக்கூறுகளால் பிரிந்தே உள்ளன. இன்னமும் மேற்கு ஜெர்மனி யில் கிறித்தவம் ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் படியாகவே நிலை கொண் டுள்ளது. அந்த அளவில் கிழக்கு ஜெர் மனியில் இல்லை. கிழக்கு ஜெர்மனியில் மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் தங்களை நாத்திகர்கள் என்று பகிரங்கமாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.


தமிழ் ஓவியா said...

ஜெர்மானிய சனநாயக குடியரசு நாட்டில் மீண்டும் கிறித்தவம் திரும்பும் என்று எண்ணுபவர்களின் எண்ணம் ஈடேறாது என்றே நினைவுக்கு எட்டியவரையில் தோன்றுகிறது. புதிதாக எடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, நாத்திகம் கிழக்கு ஜெர்மனியில் நன்றாகவே வளர்ந்து வருகிறது. கிழக்கு ஜெர்மனியில் 28 வயதுக்குட்பட்டவர் களில் 71 விழுக்காட்டினர் எப்போதுமே மேலான சக்தி என்று ஒன்றை நம்பிய தில்லை என்கின்றனர். 38லிருந்து 47 வயதினரில் 72.6 விழுக்காட்டினர் எவ் வித கடவுள் நம்பிக்கையும் இல்லாத வர்களாக உள்ளனர்.

கடவுள்மீதான நம்பிக்கை என்று வரும்போது இளம்தலைமுறையினர், நடுத்தர வயதினரைப் போலவே நாத்திகர்களாகத் தங்கள் சிந்தனையில் ஒரே அலைநீளத்தில் உள்ளனர். முன்பு பிரிந்திருந்தநிலையில் கிழக்கு ஜெர்மனி யில் அரசியல் மாற்றங்களில், இன்னும சொல்லப்போனால் மக்கள் எண்ணங் களிலேயேகூட மதம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் வெகுசிலர் நாத்திகர்களாக இருந்துள்ளனர். 28 வயதிலிருந்து 37 வயதினராக இருந்த வர்கள் 63.6விழுக்காட்டினர் ஒருபோதும் கடவுளை நம்பாத முழுமையான நாத்திகர்களாகவே இருந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இருக்கின்ற அடுத்த தலைமுறையினர் மதமற்ற பெற்றோர்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் டாம் டபிள்யூ.ஸ்மித் என்பவர் நாடுதோறும், காலந்தோறும் கடவுள் நம்பிக்கையின் நிலைகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு அண்மையில் ஆராய்ச்சியின் அறிக்கையை வெளி யிட்டுள்ளார். அந்த அறிக்கையில் காலத்துக்கேற்ப கடவுள்நம்பிக்கை மாற்றம் அடைந்துள்ளதைக் குறிப்பிட் டுள்ளார். ஆய்வாளர்கள் அவர்களு டைய சொந்தக் கருத்துகளை கூறுவ தில்லை. சர்வதேச சமூகவியல் புள்ளி விவரத்திட்டங்கள் அளிக்கும் விவரங் களைச் சார்ந்தே ஆய்வுகளை அளிக் கின்றனர். 1991, 1998 மற்றும் மீண்டும் 2008இல் உலகம்முழுவதும் மதங்களின் விகிதம் குறிப்பாக கிறித்துவம் உள்ள நாடுகளான ஆஸ்திரேலியாவிலிருந்து இஸ்ரேல் வரை, ருஷ்யாவிலிருந்து சைப்ரஸ்வரை என்று உலகம் முழுவதும் புள்ளிவிவரங்களுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அதனாலேயே ஜெர்மனி என்று வரும்போது, இரண்டாக கிழக்கு மேற்கு என்று புள்ளிவிவர முடிவுகள் பெறப் பட்டுள்ளன. புவியில் நீண்டகால மாகவே அதிக அளவில் நாத்திகர்கள் உள்ள நாடாக கிழக்கு ஜெர்மனி இருந்துவந்துள்ளது. கிழக்கு ஜெர்மனியில் 52.1விழுக்காட்டினர் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று கூறி உள்ளனர். அதேநேரத்தில் முற்றிலும் வேறுபட்டு 10.3 விழுக்காட்டினர் மேற்கு ஜெர்மனியில் நாத்திகர்களாக அடை யாளப்படுத்திக் கொண்டுள்ளனர். ருஷ்யாவில் 6.8விழுக்காட்டினரும், அமெரிக்க அய்க்கிய நாடுகளில் 3விழுக்காட்டினரும், பிலிப்பைன்சில் 0.7விழுக்காட்டினரும் நாத்திகர்களாக உள்ளனர். கிழக்கு ஜெர்மனியில் தோராய மாக 46விழுக்காட்டினர் புள்ளி விவரங் களின்படி தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், டச்சு நாட்டினர் 15.3விழுக்காட்டினரும், மேற்கு ஜெர்மனியில் 4.9 விழுக்காட்டினரும், இத் தாலியில் 1.7 விழுக்காட்டினரும் நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். 1991 முதல் 2008வரையிலான காலங்களில் நாத்திகர்களின் விகிதம் 3.4விழுக்காட்டு அளவில் வலிமையான அளவில் அதிகமாகி உள்ளனர். அதேநேரத்தில் ருஷ்யாவில் 11.7விழுக்காடாக சுருங்கி உள்ளது.

நவீனத்துவத்தின் அடையாளத்தின் குறியீடு

தமிழ் ஓவியா said...

உலக அளவில் தலை முறைகளுக் கிடையே ஒப்பிடும்போது, பெரும்பாலும் இளைஞர்கள்தான் 55 வயதைக்கடந்த முதியவர்களைக் காட்டிலும், மத நம்பிக்கைளைக்கடந்து நவீனத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்களாக கருதப்படு கிறார்கள். உதாரணமாக போலந்தில் 79.3 விழுக்காட்டினரில் 68 வயதைக் கடந்தவர்கள் கடவுள் நம்பிக்கையாளர் களாகவும் 28 வயதிலிருந்து 37 வயதி னராக உள்ளவர்கள் 58.4 விழுக்காட் டினர் நாத்திகர்களாகவும் உள்ளனர். இதற்கு விதிவிலக்காக இஸ்ரேல் உள்ளது. மத சார்பற்ற யூதர்களின் இசுரேலை நோக்கிய இடப்பெயர்வால் இசுரேலில் உள்ள இளைஞர்கள் இறைநம்பிக்கையாளர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையே வேறுவிதமாக, யூதர்களின் இடப்பெயர்வு மட்டுமின்றி யூதர்கள், இசுலாமியர்களை மதரீதியில் வேறுபடுத்திப் பார்ப்பதாலும் அவ்வாறு உள்ளதாக புள்ளிவிவர ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மதரீதியான பிரிவாலும், போட்டியாலுமே மத நம்பிக்கைகளை அடையாளப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். மத நம்பிக்கை என்பது ஒருவரின் எண் ணத்தில் தனிப்பட்ட அடையாளத்துக் காகவே அதிக அளவில் மத அடை யாளங்கள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. கிழக்கு ஜெர்மனியில் மதரீதியான போட்டிகள் இல்லால் இருப்பதற்கு அங்கு இசுலாமியர் குறைந்த அளவில் இருப்பதுதான். ஆய்வாளர்கள் இதை மட்டுமே காரணமாகக் கூறாமல், நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதற்கான காரணங்களை விரிவாக அலசி ஆராய்ந்து உள்ளனர். கிழக்கு ஜெர்மனியில் நாத்திகம் பரவி உள்ளதன் காரணத்தை ஆய்வாளர் ஆராயும்போது தேசிய சமூகவியலாளர் கள், பொதுவுடைமைவாதிகள் விட்டுச் சென்ற ஆழமான தடங்கள்தான் காரண மாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறு கின்றனர். ஏராளமானோர் அடிமை களாக நடத்தப்பட்டதன் காரண மாகவும், இடைப்பட்ட காலத்தில் மதச் சடங்குகளின்மீது பிடிப்பில்லாதவர்கள் இருந்த காரணங்களாலும், மதமற்றவர் களாகவே இருந்துள்ளனர். 1918லிருந்து 1933 காலம்வரையிலான வெய்மர் குடியரசாக இருந்தபோது மதசார்பற்ற இயக்கங்கள் இயங்கி உள்ளன. குறிப்பாக துறிங்ஜியா, சக்சோனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் கடவுள், மத மறுப்பாளர் களாகவே இருந்துள்ளனர். அந்தப் பகுதிகளில் சர்ச் கிறித்தவ ஆலயம் என்று எதுவுமே இருக்கவில்லை. போலந்தி லிருந்து கத்தோலிக்கர்கள் நுழைவை அடுத்து, அவர்களால் மதபோதனைகள் நடைபெற்றன.
தற்போதைய ஆய்வின் முடிவு களின்படி, ஜெர்மனி முழுவதும் நாத்திகக் கருத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிகிறது. மேற்கு ஜெர்மனியில் அதன் அண்மை நாடுகளான செக் குடியரசு, பிரான்சு நாடுகளைவிடவும் மத நம்பிக்கையில் வலுவாக உள்ளதாக தெரிகிறது. அய்ரோப்பாவில் நம்பிக்கைமீதான கருத்தானது தனி நபருக்குரியதாகவும், பெரிதான நம்பிக்கை என்பதன் வீரியத் தில் குறைந்துவிட்டதாகவும், மதம் என்பது பொதுவாக கவுரவத்துக்காகவும், மற்றபடி கடவுள், மத மறுப்புகளே உள்ளதாக ஆய்வு கூறுகிறது. அய் ரோப்பா முழுவதும் நாத்திகக்கருத்து முதன்மையான சவாலாகவே உள்ளது.

தமிழ் ஓவியா said...

ஜெர்மனியில் உள்ள கிறித்தவ ஆலயத்தின் துணைத்தலைவர் குண்ட் லாச் வெல்ட் இணையத்தில் கூறும் போது, கிழக்கு மற்றும மேற்கு ஜெர் மனிகளை ஒன்றோடொன்று ஒப்பிடு வதே பொருத்தமற்றது. அய்ரோப்பாவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கடவுள் நம்பிக்கை என்பது பெரும் சவாலாக உள்ளதை ஒப்புக் கொள் கிறோம் என்றார். எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் ஆன்மீகப் பேராசிரியர் எபெர்ஹர்ட் டைஃபென்சீ கூறும்போது, கிழக்கு ஜெர்மனி மிஷனரி நாடாக இருந்தால் கிறித்தவ பயிற்சிகுறித்தோ, மற்ற மதங்கள்குறித்தோ கூறலாம். ஆனால், நுற்றாண்டுகளாகவே அந்த நாடு மத மற்றதாக இருந்து வருகிறது என்றார். நூற்றாண்டுகளாக மிஷனரி இயக் கங்களுடன் எந்த காரணம்முன்னிட்டும் இணையாமல் இருந்து வந்துள்ளது. இப்படிக்கூறுவதன்மூலம் அவரை பணியிலிருந்து விடுவித்துவிடுவார்களா என்று கேட்டபோது, அதற்கான அவசியமே இல்லை. இருக்கும் நிலையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மிஷன் என்றோ, எவாங்கலைஸ் என்றோ, புதிய ஏற்பாடு என்றோ எந்தவிதத்தில் முயன்றாலும் அவர்கள் கவனிப்பதாகவே தெரியவில்லை. மதத் தின்பெயரால் அவர்களைப் பிரிப்ப தாகவே கூறுகிறார்கள். எப்போதுமே மதத்தின்பேரால் செயல்படுபவர்களை மதிப்பதாகவே தெரியவில்லை. அவர்களுடைய இலட்சியங்களை வெளிப்படையாகவே கொண்டுள்ளனர். அவர்களுடைய பலவீனங்களை மறைக்க முயற்சிப்பதில்லை என்று டைஃபென்சீ கூறினார்.

எர்ஃபர்ட் நகரில் நடைபெறும் ஜெர்மானிய பிஷப்புகளின் மாநாட்டுக் குழுத் தலைவரான ஹுபெர்டஸ் ஸ்கோனிமேன் கூறும்போது, மிஷன ரியமாக செயல்படும்குழுவாக புதிய வாழ்வுக்காலக் கொண்டாட்டம் என்கிற தலைப்பில் விளக்கக் கூட் டங்கள் நடத்தப்படுகின்றன.

கிழக்கு ஜெர்மனியில் 14ஆம் வயதை பருவ வயதை அடைந்ததாகக் கொண்டாடு வதன்மூலம் சிறிதளவு வெற்றி பெற்றுள்ளதாகவும், அதேபோல் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல்நாளிலேயே விழா கொண்டாடப்படுவதன்மூலமும், காதலர் தினவிழாவில் காதலர்களுக்கு சேவை ஆற்றுவதன்மூலமும் மத நம்பிக்கையை வளர்த்துவருவதாக கூறும்போதே, இவை அனைத்தும் கடவுள்மீதான நம்பிக்கையை வளர்ப் பதற்கே தவிர தவறாக எடுத்துக் கொள் ளக் கூடாது என்றும் எச்சரிக்கையுடன் கூறுகிறார்.
-_ வேர்ல்டுகிரென்ச்.காம்

Read more: http://viduthalai.in/page5/82182.html#ixzz34fM0pAVN

தமிழ் ஓவியா said...


பொய்ம்மையும் வாய்மை இடத்து


ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். இந்தியர்களுக்குப் பெரியம்மை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது (1804). ஆனால், அன்றைய மக்கள் அதனை ஏற்கவில்லை. அவர்களைச் சரிக்கட்ட எல்லீசு துரை ஒரு புனித மோசடி செய்தார். அம்மை குத்திக் கொள்வதன் அவசியம் பற்றி வடமொழியில் அவர் தானே ஒரு கவிதை இயற்றி, அதனை ஒரு பழைய தாளில் எழுதிப் பழம் பாடல் என நம்ப வைத்தார். அம்மருந்து புனிதப் பசுவிலிருந்து பெறப்பட்டது என அப்பாடலில் குறிப்பிட்டார். எனவே, மக்கள் அம்மருந்தை ஏற்றனர்.

பி.கு. எல்லீசு துரை திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அதனால் பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்த்த, நன்னை பயக்கும் மெனின் என்ற திருக்குறள் அவர் நினைவுக்கு வந்திருக்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/82184.html#ixzz34fNMgnUC

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் கருத்துரைகள்


எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள்; நான் மகா பேராசைக் காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிட சமுதாய நலனையே என் சொந்த சுயநலமாக எண்ணி இருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல்வமும் பதவியும் என்பனவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன். அந்த சுயநலத்திற்கே நான் உழைக்கிறேன்.

***

"நம் இழிவு நீக்கம், நம்முன்னேற்றத் தடை நீக்கம், ஆரியம் சுமத்திய மூடநம்பிக்கையில் இருந்துவிடுபடுதல், பகுத்தறிவாளர்களாக - மானமுள்ள சமுதாயமாக ஆவது ஆகிய இப்படிப் பட்ட நமது வேலை, நெருப்போடு பழகுவதுபோல் பாமரமக்களிடம் பழகுவதாகும். அவர்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களைத் திருத்தியே ஆகவேண்டும் இதற்கு நல்ல பிரச்சாரம் வேண்டும். நிலைகுலைந்து சின்னா பின்னப்பட்டு கிடக்கும் மக்களை ஒன்று சேர்த்து யாவர் பலத்தையும் ஒன்றாய்த் திரட்டி ஒரு மூச்சு பார்த்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக வாழமாட்டோம் என்பதே நமது இலட்சியச் சொல்; நமது மூச்சு."

***

"பாடுபடாமலே தின்று பருத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாருக்குப் பெயர் மேல் ஜாதியினர் - பார்ப்பனர். உழைத்து உழைத்து உருக்குலைந்து உண்ண உணவின்றி ஊர் ஊராய்ச் சென்று உயிர் இழக்கும் மக்கள் கீழ் ஜாதியினர் - சூத்திரர்கள் - பஞ்சமர்கள் நாலாவது ஜாதி, அய்ந்தாவது ஜாதி; எவ்வளவு விபரீதமான செய்கை! இதை ஒழிக்க வேண்டாமா?"

***

"சாதியின் அமைப்புகளைக் காப்பாற் றவே சாதி, மதம், சாஸ்திரம், புராணம், கடவுள், சாமி, கோவில், குளம், திருவிழா, உற்சவம், பண்டிகை, மோட்சம், நரகம் என்று வைத்து இருக்கிறார்களே தவிர, மக்களின் குறைகளை நீக்கி அவர் களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அல்ல."

***

தமிழ் ஓவியா said...


"சர்க்கார் (ஆட்சி) என்பது ஒரே ஒரு ஜாதிக்கான தர்மச் சத்திரமா?"

***

"சாதி வித்தியாசம் என்பது கற்பிக் கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத் தவன் இளைத்தவனை அடக்கி வைப் பது என்பதற்கு ருஜூ (சாட்சி) ஜாதி வித்தியாசமே ஆகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப்பிராயத்திலிருந்து மனிதப்பிராயத் திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது."

***

"தமிழனுடைய முட்டாள்தனமும் இழிதன்மையும் எது தெரியுமா? பார்ப் பான் இராம இராஜ்யம் பெறுவதற்கு ஆக அவனுக்கு அடிமையாகவும் கூலியாகவும் அமர்ந்து உதவியதேயாகும்."

***

"மனிதனை மனிதன் உட்காரவைத்து ரிக்க்ஷா இழுப்பது பரிதாபமாய் இருக்கிறது என்று கூறும் பிரதிநிதி இருக்கும் சட்டசபையில் கக்கூசு (மலக் கழிவு) எடுப்பது இழிவு, மானக்கேடு, சுகாதாரக் கேடு, பரிதாபம் என்று கூறும் பிரதிநிதிகள் ஏன் இல்லை?"

***


தமிழ் ஓவியா said...

"கக்கூஸ் (மலக்கழிவு) எடுக்கும் தொழில் ஒரு நாட்டில் இருப்பது மனித சமுதாயத்தின் மானத்துக்குக் கேடு - இந்த முறையே கூடாது - நாடு முழுவதும் தானாகவே கழுவிக்கொண்டு போகும்படியான நவீன விஞ்ஞான முறை இருக்க வேண்டும்."

***

"பார்ப்பனர்களை மேல் ஜாதி மேலானவர்கள் என்ற கருத்துக் கொடுக்கும்படியானதும், நாமே நம்மைக் கீழ்மைப்படுத்திக் கொள்வது மான, கருத்துக் கொண்ட 'சாமி' என்றும் 'பிராமணர்' என்றும் கண்டிப்பாக நாம் அழைக்கக் கூடாது. நம் வீட்டு சமுதாய - நன்மை - தீமைகளில் நம்மைவிட உயர்ந்த ஜாதியார்

என்று சொல்லிக் கொள்பவர்களைச் சேர்த்துக் கொள் ளக்கூடாது."

***

"சுயராஜ்ஜியம் (விடுதலை) வந்த 6-மாத காலத்தில் காந்தியார் உயிரை பார்ப்பனீயம் என்னும் 'பஹிரி' பருந்து அடித்துக் கொண்டு போய்விட்டதே."

***

"எப்படிப்பட்ட தனி உருவங்களை யும், சிலைகளையும் கடவுளாகக் கொள் ளக் கூடாது. சிலைகள் கடவுள்களான தனால் தான் பார்ப்பான் உயர்ஜாதி ஆகவும் கடவுள்கள் பேரால் மக்களைச் சுரண்டி வாழவும் வகை ஏற்பட்டு விட்டது."

***

"எந்த எந்தக் கோவில்களில் பார்ப்பனர் அர்ச்சகர்களாய் இருந்து கொண்டும், பார்ப்பனர்கள் தான் பூசை செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை இருந்து கொண்டும் இருக்கின்றனவோ, அக்கோவில்களுக்குத் திராவிட மக்கள் செல்லக்கூடாது. சென்றாலும் அப்பார்ப் பனர்கள் மூலம் பூசை ஆராதனை செய்து கொள்ளக் கூடாது."

***

மேல் லோகம் கீழ்லோகம் மோட் சம் நரகம் பிதிர்லோகம் தேவலோகம் என்பதான புரட்டுகளுக்கு இடங் கொடுத்து அந்தக் கருத்துக்களுக்கு அடிமையாகக் கூடாது.

***

கடவுள் வேண்டுதல் என்னும் பேரால் காசு பணம் கடவுள் உண்டிக் குக் கொடுப்பது என்பது வெறும் முட்டாள் தனமாகும். வேண்டுதலுக்கு ஆக கடவுளுக்கு முடி (மயிர்) காணிக்கை கொடுப்பது என்பது வடி கட்டின முட்டாள்தனமேயாகும். இவற்றால் நமக்கு முட்டாள்தனமும் செலவும் தான் மிஞ்சும்; பார்ப் பானுக்குக் கொல்லைச் செடியின் குலை யிலிருந்து காய், பழம் உதிர்வதுபோல், பண மழை பெய்வது போல் லாபமாகும்.

***

பிரார்த்தனைகளைவிட பக்தி, கடவுள் பக்தி மிகவும் மோசமான கருத்து என்றேதான் கூற வேண்டும். அதுவும் ஒரு வியாபாரமாகத்தானே இருக்கிறது?

***

பாஞ்சாலி கதையைப் படித்து நீ பஞ்சையாகி விட்டாய். விதியை நம்பி மதியை இழந்து விட்டாய்! குழவிக் கல்லை (கடவுளை) நம்பி கோழையாகி விட்டாய்! சோதிடத்தை நம்பி சோடையாய் விட்டாய்!

***

கலை என்பதெல்லாம் மக்கள் வாழ்க்கையாகும். அறிவுப் பெருக்கத்துக் கும் பயன்பெறக் கூடியதாய் இருக்க வேண்டுமே தவிர, வெகு சிலருக்கு மாத் திரம் புரியும் படியான, ஆனந்தப்படும் படியான வெறும் அற்புதத்தையும் அதி சயத்தையும், பண்டிதத் தன்மையையும் மாத்திரமே காட்டுவதற்கு ஆக என்று இருக்கக் கூடாது

***

ஆரிய மதத்துக்கும், கலைக்கும், மொழிக்கும் அடிமைப்பட்டதாலேயே திராவிடம் - திராவிட மக்கள் இவ்விழி நிலைமைக்கு வர நேர்ந்தது.
***
ஆரியக் கலை, புராணம் பற்றிய சினிமா - நாடகம், பாட்டு, கதை - காலட் சேபம் ஆகியவைகளை திராவிட மக்கள் அடியோடு வெறுக்க வேண்டும்

***

நம் சொந்த நடவடிக்கையில், நம் குழந்தை குட்டி மனைவி வாழ்க்கையில் கூடுமான அளவு ஆரியத்தை ஒதுக்கி, திராவிடத்தைப் புகுத்த வேண்டும்

***

எதிரிகள் நமக்கு எவ்வளவு ஆத்திர மூட்டினாலும் தொல்லை கொடுத் தாலும் பலாத்காரத்தைப் பயன்படுத் தினாலும் நாம் நிதானமிழந்து விடக் கூடாது

***
நாம் மக்களில் - பிறவியில் உயர்வு - தாழ்வுகளைத்தான் வெறுக்கிறோமே தவிர யாரையும் சமத்துவமாகக் கொள் வதில் தயங்குவதில்லை. ஆகையால் சமத்துவமான காரியங்களுக்கு யாரை யும் வெறுக்கவோ, பகிஷ்கரிக்கவோ கூடாது. நமது வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத் தும் கவலையும் இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்ற உறுதி எனக்கு உண்டு தொகுத்தோன்: கபிலன் ('விடுதலை', 15.01.1955)

Read more: http://viduthalai.in/page7/82186.html#ixzz34fNhBKSC

தமிழ் ஓவியா said...


சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) என்று கூறி குழந்தைகளிடையே மூடத்தனத்தை வளர்ப்பதா?


செல்டென்ஹாம் அறிவியல் திருவிழாவில் நாத்திகத் தலைவரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பங்கேற்றார். அவர் பேசும்போது, இயற்கையை மீறிய சக்தியால் (கடவுளால்) உலகம் இயக்கப்பட்டுவருவதாக கூறுவதன்மூலம் குழந்தைகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதுபோலவே சாந்தாகிளாஸ் (கிறிஸ் துமஸ் தாத்தா) என்கிற கதையால், இல் லாத ஒன்றை இருப்பதாக குழந்தைகளை நம்பவைக்கலாமா? என்று டாக்கின்ஸ் கேட்டார். மதக்கருத்துக்களை குழந்தை களிடம் திணிப்பதுகூட குழந்தைகள் மீதான வன்முறையாகும் என்றார். தற்காலத்தில் நிகழ்ந்துவரும் குழந்தை கள்மீதான அளவுகடந்த பாலியல் வன்முறைகள்குறித்த குற்றச்சாட்டுகள் பரவிவருவதற்கு காரணமாகவும் உள்ளன.

விளையாட்டாக புனையப்படும் கதைகள், கிறிஸ்துமஸை நம்புகின்ற பெற்றோர் களால் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மாறுபட்ட கருத்து களைக் கொண்டுள்ளவரும், உயிரியல் வல்லுநராகிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் அறிவியல் விழாவில் பங்கேற்ற பார்வை யாளர்களைநோக்கி, குழந்தைகளிடம் மூடத்தனமான நம்பிக்கைகளை உண்டாக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இயற்கையை மீறிய சக்தி (கடவுள்) யால்தான் உலகம் இயக்கப் பட்டு வருகிறது என்று குழந்தைகளிடம் கூறுவதன்மூலம் அவர்களுக்கு கடும்தீங்கிழைக்கிறார்கள் என்று தீப்பிழம்பாகி எச்சரிக்கிறார். விளையாட் டான, பழங்கதைகளை மதத்தின்பேரால் குழந்தைகளிடம் கூறி அவர்களை நம்பவைப்பது என்பது நாம் நினைப் பதைக் காட்டிலும் அவர்களுக்கே அதிகத் தீங்கு நேர்ந்துவிடும். இல்லாத கிறிஸ் துமஸ் தாத்தா இருப்பதாகக் கூறி, நம்பவைக்கலாமா? என்றும் கேட்கிறார். விண்வெளி வண்ணமயமானது என்று யார் அறிவார்கள்? 10 ஆண்டு களில் 10ஆயிரம் அதிசயித்தக்க படங் களை தொலைநோக்கிமூலம் பெற்று பார்க்கிறோம்.

குழந்தைகள் முகநூலைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர்கள் 13 வயதுக்குமேல் சமூக வலைதளங்களைப் பார்க்கட்டும் என்று திட்டமிடுகிறார்கள். இது சரியே. குழந்தைகளின் புதுமையான விருப்பங்களைப் புரிந்து இணைந்து இருப்பதுபோல், குழந்தைகளிடம் (கடவுள் நம்பிக்கையில்/நம்பிக்கையின் மையில்) உண்மை அறியும் அறிவை, சிந்தனையை அவர்கள் விருப்பத்துக்கு வளரவிடுகிறோமா? என்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் பார்வையாளர்களிடம் கேள்வியை எழுப்பினார். தன்னுடைய அனுபவமாகக் கூறும்போது, ஆப்பிரிக் காவில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தன்னுடைய எட்டு வயதில் கதைகளில் வரும் மாயாஜாலங்களை நம்பி, அதுபோன்ற அதிசயங்களைக் காண முயன்று தேடி யதாகவும் கூறினார்.

நாம் நினைப்பது போலன்றி கதைகளாகக் குழந்தைகளிடம் கூறப்படுவது, அவர்களிடம் கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். கிறிஸ் துவின் தந்தை, கிறிஸ்துமஸ் என்று எல் லாவற்றையும் குழந்தைகள் நம்புவதற்கு விடலாமா? கடவுள் என்கிற கருத்தை சிறிதுசிறிதாக குழந்தைகளிடம் திணிப்பது குழந்தைகளுக்கு தீங்கிழைப்பது ஆகாதா?


தமிழ் ஓவியா said...

விவிலியத்தில் குழந்தைகளின் அறிவை வலிமையாகவே கெடுக்கும்படியாகத்தான் உள்ளது. எதையாவது குழந்தைகளிடம் சொல்லி அதைப் பின்பற்றாவிட்டால், நரகத்தில் வறுக்கப்படுவார்கள் என்பதும் கூட ஒரு வழியில் குழந்தைகளைக் கெடுப்பதுதான். மதத்தைத் திணிப்பது என்பது குழந்தைகளிடம் அதிக அளவில் கெடுதலை விளைவிக்கக் கூடியதாகும். எந்தவிதத்திலும் கேள்வி கேட்கக்கூடாது என்று மதத்தைத் திணிப்பதைவிட மோசமான செயல் வேறில்லை.

சிந்திப் பதற்கு இடமின்றி மதத்தை புகுத்துவது என்பது மூளைக்கு வேலை கொடுக்காமல் அப்படியே ஏற்க வலியுறுத்துவதாகும். கடவுள்தான் படைப்பதாக சொல்லுவது பகுத்தறிவுக்கு முரணானது. சமுதாயத் துக்கு கேடானதுமாகும் என்று டாக் கின்ஸ் கூறுகிறார். கத்தாரிலிருந்து ஒளி பரப்பாகிவரும் அல்-ஜசீரா தொலைக் காட்சியில் ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஒரு பெண் தன்னுடைய நண்பன் இறந்தபின் நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவான் என்று தன்னிடம் பாதிரியார் ஒருவர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறியதால் அதிர்ச்சிக்குள்ளானார் என்றார். மேலும் அவர், பாலியல் வன்முறை என்பது கொடுமையானது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. கத்தோலிக் கனாக(மதவாதியாக) ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது உளவியல்ரீதியாக காலம்முழுவதும் மதத்துக்கு அடிமை யாக்குதுவது என்பது அதைவிட கொடுமையானதாகும் என்று கூறினார். அவரே 1976இல் எழுதிய நூலில் பல்வேறு நம்பிக்கைகள் வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் கடவுள் ஒரு பொய்க்கதை நூலை எழுதியுள்ளார். பள்ளிப்பருவத்தில் வெற்றுக் கூச்சலிடு பவர்களையும், எதையும் கவனத்தில் கொள்ளாத பொறுப்பற்றவர்களையும், காயங்கள் ஏற்படும்படியாக தாக்கிக் கொள்பவர்களையும் கண்டுள்ளதாக கூறுகிறார். மதவாதிகள் என்பவர்கள் அனுபவத்தில் மிக மோசமானவர் களாகவே இருந்துள்ளார்கள் என்றும் டாக்கின்ஸ் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது,மதத்தால்எந்தவிதத்திலும் நன்மை கிடையாது என்று பள்ளிப் பருவத்தில் கூறியபோது, பிரம்படி வாங்கினேன். பெரிதாக இல்லை என் றாலும், நாகரிகக் குறைவு உள்ள மக்க ளாக வாழ்ந்து கொண்டு புண்படுத்திய மோசமான நிலையை அனுபவத்தில் கண்டுள்ளேன் என்றார்.

_- -டெய்லி மெயில், இலண்டன், 4-_6_-2014

Read more: http://viduthalai.in/page8/82188.html#ixzz34fPHTAMO

தமிழ் ஓவியா said...


மனித கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலை தடுக்க அம்பேத்கரின் சாதி ஒழிப்பு பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூல்களை பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்


சென்னை பல்கலை. இதழியல் துறைத் தலைவர் பேச்சு

சென்னை, ஜூன் 15- மனித கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலைத் தடை செய்ய அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற நூலும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை பல்கலைக் கழக இதழியல் துறைத் தலைவர் ரவீந்திரன் கூறினார். "கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ் வுக்கான சட்டம் 2013 மற்றும் அதற்கான விதிகள்' என்ற தலைப்பிலான பயி லரங்கம் சென்னை பல் கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடை பெற்றது.

இதில் ஆர். தாண்டவன் பேசியதாவது:

நாட்டில் பல்வேறு சட் டங்களும், மசோதாக்களும் தொடர்ந்து நிறைவேற்றப் பட்டு வருகின்றன. ஆனால், அவை குறித்தும், இயற்றப் படும் சட்டங்களில் உள்ள சரத்துக்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மக்கள் அறிவதில்லை. இதனால் சட்டம் இயற்றப்பட்டதின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.

இது குறித்து பல் கலைக்கழகத்தின் பொருளா தார கல்விக்கான டாக்டர் அம்பேத்கர் மய்யமும், இளைஞர் மேம்பாட்டுக் கான ராஜீவ்காந்தி தேசிய நிறுவனம் மற்றும் சமூக அமைப்புகள் மேற் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

புதுடில்லி சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் அமைப்பின் தேசிய ஒருங் கிணைப்பாளர் பெஸ் வாடா வில்சன்: கழிவு களை அகற்றும் தொழி லில் ஈடுபடும் சமூகத்தின ரின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ. 4,500 கோடி திட்ட நிதியை ஒதுக் கியுள்ளது. மேலும், வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கழிவுகளை கையால் அள்ளும் சூழலே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வரு கிறது.

மேலும் அண்மையில் இயற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தில், கழிவுகளை கையால் அகற்றும் தொழி லில் ஈடுபடுபவர்களின் மறுவாழ்வுக்காகவும், இந்த தொழிலில் ஊழியர்களை கட்டாயமாக ஈடுபடுத்து பவர்களுக்கான தண்டனை களும் இடம் பெற்றுள்ளன. தேசிய குற்றப் பதிவு அமைப்பில், நாடு முழு வதும் நடைபெறும் வாகன விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவ ரம் உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் குறித்த புள்ளி விவரங்கள் பதிவு செய் யப்பட்டிருக்கும் நிலையில், சாக்கடை மற்றும் கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தவர்கள் குறித்த விவ ரங்கள் இடம் பெறவில்லை.

எனவே, முதலில் நாம் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் எத்தனை பேர் இறந்துள்ளனர், இந்தத் தொழிலில் எவ்வளவு பேர் இப்போது ஈடுபட்டு வரு கின்றனர் என்பது குறித்த முழுமையான தகவலை முறைப்படி சேகரிக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புள்ளி விவரத்தைத் தயாரித்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் ரவீந் திரன் கூறியதாவது: கழிவு களை கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமை யாகத் தடை கொண்டுவர வேண்டுமானால், முதலில் ஜாதியற்ற சமூகம் உரு வாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே, இந்த தொழில் தொடருவதற்கு காரணமாகக் கருதப்படு கிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், சட்ட மேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும், தந்தை பெரியா ரின் பெண் ஏன் அடிமை யானாள் என்ற நூலும் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும், பல் கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித் துறை மற்றும் புத்தர் கல்வித் துறை என்ற இரண்டு புதிய துறைகள் உருவாக்கப் பட வேண்டும்.

இந்த இரு கருத்துகளை யும் ஏற்றுக்கொண்ட பல் கலைக்கழக துணைவேந் தர், விரைவில் இந்த இரு கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார் என்றார்.

பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணைச் செயலர் சஞ்சீவ் குமார், 1993-இல் இயற்றப் பட்ட சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் இயற்றப்பட் டது ஏன் என்பது குறித்து விளக்கிக் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82233.html#ixzz34l7XnVyj

தமிழ் ஓவியா said...


இப்போது இருக்கக் கூடிய சூழ்நிலையைப் பார்த்தால் காந்தியாரை கொன்ற கோட்சேவிற்கு பாரத ரத்னா விருது கிடைத்துவிடும் போலிருக்கிறது நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி கர்ஜனை


புதுடில்லி, ஜூன் 15-_முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முஸ் லிம்கள் அறிஞர்கள் தங் களது சொற்பொழிவு களில் பேசி வந்த கர் ஜனைகளை அய்தராபாத் எம்.பி அசத்துன் உவைசி அவர்கள் (11.6.2014) அன்று நாடாளுமன்றத் தில் மோடி மற்றும் நூற் றுக்கணக்கான பா.ஜ.க எம்பிக்களுக்கு முன்னால் பேசி நாடாளுமன்றத் தையே ஆச்சரிப்பட வைத்துவிட்டார்.

அவர் கேட்கும் ஒவ் வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத பி.ஜே.பி எம்.பிக்கள் இடையில் அவரை மறித்து கூச்சலிட்டனர். இருந்த போதிலும் அவர் களைச் சமாளித்து அசத்து உவைசி பேசியது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் பி.ஜே.பி எம்.பி ஒருவர் அவரது பேச்சை நிறுத்தச் சொல்லும் போது உன் தம்பிக்கு போய் சொல் லிக்கொடு என்ன பேசனும் ன்னு; எனக்கு நீ சொல்லாதே; எதுவா இருந்தாலும் சபாநாயகர் கிட்ட சொல்லு; எனக்கு நான் என்ன பேசுறேன்னு தெரியும் என்றார்.

அவர் பேசிய உரையின் சுருக்கம் வருமாறு: இந் தியாவில் நான்கு சம் பவங்கள், இந்த நாட்டின் அடித்தளத்தை ஆட்டும் அளவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. முத லாவது காந்தியார் படு கொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு. இந்த சம்பவங் களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதத்தன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையைப் பார்த்தால், காந்தியை கொன்ற கோட் சேவிற்கு பாரத ரத்னா அல்லது வீர் சக்ர விருது கிடைத்து விடும் போலி ருக்கிறது. மோடியின் வெற்றி ஒரு சோககரமான வெற்றி. இந்திய அரசி யலமைப்பை காப்பாற்ற உறுதியெடுத்து, நாட்டு மக்களின் மேம்பாடு பற்றி அனைத்து எம்.பி க்களும் பேசுகின்றார்கள். நாட்டு மக்கள் என்பது அனைவரையும், அனைத்து சமுதாயத்தை யும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

உங் களது (மோடியை பார்த்து) அமைச்சர் முதல் நாளிலேயே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை, பார்சிகள் மட் டும்தான் சிறுபான்மை யினர் என்கிறார், என்பதா யிரம் பார்சிகளுக்காகவா ஒரு மத்திய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீக்கியர்கள், புத்தர்கள், கிறிஸ்துவர்களின் நிலை என்ன? நாலரை சதவிகித இட ஒதுக்கீட்டில் இந்த அரசின் நிலை என்ன? பிரதமர் மோடி சமபங்கு, சம உரிமை என பேசு கிறார்.

அக்ஷாதம் விஷ யத்தில், உச்சநீதிமன்றம் தற்போதைய பிரதமரும், அன்று குஜராத்தின் முதல்வருமாக இருந்த மோடி அமைச்சகத்தை விமர்சித்துள்ளது. இதற்கு இந்த மோடி அரசு மன்னிப்பு கேட்குமா? நான் இங்கு பாதிக்கப் பட்டவர்களின் சொந் தக்காரனாக, பேச முடி யாதவர்களின் குரலாக கேட்கிறேன், அநீதி இழைக்கப்பட்டோருக் கும், குஜராத்தில் படு கொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.

மோடி அரசு வந்ததும் இந்த நாட்டில் என்ன நடக்கிறது? புனே உட் பட நாட்டில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படு கிறது. இதற்கு காரண மான இயக்கங்களையும், அபினவ் பாரத் உட்பட அனைத்து இயக்கங்களை யும் தடை செய்ய வேண் டும் என்று கர்ஜித்த குர லில், பல இடைமறியல் களுக்கு மத்தியில் சலிக்கா மல் சமாளித்து பதில் கொடுத்து நாடாளுமன் றத்தில் பேசியுள்ளார் அசத்துன் உவைசி!

Read more: http://viduthalai.in/page-2/82230.html#ixzz34l7rJtnW

தமிழ் ஓவியா said...


பூரணலிங்கனார்


மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (மே 25, 1866 - சூன் - 6, 1947) தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன் மையையும், உயர்வை யும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முந் நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் 1866 இல் பிறந்தார். இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத் தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங் கோட்டை இந்துக் கல் லூரி, சென்னை கிறிஸ் தவக் கல்லூரி, கோயம் புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெ ரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங் களில் ஆங்கிலப் பேரா சிரியராகப் பணியாற் றினார். ஆங்கிலப் பேரா சிரியராக இருந்த பூரண லிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர் வும் கொண்டு வாழ்ந்த துடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

நூல்கள் இயற்றல்: பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல் களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள் ளார். திருக்குறள் முழு வதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரை யும் எழுதினார். நீதிக்கட்சி நடத்திய ஜஸ்டிஸ் ஏட்டின் துணை ஆசிரியராகவும் இருந் துள்ளார். இவரால் எழுதப் பட்ட இராவணப் பெரியார் என்னும் ஆய்வு நூலை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 1936ஆம் ஆண்டிலேயே முதல் பதிப்பாக வெளியிட்டது. அதற்குப் பின் பல பதிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

அந்நூலில் அவர் கூறுகிறார்: இராமா யணம் கட்டுக் கதையாக இருந்தாலும், இராவணன் ஒரு வீரன் என்பதில் சந்தேகமே இல்லை. திரா விடர்கள் இராவணனை ஒரு வீரப் புருஷனாகவே மதித்து வந்தார்கள். அவன் அனேக தேசங் களை வென்றதாகவும், ஆரியரை எதிர்த்துப் போராடியதாகவும் மதித் தார்கள். திராவிட சிசு வான சம்பந்தரும்கூட இராவணனைப் பாராட் டிப் பாடியிருக்கிறார். அவனது காலத்தில் அவன் பெரிய வீரனா கவே விளங்கினான் என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் பூரண லிங் கனார்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/82255.html#ixzz34oBuVxzc

தமிழ் ஓவியா said...

அர்ச்சகர்கள் பட்டினி!

ஆந்திர மாநிலம் தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள கோயில் - ராமன் கடவுளுக்குப் பூஜைகள் செய்யும் போது ஸ்ரீ ராமச்சந்திர நமஹ என்று பாராயணம் செய்யாமல் ஸ்ரீராம நாராயண நமஹ என்று அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லி வருகிறார்கள். இதனைச் செவியுற்ற பக்தர்கள் இதுபோல் சொல்லக் கூடாது என்றார்கள் அர்ச்சகர்கள் இதனை ஏற்கவில்லை. கோயில் அதிகாரிகளிடம் பிரச்சினை சென்றது.

இனிமேல் ஸ்ரீ நாராயண நமஹ என்ற மந்திரத்தைச் சொல்லக் கூடாது; ஸ்ரீராமச்சந்திர நமஹ என்று தான் கூற வேண்டும் என்று அர்ச்ச கர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

இதனை அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் காலமாக நாங்கள் சொல்லிக் கொண்டு வரும் மந்திர வாசகத்தை மாற்ற முடியாது என்று கூறி பட்டினி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றன. ஆனால் கடவுளை எப்படித் துதிப்பது என்பதில் குஸ்தி நடந்து கொண்டு இருக்கிறது.

இவ்வளவுக்கும் ராமன் யார் என்றால் நாராயணனின் (விஷ்ணுவின்) அவதாரம் தானாம் - இதில் நாராயணப் பெயரைச் சொன்னால் குடியா மூழ்கிப் போகும். வைணவர்களுக்குள் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென் கலை நாமம் போடுவதா என்று நீதிமன்றம் செல்லவில்லையா? சரி... அந்த இராமச்சந்திரமூர்த்தியாவது இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று பக்தர்கள் கனவிலும், அர்ச்சகர் கனவிலும், அதிகாரிகளின் கனவிலும்தான் சொல்லித் தொலைக்கக் கூடாதா? அது என்ன செய்யும்? அதுதான் குத்துக் கல்லாயிற்றே! அதனால் என்ன செய்ய முடியும்? மறைந்த கணபதி ஸ்தபதி சொன்னாரே - கடவுளை யார் கண்டது? நாங்கள் வடித்து வைத்தது தானே என்று சொல்லவில்லையா!

Read more: http://viduthalai.in/e-paper/82262.html#ixzz34oC7gzmd

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

பஞ்சகவ்யம்

பஞ்ச என்றால் ஐந்து, கவ்ய(ம்) என்றால் பசுவிடமி ருந்து அல்லது பசுவினுடை யது என்று பொருள். பசுவிலிருந்து கிடைக்கப்படும் ஐந்து பொருட்களை சரியான விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை பஞ்சகவ்யம் எனப்படும். பால், தயிர், நெய், கோமி யம், கோமயம் (பசுஞ் சாணம்) ஆகியன பசு விடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட் களாகும். இந்த ஐந்து பொருட் களுக்கும் பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றைச் சுத்தி செய்யும் திறன் உள்ளது. பால் ஆகா சத்தைச் சுத்தி செய்யும். தயிர் வாயுவைச் சுத்தி செய்யும். நெய் அக்னி யைச் சுத்தி செய்யும். கோமியம் ஜலத்தைச் சுத்தி செய்யும். கோமயம் ப்ருதிவியைச் சுத்தி செய்யும். மனித சரீரம் பஞ்ச பூதங்களால் உருவான படியால் மேற் கூறியபடி, பால், சோர்வடைந்த ஆத்ம (பிராண) சக்தியைச் சீர் செய்யும். தயிர், சீர்கெட்டுப் போன வாயுவை சரி செய்யும். நெய், உஷ்ணச் சீர் கேட்டைச் சரி செய்யும். கோமூத்திரம், நீர்க்கட்டு சம்பந்தப்பட்ட உபாதைகளைச் சரி செய்யும். கோமயம், உடம்பில் உள்ள அசுத்த மலங்களை நீக்கும்.

பஞ்சகவ்யத்தை உட் கொள்வதால் ஆத்ம சுத்தியும், சரீர சுத்தியும் அடைய முடியும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பஞ்சகவ்யத்தை உட்கொள்வதால் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி வலு வடைகிறது என்ற நம்பிக்கை யும் நிலவி வருகிறது. செடி களுக்கும் பயிர்களுக்கும் செயற்கையான நச்சுப் பொருட்கள் அடங்கிய உரங் களைத் தவிர்த்து, பஞ்சகவ் யத்தை உரமாக உபயோகிப்ப தன் மூலம் இயற்கை விவசாய மும் வெற்றிகரமாக நடக்கிறது. - தி தமிழ் இந்து

மாட்டின் கழிவுப் பொருள்களான சாணியையும், மூத்திரத்தையும் உணவுப் பொருள் களான பால், தயிர், நெய் யோடு கலப்பது என்பது முத லில் கலப்படக் குற்றம்.

மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதும் மாட் டுச் சாணியைத் தின்னச் சொல்வதும்தான் ஆன்மிகமா? இந்தக் கலவையை சோதனைச் சாலையில் பரி சோதிக்கச் செய்தால் அதன் முடிவு எதுவாக இருக்கும்? பக்தி வந்தால் புத்தி போகும் என்பது இது தானோ!

Read more: http://viduthalai.in/e-paper/82261.html#ixzz34oCSwE9J

தமிழ் ஓவியா said...


நெஞ்சு பொறுக்கு தில்லையே!



நாள் தோறும் ஏடுகளைப் புரட்டும் போது தவறாமல் ஒரு செய்தி மட்டும் வெளி வந்து கொண்டேதான் இருக்கிறது. அதுதான் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாகும்.

மத்தியப் பிரதேசத்தில் கணவனே தனது கூட்டாளி களை ஏவி, தன் மனைவியைச் சீரழித்ததுடன் நிர்வாண மாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றான் என்பதும் அந்தவூரில் உள்ள எந்த ஒரு மனிதரும் அவனைத் தடுக்கவில்லை என்பதும் நாம் நாகரிக உலகத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை நள்ளிரவில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றெல்லாம் செய்தி வருகிறது. டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் சூறையாடப்பட்டார் என்ற போது தலை நகரமாம் டில்லியே கொந்தளித்து எழுந்தது.

இதுபோன்ற பிரச்சினைகள் நடக்கும்பொழுது அது பற்றியெல்லாம் கருத்துத் தெரிவிக்க வேண்டுமா? ஏன் அமைதியாக இருந்து விடக் கூடாது? நம் பெண்களின் கவுரவத்துடன் விளையாடிக் கொண்டு இருக்கிறோம் என்று இதோபதேசம் செய்கிறார் பிரதமர் மோடி அவர்கள். டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்த்து, பெரிய கொந்தளிப்புத் தீயை விசிறி விட்டதில் பிஜேபிக்குப் பங்கு இல்லையா?

டில்லி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு பிஜேபி சங்பரிவார், ஆம்ஆத்மி அமைப்புகள் டில்லியையே ஸ்தம்பிக்கச் செய்தனரே!

இன்றைக்கு பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கணவனே தன் மனைவியைச் சீரழித்து நிர்வாண ஊர்வலம் நடந்திருக்கிறது என்றவுடன் பிரதமர் வேறு குரலில் பேசுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பான்வாரி என்ற சமூக சேவகி - குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார் என்பதற்காக உயர் ஜாதியினர் அந்தப் பெண்ணைச் சூறையாடினர். அப்பொழுதும் அங்கு நடந்தது பிஜேபி ஆட்சிதான். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனை செய்து உரிய நேரத்தில் சான்று கொடுப்பதற்கு மருத்துவரும் முன்வரவில்லை.

கடைசியில் நீதிமன்றம் என்ன தீர்ப்புக் கூறியது தெரியுமா? உயர் ஜாதி பிராமணர்கள் கீழ் ஜாதிப் பெண்ணைக் கற்பழித்து இருப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்? என்று நீதிபதிகளே தீர்ப்பில் சொல்லவில்லையா? மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது தானே இது!

மத்தியப் பிரதேசத்தில் இப்பொழுதுதான் இந்தக் காட்டு விலங்காண்டித்தனம் நடைபெறுவதாக யாரும் கருதத் தேவையில்லை. 1998 செப்டம்பர் 25இல் நடந்த குரூரம் அது! ஜாபுலா கிராமத்தில் கிறித்தவர்கள் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வந்தார்கள். நள்ளிரவில் கதவைத் தட்டி மருத்துவமனையில் புகுந்த சங்பரிவார்க் கும்பல் நான்கு கன்னிகாஸ்திரிகளை கதறக் கதற பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார்கள்.

அதைவிட வன்கொடுமை எது தெரியுமா? தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்று மிக்க இந்து இளைஞர்களின் கோபம் என்று அதனை வருணித் தவர் பி.ஜே.பி.யின் முன்னாள் மக்களவை உறுப்பினர் வைகுந்தலால் சர்மா.

இவற்றையெல்லாம் பார்த்துதான் மேற்குவங்க அன்றைய முதல் அமைச்சரும் மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு ஹிஸீநீவீஸ்வீறீவீமீபீ ஙிக்ஷீமீயீஷீக்ஷீநீமீ (அநாகரிகமான காட்டுமிராண்டிக் கும்பல்) என்று மிகச் சரியாகவே சொன்னார். இப்பொழுதுள்ள பிரதமரோ பெண்கள் மீதான இத்தகு வன்கொடுமைகள் பற்றிக் கருத்துத் தெரிவித்து அவர்களின் கவுரவத்துடன் விளையாட வேண்டாம் என்று கூறுகிறார்.

மக்கள் மன்றத்தில் பெண்கள்மீதான இந்தப் பிரச் சினை விவாதிக்கப்பட்டே தீர வேண்டும். இதற்கொரு தீர்வைக் கண்டே ஆக வேண்டும். இதுபோன்ற குற்றங் களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகள், வழமையான முறையில் காலங் கடத்தாமல் உடனுக்குடன் நீதி வழங்கப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டாக வேண்டும்; பெண்களும் தற்காப்பு பயிற்சிகளையும் சட்டத்திற்குட்பட்ட ஆயுதங்களையும் கைவசம் வைத் திருக்க வேண்டும். நாலு இடத்தில் உதைப்பட்டார்கள் கயவர்கள் என்றால் பரிகாரம் தானாகக் கிடைக்கும் - ஈரோட்டு மருந்தே சரியான தீர்வாக இருக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/82269.html#ixzz34oD0C2OH

தமிழ் ஓவியா said...


திருக்குறள்


நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும். - (விடுதலை,3.10.1958)

Read more: http://viduthalai.in/page-2/82268.html#ixzz34oD6q5qu