Search This Blog

8.5.14

புத்த தசாவதாரக் கதையில் பரிணாமக் கொள்கை இருக்கிறதாமே?

புத்த (தசா)வதாரக் கதையில் பரிணாமக் கொள்கை இருக்கிறதாமே?




    வெறியின் வெளிப்பாடு
    சிந்தனையாளர் வரிசை _ என்ற தொடர் நூல்களுள் ஒன்று:
    சிந்தனையாளர் டார்வின், இதன் ஆசிரியர் திரு. ஜெகசிற்பியன் அவர்கள். வைரஸ் முதல் மனிதன் வரை _ என்பது ஒரு நூல்: இதன் ஆசிரியர் திரு. கே.என்.ராமச்சந்திரன் அவர்கள்.
    இரண்டு நூல்களுமே, முதன்மையாக பரிணாமக் கொள்கை எனப்படும் உருமலர்ச்சிக் கோட்பாட்டை மய்யமாகக் கொண்டவை. அறிவியல் நூல்கள் என அழைக்கப்படும் இந்நூல்களின் ஆசிரியர்கள் இருவருமே தங்களின் விளக்கங்களின் ஊடே ஊடே இடைச் செருகல்களாக, பின்வருமாறு தங்கள் இந்துமதப் பற்றினை, இல்லை, இல்லை _ வெறியினை வெளிப்படுத்தியுள்ளனர்.
    ஜெகசிற்பியன் பின்வருமாறு எழுதுகிறார்:
    என்ன பேரை வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?
    இன்றைய இந்துமதக் கொள்கை என ஏற்றிப் பேசப்படுகிறதோ அதே தத்துவம்தான் அன்றைய டார்வினிசமாய் நம் மக்களால் வெளியிடப்பட்டது என்று கூடச் சொல்லலாம்.
    அந்த டார்வினிசத்தின் பெயர் என்ன தெரியுமா? அதுதான், மஹாவிஷ்ணுவின் தசாவதாரம் என்பதாகும்.
    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!
    அடுத்து, கே.என்.ராமச்சந்திரன் எழுதுகிறார்: பூமியில் உயிரினங்கள் பரிணமித்து வந்த வரலாற்றைப் பார்க்கும்போது, நமக்கு விஷ்ணுபகவானின் பத்து அவதாரங்கள் நினைவுக்கு வருகின்றன. ஏதோ ஒரு அறிஞன் பரிணாமத் தத்துவத்தை அடையாளம் கண்டுகொண்டு தனது அறிவுக்கு ஏற்ற வகையில் அவதாரங்களாக விவரித்து விட்டானோ? என்று தோன்றுகிறது. வெட்கத்தை உதறிவிட்டவர்கள்
    படித்தீர்களா? இரு நூலாசிரியர்களும் பத்தவதாரங்களை பரிணாமக் கோட்பாட்டோடு, பொருத்தி கொஞ்சமும் கூச்சநாச்சம், வெட்கம் இவற்றை உதறி எறிந்துவிட்டு இந்துமத இதிகாச, புராணக் கற்பனைக் கட்டுக்கதைகளை அறிவியல் ஆய்வு முடிவுகளோடு முடிச்சுப் போட்டுள்ளனர். இருவருக்கிடையே என்ன ஒற்றுமை? எத்துணை ஒற்றுமை?
    புரட்டுவேலை செய்யப் புறப்பட்டாரே!
    மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் முதல் அவதாரமாக மச்ச (மீன்) அவதாரம் குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது கூர்மம் (ஆமை), மூன்றாவது வராகம் அதாவது பன்றி. நான்காவது அவதாரம் வாமனம். வாமனம் என்றால் குறள்வடிவு அல்லது குள்ளமான _ குறுகலான என்பது பொருள். ஆக, இந்தச் சொல்லுக்குக் கரடி அல்லது யானை என வைத்துக் கொள்ளலாம். அய்ந்தாவது அவதாரம் நரசிம்மம். அதாவது நர(மனித) உருவில் இருக்கும் சிங்கம். இப்படி, இந்த அய்ந்து அவதார உருவங்களும் பரிணாமத் தத்துவப்படி ஒன்றிலிருந்து ஒன்று திரிந்தும் சிதைந்தும் வளர்ச்சி பெற்றவையாக விளங்குகின்றன.
    தப்பும் தவறுமாய்
    ஜெகசிற்பியன் அவதார வரிசை கூறும்போது, முதல் மூன்று (மச்சம், கூர்மம், வராகம்) அவதாரங்களைச் சரியாகக் கூறிவிட்டு 4ஆவது அவதாரமாக வாமன அவதாரம் என்று தவறாகக் கூறுகிறாரே? நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்றுதானே புராணங்கள் புகல்கின்றன.
    வைணவ ஆழ்வார்கள் எல்லாம் திருமாலின் திருவிறக்கமாக பத்தவதாரங்களைக் கூறும்போது (திருவிறக்கம் என அவதாரத்தை மொழிஞாயிறு பாவாணர் வழங்குகிறார்) பின்வருமாறுதான் அவதார வரிசைமுறையினைப் பாடியுள்ளனர்.
    ஆழ்வார் பாடிய அவதார வரிசை
    தேவுடைய மீனமாய், ஆமையாய், ஏனம்ஆய், அரியாய், குறள்ஆய்,
    மூவுருவில் இராமன்ஆய், கண்ணன்ஆய்
    கல்கியாய் முடிப்பான்...
    என்பதாக, பெரியாழ்வார் பாடியுள்ளார். _பெரியாழ்வார் திருமொழி, நாலாயிர திவ்யப் பிரபந்தம்)
    ஏனம் _பன்றி; அரி _(நர)சிம்மம்; குறள்_வாமனம். மூவுருவில் இராமன் _(1.கோசலராமன், 2.பரசுராமன், 3.பலராமன்) இது ஓர் எடுத்துக்காட்டு. இது ஒன்று போதும் எனக் கருதுகிறோம்.
    வரிசை முறை தவறிய வன்கொடுமை
    அவதார வரிசை முறையாக, மச்ச (மீன்), கூர்ம (ஆமை), வராக (பன்றி), நரசிம்மம், வாமன, கோசலராம, பரசுராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்றுதான் ஆழ்வார் பாசுரம் கூறுகிறது.
    ஆனால், 4ஆவது அவதாரம் வாமனம், 5ஆவது அவதாரம் நரசிம்மம் என்று ஜெகசிற்பியன் கூறுகிறாரே? இல்லை குழப்புகிறாரே? வரிசை மாற்றுகிறாரே? ஏனிந்த மயக்கம்?
    பரிணாமக் கோட்பாட்டை பத்தவதாரக் கதையோடு பொருத்த வந்தவர், பரிதாபமாக வரிசை மாற்றி எழுதுகிறாரே? ஏன் இந்த மாற்றம்? தடுமாற்றம்? பரிணாமக் கோட்பாட்டின் படிநிலை உருமலர்ச்சி மாறிப்போய் விடாதா?

    யானையும் கரடியும் இங்கே ஏன் வந்தன?
    வாமனம் என்றால் குறள் வடிவு அல்லது குள்ளமான குறுகலான என்பது பொருள் என்கிறார் நூலாசிரியர்.
    நிரம்பச் சரி! அதுவே சரியான பொருள்! ஆனால், மறுபடியும் ஒரு குழப்பம் செய்கிறாரே இவர்! ஆக இந்தச் சொல்லுக்கு, கரடி அல்லது யானை என்று வைத்துக் கொள்ளலாம் என, ஒரு புதுக்கரடி விடுகிறாரே! கரடி அல்லது யானை என்று வைத்துக் கொள்ளலாம் என்கிறாரே! ஏன் அப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? கரடிக்கு இங்கென்ன வேலை? யானைக்கு இங்கென்ன அலுவல்? இப்படி வைத்துக்கொள்வது இவரது விருப்பமா? இவர் விருப்பத்தை எல்லாம் எவர் கேட்டார்கள்? எந்தப் புராணத்தில் இந்தப் பொருளில் கூறப்பட்டுள்ளது?
    அவதாரம் பற்றிக் குழப்பிட இவருக்கு யார் தந்தது அதிகாரம்?
    புராணம் அப்படிக் கூறியிருந்தால் அது தெளிவாகவே கரடி அவதாரம். அதாவது ஜாம்பவான் அவதாரம்; யானை அவதாரம் அல்லது கஜாவதாரம் என்று வெளிப்படையாகவே கூறியிருக்குமே? யார் தடுத்தார்கள்? எவர் மறுத்தார்கள்?
    அதுசரி, அப்படி வைத்துக் கொள்ளலாம்; இப்படி வைத்துக் கொள்ளலாம் என்கிறாரே? புதிய புராணம் புனைகிறாரே? இதற்கு யார் கொடுத்தார் இந்த அதிகாரம்?
    அடையாளம் காண்பதல்ல; ஆராய்ந்தறிவது
    ஏதோ ஒரு அறிஞன்(?) பரிணாமத் தத்துவத்தை அடையாளம் கண்டு அதனை அவதாரமாக்கி விட்டானோ? என்று தோன்றுகிறது _என்கிறார் கே.என்.ராமச்சந்திரன்.
    பரிணாமத் தத்துவம் என்ன வனாந்திரத்தில் பர்ணசாலையில் கிடக்கும் ஒன்றா? அதனை அந்த புராணகால மேதாவி அடையாளம் கண்டுகொண்டு அவதாரம் ஆக்கிவிட்டானோ? _ என வியக்கிறாரே இவர்?
    பரிணாம தத்துவம் அடையாளம் காண்பதன்று;  பட்டறிவால், பரந்துபட்ட அறிவியல் ஆராய்ச்சியால் உருவாக்குவது. அடையாளம் கண்டுகொண்ட அந்த அதிமேதாவி அதனை ஏன் அப்படியே பரிணாம தத்துவம் என்றே ஏட்டிலே எழுதி வைத்திருக்கலாமே?
    யார் இவர் கையைப் பிடித்துத் தடுத்தது? ஏட்டையும் எழுத்தாணியையும் யார் தட்டிவிட்டது? புராணக் கற்பனையாளர்களை அறிவியலாளர்கள் ஆக்க என்ன பாடுபடுகிறார் இவர்?
    அவன்தான் மனிதன்!
    முதலில் தோன்றியது மச்சம் (மீன்) என்கிறார் ஜெகசிற்பியன். முதலில் தோன்றிய உயிரினம் மீன் என்று டார்வின் எங்கே சொல்லியிருக்கிறார்? பரிணாமக் கொள்கையின் அடிப்படை என்ன? கீழான _தாழ்வான ஓர் உயிர் பரிணமித்து அதாவது உருமலர்ச்சி பெற்று, பல கிளைகளாகப் பிரிந்து, சிதைந்து, திரிபாக்கம் பெற்று உயிரினத்தின் உச்சகட்டம் ஆகிய மனிதன் ஆயிற்று என்பதுதான் பரிணாமக் கோட்பாட்டின் சாறு_ பிழிவு.
    சொன்னது நீதானா? சொல், சொல்?
    இதே ஜெகசிற்பியன், தனது நூலில் பிறிதோர் இடத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார். நீர்ப்பாசியிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, பல்லி, எலி, பெருச்சாளி, பன்றி, கரடி, எருமை, யானை, நாய், ஓநாய், புலி, சிங்கம் முதலிய ஜீவப் பிராணிகள் எல்லாம் பரிணாம ரீதியில் தோன்றி இறுதியில் குரங்கு என்ற ஒரு பிராணி தோன்றியது. அந்தக் குரங்கின் மூதாதையான ஒரு பிரிவின் காலக்கிரம வளர்ச்சியே மனிதன் _ என, பரிணாம வாதத் தத்துவம் கூறுகிறது _(நூல்: பக்கம் 77_78)
    இவரது விளக்கம் ஒருவாறு ஏற்கத்தக்கதே!
    என் கேள்விக்கு என்ன பதில்?
    அவரது விளக்கத்தின்படி, மச்சத்திற்கு முன் புழு, பூச்சை, நத்தை தோன்றியுள்ளன. அப்படியானால்? மச்சாவதாரத்துக்கு முன், புழு அவதாரம், பூச்சி அவதாரம் இவைதானே தோன்றியிருக்க வேண்டும்? பின் எப்படி மச்சம் (மீன்) முதலவதாரம் ஆக முடியும்? ஒரு கேள்வி முறை இல்லையா? பதில் சொல்ல வேண்டும் ஜெக(ஜால)சிற்பியன்!
    வேண்டாமே, இந்த விபரீத வேலை!
    ஜெகசிற்பியன் கூற்றின்படி தவளைக்குப் பின்தானே ஆமை (கூர்ம) அவதாரம் வருகிறது? மாண்டூக்ய (தவளை) அவதாரம் தானே முந்தி வந்திருக்க வேண்டும்? புராணம் அப்படிப் புகலவில்லையே? ஜெகசிற்பியன் ஏன் இப்படிப் புரட்டுவேலை செய்கிறார்? அறிவியலைத் தன் துணைக்கு இழுக்கிறார்? ஏன்? புராணக் கதைக்கு அறிவியலை ஏன் பொருத்துகிறார்? ஏன் இப்படி மயங்குகிறார்? தானும் மயங்கி, படிப்பவரையும் மயங்க வைக்கிறாரே ஜெகசிற்பியன்? வேண்டாம் அய்யா, இந்த விபரீத வேலை!
    வந்துட்டான்யா வந்துட்டான்!
    நாலாவது அவதாரம் வாமன அவதாரம். வாமனன் என்றால் குள்ளன் எனப் பொருள்! தந்தை பெரியார் குள்ளப் பார்ப்பான் எனக் குறிப்பிடுகிறார்.
    மகாபலி என்னும் அசுர(திராவிட) வேந்தனை அழித்து ஒழித்து, குழிதோண்டிப் புதைப்பதற்கே ஆரியன் எடுத்த அயோக்கியத்தனமானவன் இவன்.
    மனிதனாக வந்த மகா அயோக்கியன் வாமனன். இவனை, மனிதக் கயவனை, கரடி அல்லது யானை என வைத்துக் கொள்ளலாம் எனக் கதை விடுகிறாரே நூலாசிரியர்? புராணங்களில் இப்படிப் புகலவில்லையே? விலங்குகளுக்கு நான்கு கால்கள் அல்லவா உள்ளன? மனிதனுக்கு ஈரடிகள்தானே? இதோ சிலப்பதிகாரம் பின்வருமாறு பாடுகிறது. மூவுலகும் ஈரடியால்
    முறைநிரம்பா வகைமுடிய
    தாவிய சேவடி....
    உடையவன்தான் வாமனன் என்கிறதே, கண்ணை மூடிக்கொண்டு கரடி, யானை என பிதற்றுகிறாரே ஜெகசிற்பியன்? அந்தோ பரிதாபம்!
    அப்படியா கூறுகிறது அறிவியல்?
    அய்ந்தாவதாகக் கூறப்பட்டுள்ளது நரசிங்க அவதாரம். சிங்கத்தின் தலை; மனித உடல்! இவ்வாறு ஓர் உயிரினம் உலகில் உலவ, இருக்க முடியுமா? இது என்ன பரிணாமம்? இப்படிப்பட்ட உருமலர்ச்சி, வடிவம், நிலை, அறிவியலில், பரிணாமத் தத்துவத்தில் உயிரினத்துக்குக் கூறப்படவில்லையே? ஏன் இந்தத் தப்பான விளக்கம்? நரசிங்கம்! ஒரே அசிங்கம்!!
    பேச்சில்லை, மூச்சில்லை
    விலங்குகளின் நான்கு கால்களில் இரண்டைக் கைகளாகவும் மீதியைக் கால்களாகவும் கொண்டன என்கிறார் ஜெகசிற்பியன். விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் ஒரு கட்டமான முதனிலைப் பாலூட்டிகள் (Primates) குடும்பத்தில், மனிதனைத் தவிர, 1. குரங்கு (Monkey), 2. வாலில்லாக் குருங்கு (Ape) பற்றி ஏன் ஜெகசிற்பியன் பேச்சுப் பேசவில்லை; ஏன் மூச்சு விடவில்லை ?
    வானரங்கள் ஏன் வரவில்லை?
    குரங்கு (வாலுள்ளது) ஏன் வானர அவதாரம் என்று ஆகவில்லை? வாலில்லாக் குரங்கு வகைகளுள் சிம்பான்சி சிம்பான்சி அவதாரம் என்றோ, கொரில்லா கொரில்லாவதாரம் என்றோ, கிப்பன் கிப்பனாவதாரம் என்றோ, ஒராங் உடான் ஒராங் உடான் அவதாரம் என்றோ ஏன் கூறப்படவில்லை?
    சிரிப்புத்தான் வருகுதய்யா!
    இவ்வகை வாலில்லாக் குரங்குகளும் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டமல்லவா? இவையும் பரிணாமத் தத்துவக் கோட்பாட்டின் தத்துவம் என்று ஏன் தத்துப் பித்து என்று உளற அல்லது எழுதவில்லை? சிரிப்பு வருகிறது ஜெகசிற்பியன் அவர்களே!
    உருட்ட முடியுமா? சுருட்ட முடியுமா?
    தேவர்களுக்கு இன்னல் கொடுத்த ஓர் இராட்சதன் (இரண்யாட்சன்) பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் போய் ஓடி ஒளிந்து கொண்டானாம்! மஹாவிஷ்ணுவானவர், வராக (பன்றி) அவதாரம் எடுத்து கடலுக்குள் மூழ்கிப் போய், பூமியை மீட்டு வந்தானாம். இதுதான் வராகவதாரமாம்!
    ஒரே ஒரு கேள்வி! பூமியைப் பாயாகச் சுருட்ட முடியுமா? அது என்ன தட்டையாகவா விரித்துப் போடப்பட்டிருந்தது? பூமியைச் சுருட்ட முடியுமா? ஒருவேளை அது உருண்டையாக இருப்பதால் உருட்டலாம்.
    சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா?
    இந்த எளிய அறிவியல் _ புவியியல் அறிவுகூட இந்த இந்துமத மேதாவிகளுக்கு இல்லையே?
    இந்த இலட்சணத்தில், பரிணாமக் கோட்பாடு இந்துமதப் புராணங்களில் இருக்கிறதாமே? வெட்கமாக இல்லை?
    அய்யாவின் நெற்றியடி
    ஆமாம், பூமியைப் பாயாகச் சுருட்டும்போது மகாவிஷ்ணு எங்கே நின்றுகொண்டு சுருட்டினார்? பூமி சுருட்டப்படும்போது சகல சமுத்திரங்களும் பூமிப்பாய்க்குள்ளேதானே இருக்க முடியும்? அப்புறம் எந்தக் கடலுக்குள் மூழ்கி இந்தப் பன்றிப்பயல் பூமியை மீட்டு வந்தார்? என்று நெற்றியடிக் கேள்விகள் கேட்டாரே, பகுத்தறிவுப் பகலவன்? பதில் இன்னும் வந்த பாடில்லையே?
    ஆனால், பரிணாமக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்ப்பதில் குறைச்சலில்லை?
    பாதிக்குப் பொருத்தம்! மீதிக்கு ஏன் இல்லை?
    இந்த நூலாசிரியர் முதல் 5 அவதாரங்களை பரிணாமக் கோட்பாட்டோடு பொருத்திக்காட்ட முயன்றிருக்கிறார். மீதி 5 அவதாரங்களை ஏன் பரிணாமக் கொள்கையோடு பொருத்திக்காட்ட முயலவில்லை? ஏன் இந்த முயற்சியில் ஈடுபட வில்லை? பாடுபடவில்லை? அவற்றை அம்போ என்று அப்படியே துறந்துவிட்டு சந்யாசம் வாங்கிக் கொண்டாரே? ஏன்? ஏன்? ஏன்?
    இது எப்படி?
    பரிணாமம் என்பது காலம்கடந்து _ நீண்ட நெடுங்காலத்தின் பின்தானே நிகழமுடியும். ஆனால், ஒரே காலகட்டத்தில், கோசல ராமனும், கோடாலி ராமனும்(பரசுராமன்) வாழ்ந்துள்ளனரே? வாதிட்டுள்ளார்களே? இது எப்படி? ஒரே காலகட்டத்தில், கிருஷ்ணாவதாரமும் பலராமவதாரமும் மகாவிஷ்ணு எடுத்துள்ளார்களே. முன்னவன் தம்பி; பின்னவன் அண்ணன்! அவதாரம் எடுத்தவர் ஒருவர். எடுக்கப்பட்ட அவதாரங்கள் ஒரேசமயம் இரண்டு. இது எப்படி?
    பரிணாமம் என்றாலே ஒன்றிலிருந்து வேறொன்று சடுதி மாற்றம் (Mutation) காரணமாக, கிளைவிட்டு உருமலர்ச்சி பெறுவதுதானே?
    ஒன்பது என்பதுதான் உண்மை!
    தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை எடுத்துக்காட்டி நிறைவு செய்ய விரும்புகிறோம். விஷ்ணு 10 அவதாரங்கள் எடுத்தார் என்று சொல்லப்படுகிறதே ஒழிய, எடுத்த அவதாரங்கள் ஒன்பதுதான் என்று ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாக, 9 அவதாரங்களே எடுக்கப்பட்டுள்ளன.
    இன்னும் ஓர் அவதாரம் நடக்காமலே 10 அவதாரங்கள் என்று சொல்லப்படுகின்றது என்பதுதான்! கல்கி என்பதாக ஏற்படப் போகிறது என்றும் சொல்லப்படுகிறது _ (பெரியார் களஞ்சியம்: தொகுதி 2, பக்கம் 93_94). கலியுக முடிவில்தான், மகாவிஷ்ணு, பார்ப்பன குலத்தில் விஷ்ணுசர்மாவின் மகனாக அவதாரம் எடுத்து தேவதத்தம் என்னும் குதிரை ஏறி உருவிய வாளுடன், துஷ்டநிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்வாராம். (தகவல்: நூல் _ தசாவதார மஹிமையும் துணைப் பாத்திரப் பெருமையும்)
    வேண்டாம் இந்த வீண் வேலை!
    அவதாரங்கள் 9தான் கூறப்பட்டிருக்க பத்த(தசா)வதாரக் கதையில் பரிணாமக் கொள்கை இருக்கிறது என்பது பித்தலாட்டமல்லவா? கோமளித்தனத்துக்கு ஓர் உச்சவரம்பே இல்லையா? இதில் ஒரு வேடிக்கை.  தசாவதாரம் என்று ஒரு திரைப்படம் நாயகன் நடிகர் நடித்து தமிழில் வெளிவந்துவிட்டது!
    பத்த(தசா)வதாரத்தில் பரிணாமக் கோட்பாடு எனப்படும் அறிவியல் இருக்கிறது என்று புளகாங்கிதமடைவது _ புல்லரித்துப்போவது தகிடுதத்தம் அல்லவா? மோசடித்தனம் அல்லவா? திரிபுவாதம் அல்லவா?
    இது இந்துமத வெறி-. வேண்டாம் இந்த வீண் வேலை! விஞ்ஞானத்தோடு விளையாட வேண்டாம்!

    ---------------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன் அவர்கள் “உண்மை” மே 01-15 - 2014 இதழில் எழுதிய கட்டுரை

    17 comments:

    தமிழ் ஓவியா said...


    பக்தி வந்தால் புத்தி போகும்



    சிவபெருமானுக்கு நாக்கை அறுத்து காணிக்கையாம்!

    ராஞ்சி, மே 8- நாக்கை பிளேடால் அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியான நிகழ்வு ஜார்கண்ட் மாநிலத் தில் நடந்துள்ளது. ஜார் கண்ட் மாநிலம், தூகடா வில் உள்ள மகாதேவ் கர்ஹா என்ற சிவபெரு மான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) வந்தார். பின்னர் திடீர் என அந்த கோவிலில் உள்ள சிவபெருமான் சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.

    அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.

    உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன் சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.

    தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப் பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக கூறினர்.

    Read more: http://viduthalai.in/e-paper/79891.html#ixzz31B132qxV

    தமிழ் ஓவியா said...


    தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்


    ஏடுகளைப் படித்தால் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு மோசடி முதலிய செய்திகள்தான் முக்கிய இடம் பெறுகின்றன.

    எடுத்துக்காட்டாக மே 7ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ஏடுகளில் வெளிவந்த செய்திகள் வருமாறு:

    1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள்.

    2) பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு வெடிப்பு.

    3) சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் போதையில் இருந்த 3 காவல்துறையினர் இடை நீக்கம்!

    4) காகித ஆலையில் பணி பெற்றுத் தருவதாக ரூ.37.88 லட்சம் மோசடி.

    5) தாய், மகள், கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது (புதுக்கோட்டை - திருமயம் - வி. லட்சுமிபுரம்)

    6) அறந்தாங்கி எல்.என். புரத்தில் இரு வீடுகளில் திருட்டு.

    7) மயிலாடுதுறை லாகடம் காசி விசுவநாதர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கைகள் திருட்டு.

    8) தஞ்சாவூர் அருகே நல்லிச்சேரி கிராமத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்முறை.

    9) சேலம் மத்திய சிறையில் வார்டன்களுக்குக் கைதி மது விருந்து.

    10) திருச்சிராப்பள்ளியில் நடைப்பயிற்சி சென்ற வழக்குரைஞர் மதியழகன் வெட்டிக் கொலை.

    11) பழனி அருகே ஏழு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, இரு நூறு பவுன் நகைகள் ரூ.35,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.

    12) செம்பனார் கோயில் அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய இருவர்மீது வழக்கு.

    13) சிறீரங்கம் தேரோட்டத்தின்போது நகை திருடிய பெண் கைது.

    14) பெண்ணைக் காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய கால்நடை உதவி மருத்துவர் கைது (குடவாசல்).

    இவை எல்லாம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்.

    ஒரு நாளில் இந்தளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை? அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த கடந்தமூன்று ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

    ஆனால், முதல் அமைச்சர் துணிந்து தவறான தகவல்களை வீதிகளில் நடைபெறும் பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமல்ல; சட்டப் பேரவையில் கூட சொல்லுகிறார் என்றால் என்ன சொல்ல?

    தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள பிக்பாக்கெட்காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர் என்று சொன்னவர்தான் தமிழ்நாடு முதல் அமைச்சர். இப்படியெல்லாம் ஒரு முதல் அமைச்சரால் மனதறிந்து உண்மைக்கு மாறாக எப்படி சொல்ல முடிகிறதுஎன்பதுதான் ஆச்சரியமானது.

    தமிழ்நாட்டில் உள்ள ஏடுகளும், ஊடகங்களும்கூட பெரும் அளவு மறைத்து விடுவதுண்டு. அவற்றையும் மீறி வெளிவந்த தகவல்கள்தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை.

    திமுக பொருளாளர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்கூட சுட்டிக் காட்டியுள்ளார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முதல் அமைச்சர் போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    வெறும் அரசியல் உணர்வோடு இவற்றையெல்லாம் மறுக்காமல், ஆரோக்கியமான முறையில் சிந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ஒல்லும் வகையில் உரிய முறையில் தக்க நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும்.

    கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிப்பது சமாதானமாக ஆகி விட முடியாது.

    காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டது என்பது போன்ற காரணங்களை இந்தப் பிரச்சினையில் கூறிட முடியாது.

    அது வேறு பிரச்சினை; இது வேறு பிரச்சினை. காவல் துறையை, தன் பொறுப்பில் வைத்திருக்கிற முதல் அமைச்சருக்கு இதில் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது.

    பெண்கள் சாலைகளில் நடமாட முடியவில்லை; வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களின் சங்கிலிகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. பட்டப் பகலிலேயே கொலைகள்; மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில்கூட வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொலை என்பதெல்லாம் எந்தவகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?

    மக்கள் உயிர் வாழப் பாதுகாப்பு இல்லையென்றால் அதைவிட அவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?

    மற்றவர்கள்மீது குற்றச்சாற்றுகளைப் படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால், அதில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!

    Read more: http://viduthalai.in/page-2/79897.html#ixzz31B1c7Jmc

    தமிழ் ஓவியா said...


    நிரந்தர விரோதி


    நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
    (குடிஅரசு, 13.4.1930)

    Read more: http://viduthalai.in/page-2/79895.html#ixzz31B1kDrvJ

    தமிழ் ஓவியா said...

    இளரத்தம் பாய்ச்சி மூப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்

    வயோதிகத்திலும் மூளையில் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்த வர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

    சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி விஸ் கோரே, நேச்சர் மெடிசின் என்ற நூலில் எழுதியுள்ளார்.

    ஆனால் டிமென்ஷியா, அல்செய்மர்ஸ் போன்ற மூளை பாதிப்பு நோய்கள் மூப்படைவதால் மட்டும்தான் வருகின்றன என்று கூறுவதற்கில்லை என்று அந்நோய்கள் சம்பந்தமாக அய்க்கிய ராஜ்ஜியத்தில் சேவை ஆற்றிவரும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3M4WHv

    தமிழ் ஓவியா said...

    நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்வு

    மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.

    அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகும் ஆரோக்கிய மாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3Qz9Mp

    தமிழ் ஓவியா said...


    பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்


    விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.

    யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.

    கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மய்யத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.

    பெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொ னெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத் துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.

    பார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.

    பெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலி களும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    அவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.

    ஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக் கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது.

    வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித் ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.

    Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3YnoG4

    தமிழ் ஓவியா said...

    சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

    நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப் படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமை யான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதி கரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள்.

    இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இது போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக உள்ளிறங்கி வருவதாக விஞ் ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

    அதாவது, உலகின் சில பகுதிகளில் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதைவிட, நிலம் உள்ளிறங்குவது என்பது மோசமான பிரச்சினையாக மாறிவருவதாக, அய்ரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் விஞ்ஞான ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

    சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத் தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக இந்த விஞ் ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

    Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3gTMEx

    தமிழ் ஓவியா said...

    சுறாக்களின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள்: ஆய்வில் தகவல்

    பெரிய வகை வெள்ளை சுறாக்கள் எழுபது வயதுக்கும் மேல் வாழக்கூடியவை என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

    கதிரியக்கத் தன்மை கொண்ட கார்பனைக் கொண்டு சுறாக்களின் வயதை ஆய்வு செய்ததில் இவ்வகை ஆண் சுறாக்கள் 70வயதுக்கு மேலும், பெண் சுறாக்கள் 40 வயது வரையிலும் வாழக்கூடியவை எனக் கண்டறியப் பட்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3nDuko

    தமிழ் ஓவியா said...


    மே 8: உலக தாலசீமியா நோய் தினம் சொந்த உறவுகளில் திருமணம் செய்வதால் தாலசீமியா நோய் பாதிப்புடன் குழந்தை பிறக்கும்


    சொந்த உறவுகளில் திரு மணம் செய்தால், பிறக்கும் குழந்தை தாலசீமியா நோய் பாதிப்புடன் பிறக்கும் என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த நோய் நிபுணர் டி.உஷா தெரிவித் தார்.

    உலக தாலசீமியா நோய் தினம் மே 8ஆம் தேதி அனு சரிக்கப்படுகிறது. இந்த நோய் குழந்தைகளுக்கு பிறவியி லேயே வருகிறது. தாலசீமியா பாதித்த குழந்தைகளின் ரத் தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்.

    இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை ரத்த நோய் நிபுணர் மருத்துவர் டி.உஷா கூறிய தாவது:

    தாலசீமியா நோய் என் பது குழந்தைகளுக்கு பிற வியிலேயே ஏற்படும் ஒரு விதமான ரத்த சோகையா கும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இத னால், சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது.

    அதற் காக, குழந்தைக்கு ஹீமோ குளோபின் அளவை அதிக ரிக்க 6ஆவது மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண் டும்.

    குழந்தைக்கு மாதம் மாதம் ரத்தம் ஏற்றுவதால், உடலில் பல விதமான பிரச் சினைகள் வருகின்றன. மேலும் இரும்பு சத்து அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல தீவிர நோய்களும் வருவ தற்கு வாய்ப்புள்ளது.

    அம்மா, அப்பா வம்சா வழியில் யாருக்காவது தால சீமியா நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்நோய் வருகிறது. முக்கியமாக சொந்த உறவுகளில் திருமணம் செய் வதால் குழந்தைகள் தாலசீ மியா நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.

    அதனால், பெண்கள் கர்ப்பக் காலத்தில் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தை தால சீமியா நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்கலாம். தாலசீமியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், குழந்தை வேண்டாம் என நினைப்ப வர்கள் கருக்கலைப்பு செய்து விடலாம்.

    குறைபாட்டுடன் குழந்தையை பெற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவ தும் கஷ்டப்படுவதைவிட, கருக்கலைப்பு செய்துவிடு வது நல்லது. தாலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையே சிறந்த தீர்வாகும். - இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    Read more: http://viduthalai.in/page-8/79911.html#ixzz31B43Uee9

    தமிழ் ஓவியா said...

    பற்களை சோதிப்பதன் மூலம் பிறந்த தேதியை அறியலாம்

    சென்னை, மே 8- குழந்தை களுக்கு பற்கள் வளருவதை சோதிப்பதன் மூலம் அவர் களது பிறந்த தேதியைக் கண் டறிய முடியும் என ஹாங் காங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் குழந்தைகள் சார் மருத்துவ ஆராய்ச்சியா ளருமான மருத்துவர் ஜே. ஜெயராமன் கூறினார்.

    போரூர் சிறீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ கருத்தரங்கம் புதன் கிழமை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மருத் துவர் ஜே.ஜெயராமன் பேசி யது: பற்கள் வளர்வதைச் சோதிப்பதன் மூலம் ஒரு குழந்தை பிறந்ததை கிட்டத் தட்ட கண்டுபிடிக்கலாம். ஆண் குழந்தைகளின் வயதை 1.5 வாரம் மற்றும் பெண் குழந்தைகளின் வயதை 2.6 வார வித்தியாசத்துக்குள்ளும் துல்லியமாக நிர்ணயிக்க முடி யும்.

    இந்த வகையான சோத னைகள் இங்கிலாந்தில் பர வலாக பயன்படுத்தப்பட்டு சட்டரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அடிப் படைத் தகவல்கள் முறை யாக சேகரிக்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்ட பின்புதான் இதுபோன்ற ஆய்வுகள் நடத் தப்பட வேண்டும் என்றார் ஜெயராமன்.

    யுனிசெஃப் அமைப்பு கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 5 வயதுக்குள் பட்ட 41 சதவீத குழந்தை களே பிறக்கும்போது பதிவு செய்யப்படுகின்றன.

    இது குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், குழந் தைத் தொழிலாளர் முறை, பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என சிறீ ராமச்சந்திரா பல்கலைக்கழ கத்தின் குழந்தை சார் பல் மருத்துவத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.முத்து கூறினார்.

    Read more: http://viduthalai.in/page-8/79913.html#ixzz31B4Lskyl

    தமிழ் ஓவியா said...


    மனிதன்



    பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
    (விடுதலை, 9.6.1962)

    Read more: http://viduthalai.in/page-2/79958.html#ixzz31GtKHLwc

    தமிழ் ஓவியா said...


    பார்வதி -பரமசிவன் முத்தக் காட்சி!


    திருவாக்குஞ் செய்கருமங் கை கூட்டுஞ் செஞ்சொற்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
    காதலாற் கூப்புவர்தங் கை

    விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற் றினைப் பாரீர்.

    கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல் லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.

    தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங்கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார்.

    அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-

    பிடியத னுருவுமை கொளமிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
    கடிகண பதிவர வருளினன் மிகு கொடை
    வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

    என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.

    மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வி
    யோடும் விடைப்பாகன் அம்மை தருக
    முத்தமென அழைப்ப வாங்கே சிறிதகன்று
    தம்மின் முத்தங்கொள நோக்கிச் சற்றே
    நகைக்கும் வேழமுகன் செம்மை முளரி
    மலர்த்தா ளெஞ்சென்னி மிசையிற் புனைவாமே

    மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரை யொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.

    பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந் திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியது தானா? புராணப் புரட்டர்களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத்தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!

    - பெரியகுளம் அருளாளன்

    Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31GuO1DIm

    தமிழ் ஓவியா said...

    சொர்க்கமா - நரகமா?

    தன்னை எதிர்த்து பார்லிமென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப் படுத்த வேண்டும் என எண்ணினார்.

    லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

    மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார். இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள். உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார்.

    நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன்னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

    Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31GuVzQWs

    தமிழ் ஓவியா said...

    விதியைப் பற்றி...

    மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே.

    மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியினின்று விடுதலை அடைகிறான். மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெறும் பிரமை என்று நிரூ பிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது.

    பலமற்றவர்கள், பாதகர்கள் - இவர்களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள்.

    - எமர்சன்

    Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31Guc2YkR

    தமிழ் ஓவியா said...


    பார்ப்பனம் மதம்- தர்மம்


    பார்ப்பனர்கள் எந்த காரியத்தி லானாலும் எந்தத் துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

    பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகி விட்டது

    - தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

    Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gui7vE0

    தமிழ் ஓவியா said...

    விஞ்ஞானியும் - பார்ப்பானும்

    ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த உண்மையானது, மறுநாளே, விளையாட்டு சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.

    நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

    அரிது! அரிது!!

    ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது தல்லவா?

    - புரட்சிக்கவிஞர்

    Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gupy5B5

    தமிழ் ஓவியா said...

    இங்கர்சால் மணிமொழிகள்

    தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார்.

    மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

    முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடைய வராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்க மானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

    எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

    மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை.

    மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்டவனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

    தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர்

    Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31GuwyzCr