Search This Blog

28.2.11

2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள்

நீதிக்கட்சி காலத்திலே எடுக்க முடியாத சிதம்பரம் கோவிலை அரசாங்கத்தின்கீழ் கொண்டுவந்து சாதனை புரிந்தவர் கலைஞர்!

திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் விளக்கவுரை

நீதிக்கட்சி காலத்திலிருந்து எடுக்க முடியாத சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசாங்கத்தின் கீழ்கொண்டு வந்து மக்கள் கோயிலாக்கி சாதனை புரிந்தவர் கலைஞர் என்று கூறி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் றேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆரிய-திராவிடப் போராட்டம்


நீங்கள் வெளிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நடப்பது இனப் போராட்டம். ஆரியர்-திராவிடர் போராட்டம் என்பதைத் தெளிவாக உங்களாலே உணர்ந்து கொள்ள முடியும். எப்படி என்று சொல்லும் பொழுது இந்த நந்தன் கதையை உங்களுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும். நந்தனார் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கதைப்படி நந்தனாருக்கு ஆசை வந்துவிட்டது. அவர் பாவம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு சிறிய கிராமம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அந்தக் காலத்தில் நடந்துபோனால் கூட புளிசோறு கட்டிக்கொண்டு போய்விடலாம்.

நடராஜர் நடனமாடுகிறார் ஆருத்ரா தரிசனம் என்று எல்லோரும் சென்று பார்க்கிறார்களே! அந்த மாதிரி நடராஜனை நாம் போய் பார்க்கமாட்டோமா என்று ரொம்ப பேருக்கு ஆசை.

நந்தனுக்கும் ஆசை


ஏனென்றால் நம்ம ஊர் நந்தன்களுக்கெல்லாம் இப்பொழுது நடராஜனைப் பார்க்க வேண்டும் என்பதுதானே ஆசையாக இருக்கிறது. விடுதலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்களை எது இழிவுப்படுத்துகிறது என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதை எல்லோரும் இன்றைக்கு உணர்ந்திருக்கிறார்கள்.

ஓர் அம்பேத்கர் அப்பொழுது வரவில்லை


ஓர் அம்பேத்கர் அப்பொழுது வரவில்லை. ஒரு பெரியார் வரவில்லை. திடீர் என்று நடராஜரைப் பார்ப்பதற்காகப் போகிறேன் என்று நந்தன் சொன்னார். முதலாளி என்னென்னமோ நிபந்தனைகளை வைத்தார். அதைச் சொன்னாலே ரொம்ப நேரம் ஆகிவிடும் உங்களுக்கு அந்தக் கதையை சுருக்கமாகச் சொல்லுகின்றேன்.

கதைப்படி, நிலப்பிரபு அய்யர் சொல்லுகிறார். நீ இவ்வளவு நெற்பயிரை வளர வைத்து விட்டுத்தான் போக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றார். அய்யர் நிலத்தில் இறங்கியதே கிடையாது. அவருக்கும் ஏர்பிடிப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் நிலப்பிரபு சொல்லிவிட்டார். நந்தனுக்கு வேறு வழியில்லை. உடனே இவர் கடவுளை வேண்டுகிறார்.

கனவில் கடவுள்...!


கடவுள் கனவில் வந்து சொல்லுகின்றார். கதையை எப்படிக் கொண்டு போகிறார்கள் பாருங்கள். நந்தன் இரவு படுத்துத் தூங்கிவிட்டு, பொழுது விடிந்து பார்த்தால் கதிர் ஓர் களம். கட்டு முக்களம்.

இந்த மாதிரி இந்தியாவில் வேண்டிக் கொண்டால் எல்லா மாநிலத்திலேயும் எல்லாம் விளைந்து அது பாட்டுக்குத் தானாகக் கிடைக்கும்.

வெங்காய விலை எப்பொழுதுமே ஒரே மாதிரி இருக்கும். முதலில் எல்லாமே கிடைக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

உடனே நந்தன் நான்தான் எல்லா நிலத்தையும் விளைவித்துவிட்டேனே! நடராசரைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னார். முதலாளியும் சரி போ என்று சொல்லிவிட்டார். நந்தனார் அவசர அவசரமாக மகிழ்ச்சியோடு போகின்றார். ஆஜானபாகுக்கு உதாரணம் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள். சாதாரணமான பார்ப்பனர் அல்லர். நேரில் போய் பார்த்தால்தான் தெரியும்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவன். பல பார்ப்பனர்களைப் பார்த்தவன். மற்ற பார்ப்பனர்களுக்கும், அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். உருவத்திலேயே ரொம்ப வித்தியாசமுண்டு. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவன் ஆள் மோட்டாவாக இருப்பான். (கைதட்டல்). நெய், பருப்பு எல்லாம் சாப்பிட்டு, சமஸ்கிருதத்தில் ஆஜானபாகு என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். இந்த ஆஜான பாகுக்கு என்ன உதாரணம் என்றால் அவாள்தன் உதாரணம்.

சிதம்பரம் தீட்சிதர் குடுமியோ...!


மற்ற பார்ப்பனர்கள் எல்லாம் குடுமியைப் பின்னாலே கட்டுவார்கள். சிதம்பரம் தீட்சிதர்கள் மட்டும் சைடிலே கட்டுவார்கள். ரொம்ப பெரிய குடுமியை சைடிலே போட்டுக் கட்டியிருப்பார்கள் (சிரிப்பு-கைதட்டல்).

நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுதே வைத்த பெயர் சைடு பல்பு என்று கூப்பிடுவார்கள்(கைதட்டல்).

பராந்தக சோழன், அந்த சோழன், ராஜேந்திர சோழன், ராஜராஜசோழன், நமது சோழ பரம்பரை எல்லாம் கட்டிக்கொடுத்தது இல்லாமல் தங்க ஓடு போட்டு, உள்ளே எல்லாம் பண்ணி, எல்லாம் செய்து முடித்து வைத்துவிட்டான். சிதம்பரம் தீட்சிதர்கள் சொல்லிவிட்டார்கள். இது எங்களுக்குச் சொந்தமானது யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொல்லுகிறார்கள்.

கோயிலுக்குள்ளே முதலாளி


மற்ற கோயில்களை எல்லாம் அறநிலையப் பாதுகாப்புத்துறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சிதம்பரம் கோவிலுக்கு மட்டும் நீங்கள் கிட்டவே வர முடியாது.

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது. கொள்வினை-கொடுப்பினை எல்லாமே எங்களுக்குள் பண்ணிக்கொள்வோம். இது பூராவும் எங்களுக்கு சொந்தம். இந்த கோயிலுக்கு நாங்கள்தான் முதலாளி. கோயிலுக்கே முதலாளி வருகிறார். நிலத்துக்கு முதலாளி அவன்தான் அங்கே. கடவுளுக்கும் முதலாளி இவன்தான்.

நந்தன் சிதம்பரம் கோயிலுக்கு வந்து நடராஜரை வழிபட வேண்டும் என்று கேட்டான். அங்கு இருக்கிற தீட்சிதர்கள் நந்தனிடம் ஜாதிப் பெயரைக் கேட்டு, பறையனாக இருக்கிறவன் எப்படி நீ நடராஜரை தரிசிக்க முடியும்? என்று கேட்டார்கள்.

புராணக்கதைப்படி ....


மன்னிக்க வேண்டும். புராணத்தில் இருப்பதைச் சொல்லுகிறேன். எங்களை மாதிரி ஆனால்தானே நீ கடவுளைப் பார்க்க முடியும்? அந்த உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. நீ எப்படி பண்ண முடியும்? என்று கேட்டான்.

நந்தனார் அக்னியில் குதித்தார்


அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நந்தன் கேட்டான். ஒன்றும் செய்ய வேண்டாம். நான்சொல்லுவதை செய். நீ உடனே பிராமணர் ஆகிவிடலாம். வேறு ஒன்றும் இல்லை, இதோ நெருப்புக்குழி இருக்கிறது; அக்னி வளர்த்திருப்பார்கள். இந்த அக்னியில் குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டால் நீ பிராமணன் ஆகிவிடலாம் என்று சொன்னான்.

அதே மாதிரி நந்தனார் போனார். அக்னியில் குதித்தார். பிறகு வெளியே வந்தார் என்று கதை எழுதி வைத்திருக்கின்றான். தண்ணீரில் குளித்து வந்தாலே நமக்கு அழுக்குப் போகுமா? என்பது சந்தேகம் (கைதட்டல்). நந்தன் அக்னியில் குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

நடராஜருக்கு மனம் இளகுகிறது


நந்தனார் என்ன ஆனார்? நந்தனார் அய்யர் ஆகிவிட்டார்-தீட்சிதர் ஆகிவிட்டார்-சமமாகி விட்டார். வித்தியாசமே இல்லை. அப்படி இருந்தும் நந்தன் சிதம்பரம் கோயிலில் நடராஜரை தரிசிக்க ஆவலாய் உள்ளே போகிறார். உன்னுடைய எல்லை இதுதான். ஆகவே இங்கே நின்று நடராஜரைப் பார் நந்தா என்று தீட்சிதர்கள் சொல்லுகிறார்கள்.

நந்தன் நடராஜனைப் பார்க்கிறார். நந்தி குறுக்கே மறைத்துக்கொண்டிருக்கிறது. நந்தி என்றால் மாடு. அப்பொழுதும் மாட்டைத்தான் நந்தனுக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான்.

நந்தி குறுக்கே நிற்கிறது என்று நந்தன் நடராஜரை வேண்டுகிறார். நடராஜப் பெருமானே, உன்னுடைய பக்தன் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்.

நீ எவ்வளவோ சோதித்திருக்கிறாய். நான் நெருப்பில் குதித்து வந்திருக்கிறேன். அதற்குப் பிறகும் நீ என்னை உள்ளே விடவில்லையே என்று சொன்னவுடனே கடவுள் நடராஜருக்கு மனம் இளகுகிறது.

கடவுள் பட்சாதாபப்பட்டு உதவி பண்ணுகிறார். ஒரு சலுகை காட்டுகிறார். கடவுள் சொல்கிறார், அந்த நந்தன் என்னைப் பார்க்கட்டும். நந்தியே, சற்று விலகியிரு! என்று சொல்லுகின்றார்.

நந்தன் அப்பொழுதுதான் நடராஜரை தரிசித்தார்; அதன் பிறகுதான் மோட்சத்திற்குப் போனார் என்று கதை.

நந்தியே சற்று விலகியிரு!


நந்தன் எப்பொழுது நெருப்பில் விழுந்தாரோ அப்பொழுதே மோட்சத்திற்குப் போவதைத் தவிர வேறு வழியே கிடையாது. ஆனாலும் நந்தியே சற்று விலகியிரு என்றுதான் கடவுள் நடராஜர் சொன்னார். இது கதை. இது நடந்ததா-இல்லையா என்பதுபற்றிக் கவலை இல்லை.

ஆனால் அன்றிலிருந்து இன்றைய வரையில் சிதம்பரம் கோவில் எங்களுக்கு ரொம்ப காலமாக சொந்தம் என்று சொன்னார்கள். நீதிக்கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து முயற்சி செய்து, மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும் அவரே முயற்சி செய்து இந்தக் கோயிலை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு- அரசாங்கத்தினுடைய துறைக்குக் கொண்டு வரமுடியவில்லை.

வரலாறு படைத்தார் கலைஞர்!


ஆனால், வரலாறு படைத்தார் முதல்வர் கலைஞர் அவர்கள். அவருடைய ஆட்சி காலத்திலே தைரியமாக என்ன செய்தார் என்றால், தீட்சிதர்கள் வசம் இருக்கின்ற கோயிலை எடு என்று அதிகார பூர்வமாக உத்தரவு போட்டார். உடனே தீட்சிதர்கள் நீதிமன்றத்திற்கு ஓடினார்கள். நீதிமன்றம்தானே இப்பொழுது பார்ப்பனர்களுக்கு அபயம் கொடுக்கின்ற இடம்.

நமது உழைப்பினாலே நல்ல நீதிபதிகளும் பல நேரங்களில் இருக்கிறார்கள். தீர்ப்பு வந்தாகி விட்டது. சுப்பிரமணிய சாமிகள் ஆகா! அதைப் பண்ணுவேன், இதைப் பண்ணுவேன் என்றெல்லாம் போனார்கள். ஆனால் அங்கு ஒன்றும் நடக்க வில்லை.

மணி 3, 4 ஆகியது. தீர்ப்புக்காக மாலை நேரத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தீர்ப்பு அங்கே சொல்கிறார்கள். தீர்ப்பின் நகல் அவசரமாக வாங்கப்பட்டு அரை மணி நேரத்திற்குள்ளாக அது ஃபேக்ஸ் செய்யப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட பெண் பொறுப்பேற்றுக்கொண்டார்


அந்த ஃபேக்ஸ் அறநிலையத்துறை முக்கிய அதிகாரிகள் கையில் கிடைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் அதிகாரியை விட்டு நீங்கள் உள்ளே போய்ப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கலைஞர் சொல்லிவிட்டார் (கைதட்டல்).

உடனே தீட்சிதர்கள் எல்லாம் ஆகா, ஊகா என்று சொன்னார்கள். பேசாதே, இது உயர்நீதிமன்ற உத்தரவு என்று சொன்னார்கள். நடராஜர் ஒரு காலைத்தூக்கி ஆடிக் கொண்டேயிருக்கிறார் என்று பார்த்துக் கொண்டே, கேட்டுக்கொண்டே யிருக்க வேண்டியதுதான்.

நடராஜர் ஒரு காலைத் தூக்கினார். கலைஞர் அரசாங்கம் இரண்டு கால்களையும் தூக்கி விட்டது. ஆக, இன்றைய வரையில் முயற்சி பண்ணுகிறார்கள். சிதம்பரம் கோயிலைக் கைப்பற்ற வேண்டுமென்று. இவ்வளவு நாள்கள் உண்டியல் பணம் பூராவும், அவர்களைச் சேர்ந்தது.

இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் அரசாங்க அதிகாரிகள் கையில் வந்துவிட்டது. பதின்மூன்றாயிரத்து நான்காயிரம் வரவு; செலவு இவ்வளவு; ரூ.23 மிச்சம் என்று கணக்கு எழுதி வைத்தான்.

நடராஜர் கோயில் உண்டியல் வருமானம்


ஆனால், இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் வருமானம் மாதம் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் வருகிறது என்று அதிகாரிகள் மூலம் அவர் எடுத்துக்காட்டினார்.

எனவே, நந்தனை உள்ளே அழைக்க முடிய வில்லை, அந்தக் காலத்து கடவுள் நடராஜரால். ஆனால் இன்றைக்கு திராவிடர் இயக்க முதல்வர் கலைஞரால் நந்தனை கோயிலுக்கு உள்ளே அனுமதித்தார் (கைதட்டல்). இன்றைக்கு எல்லா நந்தர்களையும் உள்ளே விட்டுவிட்டார்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர். ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். பார்ப்பனர்களும் படித்திருந்தால் அர்ச்சகராகலாம். யாரையும் நாங்கள் வித்தியாசப்படுத்தவில்லை என்று ஆக்கினார்.

சிதம்பரம் கோயில் யாருடையது? இன்று மக்கள் சொத்து என்று ஆக்கிவிட்டார் கலைஞர். இது தனியாருடைய உடைமை அல்ல என்று ஆக்கினார் பாருங்கள், இதுதானய்யா அவர் களுக்குக் கோபம். 60 வருடங்கள் தமிழ் வருடங்கள் என்று சொன்னான். விபவ, பிரபவ, சுக்கில, விரோதி, குரோதி என்று 60 வருடங்கள் சொல்லுகிறார்கள்.

எப்படிப் பிறந்தார்கள் என்று கேட்டான். நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தார்கள். என்று சொன்னான். இரண்டு பேரும் ஆண் பிள்ளைகள் ஆயிற்றே என்று இவன் சொன்னான். பெரியார்தான் இது ஆபாசமான கதை என்று சொன்னார்.

தை முதல்நாளே தமிழர்திருநாள், அதுதான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்ற உத்தரவே கலைஞர் போட்டுவிட்டார்.

அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். அந்த அடித்தளத்தின்மீது கலைஞர் அவர்கள் உருவாக்கிய கட்டடம் இருக்கிறதே இதுதான். இதைப் பார்த்தவுடனே அவனால் தாங்க முடியவில்லை.

கலைஞர் ஆட்சியில் பசி-பிணி இல்லை


அய்யோ, இந்த ஆட்சி இருக்கின்ற காரணத்தினால் அல்லவா இப்படி நடக்கிறது? ஆகவே இந்த ஆட்சியை எப்படியாவது வரவிடாமல் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் இந்த ஆட்சி யினாலே பயன் பெறுகிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் பசியும் இல்லை; பிணியும் இல்லை. சென்ற ஆட்சியில் பசி இருந்தது. சென்ற ஆட்சி தமிழ்நாட்டில் எலிக்கறி சாப்பிடுங்கள் என்று சொன்ன ஆட்சி. ஆனால் இன்றைக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

இந்தியாவிலேயே கலைஞர் ஆட்சிதான்...


முதலில் 1 கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். கடைசி வரையில் கொடுக்க முடியுமா? என்று கேட்டார்கள்.

இப்பொழுது ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்குக் கொடுத்து இந்தியாவிலேயே ஆட்சி நடத்துகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; ஒரே ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்; ஒரே முதல்வர் கலைஞர்தான்!

-------------------"விடுதலை” தொடரும் 26-2-2011

தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க முடியாத அளவுக்கு கலைஞர்தான் கான்கிரீட் வீட்டைத் தந்திருக்கின்றார்! திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் பேச்சு

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்லுவார்கள். எந்த தெய்வமும் அந்த மாதிரி பிய்த்துக்கொண்டு கொடுக்கவில்லை. அப்படி பிய்க்க முடியாத அளவுக்கு கலைஞர் கான்கிரீட் வீட்டை கட்டியிருக்கின்றார். தெய்வம் கொடுக் காததை கலைஞர் கொடுத்திருக்கின்றார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரை யாற்றினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேசன் கடையில் நேரடியாகவே கொடுக்கப்படுகிறது. மக்கள் நேரடியாகவே பார்க்கிறார்கள். அதுபோல எங்கேயாவது பிணியா? யாராவது மயக்கம் போட்டு விழுந்தாலே மக்களுக்குத் தெரிந்துபோய் விட்டது. காய்கறி விற்கிற முனியம்மாவுக்கும் தெரிகிறது. கடையில் வேலை பார்க்கிற சாதாரண முத்தம்மாவுக்கும் தெரிகிறது.

108-க்கு ஃபோன் பண்ணுகிறான்

சாதாரண வேலை செய்கிறார் பாருங்கள் நம்மாள்-அவருக்கும் தெரிகிறது. ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என்று பேசிக் கொண்டிருக்கும்பொழுதே இன்னொருத்தர் பையிலே இருக்கின்ற தொலைபேசியைப் பயன்படுத்தி உடனே 108-க்குப் ஃபோன் பண்ணு கின்றார். இதற்கு முன்னால் இந்த 108 என்பதை அர்ச்சனைக்குத்தானய்யா பயன்படுத்தினான் (கைதட்டல்).

இன்றைக்கு அந்த 108அய் மனிதன் உயிர் காக்க கொண்டு வந்த பெருமை முதல்வர் கலைஞர் ஆட்சியைச் சார்ந்தது (கைதட்டல்). திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைச் சார்ந்தது. தூங்கும்பொழுது 108 என்று சொன்னால் கூட ஆம்புலன்ஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இதற்கு முன்னால் காலம் காலமாக 108 விளக்கு என்று சொல்லுவான்; 108 அபிஷேகம் என்று சொல்லுவான்.

அசுர குலத் தலைவர் ஆட்சியில்...

ஒன்றும் உருப்படாத மக்கள் அறிவை பாழ்படுத்தி, பார்ப்பானுக்கு வருமானத்தை உண்டாக்கக்கூடிய வழியைத்தான் பண்ணி னார்கள்.

அந்த 108அய் பகுத்தறிவுவாதி ஆட்சியான, அசுர குலத் தலைவனுடைய ஆட்சியான (பலத்த கைதட்டல்) கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் மக்களுக்குப் பயன்படும் வகையில் 108அய் இப்படி ஆக்கிவிட்டார். அது மட்டுமல்ல; சில பேர் மக்களிடம் பேசினார்கள்.

ஓட்டைக் குடிசையிலே ஒண்ணாரைச் சாண் பாய்தனிலே!

ஓட்டைக் குடிசையிலே, ஒண்ணரைச் சாண் பாய்தனிலே என்று பாட்டுப்பாடி, உங்களுடைய ஏழ்மையைப் போக்குவதற்காக எங்களை அனுப் புங்கள் என்று கேட்பதற்கு வாய்ப்பில்லாமல் அந்தத் துருப்புச் சீட்டையும் எடுத்துவிட்டார் கலைஞர்.

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

காரணம் என்ன? தமிழ்நாட்டில் எத்தனை குடிசைகள் இருக்கின்றன? கணக்கெடு என்று சொன்னார். 21 லட்சம் குடிசைகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். அந்த 21 லட்சம் குடிசைகளுக்கும் முதலில் திட்டம் போட்டார்.

இந்த ஓராண்டுக்குள்ளாகவே கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்ற பெயரில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்து உடனே அதைச் செயல்படுத்தினார்.

இனிமேல் குடிசைகளே இல்லாத தமிழ்நாடு என்று இந்தியாவிலே முதன்முறையாக உருவாக்கிய வர் (கைதட்டல்). அந்தக் காலத்திலேயே குடிசை மாற்று வாரியத்தையும் உருவாக்கியவர் கலைஞர். இன்றைக்கு இதையும் உண்டாக்கி விட்டார்.

எல்லோருக்கும் கான்கிரீட் வீடு கிடைக்குமா என்று கேட்டார்கள். அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். இந்தாங்க பிடிங்க இது உத்தரவாத சீட்டு என்று அவரவர்களும் வாங்கிக் கொள்ளும்படி செய்தார்.

எங்களை வரவேற்றதே இந்தத் திட்டம்தான்!

எல்லா கிராமங்களிலும் இப்படி உருவாக்கியி ருக்கிறார். இன்றைக்கு காலையிலே நான் ஈசநத்தம் போனேன். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளே நுழையும்பொழுது எது நம்மை வரவேற்கிறது என்றால்- கலைஞர் வீட்டு வசதித்திட்டம்.

நான் சென்னையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கூட சொன்னேன். வேடிக்கையாக நம்முடைய நாட்டில் கிராமத்தில் சொல்லிக்கொண்டிருப்பார் கள். கொடுக்கிற தெய்வமாக இருந்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்லுவார்கள். தெய்வத்திற்குக்கூட ஏண்டா கூரையிருக்கிறது என்று புத்தி வரவில்லை. ஒருவன் ஏன் மாடியில் இருக்க வேண்டும்? இன்னொருவன் ஏன் குடிசையில் இருக்க வேண்டுமென்று கடவுள் எண்ணவில்லை.

எல்லோருமே நமது பிள்ளைகள்தானே! எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கான்கிரீட் வீட்டை கடவுள் கொடுக்கவில்லையே!

மோட்சத்திற்குப் போக

ஒருவரை ஓட்டைக் குடிசையில் வைத்தான். இன்னொருவனை ஒன்பது மாடிக்கு மேலே ஏற்றி வைத்தான். இதைக்கேட்டால் எல்லாம் அவாள் அவாள் தலையெழுத்து என்று சொல்லிக்கொண்டு போனான். இவனும் அதை நம்பிக்கொண்டே இருந்தான். இதை மாற்றுவதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டான். இதை மாற்று வதற்கு மோட்சத்திற்குப் போனால் போதும்; எங்களுக்கு தட்சணை கொடுத்தால் போதும் என்று, சொன்னதை நம்பிக்கொண்டிருந்தான்.

அதைத் தலைகீழாக மாற்றி, குடிசைகளே இல்லா மாநிலமாக ஆக்கியவர் கலைஞர். அவர் ஈரோட்டுக் குருகுலத்திலே பயின்ற காரணத்தினாலே இன்றைக்கு குடிசை இல்லா தமிழ்நாடு என்று ஆகக்கூடிய அளவிற்கு கான்கிரீட் வீடு திட்டத்தைக் கொடுத்து விட்டார்.
அதனால் தெய்வமே என்று இருந்தால் கற்பனைக்காக நான் ஒன்றைச் சொல்லுகின்றேன். கடவுள் என்ற ஒன்றை நாங்கள் ஒப்புக் கொள்வ தில்லை.

கடவுள்கூட கொடுக்க முடியாது!

கடவுள்கூட இனிமேல் கூரையைப் பிய்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் பிய்க்க முடியாத அளவுக்கு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டார் கலைஞர்.
இப்படி எல்லா துறைகளிலும் பாருங்கள். பசியில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்க படிப்பு இவ்வளவும் கொடுத்தி ருக்கிறார் கலைஞர்.

எங்கு பார்த்தாலும் தொலைபேசி

இவ்வளவும் கொடுத்த கலைஞர் ஆட்சி மீது குறை சொல்ல என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள். பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். எங்கு பார்த்தாலும் இப்பொழுது தொலைபேசி இருக்கிறது பாருங்கள். தி.மு.க.வைச் சார்ந்த ஆ.இராசா மத்திய அரசில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.
வாஜ்பேயி ஆட்சி காலத்திலிருந்தே தொலைத் தொடர்புத் துறையை நவீன முறையில் பயன்படுத்த வேண்டுமென்பது திட்டம். இதை அய்ந்தாண்டுத் திட்டமாக கொண்டு வந்தார்கள்.

இராசா செய்த மகத்தான புரட்சி!

அவர்கள் உருவாக்கிய கொள்கையாக இருந்தாலும், அதை பெரிய அளவுக்கு விரிவாக்கிய காலகட்டம் யாருடையது என்றால், அமைச்சர் இராசா அவர்கள் செய்த மகத்தான புரட்சியினாலே ஏற்பட்ட மிகப்பெரிய விளைவுகள்.

அதனால்தான் இன்றைக்குப் பார்த்தீர்களே யானால் எல்லோர் கையிலும் செல்ஃபோன் இருக்கிறது. ஒன்று-இரண்டு அல்ல; இரண்டு மூன்று செல்ஃபோன் வைத்திருக்கிறவர்கள் கூட நம்பரை மாற்றாமலே பண்ணலாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை வந்தாகிவிட்டது. இன்றைக்கு இருபது காசு, 30 காசுக்கு பேசும் நிலைமை வந்துவிட்டது. குற்றம் சொல்லக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் சொல்லட்டும்.

எதிர்க்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சொல்லட்டும். இன்றைக்கு உலகத்திலேயே இங்கே கிடைக்கிற அளவுக்கு டெலிஃபோன் கட்டணம் இவ்வளவு மலிவாக, இவ்வளவு குறைவாக எந்த நாட்டிலாவது உண்டா? தயவு செய்து சொல்லட்டும்.

இன்று 79 கோடி தொலைப்பேசிகள்

அது மட்டுமல்ல; இராசா பதவி ஏற்றுக் கொண்ட காலத்தில் 30 கோடி டெலிஃபோன்கள் இருந்தன என்றால் அவர் பதவியைவிட்டுப் போகிற பொழுது 79 கோடி டெலிஃபோன்கள் இந்த நாட்டிலே இருந்தன. கூநடந னுநளேவைல என்று சொல்லக்கூடிய அளவுக்கு முத்தன், முனியன், குப்பன், சுப்பன் என்று இன்று எல்லோர் கையிலேயும், டெலிஃபோன் இருக்கிறது. எல்லோரும் பேசுகிறார்கள்.

கார் டிரைவர் கையில் செல்ஃபோன்

சாதாரண வேலைக்காரம்மாகூட முதலாளி அம்மாவிடம் சொல்லுகிறது. நான் கொஞ்சம் இன்றைக்கு லேட்டா வருகிறேன் அம்மா என்று செல்ஃபோனில் சொல்லுகிறது. டிரைவரிடம் செல்ஃபோன் கொடுத்துவிட்டார்கள். நீ எங்கேயப்பா இருக்கிறாய் என்று சொல்லுகின்றார். இப்பொழுது டிரைவர் கையில் ஒரு செல்ஃபோன், முதலாளி கையில் ஒரு செல்ஃபோன். உடனே கார் முதலாளி கூப்பிடு கின்றார்.

ஆக, இப்படி எல்லா இடங்களுக்கும் வசதி வந்தாகிவிட்டது. திடீரென்று ஒரு பூதாகாரமாக ஆக்கினார்கள். 1,76,000 கோடி 2 ஜி அலைக்கற்றை மூலமாக இந்த அரசாங்கத்தில் ஊழல், ஊழலோ ஊழல் என்று ஆரம்பித்தார்கள்.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இதில் மனதுக்குத் தகுந்தமாதிரி ஒவ்வொருத்தன் சொல்லுகின்றான். தயவு செய்து இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மணிநேரம் விளக்க வேண்டிய செய்தி இது. உறைய வைக்கும் தகவல்கள்
2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் என்ற தலைப்பில் ஏராளமான தகவல்களைக் கொண்ட புத்தகத்தை நாங்கள் இங்கே விற்பனைக்காக கொண்டு வந்திருக்கின்றோம்.

நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும். எங்களுடைய தோழர்கள் கொண்டு வருவார்கள். மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நாங்கள் இதைத் தெளிவாகப் படித்துவிட்டுச் சொல்லு கின்றோம்.

ஊழல், ஊழல் என்று சொல்லி அந்தப் புகை மூட்டத்திலேயே திமு.க ஆட்சியை அசைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அசைப்பதற்கு அதில் ஒன்றுமில்லை. முடியாது. தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு உடல்நிலை சரியில்லை

எதிர்க்கட்சித் தலைவருக்கு உடம்புக்கு முடியவில்லை. அதனால் சட்டமன்றத்திற்கு வர முடியவில்லை என்று அவர் அனுமதி வாங்கிய பிறகுதான் தீர்மானம் செய்தவர்களுக்கே புரிந்தது.

ஏனென்றால் அதைக்காட்டி சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கலாம். சட்டமன்றத்திலேயே இப்படி தீர்மானம் நிறைவேற்றி அனுமதி கொடுத்து விட்டார்கள். ஆகவே எனக்கு வாய்தா கொடுங்கள் என்று கேட்கத் தயங்காதவர் அந்த அம்மையார். இருக்கட்டும். ஆனால், அவர்களுடைய தொலைக் காட்சியில் சொல்லும்பொழுது ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்று சொல்லு வதில்லை.

ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி என்று ரவுண்டாக சொல்லுகிறார்கள். அதில் ஏன் சொச்சம் வைப்பானேன் என்று அவர்கள் இப்படி பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.


---------------------”விடுதலை” 27-2-2011 --தொடரும்

0 comments: