Search This Blog

15.2.11

மக்கா செல்வது மூடநம்பிக்கையா? - பெரியார் பதில்

மனிதர்களுள் தலைசிறந்த மாமனிதர் நபிகள் நாயகம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சீர்திருத்த கருத்துகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம்
சென்னை மீலாது மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

1400 ஆண்டுகளுக்கு முன்பே சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் நபிகள் நாயகம். மனிதர்களில் தலைசிறந்த மாமனிதர். சீர்திருத்தக் கருத்துகள் கொண்ட மார்க்கம் இஸ்லாம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

மீலாது மாநாடு சென்னை - மேற்கு சைதாப் பேட்டை மசூதி பள்ளம் காயிதே மில்லத் அரங்கத் தில் 14.2.2011 அன்று மாலை 6.30 மணிக்கு மிகச் சிறப்பான எழுச்சிமிக்கதொரு விழாவாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று என்னை அருமைச் சகோதரர்கள் அழைத்த பொழுது, சகோதர உரிமையோடு மகிழ்ச்சியோடு கலந்து கொள்ள வருகிறேன் என்று சொல்லி நானும், கழகத் தோழர்களும் வந்திருக்கிறோம். நாங்கள் இங்கு வந்திருப்பது - உரிமை உள்ளவர்கள் என்ற முறையில் உறவைத் தொடர்ந்து கொள்ள வந்திருக்கின்றோம்.

கவிஞர் மேத்தா சொன்னார்...

கவிஞர் மேத்தா என்னிடம் சொன்னார் நீண்ட காலத்திற்கு முன்னாலேயே, 12 ஆண்டுகளுக்கு முன்னாலேயே மீலாது நபி விழாவில் கலந்து கொண்டதாகச் சொன்னார். கும்பகோணம் மாமாங்கம் விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற விழா. அது மூட நம்பிக்கை விழா.

என் கையிலே இருப்பது தந்தை பெரியார் அவர்கள் நடத்திய குடிஅரசு ஏட்டில் வந்துள்ள செய்திகள். தந்தை பெரியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்த பொழுதே காங்கிரசை ஆதரித்து, காந்தியாரை ஆதரித்து எழுதப்பட்ட குடிஅரசு. தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதைக்கருத்துக்களை அறிவார்ந்த கொள்கைகளைப் பரப்பினார்கள்.

முதல்வர் கலைஞர் வெளியிட்ட குடிஅரசு

நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமிழகத்திலே பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டு வருகின்றார். திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரான கலைஞர் அவர்கள்தான் குடிஅரசின் முதல் தொகுதியை சென்னையிலே வெளியிட்டார்கள்.


அந்தக் குடிஅரசிலே உள்ள ஒரு பகுதியில் 1929 ஆம் ஆண்டு எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்திலேயே, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு? சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னாலேயே திரு மகம்மது நபி பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும் என்று எழுதியிருக்கின்றார்.

குடிஅரசில் பெரியார் கருத்துகள்

அதே போல 1931 ஆம் ஆண்டு குடிஅரசில் நபிகள் நாயகம் பிறந்தநாள் வைபவம் என்று எழுதியிருக்கின்றார். அதே போல மகம்மது பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதையும் எழுதியிருக்கின்றார். நபிகள் நாயகம் விழா தமிழ் மக்களுக்குப் பொருத்தமானது என்பதை 1935 ஆம் ஆண்டிலே எழுதியிருக்கின்றார். இப்படி நபிகள் நாயகத்தைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் பேசிய எழுதிய கருத்துகளை எல்லாம் தொகுத்தாலே இதையே ஒரு தனி புத்தகமாகவே வெளியிடலாம். தந்தை பெரியார் அவர்கள் ஆனாலும், அவரது தலைமகன் அண்ணா அவர்கள் ஆனாலும், அதே போல கலைஞர் அவர்கள் ஆனாலும், இன்னும் எங்களைப் போன்றவர்கள் ஆனாலும், கவிஞர் மேத்தா அவர்கள் ஆனாலும் இஸ்லாம் மக்களுடன் எங்களுக்கு இருக்கின்ற உறவு பாரம்பரியமாக வரக் கூடிய உறவு.


தோழமை என்பது அவ்வப்பொழுது வரும். ஆனால், உறவு என்பது பிரிக்க முடியாத ஒன்று. புது வரவு உறவு ஆகாது. உங்களை எல்லாம் சந்திப்பதிலே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றோம்.

இனத்தால் திராவிடர்கள்

இங்கே பேசியவர்கள் ஒரே மாதிரியான கருத்துகளைச் சொன்னார்கள். நம்மிடையே உரிமை இருக்கிறது; உறவு இருக்கிறது. மதத்தால் நாம் வித்தியாசப்பட்டிருக்கலாம். ஆனால், இனத்தால் நாம் திராவிடர்கள்.

1944, 1946ஆம் ஆண்டுகளில் நான் சிறு பையனாக இருக்கும் பொழுதே இது போன்ற விழாக்களில் கலந்து கொண்டிருக்கின்றேன்.

அப்துல் ஹமீத்கான் மேயராக இருந்தார். ஆடுதுறையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் விழாவுக்கு அய்யா அவர்களை அழைத்திருந் தார்கள். சிறுவனும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அய்யா அவர்களோடு என்னையும் அழைத்திருந்தார்கள். மயிலாடுதுறைக்குப் பக்கத்திலே மன்னம்பந்தல் என்னும் ஊரில் நடைபெற்ற மீலாது நபி விழா விலும் நான் கலந்து கொண்டிருக்கின்றேன். நபிகள் நாயகம் விழா என்றாலே இரவு 12 மணி ஒரு மணி வரை நடக்கும். அதற்குப் பிறகுதான் சாப் பிடவே அழைத்துச் செல்வார்கள். மண்ணடியில் அப்துல்சாகிப் நிகழ்ச்சியை 12 மணி - ஒரு மணி வரை நடத்துவார்கள். நபிகள் நாயகம் பெருமகனாரைப் பற்றி ஒரு விழாவில் அய்யா சொல்லுகிறார்.

இவர் ஏன் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பலர் கேட்பார்கள். அல்லது உங்களிடம் நீங்கள் போய் இவர்களை அழைக்கலாமா? என்று சிலர் சிண்டு முடிந்து விடுவார்கள்.

மதம் அல்ல! மார்க்கம்,

எங்களிடம் இருப்பது உறவு. அதைப் பிரிக்க முடியாது. இஸ்லாம், மதம் அல்ல; அது ஒரு மார்க்கம்.

பெரியார் சொல்லுகிறார்: நபிகள் நாயகம் ஒரு ஒப்பற்ற பெரியார். இப்பொழுது இருக்கிற மதத்திலேயே இஸ்லாம் மதம் மேலானது. எல்லா மக்களும் அவரைப் பின்பற்றுவது மேலானது என்று நான் தைரியமாய்ச் சொல்வேன். என்று சொல்லுகின்றார்.


திரு மகம்மது நபிகள் மதம் (கொள்கை) மற்ற எல்லா மதத்தைவிட பிந்தியது. அது சமீபத்தில் ஏற்பட்டது. மற்ற மத குறைகளை நீக்கி சீர்திருத்த கருத்துக்களைக் கொண்டது என்றே சொல்லலாம் என்று பெரியார் சொல்லுகிறார். சாக்ரட்டீஸ் மதவாதிகளால் கொல்லப்பட்டார்.

மனித வர்க்கத்திற்கு ஏற்றது

நபிகள் நாயக கொள்கைகள் சீர்திருத்தம் கொண்ட கருத்துக்கள். மனித வர்க்கத்திற்கு ஏற்றது; பெரிதும் அறிவியலுக்கு ஏற்புடையது.

நபிகள் நாயகம் சீர்த்திருத்தக் கொள்கைகளைக் கொண்டு வந்ததால் அவரையும் துன்புறுத்தியிருக்கிறார்கள். அக்காலத்திலே . சீர்திருத்தக் கருத்துக்களைச் சொன்ன தீர்க்கதரிசி அவர்.

இது ஒரு சமத்துவக் கொள்கை கொண்ட மதமாகும். மனிதருக்குள் பேதம் இருக்கக் கூடாது என்று சொல்லுகின்ற மார்க்கம்.

நபிகள் நாயகம் விழாவில் என்னை விமர்சித்தார்கள் என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார். அய்யா அவர்கள் பாராட்டைப்பற்றியும் கவலைப் பட்டதில்லை; அவரை ஒழிக என்று சொல்லுவதைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை.

ஆலிங்கனம்

இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்வது அறிவியல் ரீதியாவும் நன்மை தரக் கூடியது. மனதிற்கும் குளிர்ச்சி அளிக்கக் கூடியது. வெள்ளைக்காரன் ஹலோ என்று கை குலுக்குகிறான். அர்த்தமுள்ள இந்து மதத்துக்காரனோ என்னை எட்டி நிற்கச் செய்து கும்பிடுகிறான்.


இஸ்லாமிய மார்க்கத்தில் பிறவி பேதம் இல்லை. ஏற்றத் தாழ்வு இல்லை. சகலருக்கும் சகல உரிமை தருகிற மார்க்கம். இங்கே ஒற்றுமையை வளர்க்கிறது.

அலெக்சாண்டர் படையெடுத்தபொழுது....

அலெக்சாண்டர் இந்தியாவை நோக்கிப் படை எடுத்து வந்தான். அவன் அக்கரையில் நின்று கொண்டு தனது உளவாளிகளை விட்டு இந்தியா மீது படை எடுக்கலாமா? நிலைமை எப்படி யிருக்கிறது என்று பார்த்து வரச் சொன்னான்.
அலெக்சாண்டரின் படையைச் சார்ந்த ஒற்றர்கள் இந்தியர்களைப் பார்த்துவிட்டு வந்து அலெக்சாண்டரிடம் சொன்னார்களாம்.


இந்தியர்கள் தனித்தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னான். உடனே அலெக்சாண்டர் படை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டுச் சொன்னான்.

சாப்பிடுவதிலேயே ஒற்றுமை இல்லை

சாப்பிடும்பொழுதே இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தனியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். ஒருவர் சாப்பிடுவதை இன்னொருவர் பார்த்துவிடக் கூடாது என்று நினைத்து சாப்பிடுகிறார்கள்.

இவர்கள் எங்கே ஒற்றுமையாக இருக்கப் போகிறார்கள்? எனவே இவர்கள் மீது உடனே படை எடுக்கலாம் என்று தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டானாம். நான் சொல்லுகின்ற இந்தச் செய்தி வரலாற்றுச் செய்தி.

நான் ஆரம்பத்தில் படித்தது ஓர் இஸ்லாமியப் பள்ளி. அதற்குப் பிறகு ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளிக் கூடம் எங்கேயிருக்கிறது என்று கேட்டால், என்ன பதில் சொல்வார்கள் என்றால், இஸ்லாமானவர்கள் தெருவில் இருக்கிறது என்று சொல்லுவார்கள். இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் எங்களுடைய குடையின் கீழே இருப்பவர்கள் அவர்கள்.

காயல்பட்டினத் திருமணம்

அய்யா அவர்கள் காயல்பட்டினத்திலே ஒரு திருமணத்திற்குச் சென்றார்கள். பாவலர் அப்துல் காதர், ஜக்கிரியா போன்றவர்கள் எல்லாம் இருப்பார்கள். இஸ்லாமியர்கள் விருந்தில் எல்லோரும் ஒரே தட்டில் சாப்பிடுவார்கள். நம்மாள்கள் ஒரு வேளை சமபந்தி போஜனம் நடத்திவிட்டு ஒற்றுமையோடு இருப்பதாகக் காட்டுகிறார்கள்.


நான்கூட அடிக்கடி சொல்லுவதுண்டு. எல்லா ஓட்டல்களிலும் காசு கொடுத்துச் சாப்பிட்டாலும் அங்கேயும் சமபந்தி போஜனம்தான் நடக்கிறது என்று சொல்லுவேன்.

மனித நேய விழா

எனவே நபிகள் நாயகம் விழா என்பது மனித நேய மிக்க விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகம் மதியர்கள் சுயமரியாதை உணர்வு கொண்டவர்கள்.
நபிகள் நாயகம் ஆண்டவனின் அவதாரம் கிடையாது. அவர் மனிதர்களுக்குள்ளேயே தலை சிறந்த மாமனிதர். மற்றவர்கள் நினைக்க முடியாத காலத்தில் அறிவியல் ரீதியாக அவர் சிந்தித் திருக்கின்றார். மனிதனை மனிதர்கள் வணங்குவதை அவர் சம்மதிப்பதில்லை.


எனவே, நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதை எங்களுடைய கடமைகளில் ஒன்றாகவே கருதுகின்றோம்.

மக்கா செல்வது மூடநம்பிக்கை இல்லையா?

பெரியார் 1931 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கின்றார். மறுநாள் தந்தை பெரியார் அவர்களிடம் சிலர் கேள்வி கேட்டனர்.

இஸ்லாமியர்கள் மக்காவுக்குச் செல்கிறார்களே அது மூடநம்பிக்கை இல்லையா? காசி, ராமேஸ்வரம் போவதை மட்டும் மூடநம்பிக்கை என்று சொல்லுகிறீர்களே என்று கேட்டார்கள். பெரியார் அவர்களிடம் மூடநம்பிக்கைகளைப் பற்றிக் கூறினார்.

பிறகு ஒருமுறை ஈரோடு வந்த அப்துல் சமது அவர்களுடைய தகப்பனார் மவுல்வி அப்துல் ஹாஜி அவர்களிடம் பெரியார் இது பற்றி என்ன கருத்து சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது மவுல்வி அப்துல் சாகிப் சொன்னார். மக்கா என்பது புனிதத் தலம் அல்ல. மகம்மது நபி பிறந்த இடம். அது ஒரு வரலாற்றுச் சின்னம். அந்த வரலாற்றுச் சின்னத்தைப் பார்க்கவும், நடை, உடை, நாகரிகம் இவைகளைப் பார்த்து வரத்தான் செல்கிறார்கள். இதைத்தாண்டி யாராவது புனிதத்தலம் என்று சென்றால் அது அவர்களுடைய அறியாமையைத்தான் காட்டும் என்று பதில் சொன்னார்.

மூடநம்பிக்கையைக் கண்டித்தார்

மண்ணடியில் நாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும்பொழுது அப்துல் சமது அவர்களே சொன்னார்கள். நபிகள் நாயகம் மூட நம்பிக்கைகளைக் கண்டித்தவர். தயவுசெய்து மூடநம்பிக்கைகளைப் பரப்பாதீர்கள். மூட நம்பிக்கைகளைப் பின்பற்றக் கூடாது என்று தெளிவாகவே சொன்னார்.

சாந்தி, சமாதானம், ஒற்றுமை - அறிவியல் ரீதியான கருத்துகள் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளன. இந்த மதத்தில் தான் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு.
விதவை மறுமணம் உண்டு; ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னாலே கதீஜா என்ற விதவைப் பெண்ணைத்தான் நபிகள் நாயகம் மணந்தார் என்றால், அந்தக் காலத்திலேயே எப்படிப்பட்ட சீர்திருத்தக் கருத்துகள் இருந்தன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


கணவன் - மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடா? உடனே விலகிக் கொள்ளலாம்.

1400 ஆண்டுகளுக்கு முன்பே சீர்திருத்தக் கருத்துகள்

மனித குலத்தில் சரிபகுதியாக இருக்கின்ற பெண்களுக்கு உரிமை கொடுத்த மார்க்கம். ஒரு கை இயங்குகிறது. இன்னொரு கை இயங்கவில்லை என்றால் அது பக்கவாதம் இல்லையா? எனவே 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்த மார்க்கத்தில் சீர்திருத்தவாதிகள் இருந்திருக்கிறார்கள். பகுத்தறிவுவாதிகள் இருந்திருக்கிறார்கள்.


இதற்கு மேலே இதைப் பற்றி யாராவது விளக்கம் கேட்டால் இது வம்புக்கு வரக் கூடியதே தவிர, அறிவு பூர்வமாக சிந்திக்க அவர்கள் தயாராக இல்லை என்பதுதான் பொருள். அண்ணா அவர்கள் எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியத்திலே அண்ணா கங்குபட்டராக ஒரு பார்ப்பனராக நடிப்பார். சி.வி.எம். அண்ணாமலை அவர்கள் பஞ்சகச்சம் எல்லாம் கட்டிக்கொண்டு அய்யர் வேடத்திலே ஒரு ரோட் சீனிலே வருவார்.

எதிரே ஒருவர் சட்டை இல்லாமல், சாதாரண ஒரு உழைப்பாளியைப் போல் வருவார்.


நீ யாரப்பா? என்று கேட்பார். என்னங்க நான்தான் அமாவாசை வந்திருக்கிறேன் என்று சொல்லுவார். அட நான் இப்பொழுது தான் குளித்து முடித்து சந்தியாவந்தனம் எல்லாம் செய்துவிட்டு வந்தேன். தாழ்த்தப்பட்டவராகிய நீ என் முன்னாலே வந்ததாலே என்னுடைய ஜபதபம் சந்தியா வந்தனம் எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லி அவரை விரட்டுவார்.

பாய் ஊருக்கு புதுசோ!

அதேபோல இன்னொரு சீன் வரும் அதிலே ஒரு அய்யர் வருவார். அவருக்கு எதிரே ஒரு குல்லாய் போட்டு, சிங்கப்பூர் பெல்ட் போட்டு பச்சைக்கலர் பெல்ட், தேவைக்கு ஏற்ப இறுக்கிக் கொள்ளலாம். பிறகு லூஸ் பண்ணிக் கொள்ளலாம். அந்த பெல்ட்டைக் கட்டிக்கொண்டு சிங்கப்பூர் பனியனைப் போட்டுக் கொண்டு வருவார்.


இந்த அய்யர் எதிரே கைலி கட்டியிருப்பவரைக் கேட்பார்.
யார்? பாய் ஊருக்குப் புதுசோ! என்று கேட்பார்.

உடனே கைலி கட்டியிருந்தவர் சொல்லுவார், என்னங்க என்னைத் தெரியலையா? நான்தாங்க பழைய அமாவாசை. இப்பொழுது அப்துல் காதராக மாறிவிட்டேன் என்று சொல்லுவார். இந்த அய்யர் உடனே சலாம் பாய் என்பார் மரியாதையாக.


அதாவது ஜாதிக் கொடுமை எப்படி இந்த நாட்டிலே இருக்கிறது; மதம் மாறினால் எப்படி மறைகிறது என்பதை இந்த இரு காட்சிகளில் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுவார் அண்ணா அவர்கள்.

தீவிரவாதிகளா?

இப்பொழுது ஒரு வாதத்தைக் கிளப்பி விடுகிறார்கள். இஸ்லாம் மதம் என்றால் அதற்கு ஒரு உருவம் கொடுத்து தீவிரவாத இயக்கமாக ஊடகங்கள் மூலம் காட்டுகிறார்கள்.


தீவிரவாதத்தில் இந்து தீவிரவாதம் இல்லையா? அல்லது கிறிஸ்தவ தீவிரவாதம் இல்லையா?

முஸ்லிம்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா? பெரும்பான்மையினர் ஆளவேண்டும். சிறுபான்மையினர் வாழவேண்டும் என்று கருதுகின்றவர்கள்.
நபிகள் நாயகம் மாமனிதராக வாழ்ந்திருக் கின்றார். பேதமிலா பெருவாழ்வு வாழவேண்டும் என்று கருதுகின்றவர்கள் இஸ்லாமியர்கள்.

உறவு ஒருபோதும் உருகாது; மாறாக இறுகும்!

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்திலிருந்து, அப்துல் சமது காலத்திலிருந்து, பன்மொழிப் புலவர்அப்துல் லத்தீப் காலத்திலிருந்து இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக இருக்கின்ற பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் காலம்வரை உங்களை எங்களுடைய உறவுகளாகப் பார்க்கிறோம். இந்த உறவு ஒரு போதும் உருகாது. இது மேலும் வலுப்பட்டு இறுகுமே தவிர உருகாது.


அரசியல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புத் தேவை என்று தப்பித் தவறி எதிரி வீட்டில் நுழைந்தால் அவர்கள் விவரம் புரியாதவர்கள் என்பதை எல்லாம் நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். -இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

---------------- “விடுதலை” 15-2-2011

10 comments:

rajuselvaraju49 said...

mekavauku poi saithan endru kal mel kal erigiragal athu ene apo veeramani

idroos said...
This comment has been removed by the author.
நம்பி said...

உண்மைதான்...இந்து மதத்தில் இருக்கும் பிரிவினைகள் இதில் இல்லை...சாதிகள் (சிலர் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்...அது தவறு..அந்த மதக்கோட்பாட்டின் படி அப்படி பார்க்க்கூடாது..லப்பை...என்று பிரித்து பார்ப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்...இந்துக்களின் அருகிலிருந்ததால் அது தொற்றிக்கொண்டிருக்கும்)...வர்ணாசிரமங்கள் இல்லை..வர்க்கபேதங்கள் இல்லை....ஆனால் பெண்கள் விஷயத்தில் தான் மிகவும் பின்தங்கியுள்ளது...நபிகள் நாயகம் விதவைப்பெண்ணை மணந்தார்...ஆனால் அந்த சமய நூலான குரானில்...எழுதப்பட்ட இந்த வாசகம் இடம் பெற்றிருப்பது...மிக மிக பெண்ணியத்திற்கு எதிரானது..மனிதநேயமற்றது...''பாலியல் தொழில் புரியும் பெண்களை கல்லால் அடித்துக் கொல்லவேண்டும்'' என்ற விதி ..மிகவும் முரண்பாடானது...ஆண் துணையில்லாமல் பாலியல் தொழிலை பெண் தனித்து செய்யவே முடியாது அப்படியிருக்க ஆணிற்கு எந்த தண்டனையுமே அதில் வழங்கப்படவில்லை..முதலில் தண்டனை வழங்கும் உரிமை எவருக்குமே இல்லை அது வேறு விஷயம்). மாறாக வறுமையின் காரணமாக, குடும்ப சூழ்நிலையில் காரணமாகவோ இந்த தொழிலுக்கு கட்டாயத்தின் பேரில் தள்ளப்படும் பெணகளை மட்டும்...(எவருமே இதில் விருப்பப்பட்டு ஈடுபடுவதில்லை) கல்லால் அடித்து கொல்வது என்பது ஆணாதிக்கத்தை கொழுந்து விட்டு எரியவிடுகிறது.

இயேசு பிரான் ஒருமுறை பாலியல் தொழில் புரியும் பெண்ணை கல்லால் அடிக்க வந்த மக்களைத் தடுத்திருக்கிறார்...உங்களில் யார்? உத்தமரோ அவரே இப்பெண்ணின் மீது கல்லெறியக்கடவர் என்று கூறியதாக அவர் வரலாற்று நூலில் வருகின்றது.

ராமகிருஷ்ண பரமம்சரும் பாலியில் தொழில் புரியும் பெண்ணின் கழிவறையை தன் தலைமுடியால் சுத்தம் செய்வதே புனிதமானது என்று கூறியிருக்கிறார். (அவர் செய்தாரா? என்பது தெரியாது...உயர்வுக்காக கூறியிருக்கலாம்)

புல்லாங்குழல் said...

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உங்கள் கட்டுரைக்கு நன்றி சகோதரி!

nagoreismail said...

உறவு ஒரு போதும் உருகாது - சில விஷமிகள் இதனை கள்ள உறவு என்று விமர்ச்சிக்க கூடும். கவனம் தேவை. கி.வீரமணி அவர்களின் பேச்சுக்கு நன்றி.

siddhar palaniappa swamigal said...

முதலில் தெரித்து கொள்வோம் இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லையா ஒருவர் தர்க்கா வழிபாடுகளை ஆதரிப்பவர் மற்றும் வெறுப்பவர் இருக்கின்றனர்,

இங்கு உள்ள அனைத்து முஸ்லீம்களும் இந்து தமிழர்களே இவர்கள் அனைவரும் மதம் மாறியவர்கள்

ஆனால் அதை ஒருவர் கூட ஒப்புக்கொள்வதில்லை என்னவோ இவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர்களைப் போல தங்களை காட்டிக்
கொள்கின்றனர்,

பெண்னை தெய்வமாக வழிபட்டவர்கள் இந்துக்கள் பெண்களை துணியால் மூடி அவர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்திய மதம் இந்து மதம் இல்லை

தங்களின் மத அடையாளத்தை வெளிக்காட்டி தங்களின் மதவெறியை வெளிப்படுத்தும் மதம் இந்து மதம் அல்ல

தினசரி 5 முறை கடவுளை தொழவேண்டும் இல்லை என்றால் நீ முஸ்லீம் இல்லை என்று சொல்லும் மதம் இந்து மதம் அல்ல

பிறை வந்தால் தான் ரம்ஜான் பண்டிகையே கொண்டாடப்படுகிறது நிலா என்பது வேற்றுகிரகம் அதற்க்கும் இங்குள்ளவனுக்கும் என்ன சம்மந்தம்
இதற்கு பெயர்தான் பகுத்தறிவா

சுன்னத் என்ற பெயரிலே மக்களை வதைப்பது இந்துமதத்தில் இல்லை

இந்துமதத்திலே மதக்கருத்துக்களை புகுத்துவது கிடையாது.

இந்துமதக்கடவுள்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதால் அவர்கள் வன்முறையை வளர்ப்பதாக சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் அது தவறு

இஸ்லாம் அன்பை போதிப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் வாழும் நாட்டில் தான் வன்முறை தலைவிரித்தாடுகிறது.

siddhar palaniappa swamigal said...

முதலில் தெரித்து கொள்வோம் இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லையா ஒருவர் தர்க்கா வழிபாடுகளை ஆதரிப்பவர் மற்றும் வெறுப்பவர் இருக்கின்றனர்,

இங்கு உள்ள அனைத்து முஸ்லீம்களும் இந்து தமிழர்களே இவர்கள் அனைவரும் மதம் மாறியவர்கள்

ஆனால் அதை ஒருவர் கூட ஒப்புக்கொள்வதில்லை என்னவோ இவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர்களைப் போல தங்களை காட்டிக்
கொள்கின்றனர்,

பெண்னை தெய்வமாக வழிபட்டவர்கள் இந்துக்கள் பெண்களை துணியால் மூடி அவர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்திய மதம் இந்து மதம் இல்லை

தங்களின் மத அடையாளத்தை வெளிக்காட்டி தங்களின் மதவெறியை வெளிப்படுத்தும் மதம் இந்து மதம் அல்ல

தினசரி 5 முறை கடவுளை தொழவேண்டும் இல்லை என்றால் நீ முஸ்லீம் இல்லை என்று சொல்லும் மதம் இந்து மதம் அல்ல

பிறை வந்தால் தான் ரம்ஜான் பண்டிகையே கொண்டாடப்படுகிறது நிலா என்பது வேற்றுகிரகம் அதற்க்கும் இங்குள்ளவனுக்கும் என்ன சம்மந்தம்
இதற்கு பெயர்தான் பகுத்தறிவா

சுன்னத் என்ற பெயரிலே மக்களை வதைப்பது இந்துமதத்தில் இல்லை

இந்துமதத்திலே மதக்கருத்துக்களை புகுத்துவது கிடையாது.

இந்துமதக்கடவுள்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதால் அவர்கள் வன்முறையை வளர்ப்பதாக சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் அது தவறு

இஸ்லாம் அன்பை போதிப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் வாழும் நாட்டில் தான் வன்முறை தலைவிரித்தாடுகிறது.


முஸ்லீம்கள் மெக்காவுக்கு போனால் மூடநம்பிக்கை இல்லை ஆனால் இந்துக்கள் காசிக்கோ இராமேஸ்வரத்துக்கோ போனால் அது மூடநம்பிக்கை இதுதான் பகுத்தறிவு

நம்பி said...

//பெண்னை தெய்வமாக வழிபட்டவர்கள் இந்துக்கள் பெண்களை துணியால் மூடி அவர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்திய மதம் இந்து மதம் இல்லை//

துணியால் மூடவில்லை...அதை ஆதரிக்கவில்லை...அதை உச்சநீதிமன்றம் கூட ணமூபத்திய தீர்ப்பில் எங்களுக்கு வாக்களார் அடையாள அட்டை புகைப்படத்திற்கு முகமூடியுடன் எடுத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு மறுத்து விட்டது. அந்தளவுக்கு மத தீவிரத்துடன் நீங்கள் வாக்களிக்க வேண்டியதில்லை..வாக்களித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்று கூறிவிட்டது.

அந்த பழமைவாதம் தான் தாலாபன்களை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்க காரணமாயிருந்தது...அவர்கள் ஆட்சி விலக்கப்பட்டவுடன் சந்தோஷப்பட்டது முதலில் அங்கு வாழும் பெண்கள் தான்... சுதந்திரத்துடன் வெளியே வந்தனர்.

ஆனால் இந்து மதம் ஒன்றும் பெண்களுக்கு சுதந்திரத்தை வழங்கிவிடவில்லை..அதை விட மோசமான நிலையிலேயே பெண்களை வைத்துள்ளனர்.....

பெண்களுக்கு அதிக இழிவை ஏற்படுத்தியது இன்னும் ஏற்படுத்திக்கொண்டு வருவது ஆரியப் பார்ப்பன இந்து மதம். இந்து மதமே பார்ப்பனர்களின் சொத்து, அது தான் அவர்களின் திடமான எண்ணம் அதை நிகழ்த்தி கொண்டுவருவபவர்களும் அவர்களே!.....மூர்க்கத்துடன் குரல் கொடுப்பவர்களும் அவர்களே!....அது திராவிடர்களால் உருவாக்கப்பட்வில்லை...அவர்கள் உருவாக்கிய கடவுள்கள் தான் ஆணாதிக்க கடவுள்கள்...அதற்காக அவர்கள் எழுதிய புராணங்கள் அனைத்திலும் பெண்களை மிக ஆபாசமாக இழிவு படுத்தி எழுதப்பட்டவைகள்.

பார்வதி சிவனை.......... பார்த்து விரக தாபத்தில் துடித்து குதிரையுடன் கலவி வைத்ததாகவும் அந்த குதிரை வடிவில் சிவன் வடிவெடுத்து வந்து கலவி புரிந்ததாகவும் எழுதி பெண்ணை இழிவு படுத்திக்கொண்டிருக்கிற மதம் தான் இந்து மதம்.

சிவன், பார்வதி என்ற ‘’கற்பனை கடவுள்களுக்கே’’ (வரலாற்று ஆதாரம் இல்லை) இந்த நிலை என்றால் சாதராணமாக வாழ்ந்து கொண்டிருக்கிற பெண்களின் நிலைமை....அந்த கற்பனையை வைத்து தானே இந்து மதம்...பிறரை அடிமைப்படுத்த, சோம்பேறித்தனமாக பார்ப்பனர்கள் பிறரின் உழைப்பைத் ‘’திருடி’’ வாழ்வதற்காக உருவாக்கப்பட்டது தானே இந்த கற்பனைகள்...

இந்து என்பதற்கு பொருள் ‘’திருடன்’’ இதையும் பார்ப்பனரே தன் அகராதியில் குறிப்பிட்டு இருக்கிறார். (கமலபதி திரிபாதி எழுதிய அகராதி..உத்திரபிரதேச முன்னால் முதலமைச்சர்) ஆகையால் இந்து மதம் பெண்களுக்கு எந்த உயர்வையும் தரவில்லை. முதலில் சகமனுஷியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகுதான் உயுர்வு எல்லாம்....அவர்கள் யார்? உயர்வு தருவதற்கு?...பெண்கள் உயர்வானவர்கள் தான்..அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர் எவராயிருந்தாலும் இந்த சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படவேண்டியவர்கள் தான்...தாயை பழித்தவனை..தாய்க்குலத்தை பழிவத்தவனை...அவளால் பிறப்பெடுத்தவனே பழிப்பதை எந்த ஒரு மனிதநேயமுள்ளவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். பார்ப்பனர்களைத் தவிர..

‘’பெண்களை’’ பார்ப்பனர்கள் தங்களின் சோம்பேறி.... சுயநலத்திற்காக உருவாக்கிய பாழும் வர்ணாசிரமத்தில் கடைசி வருணத்தில் வைத்து தான் உருவாக்கியிருக்கிறான். பஞ்சமர் என்ற ஐந்தாம் பிரிவுக்கும் கீழும் பெண்களை வைத்துள்ளனர்...இதை உருவாக்கிய பார்ப்பனன் மட்டுமே கீழானவன் அதில் மாற்றுக் கருத்து இல்லை...இதை அக்னிஹோத்திர ராமானுஜ தாத்தாச்சிரியார் தன் நூலில் ‘’வர்ணாசிரமம் மிகப் பெரிய பாவம்’’ என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் முன்னால் சங்கராச்சாரியாரின் வலது கரமாக இருந்த பார்ப்பனர் தான் இந்த அக்னிஹோத்திரம்.
.......

நம்பி said...

ஆக இந்த மாதிரி இழிவுகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை....முகமது நபி எழுதிய காலகட்டத்தில் அம்மக்கள் வாழ்ந்த கரடு முரடான காலகட்டத்தில் அந்த நிலப்பரப்பு மக்களுக்கு உகந்ததாக எழுதப்பட்டது. இப்பொழுது அதை பல இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்த பெண்கள் மீறி புரட்சியுடன் வெளியே வருகின்றனர். தினத்தந்தியில் கூட செய்திவந்தது தர்க்காவுக்கு பெண்களும் சென்றதாக படத்துடன் போடப்பட்டிருந்தது. நடுவில் திரை கட்டி ஆண் பெண் இருவரும் தொழுகையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. இன்னும் இது அதிக அளவில் பரவிவிடும் அதை யாரும் தடுக்க முடியாது.
(மக்களின் முற்போக்கு எண்ணங்களை எழுச்சியை எந்த சக்தியாலும், எந்த ஒரு சமயக்கட்டுப்பாட்டினாலும் தடுத்துவிட முடியாது. அது அவர்களின் உரிமை.....மாறிக்கொண்டேயிருக்கும உண்மை மட்டுமே இந்த உலகத்தில் மாறாதது...)

ஆனால் பார்ப்பன இந்து மதம் மட்டுமே மாறாதது. அவர்களை ஒதுக்கினால் போதும் எல்லாம் மாறிவிடும்.
இஸ்லாம் மதம் போராட்டத்தினிடையே விளைவிக்கப்பட்டிருக்கலாம்...அது அன்றைய சூழல் வரலாறு...அதில் அகிம்சை, பகுத்தறிவாளர் என்று வருகின்ற எவருக்கும் உடன் பாடு இருக்கமுடியாது...காந்தி, விவேகானந்தர் உட்பட (அகிம்சையினால் சுத்ந்திரத்தை பெற்றவர் அதற்கு உடன்படமாட்டார்).... ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தின் உயரிய விஷயத்தை போற்றித்தான் ஆகவேண்டும். அதை நியாயமாக போற்றினார்.

பிரிவுச் சண்டைகள் வேறு....அந்த பிரிவுகளுக்குள் சாதிகள் இல்லை, ஏற்றத் தாழ்வுகள் இல்லை...

உன்னிடம் பணிபுரியும் பணியாள் உண்ட பிறகே நீ உண்ண வேண்டும்...

இது பொதுவுடமை..இதெல்லாம் சுத்தமாக இந்து மதத்தில் கிடையாது....இருந்தால் பார்ப்பனர்களின் எண்ணம் போனியாகாது.......இஸ்லாமியப் பிரிவுச் சண்டைகள் எல்லாம் செல்வாக்கு பற்றிய சண்டைகள்....(சன்னி..ஷியா....)

அந்த (இஸ்லாமிய) சமயக் கட்டுக்கோப்பை சமதர்மத்தை (பெண்கள் விஷயத்தில் பின்தங்கியிருக்கலாம்....ஆண் விஷயத்தில் சமதர்மத்தை தான் அது போதிக்கிறது)...எளிமைத்தனத்தை போற்றினார்.....அதுதான் இப்போது தேவை....அது பார்ப்பன இந்து சமயத்தில் துளி கூட இல்லை....

6000 வகையான சாதிகள் அதற்கான மூலக்காரணம் ஆரிய பார்ப்பனர் வகுத்த வர்ணாசிரம் தர்மம்.

//தங்களின் மத அடையாளத்தை வெளிக்காட்டி தங்களின் மதவெறியை வெளிப்படுத்தும் மதம் இந்து மதம் அல்ல//

//இந்துமதக்கடவுள்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதால் அவர்கள் வன்முறையை வளர்ப்பதாக சிலர் நினைக்கின்றனர்.//

வன்முறையில் தோன்றியதாக இஸ்லாமியத்தை குறை கூறிக்கொண்டு அகிம்சை மதம் என்ற பித்தலாட்டத்தை கூறிய ஆரிய இந்து மதபார்ப்பனர்கள் (நாதுராம் கோட்சே) தான் அந்த இந்து மதத்திற்கு ஆதரவாக இருந்த, ராமனை போற்றி வந்த மகாத்மா காந்தியை போட்டு தள்ளியது.

//இஸ்லாம் அன்பை போதிப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் வாழும் நாட்டில் தான் வன்முறை தலைவிரித்தாடுகிறது.//

எங்கே பார்ப்பன நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சேவை 1997 இல் ஊடகத்திற்காக பேட்டி கண்ட பொழுது, ''இப்பொழுதும் சொல்வேன் காந்தியை சுட்டது சரிதான்'' என்று கூறினாரே..இன்றும் நாதுராம் கோட்சேயின் தூக்குதண்டனை தினத்தை இந்து மதவெறியினர் கேட்சேயின் பிறந்த ஊரில் போற்றிக்கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே!.....அப்படியென்றால் மதவெறியை எந்த தண்டனையினாலும் திருத்த முடியாது என்பதனைத்தானே காட்டுகிறது. மனிதநேயமற்றது மதவெறி என்பதை தானை காட்டுகிறது. இதை யார் செய்தாலும் தவறுதான். எந்த சமயத்தவர் செய்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஆங்கிலேயரிடம் இருந்த எந்த பீரங்கியும் ஆங்கிலேயருக்கு மிகத்தொல்லைக்கொடுத்த காந்தியின் நெஞ்சைக் குறிவைக்கவில்லையே...பார்ப்பன இந்து மதவெறிதானே குறிவைத்தது.
சுடும் பொழுது அவரின் முதிய தள்ளாடிய வயதையாவது கருத்தில் கொண்டிருக்கலாமே....இந்த இந்து மதம்.


அதன் தொடர்ச்சியாக பார்ப்பனியத்தில் ஊறிப்போன மதவெறிப் பெண்ணே சாமியார் வேடம் போட்டு நிகழ்த்திய மாலேகான் குண்டுவைப்பு சம்பவங்கள். இதற்கு ராணுவ அதிகாரி வேறு உடந்தை....

வன்முறையை நிகழ்த்திய அந்த பெண்ணிறகு வர்ணாசிரமத்தின் முழு உண்மையும் தெரிந்திருந்தால் இந்த செயலை செய்திருக்காது...தன்னை இந்த மதம் எங்கு வைத்திருக்கிறது என்று தெரிந்திருந்தால் முதலில் தன் மதத்தை ஒழித்திருக்க புறப்பட்டிருக்கும். வன்முறையில் அல்ல பகுத்தறிவு போராட்டத்தின் வாயிலாக.

//தினசரி 5 முறை கடவுளை தொழவேண்டும் இல்லை என்றால் நீ முஸ்லீம் இல்லை என்று சொல்லும் மதம் இந்து மதம் அல்ல//

ஆனால் கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற இஸ்லாமிய விஷயம் பாரட்டத்தக்கதல்லவா.....

அது இந்து மதத்தில் சுத்தமாக இல்லையே....எங்கே பார்ப்பனரல்லாத அரச்சகர்களை கோயிலின் கருவறைக்குள்ளேயே விடுவதில்லையே....தீட்டு என புற்க்கணிக்கப்படுகிறதே!. இது மாதிரி இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லையே....

நம்பி said...

இந்து மத புராணங்களின் படி புத்தர் ஒரு நாத்திகர்......விஷ்ணுவின் தலைமயிரில் பிறந்தவர் தான் புத்தர்....

சொர்க்கத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக பூலோகத்தில் நல்லவர்கள் அதிகமிருப்பதால் அனைவரும் சொர்க்கத்திற்கு வந்து இட நெருக்கடி கொடுத்துவிடுவதால், (அது எவ்வளவு பரப்பளவு என்று தெரியவில்லை?),,,,,கடவுளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் பாவம் செய்தவர்களாக ஆவார்கள்...அப்புறம் பூலோகத்தில் அந்த புத்தரின் பிரச்சாரத்தை பின்பற்றும் எல்லோரையும் பிடித்து நரகத்திற்கு அனுப்பலாம்...பார்ப்பனர்களைத்தவிர.....இங்கு நெருக்கடியும் குறையும். ஆகையால் ஒருநரனை படைக்கவேண்டி படைப்பாளி விஷ்ணுவிடம் பார்ப்பன தேவர்கள் முறையிட்டனர்,,,,,அவர் மண்டையில் இருக்கும் ஒரு ‘’தலைமயிரை’’ பிடுங்கி ஒரு நரனை உருவாக்கினார்...அது தான புத்தர்..... என்பது பார்ப்பன புராண புருடா....இது தான் இந்து மதம்,,,,,இந்து மதம் புத்த மதத்தையும் விட்டுவைக்கவில்லை கேவலப்படுத்துகிறது.....அப்புறம் எப்படி ‘’வன்முறை’’ ‘’வன்முறை’’ மதவெறி என்று இந்துக்கள் குரல் கொடுத்து நாடகம் ஆடமுடியும்...உருவாக்குவதே பார்ப்பன இந்து மத வேதங்கள் தான். இதை வாபஸ் வாங்கியிருக்கிறார் சங்கராச்சாரியார்...புத்த பிக்குகளிடம். இதிலிருந்து என்ன தெரிகிறது..?..இந்த மொத்த குப்பையும் எழுதியது பார்ப்பனர்கள் தான் எனபதும், அவர்கள் நினைத்தால் எந்த அக்கிரமத்தையும் செய்ய முடியும் என்பதை தெளிவாக காட்டுகிறது....அப்பறம் எப்படி பிற சமயத்தாரை குற்றம் சொல்லமுடியும். நம்ம இடத்திலேயே ஆயிரம் அழுக்கு இருக்குதே....? முடை நாற்றம் இருக்குதே...?அதிலேயிருந்து முற்றிலும் வெளியே வந்தாதானே பிறரை குத்தம் சொல்லமுடியும்.