tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3858390494955502223..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சுயமரியாதை இயக்கம் அரசியலில் தலையிடுவது ஏன்?-பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11894670162183979992014-06-22T06:22:47.585+05:302014-06-22T06:22:47.585+05:30
மலேரியாவை ஒழிக்க கொசுக்களே!
கொசுக்கள் மூலம் மலே...<br />மலேரியாவை ஒழிக்க கொசுக்களே!<br /><br /><br />கொசுக்கள் மூலம் மலேரியா ஒழிப்பு நட வடிக்கையை மேற்கொள்ள விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டியுள்ளனர். மலேரியா நோய், கொசுக்கள் மூலம் பரவுகின்றது. இது அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க் கிருமிகளை உற்பத்தி செய்கிறது. பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. எனவே மலேரியா என்ற கொடிய நோயை கொசுக்கள் மூலமே ஒழிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டி ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற் கொண்டனர்.<br /><br />அதன்படி புதிய மரபணு மூலம் மலேரியாவை உருவாக்கும் அனோபிலெஸ் காம்பியே கொசுக் களில் ஆண் கொசுக்களை மட்டும் 6 தலைமுறைகளாக மாற்றி மாற்றி உரு வாக்கினர். அதன் மூலம் மலேரி யாவை பரப்பும் பெண் கொசுக்கள் ஒழிந்து ஆண் கொசுக்களை மட்டும் பெருக்கமடைய செய்தனர். இதன் மூலம் மலேரியா கிருமிகளை உரு வாக்கும் கொசுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என விஞ் ஞானிகள் நம்புகின்றனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page6/82576.html#ixzz35KBg8oLa<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81667010480846150992014-06-22T06:17:21.323+05:302014-06-22T06:17:21.323+05:30
மத(யானை) அட்டகாசம்!
மோதல்கள் போதுமடா! - மதங்களி...<br />மத(யானை) அட்டகாசம்!<br /><br /><br />மோதல்கள் போதுமடா! - மதங்களின்<br />மோதல்கள் போதுமடா! . . . (மோதல்கள்)<br />வாதங்கள் ஆயிரம் பக்கம் - பக்தி<br />வாழ்க்கையில் செத்தபின் சொர்க்கம்!<br />சேதங்கள் எதற்கு மீண்டும்? - மக்கள்<br />சிந்தித்துத் தெளிந்திட வேண்டும்! . . .<br />(மோதல்கள்)<br />1. இந்துநாடா இசுலாம் நாடா - இது<br />எந்தநாடு சொல்லவா?<br />இந்து அல்ல இசுலாம் அல்ல - இந்தியா<br />ஏழைநாடு அல்லவா?<br />தானமே வேண்டும் இன்றும் - சமா<br />தானமே வேண்டும் என்றும்! . . .<br />(மோதல்கள்)<br />2 கடப்பாறை சூலம் வெடிகுண்டு - வலிய<br />கரங்களுக்கு தேவையா?<br />கடல்போல குருதி வெள்ளம் - அன்புக்<br />கடவுளுக்குத் தேவையா?<br />புத்திவந்தால் பக்திபோகும் - உனக்கு<br />பக்தி வந்தால் புத்திபோகும்! . . .<br />(மோதல்கள்)<br /><br />- குபேரன்<br /><br />Read more: http://viduthalai.in/page6/82574.html#ixzz35KBQ76ND<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8785624534725959782014-06-22T06:12:40.390+05:302014-06-22T06:12:40.390+05:30
கழக மருத்துவர் புகழேந்தியின் மனித நேயப் பயணம்
த...<br />கழக மருத்துவர் புகழேந்தியின் மனித நேயப் பயணம்<br /><br /><br />தந்தை பெரியார் கொள்கையின் பால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஈர்க்கப் பட்டு அதனை ஏற்று இயக்கத்தை வலுப்படுத்த வந்தவர்கள் ஏராளம். அந்த வகையிலே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற சிற்றூரில் இருந்த கொள்கை வீரர்கள் ராமமூர்த்தி _- சாந்தா இவர்கள் தமது மகன், மகள் களை பெரியார் கொள்கை நெறியோடு வளர்த்தது மட்டுமல்ல தந்தை பெரியாரின் மனித நேயத்தையும், ஈகை குணத்தையும், கல்வியையும் போதித்தது சிறப்பாகும்.<br /><br />தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் நிறுவனங்களுக்கு செல்லும் போது அதன் நிர்வாகிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தும் மிக முக்கிய கருத்துகளில் முதன்மை வாய்ந்தது என்ன வென்றால் அனைவரும் பள்ளி நடத்துவது போன்று நம் பள்ளி நடைபெறுவது சிறப்பல்ல. தந்தை பெரியார் கூறியதை போல வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், சமுதாயத் தில் பின் தங்கியவர்களுக்கும் முதல் தலைமுறையினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு பல பள்ளிகள் வாய்ப்பு வழங்கும். படிப்பில் ஆவரேஜாக (பின் தங்கி) உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி அவர்களை பள்ளியில் சேர்த்து அந்த மாணவர்களை நல்ல சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும் எனக் கூறுவார்.<br /><br />அந்த வகையிலே ராமமூர்த்தி - சாந்தா ஆகியோரது மகன் மருத்துவர் புகழேந்தி அரசு மருத்துவராக பணி யாற்றி வந்தார். தன்னுடைய சேவை பின்தங்கிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நோக்கோடு மலை வாழ் மக்கள் வாழும் நீலகிரி, குன்னூர் பகுதி அரசு மருத்துவ மனைக்கு மாற்ற லாகி சென்று தொண்டு செய்து வந்தார். அவரது தொண்டினால் கவரப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவரை பணிகள் முடிந்ததும் தங்கள் தொண்டு நிறுவனத்தில் இணைந்து மலைவாழ் மக்களுக்கு பணியாற்றக் கேட்டுக் கொண்டனர். அந்த வகையில் அவருடைய பணிக்காலம் நிறைவடைந் ததும் நீலகிரி ஆதிவாசி நல்வாழ்வு அமைப்பு என்ற தொண்டு நிறுவனத் தின் மூலம் அம்மக்களுக்கு தொண் டாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.<br /><br />இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் குன்னூர் பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் (இருளர், தோடர்) வாழும் சுமார் 26 கிராமங்களுக்கு மாதத்தில் ஒரு முறை என வகை பிரித்து சென்று அந்த மக்கள் வாழும் இடத் திற்கே நேரில் மருத்துவர் புகழேந்தி, செவிலியர் வனிதா, இரத்த அழுத்த ஆய்வகர் கலைவாணி, ஓட்டுநர் அசோக் ஆகியோர் சென்று மக்களை பரிசோ தித்து ஊசிபோட்டும், அடுத்து இவர் கள் செல்லும் நாள் வரைக்கும் தேவை யான மருந்துகள் வழங்கியும் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கிராமங்களுக்கு பேருந்து வசதி என்பது ஒரு நாளுக்கு காலை, இரவு இருமுறைதான் உண்டு. அந்த மக்கள் ஏதேனும் பொருட்கள் வாங்க வெளியே செல்ல நேரிட்டால் காலையில் சென்று இரவுதான் திரும்ப முடியும்.<br /><br />சில கிராமங்களில் மாணவர்கள் படிப்பதற்கு அங்கேயே அரசு பள்ளி சிறந்த கட்டடத்துடன் அமைந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று.<br /><br />மருத்துவர் புகழேந்தியுடன் ஒருநாள் பயணத்தில் அங்கே உள்ள மக்களுக்கு புன்முறுவலோடு அந்த மக்களின் மன நிலைக்கேற்ப பதில் கூறி நகைச்சுவை உணர்வோடு அம்மக்களிடம் பழகியதை காணமுடிந்தது. ஒரு மருத்துவர் அணுகுமுறை நோயாளியின் பாதி நோயை சரிசெய்துவிடும் என்ற எண்ணம் தோன்றியது. திரும்பும் வழியில் முதியவர் ஒருவர் நின்று கைகாட்டியதும் வண்டியை நிறுத்தி அவருக்கு சிகிச்சை, மருந்து, ஊசி வழங்கிய பின் வாகனம் புறப்பட்டது.<br /><br />அமெரிக்காவிலிருந்து குன்னூர் வருகை தந்த முக்கிய பிரமுகர் பொறியாளர் பாலகுரு அவர்கள் தான் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல விரும்பவில்லை. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு செல்ல வேண்டும் என விரும்பி தனது குடும்பத்தாருடன் மருத்துவர் புகழேந்தி சென்ற கிராமத்திற்கு சென்று அவர் பணியை கண்டு வியந்து பொதுவாக மருத் துவர்கள் நல்ல வசதியுள்ள இடத்தில் தான் பணியாற்ற விரும்புவார்கள். நீங்கள் செய்யும் இந்த பணி மகத்தான பணி என 60ஆம் ஆண்டு அகவை காணும் மருத்துவர் புகழேந்தியை மனதார வாழ்த்தினார்.<br /><br />தந்தை பெரியாரின் தொண்டுள்ளத் தால் மனித நேயத்தோடு வளர்ந்த மருத்துவர் புகழேந்தி சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தொண்டாற்ற அடுத்த கிராமத்தை நோக்கி புறப்பட்டார். தொடரட்டும் அவரது சமுதாய தொண்டு.<br /><br />Read more: http://viduthalai.in/page4/82561.html#ixzz35KA3xUn4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30140885819553257702014-06-22T06:07:49.163+05:302014-06-22T06:07:49.163+05:30
த.பெ.தி.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு....<br />த.பெ.தி.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தமிழர் தலைவர் முன்னிலையில் தோழர்களுடன் கழகத்தில் இணைந்தார்!<br /><br />சென்னை, ஜூன் 21- தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், இன்று (21.6.2014) சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து, திராவிடர் கழகத்தில் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.<br /><br />தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் ஓரணியில் இணைந்து பணியாற்றும் நோக்கில், திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.<br /><br />வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களுடன் த.பெ.தி.க. தோழர்கள் சொ.அன்பு (வடசென்னை மாவட்டத் தலைவர்), வி.ஜனார்த்தனன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), கண்ணதாசன் (காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்), ரகுநாத் (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), ஜெய்சங்கர் (திருவல்லிக்கேணி துணை அமைப்பாளர்), எருக்கஞ்சேரி தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், வழக்குரைஞர் காண்டீபன், பாட்சா உள்ளிட்ட த.பெ.தி.க. தோழர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.<br /><br />முன்னதாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், விடுதலை சந்தாவுக்கான நன்கொடையும் அளித்தார். தோழர் வி.ஜனார்த்தனன் ஈராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.<br /><br />திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/82578.html#ixzz35K917aBe<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30365542459432192812014-06-22T06:04:51.950+05:302014-06-22T06:04:51.950+05:305 ரூபாய் இனாம் -சித்திரபுத்திரன் -
திரு. காந்தியி...5 ரூபாய் இனாம் -சித்திரபுத்திரன் -<br /><br />திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாகிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த் தாலும் பெரிதும் பார்ப்பனர்களே கலந்து அவர்களே முழுதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன?<br /><br />திரு. காந்தி இந்த சத்தியாகிரகப் போருக்குப் பணமே வேண்டியதில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோ பாலாச்சாரியார் பணம் வேண்டும் மென்று கேட்பதின் இரகசியமென்ன? அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூழ்ச்சி என்ன?<br /><br />இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார் களையே ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன? இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்கக் காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையளிப்பவர் களுக்கு குடிஅரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனா மாகவும் அளிக்கப்படும்.<br /><br />குறிப்பு : - முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான விடை எது என்பதை நிர்ணயிப்பதற்கும் நானேதான் ஜட்ஜு எனக்குமேல் அப்பிலோ கேள்வியோ கிடையாது.<br /><br />- குடிஅரசு - அறிவிப்பு - 30.03.1930<br /><br />Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K8Gbv1c<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45659482822588106392014-06-22T06:04:04.414+05:302014-06-22T06:04:04.414+05:30
செங்கல்பட்டு ஜில்லாபோர்டு தேர்தல்
செங்கல்பட்டு ...<br />செங்கல்பட்டு ஜில்லாபோர்டு தேர்தல்<br /><br /><br />செங்கல்பட்டு ஜில்லாபோர்டுக்கு 30 - 01 - 1929 தேதியில் தலைவர் தேர்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேர்தல் அடுத்த மார்ச்சு மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டதாக ஒரு சேதியும், தேர்தல் நடந்து ராவ்சாகிப் திரு. ஜெயராம் நாயுடு அவர்கள் தலைவராக தேர்தல் ஆகிவிட்டதாக ஒரு சேதியும் கிடைத்திருக்கின்றது.<br /><br />எப்படியானாலும் தேர்தல் முடிவு நமது உண்மை நண்பர்களான திரு. திவான்பகதூர் எம்.கே.ரெட்டியாருக் காவது அல்லது திரு. ராவ்சாகிப் சி. ஜெயராம் நாயுடு காருக்காவது ஆகாமல் அதற்கு விரோதமாய் வெளியாருக்கு அதாவது பார்ப்பன அடிமைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதே நமது ஆசை.<br /><br />இருவரும் சுயமரியாதை வீரர்களே ஆவார்கள். நிற்க, நாம் கொஞ்ச காலத்திற்கு முன் பார்ப்பனர்களும், பார்ப்பனக் கூலி களும், அடிமைகளும் அவர்களது யோக்கியதை வெளி யாக அடங்கிப் போய்விட்டார்கள். ஆனாலும் மறுபடியும் தலைகாட்ட நமக்குள் ஏதாவது சண்டை ஏற்படவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />என்று சொன்னபடிக்கு இச்சிறு விஷயங்களைக் கண்டே பார்ப்பனர்களும், அடிமைகளும் தலைநீட்ட புறப்பட்டு விட்டார்கள். ஆனாலும், ஜாண் நீட்டினால் முழம் கத்தரிக்க நமக்குச் சக்தி உண்டு. பழைய ஆயுதங்கள் எண்ணெய் இட்டு உறையில் வைத்திருக்கின்றதே தவிர மழுங்கிப் போய்விடவில்லை. யாரும் பயப்படத் தேவையில்லை!<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 02.02.1930<br /><br />Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K83xhpp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5983076120489341292014-06-22T06:03:02.317+05:302014-06-22T06:03:02.317+05:30
சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன...<br />சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாட்டில் பேசியது<br /><br /><br />சகோதரர்களே!<br /><br />இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக்கை யைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்பகால நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றது. அதாவது இந்தியப் பொதுமக்களுடையவும், பாமரமக்களுடையவும் நன்மைக்காக வென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக் கப்பட்டது.<br /><br />ஆனால் இதை ஆரம்பித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகத்திற்கும், தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப் புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையா யிருந்தார்கள். அம்மகாநாடுகளில் தங்கள் உத்தியோகத்திற் கேற்ற பல தீர்மானங்கள் செய்துவிட்டு பாமர மக்களை ஏமாற்ற ரோடுகள் போட வேண்டும், வரி குறைக்க வேண்டும், காடு திருத்தவேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள்.<br /><br />காரியத்தில் சீர்திருத் தம் என்னும் பேரால் கொழுத்த சம்பளமுள்ள சில உத்தியோகங் களை அந்தப் படித்தக் கூட்டத்தினர் அனுபவிக்கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்த படி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதி காரங்களும் மற்றும் தொல்லை களும் பெருகினதைத் தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்பட வில்லை.<br /><br />சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சி களும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய்விட்டது. ஏனென்றால், ஸ்தாபனங்களில் முக்கியஸ்தர்களாயிருக் கின்றவர்கள் அதனால் ஏற்படும் உத்தியோகங்கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர் களுக்குப் பங்கு கொடுக்காமல் ஏமாற்றச் சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள் பிரிந்துபோய் வேறு ஸ்தா பனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர்களா வதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப்படாதவர்கள் ஜாதி மத வகுப்புகளின் பேரால் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது.<br /><br />எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமூக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும், ஸ்தாபனங்களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதிலுள்ளவர்களின் சுயநல சூழ்ச்சி யாலும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.<br /><br />ஆகையால், இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தும் படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும்.<br /><br />அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுய மரியாதையையும் உண்டாக்குவதே தவிர, உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டுமென்பதல்ல என்பதே எனதபிப்பிராயம்<br /><br />இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்று படுத்திக் கொண்டா லொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது.<br /><br />ஆதலால் நீங்கள் ஏதாவது எங்கள் காங்கிரசைப் பின்பற்றி, எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப்போல பாழாக்கி, ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளைவித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன்.<br /><br />(மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சபாஷ், சபாஷ், உண்மை, உண்மை என்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. இராமசாமியாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்).<br /><br />- குடிஅரசு -சொற்பொழிவு - 02.02.1930<br /><br />Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7mgszo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15591466483276484992014-06-22T06:02:11.408+05:302014-06-22T06:02:11.408+05:30
மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்
கோலாலம்பூர் விவே...<br />மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்<br /><br /><br />கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு<br /><br />சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர்கள் செய்யும் ஏமாற்றையும் வஞ்சகத்தையும் பற்றியும், ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கியமற்றவர்கள் என்றும், உதாரணமாக சென்னையில் உள்ள ராம கிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லையென்றும்,<br /><br />அங்கு புழங்கும் பணம் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பார்ப்பனரல்லா தாருடையதென்றும், வருஷம் 20, 30 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றதென்றும் இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலைவருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியர் சட்டசபையில்கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும்,<br /><br />ஆனாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக்கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமையாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொதுமக்கள் பணத்தை வசூல் செய்து, கொடுக்கின்றார்கள் என்றும், இங்கும் அதுபோல் இருக்கக்கூடாதென்று ஆசைப்படுவ தாகவும், விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்துமதப் பிரதி நிதியாய் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான பிரதிநிதியாய் இல்லாமல் இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாய் போய் கேசை ஜெயித்துக்கொண்டு வந்தாரென்றும்,<br /><br />ஆகையால் அதனாலேயே இந்துமதம் என்பதற்கு யோக்கியதை வந்து விடாதென்றும், அவர் இந்தியாவையும் இந்துக்களையும் பற்றி இந்தியாவில் பேசி இருப்பதைப் பாருங்கள் என்றும், பார்ப்பனர்களைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதும், வருணாசிரமம், ஜாதி வித்தியாசம் ஆகியவைகளைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்ப தையும்,<br /><br />இந்து அரசாங்கமாகிய மலையாளத்தைப் பற்றிச் சொல்லி இருப்பதையும், அவர் விக்கிரகங்களைப் பற்றிச் சொல்லும்போது அவை பாமர மக்களுக்கு வேண்டி ஏற்பட்டதே ஒழிய மற்றவர்களுக்கு அல்ல என்றுதான் சொன்னாரென்றும்,<br /><br />ஆனால், இப்போதைய விக்கிரகங்களை பாமர மக்களுக்கு உபயோகப்படாமலும், கண்ணில் பார்க்கக்கூட இடம் தராமலும், பண்டிதர்கள் பிரமஞானம் உடையவர்கள் கடவுளாலேயே அறிவாளிகளாய் பிறப்பிக்கப்பட்ட மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும், அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கும்தான் சாதனமாயிருக்கின்ற தென்றும்,<br /><br />மற்றும் தென்இந்தியாவுக்கு வேண்டியதெல்லாம் உண்மையான சுயமரியாதையே என்று அவர் சொல்லி இருக்கின்றார் என்றும் மற்றும் இப்படி அவர் சொன்ன அனேக விஷயங்களைப் புத்தகத்தைப் பார்த்தே எடுத்துச் சொல்லி 2 மணி நேரம் கூட்டத்தையே ஆச்சரியப்படும்படி செய்து விட்டார்.<br /><br />- குடிஅரசு - சொற்பொழிவு - 09. 02. 1930<br /><br />Read more: http://viduthalai.in/page-7/82600.html#ixzz35K7aVtOo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63391604737445088452014-06-22T06:00:52.234+05:302014-06-22T06:00:52.234+05:30கழகப் பேச்சாளர்கள், பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண...கழகப் பேச்சாளர்கள், பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!<br /><br />கழகப் பரப்புரை கூட்டங்கள், திருமணங்கள், இல்லத்திறப்பு, படத்திறப்புகளுக்கு கலந்து கொள்ள ஒப்புதல் அளித்து தேதி கொடுக்கும் கழகப் பேச்சாளர்கள், இது தொடர்பாக மாவட்ட, ஒன்றிய கிளைக்கழக பொறுப்பாளர்களுக்கு தங்கள் வருகையினை அருள்கூர்ந்து, அஞ்சல் அட்டை மூலமாகவோ, தொலைப்பேசி வாயி லாகவோ தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள் கிறோம்.<br /><br />மேலும், மேற்கண்ட நிகழ்ச்சிகளை நகல் பிரதி எடுத்து அனுப்பாமல் துண்டறிக்கைககள் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள் நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். தந்தை பெரியாரின் தலையாய கொள்கை தமிழர் தலைவரின் தலைமையில் தரணியெங்கும் தழைக்கச் செய்வோம்! - செல்வம், சண்முகம், நெய்வேலி வெ.ஞானசேகரன்<br />மாநில அமைப்புச் செயலாளர்கள்<br /><br />Read more: http://viduthalai.in/page-4/82638.html#ixzz35K7EfKWt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23589741778414827492014-06-22T05:59:16.499+05:302014-06-22T05:59:16.499+05:30
இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் மோதல் கை...<br />இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் மோதல் கைதான இந்து முன்னணியினர் சிறையில் அடைப்பு!<br /><br /><br />அம்பத்தூர், ஜூன் 21- இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி நேற்று பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 அரசு பேருந்து கண்ணாடிகள், 3 கார், லாரி உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.<br /><br />மேலும் சுரேஷ்குமார் உடலை மண்ணூர் பேட்டை சிடிஎச் சாலை சந்திப்பில் இந்து முன்னணி தொண்டர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டை பேருந்து நிலையம் வழியாக ஊர்வல மாக வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். அந்த வழியில் மசூதி இருப்பதால் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 10_க்கு மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர். பலர் சிதறி ஓடினர். மேலும் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டதில் 3 காவல் துறையினர் காய மடைந்தனர். இதையடுத்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் துறையினர் 52 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.<br /><br />பின்னர் 52 பேரில் 39 பேரை விடுதலை செய்தனர். 13 பேர் மீது பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தது, கற்கள் கம்புகளை வைத்து தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வழக்குகளின் கீழ் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.<br /><br />குமரியில் பதற்றம்<br /><br />அம்பத்தூரில் வெட்டி கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் உடல் குமரிக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. இறுதி ஊர் வலத்தின் போது திடீரென வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/82634.html#ixzz35K6pbv7V<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68577790702828751782014-06-22T05:57:34.675+05:302014-06-22T05:57:34.675+05:30இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை வெறும் 26 சதவ...<br />இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை வெறும் 26 சதவீதம்தான்!- இது சென்சஸ் கணக்கு<br /><br /><br />புதுடில்லி, ஜூன் 21_ பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான். இந்தக் கணக்கைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்!<br /><br />இந்தி பேசுவோர் 2001- ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேர் என கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45 சதவீதம் பேர்.<br /><br />அய்ந்தாவது இடம் தமிழுக்கு வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசு வோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப் பதிவு செய்திருந்தனர்.<br /><br />மத்திய அரசின் மோசடி இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய அரசு கணக்கு காட்டியிருப்பது ஒரு மோசடியான வேலை என்பது அம்பலமாகியுள்ளது. காரணம், இந்த 42 கோடி மக்களும் இந்தி பேசுபவர்கள் அல்ல.. வெவ்வேறு மாநிலங்களில் இந்தியின் கிளை மொழிகளைப் பேசுபவர்கள்.<br /><br />26 சதவீதம்தான் இந்தியை மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 கோடியே 79 லட்சம் பேர். அதாவது நாட்டு மக்கள் தொகையில் 26 சதவீதம். இந்தி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளான போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, சத்தீஸ்கரி, ஹரியான்வி, மேவாரி, மால்வி, மார்வாரி உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர் 15 கோடிக்கு மேல் உள்ளனர். இவை வட்டார வழக்கு மொழிகள் அல்ல. தனி எழுத்துருக்களைக் கொண்டவை. இந்த மொழி பேசுவோர் தங்கள் தாய்மொழி இந்தி என்று சொல்வதில்லை. அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.<br /><br />குற்றச்சாட்டு ஆனால் இதை மறைத்து விட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 42 கோடி பேர் என கணக்கு சொல்கிறது மத்திய அரசு. இதன் மூலம் பெரும்பான்மை யோர் பேசும் மொழி இந்தி என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.<br /><br />முரண்பாடு "இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது. இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள். இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது," என்கிறார் இந்திய மொழிகள் கணக் கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/82623.html#ixzz35K6QcpeU<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79883423295128582642014-06-22T05:56:16.130+05:302014-06-22T05:56:16.130+05:30
காரணம்
வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையு...<br />காரணம்<br /><br /><br />வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/82620.html#ixzz35K65dmt5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67160732039758942842014-06-22T05:55:16.904+05:302014-06-22T05:55:16.904+05:30தலைக் கவசமும் மதமும்
மத சம்பிரதாயம் காரண மாக சீக்...தலைக் கவசமும் மதமும்<br /><br />மத சம்பிரதாயம் காரண மாக சீக்கியப் பெண்கள் தலைக் கவசம் அணியத் தேவையில்லை என்ற உத்தரவு போல, இஸ்லாமி யப் பெண்களுக்கும் மத சம்பிரதாயத்தின் அடிப் படையில் தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை டில்லி ஆளுநரி டம் வைக்கப்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5rdqnd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27183565708690738162014-06-22T05:54:38.335+05:302014-06-22T05:54:38.335+05:30குஜராத்தும் தமிழ்நாடும்
தமிழ்நாட்டில் குழந்தைத் த...குஜராத்தும் தமிழ்நாடும்<br /><br />தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் 2011-இல் 0.42 சதவீதம் ஆகும்.<br /><br />1981ஆம் ஆண்டிலோ 0.98; படிப்படியாகக் குறைந் துள்ளது - இப்பொழுது எண்ணிக்கை 17,351.<br /><br />வளர்ச்சி வளர்ச்சி என்று தம்பட்டம் அடிக்கும் குஜராத்திலோ குழந்தைத் தொழிலாளர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்து 687.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5ituj6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50367627865375244142014-06-22T05:53:12.110+05:302014-06-22T05:53:12.110+05:30
இன்றைய ஆன்மீகம்? .......
தண்டனையா?
ஒருமுறை மும்...<br />இன்றைய ஆன்மீகம்? .......<br /><br />தண்டனையா?<br /><br />ஒருமுறை மும் மூர்த்திகளில் யாருக்கு சத்வ குணம் அதிகம் இருக்கும்? என்ற எண் ணம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.<br /><br />இதை சோதிக்க ஒவ்வொரு மூர்த்தியையும் நேரில் சந்திக்கச் சென்றார் முனிவர். பெருமாளே சத்வ குணம் படைத்தவர் என்று அறிந்தார்.<br /><br />முனிவர். திருமகள் உறையும் பெருமாளின் மார்பில் உதைத்தபோதுகூட திருமால் கோபம் கொள்ளாது.<br /><br />முனிவரின் கால்கள் நோகக் கூடாதே என்று கவலை கொண்டானாம். ஆனால் முனிவரின் செய்கையால் கோபம் கொண்ட திருமகள் திரு மாலைப் பிரிந்து பூலோகம் சென்றாள்.<br /><br />திருமால் தேவியைத் தேடிச் சென்ற போது, சுவர்ண முகி நதிக்கரை யில் ஒரு தடாகம் ஏற் படுத்தி அதன் கரையில் தவமியற்றுக என்று ஒரு அசரீரி கேட்டது. பெரு மாளும் அதன்படி 12 ஆண்டு காலம் தவம் செய்தார்.<br /><br />இறுதியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச திதியில் வெள்ளிக் கிழமை உத்திராட நட்சத்திரத்தில் மைத்திரம் என்ற முகூர்த்த நேரத்தில் திருமகள் பொற்றாமரை மலரில் தோன்றி திருமா லுக்கு மாலையிட்டாளாம்.<br /><br />கடவுளுக்கே சாபம் - தண்டனையா? அப்படி என்றால் அந்தக் கடவுள் எப்படி சர்வ சக்தி வாய்ந்தவர் ஆவார்? பக்தரைப் பகவான் சோதிப்பார் என்பார்கள்; இங்குப் பகவானைப் பக்தர் சோதிப்பது எப்படி?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82602.html#ixzz35K5E6fi9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61415124588655087392014-06-21T07:17:37.054+05:302014-06-21T07:17:37.054+05:30
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக் குழு இலங்கை ச...<br />இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக் குழு இலங்கை செல்கிறது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு<br /><br /><br />சென்னை, ஜூன் 20_ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் எம்.பி., எம். அப்துல் ரஹ் மான், மாநில செயலாளர் கள் காயல் மகபூப், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜா முதீன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று, துணை தூதர் ஏ. ஜபருல்லாஹ்கானை சந் தித்து அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு மனு ஒன்றை அளித்தனர்.<br /><br />அம்மனுவில், சிறீலங்கா இறுதிப் போருக்கு பின்ன ரும் அந்நாட்டில் வாழும் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும் பான்மை சிங்கள மக்களின் தாக்குதலுக்கு ஆளாவது குறித்து கவலை தெரிவிக் கப்பட்டிருந்தது.<br /><br />சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், அதற்கு பவுத்த துறவிகளே தலைமை தாங்கியதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த அம்மனுவில், தற்போது களுத்துரை மாவட்டம் அளுத்தகமா பேருவளை பகுதிகளில் பவுத்த பல சேனா வன்முறையாளர் களால் முஸ்லிம்கள் தாக் கப்பட்டு உயிர் உடைமை களை இழந்து தவிப்பது குறித்து பெரும் வேதனை தெரிவிக்கப்பட்டிருந்து.<br /><br />இலங்கையில் பெரும் பான்மை சமூகத்தின் தீவிர வாத எண்ணம் கொண்ட வர்கள் அடக்கப்படுவ தோடு தமிழ் பேசும் சிறு பான்மையினர் பாதுகாக் கப்பட வேண்டும் என்றும், பள்ளிவாசல்கள், கோவில் கள், கிறிஸ்துவ தேவாலயங் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், கலவரத் தால் பாதிக்கப்பட்ட முஸ் லிம்களுக்கு நீதியும், நிவா ரணமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக் கப்பட்டிருந்தது.<br /><br />இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர் வாகிகள் இலங்கை துணைத் தூதரை சந்தித்து அந்நாட்டில் நடைபெறும் சிறுபான்மையினருக்கெதிரான கலவரங்கள் குறித்து எங் களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.<br /><br />பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக நீதி யும், நிவாரணமும் வழங் கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கும் மனுவை வழங்கினோம். அதை உடனடியாக அதி பரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் துணைத் தூதர் உறுதிய ளித்தார்.<br /><br />இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் தூதுக் குழு இலங்கைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதி களைப் பார்வையிடவும், அதிபரை சந்திப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள், புத்த பிட்சுகளின் தலைவர்கள், பவுத்த பொதுபல சேனா வின் தலைவர்களை சந் திப்பதற்கும் அனுமதி தரு வதோடு, ஆவன செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தோம், எங்கள் கோரிக்கையை வரவேற்ற இலங்கைத் தூதர் உடனடியாக ஆவன செய்வதாக உறுதி கூறினார்.<br /><br />எங்கள் இலங்கை பயணத்தின்போது முஸ் லிம் பிரச்சினை மட்டு மின்றி, அங்குள்ள இலங் கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச் சினை குறித்தும் எடுத்து ரைப்போம். ஆர்ப்பாட்ட அரசியலில் நாட்டமில் லாத இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அணுகு முறை எப்போதுமே ஆக் கப்பூர்வமாகவே இருக்கும்.<br /><br />- இவ்வாறு பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/82532.html#ixzz35Ea6f5wk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52192130821854670012014-06-21T07:16:40.215+05:302014-06-21T07:16:40.215+05:30
இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்
உடமைகள், உறவு...<br />இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்<br /><br /><br />உடமைகள், உறவுகள், உரிமைகள் ஆகியவற்றை தொலைத்து எவ்வித ஆதர வும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக வாழ்கின்றனர்.<br /><br />இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டு அகதிகளாக வாழும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு பாதுகாப்பு மற் றும் வாழ்க்கையை முன்னேற்றும் நோக் கத்துடன், ஜூன் 20 ஆம் தேதி உலக அகதி கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.<br /><br />உலக நாடுகளில் இனவெறி, அரசியல், மதம், வன்முறை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, சொந்த இடத்தை விட்டு அகதிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உள்ள உரிமைகளைத் திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும்.<br /><br />அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப்போல நடத்தப்படவேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.<br /><br />உலகளவில் 1.4 கோடி பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என 2013 இல் எடுக்கப்பட்ட அய்.நா., கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.<br /><br />உலகிலேயே ஆப்கானிஸ்தானில் இருந்துதான், அதிக மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 2 ஆவது இடத்தில் சிரியா, 3 ஆவது இடத்தில் ஈராக், 4 ஆவது இடத்தில் சோமாலியா, 5 ஆவது இடத்தில் பாலஸ்தீனம் உள்ளன. அகதிகள் குடிபெயர்ந்துள்ள நாடுகள், அங்கு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்வரவேண்டும்<br /><br />Read more: http://viduthalai.in/page-8/82534.html#ixzz35EZs4hIa<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9775937276481594232014-06-21T07:13:56.297+05:302014-06-21T07:13:56.297+05:30
இலங்கையில் குழந்தை பெற்றால் சிங்கள பெண்களுக்கு பர...<br />இலங்கையில் குழந்தை பெற்றால் சிங்கள பெண்களுக்கு பரிசு தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பாம்!<br /><br /><br />சென்னை, ஜூன் 20: இலங்கையில் குழந்தை பெறும் சிங்கள பெண்க ளுக்கு பரிசு கொடுத்து அந்நாட்டு அரசு கவுரவப் படுத்துகிறது. அதே சமயம் தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பு செய்கிறது. இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புலம் பெயர் தமிழர்கள், காணொ லிக்காட்சி மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.<br /><br />இலங்கையில் நடை பெறும் சிங்கள குடியேற் றம், தமிழ் பெண்கள் கரு கலைப்பு உள்பட பல்வேறு மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.<br /><br />எனவே, புதிதாக மத்தி யில் அமைந்துள்ள பாஜக அரசுக்கு, இலங்கை பிரச் சினையை தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கை வைக்கும் வகையிலும் காணொலிக் காட்சி மூலம் பத்திரிகையாளர்களி டம் கலந்துரையாடலுக்கு திரைப்பட இயக்குநர் கவுத மன் ஏற்பாடு செய்திருந்தார்.<br /><br />இந்த நிகழ்ச்சியில், கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தபடியே, காணொலிக் காட்சி மூலம் சென்னை பத்திரி கையாளர் மன்றத்தில் இருந்த செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தனர்.<br /><br />இதில் கனடா நாட்டில் வாழும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை இணைத் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன், டென்மார்க்கை சேர்ந்த தமிழ் இளையோர் அமைப்பின் நிர்வாகி சுகுநேந்திரன், டென் மார்கை சேர்ந்த சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமேன் வீராஜ் மென் டிஸ், டென்மார்க்கை சேர்ந்த நிர்மானுசன் பால சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.<br /><br />அப்போது நிர்மானுசன் பாலசுப்ரமணியன் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:<br /><br />இலங்கையில் ஈழ தமிழர் பகுதிகளில் ராஜ பக்சே அரசு கட்டாய சிங்களர் குடியேற்றத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழர் பகுதிகளில் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பள வில் சிங்களர்களை குடி யேற்றியுள்ளனர்.<br /><br />மேலும், தமிழர்கள் பகுதிகளில் உள்ள பெண் களை பாலியல் வன் கொடுமையை சிங்கள ராணுவம் செய்து வருகிறது. ராஜபக்சே அரசு, சிங்கள பெண்கள் குழந்தை பெற் றால் பரிசுகள் வழங்கு கிறது. ஆனால் தமிழ் பெண்களின் கருக்களை மட்டும் திட்டமிட்டு கலைத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுக்க வேண் டும். தமிழக முதல்வர் மற்றும் இந்திய அரசு தமிழ் ஈழம் அமைவது, தமிழர் பகுதிகளில் மேற் கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தை தடுப்பது உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82507.html#ixzz35EZB01wU<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59497900616794692532014-06-21T07:12:24.530+05:302014-06-21T07:12:24.530+05:30
இந்தியாவில் பாலியல் குற்றங்கள்:
கடமை தவறும் அத...<br /><br /><br />இந்தியாவில் பாலியல் குற்றங்கள்:<br /><br />கடமை தவறும் அதிகாரிகள், நீதித்துறையினர், அரசியல்வாதிகள்<br /><br />அய்.நா. குற்றச்சாற்று<br /><br />இந்தியாவில் அதி கரித்து வரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக அய்க்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சகோ தரிகளான இரு இளம் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக் கப்பட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப் பட்ட சம்பவம் உள் நாட்டில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர் களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர் பாக இந்திய அதிகாரி களுடன் சர்வதேச குழந் தைகள் உரிமை கண் காணிப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில், இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் பெரிய அளவிலான புறக் கணிப்புக்கு குழந்தைகள் இலக்காக்கப்படுவதாக அய்,.நா குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன் முறைக்குள்ளாவதாக கூறப்படும் இந்தியாவில் பாலியல் வன்முறை செய் யப்படும் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர். இவர்களை நாசப் படுத் தியவர்களில் சரிபாதிப் பேர் நன்கு அறிமுக மானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர் களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளது.<br /><br />சர்வதேச ஊடகங் களில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக, இது போன்ற பல சம்பவங்கள் உள்ளூர் வீதிகளில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தாமல், அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படா மல், இதன் மூலமாக ஊடகங்களின் பார்வை யில் படாமல் பலரது கவனத்தை ஈர்க்க தவறி விடுகிறது. அவற்றைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்ற சம்பவங்கள் தொடர்பான போதிய தொகுப்புகள் இல்லாமை, மத்திய, -மாநில அரசு களிடையே நிலவும் சீரற்ற சட்டங்களும் அவற்றை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் நீதித் துறையும் தங்களது கட மையை நிறைவேற்ற தவறி விடுவது ஆகிய வற்றை சுட்டுக்காட்டி இந்த கண்காணிப்பகத் தின் துணை தலைவர் பென்யாம் மெஸ்மர் வேதனையை வெளிப் படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளின் போக்கு பாலியல் வன்முறை சம்பவங்களை விபத்து என்றும் சில வேளை களில் சரி - சில வேளை களில் தவறு என்றும் கேலியாக கருத்து கூறிய சில இந்திய அரசியல் வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண் சிசுக் கொலை, பெண்களை புறக்கணித்து கைவிடுதல், பெண் கருக்கலைப்பு ஆகி யவற்றை தடுக்க இந்தியா கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அய்க் கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்த பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82500.html#ixzz35EYmlB6u<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17947640837978487022014-06-21T07:11:37.997+05:302014-06-21T07:11:37.997+05:30
பாம்புபற்றிய மூடநம்பிக்கைகள்: வானொலியின் நற்பணி
...<br />பாம்புபற்றிய மூடநம்பிக்கைகள்: வானொலியின் நற்பணி<br /><br />நேற்று முன்னாள் இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை எனது காரில் வடசென்னைக் கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், வானொலியில் பாம்புகள்பற்றி ஒரு சுவாரஸ்யமான உரையாடல் - கேள்வி பதில் பேட்டியைக் கேட் டேன்!<br /><br />தமிழில் கேள்வி கேட்ட வானொலி நண்பரும், பதில் கூறிய சென்னை பாம்புப் பண்ணை இயக் குநர் இராஜரத்தினம் அவர்களும் இருவரும் மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை அமைத்தனர்.<br /><br />பொதுவாக பாம்புகளைப்பற்றி நாம் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றும் பாம்புப் புற்றையே கடவுள் நாகராஜன் வசிக்கும் இடம் என்றும் கருதி அதற்குப் பாலூற்றி பக்தியாக வழிபடுவதும் காலங் காலமாக நாடு முழுவதும் நாம் பார்க்கும் நடப்புகள்.<br /><br />பாம்புகள் இந்தியாவில் மட்டு மின்றி உலக முழுவதும் சுமார் 2500 வகைகளுக்கு மேல் உள்ளன என்ற அரிய தகவலுடன் பேட்டி துவங்கியது!<br /><br />அவற்றில் விஷம் உள்ள பாம்புகளும் விஷமற்ற பாம்புகளும் என இருவகை உண்டு என்பதும், பாம்பைக் கண்டால் நமக்கு எப்படி பயமோ, அதுபோலவே பாம்புகளுக்கு மனிதர்களின் அரவம் கேட்டாலே பயம்!<br /><br />எந்த காட்டு பிராணிக்கும்கூட இதே விதிதான். பாம்பைப்பற்றி பழங்குடி மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளபடியால் அவற்றைக் கண்டு அவர்கள் பயப்படுவதில்லை.<br /><br />அவைகளிடத்தில் எப்படி பக்குவமாக நடந்து கொண்டு அதன் போக்கில் அதனை விட்டு விட வேண்டுமோ அப்படி விட்டு விடுவார்கள்.<br /><br />பாம்பினைப் பற்றிய மூடநம்பிக்கைக் கருத்துக்கள் பற்றி திரு. இராஜரத்தினம் அவர்கள் பல அரிய தகவல்களை அடுக்கடுக்காகக் கூறி அசத்தினார்கள். கேள்வி கேட்ட நண்பர் எடுப்பும் சிறப் பானதாக அதற்குக் காரணமாகவும் அமைந்தது!<br /><br />1. பாம்பு பால் குடிக்கிறது என்பதும் பொய்; கற்பனை, உண்மை அப்படி அல்ல.<br /><br />2. பாம்பு வகையில் கொம்பேறி மூக்கன் என்று ஒரு வகைப் பாம்பு, கடித்து சாகடிக்கப்பட்ட வரைச் சுடுகாட்டில் எரித்து அந்த பிணத்தின் புகை நுகரும் வரையில் மரத்தில் ஏறிப் பார்த்துதான் அமையும் என்பது சரியான புருடா - பொய்ச் செய்தி.<br /><br />3. பாம்பு தங்களுக்குத் தொல்லைக் கொடுப் போரை நினைவில் வைத்துக் கொண்டு பழி வாங்கும் வகையில் சாகடிக்கும் என்பது உண்மையே அல்ல. வெறும் கற்பனை.<br /><br />4. பாம்பு பால் குடித்து, புற்று கட்டிய தன் மூலம் பலருக்குப் பலன் தருகிறது என்பது மூடநம்பிக்கை.<br /><br />5. பாம்பு மாணிக்கத்தைக் கக்கும் என்பதெல்லாம் கட்டுக் கதை.<br /><br />6. நாகரெத்தினம் கிடைக்கும் என்பது புதினத்திற்குரியதே தவிர (கற்பனையானது) வேறில்லை.<br /><br />இப்படி பாம்புகளைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்க மிகுந்த சுவையுடனும் சுவாரஸ்யத்தோடும் சொன்ன நண்பர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!<br /><br />வானொலியின் இத்தகைய சேவைகள் வளரட்டும்!<br /><br />அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை அகற்றிட இது போன்ற பல செய்திகள் வெகு மக்களைச் சென்றடைதல் அவசியம் ஆகும்.<br /><br /> <br /><br />- கி.வீரமணி<br /><br />Read more: http://viduthalai.in/page-2/82516.html#ixzz35EYadijw<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77831338758322470642014-06-21T07:10:26.957+05:302014-06-21T07:10:26.957+05:30தந்தை பெரியார் பொன்மொழி
மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவ...தந்தை பெரியார் பொன்மொழி<br /><br />மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன்.<br /><br />மனிதனால் - எண்ணப் படும், பேசப்படும், செய்யப்படும் காரியங் களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYKWb6E<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48850399987626882432014-06-21T07:10:04.438+05:302014-06-21T07:10:04.438+05:30
திருப்பதியில் தகிடுதத்தம்!
25.5.1978 இந்தியன் எ...<br />திருப்பதியில் தகிடுதத்தம்!<br /><br /><br />25.5.1978 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் பக்தர்கள் எழுதியுள்ள வாசகருக்கு கடிதங்கள் வருமாறு:-<br /><br />ருப்பதி திருமலையை பூகோள வைகுண்டம் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத்தான் அது நரகம் என்பது தெரியவரும்.<br /><br />எங்கும் லஞ்சம், ஊழல்!<br /><br />திருப்பதி திருமலையில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை எங்கும் லஞ்சம் ஊழல் நெளிகிறது. பேருந்துக்கு பயணச்சீட்டு வாங்குவதிலிருந்து ஏழுமலை யானைத் தரிசனம் செய்வது வரை எங்கும் லஞ்சமும், ஊழலும்தான் நடமாடுகிறது.<br /><br />தங்குவதற்கும் சரியான வசதி கிடையாது. தங்குவதற்கு காட்டேஜ் வாடகை பிடிப்பதற்கு நீண்டதூரம் வரிசையில் கால்கடுக்க அவதிப்பட வேண்டியுள்ளது.<br /><br />கடைநிலை ஊழியரிலிருந்து நடுநிலை ஊழியர்கள், உயர் அதி காரிகள் வரை மிகவும் மோசமாக வும், அராஜகமாகவும், பக்தர்களிடம் நடந்து கொள்ளுகின்றனர்.<br /><br />சுகாதாரம் இல்லை<br /><br />தங்கும் விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. படுக்கை விரிப்புகள் தினசரி மாற்றப்படுவ தில்லை; குடி தண்ணீர் கிடைப்ப தில்லை. மேஜை, நாற்காலிகள், கட்டில்கள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை. மருத்துவமனை வசதி போதுமானதாக இல்லை. சுகாதார நிலையோ மிகவும் அருவருக்கதக்கதாக உள்ளது.<br /><br />ரேட் இருந்தும்<br /><br />ஏழுமலையானை தனியாக தரிசனம் செய்ய 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் தரும தரிசனம் செய்யும் பக்தர்களுடனேயே ஏழுமலை யானை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.<br /><br />புரோக்கர்கள் கமிஷன்<br /><br />பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் அதிகார பூர்வமற்ற புரோக்கர்கள் பலர் பக்தர்களிடம் தலைக்கு ரூ.5 லிருந்து ரூ.20 வரை வசூலித்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.<br /><br />கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரால் கர்ப்பக்கிரக வாசலில் நிற்கும் ஆண் காவலாளிகள் வேண்டுமென்றே பெண்களின் மீது கைகளை வைத்து தள்ளுகின்றனர்.<br /><br />நாளுக்குநாள் திருப்பதி கோயில் வியாபார நிலைய மாகிக் கொண்டு வருகிறது. அது காய்கறி கடைகளைத் திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - மேற்கண்டவாறு சுலோசனா என்ற பக்தை எழுதியிருக்கிறார்.<br /><br />இன்னொரு பக்தர்<br /><br />ஜெகந்நாதன் என்ற மற்றொரு பக்தர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:<br /><br />மலைமீது நாங்கள் காரில் சென்றால் பாதி வழியில் ரேடியேட் டருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. வழியில் ரேடியேட்டருக்கான தண்ணீர் கிடைக்கும் என்ற போர்டு கள் மட்டும் இருக்கின்றன. ஆனால் தொட்டிகளில் தண்ணீர் கிடையாது.<br /><br />ஆனால், சிலர் பானை தண்ணீர் 25 பைசா என்று கூறி விற்கிறார்கள். அதிகாரிகள் அதன்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?<br /><br />பக்தைகளை கட்டுப்படுத்த ஆண்களா?<br /><br />பெண் பக்தைகளைக் கட்டுப் படுத்த பெண் ஊழியர்கள் இல்லை. ஆண் ஊழியர்கள் தான் கூட்டத்தில் புகுந்து கட்டுப்படுத்துகிறார்கள். கூட்டத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி எல்லோரையும் பிடித்துத் தள்ளுகின்றார்கள்.<br /><br />சேவா தரிசனத்திற்கு சிறப்பு சீட்டு வாங்கினால் கூட அவர்களுக்கும் இதே நிலைதான். இவ்வாறு அந்த பக்தர் எழுதியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYCP4zA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24293076686979529942014-06-21T07:09:29.920+05:302014-06-21T07:09:29.920+05:30
மோட்சம் வேண்டுமா?
இளம் பெண்களை விதவைகளாக வைத்தி...<br />மோட்சம் வேண்டுமா?<br /><br /><br />இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?<br /><br />இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.<br /><br />அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருத வில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந் தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா?<br /><br />அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தாங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.<br /><br />ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்து கிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?<br /><br />பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே.<br /><br />அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத்திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா?<br /><br />- வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/82549.html#ixzz35EY40haq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88477172993269767282014-06-21T07:08:35.519+05:302014-06-21T07:08:35.519+05:30
காரவன் கேள்வி
காரவன் 1.4.1978 ஆங்கில ஏட்டில் வெ...<br />காரவன் கேள்வி<br /><br /><br />காரவன் 1.4.1978 ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ள தலையங்கத்தின் சுருக்கம் வருமாறு:-<br /><br />கடவுளைப்போல், கடவுள் அவதாரங்களும் அதிகாரம் இருக்கும் இடத்தைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருப் பார்கள். அன்பையும், கருணையையும் உபதேசிக்கும் சர்ச்சுகள், ஜெர்மனியில் ஹிட்லர் பல லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த போது, சுட்டு விரலை உயர்த்தியதுண்டா?<br /><br />இத்தாலியில் சர்வாதிகாரத்தை கட்ட விழ்த்துவிட்ட முசோலினிக்கு போப் ஆசிர்வாதம் தந்தார். காஞ்சி சங்கராச்சாரியிலிருந்து வீதி ஓரத்து சாதுக்கள் வரை இந்திராகாந்தி அதிகாரத்தில் இருந்த போது அவருக்குத் துதிபாடி வந்தனர்.<br /><br />இந்திராகாந்தி உறுதியான ஒரு மூடநம்பிக்கைவாதி என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் கொஞ்சம் பொது அறிவு அவருக்கு இருந்தது. இப்போது ஜனதா அமைச்சர்கள் இந்த மூடநம்பிக்கை விவகாரத்தில் இந்திராகாந்தியையும் தோற்கடித்து விடுவார்கள் போலிருக்கிறது.<br /><br />பல லட்சம் ரூபாய் பாழடித்து நடத்தப்பட்ட ஆமதாபாத் யாகத்துக்கு வாஜ்பாயும், ராஜ் நாராயணனும் நேரில் போய் கலந்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளிடம் இந்தியா உதவியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, இப்படி யாகத்தில் போய் அமைச்சர்கள் கலந்து கொள்வது கேலிக் கூத்தானதாகும்.<br /><br />தன்னைக் கடவுள் என்று பறைசாற்றிக் கொள்ளும் சாயிபாபா அண்மையில் டில்லியில் கலந்து கொண்ட ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வாஜ்பாய் தலைமை வகிக்கிறார்.<br /><br />அப்போது வாஜ்பாய் பேசுகையில், அவசர நிலையின் போது பாபாவை வாஜ்பாய் சந்தித்ததாகவும் அப்போது பாபா, வாஜ்பாய் கவலைப்படாதீர்கள் தர்மம் ஜெயிக்கும் என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.<br /><br />அவசர நிலையின் போதே இந்த பாபா அந்தக் கொடுமைகளை எதிர்த்து இந்த தர்ம உபதேசத்தை செய்திருக்கக் கூடாதா? என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் அதர்மம் ஆட்சி செய்யும் போது இந்த அவதாரங்கள் மக்களிடம் கருணை காட்டியிருக்க வேண்டாமா? இவ்வாறு அந்த தலை யங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/82551.html#ixzz35EXnc49o<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48875613958343416442014-06-20T05:33:23.943+05:302014-06-20T05:33:23.943+05:30
மூடத்தின் முடை நாற்றம்: ஆட்சியாளர்களின் தீய நடவடி...<br />மூடத்தின் முடை நாற்றம்: ஆட்சியாளர்களின் தீய நடவடிக்கைகளால் சபரிமலையில் தெய்வ அருள் குறைந்துள்ளதாம்<br /><br /><br />திருவனந்தபுரம், ஜூன் 19_ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தீய நட வடிக்கைகளால் சபரிமலை யில் தெய்வ அருள் குறைந்து வருவதாக தேவபிரசன்னத் தில் தெரிய வந்துள்ளதாம்.<br /><br />கடந்த 2006ஆம் ஆண்டு சபரிமலை அய்யப் பன் கோயிலில் பிரபல ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணிகிருஷ்ண பணிக் கர் தலைமையில் தேவ பிர சன்னம் நடத்தப்பட்டது. அப்போது, சபரிமலை கோயிலில் ஒரு இளம் பெண் தரிசனம் செய்ததா கவும், அவர் அய்யப்பவிக் ரகத்தை தொட்டதாகவும் உண்ணிகிருஷ்ண பணிக் கர் கூறினார்.<br /><br />மறுநாளே நடிகை ஜெயமாலா, தான் சபரி மலை கோயிலுக்கு தரி சனம் செய்ய வந்ததாகவும், அப்போது நெரிசலில் தடுமாறி விழுந்தபோது அய்யப்பன் விக்ரகத்தை தொட்டதாகவும் கூறியிருந் தார். இதுகுறித்து குற்றப் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்ணிகிருஷ்ண பணிக் கரும், நடிகை ஜெயமாலா வும் நாடகமாடியது தெரிய வந்தது.<br /><br />இந்த சம்பவத்திற்கு பின்னர் கடந்த 8 ஆண்டு களாக சபரிமலையில் தேவ பிரசன்னம் நடத்தப்பட வில்லை. இந்நிலையில், சபரிமலையில் மாளிகை புரம் கோயில், பஸ்மக் குளம் உட்பட சில பகுதி களில் சீரமைப்பு பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.<br /><br />இதற்காக தேவபிரசன் னம் நடத்த முடிவு செய் யப்பட்டது. இதன்படி, கோழிக்கோடு செறுவள் ளியை சேர்ந்த ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் நேற்று தேவ பிரசன்னம் தொடங்கியது. இதில் 3 முக்கிய ஜோதிடர் கள் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் தேவபிர சன் னம் நிறைவடைந்தது.<br /><br />பின்னர் ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:<br /><br />சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் ஆட்சியாளர் கள் மற்றும் சில அதிகா ரிகள் கடந்த பல ஆண்டு களாக சில தீய நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது தெய்வ கோபம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சபரிமலையில் தெய்வ அருள் குறைந்து வருகிறது. எனவே தெய்வ அருளை அதிகரிக்கும் வகையில் உட னடியாக பரிகார பூஜை களை தொடங்க வேண்டு மாம். பரிகார பூஜைகள் நடத்தினால் மட்டுமே பழைய தெய்வ அருளை திரும்ப கொண்டுவர முடி யுமாம்.<br /><br />அய்யப்பனுக்கும் மாளி கைபுரத்து அம்மனுக்கும் சபரிமலையில் நடத்தப் பட்டு வரும் பல செயல் களில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இதற்கு பரிகார மாக சபரிமலையில் உள்ள அதிகாரிகளும் ஊழியர் களும், விளிச்சுசொல்லி (கடவுளிடம் மன்றாடுதல்) பிராயசித்த சடங்குகளை நடத்த வேண்டுமாம்.<br /><br />(அதிலும் பார்ப்பனச் சுரண்டல் தானோ!)<br />_ இவ்வாறு நாராயணன் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/82482.html#ixzz358JMYNCg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com