Search This Blog

14.5.14

இன்று ஆசியஜோதி சித்தார்த்தன் கவுதமப் புத்தர் பிறந்த நாள்

புத்த பூர்ணிமா! 



இன்று ஆசிய ஜோதி சித்தார்த்தன் கவுதமப் புத்தர் பிறந்த நாள் (கி.மு.480) புத்த பூர்ணிமா என்றும், விசாகம் என்றும் உலகம் முழுவதும் உள்ள பவுத்தர்கள் கொண்டாடுகிறார்கள். நிர்வாணா என்று கூறப்படும் அவர்தம் மறைவு நாளையும் அனுசரிக்கிறார்கள்.

1950 மே மாதத்தில் கொழும்பில் கூடிய உலகப் புத்த அறிஞர்கள் மாநாட்டில் புத்தர் பூர்ணிமா நாள் உறுதி செய்யப்பட்டது.

1. நீ கேட்டது என்பதற்காகவே எதையும் நம்பிவிடாதே!

2. தலைமுறை தலைமுறையாக நடந்துவருகிற பழக்கம் என்பதற்காக எதையும் ஒத்துக்கொள்ளாதே!

3. பலர் பேசுகிறார்கள்; பலர் ஏற்றுக் கொண்டிருக்கி றார்கள் என்பதற்காக மட்டும் எதையும் நம்பிவிடாதே!

4. உன்னுடைய மத நூல்களில் கூறியிருக்கிறது என்பதற்காக மட்டும் எதையும் நம்பி விடாதே!

5. உனக்கு மூத்தவர்களும், உன் ஆசிரியர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டும் ஒன்றை நம்பிவிடாதே!

6. ஒரு சங்கதியை உற்றுக் கவனித்து, ஆராய்ந்து பார்த்து, உன் பகுத்தறிவுக்கு ஏற்றது என்றும், பிரத்தியட்ச அனுபவத்திற்குத் தெளிவாக உள்ளது என்றும் உனக்குத் தோன்றுமானால், அதனை ஏற்றுக்கொண்டு அதன்படி நட.

இவைதாம் உலக மானுடத்திற்குக் கவுதம புத்தர் பிரகடனப்படுத்திய அறிவு நெறிகள்.

இவற்றில் தெளிவாக ஊடுருவி நிற்பது பகுத்தறிவுச் சிந்தனை என்பது வெளிப்படை.. மதம் என்றால் நம்பு! நம்பினால் மோட்சம் - நம்பாவிட்டால் நரகம் என்றுதானே கூறுகிறது! தலைவிதி, கர்மப் பலன் என்று கூறும் எந்த மதத்தின் ஆணிவேரையும் வீழ்த்தக்கூடிய அறிவாயுதமே இவை என்பது தெரியவில்லையா?

புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டபோது ஒரு பார்ப்பனர் ஆத்மா பற்றி உங்கள் கருத்தென்ன? என்று கேட்டார். அதற்குப் புத்தர் சொன்ன பதில்: 

ஆத்மா எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காகவே வைத்துக்கொள்வோம்;கண்களைத் தோண்டிவிட்டால் அந்த ஆத்மாவால் பார்க்க முடியுமா? காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்க முடியுமா? மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா? நாக்கை அறுத்து விட்டால் ருசி அறியுமா அந்த ஆத்மா? என்று கேள்விக்குக் கேள்விகள் மூலம் விடையிறுத்தார் கவுதம புத்தர்.

புத்தர் என்றால் யார் என்ற வினாவுக்குப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பளிச்சென்று பதில் பகன்றார். புத்தியைப் பயன்படுத்துபவன் ஒவ்வொருவனும் புத்தனே! என்றார்.
ஆரியர்களின் வருணாசிரமத்தையும், யாகப் பண் பாட்டையும் கடுமையாக எதிர்த்தவர் புத்தர். கவுதம புத்தர் சகாப்தத்தில் ஆரியம் வீழ்ச்சியுற்றது. அரசர்கள் பலர் பவுத்த மார்க்கத்தைப் பின்பற்றினர். பிற்காலத்தில் ஆரியத்திற்கே உரிய வஞ்சக - தந்திர முறைகளால் மன்னர்களைக் கைக்குள் போட்டு, பவுத்தத்தை அதன் சுவடு தெரியாமல் அழித்து முடித்தனர் இந்நாட்டில்.

பவுத்தர்கள், சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர். பவுத்த பள்ளிகள் இந்து மதக் கோவில்களாக மாற்றப்பட்டன. இன் றைக்கு இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில்கூட  புத்தரின் நின்ற கோலம் என்று ஆய்வு நூல்கள் வெளி வந்துவிட்டன.

தமிழ்நாட்டில் எந்தெந்த பவுத்தப் பள்ளிகள் எல்லாம் இந்துக் கோவில்களாக உருமாற்றப்பட்டன என்பதை ஒரு நீண்ட பட்டியல்மூலம் ஆய்வின் அடிப்படையில் நிறுவி வெளியிட்டுள்ளார் மயிலை சீனி.வேங்கடசாமி - பவுத்தமும் தமிழும் என்ற நூலில்.

புத்தர் போதித்த அறநெறிக் கோட்பாடுகள் மக்கள் மத்தியில் வேரூன்ற ஆரம்பித்த நிலையில், ஊடுருவல், அணைத்து அழிக்கும் கலையில், வல்லதாகிய ஆரியம், புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று ஆக்கிக்காட்ட ஆரம்பித்தது. பல புத்த ஜாதகக் கதைகள் கட்டிவிடப் பட்டன.

இதோ தினமலர் - வாரமலர் வெளியிட்ட ஒரு தகவல் இதற்குச் சான்றாகும்.

லடாக்கின் லூப்ரா பள்ளத்தாக்கின், திஸ்கித் மடத்தின் அருகே, அமர்ந்த நிலையில், 32 மீட்டர் உயரமுள்ள மைத்ரேய புத்தர் சிலை உள்ளது. இதன் அருகிலேயே, சியோக் நதி ஓடுகிறது.

யார், இந்த மைத்ரேய புத்தர்? புத்தர், இதுவரை நான்கு அவதாரங்களை எடுத்து முடித்துவிட்டார். அய்ந்தாவது அவதாரமே இந்த மைத்ரேய புத்தர். உலகில், புத்தரின் போதனைகளுக்கு மதிப்பு குறைந்து, கொலை, கொள்ளை, அட்டூழியம், அநியாயம் தலைவிரித்தாடும் போது, இவர் உலகிற்கு வருவார்.

அதுவும், காசியில் தான் பிறப்பார். ஏழு நாட்களில், ஞானம்  பெற்று, உலகத்திற்கே போதிக்கும் ஆச்சாரியராக மாறுவார்; உலகில் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவார் என்கின்றனர் புத்தமத துறவிகள்.

இந்து மதத்தில் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் நினைவுக்கு வருகிறதா? இதுவும் அது போலத்தான் என்பது தினமலர் வெளியிட்டுள்ள தகவல்.

ஆரியம் என்றாலே பித்தலாட்டம் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

தமிழ்நாட்டில் புத்தர் கொள்கையைப் பரப்புவதை முன்னெடுத்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரே! 1954 இல் ஈரோட்டில் புத்தர் மாநாட்டைக் கூட்டி, இலங் கையிலிருந்து பேராசிரியர் மல்லலசேகரா, வடநாட்டைச் சேர்ந்த ராஜ்போஜ் எம்.பி., போன்றவர்களை எல்லாம் அழைத்து அரிய தீர்மானங்களை நிறைவேற்றியவர் தந்தை பெரியாரே,
உருவ வணக்கப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் வகையில் இதே புத்தப் பூர்ணிமா நாளில்தான் (1952 இல்) ஆபாச விநாயகர் பொம்மைகளை உடைக்கும் போராட் டத்தை நடத்தினார் தந்தை பெரியார்.

புத்தர் கொள்கை என்றாலும், தந்தை பெரியார் கொள்கை என்றாலும், அம்பேத்கர் சிந்தனை என்றாலும் ஒரே அச்சுதான்.

மதவெறி சக்திகள் தலைதூக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தச் சிந்தனையாளர்களின் அறிவாயுதங்களை ஏந்திடுவோம்! ஏந்திடுவோம்!!

                       --------------------”விடுதலை” தலையங்கம் 14-05-2014

11 comments:

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு

புதுடில்லி, மே 14- ஆண், பெண் அல்லாத மாற்றுப் பாலினத்தவரை மூன் றாம் பாலினத்தவர் என்று அங்கீகரித்து இந்தியக் குடிமக்களுக்குரிய, அரச மைப்பு வழங்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப் பட வேண்டும் என்று ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிற் படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் மூன்றாம் பாலினத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து மத்தியஅரசு மற்றும் மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள் ளிட்ட அனைத்து உரிமை களும் இதர பிற்படுத்தப் பட்டோருக்குரிய ஒதுக் கீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் சார்பில் கூறப்படுவதா வது: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று மத்திய அரசுக்கு மூன்றாம் பாலி னத்தவரை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலுக் குள் சேர்த்துக்கொள்ள தீர் மானம் நிறைவேற்றி உள் ளோம்.

பிறப்பில் எந்த வகுப்பினராக இருந்தா லும் இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியலுக் குள் கொண்டு வரப்படு வார்கள். அனைத்து மூன் றாம் பாலினத்தவர்களும் இதர பிற்படுத்தப்பட் டோர் பெறும் அனைத்து உரிமை களையும் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மீது இறுதி முடிவை அமைச்சரவை கூடி எடுக்கும். மூன்றாம் பாலினத் தவர் தேர்தல் ஆணையத் தின் வாக்காளர் பட்டிய லில் உள்ளபடி 23,019பேர் மற்றவர்கள் பட்டிய லில் பதிவாகி உள்ளனர்.

இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் எந்த ஒரு வகுப்பையும் இணைப் பதற்கான ஆலோச னையை அரசுக்கு ஆணை யம் வழங்கிவருகிறது. அதனால், மத்திய சமூக நீதி மற்றும் நிர்வாகத் துறையின்கீழ் செயல் படும் ஆணையத்துக்கு துறைரீதியாக உச்சநீதி மன்றத் தீர்ப்பின் வழிகாட் டுதலின்படி ஆணையத் தின் பரிந்துரையைக் கோரி கடிதத்தை அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று இந்தியக் குடிமக்களுக்கு அரசமைப்பு வழங்கும் உரிமைகளை மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

ஹிஜ் ராக்கள், யூனுச்சுகள், கோத் திகள், அரவாணிகள், ஜோகப் பாக்கள், சிவசக்திகள் என்று பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டு வருபவர்கள் மூன்றாம் பாலினத்தவருக்குரிய உரி மைகளைப் பெறுவார்கள் என்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80212.html#ixzz31kKvtU8c

தமிழ் ஓவியா said...


நரகம் ஒரு சூழ்ச்சி


நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள,- அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள, சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

- (விடுதலை, 29.2.1948)

Read more: http://viduthalai.in/page-2/80215.html#ixzz31kL7ze4d

தமிழ் ஓவியா said...


பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

- குடந்தை கருணா

கருத்துக்கணிப்போ, திணிப்போ? எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஊடகங் களின் முடிவுகள் ஒன்றை தெளிவு படுத்தி உள்ளன. அது என்ன?

பாஜக அணியை உருவாக்கிய தும், அதில் இணைந்த கட்சிகள், பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக என எல்லா காக்காக் களும் ஒரே விஷயத்தை ஊர் தோறும் கரைந்தன. அது என்ன?

அதாவது, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்துவ தற்காக இந்தக் கூட்டணி அமைத்த தாகக்கூறினார்கள். மோடி அலை வேறு தமிழ்நாட்டில் வீசுவதாக சொன்னார்கள். மோடி டீக்கடை, சோப்புக்கடை, மீன் கடை இதெல் லாம் வேறு ஆரம்பித்தார்கள். இல.கணேசய்யரையே மீன் விற்க விட்டார்கள் என்றால் பாருங் களேன்.

இப்போது, இந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் பாஜக அணிக்கு நான்கு அல்லது அய்ந்து இடங் களுக்குமேல் தேறாது என கணித் துள்ளார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? மீதம் உள்ள 35 இடங்களிலும், திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதுதானே!

ஆக, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளைத் தாண்டி அரசியல் கிடையாது என்பதைத் தான் இந்தக் கருத்துக் கணிப்பு களோ, திணிப்புகளோ சொல்ல வருகின்றன.

இந்த இரண்டு கட்சிகளிடமும், நாளை ஆதரவு கேட்டு மோடி கூட் டம் வராது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? என்பதை, பாஜகவில் உள்ள, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக கூற வேண்டும். சொல்வார்களா? பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

Read more: http://viduthalai.in/page-2/80223.html#ixzz31kLH2XIj

தமிழ் ஓவியா said...

அபாய அறிவிப்பு! அபாய அறிவிப்பு!! ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே
ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை செயல்படுத்த துடிப்பு
ஆதரவு தருவதுபற்றி யோசிக்கும் மாநிலக் கட்சித் தலைவர்கள் சிந்திக்கட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுக்கும் எச்சரிக்கை அறிக்கை

ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைச் செயல்படுத்திட அழுத்தம் கொடுக்கும் போக்கு கிளம்பி விட்டது. இந்த நிலையில் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுப்பது குறித்து மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தேர்தல் முடிவுகள் நாளை வருமுன்பே - ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடி - முழுப் பெரும்பான்மையுடனோ, அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதாக ஊடகங்களின் உதவியோடு திட்டமிடப்படு கின்ற நிலையில், வரும் செய்திகள் எப்படிப்பட்ட பச்சை இந்து மதவெறித்தனத்தின் வெளிப்பாடான ஹிந்துத் துவத்தை அமுல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாக அமைய வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். கட்சித் தலைமை, மோடிக்கு ஆணை பிறப்பிக்கத் தொடங்கி விட்டது.

மதயானை வரும் பின்னே!

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது பழைய (பழ) மொழி!

மத யானை வரும் பின்னே, மதவெறியை பரப்பி நாட்டை மீண்டும் 1992க்கே கொண்டு செல்லும் ஆணை களின் ஆர்ப்பரிப்பு ஓசை வரும் முன்னே என்பது புதிய அரசியல் மொழியாகும்!

இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் முதற் பக் கத்தில் வந்துள்ள தலைப்புக்கள் மேற்கூறிய கருத்துக் களைத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன:

எம்.ஜி. வைத்யா கூறுகிறார்

“Modi Must deliver on Ram Temple: - RSS Leader
M.G. Vaidya wants progress on Article 370, Uniform Civil Code”

இந்துவில் வந்த படமும் வெளி வந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

இதைச் சொன்ன ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் செய்தி யாளர் ஒரு கேள்வி கேட்கிறார்; ஏற்படும் என்று எண்ணுகிற பி.ஜே.பி. அரசு செயல்படுவதற்கு இது தடையாக அமையாதா? அந்த பதில்

ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க எழுத்தாளரான சுதிர் பதக் (பெரும்பாலும் அனைவரும் பார்ப்பனர்களே) பதில் கூறியுள்ளார்.

நான் அப்படி நினைக்கவில்லை; இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையும், பா.ஜ.க., தலைமையும் எல்லாம் ஒரே சம வயதுடையவர்கள்; எனவே எங்களால் தந்திரமாக முன்பு இருந்த பா.ஜ.க. அரசுகளைவிட சமாளிக்க முடியும்

அது மட்டுமல்ல மோடி அரசு மற்றும் சில ஆர். எஸ்.எஸ்., முக்கிய அடிப்படை கொள்கைகளையும் செயல்படுத்தும் என்றும் கூட சொல்லியிருப்பது அடுத்து நாட்டுக்கு, வரவிருக்கும் ஆபத்தும் சூழ்நிலையும்பற்றிய மணியோசைகள் ஆகும்!

நாகபுரி மூத்த பேராசிரியரின் கருத்து

இதுவும் நம்முடைய கருத்தல்ல; அதே செய்தியில் கீழே உள்ள ஒரு மூத்த பேராசிரியர் ஜம்புல்கர் கூறிய கருத்து.

“They [Sangh Parivar] may even go on their own and try to fast-track these issues, but it will be interesting to see if Modi budges under this pressure. But the dangers of a communal flare-up will always be there now,” ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் மிக வேகமான முறையில் போகக் கூடும்;

இம்மாதிரி பிரச்சினை விரைந்து முடிக்க மோடி இந்த நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல் பட்டால், வகுப்புக் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படக் கூடும் என்று நாகபுரிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் விகாஸ் ஜம்புல்கர் (இவர் அவர்கள் அரசியல் விஞ்ஞானம் போதிக்கும் கல்வியாளரான பேராசிரியர்).

எப்படிப்பட்ட அபாய அறிவிப்புக்கள் பார்த்தீர்களா?

மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் சிந்தனைக்கு...

இவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தரத் துடிக்கும், அதன் மூலம் தங்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிடும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களே, முதல்வர்களே, இந்த நிலைமை நாட்டில் ஏற்பட நீங்களும் காரணமாகி, வரலாற்றுப் பழி ஏற்கப் போகிறீர்களா?

காலந் தாழ்ந்தாவது வருந்துவீர்!

யோசியுங்கள்: கொள்ளிக்கட்டை என்று தெரியாமலோ, புரியாமலோ அதை எடுத்து தலையைச் சொறிய ஆசைப்பட்ட, அப்பாவித்தனமாக வரலாறு அறியாது வாக்களித்த இணையத்து தீராத விளையாட்டு விட லைகளே, காலந் தாழ்ந்தாவது வளர்ச்சி என்ற மயக்க பிஸ்கெட் பற்றிப் புரிந்து வருந்துங்கள்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - குறள் (435)

சென்னை
15.5.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/80313.html#ixzz31pwqO3ek

தமிழ் ஓவியா said...

அடடே, என்னே ஞானோதயம்!

தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் அமைதியாக நடக்க பொது மக்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதே போல பணம் வாங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

- பிரவீன்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு

அடடே!, என்ன ஞானோ தயம்! புத்தர் பூர்ணிமாவை யொட்டி உதிர்த்த ஒளி முத்து இது! மக்கள் எல்லா ரும் நல்லபடியாக நடப்பார் களேயானால் இந்தத் தேர் தல் ஆணையம், காவல் துறை ஏன் அரசும்கூட தேவையில்லையே!

Read more: http://viduthalai.in/e-paper/80311.html#ixzz31px6OxT1

தமிழ் ஓவியா said...


புத்தரின் போதனைகளின்படி அரசு ஆட்சி புரிகிறதா? : இலங்கை வடக்கு மாகாண உறுப்பினர் கேள்வி


நல்லூர், மே 15- வடக்கின் சோகங்களை அனுசரிக்க விடாமல், அரசு தமது வெற்றியை, கட்டா யத்துடன் கொண்டாட வேண்டுமென நிர்ப்பந்தித் துக் கொண்டிருப்பது தான் இன்றைய நாட்டின் நிலைமை என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், நல்லூர் தெற்கு சன சமூக நிலை யத்தின் 65ஆவது ஆண்டு விழாவில் பேசும்போது தெரிவித்தார். விழா யாழ்.மாநகரசபை சனசமூக நிலையங்களின் தலைவர் திரு.க.நாகேந்திரம் தலை மையில் இடம்பெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது, இன்று சிங்கள பவுத்தர் களின் புனித நாள். அமை தியாக தர்ம சிந்தனை களோடு வாழும் வழி முறையை உலகிற்கு வழங் கியதில் பவுத்தத்திற்கு முக் கிய இடம் உண்டு.

ஆனால். அதன் வழி வந்தவர்களாகத் தங்களைக்கூறிக் கொள் ளும் ஆட்சியாளர்கள் எவ் வாறு நடந்து வந்திருக்கின் றார்கள், எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைத் தான் நாங்கள் அனுபவ ரீதியாக கண்டு கொண்டி ருக்கின்றோம். கடந்த 66 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உண்மை யான பவுத்த சிந்தனைகளு டன் முற்று முழுதாக முரண்பட்டு வருகின்றன.

பவுத்த சிந்தனைகளை போதித்த புத்தபகவான் இன்று இருந்திருந்தால், தனது கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல் லும் ஆட்சியாளர்கள் செய் யும் அக்கிரமங்களைப் பார்த்து தானாகவே வெட் கித் தலைகுனிந்திருப்பார்.

இந்த மே மாதம் பவுத் தர்களுக்கு எவ்வாறு முக்கி யத்துவமானதோ, புனித மானதோ, அவ்வாறே தமி ழர்களாகிய எங்களுக்கும் மிகவும் புனிதமானதும், உணர்வு பூர்வமானதுமான மாதமாகும். அதுவும் இந்த வாரம் மிகவும் உணர்வு பூர்வமான வலி சுமந்த வாரமாகும். கடந்த இறுதிப் போரிலே இலட்சக்கணக் கில், கடற்கரை ஓரத்தில் மக்கள் கொன்று குவிக்கப் பட்டதொரு மாதமாகும்.

அதில் கொல்லப்பட்ட மற்றும், காயமடைந்த எமது மக்களின் உறவினர்கள் இன்று அவர்களை நினைத்து ஒருசொட்டு கண்ணீர் கூட விட முடியாதபடி, அர சாங்கம் அவர்களை அச் சுறுத்தி வருவதுடன், தெற்கில் எமது மக்களின் அவலங்களின் மேல் பெறப்பட்ட இராணுவ வெற்றியை முழக்கங்களு டன் கொண்டாடுவதுடன், பாதிக்கப்பட்ட எமது மக் களையும் அதைக் கொண் டாடுமாறு பலாத்காரமாக நிர்ப்பந்தித்து வருகின்றது.

இந்த விடயமானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு நிலை யாகும். இது பவுத்த மதம் கூறும் போதனைகளுக்கு எவ்வித்ததிலும் ஒவ்வாத ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர். மோகனதாஸ், யாழ். பல் கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர், எம். இளம்பிறையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80307.html#ixzz31pxFVWUn

தமிழ் ஓவியா said...


பாலாபிஷேகம் ஒரு கேடா?


சித்ரா பவுர்ணமியையொட்டி மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பெண்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். (மாலைமலர் 14.5.2014)

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டே குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா?

Read more: http://viduthalai.in/e-paper/80308.html#ixzz31pxNkttX

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.

(விடுதலை, 23.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/80316.html#ixzz31pxjVNAZ

தமிழ் ஓவியா said...


கடவுள் ச(ப)க்தியின் பலன் இவ்வளவுதான்!


ஏழுமலையானனை தரிசித்த நீதிபதி விபத்தில் பலி!

திருப்பதி, மே. 15-கர்நாடக மாநிலம் பெல் லாரியைச் சேர்ந்தவர் ருத் ரமணி (45). மைசூரு மாவட்ட நீதிபதியாக இருந் தார். இவர் குடும்பத்துடன் திருப்பதி வந்தார். ஏழு மலையானை தரிசிக்க பாதயாத்திரையாக அலிபிரி வழியாக நடந்து சென்றனர்.

திருமலை நுழைவு வாயில் அருகே சாலையை கடந்தார். அப்போது திரு மலையில் இருந்து திருப் பதி வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ருத்ரமணி கீழ் திருப்பதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டார்.

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந் தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

கிரிவலம் சென்ற பொறியியல் மாணவர் மின்சாரம் தாக்கி பலி

திருவண்ணாமலை, மே.15- சித்ரா பவுர்ண மியை யொட்டி திருவண் ணாமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரி வலம் சென்றனர். சென்னை தனியார் பொறியியல் கல் லூரி மாணவர் அங்கப்பன் (எ) விக்னேஷ் (வயது 22). திருவண்ணாமலையை சேர்ந்த தனது கல்லூரி நண்பர் பூர்ண சந்திரன் மற்றும் நண்பர்கள் 6 பேர் உடன் கிரிவலம் வந்தார்.

இரவு 12 மணியளவில் கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கிப் பிள்ளையார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப் போது சூறைகாற்றுடன் மழை பெய்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த விளம் பரப் பதாகை ஒன்று திடீ ரென முறிந்து அங்கப்பன் மீது விழுந்தது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்தும் மாணவர்கள் கிரிவலம் வந் தனர். அண்ணா நுழைவு வாயில் அருகே வந்து கொண் டிருந்தனர். அப்போது அங்கு பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்து முகாமில் சிகிச்சை பெறுவதற்காக அங்கப்பன் சென்றார். அவ ருடன் நண்பர்கள் பூரண சந்திரன், சிதம்பரத்தை சேர்ந்த ராகுல் பிரசாத் உடன் சென்றனர்.

அப்போது அங்கு போடப்பட்டிருந்த டியூப் லைட் மின்சார ஓயர் மீது அங்கப்பனின் கை உரசி யது. இதில் அவரை மின் சாரம் தாக்கியது. தூக்கி யெறியப் பட்ட அங்கப்பன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். காப் பாற்ற முயன்ற நண்பர்கள் பூரண சந்திரன், ராகுல்பிர சாத் படுகாயம் அடைந்த னர். அவர்கள் 2 பேரும் அரசு மருத்தும னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக் கப்பட்டுள்ளது. அங்கப் ப னின் சொந்த ஊர் திருநெல் வேலி மாவட்டம், சுத்தமல்லி. மாணவர் இறந்த தகவல் அவரது தந்தை சாமிஜி மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திரு வண்ணாமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pz7WIpL

தமிழ் ஓவியா said...

கோவில் விழாவில் தகராறு

வலங்கைமான். மே. 15- வலங்கைமான் அருகே ஆண்டாங்கோவில் கிராமத் தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த தேர்த் திரு விழா நடந்தது. அப்போது ஆண்டாங்கோவில் கடை வீதியில் வெடி வெடித்த போது அங்கிருந்த ஒரு கட்சி கொடி மேடை சேதம் அடைந் ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாஞ் சேரி பகுதியினருக்கும் ஆண் டாங்கோவில் பகுதியில் வசிப்போருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற் பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பேசி சமாதானம் ஆகினர்.

இந்நிலையில் நேற்று இரவு கோவில் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அப்போது கட்சி மேடை சேதம் அடைந்தது தொடர்பாக பேசிய போது இருதரப்பினரிடையே தக ராறு ஏற்பட்டது. இதில் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 30), அன்பரசு (30) ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப் பட்டனர்.

இதனை தொடர்ந்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட் டது. அப்பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவம் ஏற் படாதவாறு பாப நாசம் டி.எஸ்.பி. சிவாஜி அருட் செல்வன் தலைமை யில் ஏராளமான காவல் துறை யினர் குவிக்கப்பட்டு நிலை மையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வலங்கைமான் தாசில்தார் வெங்கட்ராமன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஷ், மகேஷ், தங்க துரை உட்பட வருவாய் துறை அலுவலர் கள் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர் பாக வலங்கைமான போலீ சார் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி, ரகு, ஆறுமுகம், சதீஸ், மற்றொரு ஆறுமுகம், விவேக், சேட்டு, மகேந் திரன், சரவணன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விவாரணை மேற் கொண்டு உள்ளனர். இச் சம்பவத்தால் ஆண்டாங் கோவில் மற்றும் மாஞ் சேரியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயில் உண்டியல் கொள்ளை

தண்டையார்பேட்டை, மே 15- வண்ணாரப் பேட்டை, எம்சிஎம் கார் டன், முதல் தெருவில் சிறீ வேங் கட முடையான் கிருஷ்ணன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்ததும், பூசாரி ரவி கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை கோயிலை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 2 உண் டியல்களை உடைத்து அதி லிருந்த பணம், பூஜை அறையில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை சிலர் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுகுறித்து தண்டை யார்பேட்டை காவல் நிலை யத்தில் ரவி புகார் செய்தார். காவல் நிலைய ஆய்வாளர் தெய்வேந்திரன் சம்பவ இடத் துக்கு சென்று விசாரித்தார். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின் றனர்.

Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pzGhQlu

தமிழ் ஓவியா said...

எப்படி உருவானது ஸ்டெதாஸ் கோப்?

1816இல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் மருத்துவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள மருத்துவர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும்.

ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளை யாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப் பினான்.

இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனை யைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். பார்த்த லென்னக், 'இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே' என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.

இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். என்ன ஆச்சர்யம்... நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி.

இதை அடிப்படையாக வைத்து 1819 இல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப்! அதன் பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843 இல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது.

Read more: http://viduthalai.in/page-7/80276.html#ixzz31pzeITeg