Search This Blog

5.5.14

திருமண முறை தோன்றியது எப்படி?-பெரியார்



இந்த வாழ்க்கைத்துணை நலமென்பதானது சமுதாயத் துறையிலும், அறிவுத் துறையிலும் மாபெரும் புரட்சி ஏற்படுத்த வேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது அநேகருக்குப் புதுமையாகத் தோன்றலாம். பலருக்கு இது மாறுபாடகத் தோன்றலாம். நம் சமுதாயமானது மற்ற உலக சமுதாயத்தைப் போலல்லாமல் பல காரணங்களால் மதம், ஜாதி என்று பிரிந்திருப்பது மாத்திரமல்லாமல், மனித ஜீவனில் ஆண் - பெண் என்பதாகப் பிரிந்து ஒரு சமுதாயத்தை அடிமைப்படுத்துவதாக இருந்து வருகிறது.

மற்ற துறைகளில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மாற்றுவது போல, சமுதாயத் துறையில் ஆண், பெண்களிடம் இருக்கிற ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேண்டுமென்கின்ற கருத்தில் தான் இம்முறையானது புகுத்தப்பட வேண்டியதாயிற்று. இம்முறையில் ஆணுக்குப் பெண் அடிமையல்ல என்பதோடு இருவரும் சம அந்தஸ்துள்ள நண்பர்கள் என்பது வலியுறுத்தப்படுகிறது.

இத்திருமண முறையல்லாத பழைய புரோகித முறைத் திருமணத்தின் பெயரால் இருந்து வருவது எல்லாம் பெண்ணை அடிமைப்படுத்தவும் - மனிதன் மூட நம்பிக்கையை வளர்க்கவும், ஜாதி பேதங்களைக் காப்பாற்றுவது என்கின்ற மூன்று காரியங்களை நிலைநிறுத்தவேயாகும் என்றாலும், இந்தக் காரியத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்கிற எண்ணம் நம் நாட்டில் எவனுக்குமே தோன்றவில்லை. அரசியல் காரணமாக, சுயநலம் காரணமாக, ஜாதி பேதத்தைக் கண்டித்தார்களே ஒழிய, எவரும் பெண்ணடிமையை நீக்க வேண்டுமென்று பாடுபடவில்லை. நானும் எங்கள் இயக்கமும் தான் இதற்காகப் பாடுபட்டு வருகிறோம்.

சமுதாயத்துறையில் நாம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடையாமல் ஜாதி, மத, புராண, இதிகாச, பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிக் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை மாற்றி மற்ற உலக மக்களைப் போல அறிவோடு, சிந்தனையோடு வாழ வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதே இம்முறையாகும்.

மனித இயல் ஆராய்ச்சியாளர்கள் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று சொல்கிறார்கள். அதை நீங்கள் நம்பாவிட்டாலும் மனிதன் குரங்குப் பருவத்திற்கு வந்தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அது இயற்கை. மனிதன் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே வருகின்றான். பார்ப்பான் நம் நாட்டிற்கு வந்த பின் ஏற்பட்டது தான் இத்திருமண முறையே தவிர, தமிழனுக்கு இப்படிப்பட்ட ஒரு முறையே கிடையாது. தமிழன் புருஷன் - பெண்டாட்டியாக வாழ்ந்தான் என்பதற்கு ஆதாரமே கிடையாது. தமிழனுக்குத் திருமணம் கிடையாது என்று சவால் விட்டுச் சொல்கிறேன். எந்தத் தமிழ்ப் புலவராவது சொல்லட்டுமே, பார்ப்பனர் வருவதற்கு முன் தமிழ்நாட்டில் தமிழன் இம்முறையில் வாழ்ந்தான் என்று.

மனுதர்ம சாத்திரத்திலேயே இருக்கிறது, 'சூத்திரனுக்குத் திருமணம் இல்லை' என்று. பின் எப்படி அந்தப் பெண்கள் வாழ்ந்தார்கள் என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டியாக வாழ்ந்தார்கள். பார்ப்பனர் இந்நாட்டிற்கு வந்தபோது பெண்களைக் கூட்டிக் கொண்டு வரவில்லை. இங்குள்ள பெண்களைச் சரி செய்து வாழ்ந்தார்கள். அப்படிப் பார்ப்பனரோடு வாழ்ந்த பெண்கள், தமிழர்களோடு சேர்ந்து பார்ப்பனரிடமிருந்து மற்றவர்களோடு செல்ல ஆரம்பித்தனர். அப்போது தான் பார்ப்பனர் பெண்களை அடிமையாக்கி, அவர்கள் மீது உரிமை கொண்டாட ஆரம்பித்தார்கள். அதைத் தங்களின் சொத்தாகவே கருத ஆரம்பித்தார்கள்.

இதைத் தொல்காப்பியத்திலேயே காணலாம். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப." மக்களிடையே ஒழுக்கக் கேடுகள் அதிகமான பின் பார்ப்பனர் ஏற்பாடு செய்தது தான் திருமணம் என்பதாகும். அதுவும் யாருக்காக என்றால் பார்ப்பனருக்காக செய்யப்பட்டதேயாகும். அது பின் மற்ற மக்களுக்குமாகி விட்டது. இது "மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே" என்கிற தொல்காப்பியத்திலிருந்தே உணரலாம். இதை மறைக்க நம் தமிழ்ப் புலவர்கள் "அய்யர் என்பது பார்ப்பானல்ல. பெரியோரைக் குறிப்பிடும் சொல்" என்று சமாதானம் சொல்வார்கள். அதற்கு வழியில்லாமலே மேலோர் என்ற சொல்லைத் தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழனுக்கு எக்காலத்திலும் இத்திருமண முறை, அதாவது ஓர் ஆணும், பெண்ணும் ஒரு கட்டுப்பாட்டிற்கிணங்கி வாழும் முறை இருந்தது கிடையாது. பார்ப்பான் வந்த பின் ஏற்பாடு செய்யப்பட்டதே இம்முறையாகும். இதைத்தான் தொல்காப்பியமும் சொல்கிறது என்பதோடு இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடக் கூடிய ஒரு சொல்லே தமிழில் கிடையாது என்பதிலிருந்து தமிழனுக்குச் சம்பந்தமில்லாதது இத்திருமண முறை என்பதைத் தெளிவாக உணரலாம்.

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கு மேல் செலவிடக் கூடாது. மனிதன் அயோக்கியனாவதே வரவிற்கு மேல் செலவிட ஆரம்பிக்கும் போதுதான் ஆகும். அதுபோலவே அதிகக் குழந்தைகளைப் பெறுவதாலும் மனிதன் அயோக்கியத்தனத்திற்கு ஆளாக வேண்டியவனாகின்றான். மணமக்கள் ஆடம்பரமற்ற எளிய வாழ்வு வாழ வேண்டும். முட்டாள்தனமான - மூட நம்பிக்கையான அறிவிற்குப் பொருத்தமில்லாத காரியங்களில் ஈடுபடக் கூடாது.


------------------------------- 10.06.1968- அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை."விடுதலை"', 26.06.1968

36 comments:

தமிழ் ஓவியா said...


பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு எங்கிருந்து வருகிறது பணம்? : ராகுல் கேள்வி


பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு
எங்கிருந்து வருகிறது பணம்? : ராகுல் கேள்வி

அமேதி, மே 5- பிரமாண்ட கட்-அவுட், போஸ்டர் கள் அடித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்வதற்கு பாஜ கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது சொந்த தொகுதியான அமேதியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: இரண்டு, மூன்று கார்ப்பரேட் கம்பெனிகள் தரும் ஏராளமான பணத்துக் காகத் தான் பாஜ அரசியல் செய்கிறது. அப்படியில்லை என்றால், பல கோடி செலவு செய்து பெரிய பெரிய கட் அவுட் வைப்பதற்கும், நாடு முழுவதும் போஸ்டர் அடிப் பதற்கும் அவர்கள் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என் பதை சொல்வார்களா? இதெல்லாம் என்ன மோடியின் பணமா?

குஜராத்தில் மோடி ஒரே ஒரு தொழில் நிறுவனத்துக்கு ரூ.26,000 கோடி மின்சாரத்தையும், ரூ.15,00 கோடி நிலத் தையும் வழங்கியிருக்கிறது. நான் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரி கிடையாது. ஆனால், அவர்கள் தங் களுக்கான வசதிகளை விதிமுறைப்படியும் நேர்மையாகவும் பெற வேண்டும். குஜராத்தில் அதானி மட்டுமே ஆதாயமடைந்துள்ளார். ஏழைகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மோடியின் சில போஸ்டர்களில் அவரது ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என கூறியிருக் கிறார்கள். பெண்களுக்கு ஏற்கெனவே அதிகாரம் உண்டு. அவர்களுக்கு முதலில் மரியாதை கொடுங்கள். அதன்பின் பெண்களே அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது: மம்தா திட்டவட்டம்

கொல்கத்தா, மே 5- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி யுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வடக்கு கொல்கத்தாவில் நடை பெற்ற பிரச் சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி இனி எக்காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என தெரிவித் துள்ளார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பேசிய தாவது: மதம் மற்றும் மொழியை பயன்படுத்தி வங்கத்தில் உள்நாட்டு கலவரத்தை தூண்டி மக்களை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். வங்கத்தில் வசிக்கும் உ.பி. மற்றும் பிகார் மாநில மக்கள் இம் மாநிலத்தின் ஒரு அங்கமாக தான் கருதப்பட்டு வருகின் றனர். அரசிய லுக்காக மக்களை நாங்கள் பிரிக்க மாட் டோம். மதம் மற்றும் ஜாதி பற்றிய நம்பிக்கை கொள்ள லாமல் மக்களை பற்றி மட்டுமே தாங்கள் கவலைப் படுகின்றோம். இனி எக்காலத்திலும், என்றும் பா.ஜ.க. வுடன் கூட்டணி சேரமாட்டோம் என மம்தா கூறினார்.

மோடியை தடுக்க எங்களிடம் பல பயில்வான்கள் உள்ளனர்: அகிலேஷ்

சான்ட் கபீர் நகர், மே 5- 56 அங்குலம் (இஞ்ச்) மார்பள வுடைய மோடியை கட்டுப் படுத்த எங்கள் கட்சி யில் பல பயில்வான்கள் உள்ளனர் என்று உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

கலிலாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:- 56 அங்குலம் மார்பள வுடன் சுற்றும் மோடியை கட்டுப்படுத்த சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்களால் மட்டுமே முடியும். அவரை கட்டுப்படுத்த எங்கள் கட்சியில் பல பயில்வான்கள் உள்ளனர். சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் உத்தர பிரதேசம் குஜராத்தை விட வளர்ச்சி அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தை விட குஜராத்தில் நலத்திட்டங்கள் இல்லை. குஜராத்தில் வசதிகள் குறைவு. மோடி அலை என்பது வெறும் காற்றுதான். குஜராத் முன்மாதிரி என்று பொய்யான தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி அலை மட்டுமே தரையில் வீசுகிறது. மோடி அலை என்பது வானத்தில் மட்டும்தான். தேர்தலுக்குப் பிறகு முலாயம் சிங் தலைமையிலான 3-ஆவது அணி ஆட்சி அமைக்கும்.

மதவாதியாக இருப்பது எளிது. ஆனால் மதச்சார்பற்று இருப்பது மிகவும் கடினம். சமாஜ்வாடி அரசு கிராமங் கள், ஏழை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக அடிமட்ட அளவில் பாடுபடுகிறது. இவ்வாறு அவர் பேசினார். குஜராத் போன்று பிரகாசமான மாநிலமாக உத்தர பிரதேசத்தை மாற்ற 56 அங்குலம் மார்பளவு கொண்ட நபர் தேவை என்று கடந்த மாதம் தேர்தல் பிரச் சாரத்தில் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/79753.html#ixzz30tQ3V8pC

தமிழ் ஓவியா said...


மதச்சார்பற்ற அரசின் லட்சணம் இதுதானா?


காவல்துறை பாதுகாப்புடன் அய்தராபாத் பகுதியில் ரூ.நூறு கோடியில் கோயிலாம்!

அய்தராபாத்.மே5- அரே கிருஷ்ணா இயக்கம் (HKM), , பெங்களூருவை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வ தேச கிருஷ்ண ஞான சங்கம் (International Society for Krishna Conciousness ISKCON) ஆகிய அமைப் புகள் இணைந்து இலட் சுமி நரசிம்மன் கோவில் என்கிற பெயரில் கோவில் அமைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளதாம். இந்தக் கோவில் அமைக்கும் பணிக்கு ஆந்திர அரசு 4.38 ஏக்கர் நிலத்தை அளித்துள் ளதாம். கடந்த 2012ஆம் ஆண்டில் அப்போதைய ஆந்திர தொழில்துறை அமைச்சர் தனம் நாகேந்தர் இந்த கோவிலுக்கு அடிக் கல் நாட்டு விழாவில் அடிக் கல் நாட்டிவைத்தாராம். ஆனாலும், அவருடைய ஆதரவாளர்கள் கிருஷ் ணாஷ்டமி விழாவைக் கொண்டாட தடைபோட்டு அந்தக் கோவில் வளாகத் தின் வாசற்கதவுகளைப் பூட்டுப்போட்டு மூடி வைத்தனராம்.

இதைத் தொடர்ந்து அரே கிருஷ்ணா அமைப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்து, தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் துறை யின் பாதுகாப்புடன் சுமார் ரூ.நூறு கோடி மதிப்பிலான கோவில் கட்ட உள்ளதாம்.

கோவில் கட்டுமானப் பணிகளில் கோவில் வளா கத்தினுள் கலைகளை வளர்ப்பதற்கு நரசிம்ம லீலை, நரசிம்ம கலாஷேத் திரா அல்லது திறந்த வெளி திரை அரங்கு மற்றும் வேத சம்ஸ்கார அரங்கு ஆகி யவை அடங்குகிறதாம்.

அரே கிருஷ்ணா அமைப் பைச் சேர்ந்த கவுர சந்திர தாசா கூறும்போது: - அட்சய திருதியையில் கோவில் அமைக்கும் பணியைத் தொடங்கி உள் ளோம். இலட்சுமி நரசிம் மாவுக்காக 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக அரசு வழங்கி உள்ளது என்றார்.

பஞ்சாரா மலைப்பகுதி யில் இலட்சுமி நரசிம்ம சாமி கோவில் வளாகத்தில் கோவில் வளாகம், கலாச்சார மய்யம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதச் சார்பற்ற அரசின் யோக்கியதை எப்படி இருக் கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/79750.html#ixzz30tQCb0Gq

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் தூக்கிய போர்க் கொடி!


டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர்கள், மாணவர்கள் ஒரு முக்கியமான போராட்டத்தில் குதித்துள்ளார்கள். போராட்டத்தில் குதித்துள்ள அவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில், விதிமுறைகளைக் கையாளுவதில் பின்னடைவு ஏற்பட்டு, நடைமுறையில் தோல்வியைத் தழுவி யுள்ளோம். சிறிய அளவில் சாலை விதிகளை மீறினால்கூட சட்ட ரீதியாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிராக நடந்து கொள் பவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை? என்ற நியாயமான வினாவை எழுப்பியுள் ளனர் - போராட்டக் குழுவினர். இது குறித்து அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மிகவும் முக்கியமானது.

சுகாதாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், நாடாளுமன்ற நிலைக் குழு ஆகிய அனைத்து அதிகார பூர்வ அமைப்புகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பணி நியமனங் களில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டியதுடன் இடஒதுக்கீட்டை அழிக்கும் செயல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்.

மேலும் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டோம் என்று தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது கட்டாயமாக சட்டரீதியாக ஆக்கப்பட்ட நிலையிலும், எய்ம்ஸ் நிறுவனம் இப்படி திமிரடியாக - சட்ட விரோதமாக நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல!

வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்த கால கட்டத்திலும் சரி, அதன்பின் கல்வியிலும் இடஒதுக்கீடு என்று சட்டம் செய்யப்பட்ட கால கட்டத்திலும் சரி, எய்ம்ஸில் படித்துக் கொண்டிருந்த உயர் ஜாதிப் பார்ப்பன மாணவர்களும், பேராசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டதுண்டு.

என்ன கொடுமை என்றால், அந்தச் சட்ட விரோத போராட்டத்திற்கு எய்ம்ஸ் நிறுவனத்தில் அனைத்துப் பொருள்களையும், (மின்சாரம் உட்பட) பயன்படுத்திக் கொண்டனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளையும்கூட அவர்கள் கவனிக்கத் தயாராக இல்லாத குரூர மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் என்பது வெட்கக் கேடானதாகும்!

மருத்துவ சோதனையின் போது 49 குழந்தைகள் இறந்தன எனக் குற்றச்சாற்று எழுந்ததுண்டு.

அவர்கள் பணி செய்யாத அந்த வேலை நிறுத்தக் கால கட்டத்திற்கு சம்பளத்தை நிறுத்தியபோது, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று சகாயமான ஆணையை பெற்றுக் கொண்டார்கள் என்பது வேதனைக்குரியது.

ஒரு கால கட்டத்தில் இவர்களுக்கெல்லாம் துணை போய் கொண்டிருந்தவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால். இவர் பிஜேபி ஆட்சியில் 5 ஆண்டு காலம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டவர் (3.7.2003 - 3.7.2008).

2007 நவம்பர் 28 இல் எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கான ஓய்வு வயது 65 என்று சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் வேணுகோபால். இடஒதுக்கீட்டுக்கு விரோதமாக இயக்குநர் வேணுகோபால் செயல்பட்டது பற்றியெல் லாம் எடுத்துக் கூறப்பட்டது. பார்ப்பனர் வேணுகோ பாலுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடியவர் பி.ஜே.பி. பார்ப்பனரான அருண்ஜெட்லி. (இதற்குப் பெயர்தான் இனவுணர்வு என்பது!)
எய்ம்ஸில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பல வகைகளிலும் ஒதுக்கப்பட்டனர் இழிவுபடுத்தப்பட்டனர்.

தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்குவதில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது என்று ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குமுறினர் என்றால், அங்கு நிலவிய சமூக அநீதியின் கொடுங்கோன்மை எத்தகையது என்பது எளிதில் விளங்கிடுமே!

அனில்குமார் மீனா, பால் முகுந்த்பார்தி, வினேஷ் மோகன் காவ்லே ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட கொடுமையை என்னவென்று சொல்வது!

ஆட்சியதிகாரம் யார் கைகளில் இருந்தாலும் நிருவாக இயந்திரம் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கைகளில் இருந்தால் இந்த நிலைதான் நீடிக்கும் என்பது வெளிப்படை.

தமிழ் ஓவியா said...

மத்திய தேர்வாணையமே இடஒதுக்கீடு வழங்கு வதில் குளறுபடிகள் செய்யவில்லையா? திறந்த போட் டிக்கான இடங்களைமுதலில் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களை அவர் களுக்குரிய விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதானே சட்ட ரீதியான நிலைப்பாடு!

இதனைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, திறந்த போட்டியென்றாலே இடஒதுக்கீடே இல்லாத உயர் ஜாதியினருக்கு என்று ஆக்கிச் செயல்படுத்த வில்லையா?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ளவர்கள் இப்படி சட்ட விரோதமாக நடக்கும் பொழுது, பெரும்பான் மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் சட்டப்படியான உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடிட என்ன தயக்கம்?

டில்லியில் எய்ம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும், பேராசிரியர்களும் சமூக நீதி உரிமைக்காக வீதிக்கு வந்து விட்டனர். இது நாடெங்கும் பரவட்டும்! பரவட்டும்!!

Read more: http://viduthalai.in/page-2/79744.html#ixzz30tQWAVo7

தமிழ் ஓவியா said...


இன்று ஆர்.கே.எஸ்ஸின் 61-ஆம் ஆண்டு நினைவு நாள்


இன்று ஆர்.கே.எஸ்ஸின் 61-ஆம் ஆண்டு நினைவு நாள்
விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்


- முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்

நம்மிடத்தில் அறிவாளிகள் இல் லையா? நம்மை விட அறிவாளிகள் வடநாட்டில் ஏது? அய்ந்து பண்டித நேருக்கள் சேர்ந்தால்தானே நம்முடைய ஒரு ஆச்சாரியாரின் அறிவுக்குச் சமமாக முடியும், அதுபோலவே அய்ந்து பட் டேல்கள் சேர்ந்தால் தானே நம்முடைய சண்முகம் செட்டியார், ராமசாமி முதலியார் ஆகியோரின் அறிவுக்குச் சமமாக முடியும்? என்று குன்னம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் புகழ்ந்துரைத்த ஆர்.கே.எஸ் என்று அறியப்பெற்று புகழ்பெற்று விளங்கிய ஆர்.கே.சண்முகம் செட்டியார் மறைந்து 61 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் திராவிடரான இந்தியாவின் முதல் நிதியமைச்சராக விடுதலை பெற்ற இந்தி யாவின் பெருமைக்குரிய நிதியமைச்சர் அவரின் 61 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவர் நினைவிற்கு மரியாதை செலுத்தி அவர் வாழ்க்கை ஏட்டைப் புரட்டிப் பார்ப்போம்.

திராவிட இயக்கம் கண்ட பெருமைக் குரிய மாமனிதர்களில் ஒருவர் அவர்.

1915 ஆம் ஆண்டு சென்னையில் பட்டதாரிகளுக்குப் பாராட்டுவிழா திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருந்த டாக்டர் சி.நடேசனின் இல்லத்தில் திராவிடச் சங்கம் இயங்கிய காலம் அது.

பட்டதாரித் திராவிடர்களுக்குப் பாராட்டுரை வழங்கிட வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர், பனகல் அரசர் உள்ளிட்ட பலரும் வருகை புரிந் தனர். பட்டதாரிகளுக்குப் பாராட்டுரைகள் நிறைவுற்றபின், பட்டதாரிகள் சார்பில் ஏற்புரை நிகழ்தினார். ஓர் இளைஞர் அவர் தான் அன்றைய இளைஞர் தான் ஆர்.கே.சண்முகனார்.

டாக்டர் ஆர்.கே.ச அவர்கள் 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் கோவை நகரில் வாணியர் தெருவில் ஆர்.கந்தசாமி செட்டியார், சிறீரங்கம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.

இவருடைய பெயருக்கு முன்னே உள்ள ஆர்.கே. என்பதில் உள்ள முன் ஓட் டெழுத்து பாட்டனார், உப்பிலிபாளையம் இராமசாமி செட்டியார் எனும் உழைத்துப் பொருள் ஈட்டி எளிமையாக வாழ்ந்த இராமசாமி செட்டியாரையும், கே என்பது தந்தை கந்தசாமி செட்டியாரையும் குறிக்கும்.

ரா.க.ச ஆம் ஆர்.கே.எஸ் ஸின் குடும் பம் பெரியது. இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். நான்கு சகோதரர்கள் இவருடைய தந்தை கந்தசாமி செட்டியார் தம் 42 ஆம் வயதிலேயே இறந்து விட்டார். தாயார் சிறீரங்கம்மாள் தெளிவும் அழகும் நிறைந்த பெண்மணி என்பதோடு ஏழைகள் பால் இறக்கம் கொண்டவர். ஆதரவற்ற இளம் பெண்டிர் திருமணங்களுக்குப் பணஉதவி வழங் கியவர்.


தமிழ் ஓவியா said...

நான்காம் வயதில் படிப்புத் தொடங் கியது. வீட்டிற்கு வந்து பள்ளிப்பாளையம் கிருஷ்ணப்பிள்ளை என்பவர் பாடம் சொல்லிக் கொடுத்த பின் கோவை ஒப் பணக்கார வீதியில் ஒரு கிறித்தவ மிஷன் தொடக்கப் பள்ளியில் படித்து இலண்டர் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தேறினார். 1910 ஆம் ஆண்டு தம் 17 ஆம் வயதில் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற் றவர். 1910 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

அப்போது அக்கல்லூரி சென்னை பாரிமுனை எஸ்பிளனேட்டில் இருந்தது. லிங்கிச்செட்டித் தெருவில் இருந்த மாண வர் விடுதியில் படித்துக்கொண்டு இருந்த போதுதான் தந்தையார் மறைந்தார்.

பொருளாதாரம் தான் விருப்பப்பாடம் என்றாலும், ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவருடைய கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்கின்னர், பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் மெக்பெய்ஸ் ஆகியோரின் பாராட்டுப் பெற்ற சிறந்த மாணவர் அரசியல் அறிவியல் பாடப் பேராசிரியர் ஓ.கந்தசாமி செட்டியாரிடம் பழகி விவாதத்தில் பயிற்சி பெற்றார்.

கிறித்துவக் கல்லூரி மாணவரான சண்முகம், சென்னையில் அந்நாளில் நடைபெற்ற சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளைத் தவறாமல் கேட் பதுடன் அவர்களுடன் சந்தித்து உரை யாடுவதையும் மேற்கொண்டிருக்கிறார்.

அவ்வாறு உரையாடியவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, பிபின் சந்திர பாலர், பாலகங்காதர திலகர், அண்ணல் காந்தியடிகள் கோகலே தான் சண்முகம் அவர்களை அரசியலுக்கு வர வலியுறுத்தியவர் என்பார்.

காந்தியடிகளைச் சந்தித்ததை சண் முகம் இவ்வாறு எழுதியுள்ளார். சென்னை கலா சாலையில் படித்துக் கொண்டி ருந்தேன். தென் ஆப்பிரிக்காவில் குடி யேறியிருந்த இந்திய மக்களின் நிலை யைப்பற்றி அறிவிக்கக் காந்தியடிகள் சென்னையில் சுங்கராம செட்டி தெருவில் வசித்து வந்த ஜி.எ.நடேசன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தார். காந்தியடிகளைப் பார்க்க மற்ற மாணவர்களுடன் நானும் அங்குப் போயிருந்தேன். வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளைச் சட்டை, அதன் மேல் ஓர் அங்க வஸ்திரத்துடன் தரையில் விரிக்கப்பட்ட ஜமக்காளத்தில் காந்தி யடிகள் உட்கார்ந்திருந்தார். நாங்களும் அவரைச் சுற்றி உட்கார்ந்தோம். மெல்லிய குரலில் தென் ஆப்பிரிக்க இந்தியர் களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அன்று எங்களுக்குச் காந்தியடிகள் குஜராத்தின் சாமானிய மனிதர் போல் தோன்றினார். அன்று ஓர் அவதார புருஷரோடு பேசும் பாக்கியம் கிடைத்தது என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை.

அவருடைய பாட்டனாரின் விருப்பப் படி தன் அத்தை அலமேலுவின் மகள் அய்யம்மாளைப் படித்துக் கொண்டி ருக்கும்போது திருமணம் செய்து கொண் டார். அய்யம்மாளும் தன் கணவருக் கேற்ற மனைவியாய் வாழ்ந்தார். சண்முகம் அய்யம்மாள் இணையருக்கு முதலாவதாகப் பிறந்த பெண் மகவிற்குச் சாவித்திரி என்ற பெயர். இவர் பின்னா ளில் கோவை நகராட்சித் துணைத் தலை வியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

தமிழ் ஓவியா said...

1915 ஆம் ஆண்டு பி.ஏ.பட்டம் பெற் றவர் 1917 இல் சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1922 இல் பி.எல்.பட்டம் பெற்று வழக் குரைஞராகப் பதிவு செய்து கோவையில் வழக்குரைஞராக விளங்கினார்.

1917 லேயே இவருடைய சட்டக் கல்லூரி வாழ்க்கையோடு அரசியல் வாழ்க்கையும் தொடங்கியதன் விளை வால் கோவை நகராட்சி உறுப்பினராக வும், பின் நகராட்சித் துணைத் தலைவ ராகவும் விளங்கினார்.

1918 ஆம் ஆண்டு கோவை ரேஸ் கோர்ஸ் ரோடில் இருந்த 14 ஏக்கர் பரப்பிலான பெரிய பங்களாவைத் தன் பாட்டனார் மறைவிற்குப்பின் வாங்கி வீட்டின் பெயரை ஹாவர்டென் என்று சூட்டிக் குடியேறினார்.

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர், தேசபற்று சி.எப்.ஆண்ட்ரூஸ், காந்தி யடிகள், பெரியார் முதலிய பெருமக்கள் வந்து தங்கிச் சென்ற அவ்வீட்டில் தென் இந்தியாவில் தனியார் இல்லத்திலுள்ள சிறந்த நூலகம் என்று பெயர் பெற்ற நூலகத்தை அமைத்தார்.

தம் 28 ஆம் வயதில் நீலகிரி சட்டசபை தொகுதி உறுப்பினர் பதவிக்காக செல் வாக்குடைய பெல்லி கவுடரை எதிர்த்து வெற்றி பெற்றார்.

ஆர்.கே.எஸ். மூன்றாண்டுக்காலம் சென்னை சட்டமன்றத்தில் மிகச்சிறந்த சட்டசபையாளர் என்ற பெயரைப் பெற்ற தனால் அன்னிபெசன்ட் அம்மையார் தம் நியூஇந்தியாவில் இவருடைய சட்ட சபைப் பணியைப் பாராட்டியதுடன் டில்லி சட்ட சபைக்குப் போனால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என எழுதினார். 1923 நவம்பரில் கோவை, சேலம், வட ஆர்க்காடு மாவட்டங்களைக் கொண்ட மத்திய சபைத் தொகுதிக்குச் சுயேச் சையாகப் போட்டியிட்டு வென்று 1924 ஆம் ஆண்டு முதல் டில்லி மத்திய சபை உறுப்பினரானார். 1922 இல் இங்கிலாந்து சென்று அதன் நாடாளுமன்ற முறையைக் கண்டறிந்தார். இவரைக் கட்சிக் கொற டாவாக மோதிலால் நியமித்தார். 1926 லும், 1930 லும் நடைபெற்ற மத்திய சபைத் தேர்தலில் வெற்றி கண்டார்.

1931 இல் தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்க மாநாட்டிற்குத் தலைமை வகித்த பெருமைக்கும் உரிய வர் இவர். அந்த ஆண்டு முழுவதும் அவரே மரியாதை இயக்கத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது மத்திய சபைத்துணைத் தலைவர் ஆனவர் 1933 மார்ச் 14 அன்று டில்லி மத்திய சபைக்குத் பேரவைத் தலைவ ராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இந்தப் பதவியில் அமர்ந்த முதல் தென் இந்தியர், தமிழர், குறைந்த வயதுடையவர் என்ற பெருமை பெற்ற இவர் சபையைத் திறம்பட நடத்தி அனைத்துப்பிரிவு உறுப்பினர்களின் பாராட்டுதலையும் பெற்றார். அது வெறும் சண்முகமாக இருந்தவரை சர் என்றாக் கியது.

அது மட்டுமல்லாது 1935 இல் இந்திய அரசுப் பிரதிநிதி வெலிங்டன் பிரபு 1935 இல் கொச்சி சமஸ்தானத்து திவானாக நியமித்தார். ஆறு ஆண்டுகள் திவானாக இருந்து சிறப்பாகப் பணிபுரிந்தார். இவரு டைய பெயரில் சண்முகம் கால்வாய் துறைமுகத்தை இணைக்கும் பெரிய கால்வாயாக விளங்குகிறது.

1932 இல் புகழ்பெற்ற சர்ச்சைக்குரிய ஒட்டா வாவில் நடைபெற்ற காமன் வெல்த் நாடுகளின் பொருளாதார மாநாட்டிற்கு இந்திய பிரதிநிதியாகச் சென்ற பெருமையும் உண்டு. 1928, 1929, 1930 ஆகிய ஆண்டுகளில் இந்தியப் பிரதிநிதியாக ஜெனிவாவில் நடைபெற்ற பன்னாட்டுச் தொழிலாளர் மாநாடுகளில் சிறப்புரையாற்றியிருக்கிறார். இரண் டாவது உலகப் போர் முடிந்ததும் 1944 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வேண்டிய பொருட்கள் வாங்கும் குழுவிற்கு தலைவராக அமெரிக்கா சென்ற போது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூஸ் வெல்ட்டை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் 1944 இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் இயக்க மாநாட்டில் ஆர்.கே.எஸ் ஸை நீதிக்கட்சி யின் தலைவராகப் பெரியாரை ஒதுக்கிவிட்டுத் தலைவராக்கச் சிலர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை. அவை தனியாகக் காண வேண்டிய வரலாற்று நிகழ்வுகள்.

1948 இல் நிதி அமைச்சராக ஸ்டெர்லிங் பிரச்சினைக்காக இங்கிலாந்து சென்றார்.

தமிழ் ஓவியா said...

1947 இல் விடுதலைக்குப்பின் இந்திய விடுதலை நாளில் சர் பட்டத்தைத் துறந்து முதலாவது நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபோது காங்கிரஸ் கட்சி யிலேயே இல்லாத இவரை பண்டித நேரு நியமிக்கக் காந்தியடிகள் ஆலோ சனைப்படி நியமிக்கப்பெற்ற சிறப்பும் உண்டு.

1948 இல் இந்தியாவிற்குப் பிரிட்டன் தரவேண்டிய ஸ்டெர்லிங் கடன் பிரச் சினை பற்றிப் பேச்சு வார்த்தை நடத்த சி.பு.தேஷ்முக், டி.டி.கே, பி.கேரேரு ஆகியோருடன் லண்டன் சென்று சிக்கலான பிரச்சினையை சுலபமாகப் பேசி ஸ்டெர்லிங் கடனாகப் பெற்றார். இரண்டு நாடுகள் வளரப் பல உடன் பாடுகள் கையெழுத்து ஆயின.

ஆனால் ஆர்.கே.எஸ். லண்டன் சென்றபோது எதிர்பபுப் பிரச்சாரம் செய்து பதவி விலகியே ஆகவேண்டுமென எதிர்ப்புக்கூட்டம் செயல்படவே 1948 ஆகஸ்டு 15 ஆம் நாள் நிதியமைச்சர் பதவியைத் துறந்து வெளியேறினர். பட்டேல் இராஜாஜியை அனுப்பி அதைத் திரும்பப்பெற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 1948 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. 1949 இல் தாம் வகித்த அரசமைப்புச் சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.

இந்தியாவின் நிதியமைச்சராக விளங்கிய இவரைத் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக ஆக்கி இவருடைய அறிய ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டார் இராசா சர்.முத்தையா செட்டியார்.

இவருடைய துணைவேந்தர் பதவிக் காலத்தில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தனியாக அமைந்தது. வேளாண்மை ஆராய்ச்சிப்பிரிவு ஏற்பட்டது. இத் திட்டப்படி முதல் ஆண்டே 43 உழவர்கள் பயிற்சி பெற்றனர். 1952 டிசம்பரில் துணை வேந்தர் பதவியிலிருந்து விலகினார்.

தமிழ் ஓவியா said...


தமிழ் இலக்கியம் கற்றுச் சிலப்பதிகாரம் புகார் காண்ட உரை எழுதினார். வாழ்க் கைத் துணை நூல் எனும் நூல் எழுதி னார். தமிழ் வளர்ச்சி மாநாடுகள், திருக் குறள் மாநாடுகள், தமிழ் நாடக மாநாடுகள் பலவற்றிலும் பங்கு கொண்டார்.

இசையில் தமிழ் முழக்கம் பெற வேண் டும் என்ற இராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் எண்ணத்திற்குத் துணை நின்றவர் அண்ணாமலைச் செட்டியாருக் குப் பின் தமிழிசைச் சங்கத்தலைவ ரானார்.

1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 அக்டோபர் 18 ஆம் நாள் சண்முகனாரின் 61 ஆவது பிறந்த நாள். இதுவே அவர் கொண்டாடிய கடைசிப் பிறந்த நாள். சர். விசுவேசு வரய்யா தலைமை வகித்துச் சிறப்பித்த நாள்.

1953 ஜனவரியில் மேலவைக் கூட் டத்தில் கலந்து கொண்டு சென்னையி லிருந்து கோவை வந்தார். தொடர்ந்து நாட்களில் உடல் நலம் குன்றியது.

1953 மே மாதம் 5 ஆம் நாள் மகளு டன் நகைச்சுவையாகப் பேசிக் கொண் டிருக்கையில் தண்ணீர் கேட்டவர், தண்ணீர் வருவதற்குள் உயிர் பிரிந்தது.

கல்விப் பொருளும், செல்வப் பொருளும் கடலெனப் பெற்றோன்; உடலும், உயிரும் எல்லார்க்கும் பயன்பட எளிதில் உறைந்தோன் என்றும் வாழ்க அவன் புகழுடம்பே என்று புரட்சிக் கவிஞர் பாடிய ரா.க.ச அவர்களின் 61 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர்தம் நினைவு போற்றுவோம்.

Read more: http://viduthalai.in/page-2/79745.html#ixzz30tR7S2iD

தமிழ் ஓவியா said...

அறிஞர் கால்டுவெல் 200ஆவது பிறந்தநாளை நன்றியுடன் நினைவுகூர்வோம்


தமிழ்மொழிக்கு தொண்டாற்றிய அறிஞர் கால்டுவெல் 200ஆவது பிறந்தநாளை நன்றியுடன் நினைவுகூர்வோம்: கலைஞர் அறிக்கை


சென்னை, மே.5-தமிழ்மொழிக்கு தொண்டாற்றிய அறிஞர் கால்டுவெலின் 200ஆவது பிறந்த நாளை நன்றியுடன் நினைவுகூர்வோம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் மொழியின் இலக்கணக்கட்டமைப்பும், இலக்கியச் செழுமையும் எவரையும் ஈர்க்க வல்லவை. அதனால்தான் சமயத் தொண்டுகளாற்றிட வந்த அய்ரோப்பிய குருமார்கள் தமிழ் மொழியினால் ஈர்க்கப்பட்டு, அதன் சிறப்புகளில் மயங்கி, அதன் மேன்மைகளை மேதினிக்குப் புலப் படுத்தினர்.

அவருள் முதன்மையானவர், தமிழ் தனித்தன்மை வாய்ந்த மொழி-செம்மொழி-திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த முதல் மொழி எனக்கூறி, உரிய சான்றுகளுடன் நிறுவிய மாமேதை கால்டுவெல்.

1841இல் குரு பட்டம் பெற்று, நெல்லையில் பேராயராகப் பொறுப்பேற்று இடையன்குடி என்னும் ஊரில் தங்கி, தமது சமயப் பணிகளைச் சிறப்புடன் ஆற்றி, தமிழ் மொழியையும் செம்மையாகக்கற்றார்; பன்னூறு ஓலைச் சுவடிகளையும், சங்ககாலத்தமிழ் இலக்கியங்களையும் பயின்றார்; மதகுருவாக அங்குப் பணியாற்றிய காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புதை பொருள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

அதன் பயனாகப் பழங்காலக் கட்டடங்களின் அடிப் படைகளையும், ஈமத்தாழிகள் பலவற்றையும் வெளிக் கொணர்ந்தார்; அவற்றுடன், பாண்டியர் காலத்திற்குச் சொந்தமான கயல் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங் களையும் கண்டுபிடித்தார்; இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தாம் கண்டவற்றை, திருநெல்வேலி சரித்திரம் எனும் பெயரில் நூலாக உருவாக்கினார்; அந்நூல், 1881ஆம் ஆண்டு சென் னையில் அப்போதிருந்த ஆங்கிலேய சென்னை மாகாண அரசினால் வெளியிடப்பட்டது.

டாக்டர் கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளுடன் மொத்தம் 18 மொழிகளைக் கற்றவராக விளங்கினார். தமிழ்ப் பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளிபெறச் செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ் உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் தி.மு.க. கால்டுவெலை என்றும் நன்றியுடன் போற்றி வருகிறது. பேரறிஞர் அண்ணா தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று, 1968ஆம் ஆண்டில் நடத்திய இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, 2-1-1968 அன்று சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் டாக்டர் கால்டுவெலின் திருவுருவச்சிலையை நிறுவினோம்.

செம்மொழி எனத்தமிழ் மொழிக்கு மணிமகுடம் சூட்டிய மாமேதை டாக்டர் கால்டுவெலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கோவை மாநகரில் 27-6-2010 அன்று நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் டாக்டர் கால்டுவெல் நினைவாகச் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட ஆவன செய்தோம்.

தமிழ் ஓவியா said...

அவற்றைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம், இடையன் குடியில் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லம் நினைவு இல்லமாக மேம்படுத்தப்படும் என 4-2-2010 அன்று அறிவித்து, பழைமையான அந்த இல்லத்தைச் செப்பனிட்டுச் சீரமைத்திட 2-3-2010 அன்று 18 லட்சத்து 50 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டாக்டர் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து; அங்கு ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் டாக்டர் கால்டுவெலின் மார்பளவு வெண்கலச்சிலை ஒன்றையும் நிறுவி, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மேம்படுத்தி 17-2-2011 அன்று நான் திறந்து வைத்துப் பெருமிதம் கொண்டேன்.

மேலும், டாக்டர் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லத்தில் அதுவரை தங்கியிருந்த குருமார்கள் தங்குவதற் காக, புதிய இல்லம் ஒன்றைக் கட்டுவதற்கு 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 15-2-2011 அன்று ஆணையிட்டதையும் இவ்வேளையில் நினைவுகூர்ந்து மகிழ்கிறேன்.

எங்கோ பிறந்து, தமிழகத்திற்கு வந்து, சமயத் தொண்டு களாற்றி, தமிழ் மொழியைக்கற்று, அதன் இன்பத்தில் தோய்ந்து, தமிழ் மொழியில் இயல்பாய் அமைந்து கிடக்கும் மொழியியல் சிறப்பைக்கண்டு வியந்து, தமிழின் மேன்மையை மேதினில் நிலைநாட்டிய மாமேதை டாக்டர் கால்டுவெல் 1891ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று தாம் ஆற்றி வந்த சமயப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்று; கொடைக்கானல் மலையில் தங்கி வாழ்ந்து, அங்கு 31-1-1891 அன்று மறைவெய்தினார். அவரது உடல், அவர் 50 ஆண்டு காலம் தங்கியிருந்து சமயத்தொண்டுகள் ஆற்றிய, இடை யன்குடியில், அவர் எழுப்பிய தேவாலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அறிஞர் கால்டுவெல் தமது 77 ஆண்டுகளில் 53 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளால் இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற அந்த மாமேதை கால்டுவெல் பிறந்த 200-ம் ஆண்டு 7-5-2014 அன்று நிறைவுபெறும் வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத்தமிழ்ச் சமுதாயம் சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம்.
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/79734.html#ixzz30tRVjSoE

தமிழ் ஓவியா said...


அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!


குழந்தைகள் பழகு முகாம் - 2014 தொடக்கம்

அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் பிஞ்சுகளிடம் பேச்சு!


தஞ்சை, மே 5- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நான்காவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகளுக்கான பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாமின் தொடக்கவிழாவில் சொந்தமாக சிந்திக்க கற்றுத் தரப் போகிறோம் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் குறிப்பிட்டார்.

குவிந்தனர் மழலைப் பட்டாளங்கள்!

நான்காவது ஆண்டாக நடைபெறும் பழகு முகாமில் மொத்தமாக 209 பெரியார் பிஞ்சுகள் குவிந்துவிட்டனர். 150-க்குள் திட்டவட்டமாக சுருக்கிவிட வேண்டுமென்று பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சி செய்தும் பெரியார் பிஞ்சுகளின் அளவு கடந்த ஆர்வத்தால் இலக்கை விஞ்சினர்.

இதில் 13-வயதுக்கு மேற்பட்டவர்கள் A-(ADOLESCENT) என்றும் மற்றவர்கள் K-பிரிவு (KIDS) எனவும் இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டிலும் 15 பேர் கொண்ட உட் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவர் (VOLUNTEERS) நியமிக்கப்பட்டனர். 13-வயதுக்கு மேற்பட்டோரில் பெண் கள் 35, ஆண்கள் 38 ஆக 73 பேரும், குழந்தைகள் பிரிவில் பெண்கள் 53, ஆண்கள் 83 ஆக 136 பேருமாக மொத்தம் 209 பேர் ஆவர்.

சிட்டுக்குருவிகளுடன் நடைப்பயிற்சி

பதிவுகள், குருதிப் பரிசோதனை முதலியவை முடிந்த பிறகு சென்னை அரங்கநாதன் விடுதியிலிருந்து உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் பெரியார் பிஞ்சுகளின் நடைப்பயிற்சி தொடங்கியது.

வெயிலுக்கு குடை பிடித்த மழை மேகங்கள்

பெற்றோர்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விட்டு விடுதலையாகி நின்ற பெரியார் பிஞ்சுகளுக்கு இயற்கையும் அருமையாக ஒத்துழைத்தது. சுளீரென்று அடிக்க வேண்டிய வெயிலை தடுக்கும் விதமாக கருநிற மேகங்கள் குடையாக பரந்து விரிந்து சுற்றுச்சூழலையே சில்லென்று மாற்றிவிட பெரியார் பிஞ்சுகள் உற்சாகத்தில் சிறகடித்தனர்.

தொடக்க விழா

காலை உணவுக்குப்பிறகு சிக்மண்ட் ஃபிராய்டு அரங் கத்தில் தொடக்க விழா நடைபெற்றது. பவர் அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் பர்வீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோவிந்தராஜி பெரியார் பிஞ்சுகளை வாழ்த்திப் பேசினார். திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவருக்கும் நன்றி கூறி தொடக்க விழாவை நிறைவு செய்தார்.

சிந்திக்க கற்றுத் தருகிறோம்

முன்னதாக தொடக்கவிழாவில் பேசிய பேராசிரியர் பர்வின் இந்த பழகு முகாமானது எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள் கிறோம் என்று குறிப்பிட்டார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி பேசுகையில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தங்களை நம்பி ஒப்படைத்ததற்கு பல்கலைக் கழகத்தின் சார்பில் பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் பிஞ்சுகளிடம் கலகலப்பாக உரையாடினார். அப்பொழுது தான் புவி ஈர்ப்பு விசையை அய்சக் நியூட்டன் பள்ளிப்படிப்பினால் கண்டு பிடிக்கவில்லை என்பதையும் இது போன்றதொரு விடுமுறை நாளில்தான் கண்டு பிடித்தார் என்பதையும், அவரைப்போல, ரிலேட்டிவிட்டி தியரி கண்டுபிடித்த அய்ன்ஸ்டீனைப் போல, பழகு முகாமின் ஆறு நாட்களும் நாங்கள் உங்களுக்கு சொந்தமாக சிந்திக்க கற்றுக் கொடுக்கப் போகிறோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையில் குறிப்பிட்டார். தொடர்ந்து பழகு முகாமின் முதல் நாள் நிகழ்ச்சி நிரல்படி தொடர்ந்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் கல்வி வளாகங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிரமணியன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/79738.html#ixzz30tRfLFx4

தமிழ் ஓவியா said...


மஞ்சளின் மருத்துவ குணங்கள்


1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மது போதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகை யான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப் பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

6. மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணு யிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்.

7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கொண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும். தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.

8. மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

9. மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத் தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்.

10. மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்.

Read more: http://viduthalai.in/page-7/79764.html#ixzz30tSDxrdW

தமிழ் ஓவியா said...


கோடை வெயிலை சமாளிக்க பழங்கள் இருக்கு...

கோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும்.

இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற் போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது. பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.

தர்பூசணி: தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.

அத்திப்பழச்சாறு: அத்திப்பழத்தின் சாறு பிழிந்து, தேங்காய் பால், தேன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். அத்திப்பழம் தேன் ஆகியவற்றுடன் கல் உப்பு சேர்த்து குடித்தால் ஆரம்ப கால சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு, புத்துணர்வு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு: ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல் களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்ற வற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலக்காய் ஆகியவற்றை கலந்து குடித்தால் ரத்த சோகை குணமாகும். கர்ப்பிணிகள் இச்சாற்றை குடித்து வர பிரசவத்தின்போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சை சாறு: திராட்சை சாறு தொடர்ந்து குடித்தால் ரத்த அழுத்த குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும். திராட்சை சாறுடன், தேன் கலந்து குடித்தால் உடல்பலம் மிகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாறு குடிப்பது மிகவும் நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSTPE3U

தமிழ் ஓவியா said...

குளிர வைத்த தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான். சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருள்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான நீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.
மலேரியாவை குணமாக்கும் எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்தோ அல்லது வெல்லம் கலந்தோ ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் என கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை குடிக்கும் போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து குடிப்பதால் டைபாய்டு காய்ச்சல் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து குடித்தால் மலேரியா நோய் குணமாகும். எலுமிச்சை சாறுடன் வெள்ளை வெங்காயம், கற்பூரம் சேர்த்து குடித்தால் காலரா குணமாகும்.

உடல் களைப்பு, கை, கால் கணுக்களில் வீக்கம்-வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குழைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSeS0Rx

தமிழ் ஓவியா said...


புதுவையில் - ஆசிரியர் நடத்திய வகுப்பு!


புதுச்சேரியில் அமைப்பு ரீதியாக மாநில திராவிடர் கழகம் உருவாக்கத்திற்கான கலந்துரையாடல் கூட்டம் அது (3.5.2014).

காரைக்கால் பகுதியைச் சார்ந்த தோழர்களும், புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த கருஞ்சட்டையினரும், ஆர்வமுடன் பங்குகொண்டனர்.

காரைக்கால் பகுதி - நாகப்பட்டினம் மாவட்டத் தோடும், புதுச்சேரி கடலூர் மண்டலத்துடனும் இணைக்கப் பட்டு இயக்கப் பணிகள் நடைபெற்று வந்தன.

புதுச்சேரி, தனி மாநிலமாக ஆட்சி ரீதியாக இருக்கும் நிலையில், கழகத்தையும் அந்தத் தனித் தன்மையுடன் அமைப்பு ரீதியாக அமைப்பது சரியானதாக இருக்கும் என்ற நோக்கத்தோடு கழகத் தலைவர் இதனை உருவாக்கினார்கள்.

கலந்துரையாடல் கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் புயலாகப் பணியாற்றிய பழம் பெரும் தோழர்களை யெல்லாம் மறக்காமல் பசுமையாக நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், புதுவை திராவிடர் கழகத் தின் தலைவராகவே இருந்து பணியாற்றியவர் ஆயிற்றே!

1957 நவம்பர் 26 இல் ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டக் காலகட்டத்தில், கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் காராக்கிரகத்தில் கடுங்காவல் தண்டனை பெற்றிருந்த காலகட்டத்தில், நாடெங்கும் ஜாதி ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.

அந்தத் தருணத்தில் புரட்சிக்கவிஞர், அன்றைய சட்டக் கல்லூரி மாணவர் கடலூர் கி.வீரமணி (சில மாநாடுகளில் டாக்டர் இராசமாணிக்கனார்) முதலியோர் கலந்துகொண்டு, இயக்கத்தில் தொய்வு ஏற்படாமல் தோள் கொடுத்ததை யார்தான் மறுக்க முடியும்.

பழம்பெரும் தோழர்கள் நோயல், செய்கோன், இராச மாணிக்கம், புதுவைக் கவிஞர் சிவப்பிரகாசம் (புரட்சிக் கவிஞரின் தலையாய மாணவர்), ஆனந்தா திருமண மண்டபத்தின் உரிமையாளர் கோவிந்தசாமி (முதலியார்), சகுந்தலா சாயத் தொழிற்சாலை உரிமையாளர் பொன். இராமலிங்கம் (நல்ல வருமானம் - பெரும் பகுதி இயக் கத்திற்காக வாரி வழங்கியவர்). காஞ்சி கல்யாணசுந்தரம் என்று பெயரிலேயே ஊரின் பெயர் ஒட்டிக்கொண்டி ருந்தாலும், புதுச்சேரியையே தன் ஊராக வரித்துக் கொண்டு பணியாற்றியவர்.

பிரகாஷ்- நம்பிக்கை மேரி இணையரின் திருமணம் மத மறுப்புடன் கூடிய சுயமரியாதைத் திருமணமாக தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.

மு.கனகலிங்கம், துரைசாமி, அவுட்கா பெருமாள் (அவுட்கா என்றால், வழக்குரைஞர்), கனகலிங்கம், வலங்கை கு.கலைமணி, வ.சு.சம்பந்தம், காரைக்கால் பகுதியில் சி.மு.சிவம், (இன்றைய புதுவை மாநிலக் கழகத் தலைவர் சிவ.வீரமணி அவர்களின் தந்தையார்), திரு நள்ளாறு இராசரத்தினம், வேலன் ஸ்டூடியோ உரிமை யாளர் காசி.விசுவநாதன் (இவரது மகன்தான் இப்பொழுது காரைக்கால் மண்டலக் கழகத் தலைவர்) என்று நீண்ட பட்டியலே உண்டு.

காரைக்காலையடுத்த நிரவியில் ஆசி ரியராகப் பணியாற்றியபோதுதான், மயிலாடுதுறையில் தந்தை பெரியார் உரையைச் செவிமடுத்த கனகசுப்பு ரத்தினம் கண்டேன் கண்டேன் - என் தலைவனை - எனக்குக் கருப்பொருள் கிடைத்தது, கிடைத்தது என்று மகிழ்ச்சிக் கூத்தாடி, அதுவரை மயிலம் சுப்பிரமணிய தூது பாடிய அந்தப் பாவலன், பகுத்தறிவு ஒளி பெற்று புரட்சிக்கவிஞராகப் பரிணமித்தார்.

தமிழ் ஓவியா said...


புரட்சிக்கவிஞர் என்றால், அவர் ஏதோ கவிதை இயற்றியவர்; காவியம் படைத்தவர் என்பதோடு நிறுத்தி விடுவதுண்டு. அவர் கருஞ்சட்டை மாவீரராக திராவிடர் கழகத் தோழராக, களப்பணியாற்றிய காளையாகவும் இருந்தார் என்பது இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது என்றாலும், புரட்சிக்கவிஞர் புயல் வேகத்தில் பொறுப்புடன் கழகப் பணியாற்றியவர்தான்!

மூத்த பெரியார் பெருந்தொண்டர்களும், புதிய தலை முறையினரும், மகளிர் அணியினரும் திரண்டு காணப்பட்ட அந்தக் கலந்துரையாடலை நன்குப் பயன்படுத்திக் கொள் ளும் எண்ணத்தோடு இயக்க ரீதியான வகுப்பறையாகவே மாற்றிவிட்டார் கழகத் தலைவர்.

பல வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கூறினார் - புதுச்சேரியில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டதே கூட - ஒரு மாநாடாக நடைபெற்றது (22.7.1945).

அம்மாநாட்டில் நாகை ஆர்.வி.கோபால் அவர்களின் நாகை திராவிட நடிகர் கழகத்தின் சார்பில் சாந்தா அல்லது பழனியப்பன் நாடகம் நடைபெற்றது. அம்மாநாட்டில் திருவாரூர் மு.கருணாநிதி, சிவகுரு எனும் பாத்திரத்தில் நடித்தார். அம்மாநாட்டிற்குச் சென்ற கடலூர் சிறுவன் கி.வீரமணி, அந்நாடகத்தில் ஒரு சிறு பாத்திரத்தை ஏற்று நடத்தினார் - சுயமரியாதைத் திருமணத்திற்கத் தலைமை வகித்து நடத்தும் பாத்திரம் அது; (12 வயதிலேயே தலைமை தாங்கிவிட்டாரோ!).

காலிகள் கலவரத்தினால் புரட்சிக்கவிஞரும், கலை ஞரும் தாக்கப்பட்டனர் என்பதெல்லாம் இந்த இயக்கத்தின் தியாக வரலாறன்றோ!

அம்பகரத்தூரில் காளியம்மன் கோவிலில் எருமைக் கிடா வெட்டும் காட்டுவிலங்காண்டித்தனம் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்த அறிக்கை வெளியிட்ட தந்தை பெரியார், கழகப் பொதுச் செயலாளராக இருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்களை யும் அனுப்பி வைத்தார். மறுநாள் கிடா வெட்டு, முதல் நாள் இரவு அவர் தலைமையில் ஊர்வலம் - பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன் விளைவு, அடுத்த ஆண்டிலிருந்து கிடா வெட்டு நிறுத்தப்பட்டது.

அந்தப் போராட்ட நாளில் பிறந்த - கழகத் தோழர் மீசை தங்கராசு அவர்களின் மகனுக்கு வெற்றி வீரன் என்று பெயர் சூட்டப்பட்டது.

இதுபோல எண்ணற்ற நிகழ்வுகள் உண்டு.

இவற்றையெல்லாம் நிரல்பட எடுத்துக்கூறிய ஆசிரியர் அவர்கள், இயக்கம் நடப்புக் குறித்து தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை எடுத்து விளக்கினார்.


தமிழ் ஓவியா said...

திராவிடர் வாலிபர் கழகம் என்கிற தலைப்பில் தந்தை பெரியார் இதோ பேசுகிறார் (1945).

இந்த இருபதாம் நூற்றாண்டில் இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சியையும் நிலை நிறுத்து வதும், பெருக்கிக் கொள்வதுமான காரியங்களை, நமது ஆத்மீக, வைதீக காரியமாய் கருதி செய்துவருகிறோம். இது நியாயமா? இது தகுதியா? இந்த இருபதாம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக்கொண்டு உயிர் வாழலாமா? என்று இளைஞர்களே யோசித்துப் பாருங்கள்!

உன் சொந்த இழிவை, ஈனத்தை நீக்கிக் கொள்ளாத நீ, நாட்டிற்கு சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை, ஏழைகளுக்குச் செல்வம் உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால், உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லாவிட்டால் பித்தலாட்டக்காரனோ இருக்க முடியுமா? என்று தந்தை பெரியார் அவர்கள் கூறிய அழுத்தமான கருத்தினை ஆசிரியர் அவர்கள் எடுத்து வைத்தபோது, அனைவரும் ஆழமான அமைதியின் மடியில் வீழ்ந்தனர் என்றே கூறவேண்டும்.

தந்தை பெரியார் கூறிய கருத்தில் ஒரு சொல்லை, ஒரு அரைப்புள்ளியை மறுக்க முடியுமா?

சாஸ்திரப்படி மட்டுமல்ல; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படியே கூட இன்றைக்கும்கூட இந்த நாட்டின் பெரும்பான்மையான பார்ப்பனர் அல்லாத மக்கள் சூத் திரர்கள்தானே? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் தானே?

சந்திர மண்டலத்தில்கூட காலை வைத்துவிட முடியும்; இந்த நாட்டில் இருக்கக்கூடிய கோவிலுக்குள் - இந்து மதம் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள அந்தப் பார்ப்பனர் அல்லாத மக்கள் நுழைய முடியுமா? அர்ச்சகராகும் தகுதி அவர்களுக்கு இல்லை என்று பார்ப்பனர்கள் அடம் பிடிப்பது - உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் கதவில் முட்டிக் கொள்வது எந்தத் தன்மையில்?

திருப்பதி ஏழுமலையானுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் மூன்று கிலோ தங்கத்தில் பூணூலை அணிவிப்பதன் தாத்பரியம் என்ன?
சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா? இருக்க முடியுமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம்தான் இருக்குமா? என்ற தந்தை பெரியாரின் வினாவுக்கு விடை எங்கே?

உன் இழிவை ஒழித்துக் கொள்ளாமல் செல்வ மெத்தை யில் படுத்துப் புரண்டால் போதுமோ! மனிதன் என்பதற்கு அடையாளம் அவன் மானம் உடையவனாக இருப்பதே!

அதனால்தான், மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! என்று குறளைவிட சுருக்கமாக - குறுக்கமாக - விரிந்த பொருளை உள்ளடக்கிக் கூறினார்.

தந்தை பெரியார் அவர்கள் எழுப்பிய பிரச்சினைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் விளக்கிக் கூறியது கவனிக்கத்தக்கதாகும்!

தமிழ் ஓவியா said...

முதலில் உன் விஷயத்தை சரிப்படுத்திக் கொண்டு தானே அடுத்தவன் விஷயத்திற்குச் செல்லவேண்டும். உன் விஷயத்தில் நீ இன்னமும் சூத்திரன், இன்னமும் பஞ்சமன். எந்த நூலகத்திற்கும் சென்று படிக்காத பெரியார் அவர்களுக்குத்தானே இந்த அடிப்படை உணர்வு ஏற்பட்டது.

பெரியாரின் தேவை என்பது சமூகத்தினுடைய நீண்ட கால நிறைவேறாத ஆசைதான் - பெரியாரின் தேவையாகவும், சேவையாகவும் அமைந்திருக்கிறது என்று மிக அழகாக அதே நேரத்தில் ஆழமாக ஆசிரியர் அவர்கள் கூறியது, ஏதோ அந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு மட்டுமல்ல - அதற்கு வெளியே உள்ள பார்ப்பனர் அல்லாத அனைத்து மக்களின் சிந்தனைக்கும் விருந்தாகும்.

ஓர் இயக்கம் - அந்த இயக்கத்தினுடைய தோழர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்ததையும் பொருத்தமாக எடுத்துக் காட்டினார் தமிழர் தலைவர்.

இயக்கத்திற்குத் தொண்டாற்றுவதில் எவரும் தன்னலத்தைச் சிறிதாவது விட்டுக் கொடுக்கத் தயாராகவும், தன்னுடைய மான, அவமானத்தைக்கூட லட்சியம் செய் யாமல், இயக்கத்திற்குத் தலை கொடுக்கக் கூடியவர் களாகத் துணிவு கொள்ளவேண்டும்.

விளம்பரத்திற்கும், சுயநல வாழ்வு மேம்பாட்டிற்கும் என்று கருதி, இயக்கத்தை ஏணிப் படிக்கல்லாக உபயோகிக்கக் கருதுகிறவர்கள், திடீரென்று கவிழ்க்கப்பட்டுவிடுவார்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு இதில் கலக்கவேண்டும்.

உண்மையான இயக்கத்தில், இது இயற்கை. ஆதலால், சொந்த வெட்கம், மற்றவர்கள் செய்யும் பரிகாசம், விஷமத்தனமான போதனை ஆகியவைகளுக்கு கறுப்புச் சட்டைக்காரர்கள் சட்டை செய்து காது கொடுக்கக்கூடாது என்பதை நாம் நன்றாக வலியுறுத்துவோம் என்று கறுப்புச் சட்டைப் படைத் தகுதி என்ற தலைப்பில் தந்தை பெரியார் குடிஅரசு இதழில் (17.11.1945) எழுதிய தலையங்கத்தைக் கழகத் தலைவர் புதுச்சேரியில் எடுத்துக்காட்டியுள்ளார்.

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகு திருச்சியில் கூடி, அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது எடுத்த அந்த உறுதிமொழி என்பது அய்யாவின் அந்த ஆழமான கருத்தின் அடிப்படையில்தான்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங் களுக்கும் ஆளாகாமல் சென்று முடிப்போம் என்பதில் உள்ள எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் என்பது மிகமிக முக்கிமானதாகும்.

தோழர்களே, புதுவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை (விடுதலையில் வெளிவரும்)யைப் படித்து மனப்பாடம் செய்வீர்!

- கலி.பூங்குன்றன் -

Read more: http://viduthalai.in/page-8/79751.html#ixzz30tSq7i5G

தமிழ் ஓவியா said...

எனக்குத் தெரியும் எல்லாம்...


ஒரு நாள்...
என் நாட்டு
அரசியல் சாரா
அறிவுஜீவிகள் என்போர்...
நடுநிலை வாதிகள் என்று
நா சரசம் பேசியோர்...
துலாக்கோல் என
தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொண்ட
ஊடகங்கள்...
நடிப்பு
விளையாட்டு
இலக்கியம் என்று
விளம்பரமும்
பணமும்
விளம்பரத்தின் மூலம்
பணமும் பண்ணியோர்...
இன்னும் நல்லவர்கள்
என்று நம்பப்பட்டோர்
எல்லோரும்
எம் நாட்டு எளிய மக்களால்
குறுக்கு விசாரணை
செய்யப்படுவர்.
இந்நாட்டின் எதிர்காலம்
காவியிருளுக்குள்
கசையடி படப்போகிறது
என்று தெரிந்தும்
அந்தக் கொட்டடிக்குள்
எம்மைத் தள்ளிவிட்டு
சுற்றி நின்று -கைகொட்டிச்
சிரித்ததற்காக
அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
கூடிநின்ற ரசிகர்களை
வரி ஏய்ப்புக்கும்
வருங்கால வாய்ப்புக்கும்
கூறுகட்டி விற்பனை செய்தவர்கள்
வரிசையாய் நிறுத்தப்பட்டு
அணிவகுப்பில் அடையாளம்
குறிக்கப்படுவார்கள்.
அதில் மரு வைத்து
மாறுவேடமிடுவோர்,
தடாலடி கட்சி மாறிகள்
தனியாக விசாரிக்கப்படுவர்.
ஒருகையில் விளக்குமாற்றையும்
மறுகையில் வெண்சாமரத்தையும்
வீசிக் கொண்டே
நடுநிலை என்று
வியாக்யானம் பேசியவர்கள்
நடுநிலையான
கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
தேஷ வளர்ச்சி என்று
கார்ப்பொரேட்டுகளைக் கைகாட்டி
கூலிக்கு மேல் கூவியவர்களின்
தேக வளர்ச்சி
புள்ளி விவரங்கள்
பெருந்திரையில் காட்டி
விவாதிக்கப்படும்.
சிறுகச் சிறுக
இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென
இந்த மக்கள்
செத்துக் கொண்டிருந்தபோது
அந்த நெருப்பில்
குளிர் காய்ந்தவர்களின்
கோணல் புத்திகள்
சோதனைக்குட்படுத்தப்படும்.
அக் குற்றப் பத்திரிகையில்....
தெரிந்தே இச்சதி செய்தவர்கள்
மட்டுமல்லாமல்...
எல்லாம்
தங்களுக்குத் தெரியும் என்று
தங்களையே
ஏமாற்றிக் கொண்டவர்கள்...
நூல் ஏடுகளுக்கு
வால் பிடித்தவர்கள்...
போலி மின்னஞ்சல்களுக்கு
முகவரி கொடுத்தவர்கள்...
ஒரு கோக்குக்கும்
காக்டெயிலுக்குமிடையில்
சரித்திரம் பேசியவர்கள்...
ஒரு பார்ப்பன
ஷொட்டுக்காக
தாம் ஷர்ட்டு போட்ட
வரலாற்றை மறந்தவர்கள்...
சமூகநீதியால் கிடைத்த
சக்கர நாற்காலிகளில்
சுற்றிக் கொண்டே
அர்த்த சாஸ்திரத்தின்
பெருமை பேசியவர்கள்...
நேஷனல் இண்டகரிட்டி
ப்ரோக்ராமில்
இந்துத்துவாவை
#இன்க்ளூட் செய்து
சிறுபான்மையோரை
எஸ்க்ளூட் செய்தவர்கள்...
காவியும் அரைடவுசரும்
வைத்த குண்டுகளுக்கு
எவ்வித விசாரணையுமின்றி
தாடியையும்
குல்லாவையும் நோக்கிக்
கை நீட்டியவர்கள்...
தேவனுக்குச் சுவிசேஷம் சொல்லி
சேர்த்த சொத்துகளை
காத்தருள காவியிடம்
மண்டியிட்டவர்கள்...
மகளிர்க்குப்
பாதுகாப்பு வேண்டும் என்று
உதட்டில் பேசிக் கொண்டே
வேலைக்குப் போனால்
வீணாகிப் போவார்கள் என்று
வேதாந்தம் பேசியவர்களை
மறந்தவர்கள்...
எல்லோரும்...
எல்லோரும்...
அக்குற்றப்பத்திரிகையில்
சேர்க்கப்படுவார்கள்!
ஒரு மரண வியாபாரிக்கு
மகுடம் சூட்ட விரும்பியோர்...
ஒரு சர்வாதிகாரிக்கு
சனநாயகச் சாயம் பூசியோர்...
சுயநலத்துக்காக எம் மக்களை
சூழ்ச்சிக்குப் பலி கொடுத்தோர்...
அனைவரும்...
அனைவரும்...!
நிறுத்து...
இதையெல்லாம்
பேசவும் எழுதவும்
சிந்திக்கவும் கூட
உனக்கு
வாய்ப்பளித்தால் தானே!
என்ற குரல் கேட்கிறது.
என் குரல் வளை
நெரிக்கப்படலாம்.
எம் உடல் அமிலத்தால் எரிக்கப்படலாம்.
அதன் சாம்பலும்
சத்தமின்றி புதைக்கப்படலாம்.
ஆனால்
எமக்குத் தெரியும்!
எந்த ஒரு
கொடுங்கோலனின் உச்சமும்
ஒரு சில ஆண்டுகள் தான்.
அதன் பிறகான பெருவெடிப்பில்
அண்டம் சிதறியது போல
உங்கள்
அகண்ட பாரதம் சிதறும்.
அப்போதும்
எம்மக்கள் இருப்பார்கள்.
உங்களை நம்பி
ஏமாந்த எம் மக்கள்...
அப்போதும் இருப்பார்கள்.
அவர்களே சாட்சிகளாய்
அவர்களே வழக்காடிகளாய்
காலத்தின் தீர்ப்புக்காக
உங்களைக் கூண்டிலேற்றுவார்கள்.

- சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...

சரவணன் யார்...?


சரவணா, சரவணன், சரவணக்குமார், சரவணராசு, சரவணதேவி, சரவணசங்கர், சரவணக்குமாரன், என்று சரவணா என பெயர் ஆரம்பிக்கும் அனைவரும் மஹாவீரரின் பிறந்த நாளான ஏப்ரல் 13 அன்று அவரை நினைத்துப் பார்க்கவேண்டும்.

சரவணா முருகனின் பெயர் என்பதெல்லாம், மத ரீதியாக பரப்பிவிடப்பட்ட பொய்கள்.

கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பவுத்தமும், சமணமுமே தமிழர்களின் தலையாய மதங்களாகத் திகழ்ந்தன. இரண்டு மதங்களும் மக்களின் கல்வி, மருத்துவம், வாணிபம், தொழில் போன்றவைகளில் பெரிதும் துணை நின்றன..

நாம் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு உண்டு வந்தோமே, அதைத் துவக்கி வைத்தவர்கள் சமண, பவுத்தர்கள்தான். அன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் விகாரைகளில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளுக்காக வீடு வீடாகச் சென்று அரிசி கம்பு, கேழ்வரகு போன்ற உணவு தானியங்கள் வாங்கி வந்து சமண பவுத்த விகாரைகளில் கல்வி கற்று வரும் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குவார்கள். பகலில் பெற்றோர் வயல் வேலை அல்லது வேறு பணிக்குச் சென்றுவிடுவதால் அவர்கள் குழந்தைகளின் மதிய உணவைக் கவனிக்கவேண்டி இப்பணியைச் செய்தனர்.

சமண முனிவர்கள் தங்களிடம் கல்விபயின்ற மாணவர்கள் குழுவில் அனைவரையும் கவனிக்க ஒரு தலைமைப் பையனை நியமித்தனர். அந்த மாணவனை ஷரஹனா என பாலிமொழியில் அழைத்தனர். ஷ்ராவன் என்றால் இளைஞர் என்று சமஸ்கிருதத்தில் பொருள்படும். (உதாரணமாக இராமாயணத்தில் பெற்றோரைத் தோளில் சுமந்து சென்று தசரதனால் கொலை செய்யப்பட்ட இளைஞன் பற்றிப் படித்திருப்பீர்கள். இவனை வடமொழியில் ஷ்ராவன் என்று கூறுவர். இதையே கம்பன் சிரவணன் என்று தமிழில் மொழிபெயர்த்திருப்பார்) இந்த ஷரஹனாதான் தமிழில் சரவணா என்று அழைக்கப்பட்டது.

பள்ளி அல்லது விகாரைகளில் மதிப்புமிக்க மாணவன் என்றால் எந்தப் பெற்றோருக்குத்தான் ஆசை வராது. ஆகையால் தொடர்ச்சியாக தங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்ப சரவணா என்றே பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

சுமார் 2500-ஆண்டு பழமை வாய்ந்த இந்த சரவணா என்ற பெயர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் சைவம் வந்த பிறகு சிவனின் பையனாக முருகன் என்று மருவியது முருகனும் இளையவனாகையால் ஏற்கெனவே லட்சக்கணக்கில் உள்ள சரவணாக்களையும் முருகனோடு கோர்த்துவிட இறுதியில் சரவணாவும் முருகக்கடவுள் பெயராக மாறிவிட்டது.

(ஹரத்தோ அஹிம்ச ப்ராஹ, சபி ஜிவ் பிரேம ஜவதோ-)

அன்பே அனைவருக்குமான உயிர்மூச்சு அனைத்து உயிரிலும் அன்பைக்காண்-.

- மஹாவீரர்

தமிழ் ஓவியா said...

தள்ளுபடி வியாபாரம்



அர்ச்சகர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!

ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும் மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி என்று சொல்லி ஆட்டையப் போட்டு அதை கர்ப்பக்கிரகத்தில் போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர்!

- க. அருள்மொழி,
குடியாத்தம்.

தமிழ் ஓவியா said...



எஞ்சிய ஈழத் தமிழர்களுக்கும் இக்கதியா?

இலங்கை அரசுக்குத் தலையாட்டுவதா இந்திய அரசு?

மாநில அரசு தப்பி வந்தவர்களை சிறையிடுவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகிவருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் காரணமாக இலங்கை இராஜபக்சே அரசு சர்வதேச நெருக்கடிக்கு ஆளாகும் நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை, மற்ற நாடுகளின் இலங்கைப் புறக்கணிப்பு போன்ற நிலைமை, இராஜபக்ஷே அரசுக்கு வரவிருக்கும் எரிச்சலில், அங்கு எஞ்சியுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களின்மீது காட்டத் துவங்கியுள்ளது.

முன்புபோலவே, தமிழ் இளைஞர்களை வேட்டையாடி மீண்டுமொரு இன அழிப்பு அத்தியாயத்தை புதிதாகத் துவக்கியுள்ளதாக, அங்கிருந்து தப்பித்து இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்கள் இரத்தக் கண்ணீருடன் ஏடுகளுக்குப் பேட்டி தந்துள்ளனர்! இதைப்பற்றி, அமெரிக்கத் தீர்மான வாக்கெடுப்பில் அதைப் புறக்கணித்து, இலங்கை அரசுக்கு உதவிய, இந்திய அரசு இப்போதும் மவுனம் சாதிக்கிறது; இதற்காக தனது கண்டனக் குரலை எழுப்பி இருக்க வேண்டாமா?

ஈழத் தமிழ்ப் பெண்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிங்கள இராணுவம், காவல் துறை மூலம் ஆளாக்கப்படுவதாக, அங்கிருந்து தப்பித்து வந்துள்ள தமிழ்க் குடும்பத்தினர் கதறிக் கதறிக் கண்ணீர் வடித்துக் கூறும் அவலம் பற்றி, மத்திய அரசு ஈழத் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று கூறிடும் அரசு கை பிசைந்து, வாய் மூடி நிற்கலாமா - இலங்கை அரசு முன்?

அது மட்டுமா? வெந்த புண்ணில் வேலைச் சொருகும் கொடுமைபோல தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, 16 தமிழ் அமைப்புக்கள், அதன் ஆதரவாளர்களான 424 பேர்கள்மீது தடைவிதித்ததோடு, உலக நாடுகள் அனைத்தும் இதுபோலவே அவ்வமைப்புகள், அந்த 424 தமிழர்கள் அனைவர்மீதும் தடைகளை விதிக்க வேண்டுமென அறிவிப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்!

இதனை பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் ஏற்க முடியாது; என்று நிராகரித்து விட்டன. ஆனால் இந்திய - மத்திய அரசு அத்தடையை இங்கும் போட்டு, இராஜபக்சே அரசின் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பறிப்புக்கு மிகப் பெரிய அளவில் துணை போய் இருக்கிறது. எவ்வளவு பச்சை அக்கிரமம் இது?

பயங்கரவாதிகள் என்று இராஜபக்சே அரசால் போலி முத்திரை குத்தப்பட்ட விடுதலைப்புலிகளே அங்கு இல்லை; முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள், சகஜ நிலை திரும்பி விட்டது என்று ராஜபக்ஷேக்கு சகஸ்ரநாமம் பாடிய மத்திய அரசு, இப்போது மேலும் ஒரு சர்வதேசத் தவறினை இழைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மட்டுமல்ல மனிதநேயம் உள்ள எவரும் மன்னிக்கவே மாட்டார்கள்.

கெட்ட பின்பு ஞானம் சிலருக்கு வருவதுண்டு; மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு வரவே இல்லை.

இந்த நிலையில், தமிழக அரசோ, அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறுவதுபோல், உயிருக்குத் தப்பி வந்த அந்த ஈழத் தமிழர்களை பாஸ்போர்ட் இல்லாமல் வந்தவர்கள் என்று குற்றம் சுமத்தி, காவல்துறை சிறை பிடிக்கச் செய்வது எவ்வகையில் நியாயம்? முற்றிலும் மனிதநேயமற்ற செயல் அல்லவா? அவர்களை அகதிகள் முகாம்களுக்குத்தானே கொண்டு சென்று அடைக்கலம் தந்து காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டாமா? இந்த அரசுகளின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தப்பி வரும் தமிழர்களை குறைந்த பட்சம் அகதிகள் முகாமுக்காவது அனுப்பி, அவர்களது தீராத துயரங்களுக்கு மருந்திடும் மனிதநேயச் செயலை மாநில அரசு செய்ய முன்வர வேண்டாமா? தமிழர்கள்தான் உலகிலேயே நாதியற்ற இனமா? தமிழர்களே சிந்தியுங்கள். மனிதநேயம் காப்பாற்ற பெரும் குரல் கொடுங்கள்; தயங்காதீர்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

6.5.2014 சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/79776.html#ixzz30zFmyuV0

தமிழ் ஓவியா said...


மோடி பிரசார மேடையில் ராமன் படம், ராமன் கோயிலின் மாதிரி வரைபடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்


லக்னோ, மே 6- நரேந் திர மோடி பிரசாரம் செய்த மேடையின் பின்னால் ராமன் படம் வரையப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந் தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பைசாபாத் மாவட்ட தேர்தல் அதிகா ரிக்கு மாநில தேர்தல் ஆணை யம் கடிதம் அனுப்பி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத் தில், பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அவர் அந்த தொகுதியில் போட்டி யிடும் பா.ஜனதா வேட் பாளர் லாலு சிங்கை ஆதரித்து பேசினார்.

மேடையின் பின்னணி யில் ராமன் படம் மற்றும் அயோத்தியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ராமன் கோவிலின் மாதிரி வரைபடம் ஆகியவை வரையப்பட்ட பேனர் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் மோடி பேசு கையில், ராமன் கோவில் அமைக்கும் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் ராமன் வரலாறு மற்றும் வழிகாட்டி நெறி முறைகளை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா வேட் பாளரை வெற்றி பெற செய் யுமாறு கேட்டுக் கொண் டார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் மக்களை கேட் டுக்கொண்டார்.

அப்போது பொது மக்கள் ஜெய் சிறீராம் என்று முழக்கம் எழுப்பினர்.

அரசியல் கட்சி தலை வர்கள் தேர்தல் பிரச்சாரத் தின்போது மதம் சார்ந்த அல்லது கடவுள் படங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. எனவே மோடி பேசிய மேடையின் பின்ன ணியில் ராமன் மற்றும் மாதிரி வடிவ கோவில் படம் அமைக்கப்பட்டிருந் ததை கவனித்த தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, பைசாபாத் மாவட்ட தேர் தல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப் பினார். இந்த தகவலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவே செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79779.html#ixzz30zFyj4oq

தமிழ் ஓவியா said...


மோடியின் பிரிவினைவாதப் பேச்சுக்கு செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்



அலகாபாத் மே 6 - சமீப காலமாக தேச நலனுக்கு எதிராகவும் மத மோதலை தூண்டும் வகை யில் மோடியும் அவரது சகாக்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இது வட இந்திய மக்களி டையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத்தில் திங்கள் அன்று நடந்த பேரணியின் போது மக்களின் வெறுப்பு வெளிப்பட்டது. நேற்று காலை பேரணி நடந்துகொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்து ஒருவர் நோ நோ மோதி டவுன் டவுன் மோதி என்று கூவிக்கொண்டு தனது காலில் இருந்த செருப்பை மோடியை நோக்கி வீசி னார். இந்த காட்சி உடனடி யாக அனைத்து தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பா னது. ஆனால் சில நிமி டங்களிலேயே அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் மோடியின் மேடைப்பிரச் சாரம் ஒளிபரப்பானது.

இதனிடையே கூட்டத் தில் இருந்த பாஜகவினர் நரேந்திர மோடியின் பிரி வினைபேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பை வீசிய நபரை பிடித்து அடித்து உதைத்தனர். கூட்டத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் அந்த நபரை பாஜக ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி அலகா பாத் நகர காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித் தனர். விசாரணையில் பிரதாப் ருத்ரா சிங் என்ற அந்த நபர் அலகாபாத் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும், கடந்த சில மாதங்களாக பாஜவினரும் நரேந்திர மோடியும் தேச நலனுக்கு எதிராக தேர்தல் பரப்புரை யில் பேசி வருவது குறித்து எனது எதிர்ப்பைத் தெரி வித்தேன். ஊடகங்கள் மோடியின் செயலை மறைத்து வைக்கும் செய லில் ஈடுபட்டு வரும் நிலையில் எனக்கு இந்தச் செயலைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். விசார ணைக்குப் பிறகு அவரை எச்சரித்து விடுதலை செய்தனர்

Read more: http://viduthalai.in/e-paper/79781.html#ixzz30zGBNknV

தமிழ் ஓவியா said...


பிராமணர்களுக்குத் தனி சாப்பிடுமிடமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன இயக்கம்


பெங்களூரு, மே 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் ஜி.வி. சிறீராம ரெட்டி செய்தியாளர்களி டையே கூறியிருப்பதாவது:

:உடுப்பி சிறீகிருஷ்ண மடத்தில் பிராமணர்களுக் குத் தனி சாப்பிடுமிடமும், பிராமணர் அல்லாதவர் களுக்குத் தனி சாப்பிடு மிடமும் என்கிற பங்கி பேதா என்னும் வர்ணா சிரம முறைக்கு எதிராக பெங்களூரிலும், உடுப்பி யிலும் தொடர் ஆர்ப்பாட் டங்கள் நடத்திடவும்,. மற்ற மாவட்டத் தலைநகர்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்திடவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசுஉறுதியாக நட வடிக்கை எடுத்து, இம் முறையை தடை செய்திட வேண்டும்.

மாநிலத்தின் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர்கள் சாப் பிட்ட எச்சில் இலைகளில் பிராமணர் அல்லாதவர்கள் படுத்துப் புரளும் மட ஸ்நானா என்னும் இழி வான நடைமுறைக்கும், சாப்பிடுமிடத்தைப் பிரிக் கும் இக்கேவலமான பங்கி பேதா நடை முறைக்கும் கர்நாடக முதல்வர் சித்த ராமய்யா முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர் பார்த்தோம். ஆயினும் எது வும் நடை பெறவில்லை. இவ்வாறு ஜி.வி.சிறீராம ரெட்டி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79780.html#ixzz30zGKXZ2c

தமிழ் ஓவியா said...


இது உண்மையா?


சிதம்பரம் நடராசர் கோயிலில் பல உண்டியல்கள் தமிழக அரசால் வைக்கப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குபின் இதுவரை உண்டியல்கள் திறக்கப்படவில்லை. தற்பொழுது, தீட்சிதர்கள் உண்டியல்களைத் திறக்க முயற்சி செய்தனர். முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமுகர் ஒருவர் முதல்வரின் தனிப் பிரிவுக்கும் - இந்து சமய அறநிலையத்துறைக்கும் கடிதம் எழுதி - முயற்சி செய்து, தீட்சிதர்கள் முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். உண்டியல் திறப்பது அரசு உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையா?

Read more: http://viduthalai.in/e-paper/79782.html#ixzz30zGVsV4u

தமிழ் ஓவியா said...


அய்.நா.வும் மனித உரிமை ஆணையமும் என்ன செய்யப் போகின்றன?


இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென் மராட்சி கலாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ள கருத்து, உலகில் உள்ள அனைத்து நாடுகளின் காதுகளை எட்டும் என்பதில் அய்யமில்லை.

ராணுவத்தை ஒரு போதும் வடக்கு மாகாணத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறு மாப்பாகக் கூறியதாக அறிந்தேன்.

முதலாவது எமது ஜனாதிபதியின் இன்றையதான ஜனாதிபதி வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறி, இரண்டாவது அவரின் எண்ணங்களைக் கொண்டவாறே இனிவரும் அர சாங்கத்தில் தொடர்ந்தும் பதவியில் இருப்பர் என்பது என்ன நிச்சயம்?

இந்திய அமைதிப்படை இங்கு வந்த போது ஒரு இந்தியப்படையதிகாரி என் நண்பரிடம் பின்வருமாறு கூறினாராம்:- நாங்கள் இன்னும் ஒரு நூறு ஆண்டு களுக்கேனும் இங்கிருந்து வெளியேறமாட்டோம் என்று சொன்னாராம்.

ஆனால் அடுத்த வருடமே இங்கிருந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டி வந்தது. வி.பி.சிங் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றதும் 100 ஆண்டு இங்கு வாழவிருந்த இந்தியச் சிப்பாய்கள் கப்பல் ஏற வேண்டி வந்தது.

ஆகவே எமது ஜனாதிபதியோ ராணுவமோ தாம் நினைத்தவாறு எமது மண்ணில் நிரந்தரமாக அவர்கள் இருந்துவிட முடியாது. அதற்கு இயற்கை இடமளிக்காது. இறைத்தன்மை இட மளிக்காது. ஏன் இந்தியப் பாதுகாப்புக் கரிசனைகள் கூட இடமளிக்காது. எமக்கு வேண்டாத ராணுவம் விரைவில் எம்மண்ணை விட்டு வெளியேற வேண்டும்.

சர்வதேச விதிகளுக்கு அமைய ஆங்காங்கே மத்திய அரசாங்கம் சார்பான அமைதிப்படைகளை நிலை நிறுத்த நாங்கள் இடமளிக்கலாம். ஆனால் தம் எண்ணத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புப் படையாக எமது நாட்டுப்படையினர் இங்கு இருக்கப் போவதை நாம் இடமளிக்க போவதில்லை.

அன்று வெள்ளையனே வெளியேறு என்று உரக்கக் கூறிய எம்மக்கள் குரல், இனி ராணுவத்தினரும், அரசாங் கத்தினரும் கேட்கும் படியாக படையினரே வெளி யேறுங்கள் என்று ஒலிக்கப் போகின்றது.

எனவே இந்த மே தின விழாவானது எமது அடிப் படை உரிமைகளைத் தட்டிக் கேட்க வழி சமைப் பதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டு கிறேன் என்று பேசியுள்ளார்.

தொடர்ச்சியாக இலங்கை அரசு சிங்கள இன வெறியுடன் நடத்து கொண்டு வந்துள்ளதை நிரல்பட எடுத்துக் கூறியுள்ளார்.

பல முறை சிங்கள இராணுவம் மூக்கறுபட்டு இருந்தாலும் அது புத்தி கொள் முதல் பெற்றதாகத் தெரியவில்லை.

அய்.நா.வால் நியமிக்கப்பட்ட மூவர் குழு கூறி இருந்தாலும் ஜெனிவாவில் மனித உரிமை மன்றம் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த சர்வதேச கருத்துக்கும் இடம் கொடுக்காத இடி அமீனாகத்தான் ராஜபக்சே நடந்து கொள்கிறார்.

சீனாவும், ருசியாவும், பாகிஸ்தானும் தங்களைக் காப்பாற்றி விடும் என்ற எண்ணத்தில் மிதந்து கொண்டுள்ளது. ஒரு கட்டத்தில் உலக நாடுகளின் அழுத்தத்திற்கு அந்த நாடுகளும் இணங்கவேண்டிய நிலை ஏற்பட்டே தீரும்.

சொந்த நாட்டிலேயே அந்நாட்டு அரசின் இராணு வத்தால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும், சொந்த நாட்டிலேயே அகதிகளான அவலமும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது போல வேறு எந்த நாட்டுக்கும், இனத்துக்கும் ஏற்பட்டு இருக்காது.

யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையிலும்கூட இராணுவக் கட்டுப்பாட்டில்தான் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து தீர வேண்டும் என்பது எத்தகைய அவலம்.

சிங்கள இராணுவத்தினர் யுத்தத்தின் போது நடந்து கொண்டதுபோதாதென்று ஈழத் தமிழ் மக்கள் அமைதியான - சுயமரியாதையுடன் கூடிய வாழ்வுக்கு அச்சுறுத்தலாக சிங்கள இராணுவத்தை நிறுத்தியி ருப்பதற்கு எந்த வகையில் நியாயம் கூற முடியும்?

ஈழப் பெண்கள் என்றாலே போகப் பொருள் என்று கருதக் கூடிய மிருக குணம் படைத்த சிங்கள இராணு வத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது ஒவ்வொரு நொடியும் மரண பயத்தில்தானே கழிக்க வேண்டிய நிலை.

மிதிக்க மிதிக்க புழுவும் புலியாகும் என்ற உலகியலைத்தான் வடக்கு மாநில முதல் அமைச்சர் எதிரொலித்துள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அய்.நா. முறையாகச் செயல்படவில்லை என்று ஏற்கெனவே ஒப்புதல் வாக்கு மூலம் அய்.நா.வின் செயலாளரால் அளிக்கப்பட்டது.
அந்தக் குற்றத்திற்குப் பரிகாரம் தேடும் வகையி லாவது, தலையிட்டு சிங்கள இராணுவத்தின் கட்டுப் பாட்டில் ஒவ்வொரு நொடியும் கழிக்கும் ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்துகிறோம்.

ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளிப்படையாக ராஜபக்சே அறிவித்த பிறகாவது - அய்.நா.வும் மனித உரிமை ஆணையமும் என்ன செய்யப் போகின்றன? இந்த வினாவிற்கான விடையை உலக நாடுகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-2/79791.html#ixzz30zGsCxx2

தமிழ் ஓவியா said...


ஒரு பொதுவுடைமைவாதியின் பார்வை

அய்யா கி.வீரமணி அவர்களுக்கு நலம்! தங்கள் நலம் இயக்க தோழர்கள் நலம் அறிய ஆசை.

26.4.2014 இல் தங்கள் கையால் புத்தக திருவிழாவில் பெரியார் புத்தகர் விருதைப் பெற்றேன். நான் பழைய பொதுவுடைமை வாதி. இத்தனை காலமும் பொதுவுடைமை இயக்கத்தில் என்னுடைய காலம் சென்றா லும் தோழமை என்ற உறவை தங்கள் இயக்கத்தில் பார்க்கின்றேன். பெரியார் வரலாறு படித்திருக்கின்றேன்.

பெரியார் ஒருவர் இந்த நாட்டில் பிறந்த தால் தான் சாதிய உணர்வு குறைந்திருக் கிறது. மூடநம்பிக்கை இருக்கக்கூடாது என்பதை தன் உயிர் மூச்சுவரை பாடுபட்ட மாபெரும் மனிதர். ரஷ்யாவில் லெனின் தமிழகத்தின் ஓர் லெனின் என்று ஒப்பிட லாம். அந்த அளவிற்கு சோவியத் நாடு சென்று அந்த பூமியை, மக்களைப் பார்த்து விட்டு அப்படி ஓர் புதிய பூமி இந்தியாவில் வரவேண்டும் என்று பொதுவுடைமை பிரச்சாகராக மாறிய பெரியாரை பொது வுடைமை இயக்கம் ஏன் நேசிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

கிணற்று தவளையாகவே இருந்து விட் டோமே என்று என்னும் நிலை ஏற்பட்டது. பழையகால பொதுவுடைமையாளர்கள் தோழமை என்ற உணர்வோடு செயல் பட்டார்கள்.

இயக்கத்தில் கடுமையான விமர்சனம் இருந்தாலும் தோள்மீது கைபோட்டு சிரித்தபடி வருவார்கள்.

பழைய தோழர்கள் மறைந்த பின்பு புதிய தோழர்கள் நிலைப்பாடு தலை கீழாக மாறி விட்டது. போட்டி பதவிகளை கொள்கை நடை முறையை செயல்படுத் தும் விதத்தில் மாற்றம் பல்வேறு குணக் கேடுகள்.

26 ஆண்டு கால ஜீவா படிப்பக விழா வில் கலந்து கொள்ள எந்த தலைவர்களும் வரவில்லை. தோழர் பொன்னீலர், தோழர் ராதா கிருஷ்ணன், தோழர் கருப்பசாமி, தோழர் பரிணாமன் தவிர இதையும் பெரியார் திடலில் வைத்து நினைத்துப் பார்க்கின்றேன்.

பள்ளிகளிலும் பொது மேடைகளிலும் ஜீவா, பெரியார், காந்தி, காமராசர் வாழ்ந்த சரித்திரத்தை சொல்லி புத்தகங்களை வாசிக்கச் சொல்லுவேன்.

புத்தகர் விருது மூன்று பொதுவுடைமைத் தோழர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொருவரின் வாழ்க்கை குறிப்பை வாசித்த அற்புதம் ஒருபக்கம். அதோடு மேடையில் பேச வாய்ப்புக் கொடுத்தது அதைவிட உற்சாகம்.

பெரியார் விருதை வாங்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி வாழ்க்கையில் பிறந்த பிறவியில் நமக்கு கிடைத்த பாக்யம் என நினைக்கின்றேன்.

தீண்டாமை ஒழிப்பு, பொருளாதார நிலைபாடுகள் மாறிவிட்டால் மனிதகுலம் ஒரு சமமான சமுதாயமாக மாறிவிடும். காலத்தில் இரு இயக்கங்களும் ஒத்துப் போக முடியாததற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன்.

ஒரு சிலர் பொதுவுடைமை இயக்கத்தில் பிராமணர்கள் தலையீடு காரணத்தால் பொதுவுடைமை இயக்கம் பின்னடைந்து விட்டதாக கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நம்பூதிரிபாட் போன்ற பல தோழர்கள் இயக்கத்திற்காக தன் சொத்தையெல்லாம் தாரை வார்த்ததையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்கள் வேறு இயக்கத்தில் இருந்திருந்தால் அவர்கள் எவ்வளவு பதவிகளைப் பெற்றிருப்பார்கள்!

பொதுவுடைமை இயக்கம் 1964 இல் பிரிந்ததின் விளைவு. இரு இயக்கங்களும் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லியே காலத்தை கழித்து தோழர்களையும் சிந்திக்க விடாமல் சகோதர சண்டையாக மாறி ஊரே சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
பொதுவுடமையாளர்கள் எளிமையை மறந்து எப்படியாவது யாருடன் சேர்ந்து தொகுதிகளைப் பற்றி, சுகம் கண்டதின் விளைவு இன்று இயக்கம் தனிமைப்பட்டு கண் போன பின் சூரிய நமஸ்காரம் என்ற நிலை ஏற்பட்ட நிலை.

தி.க தோழர்கள் பதவி என்ற நிலை இல்லாமல் பெரியாரின் கருத்துக்களை தன்னால் முடிந்தவரை பிரச்சாரம் செய்து அவர்கள் இயக்கத்தை தக்கவைத்து வருகி றார்கள். அதில் உணர்வு பூரணமான தோழர் கள் கடமை உணர்வோடு வேலை செய் வதை கண்கூடாக பார்க்கிறேன். லட்சிய வெறியோடு இருப்பதைப் பார்க்கின்றேன். பழகும் விதத்திலும், மரியாதை கொடுக்கும் விஷயத்தை அவர்களிடம் படிக்க வேண்டும். இந்த இயக்கத்தை உடைத்து வெளி யேற நினைத்தால் அதில் சுய நலநோக்கம், இயலாத்தன்மை, கடமையை செய்ய நினைக்காதவர்களாக இருக்கலாம்.

புத்தக விருதில் அய்யா வீரமணி பேசும் பொழுது நாங்கள் கொடுக்கும் விருது அரசியல் பார்த்து அல்ல. உண்மையிலேயே கொடுக்க வேண்டியவர்களுக்கு, திறமைக் காக கொடுக்கிறோம் என்று கூறிய வார்த்தை என்னை நெகிழ வைத்து விட்டது.

பள்ளிகளிலும், இலக்கிய கூட்டங்களில் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பே ஓங்கி குரல் கொடுப்பேன். திராவிடர் கழக இயக்க கொள்கைக்கு துணை நிற்பேன். மார்க்சிய கருத்துக்களை முன்னெடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

- இரா. சண்முகவேல், கீழக்களங்கள்

Read more: http://viduthalai.in/page-2/79795.html#ixzz30zH3jmbx

தமிழ் ஓவியா said...


மே 6: உலக ஆஸ்துமா தினம்



நுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச குழாயின் உட்பகுதி வீங்கிக் கொள்வதால் ஏற் படும் குறைபாடே ஆஸ்துமா.

இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இவர்களின் சுவாசப் பாதையால் சிறிய அளவிலான மாசுபாடைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. ஆஸ்துமா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக, மே மாதத்தின் முதல் செவ்வாய் உலக ஆஸ் துமா தினமாக (மே 6ஆம் தேதி) கடைப்பிடிக்கப்படு கிறது.

உங்கள் ஆஸ்துமாவை, உங்களால் தடுக்க முடியும் என்பது இந்தாண்டு இத் தினத்தின் மய்யக்கருத்து. 1998இல் இத்தினம் தொடங் கப்பட்டது.

காற்றில் இருக்கும் புகை, மாசு மற்றும் சில வகை உணவுகள் கூட ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமையாக மாறும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்துமா நோயாளிகள் அதற் கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு உடற் பயிற்சியில் ஈடுபடுவது கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். தும்மல், இருமல், சுவாசித்த லில் ஏற்படும் சிரமம் ஆஸ் துமாவின் அறிகுறிகள். இவை இருந்தால், முன்னரே கண்ட றிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இதில் ஏற்படும் தாமதம் நுரையீ ரலை சேதப்படுத்திவிடும். சுற்றுச்சூழல் சீர்கேடுதான் ஆஸ்துமாவுக்கு பெரிதும் காரணம்.

ஆஸ்துமாவுக்கு இப் போது இன்ஹேலர்கள் பரிந் துரைக்கப்படுகின்றன.

இது நுகரப்படுவதால் மருந்து நேர டியாக சுவாசப் பாதைக்கு சென்று சீர் செய்கிறது.

2025 இல் உலகில் 40 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப் படுவர் என கணிக்கப்பட்டு உள்ளது.

உலகில் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவினால் இறக்கிறார். அதில் 90 சதவீத மரணங்கள் தவிர்க்க கூடியவை. விழிப்புணர்வு இல்லா ததும், முறையான சிகிச்சை எடுக்காததும் மரணத்தை ஏற்படுத்துகிறது.

சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமாவுக்கு சூரிய ஒளியை அரிய மருந்தாக மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.

இதிலிருந்து வைட் டமின் டி கிடைக்கிறது.

Read more: http://viduthalai.in/page-3/79814.html#ixzz30zHdTsSz

தமிழ் ஓவியா said...


முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை
142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில், இன்று (7.5.2014) உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தந்துள்ள தீர்ப்பு - 142 அடி நீர் தேக்கிக் கொள்ளும் அளவுக்கு அணை பலமாக உள்ளது;

தனி அணை தேவையில்லை. கேரள அரசு கொண்டு வந்த புதிய அணை கட்டுவது குறித்த சட்டம் செல்லாது என்றும் கூறியுள்ளது தமிழக விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பாகும். அய்ந்து மாவட்ட விவசாயிகள் இதனால் பலனடைவர், வரவேற்கிறோம்!

இந்தத் தீர்ப்பினை கேரள அரசு மதித்து செயல்பட்டு, தமிழ்நாட்டுடன் நல்லுறவை வளர்க்கவேண்டும். இரு மாநில உறவுகள் வலுப்பட, உச்சநீதிமன்றத் தீர்ப்பு உதவட்டும்!

- கி.வீரமணி,
சென்னை, தலைவர்,

7.5.2014 திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/e-paper/79861.html#ixzz314jtSg6I

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ்


பருய்பூர், மே 7- நாட்டின் பிரதமராக மோடி தேர்ந் தெடுக்கப்பட்டால் நாடு பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூ னிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாச் சார்ஜி கூறி யுள்ளார்.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஆனால், நாங்கள் இது பேராபத்தை தரும் என கூறி வருகின்றோம். மோடியை பிரதமராக தேர்ந் தெடுப்பதற்கு மக்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. எனவே மோடியை நம்பாதீர்கள் என்று புத்ததேவ் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் துவங்கியவுடன் முத லில் மோடியை பற்றி பேசாத மம்தா, அவருக்கு பூச்செண்டு அனுப்பியுள்ளர்.

தற்போது வரை மம்தா அதை தவறு என ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள புத்ததேவ் தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஹெலி காப்டரில் செல்லும் மம்தாவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/79853.html#ixzz314ke0J00

தமிழ் ஓவியா said...


மதம் பயன்படாது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. - (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/79866.html#ixzz314l7lShV

தமிழ் ஓவியா said...


எந்தப் பதுங்குக் குழியில் அப்போது இருந்தீர்கள் மோடிஜி!

- குடந்தை கருணா

தன்னை பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தில் பிறந்ததால், விமர்சித்து விட் டார் என்று பிரியங்கா மீது குற்றம் சுமத்தி உத்தரபிரதேசம் தோமாரியா கஞ்சில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசி உள்ளார். பிரியங்கா சொன்னது, இவர்கள் எனது தந்தையை விமர்சிக்கிறார்கள்; அமேதி மக்கள் இந்த கீழ்தரமான அரசியலுக்கு தக்க பதிலடி கொடுப் பார்கள் என பேசினார். ஆனால், மோடி, இதனை, ஜாதி சாயம் பூசி, தான் பிற்படுத்தப்பட்டவன் என்ப தால், தன்னை தாக்குவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன், ராமன் படத்தை வைத்து, ராம ராஜ்யம் அமைக்க வாக்களியுங்கள் என மதத் தின் பெயரால், வாக்கு கேட்ட மோடி, இப்போது, ஜாதியைப் பற்றி பேசு கிறார்.

சரி; ராம ராஜ்யத்தில், இந்த பிற் படுத்தப்பட்ட சூத்திர மக்களுக்கு என்ன கதி என மோடிக்குத் தெரியுமா? சம்பூகன் தவம் இருந்தான் என்பதற் காக, தர்மம் கெட்டுவிட்டது எனக் கூறி, சம்பூகன் தலை வெட்டப் பட் டது என ராமாயணத்தில் கூறப்பட் டுள்ளதே, அதைப் பற்றி தெரியுமா, மோடிக்கு?

அந்த ராமாயணத்தையும், ராம னையும் தலையில் வைத்து வன்முறை ஆட்டம் ஆடும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரத்தில் பயிற்சி பெற்ற மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?

கோல்வார்க்கரின் சிந்தனையின் தொகுப்பில், சூத்திரர்களுக்கு என்ன நிலை என்று சொல்லப்பட்டிருக் கிறதே; அதனை இத்தனை காலம் ஏற்றுக்கொண்டு, அந்த ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்ததை பெருமையாக கருதும் மோடி சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?

குஜராத்தில் நான்கு முறை முதல் வராக இருந்த மாதவ் சிங் சோலங் கியின் ஆட்சியில் 1980-களில், கொண்டு வரப்பட்ட இட ஒதுக் கீட்டை எதிர்த்து நடத்தப்பட்ட இயக் கத்தில் தீவிரமாக இருந்த மோடி இப் போது சொல்கிறார், தான் பிற்படுத் தப்பட்டவன் என்று?

மண்டல் குழு பரிந்துரையை வி.பி. சிங் அமல்படுத்தியதை தொடர்ந்து, வட நாட்டில், இட ஒதுக்கீடு எதிர்ப் பாளர்களால் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிற்படுத்தப்பட்ட மனிதர் மோடி எந்த பதுங்கு குழியில் ஒளிந்திருந்தார்?

வி.பி.சிங்கிற்கு எதிராக ரத யாத் திரை என்ற பெயரில் சமூக அநீதித் தீயை அத்வானி கொளுத்தியபோது, ரதத்திற்கு எண்ணெய் விட்ட மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?

2005 இல் மத்திய அரசில் அர்ஜூன் சிங், கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது, எந்த ஆதரவும் தராத மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?

சமூக நீதியின் எந்த உணர்வும் இல்லாதவர்; அதற்கு எதிரான தத் துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை பெருமையாக கருதுபவர்; இப் போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று.

பிற்படுத்தப்பட்ட மக்கள், மோடியின் இந்த மோசடிப்பேச்சை நிச்சயம் நிராகரிப்பார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/79872.html#ixzz314lEjMLu

தமிழ் ஓவியா said...


மூடத் தனத்தில் கிராம மக்கள்

மூடத் தனத்தில் கிராம மக்கள்
மணப்பாறையில் மழை வேண்டி
கழுதைக்கும் கழுதைக்கும் திருமணமாம்!

திருச்சி, மே 7- திருச்சி மாவட்டம் மணப்பாறை யை அடுத்துள்ள வையம் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் கடந்த 4 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில் லையாம். இதனால் அக் கிராமத்தில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளதாம். இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற் காக கழுதைக்கும், கழுதைக் கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் இப்படி ஒரு நம்பிக்கையை மூடத்தனமாக நம்பி, அக்கிராம மக்கள் வெகு சிறப்பாக பத்திரிகை அடித்து, விருந்து வைத்து தடபுலாக இத்திருமணத்தை நேற்று முன்தினம் நடத்தியுள்ளனர்.

மனிதர்களுக்கு நடத்தப் படும் திருமணத்தை போன்று கழுதைக்கும், கழுதைக்கும் இத் திருமணத்தை நடத்தியுள் ளனர். சாதாரணமாகவே பருவ மழை பொய்த்து போய் விட்டது என்பது அனை வரும் அறிந்ததே. உலக மயமாக்கலுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் முன் னேற வாய்ப்பாக வெளி நாட்டு மூலதனங்களை முன்னிறுத்தி ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் எல்லாம் வானு யர்ந்த கட்டடங்களாக மாறி விட்டன. இந்த சூழ்நிலை யில் விவசாயத்தைப் பாது காக்க அறிவியலை நம்பி, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடாமல் மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற மூடநம்பிக்கை காரி யங்களில் ஈடுபட்டு வருவது, வெட்கப்பட வேண்டிய விசயம்.

சாதாரண மக்களே அறியாமையின் காரணமாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசே மூடத்தனத்தின் சாக்க டையில் மூழ்கியுள்ளது என் பதுதான் உண்மை. அண் மையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அறநிலையத்துறை கோவில் களில் வருணஜபம் நடத்தும் படி உத்தரவே பிறக்கப் பட்டு, அதன்படி அனைத்துக் கோவில்களிலும் யாகம் நடத்தினார்கள். மழை வந்ததா? என்றால் இல்லை!

தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இதுபோன்ற மூட நம்பிக்கை காரியங்களில் ஈடுபடும் மக்களை தடுக்கவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-3/79848.html#ixzz314lYimYV