Search This Blog

6.5.14

வெறிகளுக்கு எதிரானது பெரியாரின் நெறி!

வெறிகளுக்கு எதிரானது பெரியாரின் நெறி!
புதுச்சேரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் புத்தொளி உரை
புதுச்சேரி, மே  6- மதவெறி, ஜாதி வெறி, பதவி வெறி உள்ளிட்ட எல்லா வெறிகளுக்கும் எதிரானது தந்தை பெரியார் காட்டும் நெறி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

3.5.2014 அன்று புதுச்சேரி மாநில திராவிடர் கழகக் கலந்து ரையாடலில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

புதுவை இன்றைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை இணைத்திருக்கிறது. அதுதான், புதுச்சேரி மாநில அமைப்பு ரீதியான திராவிடர் கழகம். செய்தியாளர்கள் சற்று நேரத்திற்கு முன்பு சந்தித்தபொழுதுகூட கேட்டார்கள், திராவிடர் கழகம் இப்பொழுதுதானா உருவாகிறது என்று. இல்லை, அமைப்பு ரீதியாக  இந்த அமைப்பு கடலூர் மண்டலத்தோடு இணைந் திருந்தது. மறைந்த சம்பந்தம் அவர்கள் புதுவையில் இருந்து கொண்டு கடலூர் மண்டலத் தலைவராக இருந்தார்.

அவருக்குப் பிறகு நம்முடைய தோழர் சிவ.வீரமணி அவர்கள் மண்டலத் தலைவராக இருந்தார். இப்பொழுது காரைக்கால் பகுதி துண்டாக ஒதுங்கியதுபோல இருந்தது. நம்முடைய இயக்கப் போராட்டங்கள் நிறைய அளவில் நடைபெற்ற பகுதி காரைக்காலாகும். நீண்ட காலத்திற்கு முன்பு, ஒவ்வொரு பகுதியிலும் காரைக்கால் பகுதியை எடுத்துக்கொண்டால், திராவிடர் கழகக் கிளைகள் இல்லாத ஊரே கிடையாது. நெடுங்காட்டிலிருந்து, அம்பகரத்தூரிலிருந்து, திருநள்ளாறி லிருந்து எல்லா பகுதிகளிலும் இருக்கும். இன்னொரு பக்கத்தில் பார்த்தீர்களேயானால், பட்டினம் என்று அழைக்கப்படக்கூடிய திருமலைராயன் பட்டினம், நிரவி, நாகூர் எல்லை வரையில் இருக்கும்.

அதேபோல், கடலூரைத் தொட்டு பாகூர் பக்கத்தில் வந்தால், சேலைமேடு உள்பட நாங்களே பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம்.

அதேபோல, விழுப்புரம் பகுதிக்கு வந்தால், வடலூருக்கு முன்பகுதியை விட்டுவிட்டு, பாண்டிச்சேரி, மிக முக்கியமாக, எப்படி கோட்டக்குப்பம், பிரிட்டிஷ் யூனியனாக இருக்கும். அந்தந்தப் பகுதியும் புதுச்சேரியில் இருக்கும்; இந்தப் பகுதியும் புதுச்சேரியில் இருக்கும். இதுமாதிரி விட்டுவிட்ட பகுதிகள் எல்லாம்  உண்டு.

நான் கடலூர்க்காரன் என்கிற முறையில், இவை யெல்லாவற்றையும் தெளிவாக அறிவேன். இன்றைக்கு எல்லாப் பகுதிகளிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அதைவிட, திராவிடர் கழகத்தின் தேவையும் அதிகம் ஏற்பட்டிருக்கிறது இப்பொழுது, அதுதான் மிக முக்கியமானது.
வெறிக்கு எதிரான நெறி!

ஒரு பக்கம் ஜாதிவெறி; இன்னொரு பக்கம் மதவெறி; இன்னொரு பக்கம் பதவி வெறி; அதனுடைய விளைவுகள் சந்தர்ப்பவாதம்; அது அரசியலாக இருந்தாலும், கட்சியியலாக இருந்தாலும், மற்றவைகளாக இருந்தாலும் ஒரு கொள்கை லட்சிய நெறியோடு,  கொள்கை நெறியோடு போராடக்கூடிய இயக்கம்; எனவே, வெறிக்கும், நெறிக்கும் போராட்டம் - இதுதான் மிக முக்கியம்.

நாம் நெறியோடு இருக்கக்கூடியவர்கள்; மற்றவர்கள் வெறியோடு இருக்கக்கூடியவர்கள். எனவே, இந்தப் புதுச்சேரி மாநிலத்தில் இது ஒரு நல்ல ஏற்பாடாகும்.

எனவே, இது ஒரு நெறி; சுயமரியாதைத் தத்துவமே வாழ்க்கை நெறிதான். தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தது.

நாடகத்தில் நடித்தேன்

திராவிடர் கழகம் என்றைக்கு உருவானது? நான் மாணவனாக இருந்தபொழுது,  1945 ஜூலை 22 இல் புதுச்சேரி ஒதியஞ்சாலையில் திராவிடர் கழக தொடக்க விழா மாநாடு நடைபெற்றது. கலைஞர் அவர்களின் நாடகத்தில் நாங்கள் எல்லாம் நடித்தோம்.

நாடகம் நடக்கும்பொழுது பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் தளபதி அழகிரி அவர்கள் ரசித்துக் கொண்டிருப்பார். இங்கே எபிலர் தியேட்டரில் நடைபெற்ற முதல் நாள் நடைபெற்ற நாடகத்தில், அதில் திராவிடர் நடிகர் கழகத்தின் சார்பாக, நாகையிலிருந்து ரத்தினவேலு, கலைஞர் அவர்கள் எல்லாம் நடித்தார்கள். நான் கடலூரிலிருந்து பள்ளிக்கூட மாணவனாக வந்திருந்தேன். என்னையும் அந்நாடகத்தில் நடிக்கச் சொன்னார்கள். அந்நாடகத்தில் சுயமரியாதைத் திருமணக் காட்சி ஒன்று; அந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கிப் பேசவேண்டும். அந்த மாதிரி ஒரு காட்சியில் நான் நடித்தேன். ஆனால், என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. நான் அரைக்கால் சட்டை அணிந்துகொண்டு அங்கே நின்றிருந்த நேரத்தில், கலைஞரை குறி வைத்து வந்து சிலர் தாக்கினார்கள். அந்த நிகழ்வுகளின்போது நான் இருந்தேன்.  22.7.1945, அன்றைக்கு இந்த மண்டலத்தில் புதுவை திராவிடர் கழகம் தொடக்கம்.

சுயமரியாதை இயக்க வீரர்கள்

அன்றிலிருந்து பார்த்தீர்களேயானால், நம்மவர்கள் ஏராளமானவர்கள்,  சுயமரியாதை இயக்கத்தை, புரட்சிக் கவிஞர் அவர்கள் காலத்திலும், அதற்கு முன்பும், மிகப்பெரிய அளவில் பெரியார் தொண்டர்கள் இங்கே உருவாக்கினார்கள். பச்சை அட்டைக் குடியரசு இங்கே பெரிய புரட்சியினை உண்டாக்கியிருக்கிறது. பல பேருக்கு இந்தத் தகவல் தெரியாது; வயதானவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

இவையெல்லாம் பதிவாகவேண்டும்; நம்முடைய வரலாறுகள் பதிவாகவேண்டும். அய்யாவிற்கு மிகவும் ஆதரவானவர்கள் என்று சொல்லும்பொழுது, செய்கோன் ராஜமாணிக்கம் என்பவர் இங்கே இருந்தார்; நம்முடைய நோயல்; அவர் நடத்திய புதுவை முரசில் ஆசிரியர் குருசாமி  எழுதிக் கொண்டிருந்தார். புரட்சிக்கவிஞர் அவர்கள் அதற்கு மிகப்பெரிய ஆதரவு. நோயல் அவர்கள் மிகவும் வயதானவர்; அவர்களையெல்லாம் பார்த்த வாய்ப்பு எனக்கு இருக்கிறது. அவர்களோடு பழகினேன் என்று சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லை என்றாலும், நான் அன்றைக்கு ஒரு இளைஞன்; அந்த வகையில் நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன். உங்களில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏன், சிவ.வீரமணி, இராஜூ ஆகியோருக்கும் சொல்லவேண்டும்; அன்றைய காலத்தில் டூப்ளர் வீதி - இப்பொழுது பாரதி வீதி என்று மாற்றியிருக் கிறார்கள். பொதுவாக பாண்டிச்சேரிக்கு ஒரு பழமொழி - அந்தக் காலத்தில் பிரெஞ்சு ஆண்ட காலத்தில் உண்டு - அது என்னவென்றால், வீதி ஒழுங்காக இருக்கும்; வீடு ஒழுங்காக இருக்காது என்று சொல்வார்கள்.
எல்லா வீதிகளும் நேராக இருக்கும்; எல்லா சாலைகளும் கடற்கரையை நோக்கி இருக்கும்.

அந்தக் காலத்தில், கோட்டக்குப்பத்தில் வீடு இருக்கும்; எல்லையில் வீடு அமைந்திருக்கும். வீட்டின் முன்பகுதி பிரிட்டிஷ் இந்தியாவாக இருக்கும்; வீட்டின் பின்பகுதி யிலுள்ள தோட்டப் பகுதி பிரெஞ்சு பகுதியாக இருக்கும். அந்த வீட்டிலிருப்பவரை கைது செய்யவேண்டும் என்று வாரண்ட்டோடு வந்தார்கள் என்றால், அந்த வீட்டிலுள்ளவர் தோட்டத்திற்குச் சென்றுவிடுவார்; அது பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகும். ஆகையால் அவரை கைது செய்ய முடியாமல் திரும்பிப் போகக்கூடிய சூழல் ஏற்படும்.

முதுபெரும் வீரர் நோயல்!

ஆகவே, அது வித்தியாசமாக இருக்கக்கூடிய ஒரு சூழல் ஆகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை பிரெஞ்சு புரட்சி சொல்லிக் கொடுத்தது. அந்தக் காலத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு ஒரு காலண்டர் போட்டார்கள்; புரோகிதர் மறுப்பு சங்கம் என்று. அந்தக் காலண்டரை, சுயமரியாதைத் தத்துவமும், வரலாறும் என்ற புத்தகத்தில் அந்தக் காலண்டரை போட்டிருக்கிறோம். அதில், சுயமரியாதைத் திருமணத் தம்பதிகளின் படங்கள் எல்லாம் போட்டிருக்கிறோம் எல்லாம் பதிவாகவேண்டும் என்று.

அந்த நூல்களைப் பார்த்தீர்களேயானால் உங்களுக்குத் தெரியும், பாண்டிச்சேரியிலிருந்து, அந்த காலத்திலேயே, அய்யா தலைமையில் திருமணம் செய்தவர்களில், நோயல் எப்படி மிகப் பழையவரோ, அதேபோல், பிரகாஷ் நம்பிக்கை மேரி என்ற தம்பதிகள் இருந்தார்கள்; அவர்கள் அந்தக் காலத்திலேயே ஜாதி மறுப்பு, மத மறுப்பு, புரோகித மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள். அந்தப் படத்தில் புதுச்சேரி என்று அதில் போட்டிருப்பார்கள்.

ஆக, நீண்ட வரலாறும், பின்னணியும் இதற்கு உண்டு மிகப்பெரிய அளவிற்கு. அன்றைய காலகட்டத்தில், டூப்ளே வீதியின் முனையில் ஒரு கடை இருக்கும்; கனகலிங்கம் கண்ணாடிக் கடை அந்தப் பக்கத்தில் இருக்கும்.  பெரிய கடை அதுதான். அவரும் திராவிடர் கழகத்தில் தலைவராக இருந்தார்.

கம்பன் கழகத்திற்குத் தலைவராக இருக்கக்கூடிய அய்யா கோவிந்தசாமி முதலியார் என்று அழைக்கப்படக் கூடிய  ஆனந்தா திருமண மண்டபத்தின் உரிமையாளர். அவரும் திராவிடர் கழகத்திற்குத் தலைவராக இருந்திருக் கிறார். இப்படி பல பேர் தலைவராக இருந்த வரலாறு உண்டு. அதற்குப் பிறகு பார்த்தீர்களேயானால், நம்முடைய கனக லிங்கம்; அவருடைய தந்தையார் பசவலிங்கம், அவர் தீவிர பக்தர்; கடைசியில் அவர் மாறினார். 

இப்படியெல்லாம் குடும்பம் குடும்பமாக இருந்தார்கள். பொன்.ராமலிங்கம் - சகுந்தலா சாயத் தொழிற்சாலை என்கிற நிறுவனத்தை நடத்திவந்தார். அவர்தான் அந்தக் காலத்தில், அந்தத் தகராறு நடந்த காலத்தில் இருந்தார்; இந்த ஊரில் ஆங்கிலத்தில் அட்வகேட் என்று சொல்கிறோம்; அதுவே பிரெஞ்ச் மொழி உச்சரிப்பில் சில எழுத்துக்களை சயிலண்ட்டாக ஆக்கிவிடு வார்கள். அவுட்கா என்று அட்வகேட்டை அழைப்பார்கள். ஆஸ்பிட்டல் என்று ஆங்கிலத்தில் சொல்வோம்; அவர்கள் ஒபிட்டால் என்று சொல்வார்கள். ஆகவே, அந்த பிரெஞ்சு மொழியில், அவுட்கா பெருமாள் அவர்கள் தலைவராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, கவர்னர் மாளிகை; கோர்னர் என்றுதான் சொல்வார்கள். பிரெஞ்சு கவர்னர் இங்கிருந்தார். அவர் மாளிகையில், அவருக்குப் பெரிய அதிகாரியாக இருந்தவர். அவருக்குத் தனி பங்களா கொடுத் திருப்பார்கள். அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் பிரச்சாரத் திற்கு வந்தால், அந்தப் பங்களாவில் தங்க வைப்பார்கள்.

பிரெஞ்சு இராணுவத்தில் இயக்கத் தோழர்கள்

ஆக, இப்படி இந்த இயக்கத்தில் பலதரப்பட்டவர்கள், பிரெஞ்சு இந்தியாவினுடைய ராணுவத்தில் ஓய்வு பெற்றவர் கள், வணிகத் துறையில் இருந்து வந்தவர்கள் எல்லாம் உண்டு.

பிரெஞ்சு ராணுவத்தில், குறிப்பிட்ட காலம்வரை இருந்துவிட்டால், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதே வெளியே வந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களின் பிள்ளைகளின் படிப்பு, மற்ற வசதிகளையும் செய்துகொடுப்பார்கள்.

இவர்கள் எல்லாம் திராவிடர் கழகத்தில் தீவிரமாக இருந்தவர்கள். பிறகு புதுவை திராவிடர் கழகம் என்று வருகிறபொழுது, அய்யா கனகலிங்கம்; கனகலிங்கத்திற்குப் பிறகு கலைமணி; பிறகு, அருமை நண்பர் தியாகு. இப்படி பல தோழர்கள் வரிசையாக தலைவராக இருந்து, பிறகு சிவ.வீரமணி அவர்கள்.

இப்படி ஏராளமான தோழர்கள் இயக்கத்திலிருந்து பல சிறப்பான வாய்ப்புகளைப் பெற்றார்கள்.

புதுவைச் சிவம்

புதுவை சிவம் அவர்கள், புரட்சிக்கவிஞர் அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக கிடைத்தார்கள். அந்தக் காலத்தி லேயே குடியரசு இதழில் கட்டுரையெல்லாம் எழுதி இருக்கிறார். பாரதிதாசனுடைய பரம்பரை என்று சொன்னால், அதில் தலை மாணாக்கர் யார் என்று சொன்னால், புதுவை சிவம் - சிவப்பிரகாசம்.
பெரியார் பெருந்தொண்டு என்று அந்தக் காலத்தில் கவிதை நடையில் புத்தகம் எழுதியவர்.

ராசகோபாலாச்சாரியார் அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில், அவருக்கே கடிதம் எழுதி, பெரியாரைப் பற்றி ஒரு தொகுப்பு நூல் வெளியிடவேண்டும். உங்கள் கருத்தை எழுதியனுப்புங்கள் என்று கடிதம் எழுதினார்.

ராசகோபாலாச்சாரியார் அவர்கள், அய்யாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார்:
புதுவையிலிருந்து ஒரு நண்பர் சிவப்பிரகாசம் என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் யார் என்று எனக்குத் தெரியாது; ஒரு நூலை வெளியிட இருப்பதாகவும், அதற்கு என்னுடைய கருத்து தேவையிருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார். ஆகவே, அந்தப் பாராட்டை உங்களுக்கே அனுப்பியிருக்கிறேன். நீங்கள் பார்த்து, அவர் சரியானவர் என்றால், இதனை அவருக்கு நீங்கள் அனுப்பலாம் என்று கடிதம் எழுதியிருந்தார்.

எதற்காக இதனை நான் சொல்கிறேன் என்றால், இப்படி ஏராளமான வரலாறுகள் உண்டு. இங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகள் உண்டு. சகுந்தலா சாயப்பட்டறை பொன்.இராமலிங்கம்

நம்முடைய பொன்.ராமலிங்கம் சகுந்தலா சாயத் தொழிற்சாலையில் பழனி என்பவர் பணியாற்றினார். அந்தக் காலத்தில் மடக்குகின்ற சேர்தான் அதிகமிருக்கும். அதில்தான் அவர் அமருவார். நம்முடைய தோழர்கள் கார் வைத்திருக் கிறார்கள் என்றால், அது அதிசயத்திலும் அதிசயமாகும். சாயத் தொழிற்சாலையில் நிறைய சம்பாதித்து, வசதியாக இருந்தார்.
காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்கள் இங்கே தொழிலாளர் மித்திரன் என்கிற பத்திரிகையை நடத்தினார். இவர் அண்ணா விற்கு வேண்டியவர்; காஞ்சிபுரத்துக்காரர். அவர் கடைசி காலகட்டத்தில் வாழ்ந்ததெல்லாம் பாண்டிச்சேரியில்தான்.

எங்கள் கடலூர் கூட்டத்திற்கு ஆஸ்தான பேச்சாளர் யார் என்றால், ஆசிரியர் திராவிடமணி. அப்பொழுதெல்லாம் தொலைப்பேசி வசதிகள் எல்லாம் கிடையாது. கடிதம் போடுவோம்; இல்லையென்றால், யாராவது ஒரு ஆளை அனுப்புவோம்.

சனிக்கிழமையானால், ஒரு கார் வந்து எங்கள் வீட்டின்முன் நிற்கும். எங்க அப்பாவிடம், கூட்டத்தில் உங்கள் மகன் பேசவேண்டும் என்று கேட்பார்கள்.
உடனே என்னுடைய அப்பா, என்ன, பையன் உங்கள் பையன்தானே, எங்களிடமிருந்துதான் கூப்பிட்டுக் கொண்டு விட்டீர்களே; பத்திரமாகக் கொண்டு வந்துவிடுங்கள் என்று சொல்வார்.

அவர் உடனே, பத்திரமாக நான் கொண்டு வந்து விட்டுவிடுகிறேன் என்று சொல்வார்.

அங்கிருந்து காரில் ஏறிக்கொண்டு வருவேன்; எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்; ஏனென்றால், அப்பொழுதெல்லாம் நான் காரில் பயணம் செய்தது கிடையாது.

இரண்டு நாள் அவர்களின் தொழிற்சாலையில் தங்கியிருப்போம். எல்லாத் தோழர்களையும் நன்றாக உபசரிப்பார்கள். இப்படி பல செய்திகள் என் நினைவிற்கு வருகின்றன.

அம்பகரத்தூரில் கிடா வெட்டுத் தடுப்புப் போராட்டம்!

காரைக்காலைப் பொறுத்தவரை இஸ்லாமிய சகோதரர்கள் ஏராளமாக கழகத்தில் இருப்பார்கள். காரைக்கால் சிவம்; நம்முடைய சிவ.வீரமணி அவர்களுடைய தந்தையார். கட்டுப்பாட்டிற்குப் பெயர் போனவர்.
அவர்கள் வீட்டில் தான் நாங்கள் தங்கியிருப்போம் - கூட்டங்கள் போடுவோம். அவருடைய தாயார் நன்றாக உபசரிப்பார்கள்.

எனவே, திராவிட இயக்கமாக இன்றைக்கு இருந்தாலும், திராவிடர் கழகமாக அது ஆரம்பித்த காலத்தில், மிகவும் பலமாக எல்லாப் பகுதிகளிலும் இருந்தது.
அம்பாகரத்தூர் போராட்டத்தைப்பற்றி கவிஞர் அவர்கள் சொன்னார்; அய்யா அவர்கள் மருத்துவமனையில் இருந்து கொண்டே அதை எழுதினார். 

அன்றைக்குப் போராட்டத்தை நடத்தி முடித்துவிட்டு வரும்பொழுது, ஒரு மறக்க முடியாத சம்பவம். அதுதான் நேரு காலமானார் என்கிற செய்தி.
நாங்கள் உடனே பிரெஞ்சு அய்.ஏ.எஸ். அதிகாரியைச் சந்தித்தோம். மருத்துவமனையில் இருந்து அய்யா அறிக்கை கொடுத்திருக்கிறார், போராட்டம் நடத்தவேண்டும் என்று. அந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு, நான் கார் வைத்திருந்தேன்; என்னுடைய மாமனார் அவர்கள் வாங்கிக் கொடுத்த கார் அது. அந்தக் காரை எடுத்துக்கொண்டு, நானும், தோழர்கள் எல்லோரும் சென்றோம்.

காரைக்காலில், காரை சிவத்தைப் பார்க்கச் சென்றோம். எங்கே இருக்கிறார் காரை சிவம்? என்று கேட்டோம். கடையில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.

சிவம் சந்திப்பு!

எந்தக் கடையில்? என்று கேட்டோம். 7 ஆம் நம்பர் கள்ளுக்கடையில் இருக்கிறார் என்று சொன்னார்கள். ஊருக்குப் பக்கத்தில் அந்தக் கள்ளுக்கடை இருந்தது. நான் முதன்முதலில் கள்ளுக்கடையைப் பார்த்தது அப்பொழுது தான். நேராக கள்ளுக்கடையின் உள்ளே சென்றேன்; அவர் அங்கே அமர்ந்திருந்தார். அய்யாவின் அறிக்கையை கொடுத்தேன். அடுத்த இரண்டு நாள் கழித்து திருவிழா நடைபெறவிருக்கிறது. உடனே சிவம் அவர்கள், அப்படியே செய்துவிடலாம் என்று சொன்னார்.

கும்பகோணம் தலைவர் குடந்தை மாரிமுத்து, தஞ்சை தோழர்கள் எல்லாம் ஏராளமாக அங்கே வந்துவிட்டார்கள்.

திருவிழாக் கூட்டமும் அங்கே வந்துகொண்டிருக்கிறது; மற்றொரு பக்கம் கறுப்புச் சட்டை கூட்டமும் வந்துகொண்டிருக்கிறது.

காரைக்காலில் கலெக்டரைப் பார்த்தோம்; கலெக்டராக இருந்தவர் வட நாட்டிலிருந்து வந்த ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி; அவரிடம் அய்யாவின் அறிக்கையைக் கொடுத்தோம். அவரும், நீங்கள் சொல்வது நியாயம்தான் என்றார்.

ஜீவப் பந்து ஸ்ரீபால் என்பவர், சமண மதப் பிரச்சாரகர். ஜைன, சமண துறைகளில் நிறைய நூல்களை எழுதியிருக் கிறார். அவர்கள் உடனே அய்யாவின் அறிக்கையை வரவேற்று, பலியிடுவதைத் தடுப்பதுதான் எங்களுடைய கொள்கை; அதனால் திராவிடர் கழகம் நடத்தவிருக்கின்ற போராட்டத்தில் நாங்களும் கலந்துகொள்கிறோம் என்றார்கள்.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து காரைக்கால் கலெக்டரைப் பார்த்தோம். 

அப்பொழுது புதுவையில் வெங்கடசுப்பாரெட்டி அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். நாங்கள் காரைக்கால் கலெக்டரை பார்த்தோம்.

கலெக்டர் மிகத் தெளிவாக, நான் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது; நீங்கள் போராட்டம் நடத்தினால், ஒரு மோதல் வர்ற மாதிரி இருக்கும். இப்பொழுது நேரமும் இல்லை; அரசாங்கத்திற்கு நான் சொல்லவேண்டும்; நீங்கள் சட்டப்படி சொல்கிறீர்கள். இந்த ஆண்டு பிரச்சாரம் மட்டும் செய்யுங்கள்; பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கிறேன். திருவிழா நடைபெறும் நாளில் நீங்கள் கூட்டம் நடத்தக்கூடாது; அதற்கு முதல் நாள் நீங்கள் கூட்டம் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
நாங்கள் ஊர்வலமாகச் சென்று, முழக்கங்களை எழுப்பி, பொதுக்கூட்டம் நடத்தினோம்; மக்களிடையே பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினோம். அதன் காரணமாக அடுத்த ஆண்டு முதல் பலி கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.

இப்படி ஒரு பெரிய வரலாறு உண்டான இடம் இது. அந்தக் காரைக்காலில், நடுவில் ஒரு தொய்வு ஏற்பட்டது; அந்தத் தொய்வைப் போக்கவேண்டும்; புதுச்சேரியில் நல்ல எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இவை இரண்டையும் இணைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.
அந்த அடிப்படையில், இன்றைக்கு ஏராளமான வரவேற்புகள் - மிகவும் சிறப்பானது.

இயக்கத்தைப்பற்றி...

இயக்கத்தைப்பற்றி மட்டும் ஒரு 10 நிமிடம், அய்யாவின் கருத்துகளை மட்டும் எடுத்துச் சொல்லி உங்களுக்கு நினைவூட்டிவிட்டுச் செல்கிறேன்.
அய்யா அவர்கள் மிகத் தெளிவாக, நம்முடைய இயக்கம் எப்படிப்பட்டது என்பதை எடுத்துச் சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பினை உண்டாக்கினார்.

இளைஞர்களுக்கு அய்யா அவர்கள் என்ன சொல்கிறார்!
1945 ஆம் ஆண்டில் திராவிடர் வாலிபர் கழகம் என்கிற தலைப்பில், நிகழ்ச்சிகளில் உரையாற்றியபோது:

இந்த இருபதாம் நூற்றாண்டில் இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சியையும் நிலை நிறுத்துவதும், பெருக்கிக் கொள்வதுமான காரியங்களை, நமது ஆத்மீக, வைதீக காரியமாய் கருதி செய்துவருகிறோம். இது நியாயமா? இது தகுதியா? இந்த இருபதாம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக்கொண்டு உயிர் வாழலாமா? என்று இளைஞர்களே யோசித்துப் பாருங்கள்!

உன் சொந்த இழிவை, ஈனத்தை நீக்கிக் கொள்ளாத நீ, நாட்டிற்கு சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை, ஏழைகளுக்குச் செல்வம் உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால், உன்னைவிட மடையனோ, அல்லாவிட்டால் அயோக்கியனோ, அல்லாவிட்டால் பித்தலாட்டக்காரனோ இருக்க முடியுமா?
முதலில் உன் விஷயத்தை சரிப்படுத்திக் கொண்டுதானே அடுத்தவன் விஷயத்திற்குச் செல்லவேண்டும். உன் விஷயத்தில் நீ இன்னமும் சூத்திரன், இன்னமும் பஞ்சமன் என்றனர். உலகத்திலேயே அய்யாவினுடைய சிந்தனைக்கு ஈடான சிந்தனை எதுவுமே கிடையாது. ஒப்பற்ற சிந்தனையாகும். அவர் எந்த நூலகத்திற்கும் சென்று, படித்து அதனை உருவாக்கியவர் அல்ல. மக்களைப் பார்த்து, சமுதாயத்தைப் பார்த்து, சமுதாயக் கொடுமை, பெரியார் சித்தரித்திருக்கிறார். பெரியாரின் தேவை என்பது என்ன? பெரியாரின் தேவை என்பது சமூகத்தினுடைய நீண்ட கால நிறைவேறாத ஆசைதான் பெரியாரின் தேவையாகவும், பெரியாரின் சேவையாகவும் அமைந்திருக்கிறது.

முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி

மடையன் என்றால், தெரியாதவன் என்பார்கள்; தெரிந்தே ஒருத்தன் இருந்தால், அவன் அயோக்கியன்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொன்னார்; கடவுளைப் பரப்புகின்றவன் அயோக்கியன் என்றார். நம் தோழர்கள்கூட ஏதோ சில நேரங்களில் அப்படி இப்படி என்று இருக்கிறார்கள்.

ஸ்டெப் 1, ஸ்டெப் 2, ஸ்டெப் 3 என்கிற மாதிரி,
முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும் வித்தியாசம் என்ன?
முட்டாள் - பரிதாபப்படவேண்டியவன்; திருத்தப்படவேண்டியவன்; ஏனென்றால் அவனுக்குத் தெரியாது - அவன் நம்புகிறான்.

மின் விசிறி கண்டுபிடிக்காத காலத்தில், காற்றை, வாயு பகவான் என்று நம்பினார்கள். வாயு பகவானைக் கண்டுபிடித்தவனுக்கு அவனுக்கு அப்பொழுது தெரியாது - மின்சாரத்தினால் காற்றை உண்டாக்கலாம் என்று. அதனால் அவன் நம்பினான் - அவன் முட்டாள். என்னவென்று தெரியாததினால் அவன் முட்டாள்.

அடுத்தவன் வந்தான், அவனுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், நமக்குத் தெரிந்த விஷயம், யாருக்கும் தெரியாமல் இருந்தால்தான், ஏமாற்ற முடியும் என்று நினைத்ததால், அதனால், அவனுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், நம்பிக் கொண்டிருக்கிறான், பாருங்கள் அவன் அயோக்கியன் என்று சொன்னார்.
ஆனாலும், எனக்கு எல்லாமும் தெரிந்துவிட்டது; தெரிந்த பிறகும் நான் மாறமாட்டேன்; நான் கடவுளை வணங்குவேன் என்பவனை காட்டுமிராண்டி என்று சொன்னார்.

மேற்கண்ட மூன்று விஷயங்களையும் எவ்வளவு அருமையாக, எவ்வளவு எளிமையாக, விஞ்ஞான பூர்வமாக கடவுள் மறுப்பை எடுத்துச் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.

மடையன் திருத்தப்படவேண்டியவன்; அயோக்கியன் 

தண்டிக்கப்படவேண்டியவன். இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை மிக அழகாக அய்யா அவர்கள் சொல்லியிருக்கிறார்.

இதுபோன்ற பல செய்திகளை அய்யா அவர்கள் தெளிவாக, இயக்கத்தினுடைய ஒவ்வொரு காலத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

கறுப்புச் சட்டைப் படையைப்பற்றி....

இன்னொரு கட்டத்தில் தந்தை பெரியார் சொல்கிறார்:

இயக்கத்திற்குத் தொண்டாற்றுவதில் எவரும் தன்னலத்தைச் சிறிதாவது விட்டுக் கொடுக்கத் தயாராகவும், தன்னுடைய மான, அவமானத்தைக்கூட லட்சியம் செய்யாமல், இயக்கத்திற்குத் தலை கொடுக்கக் கூடியவர்களாகத் துணிவு கொள்ளவேண்டும். விளம்பரத்திற்கும், சுயநல வாழ்வு மேம்பாட்டிற்கும் என்று கருதி, இயக்கத்தை ஏணிப் படிக்கல்லாக உபயோகிக்கக் கருதுகிறவர்கள், திடீரென்று கவிழ்க்கப்பட்டுவிடுவார்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு இதில் கலக்கவேண்டும். உண்மையான இயக்கத்தில், இது இயற்கை. ஆதலால், சொந்த வெட்கம், மற்றவர்கள் செய்யும் பரிகாசம், விஷமத்தனமான போதனை ஆகியவைகளுக்கு கறுப்புச் சட்டைக்காரர்கள் சட்டை செய்து காது கொடுக்கக்கூடாது என்பதை நாம் நன்றாக வலியுறுத்துவோம் என்று கறுப்புச் சட்டைப் படைத் தகுதி என்ற தலைப்பில், 17.11.1945, குடியரசு இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் எழுதினார்.

இந்த இயக்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு; அது என்னவென்றால், தலைமை என்ன நினைக்கிறதோ அதைத்தான் தோழர்கள் நினைப்பார்கள்; தோழர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்தான் தலைமையும் நினைக்கும். ஆகவே, இது ஒரு தனித்தன்மையான ஒரு அற்புதமான இயக்கமாகும். இந்தியாவில், ஏன் உலகத்திலேயே இப்படிப்பட்ட ஒரு தன்னலங் கருதாது, தன்மானம் கருதாது; இனமானத்தை மட்டுமே கருதிக்கொண்டு மிகப்பெரிய அளவிற்கு, சன்மானத்தை எதிர்பார்க்காமல், வெகுமானத் தைப் பற்றி கவலைப்படாமல், மிகப்பெரிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு அற்புதமான, ஒரு தனித்தன்மையான இயக்கமாகும்.

தேர்தலில் வெற்றி வந்தால், மகிழ்ச்சி; தேர்தலில் தோல்வி வந்தால், இரட்டிப்பு மகிழ்ச்சி!

எனவே நண்பர்களே, அற்புதமான காலகட்டம் இன்றைக்கு. தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைபற்றியெல்லாம் நாம் கவலைப்படவேண்டாம். எது வந்தாலும், ஈரோட்டுக் கணக்கில் நட்டமில்லை; எது வந்தாலும் லாபம்தான். தேர்தலில் வெற்றி வந்தால், மகிழ்ச்சி; தேர்தலில் தோல்வி வந்தால், இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்று கேட்டால், நமக்கு அப்பொழுதுதான் வேலை அதிகம்.
எனவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். மிகவும் உற்சாகமாக பணியாற்றட்டும், இந்த புதுவை மாநில திராவிடர் கழகம்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து என்று சொல்வதுபோல், மிகச் சரியான நேரத்தில் இதனை செய்திருக்கிறோம். நாம் தேர்ந்தெடுத்திருப்பவர்களையும், சரியான முறையில் அடையாளம் கண்டிருக்கிறோம் - அது காரைக்கால் பகுதியாக இருந்தாலும், புதுச்சேரியாக இருந்தாலும்,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்று சொல்லக்கூடிய அளவில், தோழர்கள் ஒரு குடும்பமாக இருக்கவேண்டும்.

ஒரு தோழரைக்கூட நாம் இழக்கக்கூடாது; கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும், சகித்துக்கொள்ளவேண்டும்; அவர்களைத் திருத்தவேண்டும்; மாற்றவேண்டும்; மாற்ற முடியவில்லையென்றாலும், சகித்துக் கொள்ளவேண்டும்.
வித்தியாசமாக நாம் நினைக்கவேண்டிய அவசியமில்லை. காரணம், லாபத்தை எதிர்பார்த்துக் கொண்டு இந்த இயக்கத்திற்கு நாம் வரவில்லை. நாம் எதிர்பார்ப்பது - உலக மாற்றத்தை எதிர்பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறோம்.

விடுதலை பரவாத வீடுகளே இல்லை - ஏடுகள் பரவாத இடமே இல்லை!

ஆகவே, அற்புதமான பணி செய்து, தோழர்களே, புதுச்சேரி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இங்கே உரு வாகிறது. இதை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்லுங்கள்; கழகம் இல்லாத கிராமமே புதுச்சேரி மாநிலத்தில் இல்லை. விடுதலை பரவாத வீடுகளே இல்லை - ஏடுகள் பரவாத இடமே இல்லை என்று காட்டி, சிறப்பாக வளர்ச்சி பெறு வதற்கு ஒத்துழையுங்கள், ஒத்துழையுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
 
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
              ------------------------- ”விடுதலை” 6-5-2014

19 comments:

தமிழ் ஓவியா said...

எனக்குத் தெரியும் எல்லாம்...


ஒரு நாள்...
என் நாட்டு
அரசியல் சாரா
அறிவுஜீவிகள் என்போர்...
நடுநிலை வாதிகள் என்று
நா சரசம் பேசியோர்...
துலாக்கோல் என
தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொண்ட
ஊடகங்கள்...
நடிப்பு
விளையாட்டு
இலக்கியம் என்று
விளம்பரமும்
பணமும்
விளம்பரத்தின் மூலம்
பணமும் பண்ணியோர்...
இன்னும் நல்லவர்கள்
என்று நம்பப்பட்டோர்
எல்லோரும்
எம் நாட்டு எளிய மக்களால்
குறுக்கு விசாரணை
செய்யப்படுவர்.
இந்நாட்டின் எதிர்காலம்
காவியிருளுக்குள்
கசையடி படப்போகிறது
என்று தெரிந்தும்
அந்தக் கொட்டடிக்குள்
எம்மைத் தள்ளிவிட்டு
சுற்றி நின்று -கைகொட்டிச்
சிரித்ததற்காக
அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
கூடிநின்ற ரசிகர்களை
வரி ஏய்ப்புக்கும்
வருங்கால வாய்ப்புக்கும்
கூறுகட்டி விற்பனை செய்தவர்கள்
வரிசையாய் நிறுத்தப்பட்டு
அணிவகுப்பில் அடையாளம்
குறிக்கப்படுவார்கள்.
அதில் மரு வைத்து
மாறுவேடமிடுவோர்,
தடாலடி கட்சி மாறிகள்
தனியாக விசாரிக்கப்படுவர்.
ஒருகையில் விளக்குமாற்றையும்
மறுகையில் வெண்சாமரத்தையும்
வீசிக் கொண்டே
நடுநிலை என்று
வியாக்யானம் பேசியவர்கள்
நடுநிலையான
கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
தேஷ வளர்ச்சி என்று
கார்ப்பொரேட்டுகளைக் கைகாட்டி
கூலிக்கு மேல் கூவியவர்களின்
தேக வளர்ச்சி
புள்ளி விவரங்கள்
பெருந்திரையில் காட்டி
விவாதிக்கப்படும்.
சிறுகச் சிறுக
இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென
இந்த மக்கள்
செத்துக் கொண்டிருந்தபோது
அந்த நெருப்பில்
குளிர் காய்ந்தவர்களின்
கோணல் புத்திகள்
சோதனைக்குட்படுத்தப்படும்.
அக் குற்றப் பத்திரிகையில்....
தெரிந்தே இச்சதி செய்தவர்கள்
மட்டுமல்லாமல்...
எல்லாம்
தங்களுக்குத் தெரியும் என்று
தங்களையே
ஏமாற்றிக் கொண்டவர்கள்...
நூல் ஏடுகளுக்கு
வால் பிடித்தவர்கள்...
போலி மின்னஞ்சல்களுக்கு
முகவரி கொடுத்தவர்கள்...
ஒரு கோக்குக்கும்
காக்டெயிலுக்குமிடையில்
சரித்திரம் பேசியவர்கள்...
ஒரு பார்ப்பன
ஷொட்டுக்காக
தாம் ஷர்ட்டு போட்ட
வரலாற்றை மறந்தவர்கள்...
சமூகநீதியால் கிடைத்த
சக்கர நாற்காலிகளில்
சுற்றிக் கொண்டே
அர்த்த சாஸ்திரத்தின்
பெருமை பேசியவர்கள்...
நேஷனல் இண்டகரிட்டி
ப்ரோக்ராமில்
இந்துத்துவாவை
#இன்க்ளூட் செய்து
சிறுபான்மையோரை
எஸ்க்ளூட் செய்தவர்கள்...
காவியும் அரைடவுசரும்
வைத்த குண்டுகளுக்கு
எவ்வித விசாரணையுமின்றி
தாடியையும்
குல்லாவையும் நோக்கிக்
கை நீட்டியவர்கள்...
தேவனுக்குச் சுவிசேஷம் சொல்லி
சேர்த்த சொத்துகளை
காத்தருள காவியிடம்
மண்டியிட்டவர்கள்...
மகளிர்க்குப்
பாதுகாப்பு வேண்டும் என்று
உதட்டில் பேசிக் கொண்டே
வேலைக்குப் போனால்
வீணாகிப் போவார்கள் என்று
வேதாந்தம் பேசியவர்களை
மறந்தவர்கள்...
எல்லோரும்...
எல்லோரும்...
அக்குற்றப்பத்திரிகையில்
சேர்க்கப்படுவார்கள்!
ஒரு மரண வியாபாரிக்கு
மகுடம் சூட்ட விரும்பியோர்...
ஒரு சர்வாதிகாரிக்கு
சனநாயகச் சாயம் பூசியோர்...
சுயநலத்துக்காக எம் மக்களை
சூழ்ச்சிக்குப் பலி கொடுத்தோர்...
அனைவரும்...
அனைவரும்...!
நிறுத்து...
இதையெல்லாம்
பேசவும் எழுதவும்
சிந்திக்கவும் கூட
உனக்கு
வாய்ப்பளித்தால் தானே!
என்ற குரல் கேட்கிறது.
என் குரல் வளை
நெரிக்கப்படலாம்.
எம் உடல் அமிலத்தால் எரிக்கப்படலாம்.
அதன் சாம்பலும்
சத்தமின்றி புதைக்கப்படலாம்.
ஆனால்
எமக்குத் தெரியும்!
எந்த ஒரு
கொடுங்கோலனின் உச்சமும்
ஒரு சில ஆண்டுகள் தான்.
அதன் பிறகான பெருவெடிப்பில்
அண்டம் சிதறியது போல
உங்கள்
அகண்ட பாரதம் சிதறும்.
அப்போதும்
எம்மக்கள் இருப்பார்கள்.
உங்களை நம்பி
ஏமாந்த எம் மக்கள்...
அப்போதும் இருப்பார்கள்.
அவர்களே சாட்சிகளாய்
அவர்களே வழக்காடிகளாய்
காலத்தின் தீர்ப்புக்காக
உங்களைக் கூண்டிலேற்றுவார்கள்.

- சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...

சரவணன் யார்...?


சரவணா, சரவணன், சரவணக்குமார், சரவணராசு, சரவணதேவி, சரவணசங்கர், சரவணக்குமாரன், என்று சரவணா என பெயர் ஆரம்பிக்கும் அனைவரும் மஹாவீரரின் பிறந்த நாளான ஏப்ரல் 13 அன்று அவரை நினைத்துப் பார்க்கவேண்டும்.

சரவணா முருகனின் பெயர் என்பதெல்லாம், மத ரீதியாக பரப்பிவிடப்பட்ட பொய்கள்.

கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பவுத்தமும், சமணமுமே தமிழர்களின் தலையாய மதங்களாகத் திகழ்ந்தன. இரண்டு மதங்களும் மக்களின் கல்வி, மருத்துவம், வாணிபம், தொழில் போன்றவைகளில் பெரிதும் துணை நின்றன..

நாம் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு உண்டு வந்தோமே, அதைத் துவக்கி வைத்தவர்கள் சமண, பவுத்தர்கள்தான். அன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் விகாரைகளில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளுக்காக வீடு வீடாகச் சென்று அரிசி கம்பு, கேழ்வரகு போன்ற உணவு தானியங்கள் வாங்கி வந்து சமண பவுத்த விகாரைகளில் கல்வி கற்று வரும் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குவார்கள். பகலில் பெற்றோர் வயல் வேலை அல்லது வேறு பணிக்குச் சென்றுவிடுவதால் அவர்கள் குழந்தைகளின் மதிய உணவைக் கவனிக்கவேண்டி இப்பணியைச் செய்தனர்.

சமண முனிவர்கள் தங்களிடம் கல்விபயின்ற மாணவர்கள் குழுவில் அனைவரையும் கவனிக்க ஒரு தலைமைப் பையனை நியமித்தனர். அந்த மாணவனை ஷரஹனா என பாலிமொழியில் அழைத்தனர். ஷ்ராவன் என்றால் இளைஞர் என்று சமஸ்கிருதத்தில் பொருள்படும். (உதாரணமாக இராமாயணத்தில் பெற்றோரைத் தோளில் சுமந்து சென்று தசரதனால் கொலை செய்யப்பட்ட இளைஞன் பற்றிப் படித்திருப்பீர்கள். இவனை வடமொழியில் ஷ்ராவன் என்று கூறுவர். இதையே கம்பன் சிரவணன் என்று தமிழில் மொழிபெயர்த்திருப்பார்) இந்த ஷரஹனாதான் தமிழில் சரவணா என்று அழைக்கப்பட்டது.

பள்ளி அல்லது விகாரைகளில் மதிப்புமிக்க மாணவன் என்றால் எந்தப் பெற்றோருக்குத்தான் ஆசை வராது. ஆகையால் தொடர்ச்சியாக தங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்ப சரவணா என்றே பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

சுமார் 2500-ஆண்டு பழமை வாய்ந்த இந்த சரவணா என்ற பெயர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் சைவம் வந்த பிறகு சிவனின் பையனாக முருகன் என்று மருவியது முருகனும் இளையவனாகையால் ஏற்கெனவே லட்சக்கணக்கில் உள்ள சரவணாக்களையும் முருகனோடு கோர்த்துவிட இறுதியில் சரவணாவும் முருகக்கடவுள் பெயராக மாறிவிட்டது.

(ஹரத்தோ அஹிம்ச ப்ராஹ, சபி ஜிவ் பிரேம ஜவதோ-)

அன்பே அனைவருக்குமான உயிர்மூச்சு அனைத்து உயிரிலும் அன்பைக்காண்-.

- மஹாவீரர்

தமிழ் ஓவியா said...

தள்ளுபடி வியாபாரம்



அர்ச்சகர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!

ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும் மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி என்று சொல்லி ஆட்டையப் போட்டு அதை கர்ப்பக்கிரகத்தில் போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர்!

- க. அருள்மொழி,
குடியாத்தம்.

தமிழ் ஓவியா said...



எஞ்சிய ஈழத் தமிழர்களுக்கும் இக்கதியா?

இலங்கை அரசுக்குத் தலையாட்டுவதா இந்திய அரசு?

மாநில அரசு தப்பி வந்தவர்களை சிறையிடுவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகிவருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் காரணமாக இலங்கை இராஜபக்சே அரசு சர்வதேச நெருக்கடிக்கு ஆளாகும் நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை, மற்ற நாடுகளின் இலங்கைப் புறக்கணிப்பு போன்ற நிலைமை, இராஜபக்ஷே அரசுக்கு வரவிருக்கும் எரிச்சலில், அங்கு எஞ்சியுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களின்மீது காட்டத் துவங்கியுள்ளது.

முன்புபோலவே, தமிழ் இளைஞர்களை வேட்டையாடி மீண்டுமொரு இன அழிப்பு அத்தியாயத்தை புதிதாகத் துவக்கியுள்ளதாக, அங்கிருந்து தப்பித்து இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்கள் இரத்தக் கண்ணீருடன் ஏடுகளுக்குப் பேட்டி தந்துள்ளனர்! இதைப்பற்றி, அமெரிக்கத் தீர்மான வாக்கெடுப்பில் அதைப் புறக்கணித்து, இலங்கை அரசுக்கு உதவிய, இந்திய அரசு இப்போதும் மவுனம் சாதிக்கிறது; இதற்காக தனது கண்டனக் குரலை எழுப்பி இருக்க வேண்டாமா?

ஈழத் தமிழ்ப் பெண்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிங்கள இராணுவம், காவல் துறை மூலம் ஆளாக்கப்படுவதாக, அங்கிருந்து தப்பித்து வந்துள்ள தமிழ்க் குடும்பத்தினர் கதறிக் கதறிக் கண்ணீர் வடித்துக் கூறும் அவலம் பற்றி, மத்திய அரசு ஈழத் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று கூறிடும் அரசு கை பிசைந்து, வாய் மூடி நிற்கலாமா - இலங்கை அரசு முன்?

அது மட்டுமா? வெந்த புண்ணில் வேலைச் சொருகும் கொடுமைபோல தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, 16 தமிழ் அமைப்புக்கள், அதன் ஆதரவாளர்களான 424 பேர்கள்மீது தடைவிதித்ததோடு, உலக நாடுகள் அனைத்தும் இதுபோலவே அவ்வமைப்புகள், அந்த 424 தமிழர்கள் அனைவர்மீதும் தடைகளை விதிக்க வேண்டுமென அறிவிப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்!

இதனை பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் ஏற்க முடியாது; என்று நிராகரித்து விட்டன. ஆனால் இந்திய - மத்திய அரசு அத்தடையை இங்கும் போட்டு, இராஜபக்சே அரசின் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பறிப்புக்கு மிகப் பெரிய அளவில் துணை போய் இருக்கிறது. எவ்வளவு பச்சை அக்கிரமம் இது?

பயங்கரவாதிகள் என்று இராஜபக்சே அரசால் போலி முத்திரை குத்தப்பட்ட விடுதலைப்புலிகளே அங்கு இல்லை; முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள், சகஜ நிலை திரும்பி விட்டது என்று ராஜபக்ஷேக்கு சகஸ்ரநாமம் பாடிய மத்திய அரசு, இப்போது மேலும் ஒரு சர்வதேசத் தவறினை இழைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மட்டுமல்ல மனிதநேயம் உள்ள எவரும் மன்னிக்கவே மாட்டார்கள்.

கெட்ட பின்பு ஞானம் சிலருக்கு வருவதுண்டு; மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு வரவே இல்லை.

இந்த நிலையில், தமிழக அரசோ, அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறுவதுபோல், உயிருக்குத் தப்பி வந்த அந்த ஈழத் தமிழர்களை பாஸ்போர்ட் இல்லாமல் வந்தவர்கள் என்று குற்றம் சுமத்தி, காவல்துறை சிறை பிடிக்கச் செய்வது எவ்வகையில் நியாயம்? முற்றிலும் மனிதநேயமற்ற செயல் அல்லவா? அவர்களை அகதிகள் முகாம்களுக்குத்தானே கொண்டு சென்று அடைக்கலம் தந்து காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டாமா? இந்த அரசுகளின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தப்பி வரும் தமிழர்களை குறைந்த பட்சம் அகதிகள் முகாமுக்காவது அனுப்பி, அவர்களது தீராத துயரங்களுக்கு மருந்திடும் மனிதநேயச் செயலை மாநில அரசு செய்ய முன்வர வேண்டாமா? தமிழர்கள்தான் உலகிலேயே நாதியற்ற இனமா? தமிழர்களே சிந்தியுங்கள். மனிதநேயம் காப்பாற்ற பெரும் குரல் கொடுங்கள்; தயங்காதீர்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

6.5.2014 சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/79776.html#ixzz30zFmyuV0

தமிழ் ஓவியா said...


மோடி பிரசார மேடையில் ராமன் படம், ராமன் கோயிலின் மாதிரி வரைபடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்


லக்னோ, மே 6- நரேந் திர மோடி பிரசாரம் செய்த மேடையின் பின்னால் ராமன் படம் வரையப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந் தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பைசாபாத் மாவட்ட தேர்தல் அதிகா ரிக்கு மாநில தேர்தல் ஆணை யம் கடிதம் அனுப்பி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத் தில், பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அவர் அந்த தொகுதியில் போட்டி யிடும் பா.ஜனதா வேட் பாளர் லாலு சிங்கை ஆதரித்து பேசினார்.

மேடையின் பின்னணி யில் ராமன் படம் மற்றும் அயோத்தியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ராமன் கோவிலின் மாதிரி வரைபடம் ஆகியவை வரையப்பட்ட பேனர் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் மோடி பேசு கையில், ராமன் கோவில் அமைக்கும் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் ராமன் வரலாறு மற்றும் வழிகாட்டி நெறி முறைகளை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா வேட் பாளரை வெற்றி பெற செய் யுமாறு கேட்டுக் கொண் டார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் மக்களை கேட் டுக்கொண்டார்.

அப்போது பொது மக்கள் ஜெய் சிறீராம் என்று முழக்கம் எழுப்பினர்.

அரசியல் கட்சி தலை வர்கள் தேர்தல் பிரச்சாரத் தின்போது மதம் சார்ந்த அல்லது கடவுள் படங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. எனவே மோடி பேசிய மேடையின் பின்ன ணியில் ராமன் மற்றும் மாதிரி வடிவ கோவில் படம் அமைக்கப்பட்டிருந் ததை கவனித்த தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, பைசாபாத் மாவட்ட தேர் தல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப் பினார். இந்த தகவலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவே செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79779.html#ixzz30zFyj4oq

தமிழ் ஓவியா said...


மோடியின் பிரிவினைவாதப் பேச்சுக்கு செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்



அலகாபாத் மே 6 - சமீப காலமாக தேச நலனுக்கு எதிராகவும் மத மோதலை தூண்டும் வகை யில் மோடியும் அவரது சகாக்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இது வட இந்திய மக்களி டையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத்தில் திங்கள் அன்று நடந்த பேரணியின் போது மக்களின் வெறுப்பு வெளிப்பட்டது. நேற்று காலை பேரணி நடந்துகொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்து ஒருவர் நோ நோ மோதி டவுன் டவுன் மோதி என்று கூவிக்கொண்டு தனது காலில் இருந்த செருப்பை மோடியை நோக்கி வீசி னார். இந்த காட்சி உடனடி யாக அனைத்து தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பா னது. ஆனால் சில நிமி டங்களிலேயே அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் மோடியின் மேடைப்பிரச் சாரம் ஒளிபரப்பானது.

இதனிடையே கூட்டத் தில் இருந்த பாஜகவினர் நரேந்திர மோடியின் பிரி வினைபேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பை வீசிய நபரை பிடித்து அடித்து உதைத்தனர். கூட்டத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் அந்த நபரை பாஜக ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி அலகா பாத் நகர காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித் தனர். விசாரணையில் பிரதாப் ருத்ரா சிங் என்ற அந்த நபர் அலகாபாத் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும், கடந்த சில மாதங்களாக பாஜவினரும் நரேந்திர மோடியும் தேச நலனுக்கு எதிராக தேர்தல் பரப்புரை யில் பேசி வருவது குறித்து எனது எதிர்ப்பைத் தெரி வித்தேன். ஊடகங்கள் மோடியின் செயலை மறைத்து வைக்கும் செய லில் ஈடுபட்டு வரும் நிலையில் எனக்கு இந்தச் செயலைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். விசார ணைக்குப் பிறகு அவரை எச்சரித்து விடுதலை செய்தனர்

Read more: http://viduthalai.in/e-paper/79781.html#ixzz30zGBNknV

தமிழ் ஓவியா said...


பிராமணர்களுக்குத் தனி சாப்பிடுமிடமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன இயக்கம்


பெங்களூரு, மே 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் ஜி.வி. சிறீராம ரெட்டி செய்தியாளர்களி டையே கூறியிருப்பதாவது:

:உடுப்பி சிறீகிருஷ்ண மடத்தில் பிராமணர்களுக் குத் தனி சாப்பிடுமிடமும், பிராமணர் அல்லாதவர் களுக்குத் தனி சாப்பிடு மிடமும் என்கிற பங்கி பேதா என்னும் வர்ணா சிரம முறைக்கு எதிராக பெங்களூரிலும், உடுப்பி யிலும் தொடர் ஆர்ப்பாட் டங்கள் நடத்திடவும்,. மற்ற மாவட்டத் தலைநகர்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்திடவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசுஉறுதியாக நட வடிக்கை எடுத்து, இம் முறையை தடை செய்திட வேண்டும்.

மாநிலத்தின் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர்கள் சாப் பிட்ட எச்சில் இலைகளில் பிராமணர் அல்லாதவர்கள் படுத்துப் புரளும் மட ஸ்நானா என்னும் இழி வான நடைமுறைக்கும், சாப்பிடுமிடத்தைப் பிரிக் கும் இக்கேவலமான பங்கி பேதா நடை முறைக்கும் கர்நாடக முதல்வர் சித்த ராமய்யா முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர் பார்த்தோம். ஆயினும் எது வும் நடை பெறவில்லை. இவ்வாறு ஜி.வி.சிறீராம ரெட்டி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79780.html#ixzz30zGKXZ2c

தமிழ் ஓவியா said...


அய்.நா.வும் மனித உரிமை ஆணையமும் என்ன செய்யப் போகின்றன?


இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென் மராட்சி கலாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ள கருத்து, உலகில் உள்ள அனைத்து நாடுகளின் காதுகளை எட்டும் என்பதில் அய்யமில்லை.

ராணுவத்தை ஒரு போதும் வடக்கு மாகாணத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறு மாப்பாகக் கூறியதாக அறிந்தேன்.

முதலாவது எமது ஜனாதிபதியின் இன்றையதான ஜனாதிபதி வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறி, இரண்டாவது அவரின் எண்ணங்களைக் கொண்டவாறே இனிவரும் அர சாங்கத்தில் தொடர்ந்தும் பதவியில் இருப்பர் என்பது என்ன நிச்சயம்?

இந்திய அமைதிப்படை இங்கு வந்த போது ஒரு இந்தியப்படையதிகாரி என் நண்பரிடம் பின்வருமாறு கூறினாராம்:- நாங்கள் இன்னும் ஒரு நூறு ஆண்டு களுக்கேனும் இங்கிருந்து வெளியேறமாட்டோம் என்று சொன்னாராம்.

ஆனால் அடுத்த வருடமே இங்கிருந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டி வந்தது. வி.பி.சிங் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றதும் 100 ஆண்டு இங்கு வாழவிருந்த இந்தியச் சிப்பாய்கள் கப்பல் ஏற வேண்டி வந்தது.

ஆகவே எமது ஜனாதிபதியோ ராணுவமோ தாம் நினைத்தவாறு எமது மண்ணில் நிரந்தரமாக அவர்கள் இருந்துவிட முடியாது. அதற்கு இயற்கை இடமளிக்காது. இறைத்தன்மை இட மளிக்காது. ஏன் இந்தியப் பாதுகாப்புக் கரிசனைகள் கூட இடமளிக்காது. எமக்கு வேண்டாத ராணுவம் விரைவில் எம்மண்ணை விட்டு வெளியேற வேண்டும்.

சர்வதேச விதிகளுக்கு அமைய ஆங்காங்கே மத்திய அரசாங்கம் சார்பான அமைதிப்படைகளை நிலை நிறுத்த நாங்கள் இடமளிக்கலாம். ஆனால் தம் எண்ணத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புப் படையாக எமது நாட்டுப்படையினர் இங்கு இருக்கப் போவதை நாம் இடமளிக்க போவதில்லை.

அன்று வெள்ளையனே வெளியேறு என்று உரக்கக் கூறிய எம்மக்கள் குரல், இனி ராணுவத்தினரும், அரசாங் கத்தினரும் கேட்கும் படியாக படையினரே வெளி யேறுங்கள் என்று ஒலிக்கப் போகின்றது.

எனவே இந்த மே தின விழாவானது எமது அடிப் படை உரிமைகளைத் தட்டிக் கேட்க வழி சமைப் பதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டு கிறேன் என்று பேசியுள்ளார்.

தொடர்ச்சியாக இலங்கை அரசு சிங்கள இன வெறியுடன் நடத்து கொண்டு வந்துள்ளதை நிரல்பட எடுத்துக் கூறியுள்ளார்.

பல முறை சிங்கள இராணுவம் மூக்கறுபட்டு இருந்தாலும் அது புத்தி கொள் முதல் பெற்றதாகத் தெரியவில்லை.

அய்.நா.வால் நியமிக்கப்பட்ட மூவர் குழு கூறி இருந்தாலும் ஜெனிவாவில் மனித உரிமை மன்றம் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த சர்வதேச கருத்துக்கும் இடம் கொடுக்காத இடி அமீனாகத்தான் ராஜபக்சே நடந்து கொள்கிறார்.

சீனாவும், ருசியாவும், பாகிஸ்தானும் தங்களைக் காப்பாற்றி விடும் என்ற எண்ணத்தில் மிதந்து கொண்டுள்ளது. ஒரு கட்டத்தில் உலக நாடுகளின் அழுத்தத்திற்கு அந்த நாடுகளும் இணங்கவேண்டிய நிலை ஏற்பட்டே தீரும்.

சொந்த நாட்டிலேயே அந்நாட்டு அரசின் இராணு வத்தால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும், சொந்த நாட்டிலேயே அகதிகளான அவலமும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது போல வேறு எந்த நாட்டுக்கும், இனத்துக்கும் ஏற்பட்டு இருக்காது.

யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையிலும்கூட இராணுவக் கட்டுப்பாட்டில்தான் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து தீர வேண்டும் என்பது எத்தகைய அவலம்.

சிங்கள இராணுவத்தினர் யுத்தத்தின் போது நடந்து கொண்டதுபோதாதென்று ஈழத் தமிழ் மக்கள் அமைதியான - சுயமரியாதையுடன் கூடிய வாழ்வுக்கு அச்சுறுத்தலாக சிங்கள இராணுவத்தை நிறுத்தியி ருப்பதற்கு எந்த வகையில் நியாயம் கூற முடியும்?

ஈழப் பெண்கள் என்றாலே போகப் பொருள் என்று கருதக் கூடிய மிருக குணம் படைத்த சிங்கள இராணு வத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது ஒவ்வொரு நொடியும் மரண பயத்தில்தானே கழிக்க வேண்டிய நிலை.

மிதிக்க மிதிக்க புழுவும் புலியாகும் என்ற உலகியலைத்தான் வடக்கு மாநில முதல் அமைச்சர் எதிரொலித்துள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அய்.நா. முறையாகச் செயல்படவில்லை என்று ஏற்கெனவே ஒப்புதல் வாக்கு மூலம் அய்.நா.வின் செயலாளரால் அளிக்கப்பட்டது.
அந்தக் குற்றத்திற்குப் பரிகாரம் தேடும் வகையி லாவது, தலையிட்டு சிங்கள இராணுவத்தின் கட்டுப் பாட்டில் ஒவ்வொரு நொடியும் கழிக்கும் ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்துகிறோம்.

ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளிப்படையாக ராஜபக்சே அறிவித்த பிறகாவது - அய்.நா.வும் மனித உரிமை ஆணையமும் என்ன செய்யப் போகின்றன? இந்த வினாவிற்கான விடையை உலக நாடுகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-2/79791.html#ixzz30zGsCxx2

தமிழ் ஓவியா said...


ஒரு பொதுவுடைமைவாதியின் பார்வை

அய்யா கி.வீரமணி அவர்களுக்கு நலம்! தங்கள் நலம் இயக்க தோழர்கள் நலம் அறிய ஆசை.

26.4.2014 இல் தங்கள் கையால் புத்தக திருவிழாவில் பெரியார் புத்தகர் விருதைப் பெற்றேன். நான் பழைய பொதுவுடைமை வாதி. இத்தனை காலமும் பொதுவுடைமை இயக்கத்தில் என்னுடைய காலம் சென்றா லும் தோழமை என்ற உறவை தங்கள் இயக்கத்தில் பார்க்கின்றேன். பெரியார் வரலாறு படித்திருக்கின்றேன்.

பெரியார் ஒருவர் இந்த நாட்டில் பிறந்த தால் தான் சாதிய உணர்வு குறைந்திருக் கிறது. மூடநம்பிக்கை இருக்கக்கூடாது என்பதை தன் உயிர் மூச்சுவரை பாடுபட்ட மாபெரும் மனிதர். ரஷ்யாவில் லெனின் தமிழகத்தின் ஓர் லெனின் என்று ஒப்பிட லாம். அந்த அளவிற்கு சோவியத் நாடு சென்று அந்த பூமியை, மக்களைப் பார்த்து விட்டு அப்படி ஓர் புதிய பூமி இந்தியாவில் வரவேண்டும் என்று பொதுவுடைமை பிரச்சாகராக மாறிய பெரியாரை பொது வுடைமை இயக்கம் ஏன் நேசிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

கிணற்று தவளையாகவே இருந்து விட் டோமே என்று என்னும் நிலை ஏற்பட்டது. பழையகால பொதுவுடைமையாளர்கள் தோழமை என்ற உணர்வோடு செயல் பட்டார்கள்.

இயக்கத்தில் கடுமையான விமர்சனம் இருந்தாலும் தோள்மீது கைபோட்டு சிரித்தபடி வருவார்கள்.

பழைய தோழர்கள் மறைந்த பின்பு புதிய தோழர்கள் நிலைப்பாடு தலை கீழாக மாறி விட்டது. போட்டி பதவிகளை கொள்கை நடை முறையை செயல்படுத் தும் விதத்தில் மாற்றம் பல்வேறு குணக் கேடுகள்.

26 ஆண்டு கால ஜீவா படிப்பக விழா வில் கலந்து கொள்ள எந்த தலைவர்களும் வரவில்லை. தோழர் பொன்னீலர், தோழர் ராதா கிருஷ்ணன், தோழர் கருப்பசாமி, தோழர் பரிணாமன் தவிர இதையும் பெரியார் திடலில் வைத்து நினைத்துப் பார்க்கின்றேன்.

பள்ளிகளிலும் பொது மேடைகளிலும் ஜீவா, பெரியார், காந்தி, காமராசர் வாழ்ந்த சரித்திரத்தை சொல்லி புத்தகங்களை வாசிக்கச் சொல்லுவேன்.

புத்தகர் விருது மூன்று பொதுவுடைமைத் தோழர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொருவரின் வாழ்க்கை குறிப்பை வாசித்த அற்புதம் ஒருபக்கம். அதோடு மேடையில் பேச வாய்ப்புக் கொடுத்தது அதைவிட உற்சாகம்.

பெரியார் விருதை வாங்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி வாழ்க்கையில் பிறந்த பிறவியில் நமக்கு கிடைத்த பாக்யம் என நினைக்கின்றேன்.

தீண்டாமை ஒழிப்பு, பொருளாதார நிலைபாடுகள் மாறிவிட்டால் மனிதகுலம் ஒரு சமமான சமுதாயமாக மாறிவிடும். காலத்தில் இரு இயக்கங்களும் ஒத்துப் போக முடியாததற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன்.

ஒரு சிலர் பொதுவுடைமை இயக்கத்தில் பிராமணர்கள் தலையீடு காரணத்தால் பொதுவுடைமை இயக்கம் பின்னடைந்து விட்டதாக கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நம்பூதிரிபாட் போன்ற பல தோழர்கள் இயக்கத்திற்காக தன் சொத்தையெல்லாம் தாரை வார்த்ததையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்கள் வேறு இயக்கத்தில் இருந்திருந்தால் அவர்கள் எவ்வளவு பதவிகளைப் பெற்றிருப்பார்கள்!

பொதுவுடைமை இயக்கம் 1964 இல் பிரிந்ததின் விளைவு. இரு இயக்கங்களும் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லியே காலத்தை கழித்து தோழர்களையும் சிந்திக்க விடாமல் சகோதர சண்டையாக மாறி ஊரே சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
பொதுவுடமையாளர்கள் எளிமையை மறந்து எப்படியாவது யாருடன் சேர்ந்து தொகுதிகளைப் பற்றி, சுகம் கண்டதின் விளைவு இன்று இயக்கம் தனிமைப்பட்டு கண் போன பின் சூரிய நமஸ்காரம் என்ற நிலை ஏற்பட்ட நிலை.

தி.க தோழர்கள் பதவி என்ற நிலை இல்லாமல் பெரியாரின் கருத்துக்களை தன்னால் முடிந்தவரை பிரச்சாரம் செய்து அவர்கள் இயக்கத்தை தக்கவைத்து வருகி றார்கள். அதில் உணர்வு பூரணமான தோழர் கள் கடமை உணர்வோடு வேலை செய் வதை கண்கூடாக பார்க்கிறேன். லட்சிய வெறியோடு இருப்பதைப் பார்க்கின்றேன். பழகும் விதத்திலும், மரியாதை கொடுக்கும் விஷயத்தை அவர்களிடம் படிக்க வேண்டும். இந்த இயக்கத்தை உடைத்து வெளி யேற நினைத்தால் அதில் சுய நலநோக்கம், இயலாத்தன்மை, கடமையை செய்ய நினைக்காதவர்களாக இருக்கலாம்.

புத்தக விருதில் அய்யா வீரமணி பேசும் பொழுது நாங்கள் கொடுக்கும் விருது அரசியல் பார்த்து அல்ல. உண்மையிலேயே கொடுக்க வேண்டியவர்களுக்கு, திறமைக் காக கொடுக்கிறோம் என்று கூறிய வார்த்தை என்னை நெகிழ வைத்து விட்டது.

பள்ளிகளிலும், இலக்கிய கூட்டங்களில் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பே ஓங்கி குரல் கொடுப்பேன். திராவிடர் கழக இயக்க கொள்கைக்கு துணை நிற்பேன். மார்க்சிய கருத்துக்களை முன்னெடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

- இரா. சண்முகவேல், கீழக்களங்கள்

Read more: http://viduthalai.in/page-2/79795.html#ixzz30zH3jmbx

தமிழ் ஓவியா said...


இவர்கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?

உத்தரப்பிரதேசம், பைசாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் மோடி. மேடையில் ராமர் படம்; கிரீடம் வைக்கப்பட்ட ராமர் படம். மோடி பேசும் ஒலிபெருக்கிக்கு பின் னால், ராமர் படம் இருக்க வேண்டும் என முடிவு செய்து, பேனர் வைக்கப் பட்டுள்ளது.

மேடையில் பேசும் போது, மோடிக்குப் பின்னால், ராமரின் உருவத்தை மறைப்பதுபோல் மோடி நிற்பதற்கும், ராமரின் தலையில் உள்ள கிரீடம், மோடி தலையில் இருப்பது போல, மேடைக்கு எதிரே உள்ள மக்களுக்கு தெரியும் வண்ணம், அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அங்கே பேசிய மோடி, தன் வாழ்நாள் முழு வதும், ஊழலை ஒழிப்பதற்கு போராட இருப்பதாகவும், ராமர் பிறந்த நிலத்தில் இருந்து இதனைக் கூறுவதாகவும் பேசி உள்ளார். காந்தியை வேறு சாட்சிக்கு அழைத்து உள்ளார். காந்தி ராமராஜ்யம் வேண் டும் என கனவு கண்டாராம்;

அதனைப் போல், இவர் ராமராஜ்யம் அமைத் திட வாக்களியுங்கள் என்கிறார். பைசாபாத் தொகுதிக்கு உட்பட்டதுதான் அயோத்தி நகரம். ராமர் அங்கே தான் பிறந்தார் என்று சொல்லி, 400 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்த இடம் அந்த தொகுதியில்தான் உள்ளது.

அத்தகைய பதற்றமான ஒரு பகுதியில் தான், மோடி, ராமர் படத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அப்பட்டமாக, மத உணர்வோடு பேசி உள்ளார். இது குறித்து, அந்த கட்சியின் இன்னொரு யோக்கியர் அருண் ஜெட்லியிடம், தொலைக்காட்சி ஊடகம் கேள்வி கேட்டதற்கு, ஜெட்லி சொல்கிறார்; மோடிக்கு ராமர் படம் வைத்தது தெரிந்திருக்காது; அந்த பகுதி நிர்வாகி கள் வைத்திருப்பார்கள்;

இனிமேல், இதுபோல் செய்யாதீர்கள் என அறிவு றுத்தப்பட்டதாக சொல்லியிருக்கிறார், சட்ட நிபுணர் என கூறப்படும் ஜெட்லி. மத சின்னங்களை, தேர்தல் நேரத் தில் பயன்படுத்தக்கூடாது என்ற தேர் தல் விதிகூட தெரியாமலா இருக் கிறார்கள், பிரதமர் கனவு காணும் மோடியும், அவருக்கு துணை நிற்கும் ஜெட்லியும். இவ்வாறு மதச் சின்னங்களை பயன்படுத்துவது தவறுதானே என செய்தியாளர் ஜெட்லியிடம் கேட் கிறார். அதற்கு, ஜெட்லி, இது தவறு என்று சொல்ல முடியாது; பிழையான முடிவு என்று வேண்டுமானால் சொல் லலாம் என்கிறார். சட்டம் படித்தவர், வார்த்தை விளையாட்டைக் காட்டுகிறார்.

1992-இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது, அதில் கலந்துகொண்ட அத்வானி மற்றும் பாஜக தலைவர்கள், எங்களை மீறி இந்த செயல் நடந்து விட்டது என்றுதானே கூறினார்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம், மசூதி இடிப்பில் கலந்து கொண்ட கரசேவர்களின் பொறுமை யின்மையை கணக்கில் எடுக்காதது பிழைதான்; ஆனால், அதற்கு அந்த இயக்கத்தவர் பொறுப்பு என கூற முடியாது என்று சொன்னவர் தான் அத்வானி (இந்தியன் எக்ஸ்பிரஸ் 13.3.2011).

இப்போது, ஜெட்லியும் பிழை என்கிறார். கலவரம் நடைபெற்ற முசாபர் நகர் பகுதியில் ஜாட் மக்களைப் பார்த்து, நீங்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று பேசிய மோடியின் வலது கரம், அமீத் ஷாவை, உ.பி.யில் எங்கும் பேசக்கூடாது என தடைவிதித்த தேர்தல் ஆணையம், பின்னர் அதனை தளர்த்தியது.

இப் போது, அதே, அமீத் ஷா, ஆசாம்கர் தொகுதியில் பேசும் போது, இந்த பகுதிதான், தீவிரவாதிகளின் தளம் என முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஆசாம்கர் பற்றி பேசுகிறார். ஆக, மோடி அலை எங்கும் வீச வில்லை என்பது தெரிந்ததும், குஜராத் வளர்ச்சி என்ற கோஷம் வீக்கம்தான் என்பது தோலுரிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளதை, தேர்தல் ஆணையம் தடுக்க தவறிவிட்டது என்ற குற்றச் சாட்டை முன்வைக்கிறார் மோடி.

இப்போது இறுதிக்கட்டமாக, ராம ரையும், ராமராஜ்யத்தையும், பயன் படுத்தி, தனது சுயரூபத்தை காட்டி யுள்ளார் மோடி. இதில் மிக முக்கிய மான விஷயம் எதுவெனில், பைசா பாத் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் லாலுசிங், பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். ஏற்கனவே, முசாபர் நகர் தொகுதி யில் அந்த கலவரத்துக் காரணமானவர் தான் பாஜக வேட்பாளர்;

2002 குஜராத் கலவரம் நடைபெற்றபோது, முதல்வ ராக இருந்தவர் மோடி; உள்துறை அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. இப்போது சொல்லுங்கள், இவர் கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும் என்று?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79800.html#ixzz30zHE1e9R

தமிழ் ஓவியா said...


மே 6: உலக ஆஸ்துமா தினம்



நுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச குழாயின் உட்பகுதி வீங்கிக் கொள்வதால் ஏற் படும் குறைபாடே ஆஸ்துமா.

இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இவர்களின் சுவாசப் பாதையால் சிறிய அளவிலான மாசுபாடைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. ஆஸ்துமா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக, மே மாதத்தின் முதல் செவ்வாய் உலக ஆஸ் துமா தினமாக (மே 6ஆம் தேதி) கடைப்பிடிக்கப்படு கிறது.

உங்கள் ஆஸ்துமாவை, உங்களால் தடுக்க முடியும் என்பது இந்தாண்டு இத் தினத்தின் மய்யக்கருத்து. 1998இல் இத்தினம் தொடங் கப்பட்டது.

காற்றில் இருக்கும் புகை, மாசு மற்றும் சில வகை உணவுகள் கூட ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமையாக மாறும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்துமா நோயாளிகள் அதற் கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு உடற் பயிற்சியில் ஈடுபடுவது கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். தும்மல், இருமல், சுவாசித்த லில் ஏற்படும் சிரமம் ஆஸ் துமாவின் அறிகுறிகள். இவை இருந்தால், முன்னரே கண்ட றிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இதில் ஏற்படும் தாமதம் நுரையீ ரலை சேதப்படுத்திவிடும். சுற்றுச்சூழல் சீர்கேடுதான் ஆஸ்துமாவுக்கு பெரிதும் காரணம்.

ஆஸ்துமாவுக்கு இப் போது இன்ஹேலர்கள் பரிந் துரைக்கப்படுகின்றன.

இது நுகரப்படுவதால் மருந்து நேர டியாக சுவாசப் பாதைக்கு சென்று சீர் செய்கிறது.

2025 இல் உலகில் 40 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப் படுவர் என கணிக்கப்பட்டு உள்ளது.

உலகில் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவினால் இறக்கிறார். அதில் 90 சதவீத மரணங்கள் தவிர்க்க கூடியவை. விழிப்புணர்வு இல்லா ததும், முறையான சிகிச்சை எடுக்காததும் மரணத்தை ஏற்படுத்துகிறது.

சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமாவுக்கு சூரிய ஒளியை அரிய மருந்தாக மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.

இதிலிருந்து வைட் டமின் டி கிடைக்கிறது.

Read more: http://viduthalai.in/page-3/79814.html#ixzz30zHdTsSz

தமிழ் ஓவியா said...


மனித நேயத்தைப் பரப்பி எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்தவர் தமிழறிஞர் கால்டுவெல் - தமிழர் தலைவர் புகழாரம் -


சென்னை, மே 7-தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதா வது:-

தமிழுக்குத் தொண்டு செய்த தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் இலக் கியக் கர்த்தாக்கள், தமிழ்க் கவிஞர்கள் இப்படிப்பட்ட வர்கள் போலவே வெளி நாட்டு அறிஞர்கள் அதிலும் குறிப்பாக கிறித்துவ மதத் தொண்டு செய்வதற்காக வந்த பலரும் தமிழை ஆய்வு செய்து தமிழுக்கு உரிய இடத்தை உலகளாவிய நிலையிலே அவர்களுடைய மொழிகளிலே கொண்டு சென்ற பெருமை உடையவர் களாக என்றென்றைக்கும் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களிலே முன்னோடியாகத் திகழக்கூடியவர் பாதிரியார் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். திராவிடமொழிக்குடும்பம் என்கிற மிகப்பெரிய அள விற்கு ஒப்பியல் மொழி இலக் கணத்தை அவர்கள் சிறப்பாக அமைத்து அதன்மூலம் திரா விடர் மொழிகள் என்பது ஒரு குடும்பம். அதிலே தமிழ் அதற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி உள்ள மூத்த முதன்மையான மொழி என்ற உணர்வினை அவர்கள் அடித்தளம் இட்டவர்கள்.

திராவிட நாகரிகம், திராவிட பண்பாடு என்பது மொழி அடிப்படையில் உருவான ஒரு சிறப்பான தனித்தன்மை யானது என் பதை அவர்கள் காட்டி இருக் கிறார்கள். அப் படிப்பட்ட பாதிரியார் இராபர்ட் கால்டு வெல் அவர்களை ஒரு மத வாதியாக பார்க்காமல் மனித நேயத்தைப் பரப்பி இங்கே எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்த பண்பும், தொண்டும் அவர் களுடைய நிலைக்கு உண்டு.

அந்த வகையிலே இரு நூற்றாண்டுவிழா என்பது சிறப்பாக திராவிடர் இயக்கங் களாலே கொண்டாடப்படு வது மகிழ்ச்சிக்கும் பெரு மைக்கும் உரியது.

திராவிடர் கழகத்தின் சார்பிலே வருகிற 12ஆம் தேதி அன்று பெரியார் திடலில் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் சார்பில் கார்டு வெல்லின் இருநூறாவது நூற்றாண்டும், நம்முடைய காலத்திலே வாழ்ந்த பெரிய இலக்கிய மேதை, தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புத் தாக்கம் தந்து பலரை உரு வாக்குவதற்கு காரணமான பிரசன்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா வும் நடைபெற இருக்கின் றது, அவர்கள் என்றைக்கும் மறைவ தில்லை, அவர்கள் சிறப்பாக வாழுகின்றவர் கள்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல தமிழ்த் தொண்டன் சாவதில்லை. தமி ழுக்குத் தொண்டு செய்பவர் கள் என்றைக்கும் வாழுகி றார்கள். கால்டுவெல் போன்ற அறிஞர்கள் என்றைக்கும், இன்றைக்கும் நம்மிடையே வாழுகிறார்கள்.

- இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79857.html#ixzz314jY6b00

தமிழ் ஓவியா said...


முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, மே. 7- முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு தவறியது. மேலும் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கேரள அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி யது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடையும் என்றும் விஷமப் பிரச்சாரம் செய்து வந்தது. இதுமட்டுமின்றி அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்று கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டது.

இந்த தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேறி யது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த குழுவினர் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.

அந்த அறிக்கையை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டதுடன் புதிய குழுவை நியமிக்கவும் நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. ஆனால் கேரள அரசின் இந்த வாதத் திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் நீதிபதிகள் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும், அணை பலவீனமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதுமட்டுமன்றி கேரள அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/79864.html#ixzz314jlOXOD

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ்


பருய்பூர், மே 7- நாட்டின் பிரதமராக மோடி தேர்ந் தெடுக்கப்பட்டால் நாடு பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூ னிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாச் சார்ஜி கூறி யுள்ளார்.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஆனால், நாங்கள் இது பேராபத்தை தரும் என கூறி வருகின்றோம். மோடியை பிரதமராக தேர்ந் தெடுப்பதற்கு மக்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. எனவே மோடியை நம்பாதீர்கள் என்று புத்ததேவ் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் துவங்கியவுடன் முத லில் மோடியை பற்றி பேசாத மம்தா, அவருக்கு பூச்செண்டு அனுப்பியுள்ளர்.

தற்போது வரை மம்தா அதை தவறு என ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள புத்ததேவ் தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஹெலி காப்டரில் செல்லும் மம்தாவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/79853.html#ixzz314ke0J00

தமிழ் ஓவியா said...


மோடியின் ராமன் பேச்சும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையும்!


மோடியின் ராமன் பேச்சு: அறிக்கை கோருகிறது தேர்தல் ஆணையம் என்று ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்துப் பேசிய பொதுக்கூட்டத்தில் மோடி தெரிவித்த கருத்துதான் சர்ச்சைக்குக் காரணம்.

தனது பேச்சில் ராமன் என்ற சொல்லை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்; ராமன் பிறந்த மண்ணிலிருந்து பேசுகிறேன் - காங்கிரசுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவர் பேசியதோடு மட்டுமல்ல, அந்தப் பொதுக் கூட்ட மேடையின் பின்புறத்தில் ராமன் உருவம் பல வண்ணத்தில் தீட்டப்பட்ட பதாகையும் வைக்கப்பட்டு இருந்தது.
இதுதான் இப்பொழுது பிரச்சினைக்குக் காரணமாகும். தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதத்தைப் புகுத்தியதுதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

மக்கள் மத்தியில் அவர்களுக்குத் தேவையான திட்டங்களை உருப்படியாக வெளிப்படுத்த முடியாத போது - அதற்கான சிந்தனையோட்டம் இல்லாத கையறு நிலையில், பி.ஜே.பி. மக்களின் மலிவான நம்பிக்கையை - பக்தியைக் கையில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியதை முதன்மைப்படுத்தாமல், தேர்தல் ஆணையம் நியாயமாக - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு இருக்கவேண்டும்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளதே - அது இந்திய அரசமைப் புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமான ஒன்றல்லவா! அதன்மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றுமில்லையே!

பாபர் மசூதி உடைப்புத் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வாக்குறுதியைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுகூட நீதிமன்ற அவமதிப்பாகாதா?

இதே உத்தரப்பிரதேசத்தில் இதே மோடி - உத்தரப் பிரதேசத்தின் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பி.ஜே.பி.,க்குத் தாருங்கள் - ராமன் கோவில் கண்டிப்பாகக் கட்டித் தருகிறோம் என்று சொன்னாரா - இல்லையா?

அப்பொழுதெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏன்?

மகாராட்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதவாதத்தை எடுத்து வைத்த காரணத்தால், வெற்றி பெற்றது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது உண்டே!

மதச்சார்பற்ற கொள்கை எங்கள் கட்சிக்கு உறுதியாக உண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டே, ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று பி.ஜே.பி.யின் தலைவர்களால் பேசப் பட்டு வருகின்றது. இது எப்படியென்றே தெரியவில்லை. தங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகள்பற்றிச் சற்றும் பி.ஜே.பி. கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லலாமா?

அதேநேரத்தில், பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்துள்ள அந்த மதச்சார்பற்ற கட்சிகளும் - பி.ஜே.பி.யின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்துக் கருத்தும் சொல்லவில்லை என்பது மிகப் பரிதாபமே!

பதவிப் பசி வந்தவர்கள் கையில் எது கிடைத்தாலும் உண்பார்கள் போலும்!

இந்திய அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டு ராமன் கோவில் கட்டுவார்களாம் - அது எப்படி என்று தான் புரியவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி இத்தகு செயலுக்கு இடம் அளிக்கிறது?

மதச்சார்பற்ற தன்மை என்று அரசமைப்புச் சட்டம் கூறியதற்குப் பொருள்தான் என்ன?

இன்னொன்றையும் இந்த இடத்தில் கவனிக்கத் தவறக்கூடாது. ராமன் கோவில் கட்டுவது என்பதுபோன்ற பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது - இது மக்களின் உணர்வு சார்ந்த பிரச்சினை என்று பி.ஜே.பி. யினர் சொல்லிக் கொண்டும் வருகிறார்கள்.

இந்த நிலையில், இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கும் வந்து விட்டால், அரசமைப்புச் சட்டம் நீதிமன்றம் இவற்றை யெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கக் கூடியவர்கள் அல்லர் என்கிற முறையில்தானே செயல்படுவார்கள்?

மதப் பிரச்சினையைக் கைகளில் எடுத்துக்கொண்டுள்ள கட்சிகள், தேர்தலில் போட்டியிடக் கூடாது - முடியாது என்கிற அளவில் கடுமையான அளவில் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதனைக் கறாராக செயல்படுத்தா தவரை மோடிகளும், மோகன்பகவத்துகளும் எந்த எல்லையைத் தாண்டியும் எகிறிக் குதிப்பவர்கள் என்பதைக் கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளலாம்.

அடிப்படையை மறந்துவிட்டு, ஓடி விளையாடு பாப்பா என்ற முறையில், தேர்தல் ஆணையம் பெரிய பிரச்சினைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து விட்டு, சின்னஞ்சிறிய புகார்களை விசாரிப்பதாகக் கூறுவதெல்லாம் அசல் ஏமாற்று வேலையே!

Read more: http://viduthalai.in/page-2/79867.html#ixzz314l0Sajy

தமிழ் ஓவியா said...


மதம் பயன்படாது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. - (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/79866.html#ixzz314l7lShV

தமிழ் ஓவியா said...


எந்தப் பதுங்குக் குழியில் அப்போது இருந்தீர்கள் மோடிஜி!

- குடந்தை கருணா

தன்னை பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தில் பிறந்ததால், விமர்சித்து விட் டார் என்று பிரியங்கா மீது குற்றம் சுமத்தி உத்தரபிரதேசம் தோமாரியா கஞ்சில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசி உள்ளார். பிரியங்கா சொன்னது, இவர்கள் எனது தந்தையை விமர்சிக்கிறார்கள்; அமேதி மக்கள் இந்த கீழ்தரமான அரசியலுக்கு தக்க பதிலடி கொடுப் பார்கள் என பேசினார். ஆனால், மோடி, இதனை, ஜாதி சாயம் பூசி, தான் பிற்படுத்தப்பட்டவன் என்ப தால், தன்னை தாக்குவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன், ராமன் படத்தை வைத்து, ராம ராஜ்யம் அமைக்க வாக்களியுங்கள் என மதத் தின் பெயரால், வாக்கு கேட்ட மோடி, இப்போது, ஜாதியைப் பற்றி பேசு கிறார்.

சரி; ராம ராஜ்யத்தில், இந்த பிற் படுத்தப்பட்ட சூத்திர மக்களுக்கு என்ன கதி என மோடிக்குத் தெரியுமா? சம்பூகன் தவம் இருந்தான் என்பதற் காக, தர்மம் கெட்டுவிட்டது எனக் கூறி, சம்பூகன் தலை வெட்டப் பட் டது என ராமாயணத்தில் கூறப்பட் டுள்ளதே, அதைப் பற்றி தெரியுமா, மோடிக்கு?

அந்த ராமாயணத்தையும், ராம னையும் தலையில் வைத்து வன்முறை ஆட்டம் ஆடும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரத்தில் பயிற்சி பெற்ற மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?

கோல்வார்க்கரின் சிந்தனையின் தொகுப்பில், சூத்திரர்களுக்கு என்ன நிலை என்று சொல்லப்பட்டிருக் கிறதே; அதனை இத்தனை காலம் ஏற்றுக்கொண்டு, அந்த ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்ததை பெருமையாக கருதும் மோடி சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?

குஜராத்தில் நான்கு முறை முதல் வராக இருந்த மாதவ் சிங் சோலங் கியின் ஆட்சியில் 1980-களில், கொண்டு வரப்பட்ட இட ஒதுக் கீட்டை எதிர்த்து நடத்தப்பட்ட இயக் கத்தில் தீவிரமாக இருந்த மோடி இப் போது சொல்கிறார், தான் பிற்படுத் தப்பட்டவன் என்று?

மண்டல் குழு பரிந்துரையை வி.பி. சிங் அமல்படுத்தியதை தொடர்ந்து, வட நாட்டில், இட ஒதுக்கீடு எதிர்ப் பாளர்களால் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிற்படுத்தப்பட்ட மனிதர் மோடி எந்த பதுங்கு குழியில் ஒளிந்திருந்தார்?

வி.பி.சிங்கிற்கு எதிராக ரத யாத் திரை என்ற பெயரில் சமூக அநீதித் தீயை அத்வானி கொளுத்தியபோது, ரதத்திற்கு எண்ணெய் விட்ட மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?

2005 இல் மத்திய அரசில் அர்ஜூன் சிங், கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது, எந்த ஆதரவும் தராத மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?

சமூக நீதியின் எந்த உணர்வும் இல்லாதவர்; அதற்கு எதிரான தத் துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை பெருமையாக கருதுபவர்; இப் போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று.

பிற்படுத்தப்பட்ட மக்கள், மோடியின் இந்த மோசடிப்பேச்சை நிச்சயம் நிராகரிப்பார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/79872.html#ixzz314lEjMLu

தமிழ் ஓவியா said...


மூடத் தனத்தில் கிராம மக்கள்

மூடத் தனத்தில் கிராம மக்கள்
மணப்பாறையில் மழை வேண்டி
கழுதைக்கும் கழுதைக்கும் திருமணமாம்!

திருச்சி, மே 7- திருச்சி மாவட்டம் மணப்பாறை யை அடுத்துள்ள வையம் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் கடந்த 4 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில் லையாம். இதனால் அக் கிராமத்தில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளதாம். இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற் காக கழுதைக்கும், கழுதைக் கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் இப்படி ஒரு நம்பிக்கையை மூடத்தனமாக நம்பி, அக்கிராம மக்கள் வெகு சிறப்பாக பத்திரிகை அடித்து, விருந்து வைத்து தடபுலாக இத்திருமணத்தை நேற்று முன்தினம் நடத்தியுள்ளனர்.

மனிதர்களுக்கு நடத்தப் படும் திருமணத்தை போன்று கழுதைக்கும், கழுதைக்கும் இத் திருமணத்தை நடத்தியுள் ளனர். சாதாரணமாகவே பருவ மழை பொய்த்து போய் விட்டது என்பது அனை வரும் அறிந்ததே. உலக மயமாக்கலுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் முன் னேற வாய்ப்பாக வெளி நாட்டு மூலதனங்களை முன்னிறுத்தி ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் எல்லாம் வானு யர்ந்த கட்டடங்களாக மாறி விட்டன. இந்த சூழ்நிலை யில் விவசாயத்தைப் பாது காக்க அறிவியலை நம்பி, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடாமல் மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற மூடநம்பிக்கை காரி யங்களில் ஈடுபட்டு வருவது, வெட்கப்பட வேண்டிய விசயம்.

சாதாரண மக்களே அறியாமையின் காரணமாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசே மூடத்தனத்தின் சாக்க டையில் மூழ்கியுள்ளது என் பதுதான் உண்மை. அண் மையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அறநிலையத்துறை கோவில் களில் வருணஜபம் நடத்தும் படி உத்தரவே பிறக்கப் பட்டு, அதன்படி அனைத்துக் கோவில்களிலும் யாகம் நடத்தினார்கள். மழை வந்ததா? என்றால் இல்லை!

தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இதுபோன்ற மூட நம்பிக்கை காரியங்களில் ஈடுபடும் மக்களை தடுக்கவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-3/79848.html#ixzz314lYimYV