tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1548696366800463649..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: போர் குற்றவாளி ராஜபக்சே -இந்தியா வாய் திறக்காதது ஏன்?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47149095359569750522011-05-07T19:03:16.769+05:302011-05-07T19:03:16.769+05:30ஈழத்தமிழர் படு கொலை பற்றி அய்.நா. குழு அறிக்கையும்...ஈழத்தமிழர் படு கொலை பற்றி அய்.நா. குழு அறிக்கையும் மத் திய அரசின் கடமையும் என்ற திராவிடர் கழக பொதுக்கூட்டம் 4.5.2011 அன்று புரசைவாக்கம் தானா தெருவில் நடை பெற்றது. திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையில் கூறிய தாவது:<br /><br />இலங்கை மீது பொருளாதார தடை<br /><br />இலங்கையில் நடைபெற்றது இனப்படு கொலை என்பதை அய். நா.மனித உரிமை குழு தலைவராக இருந்த ரவிப் பிள்ளை 2009ஆம் ஆண்டே சுட்டிக் காட்டினார்.<br /><br />இலங்கையில் நடை பெற்ற தமிழினப்படு கொலையை எதிர்த்தது முதலில் ஸ்விட்சர்லாந்து தான். காரணம் அந்த நாடு இராணுவத்தை வைத்துக்கொள்ளாத நாடு போரில் காயம டைவோரை செஞ் சிலுவை சங்கத்தின் மூலம் காப்பாற்றுகின்ற நாடு.<br /><br />இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னது ஸ்விட்சர்லாந்து.<br /><br />இலங்கைக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மா னத்தை எதிர்த்த நாடு இந்தியா.<br /><br />இலங்கைக்கு ஆதரவான நாடுகள்<br /><br />இந்தியாதான் முத லில் இலங்கைக்கு எதி ராக தீர்மானத்தை நிறை வேற்றியிருக்க வேண்டும். இலங்கைக்கு ஆதரவாக சீனா செயல்பட்டது ரஷ்யா செயல்பட்டது. கியூபாவும், வெனிசுலா வும் இலங்கையை ஆத ரித்தது.<br /><br />இலங்கையின் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மூன்றா யிரம் அமெரிக்கர்களை கொன்றதற்கே 40 நிமி டத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கே தெரியாமல் பின்லேடன் கதையை முடித்தது அமெரிக்கா.<br /><br />கேட்க வேண்டாமா இந்தியா?<br /><br />மூன்று லட்சத்து முப் பதாயிரம் தமிழர்கள் இலங்கையிலே கொல் லப்பட்டார்களே. எந்த நாடாவது கேள்வி கேட் டதா? இந்தியாவைச் சார்ந்த தமிழன் கொல் லப்பட்டானே இந்தியா கேட்டிருக்க வேண் டாமா? இந்தியாவில் தமிழ்நாடு இல்லை என்று கருதிவிட்டது.<br /><br />முள்ளி வாய்க்கால் பகுதி போர் அற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதி. அந்தப் பகுதியில் இருந்த அவ்வளவு தமி ழர்களையும் இலங்கை இராணுவம் அழித்தது.<br /><br />இதைப் பார்க்க அய். நா.குழு வருகிறோம் என்று சொன்னால் உங்களுக் குப் பாதுகாப்புத் தர முடியாது என்று இலங்கை சொல்லிவிட்டது. அதே போல போரில் பாதிக் கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வந்த செஞ் சிலுவை சங்கத்தையும் நாட்டைவிட்டே வெளி யேறு என்று சொல்லி விட்டது இலங்கை.<br /><br />ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லையே!<br /><br />எகிப்தில் - லிபியவில் மக்கள், ஆளும் அரசை எதிர்த்துப் போராடி னால் அதற்கு அமெரிக்க அரசு ஆதரவு தருகிறது. காரணம் என்ன? ஈழத் தில் எண்ணெய் வளம் இல்லை. ரத்தம் தான் இருக்கிறது என்ற கார ணத்திற்காக அமெ ரிக்கா ஆதரவு தெரிவிக்க வில்லையா? ஏன் உலக நாடுகள் எதிர்த்தன? விடு தலைப் புலிகளைப் பார்த்து அச்சப்பட்ட னர். உலகிலேயே மக் களுக்காகப் போராடிய ஒரே ஒரு அமைப்பிற்கு மட்டும் முப்படைகள் இருந்தன. தரைப்படை, விமானப்படை, கப்பற் படை வைத்திருந்த அமைப்பு தம்பி பிரபா கரன் தலைமையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு.<br /><br />தம்பி பிரபாகரன் முப்படைகளையும் வைத்திருந்தததோடு நான்காவது படையை யும் வைத்திருந்தார். அது தான் தற்கொலைப் படை. பெண் புலிகளை - பெண் தற்கொலைப் படையை வைத்திருந்த ஒரே அமைப்பு விடுத லைப் புலிகள் அமைப்பு தான்.<br /><br />சொந்த மண்ணில் கவுரமாக வாழ நினைத் தார்கள் நிம்மதியாக வாழ நினைத்தார்கள்.<br /><br />ராஜபக்சே - இந்தியாவுக்குப் பாராட்டு<br /><br />ராஜபக்சே சொல் கிறார். இந்தியா எங் களுக்கு எல்லா வகை யிலும் உதவியாக இருக்கிறது என்று.<br /><br />இப்படி ராஜபக்சே சொல்லியிருப்பது இந்தி யாவுக்கு அவமானம் இல்லையா? குறைந்த பட்சம் இலங்கைக்கு துணை போகாமலாவது. இந்தியா இருக்க வேண் டாமா?<br /><br />ராஜபக்சேவை எப் பொழுது தண்டிக்கப் போகிறீர்கள் என்ற குரல் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களி டையே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது.<br /><br />உள்ளூர் அரசிய லைப் பற்றிப் பேச வேண் டாம். வெறும் ஈழமக் களுடைய பிரச்சினை களை மட்டும் பேசு வோம் வாருங்கள். இதற்கு எத்தனைக் கட்சிகள் தயாராக உள்ளன?<br /><br />- இவ்வாறு சுப.வீர பாண்டியன் பேசினார்.<br /> --"விடுதலை" 5-5-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10431623622688362602011-05-07T18:57:15.905+05:302011-05-07T18:57:15.905+05:30அட, முரண்பாடே!
கேள்வி: போர் என்றால் பொது மக்களில்...அட, முரண்பாடே!<br /><br />கேள்வி: போர் என்றால் பொது மக்களில் சிலர் பாதிக்கப்படுவது இயற்கைதான் என்று கூறியவர்தான் ஜெயலலிதா என்று குற்றம் சாட்டுகிறாரே கலைஞர்?<br /><br />பதில்: ஜெயலலிதா அவ்வாறு கூறினாரா என்பது எனக்குத் தெரியவில்லை. பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லாத போர் இன்று உண்டா என்ன? (ஆனால் ஒரு நாடு தீவிர வாதிகளை ஒழிக்க எடுக்கிற நடவடிக்கை யுத்தம் ஆகிவிடாது).<br /><br />- துக்ளக் 11.5.2011 பக்கம் 20<br /><br />தமிழர்கள் பிரச்சினை என்றால் - விடுதலைப்புலிகள் என்றால் பார்ப்பனர்கள் மட்டப் பலகையை வைத்துக் கோடு கிழித்தது போல எவ்வளவு ஒரே குரலில் பேசுகிறார்கள் பார்த்தீர்களா?<br /><br />கல்கியில் ஓ போடும் ஒரு பார்ப்பனரோ அய்.நா.வின் நிபுணர் குழு அறிக்கையை வைத்துக் கொண்டு, குற்றம் என்றால், ராஜபக்சேவும் செய்துள்ளார்; விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். இரு தரப்பினரும் குற்றவாளிகள்தான் என்று பசப்புகிறார். அடித்தவனும், அடிபட்டவனும் அவாள் பார்வையில் ஒன்றுதான் போலும்!<br /><br />குண்டு மாரி பொழிந்தும், இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியும், முப்படை களைக் கொண்டும் இலங்கை இராணுவம், இந்தியா, சீனா, ருசியா, பாகிஸ்தான் இராணுவங்களின் உதவியோடு ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.<br /><br />இராணுவம் அறிவித்தபடி மூன்று பாதுகாப்பு வளையங்களில் தஞ்சமடைந்த பொது மக்களான ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. அதனை எதிர்ப்பதற்காக - தடுப்பதற்காக - மக்களைப் பாதுகாப்பதற் காக விடுதலைப்புலிகள் ஒன்றுமே செய் யாமல் கைகட்டித் தவசு செய்திருந்தால் திருவாளர் ஞானி ஒருக்கால் ஒப்புக் கொண் டாலும் ஒப்புக் கொள்வார் - விடுதலைப் புலிகள் எந்தத் தப்பும் செய்யவில்லை; அவர்கள் சாதுக்கள் என்று சர்டிஃபிகேட் கொடுப்பாரோ, என்னவோ! ராஜபக்சேவைக் காப்பாற்றவே முடியாத நிலையில், விடுதலைப்புலிகளையும் சேர்த் துக் குற்றப்பட்டியலில் சேர்த்து விட்டால்தான் இந்தப் பார்ப்பனர்களின் ஆத்மா சாந்தி அடையும்; அஃதே!<br /><br />சோ என்ன சொல்கிறார் - ஜெயலலிதா கூறியது சரிதான் என்று சபாஷ் போடு கிறார்.<br /><br />பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லாத போர் இன்று உண்டா என்று கேட்டு விட்டு அடைப்புக் குறிக்குள் ஒரு நாடு தீவிரவாதி களை ஒழிக்க எடுக்கிற நடவடிக்கை யுத்தம் ஆகிவிடாது என்று அடுத்தடுத்த வரிகளுக் குள்ளேயே முரண்பட்டு மூக்கு உடை படுகிறார்.<br />போர் என்றால் பொது மக்கள் பாதிக்கப் படுவது சகஜம்தான், அது சரி; அடுத்த வரியில்தான் அங்கு நடந்தது போர் (யுத்தம்) இல்லை என்று பதில் சொல்லி விட்டாரே - அவர் எழுதியுள்ளபடியே கேட்கிறோம் - போர் நடைபெறாத நிலையில் பொது மக்களைக் கொல்லுவது எப்படி சகஜமாக இருக்க முடியும்?<br /><br />உள்நாட்டிலே தேசிய இன உரிமைகளுக் காக உலகில் எங்கும் போராட்டம் நடைபெற்றது இல்லையா? அதனைப் போர் என்று யாரும் குறிப்பிடுவது கிடையாதே!<br /><br />எவ்வளவு சாமர்த்தியமாக எழுதினாலும் பொது மக்கள் இலங்கை சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அவர் களை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டனரே!<br /><br />இப்படி ஒரு பத்தியிலேயே முன்னுக்குப் பின் முரணாக மொட்டைத்தனமாக எழுது பவர்தான் அக்ரகாரத்தின் அறிவுத் திலகமாம்!<br /><br />ஹி... ஹி...<br /><br />வாயால் சிரிக்க முடியவில்லை, போங்கோ!<br /> ---"விடுதலை” 7-5-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com