Search This Blog

6.5.11

போர் குற்றவாளி ராஜபக்சே -இந்தியா வாய் திறக்காதது ஏன்?

பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப்பற்றி பேசுகிறார்கள்

ராஜபக்சே போர் குற்றவாளி என்று அய்.நா. மன்றம் அறிவித்திருக்கிறது
இந்தியா வாய் திறக்காதது - ஏன்?

அய்.நா. மன்றம் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவித் திருக்கிறதே. ஆனால் இந்தியா இதுவரை இலங்கைப் பிரச்சினையில் வாய் திறக்கவில்லையே ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கினார்.

ஈழத் தமழிர் படுகொலைபற்றி அய்.நா. குழுவின் அறிக்கையும், மத்திய அரசின் கடமையும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக் கூட்டம் 4.5.2011 அன்று இரவு 7 மணிக்கு சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தமது உரையில் கூறியதாவது:

இலங்கையின் போர்க்குற்றம்


ஈழத்திலே தமிழர்களுடைய இனப்படு கொலையை ராஜபக்சே மிகக் கொடூரமாக அநீதியின் உச்சத்திற்கே சென்று நடத்தியிருக்கிறார். போர் நடைபெற்றிருக்கிறது. போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று அதற்கு ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளே உண்டு. அய்.நா. அமைப்பு இலங்கையிலே நடைபெற்ற போர் கொடுமைக்குக் காரணமான சிங்கள ராஜபக்சே போர்க் குற்றவாளி என்று அதன் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தியா கண்டித்திருக்க வேண்டும்


இலங்கையிலே இப்படி ஒரு படுகொலை நடத்ததற்காக இந்தியாதான் முதலில் இலங்கையை ராஜபக்சேவை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா இதை செய்யவில்லை. இந்தியாவிற்கு ஏற்பட்ட களங்கத்தை அவமானத்தை துடைத்து எறிந்திருக்க வேண்டும். வரலாற்றிலே இந்திய அரசின் போக்கை என்ன நினைப்பார்கள்?

ஹிட்லரைவிட இனவெறியன் ராஜபக்சே


இதுவரை ஹிட்லர்கூட இந்த அளவுக்கு கொடுமையாக நடந்து கொண்டதில்லை. அதைவிட சிங்கள இனவெறியன் ராஜபக்சே நடந்து கொண்டார். அய்.நா. மன்றம் இலங்கை அரசின் போர் கொடுமையை ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை 214 பக்கங்களில் அறிக்கையாக உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட் டிருக்கிறது.

மத்திய அரசுக்கு ரோஷம் வந்திருக்க வேண்டாமா?


இதைப்பற்றித் தெரிந்து கொண்டாவது மத்திய அரசுக்கு ரோஷம் வர வேண்டாமா? இந்திய அரசுக்கு உணர்ச்சி வர வேண்டாமா? தமிழர் களுடைய உணர்வு நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

இலங்கை அரசு வன்னிப்பகுதியில் அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை கனரக ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது.

சொந்த நாட்டு மக்கள்மீது - சொந்த நாட்டு குடிமக்கள் மீதே - அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வான்வெளித் தாக்குதல் மூலம் குண்டுமழை பொழிந்து தாக்கி அழித்தது.


பஞ்சாப் மாநிலத்தில் இந்தியர்கள் நூறு பேரை டையர் என்ற ஆங்கிலேயன் ஒரு குறிப்பிட்ட இடத் தில் அடைத்து வைத்து சுட்டான் என்பதையே இந்தியா பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

இந்திய மூன்று லட்சத்து முப்பதாயிரம் மக்கள்


இலங்கையில் போர் அற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று லட்சத்து முப்பதாயிரம் மக்கள் வான்வெளித் தாக்குதலுக்கு ஆளானார்களே சிங்கள ராஜபக்சேவின் இந்த அட்டூழியம், இனப்படுகொலை இந்தியாவுக்குத் தெரியாதா?

உணவு மய்யங்களை அழித்தது


அது மட்டுமல்ல அங்குள்ள உணவு மய்யங்களை ராஜபக்சே அரசு - இராணுவம் அழித்தது.
உலகத்திலே எங்கு போர் நடந்தாலும் ஸ்விட்சர் லாந்து நாட்டைச் சார்ந்த செஞ்சிலுவை சங்கத்தினர் தான் போரில் காயம் பட்டவர்களுக்கு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வார்கள்.

உலகமே மதிக்கக் கூடிய செஞ்சிலுவை சங்கத் தையே இலங்கையிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டவர்தான் கொலைகாரன் ராஜபக்சே. போரில் சிக்கிய தமிழர்களை கப்பலில் வைத்து நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு மருத்துவ உதவி களை செய்து வந்தனர் செஞ்சிலுவை சங்கத்தினர்.

கடலில் கப்பலில் இருந்த நோயாளிகளோடு செஞ்சிலுவை சங்கத்தினர் மீதும் குண்டுமழை பொழிந்து அழித்தது. பூண்டோடு அழிக்கப்ப ட்டனர் தமிழர்கள்.

மருத்துவமனையை அழித்தது


வன்னி பகுதியிலே மருத்துவமனை இருக்கின்ற பகுதிகளை சிங்கள இராணுவம் குறி வைத்து தாக்கி அழித்தது.

உலகப் போர் நடைபெற்றபொழுதுகூட ஜப்பான் இராணுவம் எந்த மருத்துவமனையையும் போரின் போது அழிக்கவில்லை. ஹிட்லர்கூட போர் தொடுத்த எந்த நாட்டில் உள்ள மருத்துவ மனையையும் அழித்ததில்லை.

சிங்கள இராணுவத்தினர் சிங்கள அரசு ராஜபக்சே அரசு எப்படி கொடூரமாக நடந்து கொண்டது என்பதற்கு உதாரணம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவு இல்லாமல், மருந்து இல்லாமல், குடிநீர் இல்லாமல் அனைத்து வழித்தடங்களையும் அழித்தது. பொது மக்கள் எதுவும் கிடைக்காமல் கதி அற்று, தானே சாகும் அளவுக்கு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது.

தமிழர்கள் செய்த குற்றமென்ன? அவன் தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா?

போர் குற்றவாளி ராஜபக்சே


இதை திராவிடர் கழகம் சொல்லவில்லை. திராவிட இயக்கத் தமிழர் பேரவை சொல்லவில்லை. திராவிடர் இயக்கங்கள் சொல்லவில்லை. இலங்கை போர் குற்றம் புரிந்துள்ளது. போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேதான் என்பதை அய்.நா. மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லி யிருக்கிறது.

தமிழர்களை காணவில்லையே!


இலங்கையில் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வளவு மக்கள் தொகை என்று இருக்கிறது. ஆனால் அந்த மக்கள் தொகையில் தமிழர்களை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரிய வில்லை.

அந்த அளவுக்கு தமிழ் மக்கள்மீது இனப்படு கொலையை செய்திருக்கிறது சிங்கள இராணுவம். தமிழர்களைப் புதைப்பதற்குக்கூட அங்கு மண் இல்லை.

இந்த செய்திகளை சொல்லும் பொழுது எங்களுக்கு இரத்தக் கண்ணீர் வடிகிறது. தமிழர்களுக்கு கட்சிதான் முக்கியமா? மனிதாபி மானம் முக்கியமில்லையா?

இன்னமும் சிங்கள இராணுவம் தமிழர்களை அழிக்கும் பணியை நிறுத்தவில்லையே!
பயங்கரவாதமாம்!

ஆனால் மத்திய அரசு என்ன சொல்லுகிறது? இலங்கையில் நடைபெறும் பயங்கரவாதத்தை தான் அங்குள்ள இலங்கை அரசு எதிர்க்கிறது என்று இலங்கைக்கு வக்காலத்து வாங்குகிறது இந்திய அரசு.

இலங்கையில் அரசியல் தீர்வுதான் ஏற்பட வேண்டும் என்று மத்திய அரசு சொல்லுகிறது.

அது மட்டுமல்ல விடுதலைப் புலிகள் என்று சொல்லி சந்தேகப்படுவோரை அழைத்து அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்திருக்கிறது இலங்கை அரசு.

இந்தியா தூசிக்குச் சமம்...


பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை மட்டும் பெரிதாகப் பேசும் இந்தியா ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையை என்றைக் காவது சொல்லியிருக்கிறதா? அங்கு கொடுமைகள் தான் நடைபெற்றிருக்கின்றன என்று சொல்லி யிருக்கிறதா?

அய்.நா.அறிக்கையே வெளியிட்ட பிறகு இந்தியாவின் நிலை வெறும் தூசிக்குச் சமம்.

அது மட்டுமல்ல சிங்களவர்கள் நடத்தும் தமிழினப் படுகொலையை எதிர்க்கின்ற ஊடக வியலாளர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றார்கள். கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதே போல தமிழினப் படுகொலையை எதிர்ப்பவர்களையும் சமூக ஆர்வலர்களையும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தியிருக்கிறார்கள். அடக்கியிருக்கின்றார் கள்.

பொன்சேகாவுக்கு நேர்ந்த கதி என்ன?


ஏன்? இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகா ராஜபக்சே அரசிடம் பட்டபாடு தெரியாதா?

மத்திய அரசுக்கு இந்திய அரசுக்கு இதுவெல்லாம் தெரியவில்லையா?

அய்.நா.மன்றம் சொன்னதே!

அய்.நா.மன்றம் என்ன சொன்னது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழினப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று உலகமே பதறியது. அப்பொழுது நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோம். இப்பொழுது தான் எங்களுடைய ஆய்வில் உட்படுத்திப் பார்த்த பொழுது உண்மைகள் எல்லாம் விளங்கியது. இப்பொழுது தான் இதை உறுதிப்படுத்தி புரிந்து கொண்டோம் என்று சொல்லியிருக்கிறது.

இந்தியாவினுடைய பங்களிப்பு இதில் இருக் கிறதா? இல்லையா? இதை விட வெட்கக் கேடு வேறு என்ன இருக்க முடியும்? புரட்சிக் கவிஞர் மிக அழகாகச் சொல்லுவார். காட்டில் ஒரு முயல்குட்டி துள்ளக்கூடும்

கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி என்று.


பட்டம், பதவி தான் முக்கியமா?


தமிழர்களுக்காக - தமிழ் இனத்தைக் காக்க நாம் முன்வரவேண்டியது நமது கடமையல்லவா? அவர்களுக்காக நாம் தியாகம் செய்ய வேண்டாமா?
நமக்குப் பட்டங்கள், பதவிகள், அரசியல் தான் முக்கியமா?

தமிழர்கள் முடிவெடுக்கத் தயாராகிவிட்டார்கள். கொதித்தெழ தயாராகிவிட்டது தமிழினம்.

சிங்கள நாடு


சிங்களவர்கள் முடிவு கட்டிவிட்டார்கள். இலங்கை என்பது சிங்கள நாடாக இருக்க வேண்டும். தமிழர்கள் புல்பூண்டு கூட இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சகோதரர் சுப.வீரபாண்டியன் ஒரு கருத்தை மிக தெளிவாகச் சொன்னார். சில அறிவு ஜீவிகள் படித்த அறிவு ஜீவிகள் தங்களது ஆசைகளை குதிரைகளாக்கிப் கற்பனைக் குதிரைகளில் பறக் கிறார்கள்.

அவர்களுக்காக ஒன்றைச் சொல்லுகிறோம். ஈழத் தமிழர் விடிவுக்குத் தமிழ் ஈழம் தான் ஒன்றுதான் தீர்வு என்று எந்த மேடைகளிலாவது எங்களுடன் பேசத்த யாரா? அரசியல் பேசாமல்? அரசியலைப் பற்றி எந்தக் கருத்தையும் பேச மாட்டோம். ஈழம் மட்டுமே தீர்வு என்று பேசத் தயாரா?

நாம் கருமத்திற்குரியவர்கள்


அவர்கள் பேசமாட்டார்கள் ஏனென்றால் கருமத் திற்கு உரியவன் கடைசி வரையிலே இருப்பான்.

ஓப்பனைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் உண்டு. ஒப்பனை கலைந்தே தீரும். உண்மை என்றும் கலையாது உள்ளது உள்ளபடியே இருக்கும். இரண்டையும் ஒன்றாக்க முடியாது.

ஒப்பாரிக்கு அழுவார்கள். அதுவும் தென்பகுதியில் மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.

ஒப்பாரி வைக்காதீர்கள்


யார் இழப்புக்கு ஆளானார்களோ அவர்களை விட வெளியிலிருந்து வந்திருக்கிறவர்கள் தான் இழப்புக்கு ஆளானவர்களை விட அதிகம் அழு வார்கள். அதுவும் இழப்புக்கு ஆளானவர்களைவிட அதிக ஆவேசமாக கட்டிப்பிடித்து அழுவார்கள். அது ஒன்றும் இல்லை. அவர்களுடைய குடும்பத்தில் நடந்த பிரச்சினையை நினைத்து அழுவார்கள். புருஷன், தனக்கு நகை வாங்கித் தரவில்லையே இதை வாங்கித் தரவில்லையே என்று நினைத்துக் கொண்டு அழுவார்கள். அது மாதிரி தமிழின உணர்வு அற்றவர்களே ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒப்பாரி வைக்க வராதீர்கள்.

கடலில் தூக்கி எறியும் காலம்


3000 அமெரிக்கர்களைக் கொன்ற பின்லேட னைக் கூட கடலில் தூக்கிப் போட்டார்களா? இல்லையா?

ஆனால் ராஜபக்சேவை கடலில் தூக்கி எறியும் காலம் வரும். சூழ்நிலை வரும். - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி கூறினார்.



***********************************


தமிழர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சிங்களர்களா?


இனிமேல் தமிழர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் சிங்களக் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்றால் சிங்களவர்கள் நடத்திய கொடுமை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு நம்முடைய பெண்களை பாலியல் கொடுமைக்கு சித்திரவதைக்கு ஆளாக்கியிருக்கிறது சிங்கள இராணுவம்.

-------------------------(தமிழர் தலைவர் உரையிலிருந்து)


தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு

ஆட்டுக்குட்டி ஓநாய் வயிற்றுக்குள் இருந்தால் தான் பாதுகாப்பு என்று சொன்னல் யாராவது இதை ஏற்பார்களா? தமிழர்களின் இனஉணர்வு என்பது எரிமலை வெடிப்பதைப் போன்ற நிலையில் இருக்கிறது. இதற்கு வேறு தீர்வு தான் என்ன? சிங்களவர்களோடு தமிழர்கள் ஒத்துப்போக முடியுமா? முடியாது. தமிழர்கள் மேலும் அழிந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும்.

எனவே இதற்கு இனிமேல் ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழம் தான்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, அரசியல் தீர்வு என்று சொன்னார்களே அதைப் பார்த்தாகிவிட்டது.

எனவே இனிமேல் ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் தான். இன்று இல்லாவிட்டாலும் நாளை பிறக்கும். பிறக்க வேண்டும். பிறக்க வைப்போம். (கைதட்டல்)

- சென்னை தாணா தெரு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் (4.5.2011)

----------------" விடுதலை” 5-5-2011

2 comments:

தமிழ் ஓவியா said...

அட, முரண்பாடே!

கேள்வி: போர் என்றால் பொது மக்களில் சிலர் பாதிக்கப்படுவது இயற்கைதான் என்று கூறியவர்தான் ஜெயலலிதா என்று குற்றம் சாட்டுகிறாரே கலைஞர்?

பதில்: ஜெயலலிதா அவ்வாறு கூறினாரா என்பது எனக்குத் தெரியவில்லை. பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லாத போர் இன்று உண்டா என்ன? (ஆனால் ஒரு நாடு தீவிர வாதிகளை ஒழிக்க எடுக்கிற நடவடிக்கை யுத்தம் ஆகிவிடாது).

- துக்ளக் 11.5.2011 பக்கம் 20

தமிழர்கள் பிரச்சினை என்றால் - விடுதலைப்புலிகள் என்றால் பார்ப்பனர்கள் மட்டப் பலகையை வைத்துக் கோடு கிழித்தது போல எவ்வளவு ஒரே குரலில் பேசுகிறார்கள் பார்த்தீர்களா?

கல்கியில் ஓ போடும் ஒரு பார்ப்பனரோ அய்.நா.வின் நிபுணர் குழு அறிக்கையை வைத்துக் கொண்டு, குற்றம் என்றால், ராஜபக்சேவும் செய்துள்ளார்; விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். இரு தரப்பினரும் குற்றவாளிகள்தான் என்று பசப்புகிறார். அடித்தவனும், அடிபட்டவனும் அவாள் பார்வையில் ஒன்றுதான் போலும்!

குண்டு மாரி பொழிந்தும், இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியும், முப்படை களைக் கொண்டும் இலங்கை இராணுவம், இந்தியா, சீனா, ருசியா, பாகிஸ்தான் இராணுவங்களின் உதவியோடு ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

இராணுவம் அறிவித்தபடி மூன்று பாதுகாப்பு வளையங்களில் தஞ்சமடைந்த பொது மக்களான ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. அதனை எதிர்ப்பதற்காக - தடுப்பதற்காக - மக்களைப் பாதுகாப்பதற் காக விடுதலைப்புலிகள் ஒன்றுமே செய் யாமல் கைகட்டித் தவசு செய்திருந்தால் திருவாளர் ஞானி ஒருக்கால் ஒப்புக் கொண் டாலும் ஒப்புக் கொள்வார் - விடுதலைப் புலிகள் எந்தத் தப்பும் செய்யவில்லை; அவர்கள் சாதுக்கள் என்று சர்டிஃபிகேட் கொடுப்பாரோ, என்னவோ! ராஜபக்சேவைக் காப்பாற்றவே முடியாத நிலையில், விடுதலைப்புலிகளையும் சேர்த் துக் குற்றப்பட்டியலில் சேர்த்து விட்டால்தான் இந்தப் பார்ப்பனர்களின் ஆத்மா சாந்தி அடையும்; அஃதே!

சோ என்ன சொல்கிறார் - ஜெயலலிதா கூறியது சரிதான் என்று சபாஷ் போடு கிறார்.

பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லாத போர் இன்று உண்டா என்று கேட்டு விட்டு அடைப்புக் குறிக்குள் ஒரு நாடு தீவிரவாதி களை ஒழிக்க எடுக்கிற நடவடிக்கை யுத்தம் ஆகிவிடாது என்று அடுத்தடுத்த வரிகளுக் குள்ளேயே முரண்பட்டு மூக்கு உடை படுகிறார்.
போர் என்றால் பொது மக்கள் பாதிக்கப் படுவது சகஜம்தான், அது சரி; அடுத்த வரியில்தான் அங்கு நடந்தது போர் (யுத்தம்) இல்லை என்று பதில் சொல்லி விட்டாரே - அவர் எழுதியுள்ளபடியே கேட்கிறோம் - போர் நடைபெறாத நிலையில் பொது மக்களைக் கொல்லுவது எப்படி சகஜமாக இருக்க முடியும்?

உள்நாட்டிலே தேசிய இன உரிமைகளுக் காக உலகில் எங்கும் போராட்டம் நடைபெற்றது இல்லையா? அதனைப் போர் என்று யாரும் குறிப்பிடுவது கிடையாதே!

எவ்வளவு சாமர்த்தியமாக எழுதினாலும் பொது மக்கள் இலங்கை சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அவர் களை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டனரே!

இப்படி ஒரு பத்தியிலேயே முன்னுக்குப் பின் முரணாக மொட்டைத்தனமாக எழுது பவர்தான் அக்ரகாரத்தின் அறிவுத் திலகமாம்!

ஹி... ஹி...

வாயால் சிரிக்க முடியவில்லை, போங்கோ!
---"விடுதலை” 7-5-2011

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர் படு கொலை பற்றி அய்.நா. குழு அறிக்கையும் மத் திய அரசின் கடமையும் என்ற திராவிடர் கழக பொதுக்கூட்டம் 4.5.2011 அன்று புரசைவாக்கம் தானா தெருவில் நடை பெற்றது. திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையில் கூறிய தாவது:

இலங்கை மீது பொருளாதார தடை

இலங்கையில் நடைபெற்றது இனப்படு கொலை என்பதை அய். நா.மனித உரிமை குழு தலைவராக இருந்த ரவிப் பிள்ளை 2009ஆம் ஆண்டே சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் நடை பெற்ற தமிழினப்படு கொலையை எதிர்த்தது முதலில் ஸ்விட்சர்லாந்து தான். காரணம் அந்த நாடு இராணுவத்தை வைத்துக்கொள்ளாத நாடு போரில் காயம டைவோரை செஞ் சிலுவை சங்கத்தின் மூலம் காப்பாற்றுகின்ற நாடு.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னது ஸ்விட்சர்லாந்து.

இலங்கைக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மா னத்தை எதிர்த்த நாடு இந்தியா.

இலங்கைக்கு ஆதரவான நாடுகள்

இந்தியாதான் முத லில் இலங்கைக்கு எதி ராக தீர்மானத்தை நிறை வேற்றியிருக்க வேண்டும். இலங்கைக்கு ஆதரவாக சீனா செயல்பட்டது ரஷ்யா செயல்பட்டது. கியூபாவும், வெனிசுலா வும் இலங்கையை ஆத ரித்தது.

இலங்கையின் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மூன்றா யிரம் அமெரிக்கர்களை கொன்றதற்கே 40 நிமி டத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கே தெரியாமல் பின்லேடன் கதையை முடித்தது அமெரிக்கா.

கேட்க வேண்டாமா இந்தியா?

மூன்று லட்சத்து முப் பதாயிரம் தமிழர்கள் இலங்கையிலே கொல் லப்பட்டார்களே. எந்த நாடாவது கேள்வி கேட் டதா? இந்தியாவைச் சார்ந்த தமிழன் கொல் லப்பட்டானே இந்தியா கேட்டிருக்க வேண் டாமா? இந்தியாவில் தமிழ்நாடு இல்லை என்று கருதிவிட்டது.

முள்ளி வாய்க்கால் பகுதி போர் அற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதி. அந்தப் பகுதியில் இருந்த அவ்வளவு தமி ழர்களையும் இலங்கை இராணுவம் அழித்தது.

இதைப் பார்க்க அய். நா.குழு வருகிறோம் என்று சொன்னால் உங்களுக் குப் பாதுகாப்புத் தர முடியாது என்று இலங்கை சொல்லிவிட்டது. அதே போல போரில் பாதிக் கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வந்த செஞ் சிலுவை சங்கத்தையும் நாட்டைவிட்டே வெளி யேறு என்று சொல்லி விட்டது இலங்கை.

ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லையே!

எகிப்தில் - லிபியவில் மக்கள், ஆளும் அரசை எதிர்த்துப் போராடி னால் அதற்கு அமெரிக்க அரசு ஆதரவு தருகிறது. காரணம் என்ன? ஈழத் தில் எண்ணெய் வளம் இல்லை. ரத்தம் தான் இருக்கிறது என்ற கார ணத்திற்காக அமெ ரிக்கா ஆதரவு தெரிவிக்க வில்லையா? ஏன் உலக நாடுகள் எதிர்த்தன? விடு தலைப் புலிகளைப் பார்த்து அச்சப்பட்ட னர். உலகிலேயே மக் களுக்காகப் போராடிய ஒரே ஒரு அமைப்பிற்கு மட்டும் முப்படைகள் இருந்தன. தரைப்படை, விமானப்படை, கப்பற் படை வைத்திருந்த அமைப்பு தம்பி பிரபா கரன் தலைமையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு.

தம்பி பிரபாகரன் முப்படைகளையும் வைத்திருந்தததோடு நான்காவது படையை யும் வைத்திருந்தார். அது தான் தற்கொலைப் படை. பெண் புலிகளை - பெண் தற்கொலைப் படையை வைத்திருந்த ஒரே அமைப்பு விடுத லைப் புலிகள் அமைப்பு தான்.

சொந்த மண்ணில் கவுரமாக வாழ நினைத் தார்கள் நிம்மதியாக வாழ நினைத்தார்கள்.

ராஜபக்சே - இந்தியாவுக்குப் பாராட்டு

ராஜபக்சே சொல் கிறார். இந்தியா எங் களுக்கு எல்லா வகை யிலும் உதவியாக இருக்கிறது என்று.

இப்படி ராஜபக்சே சொல்லியிருப்பது இந்தி யாவுக்கு அவமானம் இல்லையா? குறைந்த பட்சம் இலங்கைக்கு துணை போகாமலாவது. இந்தியா இருக்க வேண் டாமா?

ராஜபக்சேவை எப் பொழுது தண்டிக்கப் போகிறீர்கள் என்ற குரல் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களி டையே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

உள்ளூர் அரசிய லைப் பற்றிப் பேச வேண் டாம். வெறும் ஈழமக் களுடைய பிரச்சினை களை மட்டும் பேசு வோம் வாருங்கள். இதற்கு எத்தனைக் கட்சிகள் தயாராக உள்ளன?

- இவ்வாறு சுப.வீர பாண்டியன் பேசினார்.
--"விடுதலை" 5-5-2011