Search This Blog

26.2.11

மாட்டுச் சாணியை சாமியாக கும்பிடுவதின் காரணம்?

வேடிக்கை வாதம் போலி சயன்ஸ்

சுயமரியாதைக்காரர்: மாட்டுச் சாணியை உருட்டி கொளுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே இதன் காரணம் என்ன?

அந்தச் சாணி நாற்றமடிப்பதில்லை என்கின்ற காரணம் தானே?

பார்ப்பான்: ஓய் உமக்கென்னங்காணும் தெரியும்?

பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்.

சு.ம.: இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

பார்ப்பான்: ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களையெல்லாம் விட, இந்தக் காலத்து சைன்ஸ் புத்தகங்களையெல்லாம் விட, அந்தக்காலத்துப் பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலானது. தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும், இப்படிக் கேட்டவர் வெகு பேருக்கு வாய் புளுத்துப் போய்விட்டது.

சு.ம.: ஓ! ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால் அதை விட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னமோ சக்தி இருக்கலாமே: பின்னை அதை...

பார்ப்பான்: சீச்சீ, நீர் என்ன? சுயமரியாதைக்காரராக்கும். உம்மிடம் யார் பேசுவார்?

--------------------- ”குடிஅரசு” 20.11.1943

0 comments: