Search This Blog

15.5.14

கடவுள் நம்பிக்கையை விட தன்னம்பிக்கை அதிகம் -ஜப்பானியர்களைப் பாரீர்


தினம் ஒரு தகவல் பகுதியில் நாள்தோறும் வெளியிடும் தினத்தந்தியில் ஒரு தகவல் வெளி யாகியுள்ளது.

ஜப்பானில் கோவில்களை அரிதாகத்தான் பார்க்க முடியும். நாங்கள் வருடத்துக்கு ஒருமுறை புது வருடம் பிறக்கும் போதுதான் கோவிலுக்குச் செல்வோம்.  மற்றபடி கோவிலுக்குச் சென்று பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பது கிடை யாது. கடவுள் நம்பிக்கை யைவிட, எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் என்கிறார்கள் ஜப்பானியர்கள் (தகவல் அனுப்பி உதவியவர்: சீ.இலட்சுமி பதி, தாம்பரம்)

இரண்டாம் உலகப் போரின்போது அணு குண்டு வீச்சுக்கு ஆளா னது ஜப்பான். ஹீரோ ஷிமா, நாகசாகி நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

70 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பான் உலகளவில் தலை நிமிர்ந்து இன்று நிற்பதற்குக் காரணம் தினத்தந்தி வெளியிட்ட அந்தத் தகவல்தான்.

கடவுள் நம்பிக்கை யைவிட தன்னம்பிக்கை அதிகம் என்று ஜப்பானி யர்கள் கருதுவதும், செயல்படுவதும் தான் அதன் வளர்ச்சிக்குக் கார ணமாகும்.

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்று திண் ணைத் தூங்கி வேதாந்தங் களைப் பேசிக் கொண்டி ருந்தால், ஜப்பான் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டு இருக்குமா?

ஒரு நாளில் இராகு காலம், எமகண்டம், குளிகை என்றுகூறி நான் கரை மணிநேரத்தைப் பாழ்படுத்தும் இந்து மத இந்தியா எங்கே? கோவி லுக்குச் சென்று நேரத்தை யும், பணத்தையும் செல வழிக்க மறுக்கும் ஜப்பான் எங்கே?

இந்து மதத்தில் ஒவ் வொரு நாளுக்கும் சாங்கியம் உண்டு; விரதங்கள் உண்டு; மாதம் தவறி னாலும் பண்டிகைகள் தவறாது; கோவில் க்ஷேத் திராடனம், புண்ணிய முழுக்குகள் என்று காலத் தையும், பொருளையும், உடல்நலனையும் நாசப் படுத்துவது கொஞ்சமா நஞ்சமா?

அரசுக்குக் கொடுக் கும் வரியைவிட புரோ கிதனுக்கும், அர்ச்சகனுக் கும் கொடுக்கும் தட்ச ணைகள்தானே இங்கு அதிகம். செத்த பிறகும் திதி என்ற பெயரால் புரோகிதப் புடுங்கல்! சுரண்டலின் மறுபெயர் தான் இந்து மதமும் அதன் சடங்கு முறைகளும்.

ஜப்பானியர் என்றால் குள்ளர்கள் என்பதைக் கூட விஞ்ஞான வளர்ச்சி யால் மாற்றி அமைத்து விட்டார்களே!

ஜப்பானைப் பார்த்தாவது குள்ளத்தனமான புத்தியைத் தூக்கி எறிந்து, நிமிர்ந்த அறிவியலைப் பின்பற்றக் கூடாதா?

வாழ்க பெரியார்!

---------------------------- மயிலாடன் அவர்கள் 14-05-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

18 comments:

தமிழ் ஓவியா said...

மகாராஷ்டிராவில் கொடூரம்: உயர்ஜாதி மாணவியிடம் பேசியதால் தாழ்த்தப்பட்ட மாணவர் அடித்துக் கொலையாம்!

அகமத்நகர், மே 14- மகா ராஷ்டிர மாநிலத்தில் உயர் ஜாதி மாணவியிடம் பேசிய தால் தாழ்த்தப்பட்ட மாண வர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரி வித்து மார்க்சிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட் டத்தை மாநிலம் முழு வதும் நடத்தியது. இந்தக் கொடூரம் மேலும் தொட ராமல் தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ளது கார்டா கிராமம். இந்தக் கிராமத்தில் மொத் தம் 15 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இதில் 1000 பேர் தாழ்த்தப்பட்ட மக் கள். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி கார்டா கிராமத்துக்கு வந்தனர். இவர்கள் கிராமத்தை சுற்றி உள்ள உயர் ஜாதியினருக்கு சொந்தமான வானம் பார்த்த விவசாய நிலத்தில் விவசா யக் கூலி தொழிலாளர்க ளாக வேலைபார்த்து வரு கிறார்கள்.

இதனால் உயர் ஜாதியினர் தலித் மக்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்தனர். பிழைக்க வேறு வழி தெரியாததால் தலித் மக்களும், உயர்ஜாதியின ருக்கு கட்டுப்பட்டு வாழ் ந்து வருகின்றார்கள்.இந்த நிலையில் கார்டா கிரா மத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த ராஜூ ஆஜ் என்பவரின் மகன் நிதின் (வயது 17). இவர் வீட்டுக்கு எதிரே உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரும் 11 ஆம் வகுப்பு படிக்கும் உயர் ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணும் நண்பர்களாக பழகி வந்த னர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி காலை இவர் சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு சென்றார். பின் னர் நிதினும், பெண் தோழி யும் பள்ளிக் கட்டடத் துக்குப் பின்னால் நின்று பேசிக்கொண்டு இருந்த னர். இதை அந்தபெண் ணின் சகோதரர் சச்சின் கோல்கர் பார்த்து விட்டார். உடனே தனது நண்பர்கள் சிலரை சச்சின் அழைத்து வந்து நிதினை பயங்கர மாக தாக்கினார். இத னால் வலி தாங்காமல் நிதின் பலத்த சத்தத்துடன் அலறினார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த தலைமை ஆசி ரியர் மற்றும் ஆசிரியர்கள் நிதினை உயர் ஜாதி மாண வர்கள் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தாக் குவதைத் தடுப்பதற்குப் பதிலாக ஆசிரியர்கள், பள் ளியில் சண்டை போடக் கூடாது.

வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். இத னால் துணிச்சல் அடைந்த அந்த மாணவர்கள் நிதினை அருகில் உள்ள சச்சின் மாமா சேஷ்ராவ் செங்கல் சூளைக்கு இழுத்துச் சென் றனர்.

அங்கு அவர்கள் நிதினை சுத்தியலாலும், இரும்புக் கம்பியாலும் மீண்டும் தாக் கத் தொடங்கினர். 4 மணி நேரம்தொடர்ந்து தாக்கிய தில் நிதின் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் நிதினின் உடலை அருகில் காட்டு பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...

அங்குள்ள மரத்தில் நிதின் உடலை தூக்கில் தொங்க விட்டு ஓடி விட்டனர். நிதினை காணாமல் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில் நிதினின் தாய் செங்கல் சூளைக்கு சென்றார்.

அப்போது அங்கு இருந்த சச்சின் மாமா சேஷ்ராவ் நிதினின் தாயிடம் நிதினை நான் அடித்தேன். அவன் மாலை வீட்டுக்கு வருவான் என்று திமிராக கூறி விரட்டி விட்டார். கொலைச் சம்பவம் குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர், கார்டா கிராமத்துக்குச் சென்று நிதின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை வழக்கு தொடர்பாக சச்சின் உள்பட உயர் ஜாதியை சேர்ந்த 12 பேர் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.தலித் மாணவரை உயர்ஜாதியினர் கொடூரமாகத் தாக்கி அடித்து கொன்றது மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து 5 நாள்கள் பிறகு அகமத் நகரைச் சேர்ந்த அமைச்சர் மதுகர் பிச்சாத் நேரில் சென்று பார்த்தார்.

ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த அவர் தனது தாமதத்துக்கு நாடாளுமன்றத் தேர்தலை சாக்காக தெரிவித்தார். ஆனால் மகாராஷ்டிர மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் டாக்டர் அசோக் தாவ்லே தலைமையில் ஒரு குழுவினர் உடனே கார்டா கிராமத்துக்கு சென்று நிதினின் தாய், தந்தை மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் நிதின் படித்த பள்ளிக்கூடத்துக்குச் சென்று நிதின் தாக்கப்பட்டதை தடுக்கத் தவறிய தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தாழ்த்தப்பட்ட மாணவர் நிதின்படு கொலையைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி மும்பை, புனே உள்ளிட்ட மராட்டிய மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. பின்னர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்கள் கொடுத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80238.html#ixzz31kKjeETh

தமிழ் ஓவியா said...


நரகம் ஒரு சூழ்ச்சி


நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள,- அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள, சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

- (விடுதலை, 29.2.1948)

Read more: http://viduthalai.in/page-2/80215.html#ixzz31kL7ze4d

தமிழ் ஓவியா said...


பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

- குடந்தை கருணா

கருத்துக்கணிப்போ, திணிப்போ? எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஊடகங் களின் முடிவுகள் ஒன்றை தெளிவு படுத்தி உள்ளன. அது என்ன?

பாஜக அணியை உருவாக்கிய தும், அதில் இணைந்த கட்சிகள், பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக என எல்லா காக்காக் களும் ஒரே விஷயத்தை ஊர் தோறும் கரைந்தன. அது என்ன?

அதாவது, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்துவ தற்காக இந்தக் கூட்டணி அமைத்த தாகக்கூறினார்கள். மோடி அலை வேறு தமிழ்நாட்டில் வீசுவதாக சொன்னார்கள். மோடி டீக்கடை, சோப்புக்கடை, மீன் கடை இதெல் லாம் வேறு ஆரம்பித்தார்கள். இல.கணேசய்யரையே மீன் விற்க விட்டார்கள் என்றால் பாருங் களேன்.

இப்போது, இந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் பாஜக அணிக்கு நான்கு அல்லது அய்ந்து இடங் களுக்குமேல் தேறாது என கணித் துள்ளார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? மீதம் உள்ள 35 இடங்களிலும், திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதுதானே!

ஆக, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளைத் தாண்டி அரசியல் கிடையாது என்பதைத் தான் இந்தக் கருத்துக் கணிப்பு களோ, திணிப்புகளோ சொல்ல வருகின்றன.

இந்த இரண்டு கட்சிகளிடமும், நாளை ஆதரவு கேட்டு மோடி கூட் டம் வராது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? என்பதை, பாஜகவில் உள்ள, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக கூற வேண்டும். சொல்வார்களா? பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

Read more: http://viduthalai.in/page-2/80223.html#ixzz31kLH2XIj

தமிழ் ஓவியா said...

அடடே, என்னே ஞானோதயம்!

தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் அமைதியாக நடக்க பொது மக்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதே போல பணம் வாங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

- பிரவீன்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு

அடடே!, என்ன ஞானோ தயம்! புத்தர் பூர்ணிமாவை யொட்டி உதிர்த்த ஒளி முத்து இது! மக்கள் எல்லா ரும் நல்லபடியாக நடப்பார் களேயானால் இந்தத் தேர் தல் ஆணையம், காவல் துறை ஏன் அரசும்கூட தேவையில்லையே!

Read more: http://viduthalai.in/e-paper/80311.html#ixzz31px6OxT1

தமிழ் ஓவியா said...


புத்தரின் போதனைகளின்படி அரசு ஆட்சி புரிகிறதா? : இலங்கை வடக்கு மாகாண உறுப்பினர் கேள்வி


நல்லூர், மே 15- வடக்கின் சோகங்களை அனுசரிக்க விடாமல், அரசு தமது வெற்றியை, கட்டா யத்துடன் கொண்டாட வேண்டுமென நிர்ப்பந்தித் துக் கொண்டிருப்பது தான் இன்றைய நாட்டின் நிலைமை என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், நல்லூர் தெற்கு சன சமூக நிலை யத்தின் 65ஆவது ஆண்டு விழாவில் பேசும்போது தெரிவித்தார். விழா யாழ்.மாநகரசபை சனசமூக நிலையங்களின் தலைவர் திரு.க.நாகேந்திரம் தலை மையில் இடம்பெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது, இன்று சிங்கள பவுத்தர் களின் புனித நாள். அமை தியாக தர்ம சிந்தனை களோடு வாழும் வழி முறையை உலகிற்கு வழங் கியதில் பவுத்தத்திற்கு முக் கிய இடம் உண்டு.

ஆனால். அதன் வழி வந்தவர்களாகத் தங்களைக்கூறிக் கொள் ளும் ஆட்சியாளர்கள் எவ் வாறு நடந்து வந்திருக்கின் றார்கள், எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைத் தான் நாங்கள் அனுபவ ரீதியாக கண்டு கொண்டி ருக்கின்றோம். கடந்த 66 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உண்மை யான பவுத்த சிந்தனைகளு டன் முற்று முழுதாக முரண்பட்டு வருகின்றன.

பவுத்த சிந்தனைகளை போதித்த புத்தபகவான் இன்று இருந்திருந்தால், தனது கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல் லும் ஆட்சியாளர்கள் செய் யும் அக்கிரமங்களைப் பார்த்து தானாகவே வெட் கித் தலைகுனிந்திருப்பார்.

இந்த மே மாதம் பவுத் தர்களுக்கு எவ்வாறு முக்கி யத்துவமானதோ, புனித மானதோ, அவ்வாறே தமி ழர்களாகிய எங்களுக்கும் மிகவும் புனிதமானதும், உணர்வு பூர்வமானதுமான மாதமாகும். அதுவும் இந்த வாரம் மிகவும் உணர்வு பூர்வமான வலி சுமந்த வாரமாகும். கடந்த இறுதிப் போரிலே இலட்சக்கணக் கில், கடற்கரை ஓரத்தில் மக்கள் கொன்று குவிக்கப் பட்டதொரு மாதமாகும்.

அதில் கொல்லப்பட்ட மற்றும், காயமடைந்த எமது மக்களின் உறவினர்கள் இன்று அவர்களை நினைத்து ஒருசொட்டு கண்ணீர் கூட விட முடியாதபடி, அர சாங்கம் அவர்களை அச் சுறுத்தி வருவதுடன், தெற்கில் எமது மக்களின் அவலங்களின் மேல் பெறப்பட்ட இராணுவ வெற்றியை முழக்கங்களு டன் கொண்டாடுவதுடன், பாதிக்கப்பட்ட எமது மக் களையும் அதைக் கொண் டாடுமாறு பலாத்காரமாக நிர்ப்பந்தித்து வருகின்றது.

இந்த விடயமானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு நிலை யாகும். இது பவுத்த மதம் கூறும் போதனைகளுக்கு எவ்வித்ததிலும் ஒவ்வாத ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர். மோகனதாஸ், யாழ். பல் கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர், எம். இளம்பிறையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80307.html#ixzz31pxFVWUn

தமிழ் ஓவியா said...


பாலாபிஷேகம் ஒரு கேடா?


சித்ரா பவுர்ணமியையொட்டி மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பெண்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். (மாலைமலர் 14.5.2014)

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டே குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா?

Read more: http://viduthalai.in/e-paper/80308.html#ixzz31pxNkttX

தமிழ் ஓவியா said...

கோவில் விழாவில் தகராறு

வலங்கைமான். மே. 15- வலங்கைமான் அருகே ஆண்டாங்கோவில் கிராமத் தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த தேர்த் திரு விழா நடந்தது. அப்போது ஆண்டாங்கோவில் கடை வீதியில் வெடி வெடித்த போது அங்கிருந்த ஒரு கட்சி கொடி மேடை சேதம் அடைந் ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாஞ் சேரி பகுதியினருக்கும் ஆண் டாங்கோவில் பகுதியில் வசிப்போருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற் பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பேசி சமாதானம் ஆகினர்.

இந்நிலையில் நேற்று இரவு கோவில் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அப்போது கட்சி மேடை சேதம் அடைந்தது தொடர்பாக பேசிய போது இருதரப்பினரிடையே தக ராறு ஏற்பட்டது. இதில் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 30), அன்பரசு (30) ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப் பட்டனர்.

இதனை தொடர்ந்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட் டது. அப்பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவம் ஏற் படாதவாறு பாப நாசம் டி.எஸ்.பி. சிவாஜி அருட் செல்வன் தலைமை யில் ஏராளமான காவல் துறை யினர் குவிக்கப்பட்டு நிலை மையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வலங்கைமான் தாசில்தார் வெங்கட்ராமன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஷ், மகேஷ், தங்க துரை உட்பட வருவாய் துறை அலுவலர் கள் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர் பாக வலங்கைமான போலீ சார் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி, ரகு, ஆறுமுகம், சதீஸ், மற்றொரு ஆறுமுகம், விவேக், சேட்டு, மகேந் திரன், சரவணன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விவாரணை மேற் கொண்டு உள்ளனர். இச் சம்பவத்தால் ஆண்டாங் கோவில் மற்றும் மாஞ் சேரியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயில் உண்டியல் கொள்ளை

தண்டையார்பேட்டை, மே 15- வண்ணாரப் பேட்டை, எம்சிஎம் கார் டன், முதல் தெருவில் சிறீ வேங் கட முடையான் கிருஷ்ணன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்ததும், பூசாரி ரவி கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை கோயிலை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 2 உண் டியல்களை உடைத்து அதி லிருந்த பணம், பூஜை அறையில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை சிலர் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுகுறித்து தண்டை யார்பேட்டை காவல் நிலை யத்தில் ரவி புகார் செய்தார். காவல் நிலைய ஆய்வாளர் தெய்வேந்திரன் சம்பவ இடத் துக்கு சென்று விசாரித்தார். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின் றனர்.

Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pzGhQlu

தமிழ் ஓவியா said...

எப்படி உருவானது ஸ்டெதாஸ் கோப்?

1816இல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் மருத்துவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள மருத்துவர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும்.

ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளை யாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப் பினான்.

இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனை யைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். பார்த்த லென்னக், 'இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே' என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.

இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். என்ன ஆச்சர்யம்... நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி.

இதை அடிப்படையாக வைத்து 1819 இல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப்! அதன் பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843 இல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது.

Read more: http://viduthalai.in/page-7/80276.html#ixzz31pzeITeg

தமிழ் ஓவியா said...

பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!

கோவில் விழாவில் தகராறு இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

காரைக்குடியில் கோவில் விழாவில் ஏற்பட்ட தகரா றில் 2 இளைஞர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி பர்மா காலனி அழகப்பா நகரில் பெரிச்சியம்மன் கோவில் திருவிழா நடை பெற்று வருகிறது. விழாவில் உரி யடிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று அதே பகுதியை சேர்ந்த சங்குப்பாண்டி என்பவர் உரிஅடித்தாராம்

அப்போது அவரை பாரி நகரைச் சேர்ந்த விஜயக்குமார் (வயது 24), வெங்கடேஷ் (26) ஆகி யோர் விசில் அடித்துகேலி செய்தனராம். இதில் ஆத் திரம் அடைந்த சங்குப் பாண்டி தனது நண்பர்கள் துரைப் பாண்டி, மணி கண்டன், காளி தாஸ், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமார், வெங்க டேஷ் ஆகியோரைத் தாக்கி கத்தியால் குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த இரு வரும் தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து சங்குப்பாண்டி, காளிதாஸ், ரமேஷ் ஆகி யோரை கைது செய்தார். துரைப் பாண்டி, மணிகண்டன் ஆகியோரை தேடி வருகிறார். கோவில் வழிபாடு தொடர்பாக மோதல்!

தம்மம்பட்டியை அடுத்த மேல்வாஞ்சாரை கிராமத்தில் ராமர் கோவில், பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக நடுவஞ்சாலை, பழமரத் தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது கோவில் பூசாரி கோவிலின் சாவியை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களி டையே வாக்குவாதம் ஏற் பட்டது. இந்த நிலையில் நடுவஞ்சாரை, பழமரத் தூர் ஆகிய கிராமங் களைச் சேர்ந்த சிலருக்கும், மேல் வாஞ்சாரை கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவரை யொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதில் சின்னக்குழந்தை, கோவிந்தன் உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். இதுதொடர்பாக தம் மம் பட்டி காவல்துறை யினர் 3 கிராமங்களையும் சேர்ந்த 15க்கும் மேற் பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vlyKuPo

தமிழ் ஓவியா said...

கோவில் விழாவில் பயங்கர மோதல்!

பழனி அருகே உள்ள இந்திராநகர் நாயக்கர் தோட்டம் பகுதியில் பிள் ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வுக்காக வரிவசூல் செய்த போது பிரபாகரன்(29) என்பவர் சென்ற வரு டத்தை விட இந்த வருடம் அதிகமாக வரி கேட் கிறீர்கள்.

எனவே நான் சென்ற வருடம் கொடுத்த வரிதான் கொடுப்பேன் என்றார். ஆனால் அவர்கள் வரி வாங் காமல் சென்று விட்டனர்.

இந்த நிலையில் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடந்த போது பிரபாகரன் தனது நண்பர்கள் ராஜா, பெரிய சாமி, சுரேஷ், முனி யாண்டி, நிலவாழன், காளீஸ்வரன் ஆகியோரு டன் சென்றார். அப்போது அவர்கள் குடி போதையில் கலை நிகழ்ச் சியை நடத்த விடாமலும், மைக்செட் மற்றும் டியூப் லைட்களை உடைத்த தாகவும் கூறப்படுகிறது.

இதனை ஆனந்தகுமார், வேலப்பன், செந்தில், ஆனந்தம், நடராஜ், குமார், மகுடீஸ் வரன் ஆகியோர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பிரபாகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையை சிகிச் சைக்காக சேர்க்கப்பட்ட னர். இதுகுறித்து பிரபா கரன் மற்றும் ஆனந்த குமார் ஆகியோர் தனித் தனியாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து லெட்சுமி வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vm5uFb6

தமிழ் ஓவியா said...

அழகரை தரிசிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று காலை இறங்கினார். அழகரை தரிசிக்க மதுரை மற்றும் விருதுநகர், சிவ கங்கை, போன்ற மாவட் டங்களில் இருந்து பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர்.

தல்லாகுளம் வந்த போது ஆத்திக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி, சூரியா (32) என்பவர் அழகரை தரிசிக்க சென்றார். அப்போது கூட் டத்தைப் பயன்படுத்தி யாரோ ஒரு ஆசாமி அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டான். இது குறித்து சூரியா காவல்துறை யில் புகார் செய்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vmCYeXc

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சாதி


பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும். - (விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/80348.html#ixzz31vmOnuX8

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை!


ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.
- பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை
- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை.
- குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்கு கேவலம் ஒரு புழுவை படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.
- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே
- வால்விச்மன்

கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணி போன்றது.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voXQLUs

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி...

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம். தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் (Barbarians) எனப் பொருள் கூறப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31vojo1cu

தமிழ் ஓவியா said...

பேய்க்கு திருமணம்!

பேய்க்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டால் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள். ஏனெனில் இங்கு இதுவும் நடக்கும் - இன்னும் கொஞ்சம் அதிகம் நடக்கும்.

ஜாம் நகரில் பத்தாண்டுகளுக்கு முன்பு சாரதா என்ற 16 வயது பெண்ணுக்கும் வாகனர் என்ற இடத்தைச் சேர்ந்த ஜகதீஸ் சந்திரா சோலங்கி என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் திருமணம் நடக்கும் முன்னரே மணமகள் ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார். இதனால் திருமணம் தடைபட்டு விட்டது. இத்துடன் கதை முடிந்து விட வில்லை. இனி மேல்தான் ஆரம்பமாகிறது.

இறந்து போன சாரதாவின் ஆத்மா சாந்தியடைய வில்லை. அவள் பேயாக அலைந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவள் குடும்பத்தினர் நம்பினார்கள்.

அவளுடைய தாயையும், சகோதரனையும் அவளுடைய பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாகவும் அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த பையனையே திருமணம் செய்துக் கொள்ள விரும்பு வதாகவும் தாயார், சகோதரன் மூலம் அந்த பேய் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்தப் பேயைக் கண்டு குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பீதியடைந்தார்கள்.

பேயை வீட்டை விட்டு விரட்டுவதற்கு திட்டமிட்டனர். பேய்க்கு திருமணம் நடத்தி வைத்தால் பேய் கணவனுடன் வீட்டை விட்டு ஓடிவிடும் என்று கருதி பேய் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டு சாரதாவின் சிலை செய்யப்பட்டு மண வறையில் சாரதாவின் சிலை அமர்த்தப்பட்டது. மணமகள் வேண்டுமா? எங்கு போவது? உடனே ஒரு கடவுளின் சிலை மணமகனாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மணமகள் வேறு யாரும் அல்ல. எல்லாம் வல்ல கோபிகா கிருஷ்ணன்தான். கிருஷ்ணனின் தோழர்களான மற்ற பொம்மைகளும் அலங்காரம் செய்யப்பட்டு மணவிழாவுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பார்ப்பனர்கள் மந்திரம் ஓதி சாரதா - கிருஷ்ணன் திருமணம் சிறப்பாக நடத்தப்பட்டது.

தடபுடலான விருந்தும் நடைபெற்றது. திருமணத்திற்கு ஏற்கெனவே சாரதாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்த ஜகதீஸ் சந்திர சோலங்கியும் வந்திருந்தார் - தன் மனைவியுடன்.

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voq0olX

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக, மேல்ஜாதி என்பவர்களுக்கும் கீழ்ஜாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக, இருந்துவரும் காரியமே தவிர, தீண்டாமை - மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை

Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vp8gHmM

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும் போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்கு மணனை விட்டு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின் றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்த பிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpVZwGW