Search This Blog

31.1.09

பார்ப்பன பனியா கூட்டத்தின் சதித் திட்டம்!






7-ஆவது என்.ஆர்.அய். மாநாடு (வெளி நாடு வாழ் இந்தியர்கள்) முதன் முறையாக தமிழ்நாட்டில் இம்மாதம் 7 முதல் 9 முடிய சென்னையில் நடைபெற்றது. 40 நாடுகளிலி ருந்து 1500 செல்வாக்கு மிக்க இந்தியர்கள் கலந்து கொண்டனர், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பங்கேற்றார். தமிழ்நாடு முதலமைச்சரும் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியும் பங்கு கொள்ள, பார்ப்பன ஊடகங்கள் மோடியின் பேச்சை ஆகா ஊகா என்று பாராட்டின.

அதே போல உலகம் தழுவிய முதலீட்டாளர்களின் உச்சி மாநாடு ஒன்று சனவரி 13-ஆம் தேதி டில்லியில் நடைபெற்றது. அம்மாநாட்டில் இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்கள் அனில் அம்பானி, சுனில் மிட்டல், ரட்டன் டாட்டா முதலியோர் பங்கு கொண்டு, குஜராத் முதல் அமைச்சர் மோடியைத் தலையில் தூக்கி வைத்து ஆடினர். எதிர்காலப் பிரதமருக்குத் தகுதியானவர் நெய்யில் பொரித்த இவர்தான் என்று ஏகப்பட்ட புகழாரங்களைச் சூட்டினர்.

பார்ப்பனர்களும், பண முதலைகளும் இப்படி ஒரு கருத்தை சன்னமாக மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

குஜராத்தை இந்தியாவிலேயே முதல் நம்பர் தொழிற்கூடமாக மாற்றிக் காட்டிய முத்தான மனிதர் இவர்தான். இவர் இந்தியாவின் பிரதமராக வந்தால் இந்தியாவையே குஜராத்தாக மாற்றிக் காட்டுவார். வறுமை ஒழியும் வாட்டங்கள் பறக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் திண்டாட்டமாகி விடும் என்பது போல பாமர மக்களின் காதுகளில் பூ சுற்றுகின்றனர்.

அதற்கு ஏற்றாற்போல ஊடகங்களும் பார்ப்பனர்கள் - பனியாக்கள் - முதலாளிகளின் கைகளிலேதானே வசமாகச் சிக்கிக் கிடக்கின்றன பிரச்சாரத்தால் ஆகாதது எது என்ற இறுமாப்பில் மேய்ந்து கொண்டிருக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று மோடி அழைக்கப்பட்டது ஏன் என்ற பின்னணியைத் தெரிந்து கொண்டால் தான் மோடி என்கிற மோசக்கார மனிதனின் முழுப் பரிமாணம் தெரிய முடியும்.

1) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை என்பதில் நம்பிக்கை கொண்டவரா இந்த மனிதன்?

முதலில் இதற்குப் பதில் சொல்லி விட்டல்லவா அடுத்தடுத்து ஆசைகளைப்பற்றி வாயூறப் பேச வேண்டும்.

ஹிந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று கூறும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர் தேர்தலில் நிற்கக் கூட சட்டரீதியாகத் தகுதியற்றவராயிற்றே. இந்த நிலையில் பிரதமர் என்கிற நினைப்பு பிழைப்பைக் கெடுக்காதா?

2) இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களான முசுலிம்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரண மாக இருந்த ஒருவர் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று ஒரு சிறு கூட்டம் சதிக்கிருமிகளை ஊடுருவ விடுகிறது
என்றால், அதன் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

3) 2002-இல் கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு சிறுபான்மை மக்களின் உயிர்களைக் குடித்தகொடுமை மட்டுமல்ல; அவர் தொடக்கமும், தொடர்ச்சியும் முடிவும் எல்லாமே சிறுபான்மை மக்களின் ரத்தத்தைக் குடித்துப் பசியாறுவது தான் - தாகம் தீர்ப்பதுதான்!

People's Democracy ஏட்டில் வெளிவந்த தலையங்கத்தை தீக்கதிர் ஏடு (9.9.2008) தமிழில் தந்துள்ளதை எடுத்துக் கொள்ளலாம்.

1998 டிசம்பர் 25 முதல் 31 வரையிலான தேதிகளில் இந்துத்துவா சக்திகள் குஜராத்தில் மிகச் சிறிய டாங்ஸ் மாவட்டத்தில் ஒன்பது தேவாலயங்களை தீக்கிரையாக்கி யுள்ளன. பதினொரு தேவாலயங்களிலிருந்து அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கியுள்ளன. மிகத் திட்ட மிட்ட கொரில்லா உத்திகளின் அடிப்படையில், ஒவ்வொரு நாள் இரவும், ஒரு வாரம் முழுவதுமாக இத்தகைய நடவடிக் கைகளில் நூற்றுக்கணக்கானோர் கிராமங்களில் புகுந்து, தேவா லயங்களையும், பிரார்த்தனைக் கூடங்களையும் தீக்கிரை யாக்கியும், பொருள்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத் தியும், கிறித்துவ மத நம்பிக்கையுடைய ஆண்கள் பெண்கள் அனைவரையும் அடித்து நொறுக்கியும் உள்ளனர். இது இந்திய அரசியல் அமைப்புக் கூட்டம், நாட்டில் உள்ள அனைத்துக் குடி மக்களுக்கும் உறுதி அளித்துள்ள தனி நபர் சுதந்திரத்தின் மீதும், அடிப்படை உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும். இது ஜனநாயகத்தை பெரும்பான்மையான வாதமாகக் (Majoritiarianism) குறைத்திடும் நடவடிக்கையாகும் என்று பீப்பிள்ஸ் டெமாக்கிராஸி தலையங்கம் தீட்டியதி லிருந்து குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியை - நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றம் ஏன் விமர்சித்தது என்பதைத் திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளலாமே.

டாங்ஸ் மாவட்டத்தில் நடந்த இந்தக் கேவலமான காட்சிகளை நேரில் கண்ட நிலையில் தான் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன்! என்று வெளிப் படையாகவே கூறினார்!

அக்கட்சியின் பிரதமரே அநாகரிகமாகக் கருதும் அளவுக்கு நடந்து கொண்ட ஒரு பாசிஸவாதியை இந்தியாவின் பிரதமராக்கத் துடிக்கிறது ஒரு குள்ள நரிக் கூட்டம் என்பதை வெகு மக்கள் வெகு எச்சரிக்கையுடன் நோக்க வேண்டும்.

பா.ஜ.க. சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் அத்வானியா - நரேந்திர மோடியா என்றெல்லாம் அவாள் வட்டாரத்துக் குள்ளேயே போட்டா போட்டி!

அந்த இருவருள் ஒருவரான அத்வானியால் எழுதப்பட்டு அண்மையில் வெளியிட்ட என் நாடும் என் வாழ்க்கையும் என்ற நூலில் இடம் பெற்றுள்ள ஒரு தகவல் - மோடி எந்த அளவு பிரதமருக்கான வேட்பாளர் என்பது ஒரு புறம் இருக்கட்டும் - முதல் அமைச்சருக்கே தகுதியானவரா அவர் என்பதை எடை போட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

குஜராத்தில் நடந்த சம் பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறியதாகவும், அதற்கு மோடியும் கோவாவில் நடக்க விருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வ தாகவும் கூறினார் என்று கூறப்பட்டுள்ளதே - இதற்கு என்ன சமாதானம்?

இதற்கான பதில் இவ்வளவு கேவலமான, குரூரமான செயலில் ஈடுபட்ட ஒருவர் முதல் அமைச்சர் பதவியிலிருந்து பிரதமராகப் பதவி உயர்வு தரப்பட வேண்டும் என்பதுதானா?

என்ன அசட்டுத் தைரியம் இருந்தால் சோ ராமசாமி அய்யர்.

மோடி குஜராத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதன்பிறகு, நிச்சயம் தேசிய அரசியலில் அவர் முக்கியத்துவம் பெறுவார். உடன டியாக இல்லாது போனாலும் எதிர்காலத்தில் மோடி இந்திய பிரதமராவது நிச்சயம்! என்று பேட்டி கொடுக்கிறார் (கல்கி 6.4.2008).


2002 குஜராத் இனப்படு கொலைக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்று ஆட்சிப் பீடம் ஏறியுள்ளாரே என்று வேறு இந்தக் கூட்டம் கதைக்கிறது. ஜெர்மனி நாட்டில் அடால்ப் ஹிட்லர்கூட தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்தவர்தான் (1933).

யூதர்களையும் கம்யூனிஸ்டுகளையும் தன் எதிரியாக அன்று ஹிட்லர் கருதினான் என்றால், இங்கு இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் கொடிய பகைவர்களாக இந்த மோடிக் கூட்டம் கருதுகிறது. வரலாறு இப்படித்தான் சுழன்று கொண்டு இருக்கிறது.

ஒரு அறையில் தள்ளி விஷவாயு வைத்து எதிரிகளைக் கொன்று குவித்த ஹிட்லருக்கும், ஒரு குடும்பத்தையே பேக்கரி அடுப்பில் விறகாக வைத்துக் கொன்ற மோடிகளுக்கும் அடிப் படையில் வேறுபாடு என்ன!

ஒரு நாட்டைத் தொழில் வளமாக்குவதுதான் பிரதமர் ஆவதற்கான முதல் தகுதியா?

குடி மக்களை சகோதரத்துவத் துடன் கருதாத - கருத முடியாத கூட்டம் கழுகு வகையைச் சார்ந்ததாக இருக்க முடியுமே தவிர, மனித வகையில் சேர்த்துப் பார்க்க முடியாதே!

குறிப்பிட்ட - மதத்தைச் சார்ந்த மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக் குறியாக - கேலிக் குறியாக ஆக்கும் வஞ்சகர்கள் தான் இந்தியாவில் பிரதமராவதற்கு லாயக்கு என்று ஒரு கூட்டம் கூறுகிறது - திட்டமிடுகிறது என்றால் அந்தக் கூட்டம் நாட்டில் வாழ்வதற்குப் பதிலாகக் காடுகளில் மட்டும் திரியக் கூடிய அளவுக்குத் தகுதி வாய்ந்ததுதான்.

பிரச்சாரப் பலத்தினால் மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணத்தையும் பால், தயிர், வெண் ணெய்யையும் ஒன்றாகக் கலக்கி பஞ்சகவ்யம் என்று கொடுத்து காணிக்கையையும் பெற்றுக் கொண்டு நம்மைக் குடிக்க வைக்கும் கூட்டமாயிற்றே!

மோசடியின் மறுபெயரான மோடியைத் தூக்கி நிறுத்துவதும் அந்த வகைதான் - எச்சரிக்கை!


-----------------------நன்றி: மின்சாரம் அவர்கள் 31-1-2009 "விடுதலை' ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

பார்ப்பனியப் பனியா சதிக்கு பழியாகமல் மதச்சார்பற்றவர்கல் ஓரணியில் திகழ்வது அவசியம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்