Search This Blog

30.1.09

பார்ப்பனரின் பிறவிக்குணம் மாறவே மாறாது!




சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும் எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்ளவேமாட்டான் என்றார் திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட டாக்டர் டி.எம். நாயர் அவர்கள்.


பிறவிக் குற்றவாளிகள் பார்ப்பனர்கள் என்பதும் தந்தை பெரியார் அவர்களின் கணிப்பே!

ஆரியம் ஒரு நடமாடும் நாகம் என்றார் அறிஞர் அண்ணா.


இவையெல்லாம் ஏதோ ஓர் இனத்தின்மீது ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியாலோ, வெறுப்புணர்ச்சியாலோ, பகைமை உணர்ச்சியாலோ கூறப்பட்ட கருத்துகளோ, கணிப்புகளோ அல்ல!

பார்ப்பனர்களின் கடந்தகால, நிகழ்கால நடப்புகளை, போக்குகளைக் கண்டு கணித்துச் சொல்லப்பட்ட அரிய உண்மைகளாகும்!

இதைக் கண்டுபிடிப்பதற்காக பெரிய ஆய்வுகளில் மூழ்கவேண்டாம் - பழைய ஏடுகளைத் தேடிக் கொண்டும் திரிய வேண்டாம் நம் கண் முன்னே நடக்கும் நாட்டு நடப்புகளை எடை போட்டுப் பார்த்தாலே இந்தக் கூற்றின் உண்மை - உண்மையிலும் உண்மை என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளலாமே!

மும்பையில் பல்வேறு பார்ப்பன அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வெளிப்படையாக ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளாத பார்ப்பனர்களும், சங்கராச்சாரியரான பார்ப்பனரும், அரசியல் தரகரான பார்ப்பனரும், சங் பரிவார்ப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்திருப்பதும் - அதற்குப் புதிய நாமகரணம் சூட்டியிருப்பதும், தங்களின் பார்ப்பனத்தனத்தைக் கட்டிக் காக்க சூளுரைப்பதும் எதனைக் காட்டுகிறது?

1. இந்தியா - இந்து நாடென்றும், மதச்சார்பற்ற நாடாக ஆக்கியதன் விளைவாகவே நாடு அழிந்துவிட்டது என்றும் ஒரு பார்ப்பனர் சொல்கிறார்.

அரசியல் தரகரான இன்னொரு பார்ப்பனரோ வரலாற்றையே திருத்தி எழுதிடவேண்டும் என்று அறிக்கை கொடுக்கிறார். (பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது அந்தக் காரியத்தைத்தானே செய்தார்கள் - சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று காட்டுவதற்காக காளையை கணினிமூலம் (கிராஃபிக்ஸ்) குதிரையாக்கிக் காட்டவில்லையா?).

பாடப் புத்தகங்களைப் பார்ப்பனக் கலாச்சாரத்திற்குத் தோதாக மாற்றி எழுதவேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கிறார்.

நாட்டின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் ஆக்கப்படவேண்டும் என்று இன்னொரு பார்ப்பனர் ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார்.

இவற்றின் பொருள் என்ன? இந்தியா பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள் மற்றும் மதமற்றவர்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பதை இந்தப் பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லை என்பது விளங்கவில்லையா?

இதன்மூலம் இந்தச் சமூக அமைப்பிலிருந்து அவர்கள் தங்களை அந்நியப்படுத்திக் கொள்கின்றனர் என்பது பெறப்படவில்லையா?

சமஸ்கிருதம் ஆட்சி மொழியாகவேண்டும் என்ற கருத்தை ஏதோ இன்று நேற்று சொல்வதாக யாரும் கருதத்தேவையில்லை.

1937 இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோதே சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வருவதற்காகவே இப்பொழுது இந்தியைத் திணிக்கிறேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும்போது குறிப்பிட்டாரே! (24.1.1937).

ஹிந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், நமது பழைய பெருமைகளுக்குத் திறவுகோல் சமஸ்கிருதமே என்று மேலும் அங்கு கூறினாரே!


1914-1919 - ஹோம் ரூல் இயக்கக் காலத்தில் இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து, இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவையென்றும், அந்தப் பொது மொழி சமஸ்கிருதம் என்றும் பிரச்சாரம் செய்து வந்தேன். அப்போது கொண்ட இந்தக் கருத்தை பின்னரும் நான் விடவில்லை. உண்மைத் தேசிய மொழியும், ஹிந்து மொழியின் தாயுமான இந்த சமஸ்கிருத மொழி எளிமையாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளவும், பேசவும் தகுந்ததாகச் செய்யப்படவேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவிருந்த சர்.சி.பி. இராமசாமி அய்யர் உதகமண்டலத்தில் நடைபெற்ற இந்தி பிரச்சார சபைக் கூட்டத்தில் கூறினாரே - (5.6.1953) இதற்கெல்லாம் பொருள் என்ன?

பார்ப்பனர்கள் எந்தக் காலத்திலும் அவர்களின் ஆதிபத்தியத்தைக் கட்டிக் காப்பதிலே குறியாகயிருக்கின்றனர் என்பதுதானே! இதனைப் பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொள்ளவேண்டாமா?

---------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 30-1-2009

2 comments:

Unknown said...

//சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும் எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்ளவேமாட்டான் என்றார் திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட டாக்டர் டி.எம். நாயர் அவர்கள்.

பிறவிக் குற்றவாளிகள் பார்ப்பனர்கள் என்பதும் தந்தை பெரியார் அவர்களின் கணிப்பே!

ஆரியம் ஒரு நடமாடும் நாகம் என்றார் அறிஞர் அண்ணா.

இவையெல்லாம் ஏதோ ஓர் இனத்தின்மீது ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியாலோ, வெறுப்புணர்ச்சியாலோ, பகைமை உணர்ச்சியாலோ கூறப்பட்ட கருத்துகளோ, கணிப்புகளோ அல்ல!

பார்ப்பனர்களின் கடந்தகால, நிகழ்கால நடப்புகளை, போக்குகளைக் கண்டு கணித்துச் சொல்லப்பட்ட அரிய உண்மைகளாகும்!//

ஆம். ஆம். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையான கருத்து இது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்