Search This Blog

22.5.14

நாஸ்திகன் என்பதற்கு தமிழில் சொல் இல்லையே ஏன்?






    இன்றைக்கும் பார்ப்பனர்களும், வைதிகர்கள் என்ற காட்டுமிராண்டிகளும், பார்ப்பனப் பக்தர்களும் மற்றும் அக்கிரகாரம் பொறுக்கும் அன்னக்காவடிகளும் பகுத்தறிவாளர்களுக்கு ஒரு நல்ல பெயர் இட்டு அழைக்கின்றனர். அதுதான் நாஸ்திகன் என்று கூறப்படுவதாகும். பகுத்தறிவைக் கொண்டு ஆராய்வதற்கு நாஸ்திகம் என்றும், ஆராய்ச்சி செய்பவனுக்கு நாஸ்திகன் என்றும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. பகுத்தறிவு என்றாலே நாஸ்திகம் என்றுதான் பொருள். நாஸ்திகம் பகுத்தறிவு இரண்டும் ஒன்றேயாகும். அதாவது மதம், சாஸ்திரம், புராணம் இவை என்னென்ன சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறதோ, அவற்றை அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து நல்லது, கெட்டது உணர்வதற்குத்தான் நாஸ்திகம் என்று பெயர். மற்றவர்கள் சொன்னதைக் கொண்டு ஒரு முடிவுக்கு வராமல், தன் சொந்தப் புத்தியை உபயோகித்து, ஆராய்ந்து பார்த்து, அதன்மூலம் ஒரு முடிவுக்கு வருவதுதான் நாஸ்திகத்தின் நோக்கமாகும்.


    இவ்விதம்தான் வடமொழி அகராதியிலும் நன்றாகத் தெளிவாக எழுதியிருக்கிறது.

    ஆனால், இங்குள்ள பார்ப்பனர்கள் உண்டாக்கிய அகராதியைப் பார்த்தால், நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று எழுதி இருக்கும். இதன்மூலம் அகராதி எழுதுபவன் எல்லாம் அறிவாளி இல்லை என்பதை உணர்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.

    ஒருவன் அகராதி எழுதிவிட்டானாகில் அவன் அறிவாளி என்று கூற முடியுமா? அவனுக்குத் தெரிந்ததைக் கொண்டு அகராதியில் எழுதி இருப்பான். அவனுடைய மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை விளம்பரம் செய்ய அகராதியின் மூலம் முயற்சிக்கிறான். அவனுக்குக் கடவுள், மதம் இவற்றின் மேல் எவ்வளவு தூரம் நம்பிக்கை உண்டோ, அதைப் பொறுத்தது அகராதியில் காணப்படும் பொருள்கள். அவன் எழுதுகிற காலத்தில் எவற்றிற்குச் செல்வாக்கு உள்ளதோ, அவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கேற்ற வண்ணம் பொருள் எழுதி இருப்பான்.

    இப்படியே அந்தந்தக் காலத்தில் எவற்றிற்கு செல்வாக்கு உண்டோ அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதியவைகளில் கை வைக்காதே, ஆராய்ந்து பார்க்காதே. அப்படியே நம்பு; இல்லையேல் நீ நாஸ்திகன் என்று கூறினால் எவ்வளவு அயோக்கியத்தனம் என்பதை ஒருவரும் உணருவதில்லை.

    ஏன் இன்றைக்குத்தான் எத்தனையோ கலைஞர்களும், புலவர்களும், நாவலர்களும், பாவலர்களும் நாளுக்கு நாள் புதிது புதிதாக முளைக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் திடீரென்று ஞானம் பிறந்து எல்லா விஷயங்களையும் உணர்ந்து உலக அனுபவமும், ஆராய்ச்சியும் அடைந்தவர்கள் என்று கூற முடியுமா? எனவே, இப்படித்தானே அப்போதும் இருந்திருக்க வேண்டும்? அவர்கள் மூடர்கள் எழுதியவற்றில் கை வைக்காதே, ஆராய்ந்து பார்க்காதே என்று கூறுகிறார்கள்.
    மேலும் நாஸ்திகம் என்பதை இன்னமும் ஆராய்ந்து பார்த்தால் அது நமக்கு உரியதே இல்லை. முதலில் நாஸ்திகம் என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல; அது வடசொல்.

    பொதுவாக நம் மொழியில் கடவுள் உண்டு, கடவுள் இல்லை என்பதற்குத் தனியான ஒரு சொல்லே கிடையாது. நானும் எத்தனையோ புலவர்களுடன் பழகி இருக்கிறேன். பல புலவர்கள் எழுதிய நூல்களைப் படித்திருக்கிறேன்

    . தமிழ் நாகரிகம் பொதிந்த பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்திருக்கிறேன். அவற்றின் ஒன்றின் மூலம் கூட கடவுள் இல்லை என்பதற்கு ஒரு சொல் தமிழ் மொழியில் இருப்பதாகக் கிடைக்கவே இல்லை. இன்றைக்கு யாரும் எந்தப் புலவர்களாலும் தமிழில் கடவுள் இல்லை என்பதற்கு ஒரே சொல் இருக்குமானால் கூறட்டும். ஏதோ நிரீச்சுரவாதம் என்று மற்றொரு வார்த்தை கூறுகிறார்கள். இந்த வார்த்தையும் பச்சைப் பார்ப்பன (வட) மொழி. இதை அன்றி, தமிழ் மொழியில் சொல் கிடையாது.

    அன்றியும், தமிழ் மொழியில் கடவுள் இல்லை என்பதற்கு ஒரு சொல் தேவையே இல்லை. அப்படி தேவைப்பட்டிருக்குமானால், முன்பே ஏற்பட்டிருக்கலாம். எவ்வளவோ தமிழ் இலக்கியங்களும், தமிழில் பெரும் புலவர்களும் இருந்திருக்க இதற்கு ஒரு வார்த்தை ஏற்படுத்த முடியாமலா போய்விட்டது? இதற்கு அவசியமே இல்லை. அதனால் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், நமக்குக் கடவுள் என்பது என்றே கிடையாது. அப்படியிருக்க, கடவுள் உண்டு _- இல்லை என்ற பிரச்சினையும் தேவையில்லை. அதனால் இதற்கு வார்த்தையும் தேவை இல்லாது போய்விட்டது.

    பார்ப்பனர்கள் வந்த பிறகுதான் இத்தொல்லையெல்லாம் நமக்கு விளைந்தது. கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி இதுவரை நம்மை முட்டாள்களாக்கி வந்தனர். ஆனால், அவை என்றாவது ஒருநாள் வெளியாகும் காலம் வந்துதானே தீரும். கடவுள், மதம், சாஸ்திர, புராணம் இவற்றின் சூழ்ச்சிகள் வெளிப்பட்டவுடன் அவை அத்தனையும் ஒழிக்க வேண்டும் என்ற பிரச்சினை ஏற்பட்டது. அதை அடக்குவதற்குத்தான் நாஸ்திகம் என்ற சொல்லை ஏற்படுத்தும் அவசியம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அப்படி நாஸ்திகம் என்ற சொல் முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள் அதற்கு, கடவுள் இல்லை என்ற பொருளைப் புகுத்தவில்லை.

    மேலே கூறியபடி, நாஸ்திகம் என்றால் மதம், கடவுள், சாஸ்திர -_ புராணங்களைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்வதற்கு நாஸ்திகம் என்று கூறி இருக்கிறார். அதைப் பார்ப்பனர்கள் தங்கள் கை ஆயுதமாக அமைத்துக் கொண்டு அதற்கு கடவுள் இல்லை என்ற பொருளைப் புகுத்தி விட்டனர். இதற்கு நேர்மாறானது ஆஸ்திகம் என்பது. ஆஸ்திகன் என்றால் நாஸ்திகனுடைய பண்புக்கும், குணத்திற்கும் நேர் மாறானவன். அதாவது கடவுள், மதம், புராணம், சாஸ்திரம் இவற்றில் சொல்லப்படுகின்றவைகளை அப்படியே நம்புகிறவன் _- சொந்தப் புத்தியில்லாதவன். எப்படி நாஸ்திகன் (பகுத்தறிவாளி) முன்பாக எதையும் எதிர்க்கவோ, மறுக்கவோ முடியாதோ, அதற்கு நேர்மாறாக ஆஸ்திகனிடத்தில் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள்தான் மலிந்து கிடக்கும். பகுத்தறிவுக்கு நிற்காதவைகள் அத்தனையும் கொண்டவன்தான் ஆஸ்திகன்.


    ஆஸ்திகம் என்பது எடைக்கும் நிற்காது; உரைக்கும் நிற்காது; வெறும் காற்று. அதன் அர்த்தமற்ற கருத்துகள் அத்தனையும் பகுத்தறிவின் முன் நிற்காது -_ பறந்து விடும். ஆனால், அப்படிப்பட்ட குணம் கொண்டவனுக்குத்தான் மதிப்புக் கொடுக்கப்படுகிறது.
    இப்படிப்பட்டவர்கள் நம்நாட்டு மக்களின் அறிவைப் பாழ்படுத்தி விட்டனர். நாட்டு மக்கள் முன்னேற வழியின்றி செய்துவிட்டனர். போதிய அளவு அறிவு வளர்ச்சியடைய முடியாது எல்லாத் துறைகளிலும் பற்பல முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி விட்டனர்.

    நமக்குப் பகுத்தறிவு உள்ளதென்றால் ஒரு சில வழிகளில் அதை உபயோகப்படுத்துகிறோமே தவிர, போதிய அளவு பயன்படுத்துவதில்லை. சாப்பிடுகிறோம், படிக்கிறோம். விளையாடுகிறோம்; இவைகளிலெல்லாம் பகுத்தறிவை உபயோகித்து நல்லது கெட்டது உணர்ந்து நடக்கிறோம். ஆனால், முக்கியமாக மனித முன்னேற்றத்திற்கு எவை தேவையோ அவற்றில் பகுத்தறிவை உபயோகப்படுத்துவதில்லை. மனிதன் நாகரிகமுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையானவற்றில் அறிவைத் தடையின்றி உபயோகிக்க உரிமை இல்லாது செய்துவிட்டனர். சில காரியங்களில் சிந்திக்கலாம்; சிலவற்றில் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையை ஏற்படுத்திவிட்டனர்.

                  --------------------------23.11.1955 அன்று மதுரை தியாகராயர் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரையிலிருந்து... -"விடுதலை" 30.11.1955)

    42 comments:

    தமிழ் ஓவியா said...


    இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகளே! - தந்தை

    இலண்டன் மே 21- விடு தலைப்புலிகளின் தொலைக் காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா இராணுவ காப்பரண் ஒன் றிற்குள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகி யுள்ள புகைப்படத்தில் அவ ருடன் இருப்பவர் மல்லாவி யோகபுரம் கிழக்கைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவருடைய குடும்பத்தி னர் கூறியிருக்கின்றனர். இந்த தக வலை இலண்டன் பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ளது.

    இணைய தளங்களிலும் பின்னர் உள்ளூர் பத்திரிகை களிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த் ததும், இசைப்பிரியாவுடன் இருப்பவர் தனது மகள் என்று அடையாளம் கண் டுள்ளதாக அவருடைய தந் தையார் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று தமது மூத்த மகளாகிய உஷாளினி சென்றதாகவும், யுத்தம் தீவிரமடைந்து தாங்கள் இடம் பெயர்ந்து, முள்ளி வாய்க்காலுக்குச் சென்றி ருந்த போது ஒருநாள் தமது மகளைக் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அப்போது அவரைத் தம்முடன் வருமாறு கேட் டதற்கு அவர் வரவில்லை என்றும் அதன்பின்னர் யுத் தம் முடிவடைந்து தாங்கள் இடம்பெயர்ந்து செட்டி குளம் மனிக்பாம் இடைத் தங்கல் முகாமுக்கு வந்தி ருந்தபோது தமது மகளைத் தேடியபோதிலும் அவர் கிடைக்காத காரணத்தினால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவிடமும், மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரு மாறு கோரி முறையிட்டி ருந்ததாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

    அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணாமல் போயுள்ளவர் கள் தொடர்பில் விசாரணை நடத்திய அதிபர் ஆணைக் குழுவிலும் காணாமல் போயுள்ள தனது மகளைத் தேடித்தருமாறு தாங்கள் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆயினும் தமது மகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உள் ளூர் பத்திரிகையொன்றில் இசைப்பிரியாவுடன் காப் பரண் ஒன்றினுள் தனது மகள் இருப்பதைக் கண்ட தாகவும் அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பில் அதிபர் ஆணைக்குழுவில் சாட்சிய மளிப்பதற்கான ஏற்பாடு களைச் செய்து உதவிய மன்னார் பிரஜைகள் குழு வினரிடம் முறையிடவுள்ள தாகவும் உஷாளினியின் தந்தையார் குணலிங்கம் தெரிவித்துள்ளார்.

    இசைப்பிரியா இராணு வத்தின் பிடியில் இருந்தார் என்றும் பின்னர் அவர் இறந்து கிடந்தார் என்றும் காணொ ளிகள் வெளிவந்து பர பரப்பை ஏற்படுத்தியிருந்தன.

    இந்த நிலையில் இப் போது அவர் இராணுவ பங் கர் ஒன்றுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப் படம் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

    இந்தத் தகவல்கள் குறித்து இலங்கை இராணு வத்தின் சார்பில் பேசவல்ல ருவான் வணிகசூரிய அவர் களிடம் கேட்டபோது, இப் படியான படங்கள் குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும், அவை குறித்து ஆராயும் குழு அவற்றை முழுமையாக ஆராய்ந்தபின்னரே அவை குறித்து கூறமுடியும் என் றும் தெரிவித்துள்ளார்.

    Read more: http://viduthalai.in/e-paper/80682.html#ixzz32PDMmtT1

    தமிழ் ஓவியா said...

    காந்தியார் பேரனின் எதிர்பார்ப்பு

    16 ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அமைச்சர வையும் வரும் 26 ஆம் தேதி அமையவிருக்கிறது.

    புதிய ஆட்சி எப்படி இருக்கும்? எந்தக் கொள்கையைக் கையில் எடுக்கும்? என்ற திகில் பொதுவாக மக்கள் மத்தியில் நிழலாடுகிறது.

    காந்தியாரின் பேரன் - மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி போன்றவர்கள் மத்தியில் கூட அப்படி ஓர் எண்ணம் கசிகிறது என்பதை அவர் எழுதிய திறந்த மடல் தெரிவிக்கிறது.

    இந்தியாவின் சிறந்த பாதுகாவலர் மோடியா..? அவர்தானா? இல்லையா..? என்பதுதான் மய்யப்பொருளாக இருந்தது.

    இந்தியாவின் சிறந்த பாதுகாவலர், சொல்லப்போனால் ரட்சகர் என்ற அளவிற்கு, 31 சதவிகித மக்களின்(உங்கள் வாக்கு சதவிகிதம்) மனங்களை நீங்கள் கவர்ந்ததால் பாஜகவுக்கு இடங்கள் கிடைத்துள்ளன.

    69 சதவிகித மக்கள் உங்களைப் பாதுகாவலராகப் பார்க்கவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். நமது தேசம் என்பதன் உள்ளடக்கத்தோடும் அவர்கள் வேறுபடுகிறார்கள். திரு. மோடி அவர்களே, தேசம் என்ற இந்தக் கருத்துதான், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிரதமராகப் போகும் உங்களுக்கு, இங்கு முக்கியமானதாக இருக் கப் போகிறது. தேசம் என்ற உங்கள் எண்ணத்தை மறுபார்வை செய்யவேண்டும் என்று உங்களை நான் வலியுறுத்துகிறேன்.

    ஒற்றுமை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை முன்வைக்கும்போது, சர்தார்வல்லபாய் படேலின் பெயர் மற்றும் அவரது அந்தஸ்தை மீண்டும், மீண்டும் உங்கள் பேச்சில் கொண்டு வருகிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசியல்சட்ட அவைக் குழுவின் தலைவராக சர்தார் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தியாவின் சிறுபான்மையின ருக்கு கல்வி, கலாச்சார மற்றும் மத ரீதியான உறுதி மொழிகளை அரசியல் சட்டம் அளிக்கிறது என்றால், அதற்கு சர்தார் படேல் மற்றும் அந்தக்குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக சீக்கிய கபூர் தலாவின் கிறித்தவ மகளான ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகி யோருக்கு நன்றி சொல்லவேண்டும். சிறுபான்மையினர் பற்றிய அரசியல் சட்டத்தின் பார்வையை மாற்றுவதோ அல்லது திருத் துவதோ கூடாது, அதை நீர்த்துப் போகச் செய்வது அல்லது பூசி மெழுகுவது ஆகிய வேலைகளையும் நீங்கள் செய்யக்கூடாது.

    தமிழ் ஓவியா said...

    அதை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் திரு.மோடி அவர்களே.

    அந்தக்குழுவில் வெற்றி வீரரான சர்தார் என்ன சொன்னார் என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.பலரும் ஏன் இந்த அளவுக்கு அச்சப்படுகிறார்கள்... அந்த அச்சத்தை வெளிப்படுத்தக்கூட ஏன் அச்சப்படுகிறார்கள்..? நீங்கள் ஊர்வலங்களில் பேசுகையில், ஆணை பிறப்பிக்கும் ஒரு பேரரசரைப் போலல்லாமல் இந்திய மக்கள் என்ற எண்ணத் தோடு இருக்கும் ஒரு ஜனநாயகவாதியைக் கேட்க விரும்பு கிறார்கள். சிறுபான்மையினரை ரட்சிக்கவேண்டாம் திரு.மோடி அவர்களே, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். வளர்ச்சி என்பது பாதுகாப்புக்கு ஈடாகாது. குர் ஆன் ஒரு கையில், மறு கையில் லேப்டாப் என்ற வார்த்தைகளிலோ அல்லதுஅந்த அர்த்தத்திலோ நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அந்தக்காட்சி அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஏனெனில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் மற்றொரு காட்சி ஓடுகிறது. கொலை காரன் ஒருவனின் ஒரு கையில் இந்து வீரகாவியம் அடங்கிய டிவிடியும், மறுகையில் அச்சுறுத்தும் திரிசூலமும் அந்தக் காட்சி யில் உள்ளது. முன்பெல்லாம், வகுப்பறையின் மூலையில் உப்பு தடவப்பட்ட தடியை தலைமையாசிரியர்கள் வைத்திருப்பார்கள்.

    அதைப் பார்த்தவுடன், நம்மைத் தோலுரித்து விடுவார் என்று நினைவுக்கு வரும். இங்கு, உப்பு தடவப்பட்ட தடியாக நமக்கு நினைவுக்கு வரும் சம்பவங்களில் ஒன்று என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பாக முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் 42 இஸ்லாமியர்கள் மற்றும் 20 இந்துக்கள் கொல்லப்பட்டதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதும்தான்.

    தமிழ் ஓவியா said...

    ஜாக்கிரதை, இந்தக் கதிதான் உனக்கு நேரும் என்பது ஜனநாயகத்தில் அச்சப்பட வைக்கும் மிரட்டல் வார்த்தைகள் அல்ல. ஆனால், பகல் நேர அச்சமும், இரவு நேர பயங்கரமும்தான் லட்சக்கணக்கான மக்கள் மனங்களில் ஏற்றப்பட்டுள்ள செய்தியாகும். இதைப் போக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது என்று இதமாகவும், பதமாகவும் காந்தியாரின் பேரன் நிதர்சனக் கண்ணோட்டத்தோடு அறிவுரை கூறியிருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.

    சிறுபான்மையினர் வாழவேண்டும்; பெரும்பான்மையினர் ஆளவேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை.

    ஆனால், மோடியும், அவர் சார்ந்த அமைப்பும் வேறு விதமாகப் பிரச்சினையை அணுகுகிறது என்பதுதான் பிரச் சினையே!

    இந்து ராஜ்ஜியம், ராமராஜ்ஜியம் என்று கூறுவதெல்லாம் சிறுபான்மை மக்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

    பல மாநிலங்களில் எங்களுக்கு இஸ்லாமியர்கள் வாக்கு அளித்துள்ளனர் என்று பெருமைப் பேசுவதில் பொருள் இல்லை - எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் நீங்கள் இங்கு தொழில் செய்ய முடியாது - பாதுகாப்புக் கிடைக்காது என்கிற அச்சுறுத்தல் காரணமாக சிறுபான்மை மக்கள் பி.ஜே.பி.க்கு வாக்களித்திருக்கக் கூடும்.

    இது நல்லிணக்கத்துக்கான முறை என்று முறையாகச் சிந்திக்கின்ற எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் - அது இயல்பாகவே இருக்கவேண்டும்.

    ஏன் இந்த அச்சம் சிறுபான்மை மக்களிடம் இருக்கிறது? தேர்தல் பிரச்சார நேரத்தில்கூட இந்தியாவில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமருக்கான ஒரு வேட்பாளர் பேசினார்; அப்படிப் பேசியவர் பிரதமராகவும் வந்துவிட்டார் என்று நினைக்கும்பொழுது ஈரக்குலை நடுங்காதா?

    ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதே இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்பட் டுள்ளார்கள். அவர்களின் உடைமைகள் கொளுத்தப்பட்டுள்ளன; அந்தத் திகில் இன்னும் அடங்கிப் போய்விடவில்லை - இப்பொழுது அவர் பிரதமராகவே வந்துவிட்டார், என்ன ஆகுமோ, என்ன நடக்குமோ? என்று அஞ்சுவது இயல்புதானே!

    சங்பரிவார்களின் மனப்பான்மை எத்தகையது என்பது புரிந்துகொள்ளப்படக்கூடியதே! அவர்கள்தான் மோடியைத் தேர்வு செய்தவர்கள் என்பதும் உண்மையே. அதற்காக அந்தச் சக்திகளின் கட்டளைகளுக்குத் தாள் பணிந்து போகவேண்டும் என்று நினைக்கக் கூடாது.

    சங் பரிவார்களின் சத்தத்திற்குக் கட்டுப்பட்டு ஓர் ஆட்சியை நடத்தவே முடியாது; காரணம் அந்தச் சக்திகளிடத்தில் சட்டத்தை மதிக்கக் கூடிய மனப்பான்மையோ மற்றவர்களைச் சமமாக மதிக்கும் கோட்பாடோ கிடையவே கிடையாது! சிறுபான்மை யினர் என்றால், பிறவிப் பகைவர்களாகப் பார்க்கக் கூடியவர்கள், சீறக்கூடியவர்கள்; இந்த நிலையில், அவர்களைத் திருப்திப் படுத்துவது என்பது இயலாத ஒன்றாகும்.

    அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, அதன் ஒழுகலாறு களை மதித்து நடந்துகொள்வது என்பதுதான் ஆட்சி முறை.

    பொது மேடையில் அல்லது ஆலோசனைக் கூட்டங்களில் யாரையோ திருப்திப்படுத்துவதற்குப் பேசப்படுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாததாகும்.
    அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அதன் பிரத மரைக் கட்டுப்படுத்தும் (ரிமோட் கண்ட்ரோல்) அதிகார மய்யம் வெளியில் இருந்தது என்று குற்றப்பத்திரிகை படித்தவர்கள், வேறொரு வகையில் அதிகார மய்யம் செயல்படுத்துவதை எப்படி நியாயப்படுத்தவும் முடியும்?

    அந்த வகையில் காந்தியார் அவர்களின் பேரன் கூறும் கருத்துகள் - வழிகாட்டும் தன்மை கொண்டவைகளாகவே பெரும்பாலும் அமைந்துள்ளன என்பதை நினைவூட்டுகிறோம்.

    Read more: http://viduthalai.in/page-2/80687.html#ixzz32PDyO0Q6

    தமிழ் ஓவியா said...


    ஊடகங்கள், தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்?


    புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ஊட கம் நேர்மையாக செய்தி வெளியிடு கிறது என சொல்லுகிறார். உண்மையா? மோடி வளர்ச்சி நாயகன் என மோடியின் பிரச்சார கோஷ்டி தொடர்ந்து சொன்னதை ஊடகம் என்றைக்காவது கேள்விக்கு உட் படுத்தியுதுண்டா?

    அடுக்கடுக்காக, குஜராத் மாடல் உண்மையல்ல என அரசியல் கட்சி கள் மட்டுமல்ல, அமர்த்தியா சென் போன்ற பல அறிஞர்கள் சொன்னதை, ஊடகங்கள் நேர்மையாக வெளிப் படுத்தினவா?

    நான் ஆட்சிக்கு வந்தால், குற்றப் பின்னணி உள்ளவர்களை சிறையில் அடைப்பேன் என மோடி பேசினார்; அமீத் ஷா, முசாபர் நகர் கலவரக் குற்றவாளிகள், எடியூரப்பா போன்றோரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, இப்படி பேசுகிறீர்களே என எந்த ஊடகம் கேள்வி கேட்டது?

    பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா சேர்த்த சொத்து விவரத்தை பட்டியலிட்டாரே; அதனை எந்த ஊடகமும் வெளியிடா மல் இருக்கிறீர்களே என கலைஞர் வெளிப்படையாகக் கேட்டாரே, அப்போதாவது, அந்த செய்தியை ஊடகம் வெளியிட்டதா?

    ஆக, இங்கே ஊடக நிறுவனத்தின் முதலாளிகளுக்கு ஒரு அரசியல் இருக் கிறது. அதற்கு ஏற்ப செய்திகளை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக் கிறது. அதை மீறி நான் சொல்வேன் என்றால், அவர் வெளியே தள்ளப் படுவார்.

    மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட சில பத்திரிகையாளர்கள். முதலாளிகளால் நீக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் தும்மினால் கூட, அது ஒரு செய்தி; உடனே, மைக்கைத் தூக்கிக் கொண்டு, மு.க. அழகிரியிடம் பேட்டி. அவரைத் தான், கட்சியி லிருந்து நீக்கிட்டாங்களே; அப்புறம் அவரிடம் பேட்டி எதற்கு?

    இன்றைக்கு, அதிமுக அமைச்சர் கள் மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    இன்றைக்கு மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்ட, அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி.வேலு மணியும், 26.1..2012 அன்று, முதல்வர் ஜெயலலிதாவால், அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

    கோகுல இந்திரா, சென்ற ஆண்டு பிப்ரவரி 27, 2013, அவர் வகித்து வந்த சுற்றுலாத் துறையை ஒழுங்காக கவனிக்கத் தவறியதால், இதே முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்.

    இந்தச் செய்தியை, மூன்று அமைச் சர்கள் நீக்கம்; புதிய அமைச்சர்கள் நியமனம் என தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி கூறுகின்றன.

    ஒரு ஊடகம்கூட, இப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட வர்கள், ஏற்கெனவே, அமைச்சர் களாக இருந்து பதவி நீக்கம் செய்யப் பட்டவர்கள் என கூறவில்லை.

    ஏற் கெனவே, அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி எந்த அடிப்படையில் தரப்படுகிறது என ஜெயலலி தாவிடம், இந்த ஊடகங்கள், கேள்வி கேட்டுவிட்டு, தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்.

    இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள்தான், பத்திரிக்கா தர்மம், நடு நிலை என்றெல்லாம் வாந்தி எடுக்கின்றன.

    நம்மைப் பிடித்த அய்ந்து நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சும்மாவா சொன்னார்? அவர் காலத்தில், தொலைக்காட்சி ஊடகம் இல்லை; இருந்திருந்தால், இதையும் சேர்த்து இருப்பார்.



    - குடந்தை கருணா

    Read more: http://viduthalai.in/page-2/80691.html#ixzz32PED9Wm2

    தமிழ் ஓவியா said...


    மம்முட்டி




    மலையாள நாட்டு நடிகர் மம்முட்டி, மற்ற நடிகர்கள் எல்லாம் பின் பற்ற வேண்டிய ஓர் அறி விப்பை வெளியிட்டுள்ளார்.

    பல தேசிய விருதுகளை பெற்றவர்; மலை யாள உலகில் மட்டுமல்ல; பல மொழிகளிலும் நடித்து முத்திரை பொறித்தவர்.

    அவருக்கு மிகப் பலமான ரசிகர் சங்கம் உண்டு.

    ஆனாலும் ரசிகர் களை அதிர வைக்கும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இன்றோடு எனது ரசிகர் மன்றம் கலைக்கப் பட்டது! என்பதுதான் அந்த அறிவிப்பு.

    என்ன காரணம்? ரசிகர் மன்றத்தில் நடவடிக்கைகள் எரிச்சலை ஊட்டிவிட்டன - முக நூலில் மற்ற மற்ற நடிகர்களை இயக்குநர்களைத் தேவையில்லாமல் சீண்டுவது - கேவலமாக விமர்சிப்பது என்பது அதிகரித்து விட்டதாம்.

    அதைவிட முக்கியமாக மத ரீதியாகவும் மம்முட்டி பெயரை ரசிகர்கள் பயன்படுத்துகிறார் களாம்.

    கேரள மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்துள்ள நல்ல பெயர் இதனால் பெரும் அள வுக்குக் கெடக் கூடிய நிலையில்தான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக மனந் திறந்துள்ளார்.

    உலகில் நடிகர்களுக்காக ரசிகர் மன்றம் வியாதி நம் பாரத புண்ணிய பூமியில் தான்!

    யார் நன்றாக நடித்தாலும் பாராட்ட வேண்டியது தானே? அதற்காக ஓர் இரசிகர் மன்றம் தேவையா?

    சுவையாக சமைக்கிறார்கள் என்பதற்காக எந்த ஓட்டல் முதலாளிக்காவது இரசிகர் மன்றம் வைப்பதுண்டா?

    நாட்டில் கறுப்புப் பணச் சந்தையில் கொழிக்காத நடிகர்கள் எத்தனைப் பேர்? இவர்கள் தான் ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள்.

    அரசியலில் நேர்முகமாக வராமல் பதுங்குக் குழிகளில் இருந்து கொண்டு ஜாடை காட்டும் கோழைத்தனம் எல்லாம் தமிழ்நாட்டில் உண்டு.

    கடவுள் உள்ளமே! கருணை இல்லமே!

    கடவுள் படைத்திட்ட
    மனிதக் கடவுளே!
    பதவி ஆசை இல்லாத
    பரமோத்மாவே!
    ஆறு கோடி தமிழர்களின்
    காதலனே!
    மனிதநேயமுள்ள
    மனித தெய்வமே!
    இனியும் மக்கள்
    வாழ வேண்டுமானால்
    நீங்கள் ஆள வேண்டும்

    என்று சுவரொட்டிகள் நடிகர் ஒருவருக்குத் தமிழ் நாட்டில் ஒட்டப்பட் டதுண்டு.

    மம்முட்டி எங்கே இவர்கள் எங்கே?

    - மயிலாடன்

    Read more: http://viduthalai.in/e-paper/80758.html#ixzz32UvqGW9k

    தமிழ் ஓவியா said...


    இலங்கை விவகாரத்தில் காங்கிரசை அப்படியே பின்பற்றும் பாரதீய ஜனதா


    சென்னை, மே 22- இலங்கை விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்னமாதிரியான கொள்கைகளை கடை பிடித்ததோ அதை அப் படியே பின்பற்றத் தொடங் கியுள்ளது பாரதீய ஜனதா. முந்தைய மத்திய அரசு இலங்கையை தமது மதிப் புக்குரிய நேச சக்தியாக நட்பு நாடாக பார்த்தது. இந்திய நாட்டு மீனவர்கள் 700 பேர் படுகொலை செய் யப்பட்ட நிலையிலும் கூட ஒரு கண்டனத்தைக் கூட முந்தைய காங்கிரஸ் அரசு தெரிவிக்கவில்லை. இந்தி யாவின் ஒரு மாநிலமாக இருக்கிற தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள் வாழும் இலங்கையின் வட பகுதியில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்ட போது அதைத் தடுக்க மறுத் ததுடன் இனப்படுகொலைக்கே துணை நின்றது முந்தைய மத்திய அரசு.

    சொத்தை காரணங்கள் இலங்கையிடம் இத் தனை பரிவு ஏன் என்ற கேள் விக்கு இந்திய துணை கண்டத்து புவிசார் அரசி யல் காலங்காலமாக கடைபிடித்து வரும் வெளி யுறவுக் கொள்கை என் றெல்லாம் காங்கிரஸ் பேரி யக்கம் சப்பைக் கட்டிக் கட்டியது. இந்த சப்பைக் கட்டுகளுக்கு தமிழகம் சம்மட்டி அடி கொடுத்து மக்களவை தேர்தலில் சவக் குழிக்கே அனுப்பி வைத்தது. காங்கிரசை சவக் குழிக்கு அனுப்பி வைத்த போது தமிழர் உரிமை பிரச்சினைகளில் ஈழத் தமிழர் பிரச்சனைகளில் நாங்கள் பாதுகாவலராக இருப்போம் என்று ரட்சக ரகர்களைப் போல பேசி யது பாரதீய ஜனதா. தமிழக மக்களுக்கு பாரதீய ஜனதா மீது நம்பிக்கை வரும் வகையில் காலங்காலமாக ஈழத் தமிழர் துயர் தீர்க்க போராடி வரும் வைகோ போன்றவர்கள் பிரச்சாரம் செய்தார்.

    மகிழ்ச்சி கூத்தில் இலங்கை காங்கிரஸ் போய் பாஜக ஆட்சிக்கு வந்தது.. பாஜக வெற்றி பெற்றத் தொடங் கியபோதே இலங்கையில் மகிழ்ச்சிக் கூத்துகள் உச் சத்தை எட்டின.. பாஜகவின் மோடிக்கு வெற்றிக்கு முதல் வாழ்த்து மகிந்த ராஜபக்சேவிடம் இருந்து வருகிறது..

    டில்லிக்கு ராஜபக்சே இப்போது உச்சமாக ராஜபக்சேவையே டில்லி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறது பாஜக அரசு. கேட்டால் அன்று காங் கிரஸ் சொன்ன அதே பழைய வேதாந்தமான காலம்காலமாக கடை பிடிக்கும் வெளியுறவு கொள்கை இந்தியாவின் புவிசார் அரசியல் நலன் அண்டை நாடுகளுட னான நல்லுறவு போன்ற வியாக்கியானங்களைத்தான் கொடுத்துக் கொண்டிருக் கிறது.

    உ.பி., ம.பிக்காக

    பாரதீய ஜனதாவைப் பொறுத்தவரையில் அது ஹிந்தி பெல்ட் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற கட்சி. அதாவது உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநி லங்களில்.. ஏகோபித்த ஆதரவு பெற்ற கட்சி.. இந்த மாநிலங்கள்தான் சிங்கள வர் மூதாதையர் உலாவிய பூமியாக சிலாகித்துக் கொள்கிறார்கள்..

    சிங்களவர் தாய்வீடு

    அதனால்தான் ம.பி.க் கும் உ.பி.க்கும் சிங்கள வர்கள் தாய்வீட்டுக்கு வந்து போவதைப் போல சகஜ மாக வருகிறார்கள்.. ராஜ பக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு தருகிறார்கள்.. அப்படிப்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற பாரதீய ஜனதா அரசு ராஜபக்சேவுக்கு செங்கம் பளம் விரிக்கத்தான் செய்யும்.. இதை தமிழகம் வேதனை யோடும் வெறுப்போடும் பார்க்கத்தான் வேண்டும் என்பது விதியாகிப் போனது.

    அன்று காங்கிரஸ், இன்று பாஜக. அன்று காங்கிரஸ் ஏதோ ஏதோ காரணங்களுக்காக இலங்கைத் தமிழர்கள் படு கொலையை அரங்கேற்றி யது.. போர்க்குற்றவாளி களுக்கு பாதுகாப்பு கொடுத் தது.. இன்று பாரதீய ஜனதாவும் ஏதோ ஏதோ காரணங்களுக்காக அதே போர்க்குற்றவாளிகளுக்கு பதாகை விரித்து வரவேற்பு கொடுக்கிறது.. அதாவது இரண்டும் ஒரே குட்டை யில் ஊறிய மட்டைகள் என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருக்கின் றன.. அதற்கு வரலாறும் தக்க பதிலடி கொடுத்திருக் கிறது என்பதை அரசியல் நிகழ்வுகள் நிரூபித்திருக் கின்றன என்பதே யதார்த்தம்.
    நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

    Read more: http://viduthalai.in/e-paper/80761.html#ixzz32Uw8rthN

    தமிழ் ஓவியா said...


    பிகார் - திருப்பம் தருமா?

    பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று தோல்வியடைந்த கட்சிகள் ஆய்வில் ஏற்பட்டுள்ளன. இது இயல்பான ஒன்றே!

    பிஜேபியே எதிர்பாராத அளவுக்கு சில மாநிலங்களில் வெற்றியைக் கவ்விப் பிடித்துள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சொல்ல வேண்டும் இந்த மாகாணங்களில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்கள் அதிகம். இந்த மக்களுக்கான அடி நாதம் என்பது சமூக நீதியே! ஆனால் இந்தச் சமூக நீதிக் கொள்கைக்கு விரோதமான பி.ஜே.பி. வெற்றி பெற்றது எப்படி? என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

    விடை எளிதானதுதான். இந்த மக்களிடையே நிலவிய பிளவும், அரசியலும்தான். இந்தப் பிளவுகளை பயன்படுத்தி ராஜ தந்திர வழிகளில் வெற்றி பெற்றுவிட்டது பா.ஜ.க., குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சி என்று கணிக்கப்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் ஒரு பக்கம்; உயர் ஜாதியோடு அக்கட்சி வைத்திருந்த கூட்டு இந்த முறை கை கொடுக்கவில்லை பிற்படுத்தப்பட்ட மக்கள் வாக்குகளும் கிடைக்கப் பெறவில்லை.

    சமாஜ்வாடி கட்சியைப் பொறுத்தவரை அதன் வாக்கு வங்கி பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை மக்களான முஸ்லிம்களும்தான்.

    உ.பி.யில், மோடியின் அந்தரங்க மனிதரான அமித்ஷா உ.பி.யில் புகுந்து குறுகிய காலத்தில் மதக் கலவரத்துக்கு வழிகோலி, தம் பக்கம் குறிப்பிட்ட பிரிவினரை இழுத்துக் கொண்டார்; குறிப்பிட்ட மக்களைப் பழி வாங்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் நஞ்சைக் கக்கினார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டு இது அரங்கேற்றம் செய்யப்பட்டதைக் கவனிக்க வேண்டும்.

    பிகாரைப் பொறுத்தவரை நிதீஷ்குமார் நல்லாட்சி நடத்தி வந்திருக்கிறார். பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்தாலும், மத வெறி நாயகரான மோடியை என்றைக்குமே அவர் ஏற்றுக் கொண்ட தில்லை.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போதுகூட தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வரக் கூடாது என்று கறாராகவே சொல்லி விட்டார்.

    பிகாரைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நாயகரான லாலு பிரசாத், தாழ்த்தப்பட்ட மக்களின் நட்சத்திரமான ராம்விலாஸ் பஸ்வான், நிதிஷ்குமார் ஆகியோர்களுக்கிடையே நல்லிணக்கம் கிடையாது - எல்லாம் அரசியல் அபிலாசைகள்தான் அதற்குக் காரணம். இடையிலே நெருங்கி வந்திருந்த பஸ்வானும், லாலுவும், தேர்தலில் போட்டிப் போடும் இடங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பிசிறினால், பஸ்வான் பி.ஜே.பி.க்கே சென்று ஆலிங்கனம் செய்து கொண்டு விட்டார்.

    பிஜேபி அமைச்சரவையில் இடம் பெற்று, கடைசி நேரத்தில் மதவாத எதிர்ப்பு என்ற கொடியைப் பிடித்து வெளியேறியவர்தான் அவர். இப்பொழுது மீண்டும் முன்பைவிட தீவிரமாக மத நஞ்சைக் கக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பிஜேபியோடு கையிணைத்தற்கு எதிர்காலத்தில் அவர் பதில் சொல்லியாக வேண்டும்.

    பி.ஜே.பி.யை பொறுத்த வரை - குறிப்பாக நரேந்திர மோடியின் எண்ணம் பிகாரில் நிதிஷ்குமார் கட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதாகும்.

    ஆனால், வெகு புத்திசாலித்தனமான நிதிஷ் குமாரும், சரத்யாதவும் காய்களை நகர்த்தி, காங்கிரஸ் துணையுடன், நிதிஷ்குமார் தனக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராம் மன்ஜியை முதல் அமைச்சராக ஆக்கி விட்டார்.

    இந்தத் திருப்பத்தை எதிர்பாராத பிஜேபி வட்டாரம் திகைத்து நிற்கிறது.

    பிகாரைப் பொறுத்த வரை பி.பி. மண்டல், போலோ பஸ்வான் சாஸ்திரி, கர்ப்பூரிதாகூர், லாலுபிரசாத் என்று ஒரு நீண்ட சமூகநீதியாளர் பட்டியல் உண்டு.

    அப்படிப்பட்ட பிகாரில், மண்டல் காற்றால் அடையாளம் காணப்பட்ட ராம்விலாஸ் பஸ்வான் இப்பொழுது கூறுகிறார். தனித் தொகுதிகளில் 62 இடங்களில் பிஜேபி வெற்றி பெற்று தலித் பெயரில் அரசியல் நடத்தும் தலைவர்களின் முகத் திரையைக் கிழித்து விட்டது என்று புளகாங்கிதம் அடைகிறார்.

    இத்தகு மனப்பான்மையின் அஸ்திவாரத்தின் மீதுதான் பிஜேபி உயர் ஜாதி அதிகார மாளிகை உருவாக்கப்பட்டுள்ளது.

    பிகாரில் நிதிஷ் இப்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட வரை முதல் அமைச்சராக்கி புதியதோர் திருப்பத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

    இந்தக் காற்று வட மாநிலங்களில் வீசட்டும்; மீண்டும் மண்டல் கொடுத்த அந்தச் சமூகநீதிக் கொடி உயரட்டும்!

    Read more: http://viduthalai.in/page-2/80731.html#ixzz32UwKyEvc

    தமிழ் ஓவியா said...


    தொழிலாளர் தோழர்களே திருவாரூரில் சந்திப்போம்!


    தோழர்களே,
    தொழிலாளர்களே,
    விவசாயப் பெருங்குடி மக்களே!

    நம்முன் ஏராளமான பிரச்சினைகள் உள் ளன. அதுவும் விவசாயம் என்பது கிட்டதட்ட மரணப் படுக்கையில் தள்ளப்பட்டு விட்டது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை!

    விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் சிக்கியுள்ளனர்.
    பெரும்பாலும் விவசாயத்தில் ஆண்களும் - பெண்களுமாக ஈடுபட்டு வருபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களே! அதன் காரணமாகவே இது கேட்பாரற்றுக் கிடக்கிறது. எந்த உரிமைகளையும் இலவசமாகப் பெற்றிட முடியாது.

    போராடாமல் உரிமை நம் கதவை வந்து தட்டாது; வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

    வரும் 26இல் திருவாரூரில் திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டின் மூலம் புதிய திருப்பத்தை - எழுச்சியை - உருவாக்குவோம்!

    கோரிக்கைகள் நிறைவேறக் குரல் கொடுப்போம்!

    விவசாயத்தை வாழ விடு!

    இல்லையேல்

    மாற்றுவழியை எங்களுக்குக் கொடு! என்று குரல் கொடுப்போம் வாரீர்!

    காவிரி டெல்டா பகுதிகளில் வேலை வாய்ப் புடன் கூடிய உற்பத்திக்கு வழி செய்யும் தொழிற் சாலைகளை ஏற்படுத்துக! விவசாயக் குடும்பத்து இருபால் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புக்கு வழி செய்!

    மீன்பிடி தொழில் நடத்தாத காலங்களில் மீன வர்களுக்கு உதவுவது போல -

    விவசாய வேலை இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கு என்று குரல் கொடுப்போம்!

    வாரீர்! வாரீர்!! கோரிக்கைகள் நிறைவேற கோடிக் கைகள் உயரட்டும்! உயரட்டும்!!

    உங்கள் தோழன்

    கி.வீரமணி
    தலைவர், திராவிடர் கழகம்



    சென்னை
    23.5.2014

    Read more: http://viduthalai.in/e-paper/80837.html#ixzz32afbd6hL

    தமிழ் ஓவியா said...


    முட்டாள்தனம்


    இந்து மதத்தையோ, அது சம்பந்த மான கடவுள், சாத்திரம், இதிகாசம், புராணங்களையோ, சீர்திருத்திவிடலாம் என்று நினைப்பது வெறும் கனவும், வீண் வேலையும், கடைந்து எடுத்த முட்டாள்தனமுமே யாகும். - (குடிஅரசு, _ 13.1.1945)

    Read more: http://viduthalai.in/page-2/80828.html#ixzz32ag98Fjk

    தமிழ் ஓவியா said...


    இளைஞர்களே, இப்படியா நீங்கள் வாழ்வது? மறைவது?

    நமது இளைஞர்களில் மிகப் பெரும்பாலோர் தேவையின்றி உயிர்ப் பலி தருகின்றவர்களாகி வருவது மிகவும் வேதனையையும் எல்லையற்ற சோகத்தையும் நம்முள் ஏற்படுத்து கிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் தேக்கி வைத்த ஆசைக் கனவுகள் எல்லாம், திடீர் மின்னல் தாக்கிப் பறிக்கப்பட்ட கண்ணொளி போல் ஆகி விடுகின் றனவே!

    தேவையற்ற விபரீத ஆசைகளுக்கு நீங்கள் இரையாகி இழத்தற்கரிய வாழ்வை இளையர்கள் இழக்கலாமா?

    இதோ இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் (23.5.2014) பக்கம் 10இல் வந்துள்ள நெஞ்சுருக்கும் செய்தி: இது கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது என் றாலும், அதிலிருந்து மற்ற அனைவரும் பாடம் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக அதனை அப்படியே தருகிறோம்.

    பாஸ்ட் புட், பேஸ்புக் இது இரண்டும் தான் இன்றைய இளைய தலைமுறை யினரின் அடையாளமாய் மாறிப் போயி ருக்கின்றன. முகநூலில் லைக் வாங்க ரிஸ்க் எடுத்து படம் பிடித்த மாணவர், இப்போது அந்த படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இத்தம்பதியின் மகன்கள் எட்வின், காட்வின்.

    இதில், எட்வின் பத்தாம் வகுப்பு படித்தார். காட்வின் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    இருவரும் நண்பர்களுடன் அருகே உள்ள கனிமங்கலம் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க புதன்கிழமை சென்றனர். அங்கு, ஒருவர் மாற்றி ஒருவர் முக நூலில் பதிவு செய்ய புகைப்படம் எடுத்தனர்.

    அங்கிருந்த தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது. இதுகுறித்து, திருச்சூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்னொரு சம்பவம்

    கேரள மாநிலம் எருவா, வேலாத் தட்டுதரையை சேர்ந்தவர் அபிலாஷ் (32). முகநூலில் வினோதமான விஷ யங்களை படம் பிடித்து காட்டுவதில் இவருக்கு அலாதி விருப்பம். புதன் கிழமை, வீட்டில் தூக்கு மாட்டுவது போல் செல்போனில் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட ஆயத்த மானார்.

    இதற்காக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டினார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக சேர் நகர்ந்தது. கயிறு இறுக்கி அபிலாஷ் மூர்ச்சையடங்கி போனார்.

    அவரது செல்போன் பழுதாகி இருப்பதால் அதை சீர் செய்யும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நடந்தவற்றின் முழு விவரங்களும் தெரிய வரும்.

    அபிலாஷ் ஏற்கெனவே இதே போல் ஒருமுறை முகநூலில் பதிவிட்டிருந்தார்.

    அதீத ஆர்வத்துக்கு தற்போது தன்னையே பலியாக்கி யுள்ளார். முகநூலில் புகைப்படம் பதிவிட ஆசைபட்டு 2 பேர் உயிரை விட்ட சம்பவம் கேரளத்தில் பரி தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    - எதிலும் ஆசை வெறியாக மாறினால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்வுகளாவது தடுக்கப்பட முடி யாததாகும்.

    எனவே, இளைஞர்களே எச்சரிக் கையுடன் வாழுங்கள்!

    - கி.வீரமணி

    Read more: http://viduthalai.in/page-2/80831.html#ixzz32agKGYAe

    தமிழ் ஓவியா said...

    அய்யப்பனைக் காப்பாற்றிய சிறுநீர்!

    கடந்த 17.1.1978-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சியிலிருந்து வெளியிடும் செய்தித்தாளை படிக்க நேர்ந்தது. அதில் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் என்ற பகுதியில் ஒரு செய்தியை படித்து வியப்பும் அதேபோல் சிரிப்பும் உண்டாயிற்று.

    அய்யப்பப் பக்தர்கள் தான் இதற்குப் பதில் கூற வேண்டும். அதில் கண்டுள்ள செய்தியின் தமிழ் மொழியாக்கம் இதோ!

    ‘Urln Quers Fire’

    (எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்), கோட்டயம், ஜனவரி -16, சிறுநீர் மீண்டும் செய்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றும் எதிர்பாராத இடங்களில் கூட ஆச்சரியப்படத்தக்க செயல்களைப் புரிந்துள்ளது. சிறுநீரின் உபயோகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கும்பளம் தோடி என்ற சபரிமலை வனப்பிரிவைச் சேர்ந்த பகுதி சாம்பலாகி இருக்கும். சபரிமலையின் எல்லா பகுதிகளும் காவல் புரிந்து வந்த காவல்துறையினர் ஜனவரி 9ஆம் தேதியன்று கும்பளம்தோடி என்ற பகுதியில் தீப்பிடித்துள்ளதாக கம்பியில்லாத் தொலைபேசி மூலமாக தலைமை அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பினர். காவல்துறை தனி அலுவலர் திரு. பி.ஆர்.மேனன் உடனடியாக 100 காவலர்களை இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களின் தலைமையில் தீக்கிரையாகி கொண்டிருக்கும்

    பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியை தீவிரமாக தொடங்கும்படி கட்டளையிட்டார். தீ மிகவும் அசுர வேகத்தில் பரவிக் கொண்டு கடவுள் அய்யப்பனின் தலமாகிய அந்த அடர்ந்த காட்டையே அழிக்கும் நிலைக்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் காவல் படையினர் அந்த இடத்தை சென்றடைந்தனர். அருகில் தண்ணீர் வசதியோ போதுமான அளவு மணலோ கிடையாது. காவலர்கள் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்திற்கிடையே கையற்ற நிலையில் தவித்துப் போயினர். ஆனால் தனி ஆயுதக் காவல்பிரிவைச் சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலும், கேரள ஆயுதக் காவல் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பால்ராமும் பலவிதமான சிந்தனையில் ஈடுபட்டனர். இறுதியாக ஒரு விந்தையான எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது போலும். ஒரே சமயத்தில் 100 காவலர்களையும் தீயை நோக்கி சிறுநீர் விடும்படி அந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டளையிட்டனர். தீ மெதுவாக தணிந்தது. முடிவாக அணைக்கப்பட்டு விட்டது. சில தினங்களுக்கு முன்னர் மகர விளக்கு விழாவிற்காக சபரிமலைக்குச் சென்ற செய்தியாளர்களிடமும் இந்நிகழ்ச்சிகளை தனிக்காவலர் அலுவலர் மேனன் அவர்கள் விளக்கினார். தக்க சமயத்தில் செயல்புரிந்து வரவிருந்த பெரும் விளைவை தடுத்த தற்காக அந்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், அவர்கள் சேவையை பாராட்டி தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்-
    17.1.1978, செவ்வாய், கொச்சி பதிப்பு)

    Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32ahLFFOV

    தமிழ் ஓவியா said...

    யாருக்கு லாபம்?

    பரமசிவம் அருள்புரிய வந்து வந்து போவார்:
    பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
    சிரமமொடு தானமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
    சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
    வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும் போகும்!
    மகரிஷிகள் கோயில்களும் - இவைகள் கதாசாரம்,
    இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
    ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

    - புரட்சிக்கவிஞர், திராவிடன் 14.1.1950, பொங்கல்மலர்

    Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiDuxcN

    தமிழ் ஓவியா said...

    வளர்ச்சியைத்
    தடுப்பது எது?

    பல நூற்றாண்டாக ஜாதி முறை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபக்கேடு என்றே கருதுகிறேன். அதுவே இந்தியாவைப் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்தியது மட்டுமின்றி, அது இந்தியாவை கேவலபடுத்திக் காட்டியதுடன் வெளிநாட்டுப்படை எடுப்பாளரிடம் நம்மை அடிமைகளாக்கி விட்டது. ஏனெனில் ஜாதியே நம்மைப் பிளவுபடுத்தும் சாதனமாகும். பெரும்பாலான நமது மக்களை சாதி கேவலப்படுத்தியுள்ளது. நம்மில் சிலர்தான் இக்கேவலத்தைச் சுமத்தினர் பலர். இக்கேவலத்தை ஏற்றுக் கொண்டோம். இன்றைய உலகத்தில் ஜாதிக்கு இடமே கிடையாது. அது இன்று இருக்குமானால் நமது சோஷலிச - சமதர்ம -லட்சியத்தை நாம் அடைவதைத் தடைப்படுத்தவே செய்யும்.

    இந்தியா தனது மதமவுடிகங்களை களைந்து, விஞ்ஞான பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங்களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச்சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. -ஜவகர்லால் நேரு

    Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiL6kUT

    தமிழ் ஓவியா said...


    பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பா? நாடெங்கும் கண்டனப் புயல்கள்!

    சென்னை, மே 23- நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலைஞர்

    இந்தியப் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்கும் விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதும், அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதும் தமிழ்நாட்டு மக்களாலும், உலகத் தமிழர்களாலும் எவ்வகையிலும் ஏற்று, வரவேற்கப்பட இயலாத ஒன்றாகும்.

    ஏற்கெனவே இருந்த மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், சர்வதேச தமிழ் அமைப்புகளின் சார்பாகவும் பலமுறை இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான நடை முறைகள் குறித்துப் பலமுறை எடுத்துச் சொல்லியும், எச்சரிக்கை செய்தும், மத்திய காங்கிரஸ் அரசு அதைக் கிஞ்சிற்றும் காதிலே போட்டுக் கொள்ளாமல், இலங் கையை நட்பு நாடு என்றே தொடர்ந்து கூறி வந்ததின் காரணமாக ஏற்பட்ட எதிர்மறை விளைவினை அனை வரும் அறிவர்.

    தமிழின உணர்வு சம்பந்தமான இந்த உண்மையை புதிதாகப் பொறுப்பேற்கும் பா.ஜ.க. அரசு தொடக்க நிலையிலேயே உணர்ந்து கொள்ள முன்வரவேண்டும் என விரும்புகிறேன்.
    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து, இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென்று ஒரு காலத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் பேர வையிலே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய வர்களே, தற்போது நல்லவர்கள் போலவோ அல்லது தம்மைத் திருத்திக் கொண்டவர்கள் போலவோ, ராஜ பக்சேவின் இந்திய வருகைக்கு தங்களின் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காரசாரமாக விடுத்துள்ள அறிக்கையைப் பார்க்கும்போது, இதே முதலமைச்சர் தான் தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற் றியவர் என்பது மறந்துவிடக் கூடியதல்ல.

    திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்க விருக்கும் அந்த நிகழ்ச்சியில், இலட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இறங்கிய - தமது குடிமக்கள் மீதே போர் தொடுத்த - மனித உரிமைகளைச் சிறிதும் மதிக்காத ஒருவர் இடம் பெற வேண்டுமா என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து சிந்தித்து, அந்த முயற்சியைக் கைவிட வேண்டுகிறேன்.
    - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-8/80825.html#ixzz32aixaSw5

    தமிழ் ஓவியா said...

    முதல்வர் ஜெயலலிதா

    புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் பரிவுடன் செயல்படுமென் றும், தமிழகத்துடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவ தற்கு முன்னரே, இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்தச் செயல் தமிழக மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தி யுள்ளது. இந்த செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    புதிதாக மத்தியில் அமையவுள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்த செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்.
    திருமாவளவன்

    ராஜபக்சேவை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நரேந்திர மோடி அழைத்திருப்பது இந்தியாவில் இருக்கும் தமிழர் களின் உணர்வை புண்படுத்துவது மட்டுமின்றி நீதிக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கும் பின்னடைவை உண்டாக்கும். எனவே இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் சில கட்சி, அமைப்புகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தா.பாண்டியன்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மோடி பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைப்பதாகக் கூறி, போர்க்குற்றவாளி என்று உலகத்தால் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைப்பதை இந்திய கம்யூ னிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    இலங்கையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பில் ஈடுபட்டு, பல லட்சம் தமிழர்களை கொலை செய்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர் அவர். பா.ஜனதா கட்சியின் விழாவிற்கு அவரை அழைத்து இருந்தால், நாம் எதுவும் சொல்வதற்கு இல்லை.
    ஆனால், இந்தியாவின் ஒரு பகுதியில் வாழும் தமிழர் களின் மனக்குமுறலை மறந்து, ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை கொடுத்து பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பது, தமிழர்களின் மனதை புண்படுத்தும் செய லாகும். எனவே ராஜபக்சேவை அழைப்பதன் மூலம் காங்கிரஸ் செய்த தவறையே பா.ஜனதாவும் செய்கிறது. இந்த செயல், அவர்கள் கடைபிடிக்க இருக்கும் கொள் க யின் முன்னோட்டமாகவே தெரிகிறது.

    எனவே, தமிழ் மக்கள் சிந்தித்து நியாயத்தை நிலைநாட்ட உறுதிகொள்ள வேண்டும்.
    இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

    Read more: http://viduthalai.in/page-8/80825.html#ixzz32aj7WIzp

    தமிழ் ஓவியா said...

    பழ.நெடுமாறன்

    இதுகுறித்து, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ராஜபக் சேவை அழைத்திருப்பது தமிழக மக்களின் மன உணர்வு களைப் புண்படுத்தியுள்ளது. ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்துள்ளதற்குத் தமிழக முதலமைச்சர் ஜெயலலி தாவும் கண்டனம் தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன். அதேவேளையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் ஜெயலலிதா புறக்கணிக்கவேண்டும். தனது கட்சியைச் சேர்ந்த 37 மக்களவை உறுப்பினர்களையும் விழாவில் பங்கேற்க வைக்காமல் புறக்கணிக்கவேண்டும் என்றார் அவர்.

    கும்பிட்டுக் கேட்கும் வைகோ இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்று மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். தமிழ் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை, சிங்கள அரசு ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்தது. எனவே, உலகெங்கும் உள்ள தமிழர் களின் வேதனைக் கூக்குரலும், எங்கள் தமிழ்த் தாய்மார்கள், சகோதரிகளின் அழுகையும், விம்மலும், உங்களிடம் மன்றாடி கும்பிட்டக் கைகளுடன் கேட்க என்னைத் தூண்டுகிறது. எங்கள் தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடுகின்ற வகையில், உங்கள் பதவி ஏற்பு விழா வில் மகிந்த ராஜபக்சேவை பங்கேற்க அனுமதிக்காதீர்கள் என்று வைகோ கூறியுள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-8/80825.html#ixzz32ajE9BAL

    தமிழ் ஓவியா said...

    தமிழக வழக்குரைஞர்கள்

    தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், என்.ராஜா ராமன் மற்றும் ஜி.நித்தியானந்தம் ஆகிய இருவரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-

    இலங்கையில் படுகொலை பாதகங்களில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் ஒன்று ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போர்க்குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு மனிதருக்கு இந்திய அரசின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பது தமிழர்களின் உணர்வுக்கு எதிரான காரியமாகும். எனவே, ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களைப் பற்றிய விரிவான விசா ரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று மற்ற நாடுகளின் தலைவர்களுடன் நடைபெறும் பேச்சு வார்த்தைகளில் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

    தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்தப் பதவியேற்புக்கு அழைப்பது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மாணவர்கள் எதிர்ப்பு

    மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வ தற்காக இந்தியா வர உள்ள இலங்கை அதிபர் ராஜபக் சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாச்சலம் கொழஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.

    கல்லூரியில் இன்று (23.5.2014) தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    Read more: http://viduthalai.in/page-8/80825.html#ixzz32ajKM8l1

    தமிழ் ஓவியா said...

    கலிலீயோ

    உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

    பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

    மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ

    அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

    முதலாளிகளின் கொடுமைகளை எடுத்துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

    முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

    Read more: http://viduthalai.in/page-1/80485.html#ixzz32akMgOeW

    தமிழ் ஓவியா said...


    மூட்டுவலிக்குவைத்தியம்


    மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் மொசைக் தரையிலோ, வெறும் தரையிலோ, பளிங்கு கல் தரையிலோ படுத்துத் தூங்கக் கூடாது.

    நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மூட்டுவலி அதிகமாகும். ஆகவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்து ராகிக் கஞ்சி குடிப்பதுதான்!
    மூட்டுவலி உள்ளவர்கள் காரத்தைக் குறைக்க வேண்டும்; குறிப்பாக பச்சைமிளகாய் கூடாது. சாதாரண காப்பிக்கு பதில் சுக்குக் காப்பி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

    குளிர்ச்சி அதிகம் சேர்ந்தால் மூட்டுவலி அதிகரிக்கும். இதனால் மூட்டுவலி உள்ளவர்கள் ஈரத் தரையில் வெறும் காலால் நடக்கவும் கூடாது.

    உளுந்து எண்ணெயை மூட்டுவலி உள்ள இடத்தில் சூடேறும்படி தேய்த்துவிட்டால் மூட்டுவலி குறையும்.

    வாயுத்தொல்லை உள்ளவர்கள் அடிக்கடி முருங்கைக்காய், முருங்கைக் கீரையை உணவில் சேர்க்கக் கூடாது. * சித்தரத்தையை இடித்து தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்து காலை, மாலை சாப்பாட்டுக்குப் பின்பு தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

    டாக்டர் எஸ்.என்.முரளீதர் எழுதிய மூட்டுவலிக்கு வைத்தியம்' என்ற நூலிலிருந்து.

    Read more: http://viduthalai.in/page-1/80490.html#ixzz32amKuai3

    தமிழ் ஓவியா said...


    தொட்டுத் தொடரும் தேவதாசி பாரம்பரியம்

    கர்நாடகம் ஆந்திரா போன்ற மாநி லங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப்படுகின்றனர். இது கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெயரில் படிப்பறி வில்லா மக்களை ஏமாற்றி இந்த கொடூரம் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் தந்தை பெரியார் தலை மையில் அன்னை முத்துலட்சுமி ரெட்டி யார் மற்றும் மூவலூர் இராமாமிர்தத்த அம்மையார் போன்றோர் நடத்திய சமூகப் போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத் தில் இருந்து வேரோடு அழிந்துபோனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

    ஆனால், கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண்களுக்கு புனிதமான ஒரு சடங்கு போலவும் ஆலயங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை காரணமாக சிலர் (பெரியார் பெயரைக் குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு தங்கள் கலாச்சாரத்தில் பொறாமையும் மதத்தில் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப் போது பரபரப்பான ஒன்றாக இருந்தது.

    அவரின் திருவாய்மொழியை உச்சநீதி மன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் அவமானம் என்று கூறி இருக்கிறது.

    கர்நாடக மாநிலம் ஹரப்பனல்லி தாலுகாவில் உள்ளது உத்தரங்கமல துர்கை கோவில் அடிவிமலநகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன்றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசிற்கு தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம் இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழா வாகும். இதனால் யாரும் பாதிக்கப்பட வில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்த கோவில் தேவதாசி விழாவை சீரோடு சிறப்பாக நடத்தி வந்தது.

    இந்த கோவிலின் முதிய தேவதாசியான உளியம்மா என்பவர் நீண்ட காலமாக இந்த பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால், நகர நிர்வாகம் மற்றும் பிரபலங்களின் தலையீடு காரண மாக அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது.

    இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மா விற்கு உதவமுன் வந்தது. நீண்ட போராட் டத்திற்கு பிறகு எஸ்.எல். பவுண்டேசன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது அதில் உதரங்கமல் துர்க்கை யம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம் பரிய தேவதாசி முறையையும் அதன் சின்னாப்பின்னமாகும் பெண்களின் வாழ்க்கைபற்றியும் குறிப்பிட்டிருந்தது.

    சமூகத்தின் மிகவும் கொடிய பழக்க மாக இன்றும் தொடரும் இந்த அவ லத்தை அறிந்ததும், உச்சநீதிமன்றமே ஒரு முறை அதிர்ந்து போனது,தேவதாசியாக மாற்றப்படும் விழா 13.2.2014 இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இந்த மனுமீது நீதிபதி கீழ்க்கண்ட உத் தரவை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கர்நாடக தலைமைசெயலாளருக்கு உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவில் குறிப்பிடப்படுவ தாவது: இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என்பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமான சின்னமாகும். இந்த சம்பவம் பற்றி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் இந்த சம்பவம் நடைபெறுவதை தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட் டுள்ளது.

    சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப் பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறோம். சமூகத்தில் பெண்கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன்றளவும் குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழுவதும் தேவைப் படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதி மன்றத்தின் உத்தரவின்படி அவரின் வார்த்தை உண்மையானது.

    Read more: http://viduthalai.in/page-1/80493.html#ixzz32amwKQ1H

    தமிழ் ஓவியா said...


    இவர்தான் ராஜ்நாத்சிங் ராஜ்நாத் சிங்


    உத்திரப்பிரதேசம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள பஹன்புரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் ராம்பதன் சிங். தயார் குஜராத்தி தேவி. விவ சாயக்குடும்பத்தில் பிறந்த இவர் உள்ளூரிலேயே பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் வென்றார். தன்னுடைய தந்தையாரின் சகோதரர் தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர் அவர் மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    மிர்ஷாபூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். 1974-ஆம் ஆண்டு மிர்சாப்பூர் கிளை பாரதீய ஜனசங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பில் அமர்ந்தார். இங்கிருந்து ராஜ்நாத் சிங்கின் அரசியல் பயணம் தொடங்கியது. 1991-ஆம் ஆண்டும் உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றிய போது கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார்.

    அப்போது அவர் உத்திரப்பிரதேசத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்திய வரலாறு தொடர்பான பாடங்களில் இந்துத்துவ அமைப்புகளின் ஆசைகளுக்கு இணங்க மாற்றம் கொண்டு வந்தார். வேதக்கணிதம் என்ற இல்லாத ஒரு கணித பாடத்தை பள்ளிகளில் கணிதப்பாடமாக சேர்க்கப்பட்டது.

    2004-களுக்கு பிறகு பாஜக கட்சி தொடர் சரிவைக்கண்டு வந்தது, ஆட்சியை இழந்தது, பிரமோத் மகாஜன் கொலை, தேர்தல் தோல்வி, வாஜ்பாயின் அரசியல் சந்நியாசம் லால்கிருஷ்ண அத்வானியின் ராஜினாமா மிரட்டல் என பல பக்கங்களில் இருந்தும் கட்சிக்கு நெருக்குதல் வர பாஜக கட்சியின் தேசியத்தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். கட்சியை வளர்க்கும் கட்டாயத்தில் இருந்த ராஜ்நாத் சிங் கட்சி இதுவரை மேம்போக்காக கூறிவந்த இராமர் கோவில் பிரச்சினையில் தீவிரமாக இறங்கினார். ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்த பழமைவாத தலைவர்களுள் இவரும் ஒருவர். இந்திய பாடத்திட்டத்தில் பழமைவாத கருத்துக்கள் தேவை என்று கூறி பாஜக ஆளும் மாநிலங்களின் இந்தியவரலாற்றை மாற்றி எழுதவும் இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

    Read more: http://viduthalai.in/page2/80902.html#ixzz32gSPgHhI

    தமிழ் ஓவியா said...



    இட்லி வந்தது!

    கன்னடத்தில்தான் இட்லி செய்யும் முறைபற்றிய குறிப்பு முதலில் கிடைத்துள்ளது. கன்னடத்தில் 10ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட லோகபரா என்ற நூலில் இட்லி பற்றியசெய்தி காணப்படுகிறது. 12ஆம் நூற் றாண்டுக்குப் பிறகே தமிழ்நாட்டுக்கு இட்லி அறிமுகமாகியிருக்கக் கூடும் என்கிறார் பிரபல எழுத்தாளர். - எஸ்.ராமகிருஷ்ணன்


    ஆறு ஆண்டுகளில்

    இலங்கைத் தீவில் கடந்த ஆறு ஆண்டுகளில் 2007 முதல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை 11,531. கைது செய்யப்பட்டவர்கள் 12,229 பேர்கள், இதில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் 10 சதவீதம் ஆனாலும் அவர்கள் மீதான தண்டனை மட்டும் கேள்விக் குறியே!

    Read more: http://viduthalai.in/page2/80903.html#ixzz32gSXXkiI

    தமிழ் ஓவியா said...


    பாகிஸ்தானின் தீப்பொறி

    பஞ்சாயத்து கூடியது. அவள் வீட்டுக்கு எதிரே 400 பேர் கூடி குசுகுசுவென்று பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவள் வீட்டுக்கும் விஷயம் அரசல்புரசலாக தெரிந்துதான் இருந்தது. காரணம், சிம்பிள். அவளுடைய சகோதரன் எதிர் கும்பலை சேர்ந்த ஒரு பெண்ணோடு ஓடி விட்டான். அதற்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கதான் பஞ்சாயத்து கூடியிருந்தது.

    அவளும் அப்பாவும் சமாதானம் பேச கிளம்பினார்கள். மாலை ஆரம்பித் திருந்தது. கூட்டமும் குறைந்திருந்தது. அப்பா பேச ஆரம்பித்தார். அவர் பேச்சினை சட்டை செய்யலாமல் அந்த நாலு பேரும் அவளை அவர் கண் முன்னாலேயே தூக்கி, குடிசைக்குள் நுழைந்தார்கள்.

    அப்பாவின் கதறலும் அவளின் கூக்குரலும் ஊர் முழக்க எதிரொலித்தது. கந்தலான துணி போல வெளியே வந்தாள். அவருடைய சல்வார் கமீஸ் கிழிந்திருந்தது. ஊரின் மானத்தை காத்து விட்டோம் என்று அந்த நான்கு ஓநாய்களும் காவலுக்கு நின்றிருந்த மற்றவர்களும் எக்காளமிட் டனர். வெளியே வந்த அவளை அந்த கூட்டம் நிர்வாணப்படுத்தியது. அப் பாவின் முன் நிர்வாணமாகவும், ரத்தம் கசியவும் நின்றாள். தன்னிடமிருந்த ஒரு துண்டினை அவள் உடம்பில் போர்த்தி கண்ணீர் விடுவதை தவிர எதையும் செய்ய இயலாத அவளுடைய அப்பா கைத் தாங்கலாக அழைத்துச் சென்றார். உடலும் உள்ளமும் அனலாய் கொதித்தது. வீட்டின் கதவை மூடுமுன் அவள் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை பாகிஸ்தானை உலுக்கியது. அவள் முக்தாரன்பீவி அல்லது முக்தாரன் மாய், பாகிஸ்தானில் ஒரு சின்ன கிராமமான மீராவலாவில் வசித்தவர்.

    முக்தாரன் சும்மா விடவில்லை. ஊடகங்களுக்கு போனார். பெண்ணு ரிமைகளை பேச ஆரம்பித்தார். பாகிஸ் தான் ஜெனரல் முஷ்ரப்பின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அமெரிக்க, பிரிட்டிஷ் செய்தியாளர்களுக்கு மூக்கு வேர்த்து, மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப் பானது. வெளிநாடுகளிலிருந்து பாகிஸ்தானில் பெண்களின் நிலைப்பற்றி பேச அழைப்பு வந்தது.

    முஷ்ரப்புக்கோ தலைவலி, பாகிஸ் தானில் பெண்களின் நிலை இதுதான் என்று மேற்கு நாடுகள் நினைத்தால் தன்னை காலி செய்து விடுவார்கள் என்று பயந்தார். இவரின் பாஸ்போர்ட்டினை முடக்கினார். முக்தாரன் அதையும் தைரியமாக எதிர்கொண்டார். வெளிநாடுகளில் வசித்த பாகிஸ்தானியர்கள் பொங்கி எழுந்தார்கள். பாகிஸ்தானின் ஊடகங்கள், பொது மக்கள், அரசு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பெருங்கூட்டமே முக்தாரனுக்கு பின்னால் எழுந்து நின்றது.

    ஆனாலும், பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அரசியல் பேசின. வன்புணர்வுக்கு துணை நின்ற நான்கு பேர்மீது போதிய சாட்சியங்கள் இல்லை என்று விடுதலை செய்தன. ஆனால், ஒரு வன்புணர்வு ஆயுத மாக மாறி பாகிஸ்தானிய மனசாட்சியை நெறிக்க ஆரம்பித்திருந்தது.

    முக்தாரன் மாய் பாகிஸ்தானிய பெண் குரலுக்கான முகமாக மாறியிருந்தார். 2005-இல் பாத்திமா ஜின்னா தங்க விருது கிடைத்தது. கிளாமர் வார இதழ் அதே வருடம் வுமன் ஆஃப் தி இயர் விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது.

    பிரிட்டிஷ் செய்தியாளர் இவரோடு பேசி எழுதிய நினைவலைகள் தேஷ்னூரி ஆங்கிலத்தில் ‘Oh! Edition’ என்று வெளியாகி உலகமெங்கும் அதிர்வினை கிளப்பியது. 2006-இல் அய்.நா.வின் பேசினார். 2006-இல் பாகிஸ்தானின் கீழ் சபை வன்புணர்வுக்கான சட்டங்களை மாற்ற முன்மொழிந்தது. 2010-இல் கனடிய பல்கலைக் கழகம் கவுரவ முனை வர் விருது கொடுத்தது.

    வெந்து தணிய காட்டுக்கு ஒரே ஒரு தீப்பொறி போதும். பாகிஸ்தானில் முக்தாரன் மாய் அந்த தீப்பொறி. - நரேன்

    (தினகரன் வசந்த மலர் 18.5.2014

    Read more: http://viduthalai.in/page5/80909.html#ixzz32gTZIYcv

    தமிழ் ஓவியா said...


    100 டன் எடையுள்ள டைனோசர்


    தென் அமெரிக்காவில் அர்ஜென்டி னாவில் அறிவியலாளர்கள் பெஸ்க்ராங்கங் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியில் இதுவரையிலும் எவரும் கண்டறியாத வகையில் மிகப்பெரியதும், மிகவும் பழமையானதுமான டைனோசர் உயிரினத்தின் முழு அளவிலான உடற் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

    பாலியன்டாலஜி ஈஜிடியோ ஃபெருக் லியோ அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி யாளர் குழு செய்துள்ள ஆய்வின்முடிவில் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்ன தாக வாழ்ந்த உயிரினத்தின் (டைனோசர் விலங்கின்) எச்சங்களாக கிடைத்துள்ளது. அந்த ஆய்வின்படி கிடைத்துள்ளவற்றை பாதுகாப்பதுகூட சவாலாகவே உள்ளது. சற்றும் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு அளவிலும், எடையிலும் மிக அதிக அளவில் உள்ளதே அதற்கு காரணமாகும். பட்டாகோனியா பகுதியின் தொலைதூரத்தில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. உயிரியல் அகழ்வாராய்ச்சி யாளர்கள் கூறும்போது, டைனோசர் என்று கூறப்படும் நீண்ட கழுத்தும், நீண்ட வால் பகுதியுடனும் உள்ள நான்கு கால்களைக்கொண்ட தாவர உண்ணியான இந்த விலங்கின் புவியியல் காலம் என்பது சுமார் 95 மில்லியன் காலத்துக்கு முந்தைய தாக இருக்கும் என்று அறிவியலா ளர்களால் கணிக்கப்படுகிறது. அந்த விலங்கின் முழு எடையானது 14ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமாக இருக்கும் அல்லது நூறு டன் எடை உள்ளதாக இருக்கும் என்றும் , இந்த கண்டுபிடிப்பு உயிரியல் ஆய்வில் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்றும், இதற்கு முன்னர் ஆய்வுகளில் கிடைத்த பழமையான உயிரினங்களின் காலம் குறைந்ததாகவும், அவ்வுயிரிகளின் உடற் பாகங்கள் சிதைந்து சிறிதளவே கிடைத்தன என்றும் ஆராய்ச்சிக்குழுவின் சார்பில் தெற்கு அர்ஜென்டினா டிரிலீவ் நகரின் ஈஜிடியோ ஃபெருக்லியோ அருங்காட்சிய கத்தின் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஜோஸ் லூயிஸ் கர்பல்லிடோ கூறுகிறார்.

    அருங்காட்சியகத்தின் இயக்குநர் ரூபன் கியூனியோ கூறும்போது, உலகி லேயே பெரிதாக கிடைத்துள்ள மாதிரியாக, முழு அளவில் கிடைத்துள்ள டைனோசர் கண்டுபிடிப்பாக இது உள்ளது என்றார்.

    2011இல் அர்ஜென்டினாவில் உள்ள விவசாயி ஒருவர் எதேச்சையாக தெரிவித்த தகவலின்படிதான் தலைநகரான புவனெஸ் அய்ரெஸ் நகருக்கு தென் பகுதியில் சுமார் ஆயிரத்து முந்நூறு கி.மீ (800மைல்) தொலைவில் உள்ள பட்டகோனியாவில் சுபுட் நிலப்பகுதியில் 200 புதையுண்ட படிமங்கள் கண்டறிப் பட்டன. தற்போதைய கண்டுபிடிப்பு இதற்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு டைனோசர், மாமிச உண்ணிகளின் உடைந்த பற்கள் உள்ளிட்ட அனைத் தையும் பின்னுக்கு தள்ளிவிட்டது.

    -ராய்ட்டர்ஸ், 18-5-2014

    Read more: http://viduthalai.in/page5/80908.html#ixzz32gTn6KIt

    தமிழ் ஓவியா said...


    வெள்ளைப் பூண்டு


    பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப் பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம்.
    வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்ட மின்கள், நோய் எதிர்ப்புப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்புப்பொருட்கள் உள்ளன.
    தயோ சல்பினேட் எனும் உயிர்ப்பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
    கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரி விக்கின்றன.
    ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுவதாக தெரியவந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது..

    இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று நுண் கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்புப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாகும்


    Read more: http://viduthalai.in/page6/80912.html#ixzz32gUXFMwz

    தமிழ் ஓவியா said...


    தேவை பெரியார் இயக்கம்


    புதுச்சேரி மாநில அமைப்பு ரீதியான திராவிடர் கழகம் 3.5.2014இல் தங்களால் அமைக்கப்பட்டு, புதுவையிலே ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளீர்கள் என்ற சேதி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல தித்திப்பாக இனிக்கிறது.

    இன்றைக்கு உலக நாடுகள் பலவற் றிலே இனவெறி, மதவெறி, நிறவெறி, பதவி வெறி, தீவிரவாதம் போன்ற தீய சக்திகளால் - உலக மனித சமுதாயம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றன. மனிதாபிமானமற்ற இலங்கை ராஜபக்சே அரசு இன்று வரை தமிழர்களை அழிப்பதையே, குறியாகக் கொண்டு, தமிழர்களை கொன்று குவித்து வருகின்றது - இது ராஜபக்சே அரசின் இன வெறி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் யூதர்கள் - இது மதவெறி.

    இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னதால், காந்தியை 1948-லே சுட்டுக் கொன்றது - பார்ப்பன - ஆரிய மதவெறி.

    ஒடிசாவில் பழங்குடி மக்களின் தொழு நோயைப் போக்கும் தொண்டறத்தைச் செய்து கொண்டிருந்த, ஆஸ்திரேலியா டாக்டர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் - 1999-லே ஜீப்பில் வைத்துக் கொளுத்திக் கொன் றார்களே இந்துத்துவா பஜ்ரங்தள் கும்பல் - இது இந்து மதவெறி.

    இன்றைக்கு இந்தியாவில் 93 கோடி மக்கள் சேரிப் பகுதிகளில் ஒதுக்குப்புற மாக தள்ளப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக் கிறார்களே. இது இந்து மதத்தின் சாதி வெறி. நெல்சன் மண்டேலாவும் அவரது தோழர்களும் கருப்பினத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாது - இருட்டிய பிறகுதான் வெளியே வர வேண்டும் என்ற நீதிபதியின் உத்தர வின்படி 5 ஆண்டுகள் இந்தக் கொடு மையை அனுபவித்தனர். இது தென் ஆப் பிரிக்க வெள்ளையர் அரசாங்கத்தின் நிற வெறி. எங்கள் மாநிலத்தின் விவசாயிகள் காரில் செல்கிறார்கள் என்று மோடி ஒரு முறை சொன்னார். ஆனால் 20.03.2012 கால கட்டத்தில் குஜராத்தில் 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். (ஜூனியர் விகடன் 13.4.2014) இப்படி மோடி உண்மைக்கு மாறாகக் கூற வேண்டிய தன் அவசியமென்ன? இதுதான் பதவி வெறி!

    சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகா ணத்தை தனியாகப் பிரித்து தந்து இஸ் லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வரும் வீகர் எனப்படும் தீவிர வாதக் குழுவினர் - யுன்னான் மாகாணத்தின் குன்மிங் ரயில் நிலையத்துக்குள் கத்தியுடன் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை யெல்லாம் வெட்டிச் சாய்த்தனர். இந்த கொலைவெறி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 28 பேர் பலியாகினர். இது ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் (2.3.2014) இது தீவிரவாதம்.

    இப்படி காலங்காலமாக உயிர்ச் சேதங்களும், பொருளாதார அழிவுகளும், பெண்கள் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாக்கப்படுவதும் நடை பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இவை களையெல்லாம் மாற்றியமைக்கின்ற வழிமுறைகள் பற்றி எத்தனை நாட்டுத் தலைவர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள்? சிந்தித்து செயல்பட்டு இருக்கின்றார்கள் என்பதைப்பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    பட்டம், பதவிக்காகவும், கோடி கோடி யாகக் கொள்ளையடித்து சொத்துக்களை குவிப்பதற்காகவும், தாங்கள் பெற்ற பதவி களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தங்களுக்குச் சாதகமான - தீய வழி முறையாக இருந்தாலும் - கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் - அதன்படி நடக் கவே சித்தமாக உள்ளார்கள். அது முதல்வராக இருந்தாலும் சரி, அல்லது அமைச்சர்களாக இருந்தாலும் சரி.

    பணம் பதுக்கி வைப்பதற்கென்றே ஒரு சுவிஸ் வங்கி வேறு. இப்படி பல கோணங்களிலே ஏராளமான களைகள் உலகளவிலே முளைத்து துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளை யெல்லாம் வெட்டி, கெல்லி எறிகின்ற ஒரே களைவெட்டி - பெரியாரிசம் தான்.

    இன்றைய உலகிற்கு மிகவும் தேவை மனிதநேயம். அந்த மனிதநேயத்தைப் பரப்புரை செய்கின்ற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும் அதன் தலைவர் கி. வீரமணியும் ஆவார்கள். உலகெங்கும் திராவிட இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். புதியதோர் உலகம் செய்வோம். அதில் மாந்தர்களை மட்டுமே காண்போம்.
    கா.நா. பாலு, எடப்பாடி

    Read more: http://viduthalai.in/page7/80914.html#ixzz32gUurGWC

    தமிழ் ஓவியா said...


    சூரிய ஒளிபட்டு மின்னிய சனிக்கோள் வளையங்கள்


    சனிக்கோளின் வளையங்களில் இதுவரை கண்ணுக்கு புலப்படாத பகுதி முதல் முதலாக சூரிய ஒளியை உள்வாங்கி பிரகாசித்தது. இந்தக் காட்சியை சனிக்கோளை ஆய்வு செய்ய அனுப்பிய கசினி விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. சனிக்கோளின் கடுமையான ஈர்ப்புவிசை மற்றும் அதன் வேகம் காரணமாக சனியின் நடுக்கோட் டுப்பகுதியில் பலலட்சம் கிலோமீட்டர் தூரம் வரை அழகிய வளையங்கள் உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி ஆண்டுகளாக சனிக்கோளை சுற்றி வரும் வளையங்களை பல பகுதிகளாக பிரித்து அதற்கு ஆங்கிய எழுத்து ஏ முதல் எப் வரை பெயர் சூட்டி யுள்ளனர். இதில் சுமார் 12 லட்சம் கிலோ மீட்டர் வரையிலான வளையப்பகுதி இருட்டிலேயே உள்ளது. இந்தப் பகுதிக்கு பி என்று பெயர் சூட்டி அழைத்துவந்தனர். அடர்த்தியான தூசுகள் சூழ்ந்துள்ளதால் இப்பகுதி ஒளியிழந்து காணப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் சனிக்கோள் 43 டிகிரி கோணத்தில் தற்போது சூரியனை நெருங்கிச் சுற்றுகிறது, இதன் காரணமாக பி வளையம் முழுவதிலும் நன்றாக சூரிய ஒளிபட்டு அந்த வளையப்பகுதி மிகவும் பிரகாசமாகத்தோற்றம் அளிக் கிறது, இதனை கசினி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

    கசினி அனுப்பிய படம் குறித்து நாசா மற்றும் அய்ரோப்பிய விண் வெளி ஆய்வு மய்யம் மற்றும் இத்தாலி விண்வெளி கழகம் மூன்றும் இணைந்து ஆய்வு செய்துவருகிறது. இதுவரை தொலைநோக்கி மூல மாகவும் விண்கலன்களின் புகைப்படக் கருவிக்கும் புலனாகாத பி வளையம் தற்போது ஆய்விற்கு உகந்த சூழ் நிலையில் சூரியஒளியை உள்வாங்கி எதிரொளித்துக்கொண்டுள்ளது. இதை வைத்து வியாழனுக்கும், சனிக்கும் இடையில் சுற்றும் விண்கற்களின் பாதையில் ஏற்படும் மாற்றம் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசாவில் சூரியக்குடும்பம் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள்

    Read more: http://viduthalai.in/page7/80915.html#ixzz32gV41SVl

    தமிழ் ஓவியா said...


    அதிசயம் ஆனால் உண்மை புற்றுநோய்க்கு மாற்று தட்டம்மைத் தடுப்பூசி

    அமெரிக்காவின் மின்னசேட்டா மாநிலம் பீக்வட் லேக்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஸ்டாஸி எர்ஹேல்ட்ஸ் (50). மல்டிபிள் மயலேமா என்ற புற்றுநோயால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தார். எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களில் ஏற்படுவதுதான் மயலேமா புற்றுநோய். எலும்பு புற்றுநோய் என்றும் அழைக் கப்படுகிறது. ரத்தப் புற்றுநோயின் ஒரு வகைதான் இது. மல்டிபிள் மயலேமா பாதிப்பால் தண்டுவடம், விலா எலும்பில் கடுமையான வலி ஏற்படும். நோய் முற்றினால் நகர முடியாமல் முடக்கிப் போட்டுவிடும். ரத்தசோகை உண்டாகும். சிறுநீரகம் பாதிக்கப்படும். நுரையீரல் தொற்று ஏற்படும். நரம்பு மண்டலம் செயலிழக்கும்.

    மேற்கண்ட அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு, ஏறக்குறைய இறக்கும் நிலைக்குப் போய்விட்ட ஸ்டாஸி, ரேசஸ் டர் நகரில் உள்ள மயே கிளினிக்குக்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டார். சோதனை முயற்சியாக அவருக்கு ஆன் கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை முறையை மருத்துவர்கள் மேற் கொண்டனர். 6 மாத சிகிச்சைக்குப் பிறகு, மயலேமா புற்றுநோயில் இருந்து அவர் பூரணமாக குணமடைந்துள்ளார்.

    இந்த வெற்றிகரமான சிகிச்சையை அளித்திருப்பது டாக்டர் ஸ்டீபன் ரஸல் தலைமையிலான மருத்துவக் குழுவினர். இதுபற்றி அவர்கள் கூறியிருப்பதாவது:
    மிகவும் மோசமான நிலையில் இருக் கும் புற்றுநோயாளிகள் தட்டம்மை போன்ற வைரஸ் நோயால் பாதிக்கப்படும்போது, அவர்களது உடல்நிலையில் ஓரளவு முன் னேற்றம் ஏற்படும். வைரஸை விரட்டுவ தற்காக இயற்கையாகவே உடலில் புரோட்டீன்கள் உற்பத்தியாவதே இதற்கு காரணம். இன்டர்ஃபெரான் புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். டியூமர் நெக்ரேசிஸ் ஃபேக்டர் புரோட்டீன், தீய செல்களை அழிக்கும். புற்றுநோய் செல்கள் அழிந்து, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் அவர்களது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது.
    வைரஸ் நோய்க்கு பதிலாக, வைரஸ் கிருமிகளை நேரடியாக ஊசி மூலம் உடலில் செலுத்துவதுதான் ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை. இதுகூட பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதுதான். புற்றுநோய் தீவிரமான நோயாளிகளுக்கு எந்த வகை சிகிச்சையும் பலனளிக்காத நிலையில், கடைசியாக இந்த சிகிச்சை அளிக்கப்படும்.

    1 கோடி தடுப்பூசியில் உள்ள கிருமி

    ஸ்டாஸிக்கும் இந்த சிகிச்சைதான் அளிக்கப்பட்டது. தட்டம்மை தடுப் பூசிக்கு பயன்படுத்தப்படும் அதே தட்டம்மை வைரஸ் கிருமிதான் அவரது உடலில் செலுத்தப்பட்டது. 1 கோடி பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவ தற்கு எந்த அளவு தட்டம்மை வைரஸ் கிருமி தேவைப்படுமே, அந்த அளவுக்கு வீரியான கிருமிகளை அவரது உடலில் ஊசி மூலம் செலுத்தினோம். இதன் காரண மாக அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வாந்தி, மூச்சுத் திணறலும் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்ததில், இந்த பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. அத்துடன், அவரது உடலில் இருந்த புற்றுநோய்க் கட்டிகளும் மறைந்து விட்டன. இருந்த சிற்சில கட்டிகளும் கதிர்வீச்சு மூலம் அகற்றப்பட்டுவிட்டன.

    இதேபோல, தட்டம்மை கிருமியைப் பயன்படுத்தி ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை அளித்ததில் இன்னொரு மயலேமா நோயாளியும் புற்றுநோயில் இருந்து ஓரளவு விடுபட்டுள்ளார்.

    ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை யால் பூரணமாக குணமான முதல் நோயாளி ஸ்டாஸி என்று செல்லலாம். சம்பந்தப் பட்ட இரண்டு நோயாளிகளையும் பெருத்தவரை எங்கள் ஆராய்ச்சி வெற்றி கரமாக முடிந்துள்ளது. புற்றுநோயாளிகள் அனைவருக்கும் இந்த வகை சிகிச் சையைப் பயன்படுத்த முடியுமா, தட் டம்மை வைரஸ் கிருமியை மருந்தாகப் பயன்படுத்தி புற்றுநோயை விரட்ட முடியுமா என்பதை நிரூபிக்க இன்னும் அதிக ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். இத்தகவல் மயே கிளினிக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சராசரியாக ஆண்டு தோறும் 16 ஆயிரம் பேர் மல்டிபிள் மய லேமா வகை புற்றுநோயால் பாதிக்கப் படுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வி.பி.சிங் இருவருமே மல்டிபிள் மயலேமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more: http://viduthalai.in/page8/80917.html#ixzz32gVIF1HU

    தமிழ் ஓவியா said...


    கீதா உபதேசமாம்?


    எது நடந்ததோ
    அது நன்றாகவே நடந்தது;
    எது நடக்க வேண்டுமோ
    அது நன்றாகவே
    நடக்கிறது -
    நடக்கும்
    இதை கேதார்நாத்தில்
    போய் கூற முடியுமா?
    ஒரு பெண்
    இரு காமவெறியர்களால்
    கற்பிழந்தாள்!
    அவளிடம் போய்
    நீ எதைக் கொண்டு
    வந்தாய்? இழப்பதற்கு?
    என்று கேட்க முடியுமா?

    - கவிஞர் கணக்கப்பா

    Read more: http://viduthalai.in/page8/80918.html#ixzz32gVfogXC

    தமிழ் ஓவியா said...


    உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா? அனைவரும் உயர் ஜாதியினர்தானா?

    உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா?

    அனைவரும் உயர் ஜாதியினர்தானா?

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வரப் போகும் தலைமை நீதிபதியும் ஒரு பார்ப்பனர்தானா?

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ளவர் வட மாநிலத்திலிருந்து வந்துள்ள ஒரு பார்ப்பனர்.

    இவர் வேறு மாநிலத்திற்குத் தலைமை நீதிபதியாகி விரைவில் சென்று விடுவார் என்ற நிலையில், மீண்டும் நிரந்தரமான தலைமை நீதிபதியாக, பஞ்சாப் அரியானா மாநிலத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் இவரும் உயர் ஜாதி பார்ப்பனர் (கவுல் என்றாலே காஷ்மீர மூலதாரமான உயர் பார்ப்பன வகுப்பு ஆகும்) அவர் இங்கே வந்து, சில மாதங்களிலேயே உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று சென்று விடக் கூடும்.

    60 மொத்த நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது ஓய்வு பெற்றவர்கள் போக 43 நீதிபதிகள்தான் உள்ளனர். 17-க்கும் மேற்பட்ட பதவிகள் காலி; வழக்குகளும் அதன் காரணமாக ஏராளம் தேக்கமாகி நிற்கின்றன!

    உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 31.

    இதற்கு தற்போது காலி இடங்களில் புதிதாக 4 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் மூன்று பேர் பார்ப்பன உயர் ஜாதிக்காரர்கள், இரண்டு பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகி, உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று வரவிருக் கின்றவர்கள்; மற்றும் இரு சட்ட நிபுணர்கள் என்பதால் - நீதிபதியாகாமலேயே நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட இருப்பவர் இருவர். ஒருவர் பார்சி வழக்குரைஞர்; மற்றொருவர் தமிழ்நாட்டைச் சார்ந்த பார்ப்பன வழக்குரைஞர் நீண்ட காலம் டில்லியிலேயே அரசு வழக்குரைஞராகவே இருந்தவர்.

    உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கர்நாடகத்தைச் சார்ந்த ஜஸ்டீஸ் வெங்கடாச்சலய்யா என்ற பார்ப்பனர், இவருக்கு மூத்த வழக்குரைஞர் தகுதியை, விதிகளுக்கு விலக்கு அளித்தே இவரை குறுக்கு வழியில் உயர்த்தியது தான் இன்று இவர் இப்பதவி உயர்வுக்கும் - உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரேரணை செய்வதற்கும் அடிப்படைக் காரணமாகும்.

    உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டிற்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களான நீதிபதிகள் தகுதியுள்ள பலர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மற்ற நீதிபதி களாகவும், அதேபோல மூத்த நீதிபதிகளாக பல தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் இருந்தும் அவர்களில் ஒருவர்கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்படாதது, அரசியல் சட்டத்தின் சமூகநீதி உத்தரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் வழக்குரைஞர்களிடையே குமுறல் உள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே மிகவும் காலந் தாழ்ந்து,

    தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து

    1. ஜஸ்டீஸ் வரதராஜன் (தமிழ்நாடு)
    2. ஜஸ்டீஸ் இராமசாமி (ஆந்திரா)
    3. ஜஸ்டீஸ் பாலகிருஷ்ணன் (கேரளா)

    வந்து ஓய்வு பெற்று விட்டனர்!

    இப்போது எவரும் இல்லை! அதேபோல் பிற்படுத்தப் பட்ட சமூகத்திலிருந்து

    1. ஜஸ்டீஸ் எஸ். இரத்தினவேல் பாண்டியன் (தமிழ்நாடு)
    2. ஜஸ்டீஸ் ப. சதாசிவம் (தமிழ்நாடு)

    இவர்களும் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது எவரும் இல்லை! 31 இடங்களிலும் ஆண் களும் சரி, பெண்களும் சரி எல்லாம் முற்பட்ட ஜாதியினரே!

    மேலும், இப்போது நிரப்பப்படவிருக்கும் நான்கு நீதிபதிகளும்கூட உயர் வகுப்பினரே!

    இதுபற்றி புதிய மத்திய அரசு, சமூக நீதிக் கண்ணோட் டத்தில் ஆராய்ந்து நல்ல முடிவினை எடுப்பதும்; கொலி ஜியம் என்ற முறையை மாற்றுவதுபற்றி யோசிக்கவும் முன்வர வேண்டும் என்பதே பல வழக்குரைஞர்கள், முன்னாள் நீதியரசர்கள் பலரின் கருத்தாகும். விடியல் ஏற்படுமா நீதித் துறையில்?

    - நமது சிறப்பு செய்தியாளர்

    Read more: http://viduthalai.in/e-paper/80858.html#ixzz32gVwptGG

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மீகம்?


    இராமேசுவரத்தில் 24 புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கினால் பலவிதமான சாபங்கள், தோஷங்கள் இறைவன் அருளால் நீங்கும் என்பது அய்தீகம் என்கிறது ஓர் ஏடு!

    அது என்ன அய்தீகம் அதையும் விளக்கலாமே?

    தான் தப்பித்துக் கொள்ள அய்தீகத்தின்மீது பழியா?

    24 புண்ணிய தீர்த் தங்கள் இருக்கும் இராமேசுவரத்தில் மருத்துவமனைகள் ஏன்?

    இழுத்து மூடி விடலாமா?

    Read more: http://viduthalai.in/e-paper/80867.html#ixzz32gW658BN

    தமிழ் ஓவியா said...


    ஆட்டுக் கல்லான அறிவு!


    குமாரபாளையம், மே 24- நாமக்கல் மாவட் டம் குமாரபாளையம் பகுதியில் கொச்சி பெங் களூர் தேசிய நெடுஞ் சாலையில் பல இடங் களில் ஆட்டுக்கல், அம் மிக்கல், குழவி கல் போன் றவை நேற்றுமுன்தினம் திடீ ரென கொட்டப்பட்டிருந் தன. இந்த கற்கள் எப்படி நெடுஞ்சாலைக்கு வந்தது என்பது பலர் புரியாமல் தவித்தனர். மழை வேண்டி மக்கள் இப்படி செய்தது தெரிய வந்தது. குமார பாளையம் கிராமங்களில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவும் போது, கல் கொடும்பாவி கொட்டுதல் என்ற வினோத வழிபாடு மக்கள் மத்தியில் உள்ளதாம். மழை பெய்யாத கிராமங் களை சேர்ந்தவர்கள், தங்கள் பகுதிகளில் பயன் படாத கல் உரல், ஆட் டுக்கல், அம்மி குழவி போன்றவற்றை வண்டி யில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள கிராமங்களில் இர வோடு, இரவாக கொட் டுவார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் உள்ள பீடைகள் நீங்கி, மழை கொட்டும் என நம்புகின் றனராம் குமார பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் நேற்று முன் தினம் (20ஆம் தேதி) இரவு 3 இடங்களில் இது போல் கல் கொடும் பாவி கொட் டப்பட்டுள்ளது. இதற் கிடையில், கற்கள் கொட் டப்பட்ட பகுதியில் மழை பொய்த்து போகுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/80861.html#ixzz32gWrUvD7

    தமிழ் ஓவியா said...

    கல்வி வெள்ளம் கரை புரள்கிறது!


    தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வந்துவிட்டன.

    இதில் 90.7 சதவீத இருபால் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

    முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் மேல் என்பது - எந்த அளவுக்கு நம் மக்களிடையே கல்வியின் செழிப்பு வளர்ந் திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

    சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைத்த சமூகத்தில், இப்படி கல்விப் பயிர் செழித்துக் குலுங்குகிறது என்பதை எண்ணும் பொழுது உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன.

    இதற்காக உழைத்த தந்தை பெரியார் அவர்களையும் அவர் கண்ட இயக்கத்தையும் நீதிக் கட்சித் தலைவர்களையும், திராவிடர் இயக்கத்தையும், கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் முயற்சியையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்ப்போம்! நெஞ்சம் நிறைந்த பூரித்த நன்றிவுணர்வால் அவர்களை நனைப்போம்.

    சமூக புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்கள், தாம் கண்ட அறக்கட்டளையின் சார்பில் சில கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்; நடத்தினார்; அன்னை மணியம்மையார் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

    தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஒப்பிட முடியாத முயற்சியாலும், கண் துஞ்சாப் பணியாலும் கூர்த்த சிந்தனையாலும், அறிவார்ந்த திட்டங்களாலும், அக்கல்வி நிறுவ னங்களை மேலும் மேலும் (எத்தனை மேலும் என்றும் போட்டுக் கொள்ளலாம்) வளர்த்தார் - வளர்த்துக் கொண்டும் உள்ளார்; ஒரு பல்கலைக் கழகம் என்கிற அளவுக்குப் பெரியார் விதைத்த அந்தக் கல்வி வித்தினை வளர்த்து ஆளாக்கி விட்டாரே!

    அழுக்காறு அற்ற நெஞ்சங்கள் வாழ்த்துகின்றன - பூரிக்கின்றன - பாராட்டுகின்றன. பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் உலகெங்கும் பரவிப் பணியாற்றுகின்றனர். இந்திய இராணுவத் துறையிலும்கூட முத்திரை பதிக்கின்றனர் என்று எண்ணும்போது நம் தலைவர் அடையும் மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை.

    உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உலகளாவிய அளவில் தந்தை பெரியார் பெயரைக் கொண்டு சென்ற அந்தப் பெற்றிதான் என்னே!

    பெரியார் கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் அனைவரின் கவனத்தையும், கருத்துகளையும் ஈர்த்துள்ளன.

    எட்டு ஆண்டுகளுக்கு முன் 217 மாணவர்களுடன் பெரியார் அறக்கட்டளையால் கையகப்படுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் குலேசன் பள்ளியில், இப்பொழுது படிக்கும் இருபால் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனைத் தெரியுமா 2500; 217 எங்கே 2500 எங்கே!

    பத்து மடங்கு அதிகமாக மிகவும் பின் தங்கிய ஒரு பகுதியில் ஒரு பள்ளியில் மாணவர்கள் படையெடுக் கிறார்கள் என்றால் அதன் தன்மையின் ஆழத்தை, அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பரப் பினை எண்ணினால் மிகவும் பிரமிப்பாகவே உள்ளது.

    நேற்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றதில் மூன்றாவது இடத்துக்கு வந்த மாணவன் (கி. நவீன்ராஜ் 497/500). ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவன் என்று நினைக்கிறபோது, அந்த மாணவனின் பெற்றோர்களைவிட நமது தலைவரும், பள்ளி ஆசிரியர்களும், கழகத்தவர்களும் பூரிப்படைகின்றனர் - பெருமிதம் கொள்கின்றனர்.

    வெட்டிக்காடு என்னும் குக்கிராமம் உரத்தநாடு அருகில்; படிக்க வாய்ப்பற்றுக் கிடந்த அந்தப் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் பெரியார் அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் துவக்கினார்.

    இவ்வாண்டு ஆறுபேர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி அத்தனை மாணவர்களும் வெற்றி பெற் றுள்ளனர். அந்த ஆறு பேரில் மூவர் 400-க்கும் மேலாக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    தமிழ் ஓவியா said...

    நாகம்மையார் இல்லத்துப்பிள்ளைகளின் நூறு சதவீத வெற்றி பெருமிதமாக இருக்கிறது.

    படிப்பு பார்ப்பனர்களுக்குத்தான் வரும்; சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் வரவே வராது என்று ஆக்கி வைக்கப்பட்ட மனுதர்ம காட்டை அழித்து, சமூகப் புரட்சி இந்த நாட்டில் உருவாக் கப்பட்டுள்ளது என்பதற்கு இவை எல்லாம் ஈடில்லா எடுத்துக்காட்டுகள்.

    தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளியில் சேர்க்கா விட்டால் மான்யம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்த நீதிக்கட்சியை நெஞ்சார இந்த நேரத்தில் நினைப்போமாக!

    பெரியார் கல்வி நிறுவனங்களை நிறுவி, அடி கோலிட்ட அய்யாவையும், அன்னை மணியம்மை யாரையும், நாகம்மை இல்லத்துப் பிள்ளைகளின் அண்ணனாக இருந்த அருமைப் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களையும் எண்ணுவோம்.

    இன்று பெரும் அளவு வளர்த்த எல்லோரையும் ஆச்சரியரித்தோடு திரும்பிப் பார்க்க செய்துள்ள நமது தலைவர் ஆசிரியர் அவர்களை மானசீகமாகக் கை குலுக்குவோம்! பெரியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரமாக இருந்து உழைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனை வரையும் பாராட்டுவோம் - நன்றியும் கூறுவோம்! வாழ்க பெரியார்!

    Read more: http://viduthalai.in/page-2/80888.html#ixzz32gXiHsTi

    தமிழ் ஓவியா said...


    வரலாறுதிரும்பும்!


    - கி.தளபதிராஜ்


    "மோடியும் லிபரல்களின் தோல்வி யும்" என்கிற ஒரு கட்டுரையை தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டி ருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதற்காண காரணமாக "இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக் காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக் கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள்.

    அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர்சனத் துக்கு உள்ளாயிற்று. அடக்கு முறையா கவே மாறியது" என்று சொல்லும் கட் டுரையாளர்

    "பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த, மதநம்பிக்கையுள்ளவர்களின் மனக் குறையை மோடி நன்கு புரிந்து கொண்டார். மதச்சார்பின்மை வெறும் பொய்வேடம் என்பதை அம்பலப்படுத் தினார்.அதனால் அவர் வெற்றிபெற்றார்" என எழுதுகிறார்

    மோடி பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளை பெற்றிருக்கிறாரா? வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் மோடி. அதுவும் ஊழல் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை அறுவடை செய்திருக்கிறார் மோடி என்பதே உண்மை. நிலைமை இப்படியிருக்க இதை மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரான வெற்றியாக சித்தரிக்க முயல்வது ஆதிக்க சமூகத்தின் ஆழ்மனதையே வெளிக் காட்டுகிறது. "அய்ரோப்பாவின் பல பகுதிகளில் இப்போது மதம் என்றாலே வெறுக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மிகவும் அழகான பல தேவாலயங்கள் மக்களுடைய வருகை குறைந்ததால் அஞ்சல் அலுவலகங்களாக மாற்றப்பட்டு விட்டன" என புலம்புகிறார் கட்டுரை யாளர். அவை மானுட சமூகத்தின் அறிவு முதிர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்!

    நாத்திகர்களாலோ, மதச்சார்பின்மை கொள்கையாளர்களாலோ எந்த வழிபாட்டுத்தலங்களுக்காவது வன்முறை யால் கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறதா?. ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களால் இந்தி யாவில் உள்ள மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் மோடி ஆட்சியில் தீங்கு ஏற்படாமல் காப்பாற்றப்படட்டும் முதலில்!
    நம் நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளே சிறிய கும்பமேளா போலத் தான் திருவிழாக் கோலமாக இருக்குமாம்.

    அசிங்கப்படுத்தப்படவேண்டிய செய்திகளையெல்லாம் அதிசயிக்கிறது கட்டுரை!.

    நம்முடைய மதம் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருந்ததில்லை யாமே! அப்படியா? அரசமரத்தை சுற்றினால் அடிவயிறு பெறுக்கும் என்பது தான் அறிவியலா? கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால் கனமழை என்பது எந்த வகை அறிவு? மதச்சார்பின்மைக்கு எதிரான வெற்றி என்றால் மோடி முதலில் தமிழ்நாட்டில் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்?

    பெரும்பான்மை இடங்களில் பிஜேபி கூட்டணி டெபாசிட்டையே இழந்தது பெரியார் மண் என்பதால்தானே? ஆச்சாரியார் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தபோது கிளர்ந்த எதிர்ப்பில் "ஆளை விடுங்கோ! உதவின்றபேர்ல உபத்திரம் பண்ணின்டு இருக்காதேள்!" னு அக்கிரஹாரமே கூடி ஆச்சாரியாரிடம் எச்சரித்ததெல்லாம் இந்துக்குழுமத்துக்கு மறந்து போயிடுத்தோ? இராமனுக்கு விபீஷ்ணனும், அனுமனும் கிடைத்தது போல் இன்று உங்களுக்கு மோடி கிடைத் திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது!

    Read more: http://viduthalai.in/page-2/80889.html#ixzz32gXqJpjU

    தமிழ் ஓவியா said...




    தமிழ்நாடு மாகாண மகாநாடு

    தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும் ஆடம் பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926இல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது, வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகக் கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரச்சாரமும் செய்யப்பட்டது என்றாலும் அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்ப னரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டுவிட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரச்சாரம் செய்து திரு. சத்யமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்த செய்தியை இன்னும் இரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.

    வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடுவார்கள். திரு.வரதராஜுலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள் ஆனால், பார்ப்பனர்களும் காங்கிரஸ், ஆபீசுகளும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரச்சாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜுலுவே தெரிந்து எடுக்கப்பட்டிருப்பார். ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு கமிட்டி தேர்ந்தெடுத்தும், திருப்பி அனுப்பி, திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரியவருகின்றது. ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு தூரம் வகுப்புவாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத்திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.
    - குடிஅரசு - துணைத் தலையங்கம் - 14.07.1929

    Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZHeI7v

    தமிழ் ஓவியா said...

    காங்கிரசுக் கட்டுப்பாடு

    சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டுவிட்டதினால் காங்கிரசுக் காரர்கள் தங்களது சுயமரியாதையையும், அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூட்டப்படப் போகும் சட்டசபை மீட்டிங்களுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசுக் கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைப்படி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்பு செய்தாய்விட்டது. அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால் சென்னை மாகாண தமிழ்நாட்டு காங்கிரசுக்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிர கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கிறார்கள். காங்கிர சட்டசபைக்குப் போகும்படி கட்டளைஇட்டால் வெகு பக்தியாய் அக்கட்டளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப் பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிர பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.

    -குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

    Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZaeGfn

    தமிழ் ஓவியா said...

    தந்தை பெரியார் பொன்மொழிகள்

    இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப் பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.

    Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZfumTY

    தமிழ் ஓவியா said...

    கால்டுவெல் பெயரில் மூன்று கல்வி உதவித் தொகை திட்டங்கள்!
    சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

    சென்னை, மே 24- தமிழறிஞர் ராபர்ட் கால்டு வெல்லுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரு டைய பெயரில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூன்று துறைகளின் கீழ் மூன்று கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.தாண் டவன் கூறினார்.

    கால்டுவெல் 200ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னைப் பல்கலைக்கழகத் தில் கொண்டாடப்பட்டது இதில் துணைவேந்தர் ஆர். தாண் டவன் பேசியதாவது:

    தமிழறிஞர் பேராசிரியர் ராபர்ட் கால்டுவெல் தனது 24 வயதில் லண்டன் மிஷனரி சொசைட்டி என்ற கிறிஸ்தவ மத பிரசாரக் குழுவினருடன் சேர்ந்து மதத்தைப் பரப்புவ தற்காக இந்தியா வந்தார்.

    இவரைப் போன்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்பு வதற்காக இந்தியா வந்த பலரும் அந்தந்தப் பகுதி மொழியை அறிந்து அதன் மூலமாகப் பேசி, மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட னர். இவர்களிடமிருந்து கால்டுவெல் வேறுபட்டு இருந்தார்.

    மற்றவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு மட்டுமே, இங்குள்ள மொழி களை கற்றறிந்தனர். ஆனால், கால்டுவெல் தமிழ் மொழியை அறிந்து அதன் பெருமைகளை உணர்ந்து அதன் மீது பற்றும் கொண்டார். அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் எனும் நூல் உலகெங்கும் அவருக்கு புகழை ஈட்டித்தந்தது.

    தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி களுக்கு தாய் மொழி தமிழே. இந்த மொழிகள் அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தியவரும் அவரே.
    இப்படிப்பட்ட மாமனி தரின் நூலை கடந்த 1913இல் சென்னைப் பல்கலைக் கழகம் இரண்டாவது முறை யாகப் பதிப்பித்தது.அவருக்கு மீண்டும் பெருமை சேர்க்கும் வகையில் கடந்த 1913இல் பல்கலைக்கழகம் பதிப்பித்த அவருடைய நூல் இப்போது மறு பதிப்பு செய்யப்படும். மேலும் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை, தமிழ் இலக்கியத்துறை மற்றும் திருக்குறள் துறை ஆகிய மூன்று துறைகளுக்கும் கால்டுவெல் பெயரில் மூன்று கல்வி உதவித்தொகைத் திட் டங்கள் அறிமுகம் செய்யப் படும்.

    அதோடு, சென்னைப் பல் கலைக்கழகத்தில் ஆரம்ப காலங்களில் தமிழ்த் துறை யில் பணியாற்றிய தமிழ் மொழி வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர்களின் நினை வாக சங்கப்பாதை என்ற ஓர் இருக்கை உருவாக்கப்பட்டு வாரம் அல்லது மாதம் ஒரு முறை தமிழறிஞர்கள் மற் றும் பிற மொழி அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு கருத்தரங் குகள் நடத்தப்படும்.
    இவ்வாறு அவர் பேசி னார்.

    Read more: http://viduthalai.in/page-7/80884.html#ixzz32gZzTHsg

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மீகம்?



    குல தெய்வ வழி பாட்டுடன் முருகப் பெரு மானை செவ்வாய் கிழமைகளில் அரளிப்பூ வைத்து வழிபட்டால் உங்கள் கடன் தீரும் என்று ஓர் ஏடு தெரிவித் துள்ளது.

    தனி நபர் கடன் தீர இந்த எளிய வழியென்றால் இந்தியாவின் கடன் சுமை தீர பரங்கிப் பூ வைத்துப் படைக்கலாமா?

    Read more: http://viduthalai.in/e-paper/80935.html#ixzz32mOYYeGk

    தமிழ் ஓவியா said...


    ஆரம்பமாகிவிட்டது மத வெறியர்களின் ஆட்டம்


    பாட்னா, மே 25- டில்லியில் உள்ள ராம் லால் ஆனந்த் கல்லூரியில் பேரா சிரியராக பணியாற்றிவரு பவர் ஜி.என்.சாய்பாபா அவருக்கும் மாவாயிஸ்ட் டுகளுக்கும் தொடர்பு உள்ள தாகக் கூறி 9-5-2014 அன்று மகாராட்டிரக் காவல்துறை யினர் கைது செய்தனர். பாட்னாவில் உள்ள ஏஎன்சின்கா சமூக கல்வி நிறுவனம் சார்பில் பேரா சியர் கைது குறித்து கல்வி யாளர்களின் கருத்தரங்கு கூட்டம் நடத்த ஏற்பாடா னது.

    கூட்டம் நடக்கும் போது, வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று முழக் கங்களை எழுப்பியபடி கல்வி நிறுவனத்தின் பொருட் களை சேதப்படுத்தியது. மேலும், கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவர் களை விரட்டி அடித்து வன்முறை வெறியாட்டத் திலும் ஈடுபட்டது. வன் முறையில் ஈடுபட்டவர்கள் பாஜகவின் மாணவர் அமைப் பான அகில பாரதீய வித் யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) என்கிற அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், விரைவில் வன்முறையில் ஈடுபட்ட வர்கள்மீது நடவடிக்கை யும் எடுக்கப்படும் என்று காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் மனு மகராஜ் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் தீவிர வாதிகளுடன் தொடர்பு என்றாலே எவ்வித விவாத மும் நடத்தவே கூடாது என்று வன்முறையாட் டத்தை ஏபிவிபியினர் நடத்தி உள்ளனர்.

    Read more: http://viduthalai.in/e-paper/80934.html#ixzz32mOfYWbk