Search This Blog

17.5.14

பார்ப்பனர்களின் அகங்காரம் அடங்கி விட்டதா?

பார்ப்பனர் ஒருவர் மனம் திறக்கிறார்!

(டி.டி கிருஷ்ணாமாச்சாரி தொழில் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, 6 வயது முதல் கர்நாடக இசையில்  பயிற்சி பெற்றவர். ஜே கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளியில் படித்து பின்னர் விவேகா னந்தா கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற கிருஷ்ணா, கர்நாடக இசை குறித்து  எழுதிய A Southern Music: The Karnatik Story  என்ற நூலில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடக சங்கீதத்தில் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக் கம் மற்றவர்களை ஒதுக்கி வைத்து இப்போது நடைமுறையில் உள்ள உயி ரற்ற கச்சேரி வடிவத்தை கொடுத்த வரலாற்றை விவரித்திருக் கிறார். இசை குறித்தும் சமூகம், அரசியல், கலாச் சாரம், மதம் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் தி ஹிந்து உட்பட பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன).

  • பெரும்பான்மை மக்கள் விரும்பும் இசையை விரும்ப மாட்டார்கள்; கர் நாடக இசையில் அதீத ஈடுபாடு கொள் வார்கள்.
  • எந்த ஒரு நிறுவனத்திலும் உச்ச இடத் திலேயே இவர்கள் இருப்பார்கள்.
  • வேதக் கலாச்சாரமே உயர்ந்தது என் பார்கள்.
  • தங்கள் கலாச்சாரத்தை அடுத்த தலை முறைக்கும் கொண்டு செல்வதிலேயே கருத்தாக இருப்பார்கள்.
  • அவர்கள் வீட்டுக்கு நண்பர்கள் நெருங்கிச் சென்றாலும் வந்தவர்கள் பார்ப்பனர் அல்லாதார் என்றால் தனியாக ஒரு தம்ளரில்தான் தண்ணீர் தருவார்கள் அல்லது கண்ணாடி பாத்திரத்தில்தான் தருவார்கள்; வந்த நண்பர் வெளியே போகும் வரை அந்தப் பாத்திரத்தை எடுக்க மாட்டார்கள்.
  • செல்பவர்கள் பெண்களாக இருந்தால் எக்காரணத்தை முன்னிட்டும் தங்கள் சமையல் அறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
இப்படி செய்பவர்கள் யார்? பார்ப் பனர்கள் தாம்!  இவ்வாறு சொல்பவர் யார் என்பதும் மிக மிக முக்கியமே!

இவரும் ஒரு பார்ப்பனர் என்று சொன்னால் ஆச்சரியமாகத் தானிருக்கும் - ஆனாலும் அவரும் ஒரு பார்ப்பனரே அவர் பெயர் டி.எம். கிருஷ்ணா - இசைக் கலைஞரும்கூட!

தி இந்து ஆங்கில ஏட்டில் (10.5.2014) The Big Paradox    என்ற தலைப்பில் எழு திய கட்டுரையில்தான் இவ்வளவுப் பட்டாங்கமாய் உடைத்தெறிந்து இருக்கிறார்.
தமிழ் இந்து ஏட்டிலும் (14.5.2014 பக்கம் 9) அவர் பேட்டி ஒன்று வெளி வந்துள்ளது. அதன் தலைப்பு என்ன தெரியுமா?

யாருமே பிராமணராகவோ தலித் தாகவோ பிறப்பதில்லை
ஒரு குழந்தை ஆணாகவோ, பெண் ணாகவோ தான் பிறக்கிறது. பிறகு அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது என்று பட்டுத் தெறித்தாற்போல பேசுகிறார்.

இந்த டி.எம். கிருஷ்ணா சொல்லு வதையே நாம் சொன்னால் பார்ப்பனர்கள், அவர்களின் ஊடகங்கள் தயாராக ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு இருப்பார்கள் வகுப்புத்துவேஷிகள் என்ற முத்திரை அச்சுதான் அது.
ஒரு பார்ப்பனராக இருந்ததால் - அந்த வட்டாரத்தில் புகுந்து புறப்பட்டு வந்ததால் ஒவ்வொன்றையும் துல்லியமாக அவரால் காண நேர்ந்திருக்கிறது. அவற்றை அப்பட்டமாக அள்ளிக் கொட்டுகிறார் - சாதாரணமாக தண்ணீர் வைக்கும் தம்ளர் வரை கவனித் திருக்கிறார்.

இது நமக்கொன்றும் புதிதல்ல - தெரிந்ததுதான் என்றாலும் ஒரு பார்ப்பனர் வாயால் இவை வெளிவரும்போது நமது கருத்து மேலும் வலிமை பெறுகிறது.
இந்த வகையில் தந்தை பெரியார் அவர்களுக்கே நேரிடையான அனுப வங்கள் உண்டு. இதோ தந்தை பெரியார்:

காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டதில்லை என்று நண்பர் ஒருவர் சொன்னார். என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது, நானும் உயர்திரு எஸ். சீனுவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரச்சார விஷயமாய் திண்டுக் கல்லுக்குப் போனபோது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட இலை அப்படியே இருக்க, அதன் பக்கத்தில்தான் இரவு இலையும் போடப்பட்டுச் சாப்பிட்டேன்.

மற்றொரு சமயம் தஞ்சை திருவேங் கடசாமிப் பிள்ளையுடன் காங்கிரஸ் பிரச்சாரமாகப் பெரிய குளத்திற்குப் போன போதும் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்பொழுது காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு, காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் இராத்திரி சாப் பாட்டுக்கும் இலைபோடப்பட்டு எறும்பு களும், பூச்சிகளும்  ஈக்களும் மொய்த்துக் கொண்டிருக்கவே சாப்பிட்டு வந்தோம் (குடிஅரசு 10.1.1948)

சீமான் வீட்டு மைந்தரான தந்தை பெரியாரையே பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் இந்த உச்சத்தில் அவமானப் படுத்தியிருக்கிறது!  பொது வாழ்வில் மானம் பாராதே! என்று தந்தை பெரியார் கொடுத்த இலக்கணம், அவர்தம் அனுபவக் கைப்பையில் இருந்தே வெளியில் வந்தி ருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மகாத்மா என்று சொல்லப்பட்ட காந்தி யாரேகூட இந்த அவமானச் சூட்டுக் கோலுக்கு ஆளானதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னைக்கு வந்தபோது எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்து இருந்தேன் (தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 520-521) என்று காந்தியார் கூறினாரே!
பார்ப்பனர்களின் ஜாதி ஆணவமும், மற்றவர்களை இழிவாகச் சிந்திக்கும் நடத்தும் மனோபாவம்தான் அவர்களை வெறுக்கும் நிலைக்குத் துரத்திச் சென்றது - செல்லுகிறது என்பதுதானே உண்மை.

இன்றைக்கும்கூட அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஒரு சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு ஒரு மனதாக சட்டம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் மமதையும், திமிரும் தானே அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

நீ சூத்திரன்! நீ சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லுவதில் உச்சிக் குடுமித்தனமும் தடித்த பூணூலும் தானே இறுமாப்புடன் கூத்தாடுகின்றன.

சமஸ்கிருதம்  தேவ பாஷை, தமிழ் நீஷப் பாஷை என்று எள்ளி நகையாடு வதில் குடி கொண்டிருக்கும் கொழுப்புக்கு என்ன பெயர்?

பூஜை வேளையில் சங்கராச்சாரியார் தமிழில் பேச மாட்டாராம். காரணம் தமிழ் நீஷப்பாஷையாம்; அப்படியே தப்பித் தவறித் தமிழில் பேச நேர்ந்துவிட்டால் அந்தத் தீட்டைக் கழிக்க மறுபடியும் ஒருமுறை ஸ்நானம் செய்வாராம்.
இன்றைக்கும் ஆண்டுக்கு ஒருமுறை பூணூலைப் புதுப்பிப்பதற்கே ஒரு நாளைக் கொண்டாடுகிறார்களே! ஆவணி அவிட்டம் என்று சொல்லிப் பூணூலைப் புதுப்பிப்பதன் தன்மை என்ன?

பூணூல் அணிவது என்ன சமத்து வத்தின் வெளிப்பாடா? நான் துவிஜாதி (இருபிறவியாளன்) பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் - நீ - கீழ் ஜாதி - சூத்திரன் பிர்மாவின் காலடியில் பிறந்தவன் என்று தம்பட்டம் அடிப்பதன் அடையாளம்தானே பூணூல் தரிப்பு!

நாங்கள் சொன்னால் நாசமாகப் போக! என்று சாபமிடும் பார்ப்பனர்களே, உங்கள் ஆத்து டி.எம். கிருஷ்ணா ஆங்கில ஏட்டிலும், தமிழ் ஏட்டிலும் பஷ்டமாகப் பார்ப்பனத் தன்மையைத் தோலுரித் துள்ளாரே - அதற்கு என்ன பதில்?


-------------------------------------------------------------------------------------------------------------------------
பார்ப்பனர்களின் அகங்காரம் அடங்கி விட்டதா? 

The Times of India (28.8.2010)  ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டு இருந்தது. Ignored by Political Parties and Denied Welfare, Large sections of A Traditionally Elite in Poverty Brahmins on the Margins, Fight for survival என்று தலைப்பிட்டிருந்தது.

படித்தவர்கள் என்று கருதப்படக் கூடிய பார்ப்பனர்கள் இன்றைக்கு ஏழ்மையில் உழலுகிறார்கள். அரசியல் கட்சிகளால் உதாசினப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

இதுபற்றி திருவாளர் சோ ராமசாமியிடம் கேள்வி எழுப்பிய போது Brahmins are not wanted in Tamilnadu Beyond that I Do not want to comment    என்று ஆதங்கத்தில் வெறுப்பேறிய சொற்களால் பதில் சொன்னார். பார்ப்பனர்கள் தமிழ் நாட்டு மக்களால் விரும்பப்படவில்லை; இதற்குமேல் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை என்று சலித்துக் கொண்டார். தன் பக்கம் நியாயம் ஏதாவது இருந்தால் எகிறிப் பேசி இருப்பார். இந்தப் பிரத்தியட்ச நிலையைத் தன் சாமர்த்தியமான வியாக்கியானத்தால் தூக்கி நிறுத் தக் கூடியவர்தான்; ஆனாலும் அதற்குரிய நியாயமான அறிவுப் பூர்வமான சங்கதிகள் சரக்குகள் அவர் வசம் இல்லை. எனவே தான் அவ்வாறு அவர் கூற நேர்ந்தது.
சோவின் இந்தப் பதிலைப்பற்றி வாசகர் ஒருவர் கல்கிக்கு எழுதிக் கேட்டார்.
கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்று துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி. கல்கி பதில்: பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய் விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப் பிரிவினை ஆபத்து.                                       
                (கல்கி 19.9.2010 பக்கம் 30)

சோவின் பதிலுக்கும் கல்கியின் பதிலுக்கும் இடையில் நெளியும் வேறுபாட்டைக் கவனிக்கவேண்டும்.

பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் விரும்பப்படவில்லை என்பது சோவின் அருள்வாக்கு. என்றால் அப்படியெல்லாம் அவர்கள் வெறுக்கப்படவில்லை; அவர்களின் அகங்காரம் என்றோ மறைந்து விட்டது என்று கல்கி மிகவும் விழிப்பாகப் பதில் கூறுகிறது. பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர் என்று சொன்னால் அதனுடைய பார தூர விளைவு வேறுவிதமாப் போய் விடுமே!

அதே நேரத்தில் கல்கிக்கு நமது கேள்விகள் உண்டு. பார்ப்பனர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்துவிட்டது உண்மையா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையுண்டு என்று ஒரு சட்டமன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் செய்தால், சட்டம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுகிறார்களே பார்ப்பனர்கள் - இதுதான் அவர்கள் ஜாதி ஆணவத்திலிருந்து  அகன்று விட்டனர் என்பதற்கான அடையாளமா?

சென்னை நாரதகான சபையில் தாம்ப்ராஸ் எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்தது என்ன? ஆண்டவனுக்கு மேல் பிராமணர் என்று பேசினாரா இல்லையா? இதுதான் பார்ப்பனர்களின் அங்காரம் என்றோ மறைந்து விட்டது என்பதற்கான அடையாளமா?

ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதன் தாத்பரியம் என்ன? தங்களை துவிஜாதி - இரு பிறவியாளர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்வது தானே!

திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ எடையில் பூணூல் செய்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அணிவித்தாரே (5.4.2002) - இது கடவுளேயே  தங்கள் பிராமணர் ஜாதிக்குள் அடைக்கும் ஆணவம் அல்லவா? டி.எம். கிருஷ்ணா இந்து ஏட்டில் குறிப்பிட்டு இருப்பதை வரவேற்கிறோம் - ஏன் பாராட்டவும்கூடச் செய்வோம்.


------------------------ கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள் 17-5-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

37 comments:

தமிழ் ஓவியா said...


கோயில் திருவிழா கூத்துகள்!


சென்னிமலை கோவில் தேர் விபத்து சென்னிமலையில் கோவில் தேர் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட் டது. இதில் ஓட்டுநர் கிளீனர் உயிர் தப்பினர்.

சென்னை துறைமுகத் தில் இருந்து ஒரு டாரஸ் லாரி 2 கண்டெய்னர்களில் கொப்பரை தேங்காய்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம், காங்கயம் நோக்கி சென்று கொண்டு இருந்தது லாரியை நாகை மேலத்தெருவை சேர்ந்த முருகவேல் (வயது 25) என்பவர் ஓட்டிச்சென்றார். கிளீனராக பாண்டியராஜன் என்பவர் இருந்தார்.

இந்த லாரி நேற்று மதியம் ஈரோடு மாவட் டம், சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிரே ஒரு கார் வந்தது. இதனால் லாரி ஓட்டுநர் பிரேக் போட்டு லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் எதிர்பாராத வித மாக லாரியில் இருந்த 2 கண்டெய்னர்களும் சரிந்த தால் கோவில் தேர் மீது ஒரு பக்கமாக லாரி கவிழ்ந்தது. இதில் தேர் மீது மூடி வைத்து இருந்த தகர பலகை சேதம் அடைந்தது. லாரியில் இருந்த கொப் பரை தேங்காய்கள் கீழே சிதறின.

அப்போது முருகவே லும், பாண்டியராஜனும் லாரியில் இருந்து கீழே குதித்தார்கள். இதில் பாண்டியராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்த இடம் மக்கள் எப்போதும் நட மாட்டம் அதிகமாக காணப் படும். ஆனால் நேற்று அந்த வழியாக பொது மக்கள் யாரும் செல்லாத தால் உயிர்ச்சேதம் இல்லை.

விபத்து நடந்த இடத் துக்கு மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, சிதறிக்கிடந்த கொப்பரை தேங்காய்கள் அதில் ஏற்றப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டன. கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர்களை மீட் கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சென்னிமலை காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமி ஊர்வலம் : தாக்குதல் 15 பேர் கைது கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் முன் ஆட்டம் போட்டபடி வந் ததை கண்டித்ததால் ஆத் திரம் அடைந்த கும்பல் ஆயுதங்களுடன் தெரு வுக்குள் புகுந்து தாக்குத லில் ஈடுபட்டது. இந்த மோதல் தொடர்பாக 15 பேரை காவலர் கைது செய்தனர்.

காவேரிப்பாக்கம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி இரவு அம்மன் வீதி உலா நடந் தது. அப்போது களத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில், காமராஜ், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சாமி வீதி உலா வுக்கு முன்பாக நடனமாடி யபடி வந்தனர்.

அவர்கள் ஒரு தெரு வுக்குள் அவ்வாறு ஆடிய படி வந்தபோது அங்கு இருந்தவர்கள் 3 பேரிடமும் சாமி ஊர்வலம் முன் நடனமாடக்கூடாது எனக் கூறி அவர்களை கண்டித்து அனுப்பினர். ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அது குறித்து கூறினர். பின்னர் அவர்கள் 25-க்கும் மேற்பட்டோரு டன் கல், உருட்டுக்கட்டை, கத்தி, கொம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்களைக் கண் டித்தவர்கள் இருந்த தெரு வுக்கு வந்தனர்.

அங்கு அவர்கள் சாமி ஊர்வலம் முன் நடனமாடு வதற்கு எதிர்ப்பு தெரிவித் தவர்கள் யார்? என்று கேட் டவாறு அந்த தெருவில் இருந்தவர்களை ஆயுதங்க ளால் கடுமையாகத் தாக் கினர். பலர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித் தனர்.

கும்பல் தாக்கியதில் அந்த தெருவில் இருந்த மணிகண்டன் (வயது 29), சுப்பிரமணி (39), ஜெகன் (37), சின்னப்பையன் (45), விஜயன் (35) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர்.

தங்களைத் தாக்கிய கும்பல் மீது காவேரிப் பாக் கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித் தார். அதன்பேரில் 15 பேரை காவல் ஆய்வாளர் பழனி கைது செய்தார். இதில் 10 பேர் தலைமறைவாகி விட் டனர். அவர்களை காவல் துறையினர் தேடி வருகின் றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80430.html#ixzz321XgI4se

தமிழ் ஓவியா said...


குறையில்லாமல்...


மனக்குறை இல்லாமல் வாழ வேண்டு மென்றால் வசதியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழ வேண்டும். - (விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/80435.html#ixzz321XyAo5D

தமிழ் ஓவியா said...


தேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜினாமா


திரு.ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:- கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 04.07.1929ஆம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா/நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்கு களுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகின்றேன்.

நிற்க, மேற்படி 4ஆம் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவ தானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும்,

மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோத மானதென்றும் நான் அபிப்பிராயப்படுவதாலும் அத்தீர்மானம் கமிட்டியில் ஒரு சமயம் நிறைவேறிவிடும் பட்சம் என் போன்றவர்கள் கமிட்டியிலிருந்து விலகிக் கொள்வது தவிர வேறு வழியில்லாததாலும், அது கமிட்டியில் விவாதத்தில் இருக்கும் சமயத்தில் நான் ஆஜராகி இருந்து எனது அபிப்பிராயத்தை மற்ற கமிட்டி அங்கத்தவர்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.

ஆனால் எதிர்பாராத சம்பவங்களால் அந்த சந்தர்ப்பம் எனக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆதலால், இந்த நிலையில் நான் இந்தக் கமிட்டியில் என்னுடைய மெம்பர் பதவியையும், வைஸ் பிரசிடெண்டு பதவியையும் ராஜினாமா கொடுத்து கமிட்டியிலுள்ள எனது தொடர்பை நீக்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லை.

எனவே திரு.பிரசிடெண்டு அவர்களும், கமிட்டி மெம்பர் கனவான்கள் அவர்களும் தயவு செய்து எனது ராஜினாமாவை அங்கீகரித்துக் கொள்ள வேணுமாய் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

(ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் வகித்த வைஸ்பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்து எழுதிய கடிதம் - குடிஅரசு - 14.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80422.html#ixzz321YfN3o9

தமிழ் ஓவியா said...


தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள் கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்: திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80427.html#ixzz321Yx1VLc

தமிழ் ஓவியா said...

காந்தியின் கண் விழிப்பு

கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படா தென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை வீதம்தான் கூலிகிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப்பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணிகளுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்று சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங்கொள்ளத் தொடங்கினார்கள்.

சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரச்சாரத்திற்கு இதை ஒரு ஆயுதமாக உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின் வாங்காது உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு இப்போதுதான் திரு.காந்தி அவர்கள் கண்விழித்து இதற்கு ஏதாவது வேறு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றார்.

அதாவது சன்னமானதும் அதிக நீளமானதுமான நூல் நூற்கும் படியான புதிய கையந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்குச் சன்மானங்கள் செய்வதற்கு ஆக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக வெளியிட்டிருக்கிறார்.

இது பயன்பட்டாலும் பயன்படாவிட்டாலும் எப்படியாவது இப்போதைய கதர் நிலை இப்படியே தான் இருக்க வேண்டும் என்றும், இதனாலேயே தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய வேறொன்றினாலும் முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதம் சற்று அசைவு கொடுக்க நேர்ந்ததோடு சரக்கு பிரதானமே ஒழிய செட்டி பிரதானமல்ல என்கின்ற பழமொழிப்படி காரியத்தின் பலனைத் தான் பொது ஜனமக்கள் கவனிப்பார்களே ஒழிய மகாத்மா சொல்லுகின்றார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் காலம் மலையேறிவிட்டதென்பதையும் இக்கண்விழிப்பு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது. தவிர இப்போதுள்ள கதர் திட்டத்தில் கண் மூடி நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் குருட்டுப் பிடிவாதத்தை விட்டுவிட்டு அதில் உள்ள அனுபவத்திற்கும் இயற்கைக்கும் ஒத்துவராத தன்மைகளை மாற்ற முயற்சிப்பதோடு திரு.காந்தி அவர்களின் இந்தப் பிரயத்தனத்திற்குச் சற்று உதவி செய்வார்களாக.

- குடிஅரசு - கட்டுரை - 11.08.1929

Read more: http://viduthalai.in/page-7/80423.html#ixzz321ZKZxyn

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் நூற்றாண்டு விழா நினைவலைகள்

பாரதி விடுதலைக் கழகத்தார் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரைச் சந்தித்து பாரதி பாடல்களை நாட்டு டமையாக்க வேண்டும் என்ற விண்ணப் பத்தை அளித்தார்கள். அப்படிச் செய்வ தற்கு முன் பாரதியின் வாரிசுகளிடமிருந்து இதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெற வேண்டும் என்று சொன்னார் ஓமந்தூரார். இந்தச் செய்தி டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மூலமாக நாரண. துரைக் கண்ணனை அடைந்தது. பாரதி குடும்பத்தாரை நன்கறிந்த பேரா சிரியர் அ. சீனிவாச ராகவனுக்கு உடனே தந்தி கொடுத்து வரவழைத்தார்கள். கலை ஞர் டி. கே. சண்முகம், வல்லிக்கண்ணன், திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த மு. கணபதி, அசீரா, நாரண. துரைக் கண்ணன் ஆகிய ஐவர் அடங்கிய குழு செல்லம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றது. செல்லம்மாவிடம் விளக்கிச் சொன்னார்கள்.

எனக்கு இந்த அம்மையைப் பற்றி எண்ணும்போதெல்லாம் நன்றி உணர்ச்சி மேலெழும். பாரதியாருடைய எழுத்து மேசையின் மீது தாளையும் பேனாவை யும் வைப்பார்களாம். வெற்றிலை பாக்கும், செம்பு நிறைய காபியும் வைப் பார்களாம். வீட்டில் ஒன்றும் இல்லை ஏதாவது எழுதி, பத்திரிகைக்கு அனுப்பு என்பதற்கான குறிப்பு அது. அப்படி இந்த அம்மை எழுது எழுது என்று தூண்டா திருந்திருந்தால் எத்தனை அரிய எழுத் துக்கள் எழுதப்படாமலேயே போயிருந் திருக்குமோ!

மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள். ஒப்புதல் கடிதத்தையும் எழுதிக் கொடுத் தார்கள். அந்தக் கடிதத்தை அப்படியே கீழே தருகிறேன்.

நாள் 23.4.1948, இடம் திருநெல்வேலி கைலாசபுரம்.

ஓம். கனம் பிரதம மந்திரி இராமசாமி ரெட்டியார் அவர்களுக்குச் சக்தி அருள் புரிக. மகாகவி பாரதியாருடைய பாடல் களையும் இலக்கியங்களையும் பொதுவு டைமையாக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் கிளர்ச்சி நடந்து வருவதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாகப் பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களும், சிந்தனை ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்களும் என்னைக் காண வந்தார்கள். பாரதியார் இலக் கியங்களில் யார் யாருக்கு உரிமை இருக் கின்றனவோ அவற்றையெல்லாம் சென்னை அரசாங்கமே பெற்றுத் தமிழ் மக்களுக்குப் பொதுவுடைமையாக வழங்க உத்தேசித்திருப்பதாகவும், இந்தப் பணியில் தாங்கள் சிரத்தை காட்டுவ தாகவும் என்னிடம் சொன்னார்கள். தங்கள் பெருந்தன்மையை மனமாரப் பாராட்டு கிறேன். இப்போதுள்ள உரிமைகளையும், இனி எழக்கூடிய உரிமைகளையும் நியாயமான முறையில் அரசாங்கமே பெற்றுப் பொதுமக்களுக்கு வழங்குவது எனக்குப் பூரண சம்மதம். தங்கள் முயற்சி சக்தி அருளால் வெற்றி பெறுக. ஆனால் ஒன்று. இதைச் சொல்லக் கூசுகிறது. என் கணவருடைய (பாரதியாருடைய) இலக் கியங்களுக்குள்ள செல்வாக்கின் காரண மாக, எனக்கோ அவருடைய குடும்பத் தாருக்கோ விசேடமான வசதி ஏற்பட வில்லை என்பது தாங்கள் அறிந்ததே. தரும நியாயமான முறையில்(? ல உண்டா?) இந்தப் பணியை நிறைவேற்று வீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.
இப்படிக்கு,

தமிழ் ஓவியா said...


செல்லம்மா பாரதி.

இந்த அம்மைக்குத்தான் பாரதி நீ இப்படிக் கவலைப்படும் நேரத்தில் தமிழைப் படித்தால் நான் சந்தோஷ முறுவேன் என்று காசியிலிருந்து எழுதி னான். எப்படி எழுதியிருக்கிறார்கள்! இவருடைய இரண்டு கட்டுரைகளை பாரதி பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறான். அருமையாக எழுதியிருக்கிறார்கள். இதை எழுதும் நேரத்தில் கூட என் விழி கசிகிறது. இதைச் சொல்லக் கூசுகிறது. என் கணவ ருடைய (பாரதியாருடைய) இலக்கியங் களுக்குள்ள செல்வாக்கின் காரணமாக, எனக்கோ அவருடைய குடும்பத்தா ருக்கோ விசேடமான வசதி ஏற்பட வில்லை என்பது தாங்கள் அறிந்ததே. தரும நியாயமான முறையில் இந்தப் பணியை நிறைவேற்றுவீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன். எத்தனை நாசூக்கான வேண்டுகோள்!

இன்னொரு விஷயம். நாரண. துரைக் கண்ணன் அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு, அம்மையைச் சந்திக்கப் புறப்படும் நேரத்தில் அவருடைய ஒரே மகன் நான்கு வயது திப்தீரியாவால் பாதிக்கப்பட்டுக் கிடந்தான். கவலைக் கிடமான சூழலிலும், தாமதம் செய்ய விரும்பாமல் புறப்பட்டார். அவர் திரும்ப வருவதற்குள் அந்த மகன் காலமாகி விட்டான்.

இந்த சம்மதக் கடிதத்துடன் ஓமந் தூராரைச் சந்தித்தனர். ஒரு வரி மூலம் மெய் யப்பருக்குச் செய்தி அனுப்பப்பட்டது. மெய்யப்பர் சொல்கிறார்.

பின்னர் ஒருநாள் அப்போது முதல மைச்சராக இருந்த ஒமந்தூர் ரெட்டியார் இரவு ஏழு மணிக்கு வெரி அர்ஜென்ட் என்பதாக மோட்டார் சைக்கிள் மெஸஞ் சரிடம் தம்மை அன்று இரவே எட்டு மணிக் குச் சந்திக்கும்படி செய்தி அனுப்பினார்.

உடனே வருகிறேன் என்று சொல்லி விட்டு அன்று இரவு எட்டு மணிக்கே சென்று அவரைக் கூவம் ஹவுசில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்: நீங்கள் பாரதி பாடல்களின் உரிமையை வாங்கி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். பாரதியார் போன்ற தேசிய மகாகவியின் பாடல்கள் நாட்டின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம், என்றார்.

இத்தனைத் தமிழறிஞர்கள் சேர்ந்து பாரதி விடுதலைக் கழகம் அமைத்துப் போராடியிருக்கிறார்கள். நாரண. துரைக் கண்ணன், வல்லிக்கண்ணன், அசீரா, ப. ஜீவானந்தம் போன்ற பெரிய அறிஞர் களும் தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். பத்திரிகை களில் பக்கம் பக்கமாக எழுதியிருக் கிறார்கள். சட்ட சபையில் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் திறக்காத மனக் கதவு, அரசாங்கம் அழைத்தவுடன் படாரென்று திறந்து கொண்டது. ஒரு வினாடி கூட யோசிக் காமல், பாரதியார் பாடல்களின் உரி மையை இந்தக் கணமே அரசாங்கத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணி விடுகிறேன். எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம். எந்தவிதப் பிரதி பிரயோசனமும் இன்றிக் கொடுக்கத் தயார் என்று சொல்லிவிட்டேன் என்று மெய்யப்பர் சொல்கிறார்.

Read more: http://viduthalai.in/page2/80465.html#ixzz321Zho6ye

தமிழ் ஓவியா said...


20 ஆயிரம் கோடியை விழுங்கியும் கங்கை சாக்கடை நீரே!


2,500 கி.மீ. நீளத்தில் கங்கை நதியை தூய்மைப்படுத்த ஒரு திட்டத்தை 1986இல் அரசு அறிவித்தது. கடந்த 28 ஆண்டுகளில் 2012ஆம் ஆண்டில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அறிக்கையின்படி, ரூபாய் 20ஆயிரம் கோடிகள் கங்கையில் பல்வேறு தூய்மைப்படுத்தும் திட்டங்கள்மூலம் செலவிடப்பட்டுள்ளன.

வாரணாசியில் இன்றுவரையிலும் கழிவுநீர் நிலத்தடி நீருடன் கலந்துள்ளதோடு, கங்கையின் பல்வேறு கிளைநதிகளின்மூலமாகவும் கழிவுநீராக பெருக்கெடுத்து ஓடுகிறது. ராஜ்காட்டிலிருந்து ராம்நகர்வரையிலும் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றங்கரையோரங்களில் வீடுகள், பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நக்வாவில் தொடங்கி நெடுந்தூரத்துக்கு அஸ்சி காட் பகுதிவரையிலும் ஆற்றின் அகலம் பாதிஅளவாக குறைக்கப்பட்டு விட்டது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் சூழலியல் அறிவியலாளரும், (என்ஜிபிஆர்ஏ) தேசிய கங்கை ஆறு முகமையின் உறுப்பினருமான பி.டி.திரி பாதி கூறும்போது, அணைகள் மற்றும் தடுப்பு அணைகள்மூலம் தண்ணீர்வரத்து குறைவாகிவிட்டது ஒருபக்கம் என்றால், ஆற்றின்மீது ஆக்கிரமித்துக் குடியிருப்ப வர்களாலும் ஆற்றின்நிலைமை மோச மாகியுள்ளது என்றார். 2013 அக்டோபரில் அங்கீகாரமில்லாமலே புதிதாக கட் டப்பட்ட 22 கட்டடங்கள் சரிந்து விழுந்தன. அப்பகுதிவாழ் பிரமுகர் திரிபாதி கூறும்போது, 12-க்கும் மேலான வீடு களின் சுற்றுச்சுவர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. ஆனாலும், ஆறே மாதங்களில் மீண்டும் அனைத் துமே அதே இடத்தில் கட்டப்பட்டன என்றார். கங்கையைச் சுத்தம் செய்யும் பணியில் மறைந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ரூபாய் ஆயிரத்து எழுநூறு கோடியில் கங்கை செயல் திட்டத்தின் மூலம் கங்கையை சுத்தம் செய்யும் பணி கொண்டுவரப்பட்டது.


தமிழ் ஓவியா said...

நிதிப் பற்றாக்குறை மற்றும் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் முறை ஆகியவற்றால் இத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக 2004 நாடாளுமன்றக்குழு அறிக்கை கூறி உள்ளது. கங்கை ஆறு தேசிய ஆறு என்கிற அறிவிப்புக்குப்பின்பு பிரதமரான மன்மோகன்சிங் தலைமையில் அமைக் கப்பட்ட (என்ஜிஆர்பிஏ) தேசிய கங்கை ஆறு முகமை அமைப்புமூலம் 2009இல் ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2011இல் உலகவங்கி ஒரு பில்லியன் டாலர் தொகையை இத்திட்டத்துக்கு வழங்கியது. சுற்றுசூழல்துறை அமைச்ச கம் ஏழு (அய்அய்டி) பொறியாளர் களைக்கொண்ட முழுமையான ஆற்றுநீர் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில் கங்கை ஆறு குறித்த ஆய்வு மற்றும் ஆற்றின் கட்டமைப்பு, சூழலியல் மேலாண்மை மற்றும் பயிற்சி மய்யம் சார்பில் 2010இல் வெளியான ஆய்வுமுடிவின்படி கங்கை ஆற்றுநீரில் மொத்தத்தில் ஒரு விழுக் காட்டுக்கும் குறைவாகவே வாரணாசியில் ஓடுகிறது. உத்தரப்பிரதேசம்வழியே பாய்ந்துவரும்போது அணைகள், தடுப் பணைகள் இவற்றால் ஆறு தடம் மாறி யது. ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் ஆற்றில் கொட்டப்படுகின்றன.

12 அணைகள்

12 அணைகள் வாரணாசிவரை கங்கை யின் பாதையில் கட்டப்பட்டுள்ளன. வழிநெடுகிலும் சுங்க வரி வசூலிக்கப் படுகின்றது. அரித்துவாரில் பீம்கோடா குறுக்கு அணையின்மூலம் 95 விழுக்காடு புனித நீராக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள்மூலம் நரோராவை அடைகின்றது. கங்கையின்ஆற்றோட்டம் நூறு விழுக்காடு லோயர் கங்கா கால் வாய்மூலம் உள்ளது. அதன்பிறகு, கங்கை நீரானது பறிக்கப்பட்டு விடுகிறது. பனா ரஸ் இந்து பல்கலைக்கழக மய்யத்தின் முன்னாள் தலைவர் யு.கே.சவுத்ரி கூறும் போது, நிலத்துக்குமேலாக நீரோட்ட மாக, கழிவு நீராக இன்னும் பிற கிளை களிலிருந்து பெறும் நீராகவே காணப் படுகிறது என்கிறார்.
கான்பூரில் மட்டும் 420 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. அத்தொழிற்சாலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கப்பட்டு வாரணாசியை அடை கின்றன. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத் தின் பேராசிரியரும், தேசிய கங்கை ஆற்று முகமையின் உறுப்பினருமாகிய பி.டி.அகர் வால் கூறும்போது, வட இந்தியா முழு மையாக மிக மோசமாக அசுத்தங்களின் உறைவிடமாக உள்ளது என்கிறார்.

எஃப்சிசி கங்கை நகருக்குள் நுழையும் போது சுமார் அறுபதாயிரம் நுண்ணு யிரிகள் மிதக்கின்றன. வாரணாசியில் கங்கையின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் ஒன்றரை மில்லியன் நுண்ணு யிரிகள் மிதக்கின்றன. இரண்டு இறுதிச் சடங்கு செய்யுமிடங்கள் உள்ளன. ஒன்று அரிச்சந்திரா, காட், மற்றொன்று மணி கர்னிகா காட் இவற்றிலிருந்து 33ஆயிரம் உடல்கள், பாதியளவு எரிந்த உடல்கள் 300டன், 16ஆயிரம் டன் சாம்பல் ஆற்றில் கொட்டப்படுகின்றன. கவ்முக் பகுதியிலிருந்து உத்தர்காசி வரையிலும் சுமார் 130 கி.மீ. நீளம், பாகீரதி இயற்கை பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டு அங்கு நிறைவேற்றப் பட இருந்த 13 திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலைப்பெற்ற நிலையில் தேசிய கங்கை ஆற்று முகமையால் நிறுத்தப்பட்ட தகவல் நேர்மறையான வெளிப்பாடாக உள்ளதாக திரிபாதி தெரிவித்தார். ஆனாலும், நோக்கம் சிதையாமல் தேவையானவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சவுத்ரி அணை களைக்குறிப்பிட்டு கூறுகிறார். ஆறு இயல்பான தன் ஓட்டத்தில் இருந்தால் ஒழிய முகமை செய்வதெல்லாம் மேல் பூச்சாகத்தான் அமையும் என்கிறார் சவுத்ரி.

அவர் மேலும் கூறும்போது, ஒருவர் தன்னுடைய குருதியில் 95 விழுக்காட்டை கொடுத்தபின்னர் உயிருடன் இருக்க முடியுமா? என்று கேட்கிறார். 2014 பிப்ரவரியில் பிரதமர் அலுவலகத்தி லிருந்து சுற்றுசூழல்துறைக்கு கங்கை யைப் பாதுகாப்பதுகுறித்து மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளுக்கான வரைவை அனுப்புமாறு கோரியுள்ளது. திரிபாதி கூறும்போது, பாஜக தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களில் கங் கையை சுத்தமாக்கும் பணியை செய்வதாக உறுதி கூறி யுள்ளது. சபர்மதி திட்டம் குறித்தும் கூறுகிறது. இரு ஆறுகளின் இயற்கை க்கூறுகள் வெவ்வேறானவை என்பதை பாஜக உணரவேண்டும் என்று கூறுகிறார்.

இருபதாண்டுகளாக கங்கைக்காக சேவையாற்றி வருபவரும், சங்கத் மோச் சன் கோவில் மகந்தும், சங்கத் மோச்சன் பவுண்டேஷன் என்கிற தொண்டு நிறு வனத் தலைவருமாகிய பேராசிரியர் விஷ்வாம்பர நாத மிஷ்ரா கங்கைப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டில்லி, 14-5-2014)

Read more: http://viduthalai.in/page4/80468.html#ixzz321aM65Pc

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் கங்கை ஆறு - குறிப்புகள்



இந்தியாவின் நீளமான ஆறு 2,525 கி.மீ. உத்தர் காண்ட் - 450கி.மீ., உத்தரப்பிரதேசம்- 1000கி.மீ., பிகார் - 450 கி.மீ. ,ஜார்கண்ட்-40கி.மீ., மேற்கு வங்கம்-520 கி.மீ., பிகார், உத்தரப்பிரதேச எல்லைப்பகுதி-110கி.மீ.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவ்முக் (கங்கோத்ரி பனிக்கட்டிஆறு) பகுதியிலிருந்து உருவாகிறது.

இந்திய மக்கள்தொகையில் 43% பேருக்கு கங்கை ஆற்றுத்திட்டம் பலனளிக்கிறது

ஆற்றோட்டப்பகுதியின் பரப்பளவு: 8,61,404 சதுரகி.மீ.

ஆண்டுக்கு கடலில் கலக்கும் நீரின் அளவு: 4,93,400 மில்லியன் கனமீட்டர்
கிளை நதிகள், துணை நதிகள்: யமுனா, ராம்கங்கா, கோம்தி, காகரா, கண்டாக், தாமோதர், கோசி, கலி, சம்பல், சிந்து, பெட்வா, கென், டோன்ஸ், சோனெ, காசியா-

ஹால்டி

ஆற்றங்கரையில் முக்கிய நகரங்கள்: ரிஷிகேஷ், அரித்துவார், ரூர்கி(உத்தர்கண்ட்) பிஜ்னோர், நரோரா,, கன்னோஜ், கான்பூர், அலகாபாத், வாரணாசி, மீர்சாப்பூர் (உத்தரப்பிரதேசம்), பாட்னா, பகல்பூர் (பிகார்) பஹ்ரம்பூர், செராம்பூரெ, ஹவுரா, கோல்கட்டா (மேற்கு வங்காளம்)

கங்கா செயல்திட்டம்: (28ஆண்டுகளில் இரண்டு திட்டங்கள்)

கங்கா செயல்திட்டம்-1

1986 ஜூன் தொடங்கி 2000 மார்ச்சில் முடிந்தது 462.04 கோடி ஒதுக்கீடு 25 மாநகரங்கள், நகரங்கள் உபி-6, பிகார்-4, மேற்கு வங்காளம்-15 உள்ளடக்கியது

கங்கா செயல்திட்டம்-2

1993யிலிருந்து 1996 வரையிலும் பெல கட்டங் களாக தொடக்கம் 2001 ஏப்ரல்-1இல் அமல்படுத்தப் பட்டது 95 மாநகரங்கள், நகரங்கள் முக்கிய கிளை நதிகள் உள்ளடக்கியது

பொருளாதார செலவினங்கள்: தாவரங்களுக் காக கழிவுகள் மேலாண்மை, தண்ணீர் மாசு கண் காணிப்பகங்கள், வெள்ளச்சேதங்களிலிருந்து பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் செலவு செய்யப்பட திட்டமிடப்பட்டது.

2008-09 தேசிய ஆறாக அறிவிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து, திட்டமிடுதல், செலவிடு தல், கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள என்ஜிஆர்பிஏ என்கிற அமைப்பு 2009இல் உருவாக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page4/80469.html#ixzz321aY5NTV

தமிழ் ஓவியா said...


நாத்திகர்களை தீவிரவாதிகள் எனும் சவுதி சட்டம்: நீக்கப்பட அழுத்தம்


அண்மையில் சவுதி அரேபிய அரசு இரு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒன்று நாத்திகர்கள் (கடவுள், மத மறுப்பாளர்கள்) தீவிரவாதிகள் என்றும், மரணதண்டனையை அதிகபட்ச தண்டனையாக அளிக்கலாம் என்றும் அந்த சட்டங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள்மூலம் நாத்திகர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை சவுதி அரசு ஏற்படுத்தி உள்ளது.

நாத்திகத்தைப்பற்றி முழுமையாக அறியாதவர்கள்கூட, அந்த நாட்டிலிருந்து நாத்திக இணையதளத்துக்கு சென்று பார்வையிடுபவர், அதில் தம் கருத்தை பதிவிடுபவர், நாத்திகர்களுடன் தொடர் பில் இருப்பவர் மற்றும் எந்த ஒரு தனி நபருடனோ, எந்த நாத்திக அமைப் புடனோ தொடர்பில் இருப்பவர் என்று இச்சட்டத்தின்கீழ் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்று தண்டிக்க ஏதுவா கிறது. சவுதி அரசின் மதரீதியிலான நம்பிக் கையை அலுவலக நடைமுறைகளில் கடைபிடிக்கவில்லை என்றுகூறி எவ்வித ஆதாரங்களும் இல்லாமலே பெரும் பாலானவர்களை குற்றவாளிகளாக்கும் சட்டங்களாக அவை உள்ளன. இது சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை மீறும் செயலாகும்.

அரேபிய நாட்டின் அடிப்படைகளை தகர்ப்பததாக, அரேபிய மனித உரிமைகள் குறித்த ஒப்பந்தங்களை மீறுவதாகவும் அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சட்டங்கள்மூலம் நீதிக்கு இடமின்றி சிறையில் அடைத்து துன்புறுத்தும் அபாயம் உள்ளது. பத்தில் தொடங்கி ஆயிரம் என்று சவுதி குடிமக்களை துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுவிடும். அதனாலேயே, சவுதி நாத்திகர்கள் வேறு அதிக சகிப்புத்தன்மை உள்ள நாடுகளில் புகலிடம் தேட ஏதுவாகும்.

வெளிப்படையாகவே தங்களை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டுள் ளவர்கள் சவுதியில் பலபேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெற்ற இளைஞர்களாக இருக்கின்றனர். உலகஅளவில் வின்கேல்லப் நிறுவ னத்தின் புள்ளிவிவரப்படி சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் அய்ந்து விழுக்காட்டினர் நாத்திகர்களாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல், 19 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த நாட்டில் முப்பது மில்லியன் மக்களில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின்படி ஏழு மில்லியன் சவுதி குடிமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

சவுதி அரேபியா அரசு மதத்தின்மீதான மரியாதையைக் காத்திட குறிப்பாக இசுலாம் மதத்தை மதிப்புக்குரியதாக்கிட அய்நாவின் மதவிரோதச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை வலுவாக ஆதரித்தது. மேலும், சவுதி அரேபியாவில் அய்நாவின் மனித உரிமை ஆணையத்தை அண்மையில் ஏற்படுத்தியது. அது எதிர்பார்க்கக் கூடிய மதிப்பை அது விரும்பும் மதம் பெற வேண்டுமானால், அதே அளவு மதிப்பையும், பாதுகாப்பை யும் மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

சவுதி அரசை விரைவாக அந்த சட்டங்களை நீக்க வலியுறுத்துவதோடு அப்பாவிகளின் உயிர்களை அழிவிலிருந்து காக்கவும், அகதிகள் உருவாகாமல் தடுக் கவும் விரைந்து அந்த சட்டங்களை நீக்கிட வேண்டும் என்று மதசார்பற்ற உலகுக் கான சர்வதேச நாத்திக கூட்டமைப்பின் (கிலீமீவீ கிறீறீவீணீஸீநீமீ மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வேண்டு கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page5/80471.html#ixzz321akHYZa

தமிழ் ஓவியா said...


அணுகுண்டு சோதனைகள்


இந்தியாவில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்படுவதற்கு சக்தி நடவடிக்கை (Operation Shakthi) என்று பெயரிடப்பட்டு இரண்டுமுறை சோத னைகள் நடந்துள்ளன. சக்தி நடவடிக்கை (Operation Shakthi) இராஜஸ்தான் மாநி லத்தில் பாலைவனப்பகுதியாகிய போக் ரான் பகுதியில் நடைபெற்றன.

போக்ரான் -2 (Pokhron-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய அய்ந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று அணுகுண்டு சோதனைகள் 11-5-1998 தேதியிலும், இரண்டுஅணுகுண்டு சோத னைகள் 13-5-1998 வெடிக்கப்பட்டன. இந்த அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டதால், இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறு தரப்பட்ட வணிகத் தடைகளை விதித்தன. மேலும், இந்தியாவைத் தொடர்ந்து 28-5-1998 மற்றும் 30-5-1998 ஆகிய நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாகவும் அமைந்தது. இந்தியா முதன்முதலாக 18-5-1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்டு அணு குண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு 11-5-1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்துத்துவ தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு "சக்தி" என்று பெயரிட்டது. சக்தி என்ற சமஸ்கிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல் லாகும்(அவர்கள் அப்படித்தானே!). 1998இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும், பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இந்த நாளை நினை வுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனி நபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப் படுகின்றன.

Read more: http://viduthalai.in/page5/80470.html#ixzz321asSfXb

தமிழ் ஓவியா said...


மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

மாணவர்களின் விடைத்தாள் களைத் தகுதி இல்லாத ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தால், தகுதி இல்லாத வர்களுக்கு அதிக மதிப்பெண் ணும், தகுதி உள்ளவர்களுக்குக் குறைந்த மதிப்பெண்ணும் கிடைக் கும் நிலை ஏற்படும். எனவே விடைத்தாள்களைத் திருத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்களை திருவள் ளுவர் பல்கலைக் கழகம் (வேலூர்) உறுதி செய்ய வேண்டும் இவ் வாறு சென்னை உயர்நீதி மன்றத் தின் முதல் அமர்வு உத்திரவிட் டுள்ளது (விடுதலை நாளிதழ், 4.5.2014 பக்கம்3)

நம் நாட்டுக் கல்வி முறையில் விடைத்தாள் என்பது மாணவர் களின் உழைப்பின்அறுவடை, ஒரளவு மாணவர்களின் எதிர் காலத்தையே தீர்மானிக்கும் கருவி.

மாணவர்களின் விடைத்தாள் கள் தகுதி இல்லாத ஆசிரியர்களால் திருத்தப்பட்டதற்கு நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி உதாரண மாகத் திகழ்கிறது. பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் களைத் திருத்துவதில் கவனக்குறை வாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்து றை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாண வர்களின் மதிப்பெண் மாறியது. ஒரு மாணவனின் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யா மல் மதிப்பெண் வழங்கப்பட்டி ருந்தது. மறு மதிப்பீட்டில் அவரது மதிப்பெண் 200 ஆக அதிகரித்தது. (தினமணி 9.12.2013 பக்கம் 4)

சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் விசுவநாதன் பின்வரு மாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

18 மதிப்பெண்ணுக்கு மதிப் பீடு செய்த ஒரு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தபோது 78 மதிப்பெண் வந்தது. எனவே இனி மேல் நல்ல முறையில் விடைத் தாள் மதிப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் (விடுதலை இதழ் 19.7.2005).

நடுநிலை தவறிய பேராசிரியர் கள் விடைத்தாள் திருத்த நியமிக்கப் பட்டால் மாணவர்களின் எதிர் காலமே பாதிக்கப்படுகிறது. சென்னை அய்.அய்.டி (மி.மி.ஜி) இல் பேராசிரியராகப் பணிபுரியும் கல்பனா சாவ்லா விருது பெற்ற பேராசிரியர் வசந்தா கந்தசாமி பின்வருமாறு கருத்து தெரி வித்துள்ளார்: பெரியாரும், அம் பேத்கரும் வராமல் இருந் திருந்தால் நான் அய்.அய்.டியில் பேராசிரியராக இருந்திருக்க மாட் டேன். வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருப்பேன்.
அய்.அய்.டியில் இது வரை ஒரு தலித் பெண் கூட ஆய்வுப்பட்டம் (றிலீ.பீ) பெற்றதில்லை! ஐ.ஐ.டியில் எம்.எஸ்ஸி (வி.ஷிநீ) படிக்கும் பெண்கள் தலித் என்றால் அவர் களை உடனே ஃபெயிலாக்கி விடு கிறார்கள். நிறைய தலித் மாண விகள் இது போல் பாதிக்கப்பட் டுள்ளனர். இதை எல்லாம் எதிர்த்து நான் போராடிக் கொண்டிருக் கிறேன்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு செய்தபோது பல மாணவ மாணவிகளின் மதிப்பெண் பட்டி யலில் குளறுபடிகள் நடந்திருப் பது தெரியவந்தது. இந்த மோசடி யின் உச்சக்கட்டமாக பட்டப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்ற 2 மாணவர்கள், ஒரு மாணவி தேர்வுக்கு விண்ணப்பிக் காமலும், தேர்வுக்குரிய கட்டணம் செலுத்தாமலும் தேர்வே எழுதா மலும் ஆனால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மெகா மோசடி நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது (விடுதலை இதழ் 19.2.2012 பக்கம் 7)

சென்னை மாநிலக் கல்லூரியில் நான் 1954 - 56-இல் பொருளாதாரத் துறையில் எம்.ஏ. படித்தபோது, எனது பல்கலைக்கழக விடைத் தாளை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்துறை தலைமைப் பேராசிரியர் அவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்தினார். பெரியார் தொண்டனாகிய நான் தன்மானத்துடன் மறுக்கவே என்னை எம்.ஏ., வகுப்பில் அரை சதவீதம் மதிப்பெண் குறைவாகக் கொடுத்து மூன்றாம் வகுப்பில் (மிமிமி சிறீணீ) தள்ளிவிட்டார். இதனால் என் வாழ்க்கை ஓரளவு பாதிக் கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இன்றைய மதிப்பெண் முறையைக் கடுமையாக எதிர்த் துள்ளார். மார்க்தான் (மதிப் பெண்) தகுதி, திறமையின் அறிகுறி என்பது அக்கிரமம் மாத்திரமல்ல; மகா மகா அயோக்கியத்தனம் அல்லது மடத்தனம் என்பேன்.

தற்போதுள்ள தேர்வு முறை யினால் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் வாழ்க் கையே பாழடிக்கப்படுகிறது. கல்வித்துறைச் சான்றோர்கள் மாணவர்களின் தகுதி, திறமையை மதிப்பிடுவதற்கு காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

- செய்யாறு இர.செங்கல்வராயன்

முன்னாள் துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு, தி.மலை.மாவட்டம்

Read more: http://viduthalai.in/page7/80476.html#ixzz321b7AXAX

தமிழ் ஓவியா said...



அதிர்ஷ்ட கற்கள்

கடன் தொல்லையா?
கணவன் மனைவி சண்டையா?
தாம்பத்தியத்தில் சுகம் இல்லையா?
வீடுகள் கட்ட வேண்டுமா?
விளை நிலங்கள் வாங்க வேண்டுமா?
வீதியில் பார்த்த பெண்ணை
ஆசையாய் மணக்க வேண்டுமா?
அத்துணைக்கும் அதிர்ஷ்ட கற்கள் உண்டு.
அபரிதமாய் வேலை செய்யும்
திருமணமாகாத, வேலையில்லா
இளைஞனின் விபரீத கூப்பாடு...

நாளும் புதுமை அறிந்திடுக

தாழ்ந்த நிலைப்படி இது என்று
தலைமை உடலை வளைத்துச் செல்வர்
நிலைப்படி உடைத்தல் - பாவமென்றும்
அய்யன் வைத்த நிலைப்படி - இது
அன்பின் நினைவுச் சின்னம் - இது
என்றே எண்ணி வாழ்ந்திடுவர்
ஆண்டவன் பெயரைச் சொல்லிச் சொல்லி!!
அறிவுக்கு பொருந்தாச் செயல்கள் செய்வர்
உதட்டை, நாக்கை, உடலுறுப்பை,
கம்பிகளாலே கிழித்துக் கொள்வர்
நெருப்பின் மீதே நடந்து செல்வர்
எல்லாம் இறைவன்
செயல் என்பார்
கிளியின் உத்தரவை
பெற்றே தான்
காரிய மாற்ற புறப்படுவர்
மனிதநேயம் மறந்திடுவர்
மதப் பிடிதனிலே வாழ்ந்திடுவர்
இலவசமாய்
செருப்பு
கிடைத்துவிட்டால்
காலை செருப்பிற்கேற்றாற் போல்
கணப் பொழுதினிலே
வெட்டிக் கொள்வர்
சிந்தனையற்ற செயல்களாலே
உயிரைக் கூட இழந்திடுவார்
சலனம் அடையும் மனிதனைச்
சாந்தப் படுத்திட....
சோதிடம் சொல்வார்
மூன்றாம் பிறவி செயல்களுக்கு
இந்தப் பிறவியில் வகை காண்பார்
அடிமைத் தனத்தை
ஏற்றுக் கொள்வார்
அச்சம் கொண்டே வாழ்ந்திடுவார்
புதுமை அறிந்திட மறந்திடுவார்
புவியில் மருண்டே வாழ்ந்திடுவார்
அறிவு ஆசான் பெரியாரின்
ஆற்றல் நிறைந்த வழிதன்னை
ஆய்ந்தே நீயும் ஏற்றுக் கொள்வாய்

- சு. ஆறுமுகம் M.A., M.Phil., B.Ed., நன்னிலம்

Read more: http://viduthalai.in/page7/80477.html#ixzz321bHuCJv

தமிழ் ஓவியா said...


அன்று காந்தியார் சொன்னது


கரூர் மாவட்டம் நெருரி வடபாகம் காவேரி ஆறு அருகே தமிழக அரசுக்கு சொந்தமான சுற்றுலா விளையாட்டு பூங்கா அருகே அரச மரம் உள்ளது. அந்த அரச மரத்தடியில் விநாயகர் சிலை சிவன் முருகன் போட்டோக்களும் உள்ளன. காவேரி ஆற்றுக்கு குளிக்க வரும் பக்தர்கள் அரச மரத்தடியில் அமர்ந்து மது பானம் சாப்பிட்டு அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்

காந்தியார் சொன்ன மாதிரி கோயில்கள் விபச்சார விடுதி என்பதற்கு இது ஒரு சான்று! அரச மரத்தடியில் மதுபானம், சிகரெட் பீடி துண்டுகள் ஆணுறைகள் போன்றவை அங்கேயே கிடக்கின்றன. ஆற்றில் குளித்து வரும் பக்தர்கள் சாமி கும்பிட்டு இவற்றையும் செய்கின்றனர்.
மதமாற்றம்: விவேகானந்தர்

Read more: http://viduthalai.in/page6/80474.html#ixzz321btV9st

தமிழ் ஓவியா said...


இது அல்லவோ மனிதநேயம்!

மும்பையைச் சேர்ந்தவர் ஃபாரூக் மாப்கர். இவர் சிப்லூன் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது இவர் பயணம் செய்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இவர் மற்றவர் களைக் காப்பாற்றும் நோக் கில் தன் காயங்களைப் பொருட்படுத்தாமல் வேக மாக செயல்பட்டுள்ளார். அவரைச்சுற்றி இருந்த பயணிகள் விபத்தில் உடைந்து நொறுங்கிய தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு பரிதவித்தனர். அவர் தன்னை மட்டும் காத்துக்கொண்டு சென்றிருக்க லாம்.

ஆனால், அவரால் செய்யக்கூடிய உதவிகள்குறித்து நினைத்து செயல்பட் டார். மூன்று வயது சம்ருதி நக்தி என்கிற சிறுமி தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தபோது, அவ்ளின் தந்தை என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று கதறிக் கொண் டிருந்தார். சிறுமியின் தந்தைமீது வேறு ஒருவர் விழுந்து கிடந்தார். இந்நிலையில் தான், உடனடியாக அச்சிறுமியை மாப்கர் மீட்டு, ஆட்டோமூலமாக தாமாகவே அவள் கால் துண்டான நிலையில் மருத் துவமனைக்குக் கொண்டு சென்றார்.

நகோத்தானேவுக்கும் ரோகாவுக்கும் இடையே சென்றுகொண்டிருந்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது தன்னுடைய பணப்பை உள்ளிட்ட தன்பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டபோதிலும், விடாமுயற்சியாக சிறு மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்ப்பித்தார். ஆட்டோ ஓட்டுநர் இவர்நிலைகண்டு தொகை பெறாமலே இவர்தம் சேவையில் தன்னையும் இணைத்துக்கொண்டார். விபத்துப்பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரையிலும், தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கும் இலவச மாக ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் முதலுதவி மட்டுமே வழங்கப்படும் வசதி இருந்தது. அச்சிறுமியுடன் மேலும் இருவரை அரசு பொது மருத்துவ மனைக்கு சிவசேனா அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ்மூலம் கொண்டு சென்று சேர்க்குமாறு மாப்கரிடம் மருத்துவர் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி மருத்துவர் இரண்டாயிரம் ரூபாய் தொகை கட்டுமாறு கேட்டபோது, மாப்கர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். அச்சிறுமியுடன், இளம்பெண் மற்றும் சவான் என்பவரையும் மாப்கர் அலிபாக் மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். சவானிடமும் பணம் ஏதும் இல்லை. சிறுமியின் மன உறுதி குறித்து மாப்கர் வியந்து கூறுகிறார். மிகுந்த வலி இருக்கும்போதும் ஒருவார்த்தைக்கூட பேசாமல், மாப்கர்மீது சாய்ந்தவாறு மிக அமைதியாக இருந்தாள். தன்னுடைய உறவினருக்கு இறுதி மரியாதை செலுத்து வதற்காகச் சென்ற மாப்கர் முற்றிலும் அச்சிறுமி உட்பட மற்றவர்களையும் காக்கும் செயலில் இருந்துவிட்டதால் உறவினரின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை.

சம்ருதி என்கிற அச்சிறுமி பிற்பாடு சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அவள் கால்களை அறுவை மூலம் அகற்றி தொடர்சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் அக்காள் வாஷி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாள். சிறுமியின் தாய் இந்த விபத்தில் உயிர் இழந்து விட்டார். எதுவுமே தெரியாமல் அவள் தந்தையும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மாப்கர் இவ்விபத்து குறித்து கூறும் போது, திவா-சவந்த்வாடி பாசஞ்சர் தொடர்வண்டி தாமதாக இயக்கப் பட்டதால், இழந்த நேரத்தை சரிகட்ட அதிவேகமாக இயக்கப்பட்டுள்ளது. பின்னால் வரக்கூடிய விரைவு தொடர் வண்டிக்கு வழிவிடுவதற்காக வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி உள்ளது. ரயில்வே நிர்வாகம் பாசஞ்சர் தொடர் வண்டியை குறித்த நேரத்தில் இயக்குவதை உறுதிப்படுத்தினால், இதுபோன்ற விபத் துகள் நடைபெறாது. விபத்துக்குள்ளாகி எல்லாவற்றையும் இழந்திருப்பவர் களிடம், இழப்பீடு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் பயணச்சீட்டை கேட்டு வலியுறுத்தக்கூடாது என்று கூறினார்.

மாப்கர் ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட 1992-93 கலவரங்களின்போது வடாலா பகுதியில் 1993 சனவரி 10ஆம்தேதி அன்று குண்டடிப் பட்டார். அதேநாளில் காவல்துறையின் துப்பாச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நால்வர் மசூதிக்குள் இருந்தபோது சுடப்பட்டு உயிரிழந்தனர்.

நீதிபதி பி.என்.சிறீகிருஷ்ணா குழு அறிக் கையில் காவல்துறையின் உதவி ஆய் வாளர் நிக்கில் காப்சே என்பவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்திருந் தார். ஆனால், அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. மத்தியப் புலனாய்வுக்குழுவின் விசாரணையைக் கோரி மாப்கர் நீதிமன்றத்தில் அணுகி ஆதரவாக தீர்ப்பு பெற்றார். ஆனாலும், மத்தியப்புலனாய்வுக்குப்பின் விசாரணை முடிவு காவல் உதவி ஆய்வாளர் காப்சேவுக்கு சாதகமாகவே இருந்தது. இதுபோன்ற சவால்களை சந்தித்த மாப்கர்தான் மிகுந்த மனிதநேயத்துடன் சிறுமி உள்ளிட்டவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

-மும்பை மிர்ரர், 11-5-2014

Read more: http://viduthalai.in/page8/80479.html#ixzz321cDQvRe

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!

பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, 22.6.191973)

Read more: http://viduthalai.in/page-2/80577.html#ixzz32DGYKpXg

தமிழ் ஓவியா said...


தோல்வியும் சுவைக்கத்தக்க அனுபவமே!


வாழ்க்கையாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும், வெற்றியைச் சுவைக்கவே விரும்புவதைவிட, தோல்வியை ஏற்கக் கற்றுக் கொள்ளுவதும், அதன்பாடங் களால் பயன் பெறுவதும் அனைவரும் பெற வேண்டும்.

எப்போதும் நிழலில் இருப்பவருக்கு வெயில் அனுபவமே தெரியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், நிழலின் பெருமை, அருமையை அவரால் உணர்ந்து, சுவைக்க முடியாது.

பசியே தெரியாதவன் வாழ்க்கை, பலனற்ற ஒன்றாகும்; ருசியும் அவனுக்கு அதிகமாகத் தெரியாது. உணவின் பெருமை பசியினால் தான் பெரும் அளவுக்கு உணர்த்தப்படும்.

எங்களுக்கே ஏற்பட்ட அனுபவம், மிசா கைதியாக சிறை உணவு என்ற தண்டனை உணவை (அதிலும் எங் களுக்குத் திட்டமிட்டே தரப்பட்ட அருவருக்கத்தக்க உணவை வேறு வழியின்றி உண்ட நேரத்தில்,) நம் வீட்டுச் சமையலின் அருமை, பெருமை களையும், சிறிது உப்புக் குறைவாக இருந்தபோதும்கூட அதற்காக கோபத் தின் உச்சிக்குச் சென்று வீட்டு அம்மை யாரிடம் சண்டை பிடித்த காட்சிகள் எல்லாம் எங்கள் அகக்கண் முன் தோன்றியது; சுயபரிசோதனை செய்து பிறகு பக்குவமாகும் பாடத்தையும் போதித்தது! வெற்றியே பெற்று வந்த நான் (அதிலும் முதல் தகுதி, பரிசுகள் பெறு கின்றவன் என்ற எங்கோ ஒரு மூலையில் பதிந்த தன் முனைப்பு - என்னை அறியாமலேயே - இருந்த நிலையில்,) சட்டப்படிப்பு முதலாண்டில் தோல்வி யுற்றபோது அதை எளிதில் ஏற்றுக் கொண்டு செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை.

நான் தோல்வியுற்றது தான் நியாயம், அதிசயமானதோ, அக்கிரமம் ஆனதோ அல்ல; காரணம் நான் சட்டக் கல்லூரி வகுப்புக்கே செல்லாமல், அன்னையாருடன் சென்று, தேர்வுக்கு 15 நாள்கள்தான் படித்தேன் - நானே பாடங்களை! அய்யத்துடன் தேர்வு எழுதினேன்; மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தான் தோற்றேன் தேர்வில்!

எனது தோழர் கோ. சாமிதுரை அவரும் என்னைப் போலவே தோல் வியைத் தழுவியவர். இருவரும் அதி லேயும் கூட்டாளிகளாக அமைந்தோம். அவர் அதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு வழமைபோல் சினிமா, பொழுதுபோக்கு - இவைகளை விடவில்லை. நானோ இயல்பாகவே அவற்றில் நாட்டம் இல்லாத இயக்கப் பணி - கூட்டங்கள், பிரச்சாரத்தில் திளைப்பவன்; அவற்றையும் ஒதுக்கி மும்முரமாகப் படித்து நல்ல மதிப் பெண்கள் பெற்றுத் தேர்ந்தேன். அந்த அனுபவம் ஒரு வடுப்போல என்னை எப்போதும் பக்குவப்படுத்திய வாழ்க்கை அனுபவத்தைத் தந்தது!

கசப்புக்குப் பிறகு கிடைக்கும் இனிப்பின் சுவைதான் என்னே!

தோல்விக்குப்பின்னர் கிடைக்கும் வெற்றியின் மதிப்புதான் எவ்வளவு!

அது மட்டுமா? ஓர் அமைப்பில் வெற்றி கிட்டும்போது, அதனைக் கொண்டாட பலரும் உரிமை பாராட் டுவர்.

தோல்வி என்றால், எவரும் திரும்பும் முன் நம்மை தனியாக விட்டு ஓடவே முயற்சிப்பார்கள்.

இது உலக இயற்கைதான்! பழி தூற்றும் பகைவர்கள் பலரும் இச்சந்தர்ப்பம்தான் நமக்கு அரிய வாய்ப்புச் சேற்றை வாரி இறைத்து, நமக்கு வேண்டாதவர்களை அழிக்க, ஒழிக்க அரிய சந்தர்ப்பம் என்றும் மகிழ்வர். லட்சிய வீரர் - வீராங் கனைகளுக்கு இந்த பழியும் - குற்றச் சாற்றுகளும் பொறாமைப் புழுக்களின் புலம்பல்கள் என்று தூசி தட்டி விட்டு இலக்கு நோக்கியே பயணிப்பர் - கார ணம் வாழ்வில் என்றும் பயணங்கள் முடிவதில்லை; பாதைகள் மூடப் படுவதில்லை.

- கி. வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/80582.html#ixzz32DGhArJh

தமிழ் ஓவியா said...


நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHqHz3B

தமிழ் ஓவியா said...

சாறுகளில் உடல்நலம்

இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.

வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.

வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.

புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.

நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.

துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.

முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.

அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHzQHcI

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகள்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த சர்க்கரை நோயே. அதிகம் பசி உண்டாகும். நாவறட்சி அடிக்கடி ஏற்படும். உடல் சோர் வாகவே இருக்கும். அடிக்கடி சிறுநீர் பிரியும்.

கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும். கண் பார்வை மங்கல் உண்டாகும். பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும். திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும். அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும். உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்

நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சில காய்கறிகள்

வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப் பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு. இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாக வும் செய்து அருந்தலாம்.

காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், அய்ஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DICgRKU

தமிழ் ஓவியா said...


கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


கருவுற்றவர்கள் உண்ணும் சில உணவுகளில் கருச் சிதைவையோ அல்லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும் கிருமிகளும் பாக்டீரியாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கருவுற்றவர்கள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மீன்கள்: ஆற்று மீன்களையோ, குளத்து மீன்களையோ அல்லது அய்ஸ் வைத்த பதப்படுத்தப்பட்ட மீன்களையோ சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கருவுற்ற நேரத்தில் அவர்களது உடலில் இருக்கவேண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.

அசைவ உணவுகள்: ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்பதால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப் படுவதால், கருச்சிதைவும் ஏற்படும் அபாயம் உண்டு.

துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும்.

பழங்கள்: அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் ஆகிய இரண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள வெப்பத்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணமாகி விடும்.

காய்கறிகள்: சுத்தம் செய்யப்பட்ட காய்கறிகளை (முட்டை கோஸ், காலி ஃபிளவர் போன்றவற்றை வெந்நீரில் கழுவிய பின் சமையலுக்கு பயன்படுத்தலாம்) சமைத்து உண்ண வேண்டும். கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும். பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்கக் கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/80559.html#ixzz32DIT735g

தமிழ் ஓவியா said...

தோல் நோய்களை நீக்கும் தகரை

அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்ளும் காலம் இது. கரிய நிறமாகட்டும் சிவந்த நிறமாகட்டும் பார்த்தவுடன் அழகை வெளிப் படுத்துவது தோல் தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் சிறப்பு. தோலில் பாதிப்பு ஏற்பட்டால் வேதனை படாதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை நீக்கும் மூலிகை தகரை.

தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை என பல்வேறு வகை தகரைகள் உள்ளன. அனைத்தும் ஒரே வகையான பண்புகளை கொண்டிருந்தாலும் கை வைத் தியம் என்ற மருத்துவ முறை தெரிந்தவர்களால் தகரையும் ஊசித்தகரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தகரையானது நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.

வெருட்டல் மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் பயிறு போல நீண்டிருக்கும். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும். பெண்கள் அணியும் பாவாடையை இறுக்கமாக கட்டினால் இடுப்பு பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும். அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை பார்க்காமல் அதிகரிக்க செய்து விடுவார்கள்.

படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. தகரை இலையை பறித்து சிறிது எலுமிச்சை சாறு விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொண்டு குளிப்பதற்கு சில மணிநேரம் முன் படர்தாமரை உள்ள இடத்தில் பூசி விட்டு பிறகு குளித்தால் சில நாட்களில் இது தீரும். தடவும் போது சிறிது எரிச்சல் கொடுத்தாலும், நோய் நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும்.

மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக தோன்றி ஆறாத சிரங்காக மாறுவதும் உண்டு. பெரும்பாலும் கோடை தொடங்கும் காலத்தில் வரும் இந்த பிரச்சினைக்கு தகரையின் இலையை பறித்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி மற்றும் சிரங்கை கழுவி விட்டு இலையுடன் மஞ்சள் அரைத்து பற்றிட்டால் பறந்து போகும்.



தமிழ் ஓவியா said...


உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா?


உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா? வயல் எஸ்டேட் தொழிலில் சிக்கலா? போர்வெல் அமைக்க வேண்டுமா?

கவலைப்படாதீர்கள். காவல் நிலையம் போகா தீர்கள் - நீதிமன்றம் போகாதீர்கள்! மண்ணச்சநல்லூரில் இருக்கும் பூமிநாத சாமியைச் சென்று தரிசியுங்கள் - காரியம் கைக் கூடும்! என்று தினமணி வெள்ளி மணி கூறுகிறது! வெட்கக் கேடு!

சக்தி கொடு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஜேபி சார்பில் போட்டியிட்டார் அருண்ஜெட்லி. அவர் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீக்கியர்களின் 10ஆம் மதக் குருவான குருகோவிந்தசிங் எழுதிய நூலிலி ருந்து ஒரு பாடலைப் பாடினார்.

கூட்டத்தில் உள்ளவர் களையும் திருப்பிப் பாடச் சொன்னார். கடவுளே எனக்குச் சக்தி கொடு நல்ல விஷயங்களைச் செய்வதற்குப் பலம் கொடு. எனது எதிரியை எதிர் கொள்ள அச்சப்படாமல் இருக்கச் செய்!

நியாயமான வெற்றி என் பக்கம் இருக்கட்டும் என்ற வரியில் நிச்சயமான வெற்றி அருண்ஜெட்லி பக்கமாகவே இருக்கட்டும் என்று மாற்றிப் பாடச் சொன்னார் - பாடினார்கள். ஆனால் முடிவு தேர்தலில் தோற்று விட்டாரே! கடவுள் கதை கந்தையாகி விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/80540.html#ixzz32DJZTyM4

தமிழ் ஓவியா said...


16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தரும் தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே! பி.ஜே.பி.யில் நிறுத்தப்பட்ட 5 முஸ்லிம்களும் தோல்வியே!

புதுடில்லி, மே 18- 16ஆம் மக்களவைத் தேர் தலில் சிறுபான்மை மக் களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத் துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படு கிறது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது.

16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக் களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப் பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ் லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர் களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்க ளவையில் இடம் பெற் றிருந்தனர்.

தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழு வதும் 5 முஸ்லிம் வேட்பா ளர்களை மட்டுமே களத் தில் நிறுத்தியது. இந்த 5 பேரும் தோல்வி அடைந்து விட்டனர். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி சார்பில் மட்டும், பீகாரின் காகரியா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லீம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அய்க்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 16ஆம் மக்களவைக்கு 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இவர் களில் 4 பேர் காங்கிரஸ் சார்பிலும், 2 பேர் தேசிய வாத காங்கிரஸ் சார்பிலும் ஒருவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பிலும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்களவையில் முஸ் லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலை வர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இமுஷாவரத் அமைப்பின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில்: தேசிய அரசி யலில் பா.ஜ.க. மிகப் பெரிய சக்தியாக உருவெ டுத்துள்ள நிலையில் மிக விரைவில் முஸ்லிம் இப் பதவிக்கு பொருத்தமற்ற வர்களாக ஆக்கப்படுவார் கள் என்றார்.

பெண் உறுப்பினர்கள் உயர்வு

மக்களவையில் பெண் உறுப்பினர்கள் எண் ணிக்கை தொடர்ந்து போதிய அளவில் இல்லாமல் இருந்தாலும், 16ஆம் மக்களவையில் இவர்களின் எண்ணிக்கை 62 ஆக (சுமார் 11 சதவீதம்) உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் 2009 மக்களவையில் 61 பெண் உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்பட்டதே அதிக பட்ச அளவாக இருந்தது.

தற்போதைய மக்கள வைக்கு பா.ஜ.க. சார்பில் அதிகபட்சமாக 28 பெண் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மக்கள வைக்கு 3 பெண் உறுப் பினர்களை மட்டுமே அனுப்புகிறது. ஆம் ஆத்மி சார்பில் 4 பேர் போட்டி யிட்டாலும் யாரும் வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் போட்டியிட்ட 8,163 வேட்பாளர்களில் 636 பேர் பெண்கள்.

Read more: http://viduthalai.in/page1/80544.html#ixzz32DK9L8Hw

தமிழ் ஓவியா said...


அயோத்திதாசப் பண்டிதர்


ஒடுக்கப்பட்ட மக்களால் என்றென்றைக்கும் மறக்கப்பட முடியாத பெயர்.

பவுத்த நெறிக்குப் புதுக் குருதியைப் பாய்ச்சியவர் பூர்வ காலத்தில் பவுத்தர்களாய் இருந்தவர்கள் ஆதி திராவிடர்கள் என்று நிறுவியவர்.

அவர் கள் இந்துக்கள் அல்லர் என்றும் உறுதியாகக் கூறியவர்.

அண்ணல் அம்பேத்கர் பவுத்த மார்க்கத்தைத் தழுவியதற்கு ஒரு வகையில் முன்னோடியாக இருந்த வர் என்று கூடச் சொல் லலாம்.

திராவிடக் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி நடத்தி வந்த ஜான்ரத்தினம் அவர் களுடன் இணைந்து திரா விடப் பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கிவர் (1882).

1907 ஜூன் முதல் தேதியன்று அவர் தொடங் கிய மற்றொரு இதழ் ஒரு பைசா தமிழன் அவருக்குப் பிறகு அவரின் மகன் பட்டாபிராமன் 14 மாதங்கள் இவ்விதழை நடத்தினார்; அதற்குப்பிறகு ஒரு பைசா தமிழன் இதழை கோலார் தங்க வயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் நடத் தினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்தக் கால கட்டத் தில் இதழ்நடத்துவதற்கு மரண தைரியம் இருந் திருக்க வேண்டும்.

1881இல் இந்தியக் குடிமக்கள் கணக்கெடுப்பு முதன் முதலாக நடந்த போது, சாதியற்ற திராவிடர்கள், அல்லது ஆதித் தமிழர்கள் என்று பதிவு செய்யுமாறு தாழ்த் தப்பட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திராவிடர் என்ற சொல்லாக்கத்தை பெரியார் தான் கண்டுபிடித்தது போலவும், அந்தப் பெயரால் தமிழ் உணர்வு குன்றி விட்டது போலவும் குறுக்குச் சால் ஓட்டும் குறுக்குப் புத்திக்காரர்களின் காதுகளைத் திருகும் வகையில், சாதியற்ற திராவிடர்கள் அல்லது ஆதித் தமிழர்கள் என்று மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் குறிப்பிட்ட தன் மூலம் இரண்டும் வேறுபாடுடையதல்ல என்று ஆணி அடித்தது போலவே அறைய வில்லையா?

திராவிட மகாசபை என்று ஏன் இந்தப் பெயரில் அமைப்பைத் தொடங்கினார் என்பதையும் தமிழ்த் தேசிய தீரர்கள் தெரிந்து கொள்வார்களாக!

காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாச பண்டித ரிடம் கல்வி கற்றதால் இப்பெயரை ஏற்றார்.

இன்று அவர் பிறந்த நாள் (1845) மறைவு 1914 மே 5.

வாழ்க அயோத்திதாசர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/80613.html#ixzz32J5C3HWf

தமிழ் ஓவியா said...


இன்றைய நம் கேள்வி???


தமிழ்நாடு - அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்கள்? எந்த அமைச்சருக்கு எந்த இலாகா என்பதை நூறு சதவீதம்கூட வேண்டாம் - தோராயமாக 50 சதவீதம் சரியாகச் சொல்லக் கூடியவர்கள் யாரேனும் உண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/80621.html#ixzz32J5NnA4W

தமிழ் ஓவியா said...




சபாஷ்! பீகார் வழிகாட்டுகிறது!

பீகார் முதல்வராகிறார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ராம் மன்ஜி

பாட்னா, மே 20- பதவி விலகிய பிறகு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்க முடியாது என பிடிவாதமாக கூறிய நிதிஷ் குமார், தனது நெருங்கிய நண்பரான ஜிதன் ராம் மன்ஜியை பீகாரின் புதிய முதல்வராக தேர்வு செய்துள்ளார். இதனால், பீகார் அரசியலில் 2 நாளாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

மக்களவை தேர்தலில், பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் படுதோல் வியை சந்தித்தது. 40 தொகுதி களில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று, நிதிஷ் குமார் முதல்வர் பதவியி லிருந்து விலகினார். கட்சி தலை வர் சரத் யாதவ்வின் நிர்பந்தத்தினால்தான் பதவி விலகியதாகவும் சர்ச்சை கிளம்பியது.

நிதிஷ்குமார் பதவி வில கியதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய் வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் பாட்னாவில் நடந்தது. இதில், பெரும்பாலான எம்எல்ஏக்களும் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக வேண்டும், தனது பதவி விலகல் முடிவை அவர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த, நிதிஷ்குமார், ஒருநாள் அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, நேற்று காலை பேட்டியளித்த கட்சி தலைவர் சரத் யாதவ், நிதிஷ்குமார் பதவி விலகியதுதான் இறுதி முடிவு. அதில் மாற்றமே கிடையாது. புதிய முதல்வர் தான் தேர்வு செய்யப்படு வார் என திட்டவட்டமாக அறிவித்தார். அதே போல, மதியம் நடந்த எம்எல் ஏக்கள் குழு கூட்டத்தில் நிதிஷ்குமாரும் தனது முடிவை மாற்றிக் கொள்ள சம்மதிக்கவில்லை. இதனால், புதிய முதல்வரை நிதிஷ்குமாரே தேர்வு செய்ய வேண்டுமென எம்எல் ஏக்கள் வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார், மாலையில் புதிய முதல்வராக தனது நெருங் கிய நண்பரான ஜிதன் ராம் மன்ஜியை தேர்வு செய்து அறிவித்தார். இதற்கு, கட்சி தலைவர் சரத் யாதவ், பீகார் மாநில தலைவர் பசிஸ்தா நாராயணன் சிங் உட்பட அனைத்து தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

68 வயதாகும் ஜிதன் ராம் மன்ஜி, நிதிஷ்குமார் அமைச் சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

தலித் சமூகத்தை சேர்ந் தவர். இதைத்தொடர்ந்து, அய்க்கிய ஜனதா தளம் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய முதல்வர் தேர்வு செய்யப் பட்டதால், பீகார் அரசிய லில் 2 நாளாக நீடித்த வந்த குழப்பம் முடிவுக்கு வந் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80620.html#ixzz32J5WDFDH

தமிழ் ஓவியா said...


இலங்கைப் போர் குற்றச் செயல்கள் விசாரணைக்கு இலங்கை அரசு இடமளித்தே ஆக வேண்டும்!


இலங்கைப் போர் குற்றச் செயல்கள் விசாரணைக்கு இலங்கை அரசு இடமளித்தே ஆக வேண்டும்!

மனித உரிமை கண்காணிப்பகம் உறுதி!

ஜெனீவா, மே 20- இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர் பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப் பகம் மீண்டும் வலியு றுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக விசாரணை களை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதி யளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல் கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர் பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையா ளர் நவநீதம்பிள்ளை யிடம் தீர்மானத்தில் கோரப்பட் டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை யின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிரகாரித்துள் ளதாக மனித உரிமைப் பேரவையின் ஆசிய பிராந் தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்தம் நிறை வடைந்து அய்ந்து ஆண்டு கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் நம்பக மானதும் பக்கச் சார்பற்றது மான விசாரணைகள் நடத் தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைப் பேர வையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு விசா ரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக் கப்பட்டவர்கள் நியாயத் திற்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் இலங்கையில் நீடித்து வருவ தாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள், ஊடகவி யலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டா ளர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோ கிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் அபிலாஷை களை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்ட வில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தில் உயிர் நீத்த வர்களுக்கு அஞ்சலி செலுத் தவும் இலங்கை அரசாங் கம் அனுமதி மறுத்திருந்த தாகத் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80617.html#ixzz32J5kq3pW

தமிழ் ஓவியா said...


நடத்தப்படக்கூடாது


அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், தேவைக்கும் பொருத்தமில்லாத காரி யங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ, மற்றெதன் பேராலோ நடத்தப்படக்கூடாது.

- (குடிஅரசு, 29.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/80628.html#ixzz32J5y3Hbg

தமிழ் ஓவியா said...


13 சதவீதத்தினருக்குப் பிரதிநிதித்துவம் 4 சதவீதம்

16ஆம் மக்களவைத் தேர்தலில் சில அம்சங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை - கவலையுடன் சிந்திக்கப்படக் கூடியவையும் கூட!

13 சதவீத மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்குக் கிடைத்துள்ள இடங்கள் 4 சதவீதமே!

பி.ஜே.பி. சார்பாக இந்தியா முழுமையும் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் 7 பேர்; இந்த ஏழு பேரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இந்த ஏழு தொகுதிகளில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மூன்று இடங்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பிஜேபிக்கு வாக்குகள் அறவே கிடைக்காது என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் மூன்று இஸ்லாமி யர்களைத் தேடிப் பிடித்து நிறுத்தி வைத்துள்ளனர் இதன் நோக்கம் வெளிப்படை!

எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்று சொல்லுவதில்லையா? அந்தக் கணக்கைச் சேர்ந்ததுதான் இதுவும்.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலோ, உத்தரப் பிரதேசத்திலோ, ஒரு முஸ்லீமுக்குக்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் அவர்கள் அறவே புறக்கணிக்கப் பட்டுள்ளனர். சிறுபான்மையினரை மாற்றாந் தாய் மனப்பான் மையுடன் அணுகும் கொள்கையைக் கொண்ட ஓர் ஆட்சியில் தங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக் கும் நாடாளுமன்றத்தில் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பது கவலை தருவதாக உள்ளது.

அதுவும் யூனிபார்ம் சிவில் கோட் கொண்டு வருவோம் என்றும், காஷ்மீர் மாநிலத்துக்கென்று பிரத்தியேக வாய்ப்புள்ள 370 ஆவது பிரிவை அகற்றுவோம் என்றும் தேர்தல் அறிக்கையிலேயே வெளிப்படுத்தியவர்களின் ஆட்சி மத்தியில் அமைந் திருக்கும்போது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை யாருக்கோ வந்தது என்ற மனப்பான்மையில் மற்றவர்கள் இருந்து விடாது, இந்துத்துவா கண்ணோட்டத்தோடு மத்திய அரசு செயல்படும் பொழுது, அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பாதுகாப்பதில் கூடுதலான கவனமும், கவலையும் மற்றவர்களால் செலுத்தப்பட வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பகுதியில் பி.ஜே.பி.யின் கொள்கைதானே தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) கொள்கையல்ல என்று பிஜேபியைச் சேர்ந்த சில தலைவர்கள் சொன்னதுண்டு. அதனை அவர்கள் எந்த அளவு கடைப்பிடிக்கிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.

உலகில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் முதல் மூன்று நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதை முதலில் தெரிந்து கொள்வதோடு புரிந்து கொள்வது என்பது முக்கியமாகும்.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக ஓர் அரசே செயல்படுகிறது என்றால் சர்வதேச அளவில் பல பாதிப்புகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும்; வெளியில் இருக்கும் பொழுது எப்படியோ பேசலாம் எழுதலாம். ஆட்சிப் பொறுப்புக்கு வரும் பொழுதுதான், பொறுப்பின் வலி என்ன என்பது விளங்கும்.

முஸ்லீம்களாவது ஓரளவு அரசியல் தன்மை பெற்றுள்ளார்கள், கிறித்தவர்கள் அந்த நிலைக்கு இன்னும் தயாராகவில்லை என்பதுதான் உண்மை.

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸின் கட்டளைக்கு அடி பணிந்தால், மதச் சார்பின்மை தகரக் கூடிய ஒரு நிலையை உண்டாக்கி விடும் என்பதை மறந்து விடக் கூடாது. மக்கள் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன; அவற்றில் கவனம் செலுத்துவதுதான் ஓர் ஆட்சிக்கு புத்திசாலித்தனமானதாக இருக்க முடியும். எந்தத் திசையில் ஆட்சி நகர்கிறது என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/80632.html#ixzz32J68fHY8

தமிழ் ஓவியா said...

அஞ்சல் பெட்டித் தமிழர்கள்


அஞ்சல் பெட்டியே!
உன் திறந்த வாயில்
திணித்த எதையும்...
நீ செரித்துக் கொண்டதில்லை.

உன் வயிற்றைத் துடைக்க
மீண்டும் மீண்டும்
வெற்றுப் பெட்டியாய்
நிற்கிறாய்
எம் தமிழர்களைப் போல.

தாய்மொழிப் பற்று
பகுத்தறிவு
இனமானம்
தன்மானம் என
எல்லாம்தான் போட்டோம்
தமிழன் மண்டையில் பாரேன்
உன்னைப் போலவே
வெற்றுப் பெட்டியாய் நிற்கிறான்
எதையும் செரித்துக் கொள்ளாமல்.

நீ திறந்தவாய் மூடமாட்டாய்
கடிதங்களுக்காக.
எம் தமிழர்களும்
பொருளுக்காக
பதவிக்காக
வீணரைப் புகழ்வதற்காக
வாய் திறந்தே இருக்கிறார்கள்.

உனக்குக் கண் இல்லை
காதும் மூக்குமில்லை
வாயும்
நேரம் காட்டும்
வெளியும்தான்.

தமிழனுக்கோ
அய்ம்பொறியும் உண்டு
ஆறறிவும் உண்டு
ஆனாலும்
உன்னைப் போலவே
வாயும்
வெளியும்
உள்ள பெட்டியாய் நிற்கிறான்.

அஞ்சல் பெட்டியா நீ?
வெடிகுண்டை உன் வாயில் இட்டாலும்
அஞ்சாமல்
வாய் திறந்தே நிற்கும்
நீயா அஞ்சல் பெட்டி

கல்லுக்கும்
உலோக, மரபொம்மைக்கும்
மாட்டுச் சாணிக்கும் அஞ்சி கும்பிட்டுக் கூத்தாடும் மனிதர்களே
முழுமூட அஞ்சல் பட்டிகள்



- பொன்.இராமசந்திரன், பம்மல்

தமிழ் ஓவியா said...

அணிய வேண்டிய ஆடை!


ஜாதி, சமயமற்ற
சமுதாயம் படைப்பது
திராவிடம்!

ஜாதி, மதவெறிக்கு
மகுடம் சூட்டுவது
தமிழ்த் தேசியம்!

அம்மணமாயிருக்கும்
என்னுயிர்த் தமிழா!
ஆடையாய் நீ
அணிய வேண்டியது -
திராவிடமா?
தமிழ்த் தேசியமா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


கோயில்களில் - மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்கு முன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குறுங்கதை : சுயமரியாதை


- க.அருள்மொழி

காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா என்று கேட்டபடியே பார்வதியின் அருகில் போனாள் சரசு.

என்னடி, நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீயும் முடியாதுன்னே சொல்லிக்கிட்டிருக்கே? இவ்வளவு தூரம் காஞ்சனா வீட்டு வரைக்கும் வர்றே... அப்படியே என் வீட்டிலும் வேலை செய்து கொடுத்திட்டுப் போன்னா முடியாதுன்னு சொல்றியே? அவள் மட்டும் என்ன அதிகமான சம்பளமா கொடுத்திடுறா? என்றாள் பார்வதி.

இல்லைக்கா என்னால முடியாது என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டாள் சரசு.

பார்வதிக்கு முகத்தில் அடித்ததுபோல் இருந்தது. அப்படி என்னதான் சொக்குப் பொடி போடுகிறாள் இந்தக் காஞ்சனா? நாலைந்து வருஷமாக காஞ்சனா வீட்டில் தொடர்ந்து வேலை செய்கிறாள் சரசு. பார்வதிக்கோ இரண்டு மாதம் கூட தொடர்ந்தாற்போல் யாரும் வேலை செய்வதில்லை.

காஞ்சனா வீட்டில் வேலை செய்துவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்குப் போகும் சரசு, பார்வதியின் வீட்டுக்குப் போகமாட்டேன்கிறாள் என்பது புதிராகவே இருந்தது.

அடுத்தநாள் சரசு, காஞ்சனாவின் வீட்டுக்குள் போனதும் பார்வதியும் போனாள்.

பார்வதியை வரவேற்று உட்காரச் சொன்ன காஞ்சனா, சரசுவிற்கு வேலைகளைச் சொன்னாள். சரசு, இங்க பாருங்க, இதையெல்லாம் சுத்தம் செய்து விட்டு, இதையெல்லாம் வெளியே போட்டுடுங்க.

அந்தப் பாத்திரங்களையெல்லாம் அங்கே அடுக்கிடுங்க. காபி போட்டு உங்களுக்கு எடுத்துக்கிட்டு எங்களுக்கும் கொடுங்க என்றதும், சரிங்கம்மா சரிங்கம்மா என்று சொல்லிவிட்டு, சொன்னதையெல்லாம் வேகமாகச் செய்துவிட்டு வெளியேறினாள்.

பார்வதிக்குப் புரிந்துவிட்டது. காஞ்சனா போட்டது மரியாதைச் சொக்குப் பொடி என்று. சுயமரியாதை என்பது, தான் எதிர்பார்ப்பதையே மற்றவர்களுக்கும் தருவது.

தமிழ் ஓவியா said...

கைமேல் பலன்?


காசிக்குச் சென்று
கங்கையில் நீராடி
கங்கை நீர் கொண்டு
ராமநாதருக்கு
அபிஷேகம் செய்ய
ராமேஸ்வரம் சென்றவர்
குடும்பத்தோடு மாண்டார்
சாலை விபத்தில்!

தெய்வத்தின் திருவருள்
முன்னோர்களின் நல்லாசி
உடனே கிட்டியது
கைமேல் பலன் என்பது
இதுதானோ?

_நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ் ஓவியா said...

புதுப்பா : யாராலே?....


மான மிழந்தோம் ஆரியத்தால்
மதி யிழந்தோம் ஆரியத்தால்
உரிமை யிழந்தோம் ஆரியத்தால்
உணர்வை இழந்தோம் ஆரியத்தால்

சாத்திரத்திற்கும் அடிமை யானோம்
கோத்திரத்திற்கும் அடிமை யானோம்
மந்திரத்திற்கும் அடிமை யானோம்
மதத்திற்கும் அடிமை யானோம்

அண்டிப் பிழைத்தது ஆரியக் கூட்டம்
மண்டிக் கிடந்தது மக்கள் கூட்டம்
தன்மானம் இன மானம்
காத்தது எம் திராவிடமே

குலக் கல்வித் திட்டத்தைக்
கொண்டு வந்தது ஆரியமே
ஆரிய நஞ்சின் ஆணவத்தை
அழித் தொழித்தது திராவிடமே

இடுப்புத் துண்டு தோளுக்கு
இடம் மாறியது திராவிடத்தால்
இட ஒதுக்கீடும் இன்றளவும்
இத மானது திராவிடத்தால்

சூத்திரன் என்றுனைச் சொன்னாலே
ஆத்திரம் கொண்டு அடிப்பாயே
சொன்னது சொன்னது யாரது?
எம் தந்தை பெரியாரே!

பெண் குலத்தைக் கோவிலுக்கு
நேர்ந்து விட்டது கொடுமையடா!
பொட்டுக் கட்டும் தேவதாசிமுறை
ஒழிந்தது திராவிடத்தால்

கோவில் நுழைவு திராவிடத்தால்
காலுக்கு செருப்பு திராவிடத்தால்
பெண்ணுக்கு உரிமை திராவிடத்தால்
பெண் கல்வியும் திராவிடத்தால்

ஆணும் பெண்ணும் சமம்
திராவிடத் தாலே திராவிடத்தால்
அச்ச மென்பது இனியில்லை
திராவிடத் தாலே திராவிடத்தால்

அம்மி மிதிக்கல அக்னியில்லை
அடிமைச் சின்னமும் பெண்ணுக்கில்லை
மணி விழா மணவிழா
யாராலே திராவிடத் தாலே

திராவிடத்தால் உயிர் பெற்றோம்!
திராவிடத்தால் எழுந் திட்டோம்!
திராவிடத்தால் வாழ்ந் திடுவோம்!
திராவிடத்தால் வீழ்ச்சி இனியில்லை!

- குடியாத்தம் ந.தேன்மொழி